<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>Puthinam News</title>
	<atom:link href="http://www.puthinamnews.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.puthinamnews.com</link>
	<description>Tamil News</description>
	<lastBuildDate>Fri, 24 May 2013 14:01:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>மரணத்தின் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது! &#8211; பூநகரான்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39871</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39871#comments</comments>
		<pubDate>Fri, 24 May 2013 13:44:09 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39871</guid>
		<description><![CDATA[&#8216;அப்பிள்&#8217; கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள். ஆனால் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. கருத்தூன்றி அவதானிக்கவில்லை. துறை சார்ந்த தேடலுடன் அவர்களுடைய பார்வைகள் ஆராயவில்லை எனபதே உண்மை. அவ்வாறே எத்தனை இறுதிச் சடங்குகளிற்கு போனாலும் எங்களது துள்ளல்களை நாங்கள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" alt="war-100x80" width="100" height="80" class="alignleft size-full wp-image-29427" />&#8216;அப்பிள்&#8217; கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன்.</p>
<p>மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இத<span id="more-39871"></span>ற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.</p>
<p>ஆனால் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. கருத்தூன்றி அவதானிக்கவில்லை. துறை சார்ந்த தேடலுடன் அவர்களுடைய பார்வைகள் ஆராயவில்லை எனபதே உண்மை. அவ்வாறே எத்தனை இறுதிச் சடங்குகளிற்கு போனாலும் எங்களது துள்ளல்களை நாங்கள் எள்ளளவும் குறைக்காத பிறவிகளாகவே உள்ளோம்.</p>
<p>ஆம், மரணம் ஆய்வுடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வு. இது அமங்கலமானது என்று கண்களை மூடுபவர்களும் ஒரு நாள் கண்களை மூடியே ஆக வேண்டும். நாங்கள் மூடாவிட்டால் வேறு யாராவது தங்கள் கைகளால் எங்கள் கண்களை மூடி விடுவார்கள். பின்னர் வாய்க்கு அரிசியும் போடக்கூடும். இருந்தும், இந்தக் காட்சிகள் அடங்கிய பல திரைப்படங்களையும் பார்த்தும் நாங்கள் சுடலை ஞானத்தைக் கூடப் பெறுவதில்லை. ஆம், கவிஞன் கண்டாலே கவிதை. காண்பவன் கண்டாலே காதல்.</p>
<p>எழுபதுகளின் இறுதி ஆண்டுகளில் யாழ் பல்கலைக்கழகத்தை ஊடறுத்து ஒரு கவிமாணவன் நடந்து கொண்டிருந்த போது, ஒரு பட்ட மரத்தை கடந்து போக வேண்டியிருந்தது. அதனைப் பார்த்த அந்த இளம்கவி தன்னுடன் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தான்.</p>
<p>இந்தப் பட்ட மரத்தை ஒரு விறகுவெட்டி கண்டால் ஆனந்தத்துடன் தறித்து விறகுக் கட்டுகளாக்கி பிழைக்க வழி தேடிக் கொள்வான். ஒரு தாவரவியல் ஆய்வாளன் கண்டால் இதை ஆராயவே தொடங்கிவிடுவான்.</p>
<p>இந்த மரத்தின் மரணத்திற்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்று கூட இன்னும் ஒரு துறை சார்ந்தவன் ஆராயக் கூடும். ஆனால் காதல் வயப்பட்ட ஒரு கலையுள்ளம் இதனை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி பார்க்கவும் இடமுண்டு.</p>
<p>இலைகளோ பூககளோ அற்ற அந்த கிளைகள அவன் கைகளாகவும் கால்களாகவும் காணக் கூடும். ஆக பார்க்கும் பார்வையிலேயே பலதும் தங்கியுள்ளன. இந்த இளம் கவி இன்று வட துருவத் தமிழ்க் கவியாக மிளிர்கிறது.</p>
<p>ஒரு நோயாளியை ஒரு மருத்துவனால் தான் பார்க்க முடியும். பொறியியலாளனாலோ, வழக்கறிஞனாலோ அந்த நோயாளியைப் பார்க்க முடியாது. அவர்கள் அதி திறமையுள்ள பொறியியலாளராக இருந்தாலும், அவர்களது பார்வையும் எங்களது பாமரப் பார்வையாகவே இருக்கும். ஆக காணல் என்பது பார்வையாக மாற அறிவும் ஆய்வும் தேவை.</p>
<p>பொதுவாகவே தமிழராகிய எங்களிடம் இந்த இரண்டும் குறைவாகவே காணப்படுகிறது. காரணம், நாம், நம் முன்னோர் கண்டு அறிந்துள்ளவற்றையே கற்கும் தேசியச் சிந்தனைப் போக்குள்ளவர்கள். ஏற்கனவே அனேகமானவை தயாராக இருப்பதால் எதையும் புதிதாக தயாரிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை.</p>
<p>தமிழர், கிரேக்கர், உரோமர் போன்ற பண்டைய இனங்கள் இன்று வீழ்ந்து போயக் கிடப்பதற்கு இதவும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ் மொழி எல்லாவற்றையும் கொண்ட செம்மொழியாக இருப்பதால் தேடலிற்கும் கண்டு பிடிப்பிற்குமுரிய தேவை எழுவதில்லை. இதனாற் தான் ஆய்வின்மை தமிழர்களின் தேசியக் குறைபாடாக உள்ளது.</p>
<p>உலகிற்கே பகுத்தறிவுக் கண்ணைத் திறந்து விட்ட கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழைச் சேரியாக உள்ளது. எங்களது சிந்தனை பழைமையை நோக்கி செல்லும் போது, வளர்ச்சியற்றிருந்த வெள்ளையினம் புதுமைகளைத் தேடி அலைவதாற் தான் அவர்கள் அதியுயர் விஞ்ஞானத்தின் அதிபதிகளாக உள்ளனர்.</p>
<p> நாங்கள் கொடி கட்டிப் பறந்த போது, நீங்கள் காடுகளில் அலைந்தீர்கள் என்று சுவாமி விவேகானந்தர் கிழக்கிலிருந்து வந்து மேற்கில் முழங்கியது இங்கு நினைவூட்டலிற்குரியதாகிறது.</p>
<p>தமிழராகிய எங்களிடம் கடின உழைப்பும், விருந்தோம்பலும, காதலும் வீரமும் உண்டு. அதீத தியாகமும் உண்டு ஆனால் தந்திரம் அறவே கிடையாது. தந்திரத்தை கையாள்வதை கபடமாக முறைகேடாக பார்ப்பது தமிழர் வழமை. ஆனால் உதாரண புருஷனாக வந்த இராமனோ மறைந்திருநதே வாலியைக் கொன்றான். அதை ஆரியர்கள் முறைகேடாகக் கருதாது இராஜதந்திரம் என்கிறார்கள்.</p>
<p>நாங்களோ நெஞ்சில் வேல் ஏந்தி புறமுதுகு காட்டாது வீழ்வதே மேல் என இன்றும் நினைக்கிறோம். வாழ்வதா சாவதா என்பதை விட நாம் எப்படி வாழ்கிறோம் என்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது.</p>
<p>மானமும் ரோச உணர்வும் எம்மை மாய்த்தே வருகின்றன. மரணங்களை அழைக்கின்றன. மரணம் அழைக்க முன் நாம் நாமாக மரணங்களை அழைக்கிறோமா? இந்த உணர்ச்சி மயப்படு;த்தும் வழமையான அரசியலிருந்து நம்மை வழி நடாத்துவோர் மாற வேண்டுமா? நிற்க!</p>
<p>அனேகமாக எல்லா மதங்களும் இந்த மரணம் பற்றியே அதிகம் பேசியுள்ளன. தேவபாலனிற்கும் மரணத்தின் அழைப்பிலிருந்து விதிவிலக்கில்லை என்பதையே இயேசுபிரானின் உயிர்த்தெழுமையும் காட்டுகிறது. இந்து சமயம், மட்டுமல்ல, அனைத்துச் சமயங்களுமே மரணம் பற்றிப் பேசுகின்றன</p>
<p>சைவர்கள் திருநீறு பூசுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலொன்று பிறந்தோம் என்ற முகவுரையுடன் தொடங்கும் நம் வாழ்க்கை என்றோ ஒரு நாள் மரணம் என்ற முடிவுரையுடன் நிறைவடையப் போகிறது என்பதை தினமும் நமக்கு நினைவூட்டவே. இதனால் நமது ஆணவமும், தன் முனைப்பும் நிறைந்த கருமங்கள் குறைகின்றன அல்லது முற்றாகத் தவிர்க்கப்படுகின்றன. இருந்தாலும் இதை அடிக்கடி நாம் மறவாதிருக்கவே தினமும் திருநீறு பூசுதலை நம் சமயம் வலியுறுத்துகிறது.</p>
<p>திருடனாயப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றான் பட்டுக் கோட்டை. இவ்வாறே மானிடரின் அடாவடித் தனங்களும் இயேசு குறிப்பிட்டதைப் போல் மனந் திருந்துதலால் மட்டுமே மட்டுப்படுத்த வல்லதாக உள்ளது.</p>
<p>இந்த மனந் திரும்புதலையும், வாழ்வின் நிலையாமையும் இடித்துரைப்பது மரணம் ஒன்றே. ஆகவே மரணத்தைப் பற்றிய நினைப்பு எந்த மனிதனையும் பக்குவப்படுத்த வல்லது. அதாவது, அல்லாவின் சமயம் அடங்கலாக எல்லாச் சமயங்களும் இந்த மரணம் பற்றி சற்று அதிகமாகவே பேசியுள்ளன.</p>
<p>மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா! மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும்&#8230;&#8230;. என்றே கீதை போதனையும் உரைக்கிறது. இதைத் தான் எதையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று விஞ்ஞானமும் கூறுகிறதோ என்னமோ.</p>
<p>அனுபவம் மட்டுமல்ல, மரணம் நிச்சயம் ஏற்படும் என்ற அனுபவ எதிர்பார்ப்பும் கூட நல்லாசானி விடுகிறது. ஆகவே அது அமங்களமானது என்று ஒதுக்காது அது பற்றியும் நாம் அடிக்கடி சிந்திக்க வேண்டும். அது பற்றி பேசுவதும், எழுதுவதும் கூட மன ஆரோக்கியத்தையும, வைராக்கியத்தையும் தர இடமுண்டு. இதனால் போவது எங்கே என்று தெரியாத இந்த மர்மான மரணத்தை புரிய முடியாவிடினும் அது நிச்சயமானதானதால், அடிக்கடி நினைத்துக் கொள்வோம் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம்.</p>
<p>நாமெல்லாம் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வரழப் போவதாக மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இயற்கையோ வேறு விதமாக நகர்கிறது. நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் காலையில் எழந்து, மரணம் என்ற புள்ளியை நோக்கியே பயணிக்கிறோம் என்ற பார்வை அவசியமானது.</p>
<p>இந்த இடத்தில், பிறந்த தினம் கொண்டாட்டத்திற்கு உரியதா என்றொரு கேள்வியும் மறு புறத்தில் எழுகிறது. இதனாற் தான் கவிஞர்கள் யாவரும், காதலையும், வீரத்தையும் பற்றி மட்டுமல்லாது மரணம் பற்றியும் பாடிக் குவிக்கிறார்கள். இருந்தாலும், பின்னையவர்களில் கண்ணதாசன் அதிகமாகவே பட்டினத்தார் ஆகியிருக்கிறார்.</p>
<p>இயமனின் மரணம் என்னும் அழைப்பிதழ்த் தூது வந்தால், வீடு வரை தான் உறவு&#8230;., வீதிவரை மணைவி&#8230;&#8230;, காடு வரை பிள்ளை &#8230;&#8230;, கடைசி வரை யாரோ&#8230;.? என்கிறான் கண்ணதாசன். நாங்களும் ஒரு நாள் கொள்ளி வைக்கப்பட்டு எரிந்து சாம்பராவோம் என்ற யதார்த்த்தை இறப்பவர்களே திறந்து காட்டுகிறார்கள்.</p>
<p>மறு புறத்தில் &#8216;படக் படக்&#8217; என அடிக்கும் இதயமோ நான் ஒரு நாள் துடிக்க முடியாமல் அடங்கிவிடக் கூடும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் மரண பயத்திற்கு பதிலாக சுடலை ஞானமே பிறக்க வேண்டும். ஆம், மரணம் ஒரு முடிவுப் புள்ளியோ, முடிந்த முடிவோ அல்ல. மறையும் சூரியன் மறுநாள் உதிப்பதைப் போல நாமும் இந்த பழைய உடலைக் களைந்து புதிய உடலாடையை அணியப் போகிறோம்.</p>
<p>கனியாதல் ஒரு வட்டத்தின் முடிவாகும் போது அடுத்த பிறப்பு விதையாகிறது. இதையே கிருஸ்ணரும் &#8216;எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவன் உடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவனுடையதாகும்.&#8217; என்று உலகின் நியதியை வலியுறுத்துகிறார். ஆக, பகவற் கீதையே மரணத்தைப் பற்றியும் தோற்ற மறைவு மாயை மயக்கங்கள் பற்றியே தெளிவை ஏற்படுத்த முயல்கிறது எனலாம்.</p>
<p>இயேசுவின் மறுபிறப்போ இன்னும் விரைவாக உடனடியாக நடந்ததாகவும் பாரக்கலாம். இப்படி இயேசு புத்தர் போன்றவர்கள் எல்லாம் மரணம் பற்றி கரிசனை கொள்கையில, இந்துக்களின் உருவ வெளிப்பாடுகளில் கிருஸ்ணரே பிறப்பு இறப்பு கோட்பாடுகள் பற்றி அதிகம் ஈடுபாடுள்ளவராக காணப்படுகிறார்.</p>
<p>அண்மையில் காலமான ஒரு நண்பன் இளைஞனாக இருக்கும் போதே அடிக்கடி &#8216; நாராயணா நாராயணா &#8216; என்று அழைத்துக் கொண்டிருப்பார். ஒரே நாம உச்சாடனத்தை பல விதமன தொனிகளில் வெளியிட்டு மாறுபட்ட பொருள்களை அவர் வெளிப்படுத்தி வந்தார்.</p>
<p>கடவுளே ! இப்படி ஆகிவிட்டதே! என்பதற்கு பெருமூச்சுடன் கூடிய ஒரு தொனியில் நாராயணா என்பார். பாவம், இவனைக் காப்பாற்று என்பதற்கு இன்னொரு தொனியில் நாராயணா இவனைக் கொஞ்சம் நீ கவனிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு நாராயணா உண்டு.</p>
<p>ஆனால் அந்த நண்பன் இன்று இல்லை. படியால் விழுந்தவர் எழுந்திருக்காது ஈற்றில் விழுந்தே விட்டார். சத்ய நாராயணா பக்தனான அவர் அவரின் பின்னாலேயே போய்விட்டார். அவரது அஸ்தி இராமேஸ்வரத்தை நோக்கி செல்ல உள்ளது.</p>
<p>இன்னொருவர், கடந்த ஆண்டு இதே நாட்களில், இலண்டன் மாநகரில் கணக்கை முடித்துக் கொண்டார். கணக்காளரான இவரோ தன் கணக்கு இவ்வளவு விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மறைய முன் ஒரு வாரத்திற்கு முன் கனடா வந்த இவர் (மகளின்) கல்யாணத்திற்கு முதலே சொல்லுங்கே நான் வருவேன் என்று விட்டுப் போனவர், விமானத்தால் இறங்கி மருத்துவமனைக்குத் தான் போனார் அவரது உடல் தான் வீடு திரும்பியது. உயிர் திரும்பவே இல்லை.</p>
<p>எங்களைப் போன்ற விவகாரம் பிடித்தவர்கள் தான் இன்னும் இருக்கிறோம். நல்லவர்கள் சீக்கிரமே அழைக்கப்பட்டு விடுகிறார்கள். உள்ளங்களில் நல்லவை தான் இப்போதெல்லாம் விரைவில் உலர்ந்து விடுகின்றன. மரணத்தின் அழைப்பிதழ்கள் அவர்களை விரைந்தே வந்தடைகின்றன போலும்.</p>
<p>அழுது பிறக்க முன்னரே உணரப்படுபவள் தாய். அறிவு வர வர, வளர வளர உணரப்படுபவர் தந்தை. ஞானத்தால் மட்டும் காணக்கூடியவர் கடவுள். இந்த மாதா பிதாக்கள் அழைக்கப்படட காலமாகவும் இது அமைவதால் மரணம் பற்றி பாரக்க வேண்டியேற்படடது.</p>
<p>மரணம் நம் எல்லோரையும் தேடி என்றோ ஒரு நாள் வந்தே தீரும். அப்போது போவது எங்கே என்று தெரியாமல் நாம் போகத்தான் போகிறோம். எனவே மரணம் பற்றிய ஒரு பார்வை அவசியமானது. ஆனால் அந்தப் பார்வை சாமான்ய மானிடப் பார்வையாக அல்லாமல் ஆய்வுப் பார்வையாக அமைய வேண்டும்.</p>
<p>ஓரிரு வாரங்களிற்கு முன், ஊடக சுதந்திர தினத்தையொட்டி பல ஊடகங்களும் பல கருத்துக்களை வெளியிட்டன. நானறிந்த வரையில் யாரும் பத்திரிகைத் தர்மம் பற்றியோ தரம் பற்றியோ பேசவோ எழுதவோ இல்லை. என்னைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் தான் ஒரு ஊடக நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பத்திரிகைத் தர்மமாக இருக்க வேண்டும். தர்மம் என்னும் போது அங்கு தரமும, திருத்தமும் அடங்கி விடுகின்றன.</p>
<p>முள்ளிவாயக்கால் பேரழிவு முடிந்த கையுடன் கனடாவிலிருந்து ஒரு முன்னாள் பொலிஸ்காரர் தாயகம் சென்று விட்டு வந்து, &#8216;அங்கு ஒரு பிரச்சினையுமில்லை ஊர் அமைதியாக இருக்கிறது எங்கட சனம் இப்ப குண்டு வெடிப்பு அது இது எண்டு எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருக்குதுகள்&#8217; என்று வானொலி ஒன்றின் வாயிலாக தெரிவித்தார். அதை பல சாமான்ய மக்களும் நம்பினர்.</p>
<p>எனவே இவ்வாறான தப்பான கணிப்புப் பார்வை உள்ளவர்களின் கருத்தக்களை எல்லாம் ஒலி பரப்பலாமா என்ற பார்வை அவசியமானது. கருத்தச் சுதந்திரம் என்ற கோதாவில் நாமான்யர்களின் பாமரப் பார்வைகளை புலம்பெயர் தமிழர் ஊடகங்கள் அனுமதிக்கின்றன&#8230;.! இல்லை ஊக்குவிக்கின்றன.</p>
<p>ஒரு பொலிஸ்காரரைப் பொறுத்தவரை அமைதி என்பது குழப்பமற்ற புறநிலை தான். அடி தடி சண்டை சச்சரவு செல்லடி குண்டு வெடிப்பு &#8230;. இவற்றை அவர் காணாதவரை அந்தப் பிரதேசம் அமைதியாக இருக்கிறது என்பது தான் அவரது அறிவின் முடிவாகும். ஆனால் அந்தத் தவறான கருத்தை ஒலிபரப்புவது முறையா?</p>
<p>ஆம் பேச்சுச் சுதந்திரம் என்பது தான் இன்றைய அநேகமான புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களின் முடிவாகவும் சாட்டாகவும் இருக்கிறது. யாரும் வந்து தப்புத் தப்பாய் எதையும் சொல்விவிட்டுப் போகலாம். காரணம் அவரிற்கு அவரது கருத்தை சொல்ல சுதந்திரமும் உரிமையும் இருக்கிறதென்ற சமாதானம் தவறுகளை தவறாது ஒலிபரப்புகின்றன.</p>
<p>புலம்பெயர் தமிழர்களின் கருத்துச் சுதந்திரம் வளர்கையில் உண்மைகள் தான் கொல்லப்படுகின்றன. &#8230;.!?. இனி நான் வேண்டுமானால் அந்தப் பொலிஸ்காரரிற்கு வெற்றுக் கண்ணிற்கும், நெற்றிக் கண்ணிற்கும் உள்ள வேறுபாட்டை புரிய வைக்க முடியக்கூடும்.</p>
<p>அமைதியாக இருப்பதற்கும், அடக்கப்பட்டு இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரியாதவர்கள் எல்லாம் நிலைவரத்தை சொல்ல அழைக்கும் அல்லது அனுமதிக்கும் பாங்கை தொடர்ந்தால் ஊடக நிகழச்சிகளின் பயன்பாடு பூஜ்ஜியமாகிவிடும்.</p>
<p>ஒருவன் சொர்க்கத்திற்கு போகவேண்டுமானால் அவன் மரணித்தாக வேண்டும். சமாதி அடைவோரின் நோக்கமும் இது தானோ என்னமோ? எந்த விடயத்திலும் நன்மையும் தீமையும் கலந்திருக்கும் என்பதற்கிணங்க மரணத்திலும் நன்மைகள் உள்ளன. தவிர, மதங்கள் யாவும் மரணம் பற்றி சற்று அதிகமாகவே பேசியுள்ளன.</p>
<p>எனவே நாங்கள் சந்தித்தே தீர வேண்டிய இந்த அழையா விருந்தாளி பற்றி சிந்திப்பது ஆரோக்கியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. இருந்தாலும் கடமைகள் முடிய முன் இந்த மரணம் வருவதும் , பெற்றாரிருக்க இளையோர் மறைவதும் தாங்கக் கடினமானவையே.</p>
<p>தவிர இந்த இதயங்கள் இறக்கும் போது இதயத்துள் இருக்கும் இதய தெய்வங்களிற்கு என்ன நேரப் போகிறது என்ற கவலை வேறு நமக்கு. ஆனால் மரணமோ உனக்கு புதுவாழ்வு தருகிறேன் என்று விரைந்தே பயணிக்கினற்தா &#8230;&#8230; அதுவும் எருமை வாகனத்தில்&#8230;. மரணம் ஆய்விற்கு மட்டுமல்ல அறிவிற்கும் ஞானத்திற்கும் உரிய ஒரு அரிய காட்சியாகும்.</p>
<p>ஆனால் அதன் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39871</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" medium="image">
			<media:title type="html">war-100&#215;80</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்! முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தா.பாண்டியன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39868</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39868#comments</comments>
		<pubDate>Fri, 24 May 2013 13:42:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39868</guid>
		<description><![CDATA[வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன் நம்பிக்கை வெளியிட்டார். முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள், அடுத்து ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். அவா் ஆற்றிய உரை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/paanniyan-100x80.jpg" alt="paanniyan" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-18995" />வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.</p>
<p> முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்<span id="more-39868"></span>டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள்,</p>
<p>அடுத்து ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.</p>
<p>அவா் ஆற்றிய உரை காணொளி!.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/aBpXE0mte9k?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39868</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/paanniyan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/paanniyan.jpg" medium="image">
			<media:title type="html">paanniyan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/paanniyan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி! &#8211; புகழேந்தி தங்கராஜ்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39864</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39864#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 15:47:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39864</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத் தீவு &#8211; என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை. வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/capt_ankayatkanni-100x80.jpg" alt="capt_ankayatkanni" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39865" />யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத்<span id="more-39864"></span> தீவு &#8211; என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை.</p>
<p>வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான  காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக் குடிபெயர்ந்தது அவளது குடும்பம். கொக்குவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அங்கே குடிபெயர்ந்தபோது அங்கயற்கண்ணிக்கே கூடத் தெரியாது அந்தச் சாலை வழியாக இல்லாமல் கடல்வழியாகத் தான் காங்கேசன் துறை நோக்கிய தனது பயணம் அமையப் போகிறது என்பது.</p>
<p>கடலால் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கடற்கரைகள் வினோதமானவை. ஒவ்வொரு கரைக்கும் ஒவ்வொரு சுபாவம். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறை கடற்கரை அலையே இல்லாது ஏறக்குறைய ஒரு கடல் நீரேரி போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரபாகரன் போலவே அமைதியாக இருக்கும். வேலணை அதற்கு நேர்மாறான கடற்கரை. நீண்ட வெண்மணற்பரப்பு உயர உயரமான சீற்றத்துடன் எழுகிற  அலைகள் &#8211; என்று வேலணை ஒரு ஆவேசக் கடற்கரை.</p>
<p>கொக்குவில்லுக்கு வரும் முன்பே ஓங்கி அடிக்கிற வேலணையின் கடல் அலைகளைப் போலவே நீச்சல் பயிற்சிக்காக அங்கே அடிக்கடி வந்துசென்ற பெண் கடற்புலிகளாலும் கவரப்பட்டாள் அங்கயற்கண்ணி. அந்தப் போராளிகள் அந்தப் பகுதி மக்களுடன் இயல்பாகப் பழகியதும் அவர்களுக்கு இருக்கிற கஷ்டங்களைக் கேட்டுக் கொண்டதும் அதற்கு என்ன தீர்வு என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதும் அவளை அவர்கள்பால் ஈர்த்தது.</p>
<p>இன்றைக்கு நமது தமிழக மீனவர்களுக்கு இருக்கிற உயிராபத்து அன்றைக்கு வேலணை பகுதி மீனவர்களுக்கும் இருந்தது. மீன் பிடிக்கச் செல்பவர்கள் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலாலோ தாக்குதலாலோ பாதி வழியிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கண்கலங்கத் திரும்பிவருவது அடிக்கடி நடக்கிற சம்பவமாக இருந்தது. தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே அந்த மக்கள் அஞ்சி அஞ்சிச் செய்யவேண்டிய அவலநிலை. வயிற்றுப் பிழைப்புக்கான தங்கள் தொழிலை இயல்பாகச் செய்யமுடியாத நிலையில் அந்த மக்கள் கண்ணீரோடும் வறுமையோடும் காலந்தள்ளுவதைப் பார்த்தவள் அங்கயற்கண்ணி.</p>
<p>சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் ஆட்டு மந்தையைப் போல் அடைபட்டுக் கிடக்கவில்லை அங்கயற்கண்ணியின் இதயம். அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமானால் ஆயுதம் ஏதுமில்லாத அப்பாவி மக்கள்மீது ஆயுதப் பிரயோகம் செய்யும் இனவெறி பிடித்த கடற்படைக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்தாள். அதற்கான ஒரே வழி கடற்புலிகள் அமைப்பில் இணைவதுதான் என்று உறுதியாக நம்பினாள். கொக்குவில்லுக்கு வந்தபிறகு அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கத்தில் இணைந்ததன் பின்னணி இதுதான்.</p>
<p>வேலணையில் தன் குடும்பத்துக் காணியெல்லாம் பறிக்கப்பட்டபோதே திருப்பி அடிக்கவேண்டும் &#8211; என்கிற எண்ணம் வேர்விட்டிருக்க வேண்டும் அங்கயற்கண்ணிக்குள்! கடற்புலிகள் அமைப்பில் சேர்ந்தவுடனேயே தான் கரும்புலியாக இருக்க விரும்புவதைத் தெரிவித்தவள் அவள். கொலைவெறி பிடித்த திமிங்கலம் போல் தங்கள் கடல்பகுதியில் நடமாடும் சிங்கள இனவெறி கடற்படையின் கப்பல்களில் ஒன்றையாவது தகர்க்கவேண்டும் &#8211; என்பதுதான் அவளது கனவாக இருந்தது.</p>
<p>வேலணையில் இருந்தபோதும் சரி கொக்குவில்லுக்கு வந்த பிறகும் சரி இருட்டியபிறகு வெளியே போவதென்றால் தாயின் துணையின்றிப் போகத் துணியாதவள் கயல். தாயின் அரவணைப்பில் குழந்தையாகவே இருந்தவள். இயக்கத்தில் அவள் சேர்ந்ததை அவளை அறிந்த எவராலும் நம்பமுடியவில்லை.</p>
<p>இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்தே போட்டிகளில் முதலிடம் தொடர்ந்து குழுத் தலைவி &#8211; என்று முன்னணியிலேயே இருந்தாள் அங்கயற்கண்ணி. தொடக்கத்தில் லெப்டினென்ட் கேர்னல் பாமாவின் தலைமையில் கடற்கண்காணிப்பில் ஈடுபட்ட குழுவில் அவளும் இடம்பெற்றிருந்தாள். மரபு வழிப் போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவு திறன் படைத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய பூநகரி படைத்தளம் மீதான &#8216;தவளைப் பாய்ச்சல்&#8217; தாக்குதலின் போது பாமா அங்கயற்கண்ணியை உள்ளடக்கிய குழு கடற் கண்காணிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டது.</p>
<p>அங்கயற்கண்ணியின் ஈடுபாடும் ஆற்றலும் மிக விரைவிலேயே அவளை &#8216;கேப்டன்&#8217; நிலைக்கு உயர்த்தின. அங்கயற்கண்ணி கேப்டன் அங்கயற்கண்ணியாக அறிவிக்கப்பட்டாள். கரும்புலிகளுக்கான கடும் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அங்கயற்கண்ணி இயக்கத்தில் சேர்ந்ததுதான் தெரியும் அவள் குடும்பத்துக்கு! விரும்பி கரும்புலியாகி இருக்கிறாள் என்பது தெரியாது எவருக்கும்!</p>
<p>இயக்கம் கொடுக்கும் விடுமுறையில் ஒருமுறை தாயைப் பார்க்க கொக்குவில்லுக்கு வந்தாள் அங்கயற்கண்ணி. நன்றாகப் படிக்கவேண்டும் &#8211; என்று தம்பிகளுக்கு அறிவுரை சொன்னாள். தன்னைப் பற்றிக் கவலைப்பட்ட தாயிடம் &#8216;என்னைப் பற்றிக் கவலைப்படாதே! நான் காத்தோடு காத்தா போயிடுவேன் அம்மா&#8217; என்று அவள் சொன்னதற்கு எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது என்பதை அப்போது எவரும் உணரவில்லை.</p>
<p>காத்தோடு காத்தாக கேப்டன் அங்கயற்கண்ணி இரண்டறக் கலந்ததுஇ 1994 ஆகஸ்டு மாதத்தில். இந்திய சுதந்திர தினத்தன்று அவளது இறுதிப்பயணம் தொடங்கியதுஇ அன்று நள்ளிரவே  அந்தப் பயணம் முடிவடைந்தது.</p>
<p>அன்று 1994 ஆகஸ்ட் 15ம் நாள். காங்கேசன் துறை துறைமுகத்தில் 45 அடி ஆழ கடல்நீரில் நிறுத்தப்பட்டிருந்த வடபிராந்தியத்துக்கான தலைமைக் கட்டளைக் கப்பலான &#8216;அபித&#8217; தான் அவளது இலக்கு. மெலிந்த சரீரம் அவளுக்கு. 60 கிலோ கூட இருக்காது அவளது எடை. அவளது இலக்கோ 6300 டன் எடை கொண்ட ராட்சசக் கப்பல்.</p>
<p>326 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்ட அந்தக் கப்பல் வட பிராந்தியத்துக்கான நடமாடும் தலைமையகமாகவே இருந்ததால் மிகவும் சக்தி வாய்ந்த ராடார்கள் அதில் பொருத்தப் பட்டிருந்தன. வலுவான ஆயுதங்களைத் தாங்கியிருந்தது அது.  அப்படியொரு அதி சக்தி வாய்ந்த கப்பலை அழிக்கத் தேவையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் அந்தக் கப்பலைத் தொட்டுப்பார்க்கக்கூட புலிகளால் இயலாது என்று உறுதியாக நம்பியது சிங்களக் கடற்படை. அங்கயற்கண்ணி என்கிற  உயிராயுத வடிவில் ஆழ்கடல் வழியே ஆபத்து  வந்துகொண்டிருப்பதை அவர்கள் அறியவேயில்லை.</p>
<p>தாக்குதலுக்காக அங்கயற்கண்ணி புறப்பட்ட கடற்கரையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் 17 கடல் மைல். (ஏறத்தாழ 35 கிலோமீட்டர்.) சிறிது தூரம் வரை படகில் சென்றாலும் கடற்படை மோப்பம் பிடித்துவிடக்கூடும் என்பதால் மொத்தத் தொலைவையும் நீந்தியே கடப்பது என்று முடிவு செய்திருந்தாள் அங்கயற்கண்ணி. &#8216;கவலையே படாதீங்க&#8230; பத்திரமாப் போவேன்.. இலக்கை அடிக்காமத் திரும்பமாட்டேன்&#8217; என்று புறப்படும் போது உறுதியுடன் சொன்னாள் தனக்குப் பிரியாவிடை கொடுத்த தோழிகளிடம். அவளது குரலில் ஒலித்த &#8216;ஓர்மம்&#8217; (வைராக்கியம்) அவர்களை வியக்கவைத்தது.</p>
<p>சக பெண் கடற்புலிகளில் சிலர் அவளுடன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீந்திச் சென்றனர். ஆழ்கடல் வரை சென்று அவளை வழியனுப்பினர். அவளைப் பிரிய மனமின்றி அவள் நீந்திச் செல்வதைக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் தங்கள் பார்வையிலிருந்து மறைந்தபிறகே திரும்பினர் அவர்கள்.</p>
<p>மாலையில் தொடங்கியது அங்கயற்கண்ணியின் கடற்பயணம். கடற்கரையில் அமர்ந்து அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவளது தோழிகள். அத்தனை பேரின் மனத்திலும் அங்கயற்கண்ணி நீந்திச் சென்ற காட்சி மட்டுமே படர்ந்திருக்கவேண்டும். அந்த இரவில் அவர்களுக்கு சற்றுத் தள்ளி கடல் மட்டுமே அலைகள் வழியாகப் பேசிக் கொண்டிருந்தது.</p>
<p>கடலின் இன்னொரு முனையில் காங்கேசன் துறையை சுமார் எட்டரை மணி நேர நீச்சலுக்குப் பின் எட்டியிருந்தாள் அங்கயற்கண்ணி. எட்டரை மணி நேரத்தில் 17 கடல் மைலை நீந்திக் கடக்க வைத்தது அவளது உடல் வலிமையாயிருக்க வாய்ப்பில்லை&#8230; அது அவளது மன வலிமை!</p>
<p>ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 12.35 மணி&#8230;.. அங்கயற்கண்ணி என்கிற உயிராயுதம் காங்கேசன்துறை துறைமுகத்தில் வெடித்துச் சிதறியது. சுமார் 50 கிலோ எடையே இருந்த அந்த உயிராயுதத்தின் தாக்குதலில் 6300 டன் எடை கொண்ட &#8216;அபித&#8217; வெடித்துச் சிதறியது. அதன் பாதுகாப்புக்காக அருகில் நின்றிருந்த பீரங்கிக் கப்பலான டோரா கப்பல் ஒன்றும் உடன்கட்டை ஏறுவதைப் போல் அபிதவுடன் சேர்ந்து சாம்பலானது.</p>
<p>அதிர்ந்து போனது சிங்களக் கடற்படை. எந்தத் தாக்குதலாலும் தகர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்த கட்டளைக் கப்பல் அவர்கள் கண்ணெதிரிலேயே தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தது. அவர்களது கனவுக் கோட்டைகளில் ஒன்று &#8211; அபித. அந்தக் கோட்டை அவர்களது கண் முன்னாலேயே ஜலசமாதி ஆகிக்கொண்டிருந்தது.</p>
<p>காங்கேசன்துறையில் அபித கப்பல் தகர்க்கப்பட்ட வெடிச்சத்தம் பல மைல் தூரத்துக்குக் கேட்டது. கடலின் இன்னொரு முனையில் அங்கயற்கண்ணியை வழியனுப்பிவிட்டுக் காத்திருந்த பெண் போராளிகள் 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெருத்த அதிர்வுடன் ஒலித்த அந்தப் பேரொலியைக் கேட்டவுடன் &#8216;கட்டளைக் கப்பல் அவுட்&#8217; என்று உரக்க முழங்கினர். அது ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த நொடியே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அந்தச் சாதனையை உயிரைக் கொடுத்து நிறைவேற்றியிருக்கும் தங்கள் சகோதரி அங்கயற்கண்ணியின் நினைவில் ஆழ்ந்தனர் அவர்கள். கண்கலங்க ஓடிப்போய் கடற்கரையில் நின்றனர் அந்த நள்ளிரவில்&#8230; எங்கேயிருந்து அங்கயற்கண்ணி விடைபெற்றாளோ அந்தக் கடற்கரையில் கண்ணீரோடு நின்றனர்.</p>
<p>&#8216;உங்கள் தோழி சமுத்திரகுமாரி ஆகிவிட்டாள் அவளை என் மடியில் ஏந்தியிருக்கிறேன்&#8217; &#8211; என்று சொல்வதைப் போல் கூப்பிடு தூரத்தில் உரத்த குரலில் பேசிக் கொண்டேயிருந்தது அலைகடல். வரலாறும் அங்கயற்கண்ணியை அப்படித்தான் அழைக்கிறது &#8211; &#8216;கடலன்னையின் பெண்குழந்தை&#8217; என்று!</p>
<p>50 கிலோ ஆயுதம் ஒன்று 6300 டன் அசுரனைத் தகர்த்த இந்த வீர  வரலாறுஇ கோலியத்தை வீழ்த்திய டேவிட் கதையை வாசித்த எவரையும் அது உண்மையாகவே நடந்திருக்குமோ என்றுகூட  யோசிக்கவைத்திருக்கும்.</p>
<p>இனப்படுகொலைதான் செய்கிறது இலங்கை &#8211; என்பது தெரிந்தே சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த ஈவிரக்கமற்ற அத்தனை நாடுகளுக்கும் அண்ணல் காந்தியைப் போல் தன்னுடைய வாழ்வையே செய்தியாக அனுப்பிவைத்தவள் அங்கயற்கண்ணி. &#8216;இனப்படுகொலை செய்கிற இலங்கைக்கு நீங்கள் மேலும்மேலும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தாலும் எம் மக்களைக் காக்கப் போராடும் எங்களுக்கு ஆயுதமே வராது தடுத்தாலும் உயிராயுதம் இருக்கிறது எங்களிடம்&#8230; எச்சரிக்கை&#8217; என்பதே அந்தச் செய்தி. எக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது அந்த எச்சரிக்கை.</p>
<p>அங்கயற்கண்ணி சமுத்திரகுமாரியாக சரித்திரம் படைத்து உயிர் துறந்தது கொக்குவில்லில் அவளது தாய்க்குத் தெரியவந்தது. இரவில் தன் துணையில்லாமல் வெளியே போகப் பயப்படும் அந்தப் பிள்ளை 35 கிலோமீட்டர் தூரத்தை நீந்தியே கடந்திருக்கிறாள் &#8211; என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.   &#8216;பருந்துகிட்ட இருந்து குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க் கோழி மாதிரி வேலணையிலிருந்து நான் பாதுகாப்பாகக்  கூட்டி வந்த பிள்ளை&#8217; என்று சொல்லிச் சொல்லி அழுதாள். அந்தப் பருந்து எது என்பதை உணர்ந்தவர்கள் பெண் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத அந்த பௌத்தப் பருந்துகளுக்கு அங்கயற்கண்ணி என்கிற கோழிக்குஞ்சு பாடம் புகட்டியிருப்பதை எண்ணி வியந்தனர்.</p>
<p>&#8216;நல்லூரில் திருவிழா நடக்கிற நேரம்தான் நான் சாகணும்&#8217; என்று அங்கயற்கண்ணி அடிக்கடி சொன்னதை நினைத்து அவளது தோழிகளான கடற்புலிகள் அழுதனர். ஏன் அப்படிச் சொல்கிறாள் &#8211; என்று புரியாமல் விளக்கம் கேட்டார்களாம் அவர்கள். அதற்கு அங்கயற்கண்ணி சொன்ன பதில் அவளது உயிர்த்தியாகத்தை விட உயர்ந்தது.</p>
<p>&#8216;நல்லூரில் திருவிழா நடக்கிற நேரத்தில்தான் கச்சான் வித்த காசு அம்மாகிட்ட இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் ஒவ்வொரு வருஷமும் என் நினைவு நாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கப் போகும் பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவால் நல்ல சாப்பாடு கொடுக்க முடியும்&#8217; என்று அங்கயற்கண்ணி சொன்னபோதே கண்கலங்கி அவளை அணைத்தவர்கள் அவள் இறந்த பிறகு அதைச் சொல்லிச் சொல்லி அழுதார்கள். எந்த அளவுக்கு அவளுக்குள் வைராக்கியம் இருந்ததோ அந்த அளவுக்கு அவளிடம் அன்பும் பரிவும் இருந்தது என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்தின. (கச்சான் &#8211; என்பது வறுத்த வேர்க்கடலை.)</p>
<p>உலகின் எந்த இலக்கியத்திலும் இப்படியொரு இதயத்தைப் பிழியும் பதிவு இருக்க வாய்ப்பேயில்லை. தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டுதோறும் தன் நினைவுநாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கச் செல்வோருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் அதற்கு வசதியாக &#8211; தாயின் கையில் காசு புழங்குகிற ஒரு பருவத்தில் தான் இறக்கவேண்டும் &#8211; என்று நினைக்கிற மனம் எங்காவது எவருக்காவதோ எங்கோ ஓர் இலக்கியத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்துக்கோ இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? எங்கள் இனத்தின் இன்னொரு அடையாளமாகவே இன்றுவரை திகழும் எங்கள் குலக்கொழுந்து அங்கயற்கண்ணியைத் தவிர வேறெவருக்கும் அப்படியொரு கவலை எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.</p>
<p>நெல்லியடியில் அமைந்திருந்த அரக்கர்களின் முகாமைத் தகர்த்த மாவீரன் மில்லரில் தொடங்கி முப்பது பேருக்கு மேற்பட்ட கரும்புலிகள் இலங்கைக்கு சர்வதேசமும் வாரிவழங்கிய ஆயுதங்களைத் தங்கள் உயிராயுதத்தால் தகர்த்து எறிந்திருந்தார்கள் அங்கயற்கண்ணிக்கு முன்பே. அவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் பட்டியலில் பெருமிதத்துடன் தன்னை அவள் இணைத்துக் கொண்டாள் முதல் பெண் கரும்புலியாக!</p>
<p>கரும்புலிகளின் பாடலாக இன்றைக்கும் உலகமெங்கும் ஒலிக்கிறது ஒரு உருக்கமான பாடல்.</p>
<p>&#8216;கரும்புலி என்றொரு பெயர்கொண்டு<br />
கடும்பகை தகர்க்கிற வெடிகொண்டு<br />
பெரும்படை அணி இன்றிப் போகின்றோம்<br />
எங்கள் உயிராலே பகை வென்று சாகின்றோம்!</p>
<p>எங்களின் சாவொரு வரலாறு<br />
அதில் எழுதிய வெற்றிகள் பலநூறு<br />
இங்கிது போல் வீரம் வேறில்லை<br />
உயிர் ஈதலே அறத்துக்கு மேல் எல்லை&#8217;<br />
என்று தொடங்குகிற அந்தப் பாடல் கண்ணீராலேயே எழுதப் பட்டிருக்கும் ஒரு உருக்கக் கவிதை.  </p>
<p>இப்படியொரு கவிதையை வார்த்தைகளால் எழுதாமல் தன் வாழ்க்கையால் எழுதியவள் அங்கயற்கண்ணி. &#8216;காத்தோடு காத்தாகப் போயிடுவேன் அம்மா&#8217; என்று அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் அழுத்தத்தை என்றைக்கும் எழுதமுடியாது எந்தக் கவிஞனாலும்!</p>
<p>அங்கயற்கண்ணியின் தியாகம் எதனோடும் எவரோடும் ஒப்பிடமுடியாத உயிர்த் தியாகம். பல நூறாண்டுகள் அவள் பேசப்படுவாள் வணங்கப்படுவாள் போற்றப்படுவாள். காங்கேசன்துறையின் காற்று வெளிகளிலும் யாழ்ப்பாணத்துக் கடல்வெளிகளிலும் என்றென்றும் காற்றோடு கலந்து நிற்பாள் அந்த சமுத்திரகுமாரி. அவளைப் போன்ற எண்ணற்ற மாவீரர்களின் உயிர்மூச்சுதான் ஈழ விடுதலையின் மூச்சுக் காற்றாக உலவிக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்! அந்தக் காற்றுக்கு வேலிபோட இயலுமா &#8211; இலங்கைப் பகைவர்களாலும் இந்தியக் கயவர்களாலும்! </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39864</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/capt_ankayatkanni-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/capt_ankayatkanni.jpg" medium="image">
			<media:title type="html">capt_ankayatkanni</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/capt_ankayatkanni-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிச்சிறப்பு கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது- மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39860</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39860#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 15:29:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39860</guid>
		<description><![CDATA[பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது.இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.&#8221; இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Annai-100x80.jpg" alt="Annai" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-14914" />பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்.</p>
<p>பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொ<span id="more-39860"></span>துபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது.இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.&#8221; இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.</p>
<p>இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்&#8217; என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், &#8216;நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். டமாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது&#8221; என்று தெரிவித்திருந்தார்.</p>
<p>இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர்; தெரிவித்தவை வருமாறு: &#8216;முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப்பிரபாகரனுடன் ஒப்பிட்டுக்கூறியுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை.</p>
<p>தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது. பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது.</p>
<p>இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது.</p>
<p>எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்&#8221;  என்றார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39860</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Annai-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Annai.jpg" medium="image">
			<media:title type="html">Annai</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Annai-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் &#8211; மே 18, 2013</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39855</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39855#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 14:52:13 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39855</guid>
		<description><![CDATA[மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக &#8216;தமிழினப் படுகொலை நாள் 2013&#8242; நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39856" alt="Queens Park - Rally15 (Medium)" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Queens-Park-Rally15-Medium-100x80.jpg" width="100" height="80" /></p>
<div id="NewsPostDetailContent">
