சிறீலங்கா இராணுவத்தினர் மீது எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ள தான் அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஐபக்ஸ தெரிவித்துள்ளாரர்.
விடுதலைப்புலிகளுடனான இடம்பெற்ற இறுதியுத்த காலப்பகுதியில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள், மற்றும் சரணடைந்த விடுதலைப்புலிகளது உறுப்பினர்கள் ஆகியோரை படுகொலை செய்தமை மற்றும் வைத்திய சாலைகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் போன்ற போர் குற்றங்களை விசாரிப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இவர் நாட்டின் சட்டதிட்டங்களை மிறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





