Wednesday September 8th 2010

30 வருட போரைக் முடிவுக்குள் கொண்டுவந்தவருக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு: அனோமா

எனது கணவர் கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் என ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவந்த இராணுவத் தளபதிக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது கணவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. நாட்டுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கரும்புலித்தாக்குதலில் காயமடைந்த எனது கணவர் ஆறு மணி நேரத்திற்கு ஒருதடவை மருத்தை உட்கொள்ள வேண்டும். இதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளேன். இதுவரை எதுவித பதிலும் வரவில்லை.

அவர் வாழ் முழுவதும் இந்த மருத்தை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு மருந்துகள் வழங்கப்படாது விட்டால் பின்விளைவுகளை அது ஏற்படுத்தும் என அனோமா மேலும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

Related posts

Reader Feedback

One Response to “30 வருட போரைக் முடிவுக்குள் கொண்டுவந்தவருக்கு அரசாங்கம் வழங்கிய சிறந்த பரிசு: அனோமா”

  1. csj says:

    30 வருட யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவந்த இராணுவத் தளபதிக்கு Fonseka beaten, dragged during arrest – report
    [TamilNet, Tuesday, 09 February 2010, 10:47 GMT]
    General Sarath Fonseka, the former Sri Lankan military chief and defeated presidential candidate, was punched and dragged along the ground by troops led by a Major General who arrested him as he met political allies last night, the Daily Telegraph said Tuesday. “There was no decorum , Now What is Happening to Him, as Tamil imagine What was Happened our brothers and sisters in the TWO NATIONS …

Leave a Reply