<div id="yui_3_7_2_1_1369298785616_2635">மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக &#8216;தமிழினப் படுகொலை நாள் 2013&#8242; நிகழ்வானது மா<span id="more-39855"></span>பெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4221"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4222">விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள்.</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally15%20%28Medium%29.jpg" width="600" height="398" /></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4259"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4263"><strong id="yui_3_7_2_1_1369298785616_4260">கனடியத் தமிழர் தேசிய அவையின்</strong> ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4266"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4269">2008 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் தன் மாவீரர் நாள் உரையில் கூறியது போல இன்று எம் தமிழீழ தேச விடுதலைப்போராட்டம் புலத்துத் தமிழர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்கள் இதனை சரியாக புரிந்து செவ்வனவே தம் காலக்கடமைகளை செய்து வருகின்றார்கள். அத்தகைய கால்பதிப்புகளில் ஒன்றாகவே இந்த வருட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவெழுச்சி நிகழ்வுகள் திகழ்கின்றது.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4270"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4273">குறித்த நேரத்துக்கு சரியாக மாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு கனடியத் தேசிய கீதம், தமிழீழத் தேசியக் கொடிப்பாட்டு, என்பன இசைக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் வீர்ச்சாவெய்தியமாவீரர்களுக்கும்அக்காலகட்டத்தில்அநியாயமாக  படுகொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தி, பூவள்ளித் தூவி மலர் வணக்கம் செலுத்தி எழுகையோடு நிகழ்வுகள் ஆரம்பமாயின.</div>
<div></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4280">எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள் என்பனவற்றோடு எழுச்சி உரைகளும் இடம் பெற்றன. எழுச்சி உரைகள் வரிசையில் பின்வருவோர் உரையாற்றினார்கள்:</div>
<div></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4283">நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர் தேசிய அவையைச் சேர்ந்த <strong>தேவா சபாபதி</strong> மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த <strong>பிரியந்த்</strong> ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.</div>
<div></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4286">ஒன்ராறியோ புதிய ஜனநாயக கட்சி சார்பில்அதன் தலைவர் <strong>நீதன் சண்</strong><strong> (NEETHAN SHAN)</strong> எழுச்சியுரை ஆற்றியதோடு  ஒன்ராறியோ <strong>NDP</strong>கட்சி தலைவி <strong>ANDREA HORWATH</strong>மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த <strong>MPP JAGMEET SINGH</strong>ஆகியோரின் உரைகளையும் பகிர்ந்து கொண்டார். இவர்களோடு NDP கட்சித் தலைவர் <strong>THOMAS MULCAIR</strong>அவர்களும் வாழ்த்துரை அனுப்பி இருந்தார்.</div>
<div></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4289">லிபரல் கட்சியின் சார்பில் உரையாற்றிய <strong>MP JOHN MCCALLUM</strong>தனது உரையின் போது லிபரல் கட்சியின் தலைவர் <strong>JUSTIN TRUDEAU</strong>மற்றும் <strong>MP JIM KARIGIANNIS</strong>ஆகியோரின் உரையையும் வாசித்தார்.</div>
<div></div>
<div><strong>MPP GLENN MURRAY</strong>தனது உரையின் போது <strong>Premier of Ontario Kathleen Wayne</strong>இன் நினைவுரையையும் வாசித்துப் பகிர்ந்து கொண்டார். <strong>MPP GLENN MURRAY</strong>  அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நடப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக தனது தொகுதியில் மரம் நடும் திட்டத்தை அமுல்ப்படுத்துபவர்.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4329"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4328">Ontario Progressive Conservative party தலைவர் <strong>TIM HUDAK</strong>அவர்கள் இந் நிகழ்ச்சிக்காக விடுத்த பிரத்தியேக உரையும் வாசிக்கப்பட்டது.ack</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4325"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4293">இவர்கள் தவிர மார்க்கம் நகர சபை உறுப்பினர் திரு <strong>லோகன் கணபதி </strong>அவர்களும், தமிழர் தகவல் ஆசிரியரான திரு. <strong>திருச்செல்வம்</strong>, கனடியத் தமிழர் தேசிய அவை சார்பில் <strong id="yui_3_7_2_1_1369298785616_4290">கிருஸ்ணா சரவணமுத்து</strong><strong>,</strong> இளையோர் (<strong>TYO</strong>) அமைப்பின் சார்பில் <strong>சங்கரி</strong><strong>,</strong> <strong>CTYA</strong> சார்பில் <strong>ஜெனிற்  </strong>ஆகியோரும் எழுச்சிப் பேருரைகள் ஆற்றினார்கள்.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4332"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4296">எழுச்சி உரைகளைத் தொடர்ந்து தீபங்கள் ஏற்றி ஒளிமுகம் தோறும் நினைவுகள் ஏந்தி வணங்கப்பட்டது. இனப்படுகொலை எமக்களித்த மறக்க முடியாத வரலாற்று சோகங்களின் அழுகையை எழுகையாக மாற்றி தமிழீழ விடுதலை இலக்கை நோக்கி உறுதியோடு பயணிப்போம் என முள்ளிவாய்க்கால் மண் மீதும் மரணித்த மக்கள் மீதும் சத்தியம் செய்து உறுதி மொழி கூறப்பட்டது.</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4297"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4301">தம் நெஞ்சில் கனலும் தமிழ் தேசிய உணர்வை மாபெரும் மக்கள் அலை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வருகை தந்து முள்ளிவாய்க்காலில் விடுதலைக்காய் பலியான அத்தனை உறவுகளையும் நினைந்து மலரள்ளித் தூவி நினைவுத்தீபம் ஏற்றி மாவீரர் கனவுகளை நனவாக்க மறுபடியும் எழுவோம் என சாவினைச் சரித்திரமாக்கியவர்களை நெஞ்சினில் ஏந்தி சத்தியம் செய்து சென்ற காட்சியானது விதைக்கப்பட்ட வீரம் மறுபடியும் பல்கிப் பெருகி முளைத்தே தீரும் என்பதற்கு சான்றாகிச் சரித்திரமாகி நிற்கின்றது.<strong id="yui_3_7_2_1_1369298785616_4298"></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally3%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally5%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally6%20%28Medium%29.jpg" width="600" height="334" /><br />
</strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4322">
<img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally7%20-%20McCallum%20%28Medium%29.jpg" width="600" height="285" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally8%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally9%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally10%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally11%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally12%20%28Medium%29.jpg" width="600" height="281" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20park%20-%20Thazumpaham%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally13%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally17%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally14%20%28Medium%29.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally16%20%28Medium%29.jpg" width="600" height="398" /></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4333"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4321" align="center"><strong id="yui_3_7_2_1_1369298785616_4319">தமிழரின் தாகம் தமிழீழம் காணும் வரை தணியாது.</strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4334" align="center"><strong> </strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4316" align="center"><strong id="yui_3_7_2_1_1369298785616_4314">முள்ளிவாய்க்கால் முடிவல்ல! </strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4339" align="center"><strong id="yui_3_7_2_1_1369298785616_4337">இது இன்னொரு விடுதலைப் பயணத்துகான ஆரம்பம்!</strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4311" align="center"><strong> </strong></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4340"></div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4310" align="center">மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4307" align="center">தொலைபேசி:  <img alt="" src="chrome://skype_ff_extension/skin/numbers_button_skype_logo.png" />416.830.7703</div>
<div id="yui_3_7_2_1_1369298785616_4306" align="center">மின்னஞ்சல்: <a id="yui_3_7_2_1_1369298785616_4303" href="mailto:info@ncctcanada.ca" target="_blank" rel="nofollow">info@ncctcanada.ca</a></div>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39855</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Queens-Park-Rally15-Medium-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Queens-Park-Rally15-Medium.jpg" medium="image">
			<media:title type="html">Queens Park &#8211; Rally15 (Medium)</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Queens-Park-Rally15-Medium-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally15%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally3%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally5%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally6%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally7%20-%20McCallum%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally8%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally9%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally10%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally11%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally12%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20park%20-%20Thazumpaham%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally13%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally17%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally14%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/Queens%20Park%20-%20Rally16%20%28Medium%29.jpg" medium="image" />
		<media:content url="http://www.puthinamnews.com//skype_ff_extension/skin/numbers_button_skype_logo.png" medium="image" />
	</item>
		<item>
		<title>இத்தாலியில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 2013</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39851</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39851#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 14:26:09 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39851</guid>
		<description><![CDATA[இத்தாலியில் தமிழ் மக்கள் கணிசாக வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம்,  ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு சிங்கள அரசால் யுத்த விதிமுறைகளை மீறி  மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையில் கொலலப்பட்ட எமது மக்களிற்கும் இறுதிவரை களமாடி வீரச்சரவடைந்த அனைத்து போராளிகளுக்குமான நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் நடாத்தினர். பலெர்மோ 18.05.2013 அன்று பிற்பகல் 4 மணியளவில் பியாச்சா பொலித்தியாமாவில் தமிழீழத் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39852" alt="ita-mai-18-9" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ita-mai-18-9-100x80.jpg" width="100" height="80" />இத்தாலியில் தமிழ் மக்கள் கணிசாக வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம்,  ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு சிங்கள அரசால்<span id="more-39851"></span> யுத்த விதிமுறைகளை மீறி  மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையில் கொலலப்பட்ட எமது மக்களிற்கும் இறுதிவரை களமாடி வீரச்சரவடைந்த அனைத்து போராளிகளுக்குமான நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் நடாத்தினர்.</p>
<p><strong>பலெர்மோ</strong><br />
18.05.2013 அன்று பிற்பகல் 4 மணியளவில் பியாச்சா பொலித்தியாமாவில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பெருந்திரளான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கும் மக்களுக்கும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர் இந் நிகழ்வில் 2ம் லெப்.மாலதி கலைப்பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் சிறப்புரைகள் மற்றும் இத்தாலியப் பிரதிநிதிகளின் கருத்துரைகளும் இறுதியில் உறுதி எடுத்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வுகள்யாவும் இனிதே நிறைவுற்றது</p>
<p><strong>நாப்போலி</strong><br />
19-05-2013 அன்று பிற்பகல் 4 மணியளவில் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்கு சுடர் வணக்கம் , மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிறப்புரை, கவிதை, எழிச்சி நடனங்கள், முள்வாய்கால் நிகழ்வின் நான்காம் ஆண்டு நினைவு தொடர்பாக நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. சம நேரத்தில் இத்தாலி மக்களிற்கு இனப்படுகொலை தொடர்பாக பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p><strong>பொலோணியா</strong><br />
19-05.2013 அன்று பொலோணியா நகரில் தாயகத்தில் எமது உறவுகளிற்கு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை சிரமதான பணியூடாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரை மூலம் வெளிப்படுத்தப்பட்டது.</p>
<p><strong>றெஜியோ எமிலியா</strong><br />
19-05-2013 அன்று றெஜியோ எமிலியாவில் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மலர் செலத்தினர். இத்தாலி அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.</p>
<p><strong>ஜெனோவா</strong><br />
முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்காக பிரார்த்தனை நடாத்தப்பட்டது.</p>
<p>லேச்சே<br />
தமிழினப்படுகொலை தொடர்பாக அரசியல் சந்திப்புக்கள் நடாத்தப்பட்டது.</p>
<p><strong>வியல்லா</strong><br />
18-05-2013 அன்று காலை 9.30 மணிக்கு தேசியக்கொடியேற்றல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மாலை 3.30 மணியளவில் பிறாதிறிவேறே கத்தோலிக்க தேவாலயத்தில் ஆரம்பித்த பேரணி 4.00 மணியளவில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும் இத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இன அழிப்பு , தேசியச்சின்னங்களை தாங்கிய பதாகைகளை தங்கிச்சென்றனர். பேரணியில் திறிவேரே துணை முதல்வர் அவர்களும் இத்தாலிய மக்களும் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. நினைவு வணக்க நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை திறிவேரோ முதல்வர் திரு பியசேத்தி அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்கம் நடைபெற்றது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் திறிவேறோ நகரசபை நிர்வாகமானது தமிழ்மக்களின் துயரங்கள் போக தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக உறுதி கூறினார்.<br />
இத்தாலிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு பாபியோ உரையாற்றும் போது இந்நிகழ்வுகள் இறந்தவர்களை நினைத்து கவலை கொள்வது அல்ல இவற்றிற்குரிய நீதி கிடைப்பத்கு உளைக்க வேண்டும் என்று கூறிய கருத்து எல்லோரையும் சிந்திக் வைத்தது. சிறப்புரை , கவிதை , பேச்சுக்கள் இடம்பெற்றன. சிறப்பாக சென்நெருப்பு நாள் தொடர்பாக திரு காசி அண்ணா வழங்கிய விளக்கவுரை காணொளியில் காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் படலுடன் உறுதியுரையுடன் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவடைந்தது.<br />
<img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-1.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-2.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-3.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-4.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-5.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-6.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-7.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-8.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-9.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-10.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-11.JPG" width="600" height="900" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-12.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-13.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-14.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-15.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-16.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-17.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-18.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-19.JPG" width="600" height="900" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-20.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-21.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-22.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-23.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-24.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-25.JPG" width="600" height="900" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-26.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-27.JPG" width="600" height="900" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-28.JPG" width="600" height="400" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39851</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ita-mai-18-9-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ita-mai-18-9.jpg" medium="image">
			<media:title type="html">ita-mai-18-9</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ita-mai-18-9-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-1.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-2.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-3.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-4.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-5.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-6.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-7.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-8.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-9.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-10.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-11.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-12.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-13.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-14.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-15.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-16.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-17.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-18.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-19.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-20.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-21.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-22.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-23.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-24.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-25.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-26.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-27.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/ita-mai-18-28.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>தமிழா்களின் ஈழப் போராட்டம் முடிந்து விடவில்லை!- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39847</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39847#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 14:18:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39847</guid>
		<description><![CDATA[இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். அண்மையில் &#8216;நாம் தமிழர்’ இயக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவுக்காகத் தமிழகம் வந்தவரிடம் விகடன் நிருபரினால்,&#8230;&#8221;ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதா? ஈழப் போராட்டத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற வினா எழுப்பப்பட்டது. அவா் வழங்கிய பதிலில், இலங்கையில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/jaathik-100x80.jpg" alt="jaathik" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39848" />இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்<span id="more-39847"></span>னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் &#8216;நாம் தமிழர்’ இயக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவுக்காகத் தமிழகம் வந்தவரிடம் விகடன் நிருபரினால்,&#8230;&#8221;ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதா? ஈழப் போராட்டத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற வினா எழுப்பப்பட்டது.</p>
<p>அவா் வழங்கிய பதிலில்,</p>
<p>இலங்கையில் தமிழ் பேசியதாலேயே இனப் படுகொலை ஒன்றின் மூலமாக இலங்கைத் தமிழர்களின் இன விடுதலை ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.</p>
<p>ஆனால், அந்தத் தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.</p>
<p>ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல்.</p>
<p>அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மதச் சார்பற்ற வகையில் மக்கள் சமூகங்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் தங்களின் கோரிக்கைக்காகப் போராட வேண்டும்! இவ்வாறு பதிலளித்தார் அந்த விடுதலைப் போராளி தலைவா் யாசின் மாலிக்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39847</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/jaathik-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/jaathik.jpg" medium="image">
			<media:title type="html">jaathik</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/jaathik-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பும் சர்வதேச நகர்வும்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39844</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39844#comments</comments>
		<pubDate>Thu, 23 May 2013 14:17:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39844</guid>
		<description><![CDATA[ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள். குறிப்பாக சுவிஸ் நாட்டில் பணிமுடக்கம் (Strike) என்பது குற்றச்செயல் ஆகும் காரணம் அவர்களது அரசியல் யாப்பிலேயே எழுதி எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது, &#8220;நாம் பணிமுடக்கம் செய்யமாட்டோம்&#8221; என்று. அப்படியிருந்தும் தமிழ்மக்கள் சாலைமறியல், உண்ணாவிரதம் என்பனவற்றை துணிந்து செய்தார்கள், அதைவிடவும் சட்டத்திற்கு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/vanni_war-100x80.jpg" alt="vanni_war" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-6132" />ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு<span id="more-39844"></span> இடித்துச் சொன்னார்கள்.</p>
<p>குறிப்பாக சுவிஸ் நாட்டில் பணிமுடக்கம் (Strike) என்பது குற்றச்செயல் ஆகும் காரணம் அவர்களது அரசியல் யாப்பிலேயே எழுதி எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது, &#8220;நாம் பணிமுடக்கம் செய்யமாட்டோம்&#8221; என்று. அப்படியிருந்தும் தமிழ்மக்கள் சாலைமறியல், உண்ணாவிரதம் என்பனவற்றை துணிந்து செய்தார்கள், அதைவிடவும் சட்டத்திற்கு புறம்பான பணிமுடக்கம் செய்ததற்கான தண்டப்பணமும் கட்டினார்கள். காரணம் ஈழத்திலே தமது இனம் அழிக்கப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக.</p>
<p>ஆனால் இந்த சர்வதேசம் அதை கண்டுகொள்ளவில்லை. அங்கே ஈழத்திலே ஒரு மாபெரும் இனவழிப்பு ஒட்டுமொத்த சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் நிகழ்த்தப்பட்டது. 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்புப் படுகொலை நிகழ்த்தப்பட்டு நான்கு வருடங்கள் கடந்தும் இன்னும் இனவழிப்பு நிகழ்த்தப்பட்டமைக்கான புதிய புதிய ஆதாரங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் இன்னும் இந்த சர்வதேசம் எம்மினத்திற்கு நீதி வழங்க மறுத்தே வருகின்றது.</p>
<p>ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையிலே ஏதோ பல்லாங்குழி ஆடுவது போன்று நான் முந்தி நீ முந்தி என்று உப்புக்குச் சப்பில்லாதை தீர்வுத் திட்டங்களை அமேரிக்கா போன்ற நாடுகள் முன்வைப்பதும் அதை சீனா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பதும் வருடா வருடம் தொலைக்காட்சி காமெடி ஷோ போன்று நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது.</p>
<p>சிங்களத்தின் மிகப்பெரிய கெட்டித்தனம் என்னவெனில் &#8220;பயங்கரவாதத்தை ஒழித்தல்&#8221; என்ற மகுடத்தின் கீழ் தனது யுத்த ஏற்பாட்டை ஆரம்பித்தது.</p>
<p>கூடவே சர்வதேச சமூகத்தையும் நம்பவைத்து ஏற்றுக்கொள்ள வைத்தது. பின்னராக தனது நெடுங்கால இலட்சியமான &#8220;தமிழின அழிப்பை&#8221; மேற்கொள்ள ஆரம்பித்தது. இன அழிப்பா அல்லது பயங்கரவாத ஒழிப்பா என்ற பதத்தை சர்வதேச சமூகம் பகுத்தாய்ந்து இனம்காண முன்பே இன அழிப்பு நடந்தேறிவிட்டது.</p>
<p>சிங்களத்தின் இந்த தந்திரத்தை சர்வதேசம் புரிந்துகொள்ள முன்னர் எமது தமிழர் சார்ந்த அமைப்புகள் புரிந்துகொள்ளல் அவசியமாகின்றது.</p>
<p>ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணயம் சார்ந்து சிந்திக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும், ஈழத்திலுள்ள வடகிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், இலங்கையின் பிற இடங்களில் சொரியலாக வாழும் தமிழர்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் (மலேசியா, இந்தியா, மொரீசியஸ் மற்றும் நாடுகள்) உட்பட அனைவருமாக ஒன்றிணைந்து உலக ஒழுங்கியல்களுக்கு ஏற்றவாறு சுயநிர்ணயம் பெறுவதற்கான, பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுத் திட்டத்தை ஒற்றுமையாக ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தியை கடந்த முள்ளிவாய்க்கால் அனர்த்தம் கற்றுத்தந்த பாடமாக அமைகின்றது.</p>
<p>&#8216;தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்&#8217;</p>
<p>தமிழர் நடுவம் சுவிஸ் </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39844</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/vanni_war-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/vanni_war.jpg" medium="image">
			<media:title type="html">vanni_war</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/vanni_war-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39838</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39838#comments</comments>
		<pubDate>Wed, 22 May 2013 13:47:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39838</guid>
		<description><![CDATA[18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு இன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள். 2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும் மறக்கப்பட [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/timthumb.php_-100x80.jpg" alt="timthumb.php" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39839" />18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையி<span id="more-39838"></span>ன் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு</p>
<p>இன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.</p>
<p>2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும் மறக்கப்பட முடியாத ஆண்டாக உள்ளது.</p>
<p>(மே-18) உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்றைய நாளை அடையாளப்படுத்துவதற்காக எழுச்சி கொள்வார்கள். 21வது நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை இதுவென்பதை இந்த உலகம் விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ உணரத்தான் போகிறது.</p>
<p>தமது அண்மைய அறிக்கையில் (பெற்றி அறிக்கை)  ஐக்கிய நாடுகள் தமது பயங்கரத் தவறுகளை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளன. அத்துடன், 70,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அது கூறியுள்ளது.</p>
<p>அவை சர்வதேச சமூகத்தில் மனிதநேயத்துக்கான எந்த அக்கறையோடும், நீதிக்கான எந்தக் கருசனையோடும் &#8211; பிரித்தானிய காலனித்துவ காலங்களிலிருந்து சிங்கள மேலாதிக்கத்திடம் பிரித்தானியாவால் ஆட்சி வழங்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக மோசமாக-மோசமாக உருவாகி &#8211; 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது மிக மோசமான உச்சக்கட்ட இனப்படுகொலைத் தாக்குதல் என்பதை விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ கற்றுக்கொள்வார்கள்.</p>
<p>இந்த இனப்படுகொலை முன்னெடுப்பின் காரணமாகவே புலம்பெயர் தமிழர்களுள் பலர் தாம் நேசித்த தாயகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக சமுதாயத்தின் மனிதாபிமானப் பரப்பால் இந்த உண்மைகள் உணரப்படும் வரை ஒருபோதும் ஓயாது.</p>
<p>அவர்களுள் ஒருவனாக நான். இந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை எனது குடும்பத்துடன் அனுபவித்தேன். எனது தந்தை கொல்லப்பட்டார். தாயார் முள்ளிவாய்க்காலில் காயம்பட்டார். நான்கு தடவைகள் நான் காயம்பட்டேன். எனது அம்மாவின் சகோதரியின் மகன் கொல்லப்பட்டார். மற்றுமொரு மகன் மோசமாகக் காயம்பட்டார்.</p>
<p>நாங்கள் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, காயங்களுக்கு மருந்துகள் இன்றி உயிர்வாழ முயற்சிப்பதற்காக நாங்கள் பதுங்குகுழிகளுக்குள்ளே மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பிழைக்க வேண்டியிருந்த அந்த கூட்டு வேதனைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள் விபரிப்பது எனக்கு கடினம்.</p>
<p>இன்னும், நான்கு ஆண்டுகள் கடந்தும், எனது சகோதரனும் சகோதரியின் கணவரும் இலங்கைப் படையினரின் சிறைக்குள்தான் இருக்கிறார்கள். நான் பிறந்த மண்ணில் வாழமுடியாது, இலங்கைத் தீவை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தேன். இன்று அந்நிய நாட்டில் புகலிடத்துக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இலங்கையில் தமிழர்களின் நிலை.</p>
<p>நாங்கள் எங்களது கூட்டு சமூக கலாச்சார வாழ்க்கையை இழந்தோம், எங்கள் குடும்பங்களை இழந்தோம், எங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்தோம். வரலாற்று ரீதியாக நாங்கள் உண்மை பேசுகின்ற ஒரு மக்கள். தயவுசெய்து எங்களை உண்மை பேசவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள், எனக்கு பாதுகாப்புக் கொடுக்கள் எனவேதான் என்னால் உண்மை பேசமுடியும்.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்பை நான் உங்களிடமிருந்து ஒருபோதும் மறைக்கவில்லை. ஆனால், என்மீதான உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டு சற்று வித்தியாசமாக இருப்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது.</p>
<p>விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் உறுதியாகத் தமிழர்களிடமிருந்து எந்த ஆயுதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.</p>
<p>இனப்படுகொலைத் தாக்குதலின் பலியாட்களாக நாங்கள் இருந்தும், தமிழர்கள் பயங்கரவாதிகளாக இருப்பதுபோல் வகைப்படுத்துவது சற்று வித்தியாசமாக இல்லையா? இலங்கை அரச ஆயுதப் படைகளை நீங்கள் எப்படி விபரிக்கப் போகிறீர்கள்?</p>
<p>உண்மையிலே மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், என்னைப் பற்றி நீங்கள் உங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் கேள்வி, பொதுவாகவே தமிழ் மக்கள் குறித்து உலகப் பொதுசனத்தின் மனதிலும் உள்ளது.</p>
<p>நான் என்ன கருதுகிறேன் என்பதை காட்டுவதற்காக நான் இணையத்தளத்தில் படித்த மிக அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.</p>
<p>&#8216;உருவறித் நிக்கோல் இலங்கையில் விடுமுறைகள் பற்றி எழுதுகிறார், பிரித்தானிய செய்தித்தாள் &#8216;தி ஒப்சேவர்&#8217; இல் ஒரு &#8216;Taxi&#8217; ஓட்டுநருடனான தனது கலந்துரையாடலை விபரிக்கிறார்.</p>
<p>&#8216;நீங்கள் ஒரு புத்த மதத்தவரா?&#8217; அந்த ஓட்டுநரிடம் நான் கேட்டேன்.<br />
&#8216;இல்லை. நான் ஒரு இந்து.&#8217;<br />
&#8216;ஓ, அப்படியானால் நீங்கள் தமிழனா?&#8217;<br />
&#8216;ஆம். நான் ஒரு தமிழன்,&#8217; என்கிறார் ஓட்டுநர், பின்பு சத்தம்போட்டுச் சொன்னார், &#8216;ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை!&#8217;</p>
<p>திரு.நிக்கோல் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறி நிறைவு செய்கிறார். அந்த ஓட்டுநர் ஒரு பயங்கரவாதி என ஒருபோதும் சிறுகணம் கூட நான் நினைக்கவில்லை, ஆனால், அவர் அதைக் கூறியதில் ஓர் உலகத்தின் வலியை நான் கேட்டேன்.</p>
<p>பிரித்தானியா இலங்கைத் தீவைவிட்டு வெளியேறியதிலிருந்து முதல் 30 ஆண்டுகளாக, தமிழர்கள் சிங்கள தேசத்திடமிருந்து தீவிர இனவாத வன்முறையை எதிர்த்து அமைதியான காந்திய வழிமுறைகளை மட்டும் பயன்படுத்தி போராடினார்கள்.</p>
<p>பாகுபாட்டுச் சட்டங்கள், தமிழ் தேயிலைத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப் பறித்தல், தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே பல்கலைக் கழகம் நுழைய முடியும் என்ற கோரிக்கை, அரச ஆதரவோடு தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் &#8211; இவை அனைத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போதே நிகழ்ந்தன.</p>
<p>30 ஆண்டுகளாக அமைதி முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதையும் அடைய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பிற்பாடு மட்டுமே தமிழர்களிடமிருந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 30 ஆண்டுகளாக பலத்தோடு பலம் சந்திக்க வைக்கக்கூடிய ஒரு நிலையில் இனவாதப் பயங்கரவாதம் தமிழர்களை நிறுத்தியது. போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகள் சித்தரிக்கப்படுகின்ற முறையை நான் நிராகரிக்கிறேன் &#8211; குறிப்பாக மேற்குலக ஊடகத்தால். வெறிபிடித்தவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதக் குழு என்றும் சித்தரிக்கிறார்கள்.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவான, நவீன, முன்னோடியான இயக்கம். அது இலங்கைப் படைக்கு எதிராகப் போராடிய அதேவேளை, சாதி முறைமைக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் மிகவும் கடினமாகப் போராடியது.</p>
<p>25 ஆண்டுகள் கொண்ட தீவிர சமச்சீரற்ற போரின் பின்னர், தமிழர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையை அடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்? சமாதான முன்னெடுப்பைத் தொடங்கினார்கள்! சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்பு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது.</p>
<p>சிங்களவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது என நான் கேள்விப்பட்டேன். ஆனால், ஆரம்பத்தில் சமாதான முன்னெடுப்புக்கு முற்றுமுழுதான ஆதரவைக் காட்டிக்கொண்ட சர்வதேச சமூகம், அதன் நிலைப்பாட்டை மாற்றியது.</p>
<p>2003 ல் தமிழ் மற்றும் சிங்கள பேச்சுவார்த்தையாளர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்த போது, உலகம் போரை நோக்கி வழிநடந்தது. இலங்கை சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமை நாடுகளுக்குள் பிரதான இரு வலுவான நாடுகளுக்கிடையே பாரிய வேற்றுமைகள் நிலவின.</p>
<p>அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈராக் போர் தொடர்பாக சர்ச்சையில் இருந்தன. இந்த சர்ச்சை இலங்கை சமாதான முன்னெடுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.</p>
<p>தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமாதானம் தேவைப்பட்டிருக்கலாம் &#8211; ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரிவடைந்து கொண்டிருந்த மத்திய கிழக்குப் போர்களில் &#8211; பயன்படுத்த சுதந்திரமாக இருப்பதற்காக &#8211; தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலை போன்ற மூலோபாயத் துறைமுகங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டின.</p>
<p>இந்த வல்லரசுகள் துறைமுகத்தை அண்மித்த பகுதியை விட்டு விடுதலைப் புலிகளை வெளியேற்றத் தேவைப்பட்டது என்பது வெளிப்படையானது. எனவே, சமாதான முன்னெடுப்பானது வெட்கமின்றி அமெரிக்க கூட்டு நாடுகளாலும் சிங்கள தீவிரவாத மேலாதிக்கவாதிகளாலும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.</p>
<p>சமாதான முன்னெடுப்புக்கான இறுதித் தாக்கமானது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய அழுத்தத்துக்குள் உள்ளான போதே ஏற்பட்டது.</p>
<p>அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளை வெறிபிடித்தவர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைப்பதற்கு ஒரு நீண்ட பாதை செல்வார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.</p>
<p>ஆனால், நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய ஏனைய நாடுகள் வெட்கமின்றி அமெரிக்க வரிசையைப் பின்பற்றுவது உண்மையிலே மிகவும் கவலையாக உள்ளது.</p>
<p>பயங்கரவாதியாக விபரிக்கப்படக்கூடிய எந்தச் செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை என்பதை உங்களுக்கு என்னால் கூறமுடியும்.</p>
