Friday May 24th 2013

Archives

மீண்டும் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்!: நாஞ்சில் சம்பத்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் செய்துவிட்டதாக மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, திருப்புவனத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு உதவி செய்தது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்தவர் பிரணாப் முகர்ஜி.

ஆனால் தமிழர்களை கொலை செய்ய உதவி செய்ததற்கு நன்றிக் கடனாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை கருணாநிதி ஆதரிக்கின்றார்.

இதன் மூலம் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் செய்துவிட்டார்.

ஈழம் மலர வேண்டும் என்று டெசோ மாநாடு கூட்டி நாடகம் போடுகிறார். ஆனால் இந்த நாடகத்தை தமிழர்கள் உள்பட யாரும் நம்பத் தயாராக இல்லை.

மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் வைகோ.

ஆனால் தான் தான் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததாக கருணாநிதி விளம்பரம் தேடிக் கொண்டார்.

தமிழக மக்கள் கருணாநிதியை ஆட்சியை விட்டு தூக்கி எறிந்துவிட்டனர். அதே போல அரசியலில் இருந்தும் அவரைத் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்றார்.

Comments

Powered by Facebook Comments

Reader Feedback

One Response to “மீண்டும் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்!: நாஞ்சில் சம்பத்”

  1. Glen says:

    Karunanidhi is thinking that all the tamils are idiots. The tamils should teach him a good lesson. He is a Traitor and cheater. If he supports Pranab Mukerjee how can he support tamil eelam. This is like Paalukkum kaaval poonaikkum Thoazan.

Leave a Reply