<p> மேலும், என்னால் கூறிக்கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவோ அல்லது பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகளின் எந்தப் பகுதியும் ஈடுபடுத்தப்பட்டது என்பதில் எனக்கு சிறுதுளி கூட அனுபவமில்லை.</p>
<p>இங்குள்ள ஒவ்வொருவரும் நான் சொல்லவேண்டிய விடயத்துடன் உடன்படுவார்களோ அல்லது விளங்கித் தன்னும் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.</p>
<p>ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையின் இந்த நான்காவது ஆண்டு நினைவு நாளில் &#8211; சற்று சுதந்திரமான ஆய்வைச் செய்யுமாறும் அத்துடன், புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>ஏனென்றால், என்னுடைய வழக்கு குறித்த ஒரு முடிவை நீங்கள் தற்பொழுது எடுக்கமாட்டீர்கள் &#8211; ஆனால், அதைக்காட்டிலும் ஏதோவொரு விடயத்தில் அதிகமாக முடிவுசெய்வீர்கள்.</p>
<p>நன்றி</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39838</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/timthumb.php_-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/timthumb.php_.jpg" medium="image">
			<media:title type="html">timthumb.php</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/timthumb.php_-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>நியூசிலாந்து செந்நெருப்பு நாள் &#8211; 2013</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39834</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39834#comments</comments>
		<pubDate>Wed, 22 May 2013 13:45:58 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39834</guid>
		<description><![CDATA[இலங்கையில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் இன படுகொலையை நினைவு கூறும் விதமாக, நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து தமிழ் இளையோர்அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் 19 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில்  Mt Eden war memorial மண்டபத்தில் பொதுச்சுடர்  ஏற்றளுடன்   சிறப்பாக செந்நெருப்பு நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முதலில் நியூசிலாந்து நாட்டின் கொடியினை நியூசிலாந்து தமிழ்சங்க தலைவர் வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை  நியூசிலாந்து நாட்டின் தமிழர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39835" alt="new6" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/new6-100x80.jpg" width="100" height="80" /></p>
<div id="NewsPostDetailContent">
<p>இலங்கையில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் இன படுகொலையை நினைவு கூறும் விதமாக, நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து தமிழ் இளையோர்அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் 19 திகதி<span id="more-39834"></span> ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில்  Mt Eden war memorial மண்டபத்தில் பொதுச்சுடர்  ஏற்றளுடன்   சிறப்பாக செந்நெருப்பு நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new3.jpg" width="601" height="400" /></p>
<p>முதலில் நியூசிலாந்து நாட்டின் கொடியினை நியூசிலாந்து தமிழ்சங்க தலைவர் வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை  நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் அசோக் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைசுடரினை, இறுதிக்கட்ட போரில் வீரச்சாவை தழுவிய வீரவேங்கை நிரோஜா அவர்களின் சகோதரர்    ஏற்றிவைத்தார்.தொடர்ந்து மக்கள் அனைவரும் பூக்களை  கையில் ஏந்தியவாறு மலர் வணக்கம் செலுத்தினர். இச்செந்நெருப்பு நாளின் முதல் நிகழ்வாக  உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் உரை அடங்கிய ஒரு வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது.</p>
<p>இதனைத் தொடர்ந்து இன படுகொலையை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் பாடல்களும் இடம்பெற்றன.</p>
<p>அதனை தொடர்ந்து “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்&#8221; என்ற நூலும் இங்கு வெளியிடப்பட்டது.</p>
<p>தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட தற்போதைய சூழ்நிலைகளை எடுத்துகாட்டும் வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப் பட்டது. இந்நிகழ்வில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர்.இறுதியாக தமிழீழ எழுச்சி பாடல் இசைத்ததை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் முடிவுபெற்றன .</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new1.jpg" width="600" height="399" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new7.jpg" width="600" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new5.jpg" width="600" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new6.jpg" width="601" height="401" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new8.JPG" width="600" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new3.jpg" width="600" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/new4.jpg" width="600" height="898" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39834</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/new6-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/new6.jpg" medium="image">
			<media:title type="html">new6</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/new6-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new3.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new1.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new7.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new5.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new6.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new8.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new3.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/new4.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அக்கறையுடன் செயற்படுகிறது: வீ.நாரயணசாமி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39830</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39830#comments</comments>
		<pubDate>Wed, 22 May 2013 13:42:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39830</guid>
		<description><![CDATA[இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அக்கறையுடன் செயற்படுவதாக மத்திய அரசாங்கத்தின் தொழிற்சங்க அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மாத்திரமே எப்போதும் இலங்கையர் விடயத்தில் உண்மையுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக கட்சிகளான ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமது அரசியல் தேவைகளுக்காகவே கூக்குரலிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அவர்கள் தமிழ் மக்களுக்கான புரியும் சேவைகள் வார்த்தையளவில் மாத்திரமே வரையறுக்கப்பட்டவை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Narayanasamy-Central-Minister-100x80.jpg" alt="Narayanasamy-Central-Minister" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39831" />இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அக்கறையுடன் செயற்படுவதாக மத்திய அரசாங்கத்தின் தொழிற்சங்க அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார்.</p>
<p>காங்கிரஸ் கட்சி மாத்திரமே எப்போதும் இலங்கையர் வி<span id="more-39830"></span>டயத்தில் உண்மையுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில், தமிழக கட்சிகளான ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமது அரசியல் தேவைகளுக்காகவே கூக்குரலிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.</p>
<p>அவர்கள் தமிழ் மக்களுக்கான புரியும் சேவைகள் வார்த்தையளவில் மாத்திரமே வரையறுக்கப்பட்டவை என்று வி.நாராயணசாமி இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனிடையே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனர்வர்கள் தாக்காப்படுகிறார்கள் என்று தமிழக கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது எனவும் வீ.நாரயணசாமி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது  எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவர் விரைவில் இலங்கையை விட்டுச் செல்லவுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39830</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Narayanasamy-Central-Minister-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Narayanasamy-Central-Minister.jpg" medium="image">
			<media:title type="html">Narayanasamy-Central-Minister</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/Narayanasamy-Central-Minister-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கே மே-18 அஞ்சலி செய்தோம்!- த.தே.முன்னணியினர் விளக்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39826</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39826#comments</comments>
		<pubDate>Wed, 22 May 2013 13:37:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39826</guid>
		<description><![CDATA[மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். கடந்த 18ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சந்திப்பில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, பொலிஸாரினாலும், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tnfp_meeting_001-100x80.jpg" alt="tnfp_meeting_001" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39827" />மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய ம<span id="more-39826"></span>க்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடந்த 18ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.</p>
<p>இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அச்சந்திப்பில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,</p>
<p>பொலிஸாரினாலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினாலும் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றீர்கள் அவ்வாறெனில், கொன்றவர்கள் யார் என்று எம்மிடம் கேட்கப்பட்டது.</p>
<p>அதற்கு, கொன்றவர்கள் யார் என்ற சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் யார் கொன்றிருந்தாலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. அந்த மக்களுக்கான அஞ்சலியையே நாம் நடத்தியிருந்தோம் என கூறியுள்ளோம்.</p>
<p>அதேபோன்று 18ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் கொன்றதாகவும், அந்த தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது பிரபாகரனை நினைவுபடுத்தும் செயல் எனவும் கேட்டனர். ஆனால் நாம் விடுதலைப் புலிகளையோ, அதன் தலைவரையோ நினைவுபடுத்தும் நோக்கில் அந்த நினைவேந்தலை நடத்தவில்லை.</p>
<p>அது மக்களுக்கானது மட்டுமே அந்த நோக்கிலேயே கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினரும் நினைவேந்தல், நிகழ்வுகளை பரவலாக நடத்தியிருந்தனர் என குறிப்பிட்டோம்.</p>
<p>எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாம் நடத்தியமை விடுதலைப் புலிகளுக்கானது எனவும் விடுதலைப் புலிகளுடைய தலைவருக்கானதும் என திசைமாற்றம் செய்யப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது என இச்சந்திப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>இதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவிருந்த இடங்களில் சிவில் உடைதரித்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில் குறித்த சம்பவங்கள் சமகாலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் எமது கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39826</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tnfp_meeting_001-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tnfp_meeting_001.jpg" medium="image">
			<media:title type="html">tnfp_meeting_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tnfp_meeting_001-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி &#8221; கேணல் ரமணன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39819</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39819#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 15:14:32 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39819</guid>
		<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள். இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ramanan-100x80.jpg" alt="ramanan" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39820" />மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிரு<span id="more-39819"></span>க்கிறார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.</p>
<p>இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர்.</p>
<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan-2.jpg" alt="col-ramanan-2" width="435" height="289" class="aligncenter size-full wp-image-39822" /></p>
<p>பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.</p>
<p>துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர். கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.</p>
<p>அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.</p>
<p>தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகள் </p>
<p>நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில் &#8230;<br />
மரணம் அழைத்த ரமணன்<br />
எங்கள் மனதை நிறைத்த வதனன்<br />
கிழக்கில் உதித்த உதயன்<br />
இனி கிடைக்க முடியா ஒருவன்<br />
உந்தன் நினைவுகள் வந்து<br />
எங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து<br />
செல்லுதே ரமணா &#8230; கொல்லுதே ரமணா &#8230;</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/YFcXaYfypTc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe><br />
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/JtiIiDcvYZI?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan.jpg" alt="col-ramanan" width="678" height="960" class="aligncenter size-full wp-image-39821" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39819</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ramanan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ramanan.jpg" medium="image">
			<media:title type="html">ramanan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ramanan-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan-2.jpg" medium="image">
			<media:title type="html">col-ramanan-2</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan-2-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan.jpg" medium="image">
			<media:title type="html">col-ramanan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/col-ramanan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள் &#8211; விஸ்வா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39815</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39815#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 14:47:47 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39815</guid>
		<description><![CDATA[இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம். 1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/542051_369911173104452_1048051697_n-100x80.jpg" alt="542051_369911173104452_1048051697_n" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39816" />இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம். </p>
<p>1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த<span id="more-39815"></span> பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டதாகும். ஆகக்கூடியது 4 மாதங்களே இப்போர், இது நீண்டநாள் நீடிக்காது என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்தது.</p>
<p>ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடித்துக்கொண்டே சென்றது. விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 98 &#8220;ஓயாத அலைகள் 2&#8243; நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சி நகரத்தை முற்றுமுழுதாகத் தங்களின் வசம் கொண்டுவந்து இராணுவத்தினரை வீழ்ந்தினார்கள், ஆயிரத்துக்குமதிகமான படையினர் இதனால் கொல்லப்பட்டனர். இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஐந்து நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதனைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையின் ஊடாக புலிகளால் மீட்கப்பட்டன. புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மகா வெற்றியை நிகழ்த்துவதற்கு மிகமுக்கியமானவராக இருந்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்களே. இப்போர் வெற்றிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளை அடைந்தார்கள். ஜெயசிக்குறு தந்த பாடத்தின் ஊடாக. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறையாக இந்த ஜெயசிக்குறுச் சமர்தான் இருந்தது. </p>
<p>2002 இல் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழத் தேசித்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானதாக எதனை நீங்கள் கருதுகிறீர்கள்&#8221;?</p>
<p>பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.</p>
<p>ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு இப்போர் வெற்றியைத் தலைவரும் ஆழமாக நேசித்தார். அதனைப் போன்றே தலைவரும் இவ்வெற்றிக்கு வழிவகுத்த பால்ராஜ் அவர்களையும் ஆழமாக நேசித்தார்.</p>
<p>1983 &#8211; 1984 க்கும் இடைப்பட்ட காலம். புலிகள் இயக்கம் வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள். அக்கால கட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாகவும் பகுதி நேரப் போராளியாக மட்டும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நடைபெற்ற சம்பவம் அவரைப் போராட்ட வாழ்க்கைக்காக முழுமையானவராக மாற்றியது.</p>
<p>இயக்க வேலையாக தண்ணீரூற்று முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு மிதிவண்டியில் முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞனாக இருந்த பால்ராஜ் அவர்களை இடைமறித்து அவரைச் சிங்களப் படைகள் கைது செய்து முல்லைத்தீவு முகாமில் மூன்று நாட்கள் சிறை வைத்தார்கள்.</p>
<p>அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும் சிறிலங்காப் படையினர் அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை விதைக்க விளைந்தனர். ஆனால் பால்ராஜ் அவர்களை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்றோ, அல்லது பகுதிநேரப் போராளியென்றோ அடையாளம் காணாத சிங்களப்படைகள் சிறுவன் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி விடுவித்தனர். ஆனால் அதன்பின்னர் &#8220;வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்ற தேசியத் தலைவரின் வாக்கின் அடிப்படையாக கொண்டு தன்னை முற்றுமுழுமையாக போராளியாக மாற்றிக்கொண்டு அதன்பின்னர் தளபதியாகி உயர்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தான் சிறைவைக்கப்பட்ட இராணுவ முகாமை பின்னாளில் தாக்கியழித்து வரலாற்றில் பதிவாகினார் மாவீரன் பால்ராஜ் அவர்கள். என்னால் அவரை எழுத முடியாது என்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறுவார். அவரின் வீரத்திறமைகள் அளப்பெரியவை. அவற்றை எழுத்தினுள் அடக்கிவிட முடியாது.</p>
<p>வன்னிப் போர்க் களத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை புறமுதுகு காட்டவைத்து பல மைல்களுக்குத் தப்பி ஓடவைத்த மகாவீரன் பால்ராஜ், போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளைக் கொண்ட சிங்களப் படை உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஒடிய வரலாற்றைச் சிங்களம் மறந்துவிடாது. தப்பி ஓடிய சிங்களப்படை விட்டுச் சென்ற போர்த் தளபாடங்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் மூலமாகவும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்தார்கள். அன்று பால்ராஜ் உயிருடன் இருக்கும்வரை வன்னியை நம்மால் பிடித்துவிட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிங்களம் இருந்தது.</p>
<p>குடாநாட்டைப் பற்றிய நிலப்படமில்லாமலே (Map) முற்றுமுழுதாக அதனை துள்ளியமாக அறிந்து வைத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள் போரின் போது இராணுவம் வன்னியில் உள்ளே நுழைந்தால் அதனை வழிமறித்து போரிடும் உபாயங்களையும், உள்ளே சிங்கள இராணுவத்தை வரவைத்து தங்களின் பொறிக்குள் இராணுவத்தைச் சிக்க வைத்த பின்னர் சுற்றி வளைத்து தாக்கும் தந்திரங்களையெல்லாம் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தி போர்களில் பல வெற்றிகளைப் பெற்று வல்லாதிக்க அரசுகளின் இராணுவத் திட்டங்களையும் தகர்த்தெறிந்த மகாவீரன் தான் பால்ராஜ் அவர்கள். சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்ட வல்லாதிக்க அரசு சிங்களத்தின் மண் ஆக்கிரமீப்புப் போருக்கு உதவிகளை வழங்கி அதன் ஊடாக தமிழீழப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன அவற்றைப் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் கொண்டு சென்றார். இதன் காரணமாகவே அன்று வல்லாதிக்க அரசு யுத்தத்தினால் தீர்வு ஏற்பாடாது சமாதானத்தின் மூலமே தீர்வைப் பெறமுடியும் என்ற நிலைக்கு வந்திருந்தன. </p>
<p>கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர் மரவுவழிப்படையாக மாற்றியதில் பால்ராஜ் அவர்களுக்கும் பங்குண்டு. ஒருநாள் போரியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு இளம்புலி வீரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தலைவர் விரும்பினார். அதற்குத் தகுதியானவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரை அழைத்தார். பயிற்சிக்கல்லூரியில் கற்கும் போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால் தமிழீழத் தேசித்தலைவர் ஒரு நிபந்தனையும் வைத்தார். அது &#8220;நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம் நீ&#8230; பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்&#8221; அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக பால்ராஜ் தலைவரின் பார்வையில் மிளிர்ந்தார்.</p>
<p>போர் ராஜதந்திர முன்னெடுப்புகளில் பிரிகேடியர் பால்ராஜ் மேதையாக இருந்தார். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மீகையாகாது. </p>
<p>விஸ்வா</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39815</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/542051_369911173104452_1048051697_n-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/542051_369911173104452_1048051697_n.jpg" medium="image">
			<media:title type="html">542051_369911173104452_1048051697_n</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/542051_369911173104452_1048051697_n-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழ மாணவர் எழுச்சி நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39810</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39810#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 14:26:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39810</guid>
		<description><![CDATA[பொன் சிவகுமாரன் அண்ணா நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p-100x80.jpg" alt="p" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39811" />பொன் சிவகுமாரன் அண்ணா நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.</p>
<p>தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்<span id="more-39810"></span>கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.</p>
<p>சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.</p>
<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p.jpg" alt="p" width="1000" height="1419" class="aligncenter size-full wp-image-39811" /><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p1.jpg" alt="p1" width="1000" height="1419" class="aligncenter size-full wp-image-39812" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39810</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p.jpg" medium="image">
			<media:title type="html">p</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p.jpg" medium="image">
			<media:title type="html">p</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p1.jpg" medium="image">
			<media:title type="html">p1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/p1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39806</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39806#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 14:20:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39806</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும்  வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது . உலகநாடுகளை ஏமாற்றி,இராணுவ உதவிபெற்ற சிங்களம்,தமிழினத்தை சிதைத்தழித்த, தமிழினத்தைக் கொன்றுகுவித்த முள்ளிவாய்க்கால் நான்காம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39807" alt="mulliberlin8" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mulliberlin8-100x80.jpg" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது .</p>
<p>யேர்மனியின் த<span id="more-39806"></span>லைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும்  வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mulliberlin9.jpg" width="601" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mulliberlin16.jpg" width="600" height="399" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mulliberlin12.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mulliberlin1.jpg" width="601" height="399" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mulliberlin8.jpg" width="600" height="901" /></p>
<p>உலகநாடுகளை ஏமாற்றி,இராணுவ உதவிபெற்ற சிங்களம்,தமிழினத்தை சிதைத்தழித்த, தமிழினத்தைக் கொன்றுகுவித்த முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நெஞ்சம் மறக்குமா? நினைவின் கண்காட்சியும்,வணக்க நிகழ்வும் பீலபெல்ட் நகர்மத்தியில்,யேர்மன் மக்கள் மிக நெருக்கமாக நடமாடும் இடத்தில் நடைபெற்றது.</p>
<p>கண்காட்சியை,யேர்மன் மக்கள் உட்பட,பல பிறமொழி மக்களும் மிகவும் ஆர்வமாகப் பார்வையிட்டதுடன்,தங்கள் வேதனைகளையும்,சுதந்திரத் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bielefeld3.JPG" width="600" height="450" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bielefeld4.JPG" width="600" height="450" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bielefeld.JPG" width="600" height="450" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bielefeld1.JPG" width="600" height="450" /></p>
<p>நன்றி<br />
ஈழத்தமிழர் மக்கள் அவை &#8211; யேர்மனி</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39806</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mulliberlin8-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mulliberlin8.jpg" medium="image">
			<media:title type="html">mulliberlin8</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mulliberlin8-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mulliberlin9.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mulliberlin16.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mulliberlin12.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mulliberlin1.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mulliberlin8.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bielefeld3.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bielefeld4.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bielefeld.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bielefeld1.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன்: மே-18 நிகழ்வில் ராதிகா சிற்சபைஈசன்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39801</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39801#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 14:03:06 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39801</guid>
		<description><![CDATA[கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். தமிழ்மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இதுவென குறிப்பிட்ட ராதிகா சிற்சபைஈசன் எம்.பி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18rat-100x80.jpg" alt="may18rat" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39802" />கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழீழ சுதந்திர <span id="more-39801"></span>சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.</p>
<p>தமிழ்மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இதுவென குறிப்பிட்ட ராதிகா சிற்சபைஈசன் எம்.பி அவர்கள் கனடாவின் 307 நாடாளுமன்ற உறுப்பினர்களில் என்னையும் ஒருவராக மக்கள் தெரிவு செய்துள்ளனர். இந்நிலையில் கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய நானும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தில் கை கோர்த்து இணைந்து ஒத்துழைப்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.</p>
<p>தொடர்ந்து தனது என்.டி.பி கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயார் அவர்கள் தமிழீழத் தேசிய துக்க நாளுக்கு வழங்கிய செய்தியினை நிகழ்வரங்கில் வாசித்திருந்தார்.</p>
<p>அச்செய்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் சிறிய நிலப்பரப்பினுள் வைத்து தமிழ் மக்களை கொன்றொழித்துள்ளனர். அதனால் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், சோகத்தினையும் நான் நன்கறிவேன். பொது மக்கள் கொல்லப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம்.</p>
<p>அதுபற்றி சர்வதேச ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்றோம். சிறிலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநல அமைப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கனடா கலந்து கொள்ளக் கூடாது என நாம் வலியுறுத்தி வருகின்றோம் என என்.டி.பி கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயார் அவர்களது செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு பெருவலியினை சுமந்து கூட்டுநினைவாக அமைந்திருந்த இந்நிகழ்வில் லிபரல் கட்சிப்பிரதிநிதி எடுவார்டோ ஹராறி கனடாவிலுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரத்துக்கான பிரதிநிதி ஜோன் ஆகியூ, ஈழவேந்தன் ஐயா, ரொறொன்ரோ மாநகர சபை உறுப்பினர் கலாநிதி றேமன்ட் சோ ஆகிய சிறப்பு பிரதிநிதிகளும் உரைகளை வழங்கியிருந்தனர்.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகளை மீட்டி உரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கலை கலாச்சார தொன்மைகள் பிரதி அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்கள் ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து பரிந்துரைகளும் மனித உரிமைகளும் தமிழீழ அரசமைப்பில் உள்வாங்கப்படும் என்பதனையே தமிழீழ சுதந்திர சாசனம முரசறைந்து நிற்கின்றதென தெரிவித்தார்</p>
<p>லண்டனில் இருந்து சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஈழத்தமிழர்களின் உடனடிப் பாதுகாப்பிற்கு சர்வதேச பாதுகாப்புப் பொறி முறை ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தி உரையாற்றிருந்தார்.</p>
<p>எழுச்சி நடனங்களுடன் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வினை கனேடிய தமிழ் கொங்கிரசின் பேச்சாளர் பூபாலபிள்ளை, ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள கென் கிருபா, முன்னாள் வேட்பாளர் சான் தயாபரன், இராஜரட்னம், சொர்ணலிங்கம் ஆகிய பிரதிநிதிகளும் பங்கெடுத்து வலுவூட்டியிருந்தனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39801</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18rat-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18rat.jpg" medium="image">
			<media:title type="html">may18rat</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18rat-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39797</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39797#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 13:59:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39797</guid>
		<description><![CDATA[2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப் பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டு நினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம்: நிலைப்பாடுகள்: 1. தமிழீழ மக்களாகிய நாங்கள் தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசத்தவர் என்றவகையிலும், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu-100x80.jpg" alt="tgte_sasanam_murasaraivu" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39798" />2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப் பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டு நினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்<span id="more-39797"></span>ளடக்கம் வெளிவந்துள்ளது.</p>
<p>தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம்:</p>
<p>நிலைப்பாடுகள்:</p>
<p>1. தமிழீழ மக்களாகிய நாங்கள் தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசத்தவர் என்றவகையிலும், இலங்கைத் தீவினுள் சிங்கள பௌத்த தேசிய அரசுகளினால் தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்கள் என்றவகையிலும், இன அழிப்பிலிருந்தும் எம்மீது நிகழ்த்தப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் விளைவுகளிலிருந்தும் எம்மை நிரந்தரமாகப் பாதுகாக்க ஏற்ற அத்தியாவசிய ஏற்பாடு என்ற அடிப்படையிலும்,  நாங்கள் அனைத்துலகச் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு உட்பட்டமுறையில் எமக்கென சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசினை அமைத்திட அனைத்து உரித்தும் கொண்டவர்கள்.</p>
<p>2. பாதுகாப்பு, வாழ்வுரிமை, மேம்பாடு, சமாதான சகவாழ்வு போன்ற மனிதப் பொதுப் பெருவிழுமியங்களைத் தழுவிய வாழ்வை தமிழீழ மக்களாகிய நாங்களும் எட்டிக்கொள்வதற்கும், உலகில் வாழும் அனைத்து சுதந்திர மனிதர்கள் போல நாமும் தனித்தும் கூட்டாகவும், பாதுகாப்பாகவும், கௌரவமாகவும், சமத்துவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசு அமைதல் மட்டுமே ஒரேயொரு வழிமுறை என்பதனையே வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.</p>
<p>3. தமிழீழத் தனியரசினை அமைப்பதற்கான எமது பெருவிருப்பினை அரசியல் வழிமுறையில் சனநாயக வாக்கெடுப்புகள் மூலமும், இனஅழிப்புக்கு எதிராகத் தற்காப்பு ஆயுதம் ஏந்திப்  போராடியமை மூலமும் உறுதியான முறையில் தமிழீழ மக்களாகிய நாம் ஆறு தசாப்தங்களாக வெளிப்படுத்தி வந்துள்ளோம். எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் எம்மீது நிகழ்த்தப்படும் இனஅழிப்புக்குக் காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கும் ஏற்றவகையில் எமது விடயத்தில் மக்களாணை வாக்கெடுப்பு நடத்த ஆவன செய்ய வேண்டுமென  அனைத்துலக சமூகத்திடம் அடித்துக் கூறுகிறோம்.</p>
<p>4. இலங்கைத்தீவில் தமிழீழ மக்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வரும் வடகிழக்கிலுள்ள தொடர்நிலப்பகுதி தமிழீழமக்களின் தாயகமாக அமைகிறது. இத்தாயக நிலப்பகுதியே தமிழீழ அரசின் ஆட்சிப்புலமாக அமையும். தமிழீழத்தின் கடல், வான் எல்லைகள் அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகத் தீர்மானிக்கப்படும்.</p>
<p>5. அமையப்போகும் தமிழீழத் தனியரசு ஜனநாயக விழுமியங்களைத் தழுவியதாகவும் மனித உரிமைகளுக்கு உயரிய மதிப்பளித்துப் பேணிக் காக்குமொன்றாகவும் அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடனம் உட்பட மனிதகுல வரலாற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கு வழிகோலும் வகையில் அமையப்பெறும் அனைத்து அனைத்துலக பிரகடனங்களையும் மனிதாபிமான சாசனங்களையும் ஏற்பாடுகளையும் தமிழீழ அரசு உளப்பூர்வமாக அங்கீகரித்துப் பின்பற்றும்.</p>
<p>6. தமிழீழத் தனியரசின் அரசியலமைப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலமைப்புப் பேரவையினால்  வரையப்படும்போது அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்படாத வகையிலும் சட்டமியற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதி அதிகாரம் போன்றவைக்கான தனித்துவங்கள் மதிப்பளிக்கப்படும் வகையிலும் அது வரையப்படும். மக்களால் நேரடி வாக்கெடுப்புமுறையின் ஊடாக தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுங்கமைய இயங்கும் சட்டத்தின்பாற்பட்ட குடியரசாகத் தமிழீழம் அமையும். அதனது ஆளுகையில்  மக்களால் தேர்வுசெய்யப்படுபவர்களை மக்களே அவசியமேற்படும் போது மீளப்பெறும் உரிமையைக் கொண்டிருப்பர்.</p>
<p>7. தமிழீழ அரசு ஒரு மதசார்பற்ற அரசாக அமையும். அதன்கீழ் சகல மக்களினதும் மத வழிபாட்டு உரிமையும் தங்கள் மதக்கடமைகளினை நிறைவேற்றுவதில் அவர்களுக்குரிய பண்பாட்டு உரிமையும் தங்கு தடையின்றி உறுதிப்படுத்தப்படும்.</p>
<p>8. தமிழீழ அரசின்கீழ் மரணதண்டனைக்கு இடமிருக்காது.</p>
<p>9. தமிழீழ அரசு மத, இனத்துவ, மொழிசார், சாதிய, பாலின, பாலியல் தெரிவுகள் காரணங்களால் தமிழீழ மக்கள் மத்தியில் எழக்கூடிய எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் தனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகக்குழுக்களும் பாதுகாக்கப்படுவதற்கான அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களினை உருவாக்கும். தமிழீழத்தின் குடிமக்கள் யாவரும் சட்டத்தின் முன் சமனானவர்களாகக் கருதப்படுவர். </p>
<p>10. தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழீழத்தில் தமது வகுபாகத்தினைத் தாமே உருவாக்குவதில் பங்குபற்றும் உரிமை முஸ்லீம் மக்களுக்குக் கொடுக்கப்படும். மலையகத் தமிழ் மக்கள் தழிழீழத்தில் குடியேறவிரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்கப்படுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வளமாக அமைத்துக் கொள்வதற்கான திட்டங்களும் தமிழீழஅரசினால் நடைமுறைப்படுத்தப்படும்.</p>
<p>11. தமிழீழத் தாயக விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களும் தேசிய வீரர்களாகத் தமிழீழ அரசால் மதிப்பளிக்கப்படுவார்கள். போராட்டத்தில் தமது உயிர்களை ஈகம் செய்தவர்கள் தேசிய மாவீரர்களாகப் போற்றப்படுவார்கள். மாவீரர்களதும் போராளிகளினதும் நேரடிக் குடும்பத்தினரின் நலன் பேணல் தமிழீழஅரசின் கடமையாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் தமது உயிர்களை இழந்த பொதுமக்கள்  நினைவாக தேசிய நினைவுச் சின்னமொன்று அமைக்கப்படும். மே மாதம் 18ம் திகதி தேசிய துக்க நாளாகவும் நவம்பர் 27ம் திகதி தேசிய மாவீரர் நினைவு நாளாகவும் நிறுவப்படும்.</p>
<p>கொள்கைகள்</p>
<p>வெளியுறவுக் கொள்கை:</p>
<p>12. தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயகவழி முறையினைத் தழுவியதாக ஆட்சியமைத்துள்ள எல்லா நாடுகளுடன் கூடுதல் நட்புறவைப் பேணும் வகையில் அமையும். தென்னாசியாவினதும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையாகும் வகையிலும் இந்தியமக்களுடன் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தியாவுடன் சிறப்பான உறவினைத் தமிழீழம் பேணிக்கொள்ளும்.</p>
<p>பொருண்மியக் கொள்கை</p>
<p>13. தமிழீழத்தின் பொருண்மியக் கொள்கை தமிழீழமக்களின் வளங்களையும் தேவைகளையும் கவனத்திற் கொண்டு உலகநாடுகளுடன் கூட்டுறவினை வளர்க்கக் கூடியவகையிலும் தமிழீழத்தின் பொருண்மியவளர்ச்சியில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்குவகிக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்படும்.</p>
<p>மொழிக் கொள்கை</p>
<p>14. தமிழீழத்தாயகத்திலும், அயலிலும் வாழும் மக்களது நலன் சார்ந்தும் உலகம் தழுவிய தொடர்பாடல் பயன்பாடு கருதியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தமிழீழத்தின் உத்தியோகபூர்வ மொழிகளாக அமையும்.</p>
<p>கல்விக் கொள்கை</p>
<p>15. கல்வி ஓர் அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்பது தமிழீழத்தின் கல்விக் கொள்கையின் மூலக்கூறாக இருக்கும். தமிழீழத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டும் தமிழீழத்தை உலகப்பரப்பில் வெற்றிகரமான நாடாக நிலைநிறுத்தத் துணைசெய்யும் வகையிலும் தமிழீழத்தின் கல்வித்திட்டம் வடிவமைக்கப்படும்.</p>
<p>மருத்துவ மற்றும் உடல் நலம்சார் கொள்கை :</p>
<p>16. மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ஓர் அடிப்படை உரிமையாகக் கருதப்படும். அரசினால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் உயர்தரம் கொண்டதாகவும் இலவசமானதாகவும் அமையும். நோய்முன்தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் உடல் நலம்சார் சேவைகளில் முக்கிய பங்குபெறும்.</p>
<p>மேம்பாட்டுக் கொள்கை</p>
<p>17. மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சிநிலையினை மட்டும் குறித்து நிற்பதாகக் கருதப்படாது சமூக, மனிதவள மற்றும் பண்பாட்டு மேம்பாட்டுநிலையினை எட்டிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்தவொரு சமூகச் சமநிலையை உருவாக்குவதும் தமிழீழத்தின் மேம்பாட்டுக் கொள்கையின் முக்கியநோக்காக இருக்கும். அடையப்படும் மேம்பாட்டினை நீடித்து நிலைத்துப் பேணக்கூடிய வழிவகைகள் கண்டறியப்பட்டு அவை மேம்பாட்டுக் கொள்கையின் இணைந்த பகுதியாக உள்வாங்கப்படும்.</p>
<p>18. தமிழீழக் குடிமக்கள் அனைவரும் தமக்கான சொந்தமான குடிமனையை அமைத்துக் கொள்வதனையும், தமது வாழ்வாதாரங்களை உறுதியான முறையில் அமைத்துக் கொள்வதனையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப் பேணிக் கொள்வதை ஊக்குவிப்பதனையும், பசி, பட்டினி, தொற்றுநோய்கள் போன்றவவை மக்களைத் தீண்டாது தடுப்பதனையும், குழந்கைள், கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் போன்றோர்க்குப் போதிய ஊட்டச்சத்துக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழீழத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும்.</p>
<p>சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்புக் கொள்கை</p>
<p>19. தமிழீழத்தின் ஆள்புல எல்லைக்குட்பட்ட நிலம், நீர், ஆகாயப்பரப்பும் அதன் வளங்களும் இயற்கையின் சமனிலையினைப் பாதிக்காவண்ணம் பாதுகாக்கப்படும். இயற்கையின் வளங்கள் யாவற்றின் மீதும் எமது எதிர்கால சந்ததியும் கொண்டிருக்கும் உரிமையினை ஏற்றுக்கொண்டு தற்போதைய தலைமுறையினரின் இயற்கை வள நுகர்வு எல்லைகள் வரையறுக்கப்படும்.</p>
<p>20. எமது தேசத்தில் கிடைக்கக்கூடிய சூரியவலு, காற்று, கடல் அலைகளின்வலு உள்ளிட்ட மீளப்புதுப்பிக்கப்படக்கூடிய சக்திமூலங்கள் வளர்த்தெடுக்கப்படுவதும் போரின்போது வலிந்து அழிக்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாளமும் இயற்கைவளமுமாகிய பனைமரம் உட்பட்ட வனவளங்கட்கான மீள்வனமாக்கல் முயற்சியும் முன்னுரிமைபெறும்.</p>
<p>குடியுரிமைக் கொள்கை</p>
<p>21. பிறப்பாலோ, பிறப்புவழி சந்ததிமுறையாலோ தமிழீழத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் உலகின் எப்பகுதியில் வசித்தாலும் தமிழீழக் குடியுரிமைக்குத் தகைமை உடையவராவர். குடியேறுவதன் மூலம் குடியுரிமைக்குத் தகைமை பெறுவதும் தமிழீழக் குடிமக்கள் இருநாட்டுக் குடியுரிமை கொண்டிருப்பதும் அங்கீகாரமும் ஆதரவும் பெறும்.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/37ihctXlUj0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/62X81hHS_gc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39797</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu.jpg" medium="image">
			<media:title type="html">tgte_sasanam_murasaraivu</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39792</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39792#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:29:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39792</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/58202_369900196438883_780284221_n-100x80.jpg" alt="58202_369900196438883_780284221_n" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39793" />தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.</p>
<p>தமிழீழத்தின் இத<span id="more-39792"></span>ய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.</p>
<p>வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.</p>
<p>இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.</p>
<p>1990 ஆம் ஆண்டில் கொக்காவில் – மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் “கடற்காற்று” எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.</p>
<p>தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.</p>
<p>வுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “வன்னிவிக்கிரம” நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.</p>
<p>1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான “ஆகாய- கடல்வெளி”ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.</p>
<p>மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.</p>
<p>யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட “யாழ்தேவி” நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.</p>
<p>1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட “முன்னேறிப்பாய்தல்” முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.</p>
<p>யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த “சூரியக்கதிர்” நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.</p>
<p>வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.</p>
<p>தொடர்ந்து “ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.</p>
<p>அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.</p>
<p>2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட “தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.</p>
<p>போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.</p>
<p>அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.</p>
<p><iframe width="640" height="480" src="http://www.youtube.com/embed/198bivUzFsg?list=PL1218273689BE6712" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39792</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/58202_369900196438883_780284221_n-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/58202_369900196438883_780284221_n.jpg" medium="image">
			<media:title type="html">58202_369900196438883_780284221_n</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/58202_369900196438883_780284221_n-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39788</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39788#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:27:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39788</guid>
		<description><![CDATA[17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை  ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள். இதனை தொடர்ந்து குறிப்பாக முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், இனவழிப்புக்கு உள்ளான தமிழீழ மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39789" alt="d-m-18-5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/d-m-18-5-100x80.jpg" width="100" height="80" />17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இ<span id="more-39788"></span>றந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை  ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.</p>
<p>இதனை தொடர்ந்து குறிப்பாக முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், இனவழிப்புக்கு உள்ளான தமிழீழ மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.</p>
<p>பின்பு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளினதும் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களினதும் உரை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் டெனிஸ் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட இனவழிப்பை விழங்கப்படுத்தப்பட்டது டெனிஸ் மக்கள் ஆர்வமாக தமிழீழ மக்கள் மீது நிகழ்தப்பட்ட இனவழிப்பை அறித்துக் கொண்டார்கள்.</p>
<p>எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிருபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றது, இதை தடுப்பதர்க்காக டென்மார்க் அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் தமிழீழ மக்களின் உணர்வுபூர்வமான ஊர்வலத்தை டெனிஸ் ஊடகங்கள் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.<br />
<a href="http://www.lorry.dk/artikel/162413" target="_blank">http://www.lorry.dk/artikel/162413</a><br />
<a href="http://www.lorry.dk/arkiv/2013/5/17" target="_blank">http://www.lorry.dk/arkiv/2013/5/17</a><br />
Nikolaj Villumsen பாராளமன்ற உரிப்பினர் தமிழீழத்தில் நடைபெற்றது தமிழினவழிப்பை அங்கிகரித்தது சிறப்பாகும். இதன்னூடாக சிங்கள பேரினவாதத்தின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அன்பான தமிழீழ உறவுகளே! சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்குல் இருந்து எமது மண்ணை பாதுகாத்து இனவழிப்பு செய்தவர்களை நீதியின் முன்னிருத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை செய்து முடிக்க கூடிய மாபெரும் சக்த்தியாக புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது.</p>
<p>முள்ளியவாய்க்கால் சமரில் தப்பி போக வாய்ப்பிருந்த பொழுதிலும் எமது தமிழீழ தேசத்தை மீட்கவேண்டும், „நாம் மடிந்தாலும் புலம்பெயர் தமிழர்கள் எமது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்&#8217; என்று எண்ணி தான் இறுதி வரை போராடினார்கள். அவர்களுடைய கனவை நனவாக்குவது எமது கடமையாகும். மேலும் எமது மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் „எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.&#8217; என்ற சிந்தனைக்கு செயல்வடிகம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.<br />
<img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-1.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-2.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-3.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-4.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-5.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-6.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-7.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-8.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-10.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-11.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-12.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-13.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-14.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-15.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-16.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-17.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-18.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-19.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-20.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-21.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-22.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-23.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-24.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-25.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-27.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-28.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-29.JPG" width="600" height="400" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-30.JPG" width="600" height="400" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39788</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/d-m-18-5-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/d-m-18-5.jpg" medium="image">
			<media:title type="html">d-m-18-5</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/d-m-18-5-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-1.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-2.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-3.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-4.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-5.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-6.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-7.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-8.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-10.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-11.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-12.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-13.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-14.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-15.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-16.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-17.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-18.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-19.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-20.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-21.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-22.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-23.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-24.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-25.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-27.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-28.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-29.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/d-m-18-30.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் &#8211; 2013</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39784</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39784#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:25:56 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39784</guid>
		<description><![CDATA[ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39785" alt="v-mey18newsdusseldorf (23)" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/v-mey18newsdusseldorf-23-100x80.jpg" width="100" height="80" />ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொ<span id="more-39784"></span>டரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது.</p>
<p><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(13).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2813%29.jpg" width="600" height="400" /></p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.</p>
<p>சரியாக பிற்பகல் 16:10 மணியளவில் பேரணி நிகழ்வுத்திடலை அடைய, தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பித்தன. நிகழ்வின் பொதுச்சுடரை சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பு -பிறேமன் ஐச் சேர்ந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.  தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை , யேர்மனியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். பொது ஈகைச் சுடரினை தமிழீழ மண்ணிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த இரு மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து , வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் , இனவழிப்பில் சாவைத் தழுவிய தமிழீழ மக்களிற்குமான மலர், சுடர் வணக்கம் நடைபெற்றது.</p>
<p>தொடர்ந்து சிற்றுரைகள் , கவிதைகள் , பாடல்கள் என முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நிகழ்வுகள் ஆகியன நடைபெற்றன. வேற்றுநாட்டவர்களாக இருப்பினும், தமிழர்களது இனவழிப்பினை நன்கு அறிந்த யேர்மனிய  இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ,கட்சியின் மனித உரிமை விவகாரக் குழுவின் பிரதி பொறுப்பளார் நீமா மொவசாட் , நாடு தழுவிய இடது சாரி கட்சியின் சமாதானம் மற்றும் சர்வதேச அரசியல் விவகார குழுவின் பேச்சாளர் ,  மத்திய  மாநிலத்தின் முன்னாள் உள்ளுராட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலி அட்டலான், யெக்கொம் என்ற அமைப்பினைச் சேர்ந்த முக்கிய பிரமுகர், குர்திஷ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் அமைப்பினைச் சேர்ந்த கமிடே  அக்பாயிர்  ஆகியோர் , தமிழீழ மக்களின் அவாவினைப் புரிந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.இவர்கள் தமது பேச்சுக்களில் மிக தெளிவாக தமிழர்களுக்கு நடந்தது  இனஅழிப்பு என்றும் அத்தோடு இதற்கு சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியல் நலனுக்கு அமைய துணையாக சென்றதையும் சுட்டிக்காட்டினார்கள் .இவர்கள் எதிர்காலத்திலும் தமது கட்சியின் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு முழுமையாக உழைப்பார்கள் எனவும் உறுதி கூறினார்கள் .</p>
<p>இறுதியாக சிறப்புரையினை நிகழ்த்திய, ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் சிறீஇரவீந்திர நாதன் அவர்கள் , சிறீலங்கா அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியமும், எமது விடுதலைக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளும் அவசியமும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது  என்றும், நாம் போராடிப் பெறவேண்டிய உரிமையை எவரும் பெற்றுத்தரப்போவதில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களாகிய எம்மால் மட்டுமே எமது ஈழத்து உறவுகளுக்காகப் போராட முடியும் எனபதனையும் தனது உரையில் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார் .</p>
<p>முடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய யேர்மனியக் காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து  நிறைவடைய , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் சரியாக  18:40 மணியளவில் நிறைவு பெற்றன.</p>
<p><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(3).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%283%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(9).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%289%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(50).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2850%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(4).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%284%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(5).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%285%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(87).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2887%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(6).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%286%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(7).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%287%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(8).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%288%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(10).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2810%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(11).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2811%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(12).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2812%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(24).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2824%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(94).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2894%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(25).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2825%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(26).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2826%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(51).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2851%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(27).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2827%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(28).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2828%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(88).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2888%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(89).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2889%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(52).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2852%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(90).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2890%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(91).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2891%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(92).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2892%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(93).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2893%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(53).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2853%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(29).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2829%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(54).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2854%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(45).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2845%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(55).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2855%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(56).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2856%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(57).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2857%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(75).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2875%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(46).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2846%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(47).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2847%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(48).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2848%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(49).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2849%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(30).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2830%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(66).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2866%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(67).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2867%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(68).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2868%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(69).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2869%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(70).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2870%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(71).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2871%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(31).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2831%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(59).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2859%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(32).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2832%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(33).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2833%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(86).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2886%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(34).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2834%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(76).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2876%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(35).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2835%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(77).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2877%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(13).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2813%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(14).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2814%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(15).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2815%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(16).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2816%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(74).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2874%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(36).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2836%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(78).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2878%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(72).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2872%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(37).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2837%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(80).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2880%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(95).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2895%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(96).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2896%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(97).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2897%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(98).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2898%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(73).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2873%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(38).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2838%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(17).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2817%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(58).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2858%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(79).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2879%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(18).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2818%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(39).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2839%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(19).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2819%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(81).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2881%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(101).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28101%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(40).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2840%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(102).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28102%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(99).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2899%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(85).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2885%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(61).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2861%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(100).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28100%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(60).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2860%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(21).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2821%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(22).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2822%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(41).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2841%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(82).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2882%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(83).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2883%29.jpg" width="600" height="900" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(84).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2884%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(62).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2862%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(63).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2863%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(42).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2842%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(20).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2820%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(103).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28103%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(64).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2864%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(65).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2865%29.jpg" width="600" height="400" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(43).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2843%29.jpg" width="600" height="400" /><br />
<img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(23).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2823%29.jpg" width="600" height="400" border="0" /><img alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(2).jpg" src="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%282%29.jpg" width="600" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/mai1.jpg" width="600" height="400" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39784</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/v-mey18newsdusseldorf-23-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/v-mey18newsdusseldorf-23.jpg" medium="image">
			<media:title type="html">v-mey18newsdusseldorf (23)</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/v-mey18newsdusseldorf-23-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2813%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(13).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%283%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(3).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%289%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(9).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2850%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(50).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%284%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(4).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%285%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(5).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2887%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(87).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%286%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(6).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%287%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(7).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%288%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(8).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2810%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(10).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2811%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(11).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2812%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(12).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2824%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(24).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2894%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(94).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2825%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(25).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2826%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(26).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2851%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(51).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2827%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(27).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2828%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(28).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2888%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(88).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2889%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(89).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2852%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(52).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2890%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(90).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2891%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(91).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2892%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(92).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2893%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(93).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2853%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(53).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2829%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(29).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2854%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(54).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2845%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(45).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2855%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(55).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2856%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(56).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2857%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(57).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2875%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(75).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2846%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(46).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2847%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(47).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2848%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(48).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2849%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(49).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2830%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(30).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2866%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(66).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2867%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(67).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2868%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(68).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2869%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(69).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2870%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(70).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2871%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(71).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2831%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(31).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2859%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(59).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2832%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(32).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2833%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(33).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2886%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(86).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2834%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(34).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2876%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(76).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2835%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(35).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2877%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(77).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2813%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(13).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2814%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(14).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2815%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(15).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2816%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(16).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2874%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(74).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2836%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(36).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2878%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(78).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2872%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(72).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2837%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(37).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2880%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(80).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2895%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(95).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2896%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(96).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2897%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(97).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2898%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(98).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2873%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(73).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2838%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(38).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2817%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(17).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2858%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(58).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2879%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(79).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2818%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(18).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2839%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(39).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2819%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(19).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2881%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(81).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28101%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(101).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2840%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(40).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28102%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(102).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2899%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(99).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2885%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(85).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2861%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(61).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28100%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(100).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2860%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(60).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2821%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(21).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2822%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(22).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2841%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(41).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2882%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(82).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2883%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(83).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2884%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(84).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2862%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(62).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2863%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(63).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2842%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(42).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2820%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(20).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%28103%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(103).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2864%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(64).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2865%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(65).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2843%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(43).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%2823%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(23).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20%282%29.jpg" medium="image">
			<media:title type="html">http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf%20(2).jpg</media:title>
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/mai1.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் &#8211; பெல்ஜியம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39781</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39781#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:23:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39781</guid>
		<description><![CDATA[ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக்  கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழர் பண்பாட்டு கழகம் &#8211; பெல்ஜியம் மற்றும் தமிழ் இளையோர் அமைபினரும் இணைந்து இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம். இந்நிகழ்வு தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. எமது தாயாக மண்ணில் எமது நினைவு சின்னங்களையும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39782" alt="bel3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/bel3-100x80.jpg" width="100" height="80" />ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக்  கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.<span id="more-39781"></span></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel8.jpg" width="600" height="398" /></p>
<p>தமிழர் பண்பாட்டு கழகம் &#8211; பெல்ஜியம் மற்றும் தமிழ் இளையோர் அமைபினரும் இணைந்து இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம். இந்நிகழ்வு தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. எமது தாயாக மண்ணில் எமது நினைவு சின்னங்களையும் எமது மாவீரர்களின் கல்லறைகளையும் அழிக்கும் இலங்கை அரசிற்கு ஒரு சவாலாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கும் நினைவு சினங்களின் ஒரு அம்சமாக Antwerpen மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் மக்களினதும் நினைவாக நினைவுக்  கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் மற்றும் மலர்வணக்கம் செலுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது . 14:00 மணிக்கு ஆரம்பமான பேரணி தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி Antwerpen புதிய நீதிமன்றம்  வரை பேரணியாக சென்று நிறைவு பெற்றது .</p>
<p>சுயநிர்ணய உரிமைக்கான எமது அரசியல் போராட்டத்தையும், நீதி கேட்டுப் போராடுவதையும் அதன் இலக்கினை எட்டும்வரை சோர்வின்றி உறுதியுடன் எடுத்துச் செல்வோம். நாம்  அனைவரும் ஒற்றுமையாக நின்று ஓரே குரலில் போராடுவோம். வீழ்வது அவமானமல்ல எழுந்திராமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்! சுதந்திர தாகம் கொண்ட மக்களாக எழுச்சியோடு போராடுவோம்! என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel5.jpg" width="607" height="402" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel7.jpg" width="606" height="402" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel6.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel3.jpg" width="598" height="397" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel4.jpg" width="596" height="395" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel13.jpg" width="600" height="398" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel14.jpg" width="601" height="400" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/bel15.jpg" width="601" height="399" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39781</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/bel3-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/bel3.jpg" medium="image">
			<media:title type="html">bel3</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/bel3-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel8.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel5.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel7.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel6.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel3.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel4.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel13.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel14.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/bel15.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகம்!- சொல்ஹெய்ம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39778</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39778#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:21:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39778</guid>
		<description><![CDATA[யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இலங்கையின் யுத்த வெற்றி தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே எரிக்சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இவர் தொடர்ந்தும் கூறுகையில்: இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் 4ஆவது ஆண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடியது. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/Erik_Solheim-100x80.jpg" alt="Erik_Solheim" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-11928" />யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான<span id="more-39778"></span> நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது டுவிட்டர் தளத்தில் இலங்கையின் யுத்த வெற்றி தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே எரிக்சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.</p>
<p>இவர் தொடர்ந்தும் கூறுகையில்:</p>
<p>இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் 4ஆவது ஆண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடியது.</p>
<p>தேசிய யுத்த வெற்றி விழா என்று நாடளாவிய ரீதியிலும் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.</p>
<p>ஆனால், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாக இருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.</p>
<p>எனவே, வலுவான அழுத்தங்கள் தொடர்ந்தும் தேவை எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39778</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/Erik_Solheim-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/Erik_Solheim.jpg" medium="image">
			<media:title type="html">Erik_Solheim</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/Erik_Solheim-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39774</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39774#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:20:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39774</guid>
		<description><![CDATA[தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு. ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu_002-100x80.jpg" alt="tgte_sasanam_murasaraivu_002" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39775" />தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறை<span id="more-39774"></span>யப்பட்டது.</p>
<p>2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக  கருதப்படுவதோடு. ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் முரசறைவு அமைந்திருந்த சமவேளை கனடா, பிரித்தானியா, பிரான்சு என பல்வேறு இடங்களில் ஒன்றுகூடிய தமிழீழ உணர்வாளர்கள் முரசறைவின் போது உணர்வெழுச்சியோடு கூட்டிணைந்து நின்றனர்.</p>
<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (தமிழகம்)பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி அவர்கள் முரசறைவின் முன்னுரை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வரலாற்று ஆவணமாகிய தமிழீழ சுதந்திர சாசனத்தினை வாசித்து முரசறைந்தார்.</p>
<p>முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனமானது நிகழ்வுபூர்வமான தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகள் முதலில் விபரித்திருந்தோடு வெளியுறவு, பொருண்மியம், மொழி, கல்வி, மருத்துவம் &#8211; உடல்நலன்சார், மேம்பாடு, சுற்றுபுறச்சூழல், குடியுரிமை ஆகியனவற்றின் தமிழீழ தேசத்தின் கொள்கை நிலைப்பாட்டினை உள்ளடக்கியிருந்தது.</p>
<p>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக அமைந்திருந்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வில் தென்சூடானிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி Daniel Mayan, வங்கதேச விடுதலை இயக்க பிரதிநிதி Dr.Nabibulla, அமெரிக்காவின் முன்னாள் சட்டாஅதிபர் (நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்) Ramsay Clarke, பேராசிரியர் Francis Boyle, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தயாபரன்ஆகியோர் உரைகளை வழங்கியிருந்தனர்.</p>
<p>தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு கடந்த 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த முரசறைவு மாநாட்டில் தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத பல்வேறு துறைசார் ஆளுமையாளர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. பல்வேறு தலைப்புக்களில் விவாதங்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/4MX9e8j3aU4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/P-8fr-e-Rj0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9VCboKuLa-w?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/uB4DEbrSiNE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/PmgVvrtdR0k?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/-iSVdkDJ4-U?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/CoDAbUQ3Bts?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/8AcUdBTpS4k?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39774</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu_002-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu_002.jpg" medium="image">
			<media:title type="html">tgte_sasanam_murasaraivu_002</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_sasanam_murasaraivu_002-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39771</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39771#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:16:58 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39771</guid>
		<description><![CDATA[கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" alt="seeman" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-25125" />கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.</p>
<p>இதனால், பொது<span id="more-39771"></span>க்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது.</p>
<p>இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,</p>
<p>கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?</p>
<p>என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.</p>
<p>இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம், பேரணி நடத்த எண்ணி, கடலூர், சிதம்பரம் நகர்களில் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், வரவேற்பு தட்டிகள் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.</p>
<p>இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக காரணத்தைக் காட்டி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39771</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5.jpg" medium="image">
			<media:title type="html">seeman</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>டென்மார்க்கில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39767</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39767#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:13:53 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39767</guid>
		<description><![CDATA[கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவுகூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிறீன்ட்ஸ்ரட் தேவாலயத்திலும் இதுதொடர்பான வழிபாடு நடைபெற்றது. தமிழ் மக்களில் 350.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், 70.000 பேரைக் காணவில்லை என்று அங்கிருந்தவர்கள் உலக சமுதாயத்திடம் நீதி கேட்டுநின்றார்கள். தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டின் பின் உரையாற்றிய தேவாலய தந்தை ஸ்ரீன்பு றொய்க்ஸ் வன்டால் இலங்கையின் வரலாற்றோடு தமிழருக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துரைத்தார். 983 யூலைக் கலவரத்தோடு ஆரம்பித்து 26 ஆண்டுகள் கடும்போர் நடந்தாலும் கூட 2009 [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39768" alt="denmark_mullivaikkal_009" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark_mullivaikkal_009-100x80.jpg" width="100" height="80" />கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவுகூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கிறீன்ட்ஸ்ரட் தேவாலயத்திலும் இதுதொடர்பான வழிபாடு நடைபெற்றது.</p>
<div>
<p>தமிழ் மக்களில்<span id="more-39767"></span> 350.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், 70.000 பேரைக் காணவில்லை என்று அங்கிருந்தவர்கள் உலக சமுதாயத்திடம் நீதி கேட்டுநின்றார்கள்.</p>
<p>தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டின் பின் உரையாற்றிய தேவாலய தந்தை ஸ்ரீன்பு றொய்க்ஸ் வன்டால் இலங்கையின் வரலாற்றோடு தமிழருக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துரைத்தார்.</p>
<p>983 யூலைக் கலவரத்தோடு ஆரம்பித்து 26 ஆண்டுகள் கடும்போர் நடந்தாலும் கூட 2009 மே மாதத்தின் பின் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் துயரம் தொடர்கிறது என்றார்.</p>
<p>இந்த நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.</p>
<p>01. மனிதர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக நீதிமன்றின் முன் நிறுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளார்கள்.</p>
<p>02. தடுப்புக்காவலில் மனிதர்கள் சித்திரவதை செய்யப்படுவது, காணாமல்போவது சர்வசாதாரணமாக இருக்கிறது.</p>
<p>03. சட்டம் இல்லாமலே தூக்கில் போடுவது</p>
<p>04. பத்திரிகையாளர் கொல்லப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.</p>
<p>2009 படுகொலைகளும், அங்கு நடக்கும் நிகழ்வுகளும் மனித உரிமை மீறல்களுக்கு சரியான அடையாளமாக இருக்கிறது என்று மனிதஉரிமை ஆர்வலர் தெரிவித்தனர்.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark1.jpg" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark2.jpg" border="0" /></p>
<p><strong>டென்மார்க் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாள்</strong></p>
<p>முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு டென்மார்க்கில் ஓகூஸ் நகரில் 18-05-2013 அன்று நடைபெற்றது.</p>
<p>இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக சிறப்பான நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.</p>
<p>இந்நிகழ்விற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.</p>
<p>இந்நிகழ்வானது, பொதுச்சுடரேற்றம், தேசியக் கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், அகவணக்கம், மலர்வணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது.</p>
<p>இங்கு வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் மாவீரர்களுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அவர்களுக்கு சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.</p>
<p>இதனைத் தொடர்ந்து எழுச்சிகானங்கள், சிறப்புரை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், காட்சியும் கானமும், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_001.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_002.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_003.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_004.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_005.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_006.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_007.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_008.JPG" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_009.JPG" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39767</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark_mullivaikkal_009-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark_mullivaikkal_009.jpg" medium="image">
			<media:title type="html">denmark_mullivaikkal_009</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark_mullivaikkal_009-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark1.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark2.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_001.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_002.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_003.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_004.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_005.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_006.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_007.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_008.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/denmark_mullivaikkal_009.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>பிரான்சில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39763</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39763#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:09:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39763</guid>
		<description><![CDATA[தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18 நான்காவது ஆண்டில் மாபெரும் நினைவுப் பேரணி பிரான்சில் நேற்று நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும். அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.இப்பேரணியில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப் பேரணி ஈபிள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39764" alt="may_18_france_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may_18_france_001-100x80.jpg" width="100" height="80" />தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18 நான்காவது ஆண்டில் மாபெரும் நினைவுப் பேரணி பிரான்சில் நேற்று நடைபெற்றது.</p>
<div>
<p>தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும். அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணை<span id="more-39763"></span>ந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.இப்பேரணியில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.</p>
<p>பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப் பேரணி ஈபிள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது.</p>
<p>நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து, கேணல் பரிதி அவர்களின் பெற்றோரும் முள்ளிவாய்காலில்  படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவுகள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது.</p>
<p>அதனைத் தொடர்ந்து கடந்த மே-1ம் நாள் முதல் 18 ம் திகதி வரை அடையாள கவயீர்ப்பு உண்ணா மறுப்புப் போராட்டத்தை நடாத்திய மூதாளர்கள் மற்றும் மக்களாலும் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.</p>
<p>முள்ளிவாய்கால் நான்காம் ஆண்டிலே பல பிரெஞ்சு பிரமுகர்கள், குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர்கள், மனிதநேய அமைப்புகளின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p>கடந்த 1ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணா மறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மூதாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>முள்ளிவாய்காலின் பேரவலத்தையும், இப்பேரணியின் நோக்கத்தையும் பிரஞ்சு அரசாங்கத்துக்கும். சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தும் வகையில் உரையாற்றப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினரும், கட்சித்தலைவியும் மற்றும் கிளச்சி, லாக்கூர்னேவ் போன்ற மாநகர முதல்வர்கள் உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர்.</p>
<p>குர்திஸ்தான் மக்கள் சார்பில் அதன் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர் பேசுகையில்,</p>
<p>தமிழீழ மக்கள், குர்திஸ்தான் மக்களை போல் விடுதலையை தேடி நிற்பவர்கள். அதிலும் அண்மையில் துருக்கி நாட்டிக்கு வந்த சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபச்கே வந்த போது, துருக்கி பிரதமர் மகிந்த ராஜபச்கேயை பாராட்டியதுடன் தாமும் குர்திஸ்தான் விடுதலை போராட்டத்தை அடக்க சிறிலங்கா அரசு கையாட்ட முறையையே கையாள்வதாக கூறினார்.</p>
<p>ஆகவே நாம் எல்லோரும் ஒரே மாதிரியான அடக்கு முறை அரசுக்கு எதிராகவே போராடுகிறோம் என்றும் குர்திஸ்தான் விடுதலை எவ்வளவு முக்கியமோ அதே போல் தமிழ் ஈழம் உருவாவதும் முக்கியம். அது தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்தினார்.</p>
<p>தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சத்திதாசன் அவர்களும். தமிழீழ மக்கள் பேரவை சார்பாக திரு. கமல் அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக செல்வி. பானுசா அவர்களும் உரையாற்றினார்கள்.</p>
<p>பேரணியில் தமிழீழத்தில் இன்றைய நிலைப்பாடுகள் பற்றிய காட்சிப்படுத்தலை தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் தெருவழி நாடகமாக செய்து கொண்டு வந்திருந்தனர்.</p>
<p>குசன்வில் மாணவர்கள் காலத்தின் தேவைகருதிய பாடல் ஒன்று நடனவடிவம் தந்து அனைத்து மக்களுக்கும் ஓர் எழுச்சியை ஊட்டினர்.</p>
<p>இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் 7.00 மணிக்கு நிறைவு பெற்றது. இவ் நினைவுப்பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு தமிழீழ தேசிய கொடிகளை தாங்கி வந்திருந்தன.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_001.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_002.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_003.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_004.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_005.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_006.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_007.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_008.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_009.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_010.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_011.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_012.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_013.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_014.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_015.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_016.jpg" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39763</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may_18_france_001-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may_18_france_001.jpg" medium="image">
			<media:title type="html">may_18_france_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may_18_france_001-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_001.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_002.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_003.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_004.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_005.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_006.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_007.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_008.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_009.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_010.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_011.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_012.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_013.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_014.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_015.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may_18_france_016.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39759</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39759#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:07:45 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39759</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார். அவரது உரையின் முழுவடிவம்: முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காவது ஆண்டு நினைவை உலகத் தமிழினம் நினைவுகூரும் இவ்வேளையில், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uruththir-100x80.jpg" alt="uruththir" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39760" />முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பி<span id="more-39759"></span>ரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.</p>
<p>உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.</p>
<p>அவரது உரையின் முழுவடிவம்:</p>
<p>முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காவது ஆண்டு நினைவை  உலகத் தமிழினம் நினைவுகூரும் இவ்வேளையில், இறைமையும் சுதந்திரமும் கொண்ட சுதந்திரத் தமிழீழம் குறித்த நமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் வகையில் தமிழிழ சுதந்திர சாசனத்தை நாம் முரசறைந்தவாறு நாம் இங்கு கூடியுள்ளோம்.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் ஊடாக தழிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விடலாம் எனக் கருதியிருந்த சிங்களத்துக்கு நமது தமிழீழ சுதந்திர சாசனச முரசறைவு மீண்டுமொருமுறை தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை எவராலும் அழித்துவிட முடியாது என்பதனை முகத்தில் அறைந்தால் போல எடுத்துக் கூறியுள்ளது.</p>
<p>முள்ளிவாயக்க்கால் தமிழீழ மக்களின் தேசிய ஆன்மாவில் பெரும் வலியையும் துயரையும் தந்த காரணத்தாலும் காலத்தால் மறக்க முடியாத கூட்டு நினைவாக அமைந்து விட்ட காரணத்தாலும் மே 18 ஆம் திகதியினைத் தேசிய துக்க நாளாக நாம் பிரகடனம் செய்திருக்கிறோம்.</p>
<p>துயரத்தால் சோர்ந்து போகும் நாளாக இல்லாமல் உயிரத்துடிப்புடன், மீண்டு எழும் நாளாகவே மே 18ம் நாளினை நாம் கருகிறோம். இவ்வாறே மே-18 தமிழர் வாழ்வில் தடம் பதித்திருக்கிறது. இன்றைய தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னும் சிங்களத்துடன் இணைந்து வாழ்வது என்பது குறித்து மானுடத்தை நேசிக்கும் மனிதர் எவரும் பேச முடியுமா?  21 ஆம் நூற்றாண்டில் வன்னிப்பெருநிலம் மீது, தமிழீழ மக்கள் மீது சிங்களம் நிகழ்த்திய கொடுமை போல கொடுமைகள் எதுவும் உலகில் வேறு எங்கும் நடந்திருக்கிறதா?</p>
<p>முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்குள்ளன நமது மக்கள் யுத்தப் பூமியில் வாழ்ந்த காரணத்தால் மட்டும் இத்தகைய கொடுரமான முறையில் கொல்லப்படவில்லை. இவர்கள் தமிழராக பிறந்து விட்ட காரணத்தால், தமிழ் மொழியைப் பேசிய காரணத்தால், தனித்துவமான ஒரு அடையாளம் கொண்ட மக்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினால்தான் இத்தகைய பெரும் கூட்டுத்தண்டனையினை நமது மக்கள் சுமந்திருக்கிறார்கள்.</p>
<p>இனஅழிப்பு யுத்தமுறையாக சிங்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள இளைஞர்களும் ஒன்றுக்கிரு தடவைகள் ஆயுதம் ஏந்திப் போராடியிருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருந்த போதும் சிங்கள சமூகத்தைக் கொடுமையான முறையில் கூட்டாகத் தண்டிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தனவா?</p>
<p>முள்ளிவாய்க்கால் போன்றதொரு பகுதியில் அம்மாந்தோட்டையிலோ, மாத்தறையிலோ ஜே.வி.பி தமக்கெனக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருந்ததாகவும் இங்கு 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.</p>
<p>இத்தகையதொரு சூழல் இருந்திருக்குமானால் ஜே.வி.பி. யை வெற்றி கொள்வதற்காக முள்ளிவாய்க்கால் சூத்திரத்தை சிறிலங்கா அரசு தேர்ந்தெடுத்திருக்குமா? அப்படி தேர்ந்தெடுத்திருக்கத்தான் முடிந்திருக்குமா? நிச்சயமாகத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அப்படித் தேர்ந்தெடுத்திருக்கவும் சிங்கள மக்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.</p>
<p>முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால்தான் 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்து, மிஞ்சிய அனைவரையும் வேரரறுத்து, தாய்நிலத்தில் இருந்து பிடுங்கியெறிந்து கோரத்தாண்டவம் ஆடி, போரில் வெற்றி கொண்டதாக பெரு முழக்கம் செய்ய சிங்களத்தால் முடிந்திருக்கிறது.</p>
<p>சிங்களத்தின் தமிழின அழிப்பு என்ற திட்டமிட்டதொரு இலக்குக்கு முள்ளிவாய்க்கால் சூத்திரம் நன்கு பொருந்திப்போயிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது வெறும் போர்க்குற்றங்களல்ல, தமிழின அழிப்பேதான் என்பதற்கு சிங்களம் எத்தகைய நோக்கோடு தமிழினப் படுகொலையினை செய்திருக்கிறது என்பதனையும் நோக்கும் எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.</p>
<p>இங்கு நான் சிங்களம் எனக் குறிப்படுவது சிங்கள தேசத்தைச் சேர்ந்த தனிப்பட்ட மனிதர்களையல்ல என்பதனையும் பதிவு செய்ய விரும்புகிறேன். மானுடத்தை நேசிக்கும் சிங்களச் சகோதரர்கள் நிறையவே உள்ளார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பின் ஆதாரங்களை அனைத்துலக அரங்கில் வெளிக் கொணரும் அரும்பணியாற்றும் பலர் உள்ளனர்.</p>
<p>தமிழீழ மக்களின் தேசத்தகைமையும் அவர்களின் தன்னாட்சி உரிமையையினை அங்கீகரிக்கும் தோழர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குரல்கள் எல்லாம் சிங்கள பேரினவாத முழக்கத்தன் மத்தியில் மிக மெதுவாகவே ஒலிக்கக் கூடிய நிலையே உள்ளமை வேதனையானதொரு நிலையே.</p>
<p>இங்கு நான் சிங்களம் எனக் குறிப்பிடுவது சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பையும் சிங்கள இனவாதச் சித்தாந்தத்தினையும்தான். இவைதான் எமது மக்களை முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்குளாக்கியது. தொடர்ந்தும் கட்டமைப்புரீதியான இனஅழிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.</p>
<p>எம்மைப் பொறுத்தவரையில் இலங்கத் தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. சிறிலங்கா, தமிழீழம் ஆகியனவே இந்த இருநாடுகள். தமிழீழம் தனக்கென தேசியத்தலைவர் தலைமையில் நடைமுறை அரசினைக் கட்டி எழுப்பியிருந்தது. இந்த நடைமுறையரசினை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை நிகழ்த்தி சிறிலங்கா ஆக்கிரமித்தள்ளது.</p>
<p>இதனால் சிங்கள இனவாத அரச கட்டமைப்பு போரில் தமிழர் தேசத்தை வெற்றிகொண்டதாக நாம் கருதவில்லை. பெரும் கொடிய போரை நடாத்தி தமிழர் தேசத்தை, தமிழீழ மண்ணை சிறிலங்கா ஆக்கிரமித்துள்ளதாகவே நாம் நோக்குகிறோம்.</p>
<p>தமிழீழ மக்களை ஆள்வதற்கு நமது மக்கள் தமது கைகளிலுள்ள இறைமையினை சிங்களத்திடம் கையளிக்கவில்லை. இதனால் தழிழீழ மண்ணில் உள்ள சிறிலங்கா ஆக்கிரமிப்பு அரசின் எல்லாக் கருவிகளும் தமிழீழ மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.</p>
<p>சிங்கள ஆக்கிரமிரமிப்பு இராணுவம் முதற்கொண்டு நிர்வாக இயந்திரம் வரையிலான அனைத்து சிங்கள அரசின் அடையாளங்களும் ஆக்கிரமிப்பின் சின்னங்களே என நாம் உரத்துக் கூற விரும்புகிறோம்.</p>
<p>தமிழீழ மக்கள் சிங்கள பேரினவாத்தின் கீழ் அடிபணிந்து வாழாது சுதந்திரமாக வாழவே விரும்புகிறார்கள். இதற்காக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைத்தக் கொள்வதே ஒரு ஒரு வழி என்பதனை வரலாறு தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. இதற்காக கடந்து நான்கு தசாப்தங்களாகத் தமிழீழ மக்கள் பெரும் உயிர் ஈகம் செய்து போராடியிருக்கிறார்கள்.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் மேலும் வீச்சாகத் தமிழீழ மக்களால் உணரப்பட்டுள்ளது. தாயகத்தில் தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்தக் கூடிய அரசியல்வெளி நமது மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் ஓராண்டு நினைவின் போது உயிர்ப்பெடுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இன்று முள்ளிவாயக்கால் நான்காவது ஆண்டு நினைவின்போது நாம் முரசறைந்துள்ள தமிழீழ சுதந்திர சாசனமும் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் குறியீடுகளாக அமைகின்றன.</p>
<p>இன்று நாம் முரசைறைந்துள்ள தமிழீழ சுதந்திர சாசனம் மூலம் நாம் நமது போராட்டத்தில் முக்கியமதானதொரு காலடியை முன்னோக்கி வைத்தள்ளோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியள்ளது. தற்போது அரசியல் இராஜதந்திர வழிமுறை மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.</p>
<p>நாம் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இம் மாற்றங்களுக்கேற்ப நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. நமது நிலைப்பாடுகளையும் கொள்கைகனைளயும் தெளிவாக அனைத்துலச சமூகத்தின் முன்னால் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றை நாம் உணர்ந்து கொண்டே தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறையும் செயற்பாட்டை ஆரம்பித்தோம்.</p>
<p>இந்த சுதந்திர சாசனத்தை, முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் ஆவணங்களையும் கவனத்திற் கொண்டும் மக்களோடு மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றஙகளை உள்வாங்கியும் தமிழீழத்துக்கான அறிவியல் சமூகத்தின் துணையோடு உருவாக்கியுள்ளோம். மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்காக கேள்விக் கொத்தொன்றினையும் தயாரித்து வெளியிட்டிருந்தோம்.</p>
<p>இச்சுதத்நிர சாசன உருவாக்கத்துக்காக 1 இலட்சம் மக்களது கருத்துக்களை கேள்விக் கொத்துக்களின் ஊடாக உள்வாங்குவது எனத் திட்டமிட்டிருந்தோம். எமது எதிர்பார்ப்புக்கும் மேலாக 1,10, 000 க்கும் மேற்பட்டவர்கள் கேள்விக் கொத்தின் ஊடாகத் தமது கருத்தக்களை எமக்கு வெளிப்படுத்தியிருந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழீழத் தாயகத்தில் இருந்தும் தமது கருத்துக்களை எமக்கு அனுப்பியிருந்தனர்.</p>
<p>மக்களது இந்த பங்குபற்றல் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு பெரும் வலிமையைத் தருவதோடு, தமிழீழ சுதந்திரம் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் பற்றுதியையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த சுதந்திர சாசனத்தை  மக்கள் மயப்படுத்தும் வேலைகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளோம்.</p>
<p>தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்காக இந்த சுதந்திர சாசனம் எவ்வாறு பயன்படப் போகிறது? இதனை எவ்வாறு நாம் பயன்படுத்தப் போகிறோம்? இது இன்று நம்மில் பலருக்கு எழுகின்ற கேள்வியாக இருக்கும்.</p>
<p>இத் தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகiளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.</p>
<p>உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது.</p>
<p>இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணை செய்யும்.</p>
<p>அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என்பது நமது நம்பிக்கை.</p>
<p>இன்று நம் முன்னால் உள்ள பிரதான சவால் பலமிக்க அரசுகளின் ஆதரவை தமிழீழத்துக்கு ஆதரவாக எவ்வாறு வென்றெடுப்பது என்பதுதான். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகில் பலமிக்க அரசுகள் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரு அரசுகள் தீர்வுமுறையினை இன்னும் கவனத்திற் கொள்ளவில்லை.</p>
<p>இலங்கைத்தீவு பிரியாதவகையில் அரசியல் தீர்வு என்பதனைப் பற்றியே இவர்கள் பேசுகிறார்கள். உலகில் எந்த ஒரு நாடும் பிரிந்து தனிநாடு உருவாகக்கூடாது என்பதல்ல இவர்களது நிலைப்பாடு. இவ்வாறு பிரிந்த செல்லலே கூடாது என்ற றிலைப்பாடு இருந்திருக்குமேயானால் கடந்த வருடம் தென் சூடான் பிரிந்து சென்று தனிநாடாகியிருக்க முடியாது.</p>
<p>நோர்வே, வங்காள தேசம் உட்பட உலகில் பல நாடுகள் உருவாகியிருக்கவும் முடியாது. மாறாக நாடுகள் பிரிதலும் பிரியாது தடுக்கப்படலும் பலம் மிக்க உலக அரசகளின் நலன்கள் என்ற சமன்பாட்டிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன.</p>
<p>இலங்கைத் தீவில் தமிழீழம் என்ற நாடு உருவாகாது பேணிக் கொள்ளலே தமது நலன்களுக்கு உகந்தது என இந் நாடுகள் தற்போது கருதுகின்றன. இந் நிலையில் மாற்றம் ஏற்படும் நிலை இரு தளங்களில் இருந்து எழ வேண்டும்.</p>
<p>ஒன்று புவிசார் அரசயலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இலங்கைத்தீவு தொடர்பான பலம் மிக்க அரசுகளிடம் இருந்து வரும் மரபு சார்ந்த சிந்தனையில் ஒரு அசைவு ஏற்படவேண்டும்.</p>
<p>இலங்கைத் தீவில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் புவிசார் அரசியல் உறவுகளும் முரண்களும் இதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நிலைமகள் உள்ளன. இரண்டாவது, தமிழீழ ஆதவுத்தளம் ஒரு வலுமையமாகத் திரள்வடைந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற பலமிக்க நாடுகளை இரு அரசுகள் தீர்வுக்குச் சாதகமாக கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.</p>
<p>இங்கு முதலாளது தளமும் இரண்டாவது தளமும் இணையும் வகையில் வரலாறு முன்னோக்கி நகரும்போது நமது சுதந்திரத்துக்கு சாதகமாக அனைத்துலகச் சூழல் உருவாகும். இதில் இரண்டாவது தளத்தில் நமது செயற்பாடுகளின் பங்கு முக்கியமானது. இரண்டாவது தளத்தில் செயற்படுவததற்கு தமிழீழச் சுதந்திர சாதனத்தின் பாத்திரமும் கனதியானது.</p>
<p>தமிழீழத் தயாகமும், புலமும், தமிழகமும் உலகத் தமிழினமும் இணையும் போது தமிழீழ மக்கள் ஒரு வலுமையமாக, இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசுக்கு மாற்றான ஓர் அரச மையமாக உருவெடுப்பது சாத்தியமானது. இதற்காக நாம் அனைவரும் இணைந்த வகையில் உழைப்போம் என முள்ளிவாயக்கால் ஈகிகள் நினைவாக நாம் உறுதி கொள்வோமாக.</p>
<p>ஒரு மக்கள்கூட்டம் தான் விடுதலை அடைவது எனத் திடசங்கற்பம் பூண்டு விட்டால், இதற்காக விட்டுக் கொடுப்பற்றுப் போராடுவது எனத் தீர்மானித்து போராட்டக்களத்தில் இறங்கி விட்டால்இ தமது போராட்ட வழிமுறையை புத்திபூர்வமாக அமைப்பதில் வெற்றி கண்டு விட்டால் அந்த மக்களது விடுதலையை எவராலும் தடுத்த விடமுடியாது. தமிழீழ மக்களின் சுதந்திரத்தையும் இவ்வாறே வரலாறு பதிவு செய்யும் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/DJ1hPcp8MIw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39759</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uruththir-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uruththir.jpg" medium="image">
			<media:title type="html">uruththir</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uruththir-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>எல்லைக் கோட்டைத் தாண்டுமா இந்தியா?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39756</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39756#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 08:06:14 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39756</guid>
		<description><![CDATA[“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”. என கடந்தவாரம் அரச சார்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா. இவர் அடுத்தமாத நடுப்பகுதியுடன் கொழும்பிலிருந்து திரும்பவுள்ளார். அசோக் கே காந்தாவின் இந்தக் கருத்தும், அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Indian-Flag.jpg" alt="Indian Flag" width="100" height="80" class="alignleft size-full wp-image-1050" />“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.</p>
<p>என கடந்தவாரம்<span id="more-39756"></span> அரச சார்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா.</p>
<p>இவர் அடுத்தமாத நடுப்பகுதியுடன் கொழும்பிலிருந்து திரும்பவுள்ளார்.</p>
<p>அசோக் கே காந்தாவின் இந்தக் கருத்தும், அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்ட கருத்தும் ஒத்துப்போகின்றன.</p>
<p>இலங்கையுடன் பெரியண்ணன் போக்கில் இந்தியா நடந்து கொள்ளாது என்று அவர் திரும்பத் திரும்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.</p>
<p>அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்பதே.</p>
<p>அதாவது, இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் தெளிவானதொரு நிலைப்பாட்டுல் உள்ளது என்பதை அசோக் கே காந்தா இப்போது கூறியுள்ள கருத்தும், சல்மான் குர்ஷித் முன்னர் வெளியிட்ட கருத்தும் உறுதிப்படுத்திகின்றன.</p>
<p>இலங்கை விவகாரத்தில், ஒரு எல்லையை இந்தியா வரையறுத்துக் கொண்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஆனால், இந்தியா வகுத்துள்ள இந்த எல்லைக் கோடு எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும்.</p>
<p>ஏனென்றால், இந்த எல்லைக் கோட்டு வரையறையை அரசாங்கங்களின் வெளிவிவகாரக் கொள்கைகளின் மூலம் தீர்மானித்து விட முடியாது. அதற்கு ஒரு உதாரணம், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கைக் குறிப்பிடலாம்.</p>
<p>இது இலங்கை அரசுக்கு அதிரான வாக்கு அல்ல என்று இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவ்வாறாயின், அது யாருக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்கு? &#8211; இந்த விடயத்தில் இந்தியா தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறதா? அல்லது எல்லோரையும் குழப்ப முனைகிறதா? என்ற கேள்வி வருகிறது.<br />
இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா விரும்பவில்லை என்பது உண்மையே.</p>
<p>ஆனால், அதை நிறைவேற்றும் அதிகாரம் முற்றுமுழுதாக இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளார்களுக்கு இருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் வகுத்திருந்த எல்லையை கடந்து சென்று இந்தியா வாக்களிக்க நேர்ந்தது.</p>
<p>அதுபோலவே, ஆணையிடும் போக்கில், அதாவது அதிகாரத் தொனியுடன் இலங்கையுடன் இந்தியா நடந்துகொள்ளாது என்பதும், அது இந்தியாவின் அணுகுமுறையல்ல என்பதும் தெளிவான விடயமே.</p>
<p>ஏனென்றால், இலங்கையுடன் அதிகாரத் தொனியுடன் இந்தியா ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்று கூறினால் அது தவறானது. இந்தியாவின் கடந்த கால வரலாறு அதற்கு மாறானது.</p>
<p>பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா தனது அதிகாரத்தனத்தை இலங்கை மீது பிரயோகித்துள்ளது. அதற்கான சான்றாக தான், இந்திய &#8211; இலங்கை உடன்பாடு, 13வது அரசியலமைப்புத் திருத்தம், மாகாண சபைகள், இன்னும் பல உள்ளன.</p>
<p>ஆனால், இப்போது, அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துகின்ற நிலையில், இந்தியாவும் இல்லை, அதைக் கேட்கின்ற நிலையில் இலங்கையும் இல்லை.</p>
<p>மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம், இந்தியாவைப் பல வழிகளில் செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. எங்கே தானும் அதிகாரத்தனத்துடன் நடந்து கொண்டால், சீனாவுடன் இலங்கை ஒரேயடியாக இணைந்து கொண்டு விடுமோ என்ற பயம் இந்தியாவுக்கு உள்ளது.</p>
<p>இதனை புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் என்று எல்லோருமே ஏற்றுக்கொள்கிறார்கள். இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்ற சர்ச்சை வலுத்தபோது, இந்த பயத்தை பலதரப்பட்ட இந்தியத் தரப்பினரும் முன் வைத்திருந்தனர்.</p>
<p>இதன் காரணமாகத் தான், இலங்கை விடயத்தில் ஒரு எல்லைக்கோட்டை இந்தியா வகுத்து வைத்திருக்கிறதேயின்றி, இந்திய இலங்கை உறவுகளின் நெருக்கத்தினால் அல்ல. இலங்கையின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் இந்தியா செய்யாது என்ற இந்தியத் தூதுவரின் வாக்குறுதியின் அடிப்படை இது தான். ஆனாலும், அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வருவதையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அசோக் கே காந்தா அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.</p>
<p>அந்த முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பம் தான், புதுடில்லி வரைந்து வைத்துள்ள எல்லைக்கோட்டுக்கு சவாலானது. இத்தகைய சவால்களை இந்தியா வரும் நாட்களில் அதிகளவில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.</p>
<p>ஏனென்றால், வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும், மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிப்பது தொடர்பான விடயங்களில், இலங்கை அரசாங்கம் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. வடக்கில் தேர்தலை நடத்துவதானால் அதற்கு முன்னர், மாகாணங்களின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.</p>
<p>சிங்களத் தேசியவாத சக்திகளின் இந்த எதிப்பை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது முக்கியமான விடயம். ஏனென்றால், இலங்கை அரசாங்கத்துக்குக் கூட, வடக்கில் மாகாண சபத் தேர்தலை நடத்துவதிலோ, காணி, பொலிஸ் அதிகாரங்களை விட்டு வைப்பதிலோ உடன்பாடு இல்லை.</p>
<p>இந்த நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை மீறியதாக விடும் என்றும், அதனால் இந்தியா கொமன்வெல்த் மாநாட்டுக்கு அளுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு விடலாம் என்பதாலும், அரசியலமைப்பைத் திருத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.</p>
<p>இப்போது, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இது, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஹெல உறுமய போடும் திட்டமா? அல்லது அரசாங்கமும், ஹெல உறுமயவும் சேர்ந்து இந்தியாவை முட்டாளாக்குவதற்காக போட்டுள்ள திட்டமா? என்பது விரைவிலேயே வெளிச்சமாகும்.</p>
<p>எது எவ்வாறாயினும், இது இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுக்கத்தக்க, நெருக்கடியுல் தள்ளிவிடக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>இலங்கையுடன் அதிகாரப்போக்குடன் செயற்பட விரும்பாத &#8211; அதற்கான எல்லையைத் தாண்ட விரும்பாத இந்தியாவைச் சீண்டிப் பார்க்கின்ற விவகாரம் இது. இந்திய &#8211; இலங்கை உடன்பாட்டுக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ், அதிகாரங்களை பறிப்பதற்கு எத்தகைய வழியிலேனும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் அதை இந்தியா பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பதே இப்போதுள்ள கேள்வி.</p>
<p>உள்நாட்டு விவகாரம் என்று இதனை ஒதுக்கி வைத்து விட்டு இந்தியா இருந்து கொண்டால், தான் வகுத்துள்ள எல்லையைத் தாண்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, தனக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை மீறுகிறது என்று தெரிந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக கருதும் விடயத்தில் இலங்கை அரசு கைவைக்கிறது என்று தெரிந்த நிலையில், அதைக் கண்டும் காணாமல் விட்டு விடமுடியாது என்று இந்தியா கருதினால், அந்த எல்லைக் கோட்டை இந்தியா தாண்டியாக வேண்டும்.</p>
<p>அதாவது அந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கையுடன் அதிகாரப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.</p>
<p>இந்த நிலையில் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் எல்லைக் கோட்டுக்கு சோதனை அதிகமாகப் போகிறது என்பது உறுதியாகவே தெரிகிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தலும் அதையொட்டி எழுந்து வருகின்ற சூழலும், இலங்கை அரசுக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கும் கூட ஒரு விஷப்பரீட்சையாகவே உள்ளது.</p>
<p>- ஹரிகரன் -</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39756</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Indian-Flag.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Indian-Flag.jpg" medium="image">
			<media:title type="html">Indian Flag</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சுவிஸில் நடைபெற்ற மே-18 செந்நெருப்பு நாள் எழுச்சி நிகழ்வு (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39748</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39748#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:44:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39748</guid>
		<description><![CDATA[விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18  முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39749" alt="swiss_may18_006" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/swiss_may18_006-100x80.jpg" width="100" height="80" />விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு<span id="more-39748"></span> எழுச்சி நிகழ்வான மே-18  முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்,</p>
<div>
<p>நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.</p>
<p>சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன் கவிதா நிகழ்வும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்களும் பேச்சுக்களும் நடைபெற்றன.</p>
<p>நிகழ்வில் சிறப்பு வெளியீடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ செய்தி ஏடான விடுதலைப்புலிகள் ஏடு மீண்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.</p>
<p>நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுவிஸ் டொச் மொழியிலும் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_001.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_002.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_003.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_004.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_005.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_006.jpg" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39748</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/swiss_may18_006-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/swiss_may18_006.jpg" medium="image">
			<media:title type="html">swiss_may18_006</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/swiss_may18_006-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_001.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_002.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_003.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_004.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_005.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/swiss_may18_006.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39744</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39744#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:26:26 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39744</guid>
		<description><![CDATA[கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நேற்று மே 18 நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. லண்டனில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற பேரணியைப் போன்று கனடாவிலும் எழுச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றமை குறிப்பிடப்பட்டது. No tags for this post.]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39745" alt="canada" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada-100x80.jpg" width="100" height="80" />கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p>
<div>
<p>முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட உற<span id="more-39744"></span>வுகளுக்காக நேற்று மே 18 நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. லண்டனில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற பேரணியைப் போன்று கனடாவிலும் எழுச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றமை குறிப்பிடப்பட்டது.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_001.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_002.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_003.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_004.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_005.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_006.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_007.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_008.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_009.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_010.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_011.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_012.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_013.jpg" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39744</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada.jpg" medium="image">
			<media:title type="html">canada</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_001.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_002.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_003.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_004.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_005.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_006.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_007.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_008.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_009.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_010.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_011.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_012.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/canada_may18_013.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>வடக்கெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39740</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39740#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:23:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39740</guid>
		<description><![CDATA[இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தினில் ஆகுதியான அனைவருக்குமான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டினில் இடம்பெற்றிருந்தது. யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நகரிலுள்ள தமிழரசுக்கட்சி வளவினுள் இன்று மாலை நடைபெற்றிருந்தது.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பொமனவானோர் பங்கெடுத்திருந்தனர். பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையினில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திற்கான நினைவேந்தல் கூட்டம் கூட்டமைப்பு காரியாலயமான அறிவகத்தினில் இடம்பெற்றது.கூட்டமைப்பு நாடாளுமன்ற [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ji-100x80.jpg" alt="ji" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39741" />இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தினில் ஆகுதியான அனைவருக்குமான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டினில் இ<span id="more-39740"></span>டம்பெற்றிருந்தது.</p>
<p>யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நகரிலுள்ள தமிழரசுக்கட்சி வளவினுள் இன்று மாலை நடைபெற்றிருந்தது.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள்   உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பொமனவானோர்  பங்கெடுத்திருந்தனர். பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையினில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.</p>
<p>கிளிநொச்சி மாவட்டத்திற்கான நினைவேந்தல் கூட்டம் கூட்டமைப்பு காரியாலயமான அறிவகத்தினில் இடம்பெற்றது.கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிறீதரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பெருமளவிலானோர்  பங்கெடுத்திருந்தனர்.பலத்த நெருக்குவாரங்கள் மத்தியினிலும் பெமளவிலானோர் பங்கெடுத்திருந்தனர்.</p>
<p>வவுனியாவிற்கான  நினைவேந்தல் கூட்டம்; இன்று காலை  வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.</p>
<p>இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச்சுடர் ஏற்றலையும்; மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், போரினால் தாய் தந்தையர் இழந்த பிள்ளைகள்,; பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் நெஞ்சுருக ஏற்றி அஞ்சலி செய்திருந்தனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39740</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ji-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ji.jpg" medium="image">
			<media:title type="html">ji</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/ji-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>நோர்வேயில் நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39736</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39736#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:21:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39736</guid>
		<description><![CDATA[18.05.2013 மாலை 17.00 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஈழத்தில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39737" alt="m18" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/m18-100x80.jpg" width="100" height="80" /></p>
<div id="NewsPostDetailContent">
<p>18.05.2013 மாலை 17.00 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் மு<span id="more-39736"></span>ள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.</p>
<p>ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.<br />
ஈழத்தில் சிறீலங்காவாலும் அதர்க்கு முண்டுகொடுத்த கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளாலும் பல்லாயிரம் மக்கள் உலகத்தால் தடை செய்யப்பட்டட ஆயுதங்களால் கொத்துக்கொத்தாக குதறி எறியப்பட்ட கோரநாளின் நினைவுகளை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எங்கிருந்தாலும் எங்கள் மூச்சு இருக்கும்வரை கந்தக்குண்டுகளால் ஏரிக்கப்பட்ட எங்கள் வீரர்களினதும் மக்களினதும் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை என நம்பிக்கையோடு மக்கள் பேசிய கருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது.</p>
<p>இதேவேளை இந்நிகழ்வில் நோர்வே ஆழும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததோடு சிறீலங்கா அரசு சனநாயகத்தை மதிக்கபழகவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>அதேவேளை இந்நிகழ்வின் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் வீபர்யூட் பெனாண்டோஸ் பேசுகையில் நாங்கள் இங்கு கூடியிருப்பது இன அழிப்பையும் கவலையையும் வெளிப்படுத்துவதர்;காக மட்டுமல்ல அதர்க்கும் மேலாக எமது ஆன்மாவில் இரண்டற கலந்திருக்கும் இலட்சியத்திற்காகத்தான் எமது போராட்டம் தொடர்கிறது அத்தோடு இன அழிப்பில் சிறீலங்கா மட்டுமல்ல மனிதநேயம் பேசும் இந்தியா அமேரிக்கா நோர்வே பிருத்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதை தெரிவித்ததோடு இவர்களின் துணையில்லை என்றால் ஒருபோதும் விடுதலைப்புலிகளை சிறீலங்காவால் அசைக்கமுடியாது அதனால்தான் சமாதானம் என்ற ஆயுதத்தை சர்வதேசத்தின் துணையோடு கையில் எடுத்து விடுதலைப்புலிகளையும் மக்களையும் பிரித்தாளும் சூட்சுமங்களில் ஒன்றாக அமேரிக்கா பிருத்தானியாவின் உந்துதலால் விடுதலைப்புலிகள் மீதான ஜரோப்பியத்தின் தடை அமைந்தது.</p>
<p>எனவே நீங்கள் மனிதர்களை அழிக்கலாம் தமிழீழத்தின் தடங்களை கனரக வாகனங்கள் கொண்டு தகர்க்கலாம் ஆனால் தமிழரின் தாகம் தமிழீழ தாகம் என்ற உன்னத இலட்சியத்தை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது அது ஆன்மாவின் பலமாய் இருக்கிறது.ஏன தெரிவித்த அவர் பூக்களை எத்தனை முறை பறித்தாலும் வசந்தகாலம் வரத்தான் செய்யும் என்ற நம்பிக்கை தரும் கருத்தையும் பதிவுசெய்தார்</p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/05/Norway%20full%20padam.jpg" width="600" height="5000" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39736</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/m18-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/m18.jpg" medium="image">
			<media:title type="html">m18</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/m18-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/05/Norway%20full%20padam.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஊடக போராளி இசைப்பிரியாவின் நீங்காத நினைவுகள்! (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39731</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39731#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:17:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39731</guid>
		<description><![CDATA[தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் அழியாத ஊடக போராளியாக காணப்படும் இசைப்பிரியா சிங்கள காடையர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவுகளுடன்&#8230; தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஊடகபணியில் சிறப்புடன் செயற்பட்ட ஊடகபோராளி இசைப்பிரியா&#8230; விடுதலை போராட்ட வரலாற்றில் நிதர்சன நிறுவனத்தின் தொலைக்காட்சி படப்பிடிப்பு பகுதிகளில் களப்பணி ஆற்றிய இசைப்பரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக தமிழ்மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஊடகபோராளி முள்ளிவாய்க்கால் இறுதி போரில் சிங்கள காடையர்களால் இனம் காணப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/isai-100x80.jpg" alt="isai" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39732" />தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் அழியாத ஊடக போராளியாக காணப்படும் இசைப்பிரியா சிங்கள காடையர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவுகளுடன்&#8230;</p>
<p>தமிழீழ விடுதலை<span id="more-39731"></span>ப்போராட்டத்தின் ஊடகபணியில் சிறப்புடன் செயற்பட்ட ஊடகபோராளி இசைப்பிரியா&#8230;</p>
<p>விடுதலை போராட்ட வரலாற்றில் நிதர்சன நிறுவனத்தின் தொலைக்காட்சி படப்பிடிப்பு பகுதிகளில் களப்பணி ஆற்றிய இசைப்பரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக தமிழ்மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஊடகபோராளி முள்ளிவாய்க்கால் இறுதி போரில் சிங்கள காடையர்களால் இனம் காணப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9gKWiUuMtp8?list=PL05AB2B13B521C25E" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/XM1X68o9vrQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39731</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/isai-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/isai.jpg" medium="image">
			<media:title type="html">isai</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/isai-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நாளில் பிரான்சில் 3வது நினைவு தூபி திறப்பு (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39727</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39727#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:15:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39727</guid>
		<description><![CDATA[தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி சனிக்கிழமை பிரான்சில் மேலும் ஒரு நினைவு தூபி திறந்துவைக்கப்பட்டது. ஏற்கனவே இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நினைவாக செவ்ரோன் நகரபிதாவின் ஆதரவுடன் செவ்ரோன் மாநகரப் பூங்காவில் நினைவு கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், சிறீலங்கா வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு லாக்கூர்நெவ் நகரசபை நினைவுச்சிலை அமைத்துள்ள நிலையில், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39728" alt="14" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/14-100x80.jpg" width="100" height="80" /></p>
<div id="NewsPostDetailContent">
<p>தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி சனிக்கிழமை பிரான்சில் மேலும் ஒரு நினைவு தூபி திறந்துவைக்கப்பட்டது.</p>
<p>ஏற்கனவே இனப்<span id="more-39727"></span>படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நினைவாக செவ்ரோன் நகரபிதாவின் ஆதரவுடன் செவ்ரோன் மாநகரப் பூங்காவில் நினைவு கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், சிறீலங்கா வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு லாக்கூர்நெவ் நகரசபை நினைவுச்சிலை அமைத்துள்ள நிலையில், தற்போது 3வதாக கிளிச்சி நகரசபையின் ஆதரவுடன் பிரமாண்டமான நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>மூதூரில் பணியாற்றிய பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் (Action Contre la Faim) 17 உறுப்பினர்கள் சிறீலங்காப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதன் நினைவாக இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த நினைவு தூபியில் இனப்படுகொலைக்கு உள்ளான ஏனைய தமிழ் மக்களுக்கும், விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்குமான நினைவு தூபியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நினைவு தூபியைச் சுற்றி தமிழர்களின் தேசியச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிச்சி லா கார்ன் நகரபிதா அவர்களால் இந்த நினைவு தூபி திறந்து<br />
வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், தமிழ் அமைப்புக்களும் பொது மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.</p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/1.JPG" width="600" height="399" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/2.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/3.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/4.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/5.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/6.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/7.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/8.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/9.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/10.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/11.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/12.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/13.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/14.JPG" width="600" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/15.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/16.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/17.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/18.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/19.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/20.JPG" width="600" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/21.JPG" width="600" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/22.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/23.JPG" width="600" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/24.JPG" width="600" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/25.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/26.JPG" /></p>
<p><img alt="" src="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/27.JPG" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39727</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/14-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/14.jpg" medium="image">
			<media:title type="html">14</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/14-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/1.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/2.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/3.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/4.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/5.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/6.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/7.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/8.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/9.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/10.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/11.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/12.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/13.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/14.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/15.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/16.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/17.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/18.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/19.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/20.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/21.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/22.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/23.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/24.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/25.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/26.JPG" medium="image" />
		<media:content url="http://www.sankathi24.com/uploads/images/2013/04/1/1/1/27.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>மலேசியாவில் இடம்பெற்ற மே-18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39722</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39722#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:06:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39722</guid>
		<description><![CDATA[மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது. எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் தமிழர் இனஅழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளே தமிழர் இனவழிப்பு நினைவு நாள். கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுதல் கூடாது ஆயிரக்கணக்கில் எமது மக்கள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39723" alt="may18_countries" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18_countries-100x80.jpg" width="100" height="80" /></p>
<p>மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.</p>
<div>
<p>எமது இனத்தின்<span id="more-39722"></span> மீதான அடக்குமுறைகளிலும் தமிழர் இனஅழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளே தமிழர் இனவழிப்பு நினைவு நாள்.</p>
<p>கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுதல் கூடாது ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நான்காம் ஆண்டு நினைவில் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழீழத்தை தலைவர் காட்டிய வழியில் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி மொழி ஏற்போம் என கூறப்பட்டது.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_001.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_002.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_008.JPG" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39722</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18_countries-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18_countries.jpg" medium="image">
			<media:title type="html">may18_countries</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/may18_countries-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_001.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_002.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/may18_countries_008.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மே 18 நினைவு நாள்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39718</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39718#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 09:04:23 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39718</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் வருட நினைவு நாள் நினைவஞ்சலிகள் பல்வேறு நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன. அந்தவகையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/aust_may18-100x80.jpg" alt="aust_may18" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39719" />முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் வருட நினைவு நாள் நினைவஞ்சலிகள் பல்வேறு நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன.</p>
<p>அந்தவகையில்<span id="more-39718"></span> அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம்.</p>
<p>ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது.</p>
<p>ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.</p>
<p>சர்வதேச அரசுகள் தத்தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தினாலும் அடிப்படையான மனிதாபிமானத்தோடு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஆனாலும் இவை போதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கவில்லை.</p>
<p>கொடியபோர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அரசியல்அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக இருந்துவருகின்றது.</p>
<p>அதேவேளையில் தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்வதற்கான திட்டமிட்ட இனவழிப்பை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது.</p>
<p>எனவே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் ஒருமித்த குரலே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தாயகத்தில் வாழும் மக்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும்.</p>
<p>அந்தவகையில் தமிழீழத் தேசிய இனத்தின் ஆன்மாவை உலுக்கிப்போட்ட மே மாதத்தின் நினைவுகளைச் சுமந்தபடி, மரணித்துப்போன எம்முறவுகளின் கனவுகளைச் சுமந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் ஒன்றுகூடி அனைவரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39718</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/aust_may18-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/aust_may18.jpg" medium="image">
			<media:title type="html">aust_may18</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/aust_may18-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39713</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39713#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 08:59:09 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39713</guid>
		<description><![CDATA[தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவும் உலக நாடுகளும் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது. இதில் 1.5 லட்சம் மக்கள் துடிதுடித்து செத்தனர். இந்த இனப் படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39714" alt="merina_may" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/merina_may-100x80.jpg" width="100" height="80" />தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.</p>
<div>
<p>2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை<span id="more-39713"></span> தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவும் உலக நாடுகளும் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது.</p>
<p>இதில் 1.5 லட்சம் மக்கள் துடிதுடித்து செத்தனர். இந்த இனப் படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக கைதிகளாக மாற்றப் பட்டனர் தமிழர்கள்.</p>
<p>இது ஒரு இன அழிப்பாகவே பார்க்க முடிகிறது. எனினும் ஐ.நா மன்றமோ, உலக நாடுகளோ இந்த இன அழிப்பை ஏற்கவில்லை. ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை தான் என அங்கீகரிக்க வில்லை.</p>
<p>தமிழக அரசு ஈழத்தில் நடந்தது இனப் படிகொலை தான் என சொல்லிய பிறகும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை. இந்நிலையில் 2009 மே 18 ஆம் நாளில் மாபெரும் இனப் படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு.</p>
<p>இந்த நாள் தமிழர்களின் கருப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது. இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அனுசரிக்கிறார்கள்.</p>
<p>அந்த வகையில், அதே மே 18 ம் நாளில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது.</p>
<p>இதில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து இறந்த தமிழ் சொந்தகளுக்கு கைகளில் பதாகை ஏந்தியும் , மெழுகுவர்த்தி ஏந்தியும் இறந்த சொந்தங்களை நினைவு கூர்ந்தனர்.</p>
<p>தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டனர். படுகொலை செய்யப்பட்ட ஈழ உறவுகளுக்கு மௌன அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.</p>
<p>ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்த தினத்தை பற்றி விழிப்புணர்வு கொடுக்க துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. காவல்துறை இறுதி வரை இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு எந்த தடையும் சொல்லாமல் துணை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_001.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_002.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_003.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_004.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_005.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_006.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_007.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_008.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_009.jpg" border="1" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_010.jpg" border="1" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39713</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/merina_may-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/merina_may.jpg" medium="image">
			<media:title type="html">merina_may</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/merina_may-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_001.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_002.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_003.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_004.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_005.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_006.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_007.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_008.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_009.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/merina_may18_010.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39709</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39709#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 07:41:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39709</guid>
		<description><![CDATA[இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியான ´´மார்பிள் ஆர்ச்´´ பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ´´பிக்காடிலி சர்க்கஸ்´´ வரை இடம்பெற்றது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருந்தபோதும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39710" alt="uk" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uk-100x80.jpg" width="100" height="80" />இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.</p>
<div>
<p align="left">பிரிட்டிஷ் தமிழர்<span id="more-39709"></span> பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியான ´´மார்பிள் ஆர்ச்´´ பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ´´பிக்காடிலி சர்க்கஸ்´´ வரை இடம்பெற்றது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருந்தபோதும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அந்த நாட்டை பிரிட்டன் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தார்கள்.</p>
<p>இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் அங்கு நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமரும் பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத் தொடர்பாளரான சாம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.</p>
<p>அந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அவருக்கு பிரித்தானிய பிரஜைகள் என்ற வகையில் தாம் தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுப்போம் என்று கூறிய சாம் கிருஷ்ணா பிரதமரின் அந்த முடிவு சர்ச்சைக்குரிய முடிவு என்று துணைப்பிரதமர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளார்.</p>
<p>இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசாங்க ஆதரவுடனான பேரினவாதச் சக்திகள் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் கூறிய சாம் கிருஷ்ணா தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk18.jpg" border="0" /></p>
<p align="left"><strong><span style="text-decoration: underline;">லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு</span></strong></p>
<p align="left">பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால்நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டுஎதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்துகொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.</p>
<p align="left">பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4  மணிக்கு Waterloo Place சென்றடைந்தது.  மாலை 3மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது .பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும்  பொதுநலவாய  நாடுகளின்  மகாநாட்டில்கலந்து  கொள்வது  என்ற பிரித்தானிய பிரதமர்  டேவிட் கமரூனின் முடிவு மற்றும்  தமிழ் மக்களுக்கு  எதிரான இலங்கை அரசாங்கத்தின்  இனப்படுகொலையை தடுப்பதற்கு  தவறிய ஐ.நா ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள்  மற்றும்  சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும் கோசங்களை  எழுப்பியும் சென்றனர். பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின்  மைய பகுதியாக  இருந்ததால் ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த  பேரணியை பார்வையிட்டனர்.</p>
<p align="left">தமிழ்  மக்களுக்கு எதிரான  இனப்படுகொலையினை வேற்றின  மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும்கவனத்தை ஈர்த்தன.மாலை  4 மணி அளவில்   Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் இந்தியாவில் இருந்து வந்து  கலந்து   கொண்டிருக்கும்  இந்திய கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவரும் இந்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் உலக  தமிழர் இயக்கதலைவர் பழ நெடுமாறன் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.</p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_001.JPG" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_002.JPG" border="0" /></p>
<p align="center"> <img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_003.JPG" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_004.JPG" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_005.JPG" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_006.JPG" border="0" /></p>
<p align="center"><img alt="" src="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_007.JPG" border="0" /></p>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39709</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uk-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uk.jpg" medium="image">
			<media:title type="html">uk</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/uk-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk18.jpg" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_001.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_002.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_003.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_004.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_005.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_006.JPG" medium="image" />
		<media:content url="http://www.tamilwin.com/photos/full/2013/05/uk_mulli_007.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39705</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39705#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 07:37:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39705</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், போர்முடிவுற்ற பின்னர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vavunia_ninaivuthoopi-100x80.jpg" alt="vavunia_ninaivuthoopi" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39706" />முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்ப<span id="more-39705"></span>ட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.</p>
<p>மேலும், போர்முடிவுற்ற பின்னர் தமிழர்களின் தாயகத்தில் நினைவிடங்கள் தூபிகள் இடித்தழிக்கப்பட்ட தொடர்ச்சியின் முல்லிவாய்க்களில் உயிர் நீத்த மக்களின் நினைவுதினம் கொண்டாட இருக்கும் சூழ் நிலையில் இச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p>
<p>இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39705</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vavunia_ninaivuthoopi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vavunia_ninaivuthoopi.jpg" medium="image">
			<media:title type="html">vavunia_ninaivuthoopi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vavunia_ninaivuthoopi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சுதந்திரத்தமிழீழம் கானல் நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39702</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39702#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 07:35:50 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39702</guid>
		<description><![CDATA[சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" alt="nedumaaran_anna" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-4001" />சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.</p>
<p>இந்நிகழ்வை இ<span id="more-39702"></span>லங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.</p>
<p>இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.</p>
<p>நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் புலமைப்பித்தன், புலவர் மறத்தமிழ்வேந்தன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் இராஜேஷ் ஆகியோரின் வரிகளுடன் உருவான &#8220;விடுதலைக்கு மரணமில்லை&#8221; ஒலிப்பேழை குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மதிமுக தோழர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு &#8220;பிரபாகரன்&#8221; என்று பெயரினை வைகோ அவர்கள் இந்நிகழ்வில் சூட்டினார்.</p>
<p>இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை எழும்பூர் பகுதி மதிமுகவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/EGBoEAwwDz8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/VlY5sGAqzis?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/zpctrkyYFPc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39702</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya.jpg" medium="image">
			<media:title type="html">nedumaaran_anna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே 18 &#8211; தமிழ் இன அழிப்பு நாள் &#8211; அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39698</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39698#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 05:11:14 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39698</guid>
		<description><![CDATA[தமிழர்களின் செங்குருதியில் தேசம் தோய்ந்த நாட்கள், தமிழர்களின் சிதறடிக்கப்பட்ட உடல்கள் வன்னியின் விளைச்சல் புமியில் வீசியெறியப்பட்டன! விசவாயுக்குண்டுகளில் எமது குழந்தைகளும் கருகின! நீதி படுகொலை செய்யப்பட சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்த்தது! &#8216;புட்டிய இறச்சிக் கடையின் கோரக்காட்ச்சியினைப்&#8217; போல, தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போரின் மனிதப்பேரவலம் காட்சிதருகின்றது என சர்வதேச ஊடகம் ஒன்று, உலகம் சொல்ல விரும்பாத உண்மையைக் கக்கியது. தன்னார்வத்தொண்டுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.நா பணியாளர்கள் என அனைவரையும் வெளியேற்றி, வெளியுலகத் தொடர்புகள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/icet-100x80.jpg" alt="icet" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39699" />தமிழர்களின் செங்குருதியில் தேசம் தோய்ந்த நாட்கள், தமிழர்களின் சிதறடிக்கப்பட்ட உடல்கள் வன்னியின் விளைச்சல் புமியில் வீசியெறியப்பட்டன! விசவாயுக்குண்டுகளில் எமது குழந்தைகளும் கருகின! நீதி படுகொலை செய்யப்பட சர்வதேசம் கைக<span id="more-39698"></span>ட்டி வேடிக்கை பார்த்தது!</p>
<p>&#8216;புட்டிய இறச்சிக் கடையின் கோரக்காட்ச்சியினைப்&#8217; போல, தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போரின் மனிதப்பேரவலம் காட்சிதருகின்றது என சர்வதேச ஊடகம் ஒன்று, உலகம் சொல்ல விரும்பாத உண்மையைக் கக்கியது. தன்னார்வத்தொண்டுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.நா பணியாளர்கள் என அனைவரையும் வெளியேற்றி, வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு சின்னஞ் சிறு நிலப்பகுதிக்குள் இலட்சக்கணக்கான தமிழ்மக்களை இராணுவ முற்றுகை;குள் இறுக்கிவைத்துக்கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் நரபலி வேட்டையாடப் பட்டார்கள்.</p>
<p>இந்தப் போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்பை நோக்கமாகக் கொண்ட போரையே நிகழ்த்தி வருகின்றது என்ற உண்மையை விடுதலைப்புலிகள் உலகுக்கு இடித்து உரைத்தபோதும் யார் செவிகளுக்கும் அது விழவுமில்லை. அதனை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்பவும் இல்லை! சிங்கள அரசுடன் சேர்ந்து நின்றே ஐ.நாவும் ஒத்து ஊதியது. இழப்புக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னது. முதலில்7000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகம் வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபை, தமது கடமையினைச் செய்யத் தவறியதால் 100,000 வரையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.</p>
<p>சிங்கள அரசினைப் பாதுகாத்ததில் ஐ.நாவுக்கும் பெரும் பங்குண்டு. இன அழிப்பைத் தடுத்திருக்க்கூடிய அத்தனை வாய்ப்புக்களையும் வேண்டுமென்றே அலட்சியம் செய்துவிட்டு, மனித குலத்துக்கே மாபெரும் தவறினை இழைத்துவிட்டு, இப்போது, தவறு செய்து விட்டோம் எனக் கூறி இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொளளப் போவதாக ஐ.நா உறுதி கூறுகின்றது.</p>
<p>அப்படியென்றால் அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கான நீதி எங்கே?</p>
<p>உங்கள் &#8216;புகோள அரசியல் சதுரங்க பரிசோதனைக் கூடத்தில்&#8217; பலிக்கடாவாக்கப்பட்ட விலங்குகளா தமிழர்கள்?</p>
<p>அல்லது தமிழர்களின் அழிவு ஒரு பொருட்டல்ல பிற இனமக்களின் உயிர்கள்தான் பெறுமதியானவை என்றா உங்கள் கூற்றை நாம் அர்த்தப்டுத்திக்கொள்வது?</p>
<p> சர்வதேசம் கூறும்  வெறும்நம்பிக்கை தரும் வார்த்தைகளோ அல்லது ஐ.நா வின் மனிதவுரிமைகள் அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களோ எமக்கான நீதியினையோ , விடுதலையினயோ பெற்றுத்தந்துவிடப்போவதில்லை, நாம்தான்அவற்றைப் போராடிப பெற வேண்டும்!</p>
<p>இப்போது நினைத்துப் பார்க்கின்ற போதும் நம்பமுடியவில்லை! 21 ஆம் நூற்றாண்டில் மானிடம் குறித்து உயர்ந்த சிந்தனைகள் செழித்து வளர்ந்த உலகிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? இலட்சக்கணக்கான தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படும் போது அலட்சியமாகவிருந்த ஈவிரக்கமற்ற உலகமா இன்றைய உலகம்? உலகே உனக்கு கண்ணில்லையா? என எம்மால் கதறத்தான் முடிந்தது தடுத்திட முடியவில்லையே?</p>
<p>&#8216;யாதும் ஊரே யாவரும் கேளீர்&#8217;; என உலக மாந்தர்களையே தன் உறவாக நினைத்து மகிழ்ந்த இனமக்களல்லவா படுகொலை செய்யப்பட்டார்கள்? &#8216;உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே&#8217;என்று பாரினில் பசிபோக்கிடும் அறக்கருத்தினை உலகுக்கு கொடுத்த மக்களல்லவா இன்று பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்?<br />
அகமும் புறமும் என வாழ்வுக்கு இலக்கணம் எழுதிய மக்களா இன்று நிலமிழந்து தவிக்கிறார்கள்?</p>
<p>புமிப்பந்தெங்கும் எட்டு கோடி தமிழர்கள் பரந்து வாழ்ந்தபோதும் எமக்கென ஒரு நாடு இல்லாமமைதான் இந்தப் பரிதாபநிலைக்கு &#8211; இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்ற தேசியத்தலைவரின் வார்த்தைகளை நாம் மறுக்க முடியுமா? ஈழத்தில் தமது தொப்புள் கொடி உறவுகள் படுகொலை செய்யப்படுவது தெரிந்திருந்தும் தமிழகச் சொந்தங்களால் அதனை தடுத்து நிறுத்திட முடியவில்லை. ஏனெனில் முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. இறைமையுள்ள அரசின் சொந்தக்காரர்களாக அவர்களும் இல்லை!</p>
<p>உலகில் சிறுபான்மை இனமான சிங்கள இனம், இறைமையுள்ள அரசு என்னும் &#8216;உலகத் தகைமைச் சான்றிதளை&#8217; கையில் வைத்துக்கொண்டே அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்துவிடுவதையும் இனப்படுகொலை செய்வதையும் யாரும் தட்டிக்கேட்க்க முடியாது என சவால் விடுகிறது! குற்றமிழைத்த பின்னும்  தப்பிக்கொள்ளமுடிகிறது. &#8216;தமிழீழமே தீர்வு&#8217; என தமிழகச் சட்டசபையில் ஒட்டுமொத்தமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் ஏன் நம்மால் அதனைச் செயற்படுத்த முடியவில்லை? ஏனெனில் மானில அரசு தன்னிச்சையாக செயற்படமுடியாது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்பார்கள். அப்படியென்றால் கோடிக்கணக்கானவர்களாக நாம் இருந்தபோதும் எமக்கென குட்டி நாடொன்றேனும் இருந்தால் மட்டுமே எமது உரிமைகளை நாம் பாதுகாத்திட முடியும் என்ற உண்மையினை சிங்களத்திடம் இருந்து நாம் இனியாவது கற்றுக்கொள்ளவேண்டும்.</p>
<p>தமிழர் தாயகத்தில் தமிழர்களின் மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களை அழித்து, அபகரிக்கப்பட்ட நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு உருவாக்கியும் சிங்கள அடையாளங்களை நிறுவுகின்ற வேலைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இவை எல்லாமுமே தமிழர்களை இலங்கைத்தீவீல் இருந்து முற்றுமுழுதாக துடைத்தழிக்கும் இன அழிப்பு நடவடிக்கை என்னும் பெரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே!<br />
நிலமிழந்த மக்கள் அரசுக்கு எதிராக போராடவும் தலைப்பட்டுள்ளார்கள். வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் போராடிச்சாவதே மேலானது என்று அவர்கள் தீர்மானித்திருக்கக் கூடும். சுதந்திரதேசத்தின் கனவுகளோடு வாழந்த மக்கள் அடிமையாக எவ்வளவு காலத்துக்குத்தான் அடங்கி ஒடுங்கி வாழக்கூடும்?</p>
<p>2009 தமிழின அழிப்புப் பேரவலத்துக்குப் பின், ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆனால் ஈழ விடுதலைப்போராட்டம்  உலக அரங்கிற்கு இன்னொரு வளர்ச்சி நிலைக்கு எடுத்துவரப்பட்டு உலகத்தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகளை உலகத்தமிழர்கள் அனைவருமே கையில் எடுத்துப்போராடும் நம்பிக்கை தரும் காலமாக இன்று மாறியுள்ளது.</p>
<p> எம்மை படுகொலை செய்தாய் ஆனால் எமது கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்போடேயே உள்ளனவே அதனை என்ன செய்வாய்? எம்மை புதைகுழியில் புதைத்தாய் எம் தாய் நிலத்தை எங்கு கொண்டு போய்ப் புதைப்பாய்?</p>
<p>மே 18 என்பது மாபெரும்பேரவலத்தை தமிழினம் தன் வரலாற்றில் சந்தித்த நாள்,  உலகமெங்கும் இந்தத் தினத்தை தமிழின அழிப்பு நாளாக, உலகத் தமிழ் மக்கள், முள்ளிவாயக்கால் இனவழிப்பிலும், இதுநாள்வரையிலும்  படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் ஏந்தி, உலகத்தமிழர்களாகிய நாம் அனைவரும், தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து போராடுவோம் என உறுதி ஏற்க்கும் நாள்!  </p>
<p>சுயநிர்ணய உரிமைக்கான எமது அரசியல் போராட்டத்தையும், நீதி கேட்டுப் போராடுவதையும் அதன் இலக்கினை எட்டும்வரை சோர்வின்றி உறுதியுடன் எடுத்துச் செல்வோம். நாம்  அனைவரும் ஒற்றுமையாக நின்று ஓரே குரலில் போராடுவோம். வீழ்வது அவமானமல்ல எழுந்திராமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்! சுதந்திர தாகம் கொண்ட மக்களாக எழுச்சியோடு போராடுவோம்!</p>
<p>அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39698</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/icet-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/icet.jpg" medium="image">
			<media:title type="html">icet</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/icet-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழம் தமிழர் தாயகம் இல்லையா?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39693</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39693#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 05:08:42 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39693</guid>
		<description><![CDATA[இன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து   முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் அங்கு  உள்ள அனைத்து  ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை  நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கொடியை  ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கொடியில்  தமிழ் ஈழம் என்று [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39694" alt="manif May 17 Mauritius.jpg 14" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/manif-May-17-Mauritius.jpg-14-100x80.jpg" width="100" height="80" /></p>
<div id="NewsPostDetailContent">
<div dir="ltr" id="yui_3_7_2_1_1368815953969_3569">
<p id="yui_3_7_2_1_1368815953969_3568">இன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு,</p>
<p>அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன்<span id="more-39693"></span> சேர்ந்து   முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் அங்கு  உள்ள அனைத்து  ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை  நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கொடியை  ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கொடியில்  தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p>
<p id="yui_3_7_2_1_1368815953969_3568"><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%202.jpg" width="601" height="450" /></p>
<p id="yui_3_7_2_1_1368815953969_3573">நாளை மே 18 சர்வதேச எங்கும் உள்ள தமிழீழ மக்கள் அவைகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் கைகோர்த்து Beau  Bassin என்ற இடத்தில் இருந்து Rose Hill Plaza நோக்கி சென்று அங்கு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவாக நினைவு தூபி ஒன்றை திறத்து வைக்க இருக்கின்றனர்.</p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg" width="600" height="449" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%204.jpg" width="600" height="450" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%208.jpg" width="600" height="450" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%209.jpg" width="600" height="451" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2010.jpg" width="600" height="449" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2013.jpg" width="600" height="800" /></p>
<p><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2014.jpg" width="600" height="799" /></p>
<p id="yui_3_7_2_1_1368815953969_3572">- செய்தி தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு</p>
</div>
</div>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39693</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/manif-May-17-Mauritius.jpg-14-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/manif-May-17-Mauritius.jpg-14.jpg" medium="image">
			<media:title type="html">manif May 17 Mauritius.jpg 14</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/manif-May-17-Mauritius.jpg-14-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%202.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%204.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%208.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%209.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2010.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2013.jpg" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/manif%20May%2017%20Mauritius.jpg%2014.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>இது இனப்படுகொலை இல்லையெனில் எது இனப்படுகொலை? &#8211; புகழேந்தி தங்கராஜ்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39687</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39687#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 15:26:30 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39687</guid>
		<description><![CDATA[நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு 4 ஆன்டுகள் முடிந்துவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை! இறந்தே பிறந்த 7 கோடி நடைப் பிணங்களான நம்மால் அன்று அதைத் தடுக்கவும் முடியவில்லை இன்று அதற்கு நியாயம் கேட்கவும் முடியவில்லை. ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mahi-100x80.jpg" alt="mahi" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39688" />நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை.</p>
<p>4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள்<span id="more-39687"></span> கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு 4 ஆன்டுகள் முடிந்துவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை! இறந்தே பிறந்த 7 கோடி நடைப் பிணங்களான நம்மால் அன்று அதைத் தடுக்கவும் முடியவில்லை இன்று அதற்கு நியாயம் கேட்கவும் முடியவில்லை.</p>
<p>ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட தொடுத்த யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியது சிங்கள அரசு. சிதைத்துச் சீரழித்துக் கொன்றபின்  எங்கள் சகோதரிகளின் உடலை நடுவீதிகளில் வீசிவிட்டுச் சென்றார்கள் புத்தனின் புத்திரர்கள். கேட்பதற்கு நாதியற்ற சமூகத்தில் பிறந்ததைத் தவிர வேறென்ன குற்றம் செய்தார்கள் அந்தச் சகோதரிகள்?</p>
<p>பிறப்பாயிருந்தாலும் இறப்பாயிருந்தாலும் தமிழகத் தமிழர்களான நம்மைக் காட்டிலும் அதிக சாங்கியங்களை சம்பிரதாயங்களை சடங்குகளை &#8211; தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிப்பவர்கள் நமது ஈழத் தமிழ் உறவுகள். கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்ட தங்கள் உற்றார் உறவினர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட அவர்களை அனுமதிக்கவில்லை ராஜபட்சேவின் ராணுவம்.  அந்த அளவுக்கு விரட்டி விரட்டி வேட்டையாடியது.</p>
<p>4 ஆண்டுகள் முடிவடைகிற நிலையில் ஒன்றரை லட்சம் கொலைகளில் குறைந்தது நூறு கொலை தொடர்பாகவேனும்  கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்றால்  இல்லை. ஒரே ஒரு கொலையாளி மீது கூட சட்டம் பாயவில்லை&#8230;. ஒரே ஒரு கொலையாளி கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை&#8230;.. ஒரே ஒரு கொலையாளிமீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.</p>
<p>நாங்களே விசாரிப்போம் &#8211; என்று இனவெறி பிடித்த இலங்கை மிருகம் நான்கு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாமும் நான்கு ஆண்டுகளாக அவர்கள் சொல்வதை நம்பிக் கொண்டேயிருக்கிறோம். நம்முடைய இந்த பேய்த்துயில் கொடுக்கிற திமிரில்தான் &#8216;அவர்களே விசாரிப்பார்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வார்கள்&#8217; என்று அழுகிப்போன மனசாட்சியுடன் புழுகிக்கொண்டே இருக்கமுடிகிறது  மன்மோகன்சிங்குகளாலும்இ ஒபாமாக்களாலும்!</p>
<p>2009 இறுதியிலேயே நடப்பது இனப்படுகொலைதான் &#8211;  என்பதைச் சுட்டிக்காட்டி ராஜபட்சேவைத் தட்டிக் கேட்டார் சன்டே லீடர் ஆசிரியர் லசந்த.  அந்த &#8216;தேசத்துரோகத்துக்காக&#8217; அவரை நடுத்தெருவில்  சுட்டுக் கொன்றது கோதபாயவின் கூலிப்படை. சர்வதேசமும் அதைக் கண்டிக்க அதுபற்றி விசாரிக்கப்படும் என்று அறிவித்தது இலங்கை. &#8216;தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் &#8211; என்று இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை அறிவிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அப்படியொரு விசாரணை இதுவரை நடந்ததேயில்லை&#8217; என்றார் அப்போது அமெரிக்கத் தூதராயிருந்த  ராபர்ட் பிளேக். இதுதான் இலங்கை என்கிற அவலட்சணத்தின்  லட்சணம்.</p>
<p>ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட எந்தக் குற்றவாளியும் சிங்கள பௌத்த இனவாத அரசுகளின் 65 ஆண்டு வரலாற்றில் தண்டிக்கப்பட்டதேயில்லை. 1996ல் 11 சிப்பாய்களால் சிதைத்துச் சிதைத்துக் கொல்லப்பட்டாள்   கிருஷாந்தி குமாரசாமி. அதற்கும் முன்பே அருமைத்துரை தனலட்சுமி என்கிற 16 வயதுச் சிறுமி அதற்கும் முன்பு சின்னராசா அந்தோணி மாலா&#8230; என்று அழிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த பிஞ்சு மலர்களை நசுக்கிய பொறுக்கிகளில் ஒருவனுக்காவது  இன்றுவரை தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? இதற்கான பதில் சர்வதேசத்துக்கும் தெரியும்.   தெரிந்திருந்தும் மௌனம் சாதிக்கிறார்களே ஏன் &#8211; என்பது ஒரு முக்கியமான கேள்வி.</p>
<p>&#8217;2008 &#8211; 2009ல் நடந்த இனப் படுகொலையை இப்போதுகூட &#8216;போர்&#8217; என்கிற போலியான பெயரிலேயே உலக நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குறிப்பிடுவது என்ன நியாயம்&#8217; &#8211; என்பது அதைவிட முக்கியமான கேள்வி! நம்மூர் மார்க்சிஸ்ட்களைப் போலவே மேலைநாடுகளும் இப்படியொரு தகிடுதத்தத்தில் திட்டமிட்டு இறங்கியிருப்பது தான் வினோதம்.  இரண்டு தரப்புக்கும் என்ன தொடர்பு &#8211; என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. டாட்டா மாதிரி இந்திய முதலாளிகளை முன்மொழிவார்களே தவிர முதலாளித்துவ நாடுகளை வழிமொழிய மாட்டார்கள் தோழர்கள்!</p>
<p>மேலை நாடுகளுக்குத் தொடர்பு மார்க்சிஸ்ட்களுடன் அல்ல&#8230;. மரணத்தின் வாகனமான மகிந்த ராஜபட்சேவுடன்! அந்த மனித மிருகத்துக்கு ஆயுதம் முதல் அனைத்து உதவிகளையும் வழங்கியவர்கள் அவர்கள்.</p>
<p>தமிழராய்ப் பிறந்ததைத் தவிர வேறென்ன குற்றம் செய்தார்கள்  இலங்கையால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேர்!</p>
<p>மருத்துவமனை என்று தெரிந்தே குண்டுவீசி நோயாளிகளைக்  கொன்று குவித்தார்கள்&#8230;.. &#8216;மக்கள் ஒளிவதற்குக் கூட இங்கே  இடமில்லை தயவுசெய்து தாக்காதீர்கள்&#8217; என்று சொன்ன ஐ.நா. அதிகாரியைப் பொருட்படுத்தாமல் இரவு முழுக்க குண்டுவீசி சுதந்திரபுரம் ஐ.நா.முகாம் முன் கூடியிருந்த மக்களைக் கொன்றுகுவித்தார்கள்&#8230;. பசியால் வாடியிருந்த குழந்தைகளுக்கு ஐ.நா. கொடுத்த பால் பவுடரை வாங்க குழந்தைகளுடன் குவிந்திருந்த பெண்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்றார்கள் அம்பலவண் பொக்கனையில்&#8230;.. பங்கருக்கு வெளியே விளையாடிய குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை&#8230; எல்லாவற்றுக்கும் மேலாக &#8211; நோ பயர் சோன் &#8211; என்ற மோசடி  அறிவிப்பை வெளியிட்டு &#8211; அதை நம்பி ஒரே இடத்தில் குழுமிய மக்களை மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரால்  தாக்கிக் கொன்றார்கள்&#8230; வயது வித்தியாசமில்லாமல் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொன்றார்கள்&#8230; தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்திக் கொன்றார்கள்&#8230;</p>
<p>இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. ஐ.நா.வும் பங்கெடுத்த இனப்படுகொலை. 2008லேயேஇ தமிழர்கள்மீது வான்வழியே வீசப்பட்ட குண்டுகளின் மொத்த எடை 14 ஆயிரம் டன். இவ்வளவு குண்டுகள் வீசப்பட்டதில் தமிழர்கள் மட்டும் தான் செத்தார்கள். ஒரே ஒரு சிங்கள இனத்தவர் கூட உயிரிழக்கவில்லை. எவ்வளவு திட்டமிட்ட தாக்குதல் என்பது இதிலிருந்து  தெளிவாகிறது.  இது இனப்படுகொலை  இல்லையெனில் வேறு எது இனப்படுகொலை?</p>
<p>இனப் படுகொலை என்று தெரியாமல் ஆயுதம் கொடுத்துவிட்டோம் &#8211; என்று எந்த நாடாவது அழுகுணி ஆட்டம் ஆட முயன்றால் கருணாநிதியையும் பிரணாப் முகர்ஜியையும் ஓவர்டேக் செய்யப் பார்க்கும் அவர்களைப் பிடரியில் தட்டவேண்டும். எப்போதோ ஆயுதம் கொடுத்தார்கள் &#8211; என்பதல்ல நமது  குற்றச்சாட்டு&#8230;. இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோதே ஆயுதம் கொடுத்தார்களே&#8230; சுற்றிலும் பிணங்கள் விழுந்து கொண்டிருந்தபோது போர்க்களத்தின் நடுவில்போய் நின்றுகொண்டு மிச்சமிருப்பவர்களையும் எப்படிக் கொன்று குவிப்பது என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார்களே&#8230; சர்வதேச ராணுவத் தளபதிகள்&#8230;. அவர்களெல்லாம் மனிதஜாதியில் சேர்த்தியா?</p>
<p>எவ்வளவு திமிர் இருந்தால் எவ்வளவு ஆணவம் இருந்தால் எவ்வளவு கொலைவெறி இருந்தால் தமிழினத்தின்மீது எவ்வளவு  வெறுப்பு இருந்தால் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட பிறகு கொலைவெறி இலங்கைக்குக் கொம்பு சீவ அங்கே போயிருப்பார்கள் அவர்கள் &#8211; என்று யோசித்துப் பாருங்கள்!</p>
<p>&#8216;அகில உலக அரசியலையும் கரைத்துக் குடித்த&#8217;  ராஜீவ் காந்தி என்கிற ஒரு மாஜி பைலட்டால் இலங்கையின் கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சுருங்கியது பழைய வரலாறு. இந்தியாவைப் போலவே தங்களது தளபதிகளையும் கூலிப்படை ரேஞ்சுக்கு மாற்றி இனவெறி இலங்கைக்கு  அனுப்பியிருக்கலாமா இந்த மேலைநாடுகள்?  </p>
<p>பயங்கரவாதத்துக்கு எதிரான போர் &#8211; என்று பிளேட்டைத் திருப்புவோரின் செவுளைத் திருப்பவேண்டும் தமிழினம். நூறு பேரோ இருநூறு பேரோ கொல்லப்பட்ட நிலையில் அவர்கள்  பயங்கரவாதிகள் &#8211; என்று இவர்கள் சொல்லியிருந்தால்  அறியாமல் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டபிறகு அந்த எண்ணிக்கையை அறிந்தபிறகு  &#8216;அவர்கள் பயங்கரவாதிகள்&#8217; என்று இவர்கள் நினைத்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஒன்று மன நோயாளிகளாக இருக்க வேண்டும் அல்லது பிணந் தின்னிகளாக இருக்கவேண்டும். இரண்டில் அவர்கள் எது?</p>
<p>பயங்கரவாதி யார்? தமிழினம் என்கிற ஒன்று இலங்கை மண்ணில் இருக்கவேகூடாது &#8211; என்று கொலைவெறியுடன் திரிகிற இலங்கையா? நசுக்கப்படுகிற தங்கள் இனத்தைக் காக்க  கழுத்தில் குப்பி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார்களே பிரபாகரனின் தோழர்கள் &#8211; அந்த விடுதலைப் புலிகளா?</p>
<p>தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாலும் தன்முனைப்பாலும் தமிழீழ மக்களின் போராட்டத்தை  நசுக்க வஞ்சகமாக முயன்றது ராஜீவ் அரசு. சோனியா வழிநடத்தும் மன்மோகன் அரசும் ராஜீவ் வழியை அப்படியே பின்பற்றுகிறது. ஒரே வித்தியாசம் ராஜீவ் செய்தது வஞ்சகம் இவர்கள் செய்வது நயவஞ்சகம். 1987லேயே பிரபாகரனைக் கொன்றுவிடத் துடித்தார் ராஜீவ். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் இவர்கள். பிரபாகரனுடன் அப்படியென்ன விரோதம் இவர்களுக்கு?   தன்னுடைய மக்களின் தேவையை நிறைவேற்றுவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள பிரபாகரன் மறுத்ததில் என்ன தவறிருக்கிறது?</p>
<p>தன்னுடைய மக்களின் மனசாட்சியாக விளங்கிய மனிதன் பிரபாகரன். தன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தாயகத்தை மீட்பதற்காக சமரசமில்லாமல் போராடிய தலைவன். அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆயுதம் ஏந்தியவன். ராணுவ முகாம்களைத் தாக்கித் தகர்த்த அவனுடைய ஆயுதங்கள்  எப்போதாவது சிங்களர் வீடுகளைத் தாக்கியதுண்டா? அப்பாவி சிங்களப் பெண்கள் மீது விடுதலைப் புலிகளின் விரலாவது பட்டதுண்டா?</p>
<p>இந்திய அமைதிகாப்புப் படை ரா-வின் அயோக்கியத்தனத்தாலும் ராஜீவின் அறியாமையாலும் கூலிப்படையாகவே மாறிவிட்டிருந்த எண்பதுகளின் கடைசியில்  மணலாற்றுக் காட்டில் இந்தியப் படையின் முற்றுகையில் இருந்தார் பிரபாகரன். அப்போதே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக திட்டமிட்டு  செய்தி பரப்பப்பட்டது. (அப்படியெல்லாம் பொய்களைப் பரப்பியவர்கள்  வெட்கமேயில்லாமல் மீசையை வளர்த்துக்கொண்டு இப்போதுகூட  இலங்கைப் பிரச்சினை பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கிறார்களே இதுதான் அபத்தத்தின் உச்சம்.)</p>
<p>இந்திய ராணுவம் முற்றுகையிட்ட நிலையிலும் மக்களுக்குக் கேடயமாக இருக்கும் பணியை தொடர்ந்து கொண்டிருந்தனர் புலிகள். உலகின் இரண்டாவது பெரிய ராணுவத்தையே விடுதலைப் புலிகள் எதிர்க்கத் துணிந்ததால் ஆத்திரத்திலிருந்தது இந்திய ராணுவம். அந்த நிலையில் இந்தியப் படைகளின் ஆதரவு இருக்கிற தைரியத்தில் புலிகளுக்கு எதிரான கோஷ்டிகள் பல்வேறு கேவலமான தாக்குதல்களை மேற்கொண்டன. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போராளிகளின் வீடுகளுக்குப் போய் போராளிகளின் பெற்றோரைச் சுட்டுக்கொன்று கொண்டிருந்தது ஒரு குழு.</p>
<p>போராளிகளின் பெற்றோர் சுட்டுக் கொல்லப்படும் தகவலை மணலாற்றுக் காட்டுக்குள் இருந்த பிரபாகரனிடம் ஆத்திரத்துடன் வந்து தெரிவித்தார் ஒரு தளபதி. துரோகக் குழுக்களில் இருப்பவர்களின் பெற்றோரை இதே பாணியில் நாம் தாக்கிக் கொன்றாலென்ன &#8211; என்று கேட்ட அந்தத் தளபதியை பிரபாகரன் கடுமையாகக் கண்டித்ததும் பின்னர் பொறுமையுடன் அறிவுரை சொல்லி அனுப்பியதும் பிரபாகரன் யாரென்பதை நமக்கு  உணர்த்துகிற  ஈர வரலாறு.</p>
<p>அப்பழுக்கற்ற அந்த வீரனை பயங்கரவாதி என்று நாக்கூசாமல் பேசுகிறவர்களின் நோக்கமென்ன? தமிழ் ஈழம் அமைவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக அந்த உண்மையான மனிதனை அவனது மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்றார்கள் முயல்கிறார்கள்?</p>
<p>ஒரு பிரபாகரனை &#8211; அவனுடைய தலைமையிலான உன்னதமான வீரர்களை &#8211; வீழ்த்திவிட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக ஒன்றரை லட்சம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்திருக்கிறது இலங்கை. அதைத் தோள்மேல் தூக்கிச் சுமக்கிறது இந்தியா. இவர்கள் இருவரும் நேர்மையான போர் புரிந்த ஒரு வீரனை எப்படிப் புரிந்துகொண்டிருக்க முடியும்? கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.. ஒரு நேர்மையாளனை இன்னொரு நேர்மையாளனால்தான் புரிந்துகொள்ள முடியும். பொறுக்கிகளால் எப்படி போராளிகளைப் புரிந்துகொள்ள முடியும்?</p>
<p>வீரத்தோடு போரிட்டார்கள் &#8211; என்று சொல்வதில் இல்லை புலிகளின் பெருமை. அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கியவர்கள் அவர்கள். அதுதான் அவர்களது ஆகப்பெரிய அடையாளம். அச்சமின்மைக்கு மட்டுமல்ல அவர்களது அர்ப்பணிப்புக்கும்  அடையாளமாகத்தான் கழுத்தில் தொங்கியது நச்சுக் குப்பி.</p>
<p>வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை பங்கருக்குள் மறைந்து மறைந்து நகர்ந்த மக்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஒரு வேளை கஞ்சியாவது கொடுக்கவேண்டும் என்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கஞ்சிப்பாத்திரத்துடன் பங்கர் பங்கராகத் தேடிவந்து உணவு கொடுத்த இளைஞர்களை அந்த மக்கள் என்றைக்காவது மறக்க முடியுமா?</p>
<p>ஐந்து உண்மைகளை உலகறியப் பேசியாகவேண்டும் நாம்.</p>
<p>வந்தேறிய சிங்களர்களிடமிருந்து தமிழர் தாயகத்தை மீட்பது &#8211; என்பது ஒரு வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள்தான் தமிழினத்தின் காவலரண். அவர்களது எழுச்சியால்தான் தமிழினம் பாதுகாப்பாக இருக்க முடிந்தது தமிழீழக் கோரிக்கை வலுவடைய முடிந்தது. தமிழ் ஈழத்துக்குக் குறைவான எதையாவது அரசியல் லாபநஷ்டக் கணக்குப் பார்த்து ஏற்பதென்பது அந்த உன்னத நோக்கத்துக்காக உயிரிழந்த புலிகளுக்கு மட்டுமல்ல லட்சக் கணக்கான மக்களுக்கும் செய்கிற துரோகம்.</p>
<p>பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அவதூறுப் பிரசாரங்கள் அனைத்தும் தமிழ்  ஈழக் கோரிக்கையை நசுக்கும் உள்நோக்கம் கொண்டவை.  அத்தகைய பிரச்சாரங்களை முறியடித்தாகவேண்டும். சிங்கள இனவெறியர்களைப்போல் அல்லாமல் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்யும் வகையில் நேர்மையான போரைத்தான் புலிகள் நடத்தினர் என்பதை வெளிப்படையாகப் பேசவேண்டும்.</p>
<p>2008 &#8211; 2009ல் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. அதற்குக் காரணமான ராஜபட்சே சகோதரர்களையும் மற்றவர்களையும் அவர்களைத் தூண்டிவிட்டவர்களையும் துணை நின்றவர்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நடந்தது போர் &#8211; என்று திசைதிருப்ப முயலும் துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டும்.</p>
<p>கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை விசாரிக்காமலேயே இழுத்தடிப்பது தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் உள்நோக்கத்துடன் பிரச்சினையை ஆறப் போடும் செயல். இந்தச் சதியை முறியடித்து நடந்த இனப்படுகொலைக்கு இப்போதே நீதிவேண்டும் &#8211; என்கிற குரல்  தாய்த் தமிழகத்திலிருந்து முன்னெப்போதையும் காட்டிலும்  வலுவாக எழ வேண்டும் இப்போது!</p>
<p>நடந்தது இனப்படுகொலை &#8211; என்பதை வலுவாக எடுத்துரைப்பதுதான் தமிழ் ஈழக் கோரிக்கையை வலுப்படுத்தும். இனப்படுகொலை செய்த மிருகங்களுடன் சேர்ந்து வாழமுடியுமா மனித இனமாகிய தமிழினம் &#8211; என்கிற கேள்வி எல்லாநிலையிலும் எழுப்பப்பட வேண்டும். அதுதான் தமிழீழத்தின் தேவையை அழுத்தந் திருத்தமாக எடுத்துவைக்கும்.</p>
<p>&#8216;இனப்படுகொலை&#8217; என்பதை ஏற்றுக்கொண்டால் அதற்கு உதவிய நம்மீதும் குற்றச்சாட்டு திரும்புமே &#8211; என்கிற தர்ம சங்கடமே உலக நாடுகளின் தயக்கத்துக்குக் காரணம். அவர்கள் மீது தயவு தாட்சண்யமெல்லாம் பார்க்கக் கூடாது நாம். கொன்று குவிக்கத் துணை நின்றுவிட்டு இன்று மென்று முழுங்கப் பார்க்கும் அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்க நாம் ஒன்றும் தேவ குமாரர்கள் அல்ல! நடுத்தெருவில் அவர்களை நிறுத்தி சட்டையைப் பிடித்து உலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுவிடக்கூடாது. அந்த நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்போம் &#8211; என்று மிரட்டுகிற ஜனத்தொகை நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்த யோசிக்கவே கூடாது.</p>
<p>தமிழ் ஈழம் தேவை &#8211; நடந்த இனப் படுகொலைக்குத் தண்டனை தேவை &#8211; தமிழினம் தலைநிமிர அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட புலிகள் தேவை&#8230;&#8230;. இதை எவர் மறுத்தாலும் அவர்களை நாம் புறக்கணித்தாக வேண்டும்.</p>
<p>முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம்&#8230;</p>
<p>தமிழீழம்தான் தீர்வு என்பதை இரண்டாவதாகச் சொல்லலாம்.</p>
<p>முதலில் சொல்லவேண்டியது &#8216;நடந்தது இனப்படுகொலை&#8217; &#8211; என்பதை! அதைச் சொல்வதன் மூலம் &#8211; &#8216;கொல்லப்பட்டவர்கள் வாழ முடியுமா கொலைகாரர்களுடன்&#8217; என்கிற கேள்வியை  எழுப்புகிறோம். உலகின் மனசாட்சியை அது நிச்சயம் உலுக்கும். தமிழீழமே தீர்வு &#8211; என்கிற எண்ணத்தை உலகெங்கும் எழுப்பும்.</p>
<p>&#8216;இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்கிறார்கள். நானும் அப்படியே! எம் இனத்துக்கான பணி இன்னும் முடிவடைந்துவிடவில்லை. எம் மக்களின் தாயகத்தைப் பெற்றுத் தந்த பிறகுதான் என் பணியை முழுமையாகச் செய்ததாக நான் மனநிறைவு அடைய முடியும்&#8217; &#8211; என்று ஒரு மிகப்பெரிய வெற்றிக்குப் பின் நிதானமாகவும் தொலைநோக்குடனும் பேசியவர் பிரபாகரன்.</p>
<p>பிரபாகரன் என்கிற ஒரு வரலாற்று நாயகனின் பணியே நிறைவடையாத நிலையில் நம்முடைய பணிகள் மட்டும் எப்படி முடிவடைய முடியும்?</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39687</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mahi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mahi.jpg" medium="image">
			<media:title type="html">mahi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/mahi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39683</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39683#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 15:20:03 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39683</guid>
		<description><![CDATA[வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு வன்னியைக் கைப்பற்றிய சிங்கள இராணுவம் தற்போது அந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே தடை விதித்துள்ளது. ஆயினும் சிறிலங்கா படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tamilagam-100x80.jpg" alt="tamilagam" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39684" />வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.</p>
<p>தமிழர் தாயகத்தி<span id="more-39683"></span>ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.</p>
<p>லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு வன்னியைக் கைப்பற்றிய சிங்கள இராணுவம் தற்போது அந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே தடை விதித்துள்ளது. ஆயினும் சிறிலங்கா படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.</p>
<p>யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழர்களின் போராட்டம் வெற்றிகொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தம்பட்டம் அடித்த தினத்தை தமிழ் மக்கள் துக்க தினமாகவும் வன்னியில் சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கான அஞ்சலி செலுத்தும் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.</p>
<p>2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்று இன்றும் அஞ்சலி செலுத்தப்படுமென்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அஞ்சலி நிகழ்வு ஒரு அமைதியான, இறந்த தமது உறவுகளை நினைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக மாத்திரமே அமையுமென்றும் இதனை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைவிட யாழ். குடாநாட்டில் சில பொது இடங்கள் மற்றும் வீடுகளிலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.</p>
<p>யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள பிரதேச சபைகளிலும் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதேச சபை, நகர சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவான பொதுமக்கள் ஆகியோர்  கலந்துகொள்ளவுள்ளனர்.<br />
வவுனியாவில், வவுனியா நகர சபை மண்டபத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளதாக வவுனியா நகர சபையின் உப தவிசாளர் எம்.ரதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த அஞ்சலி நிகழ்வு வருடாந்தம் நடைபெறும் நிகழ்வு என்றும் இந்த நிகழ்வில் எவரும் கலந்துகொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியாலும் உலக நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்போடும் அழிக்கப்பட்ட இந்த நாளை தமிழ் மக்கள் நினைவுகூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய அனுமதியை வழங்கவில்லை. இதனால் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே இந்த அஞ்சலி  நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எது வந்தாலும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுமென்று தமிழர் தாயத்திலுள்ள மக்கள் உறுதியெடுத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.<br />
இதேவேளை, தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் செல்லப்பட்டு கொன்று குவிக்கப்பட்ட தினத்தை தமிழ் மக்கள் நினைவுகூர்வதை தடுக்கும் நோக்கத்துடன் சிறிலங்கா இராணுவம் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. மக்களை அச்சுறுத்துவதன் மூலம் அஞ்சலி நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39683</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tamilagam-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tamilagam.jpg" medium="image">
			<media:title type="html">tamilagam</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tamilagam-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39679</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39679#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 14:57:24 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39679</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதோடு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_00-100x80.jpg" alt="tgte_00" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39680" />முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.</p>
<p>விடுதலைக்கான<span id="more-39679"></span> இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.</p>
<p>கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதோடு பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.</p>
<p>எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம் என தொடக்கநாள் அங்குராப்பண நிகழ்வுரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.</p>
<p>மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையில் தெரிவித்ததாவது :</p>
<p>எங்களது புலமைகளினையும் பெருமைகளினையும் நாங்கள் கொண்டிருக்கும் ஞானத்தினையும் பறைசாற்றுவதற்காக இங்குநாம் வரவில்லை. ஓர் உன்னதமான கடமையினை நிறைவேற்றுவதற்கான வழிகளையும் வடிவங்களினையும் மூலோபாயங்களினையும் கண்டறியவே நாம் இன்று இங்கு கூடியுள்ளோம்.</p>
<p>எங்களது குறிக்கோள் தர்மத்தின்பாற் பட்டதாக இருந்தும், வஞ்சனையான இராசதந்திரங்களினால் எம்மவர்கள் களத்தினில் நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.</p>
<p>எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.</p>
<p>எங்களுக்கு, எமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட நீதியினை, பறிக்கப்பட்ட உயிர்வாழ்வதற்கான உரிமையினை, இனத்தின் தன்னாட்சிக்கான இறைமையினை மீண்டும் பெற்றுவலுவூட்டி செழுமைப்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்புகளினை சர்வதேசத்தின் நீதி நெறிமுறைகளுக்குள்ளும், அவ் நீதிநெறிமுறைகளினை வகுத்துள்ள அரசியல் பொறிமுறையின் சட்டகங்களுக்குள்ளும் தேடியறிவது எமது முதன்மையாக பணியாக உள்ளது.</p>
<p>எமது உடன்பிறப்புக்கள், இளவல்களின் அர்ப்பணிப்பினையும், அச்சமில்லா பெருவீரத்தினையும் தளராத உறுதியினையும் மீறி போர்க்களத்தில் நாம் வஞ்சிக்கப்பட்டோம். இவ்விடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய விடயத்தினை நாம் நினைவில் கொள்ளவேண்டும். &#8216;இந்தஉலகம் தர்மத்தின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்கள் சார்ந்த அச்சிலேயே சுழல்கின்றது&#8217;.</p>
<p>இங்கு கூடியுள்ள நாம் சர்வதேசத்தின் நலன் சார் பூகோள அரசியலுக்கும் எமது தேசிய தாயகத்தினதும் மக்களினதும் நலன்களுக்குமிடையில் காணக்கூடிய ஒத்திசைவான தன்மைகளினையும் ஒருங்கிணையக்கூடிய புள்ளிகளினையும் கண்டறிவோம்.</p>
<p>தமிழ்மக்களுடைய வன்மையான சக்தி தற்போது எம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தாலும் எங்களிடமுள்ள மென்சக்தியினை இராசதந்திரவழிமுறைகளுடாக ஆளுமையுடன் பிரயோகிப்போம்.</p>
<p>தற்போது உருவாகியுள்ள சீனா, இந்தியா, சிறீலங்கா என்ற முத்தரப்புகட்டமைப்பில் உலகத் தமிழர்களினையும் நான்காவது கட்டகமாக இணைத்து தமிழரின் தேசியநலன்களினையும் பூகோள, பிராந்திய நிலையில் உறுதிப்படுத்துவோம்.</p>
<p>நாம் எங்கள் நிலையினை புறநிலையிலிருந்து அகநிலைக்கு மாற்றும் போது எதிர்கால பூகோள அரசியலில் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவும் தமிழ்மக்களுக்கு சார்பாக மாறும் நிலைதோன்றும்.</p>
<p>மேன்மைக்குரிய விருந்தினர்களே! நாங்கள் இங்கு புலமையாளர்களாக மட்டுமன்றி செயற்பாட்டாளர்களாகவும் இணைந்துள்ளோம். எங்களுடைய கல்விப்புலமையும் ஞானமும் அர்ப்பணிப்பும் நிச்சயமாக தமிழர் தேசத்தின் விரைவான பிறப்புக்கு பங்களிக்கும். முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ்மக்களினையும் நினைவில் நிறுத்தியவாறு திடசங்கற்பத்துடன் கூடிய அர்ப்பணிப்புடனும், தளராத உறுதியுடனும் முள்ளிவாய்கால் அழுகுரல்களுக்கு காணிக்கையாக இன்று இவ் மாநாட்டினை தொடக்கிவைக்கின்றேன்.</p>
<p>இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரை அமைந்திருந்தது.</p>
<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39679</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_00-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_00.jpg" medium="image">
			<media:title type="html">tgte_00</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/tgte_00-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையை புறக்கணிப்போம்! தமிழக இளைஞர்களின் போராட்டம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39675</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39675#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 14:54:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39675</guid>
		<description><![CDATA[தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த SAVE TAMILS என்னும் அமைப்பு Boycott Sri -Lanka &#8211; இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள். தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/boycote_004-100x80.jpg" alt="boycote_004" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39676" />தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.</p>
<p>இந்நிலையில், ஈ<span id="more-39675"></span>ழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த SAVE TAMILS என்னும் அமைப்பு Boycott Sri -Lanka &#8211; இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.</p>
<p>தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் அவர்களுக்கான தமிழக, புலம் பெயர் தமிழ் மக்களது அறப் போராட்டம் இன்னும் இன்னும் பல் மடங்கு பலம் கொண்டு எழும் என்பதை உலகத்திற்கு இந்த SAVE-TAMILS இளையோர் பறை சாற்றுகின்றனர்.</p>
<p>கடந்த கார்த்திகை மாதம், தாயகத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல அரசியல் பிரமுகர்களும் தமிழர் அமைப்புகளும் கலந்து கொண்ட உலகத் தமிழர் மாநாட்டை பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது.</p>
<p>அந்த மாநாட்டில், இலங்கைக்கெதிராக பல்வேறு வகையிலும் பல திசைகளிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்றும், தாயகத்தில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கோள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இதன் தொடர்ச்சியாக மேற்படி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை தீட்டியது.</p>
<p>அண்மையில் பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த வேண்டுகோளுக்கமைய தமிழக அமைப்புக்கள் சிறிலங்காவைப் புறக்கணி, சிறிலங்காவின் பொருட்கள், சுற்றுலா மற்றும் கிரிக்கட் என்பனவற்றைப் புறக்கணி என்ற போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.</p>
<p>இந்த வகையான சிறிய தீப்பொறிகளே, இன்று தமிழ் நாட்டிலும் உலகளவிலும் பெரியதொரு தீப்பந்தமாய் உருபெற்று, எங்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட உதவுகின்றது. இது காலத்தின் அவசியம், இதன் அடிப்படையில் வையகப் பரப்பெங்கும் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் &#8220;Boycott Sri Lanka &#8221; போன்ற பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம் என தமிழர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39675</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/boycote_004-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/boycote_004.jpg" medium="image">
			<media:title type="html">boycote_004</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/boycote_004-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளே</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39670</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39670#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 14:41:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39670</guid>
		<description><![CDATA[2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான நாளாகும.; பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே மே18. எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிரூபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark-notice-tn-100x80.jpg" alt="denmark notice-tn" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39671" />2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான  நாளாகும.;</p>
<p>பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை<span id="more-39670"></span> நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே மே18.</p>
<p>எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிரூபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றன.</p>
<p>இதை தடுப்பதர்க்கான மாபெரும் சக்தியாக டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது. ஆகையால் 17.05.2013 வெள்ளி அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ள வேண்டியது எமது கடமையாகும்.</p>
<p>வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். ஆகையால் டென்மார்க் வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் கண்டனப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.</p>
<p>பேரணி ஆரம்பமாகும் இடம் டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக காலை 10:00 மணிக்கு.<br />
Asiatisk Plads, 2, 1448 København K. </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39670</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark-notice-tn-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark-notice-tn.jpg" medium="image">
			<media:title type="html">denmark notice-tn</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/denmark-notice-tn-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>வீழ்வோம் என்று நினைத்தாயோ! மே 18 ல் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39666</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39666#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 08:40:03 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39666</guid>
		<description><![CDATA[இன விடுதலைக்காகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டிலும் மாவீரன் பிரபாகரன் தலைமையில் தொடர்ந்த ஈழப் போரினை இந்திய அரசின் ஆதரவு, அன்றைய தமிழ்நாட்டை ஆண்டவர்களின் ஆதரவு உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவோடு நடைபெற்ற உச்சக்கட்ட ஈழ விடுதலைப் போரில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள்&#8230;.. கொத்து கொத்தாய் இலங்கை அரசால் கொன்றொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனி ஈழம் மலரும் நோக்கிலும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வு மலரும் நோக்கிலும் தொடங்கப்பட்ட நாம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/08/seeman-100x80.jpg" alt="seeman" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-34261" />இன விடுதலைக்காகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டிலும் மாவீரன் பிரபாகரன் தலைமையில் தொடர்ந்த ஈழப் போரினை இந்திய அரசின் ஆதரவு, அன்றைய தமிழ்நாட்டை ஆண்டவர்களின் ஆதரவு உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவோடு நடைபெற்ற உச்ச<span id="more-39666"></span>க்கட்ட ஈழ விடுதலைப் போரில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள்&#8230;..</p>
<p>கொத்து கொத்தாய் இலங்கை அரசால் கொன்றொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனி ஈழம் மலரும் நோக்கிலும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வு மலரும் நோக்கிலும் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வரும் மே 18 ஆம் தேதி கடலூரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.</p>
<p>இதற்கான அறிவிப்பினை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.</p>
<p>இது குறித்து சீமான் பேசியதாவது,</p>
<p>கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போர் உச்சக்கட்டத்தை எட்டியபோது ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க இங்கு யாரும் இல்லாமல் போனதாலேயே நாம் தமிழர் கட்சி அதே மே 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முன்பு சி.ப.ஆதித்தன் ஐயாவால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினையே புதுப்பித்து நாங்கள் நடத்தி வருகிறோம்.</p>
<p>இனத்திற்காகப் போராடிய விடுதலைப்புலிகள் உட்பட லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று நச்சுப்புகைக்குண்டுகளால் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டனர்.</p>
<p>பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பதே தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கைது செய்யப்படுவதற்கு முன் இருந்த நிலைமையில் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே..</p>
<p>பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்..</p>
<p>90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் அங்கே விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.</p>
<p>தமிழர்களின் நிலங்கள் சிங்களவனால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தமிழனின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு புத்த கோயில்கள் கட்டப்படுகின்றன.</p>
<p>தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் சிங்களவனின் ராணுவக்கூடாரமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன&#8230; முல்லைத்தீவு உட்பட தமிழில் அமைந்த ஊர்ப்பெயர்கள் சிங்களப்பெயர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p>
<p>இவற்றையெல்லாம் யார் தட்டிக்கேட்பது&#8230;? எந்த உலக நாடுகளும் கேட்க முன்வராத நிலையில் உலகமுழுவதும் பரவிக்கிடக்கும் ஈழச்சொந்தங்களுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி தட்டிக்கேட்கிறது. தனி ஈழம் மலர்ந்து ஈழத்தமிழர்கள் நிம்மதியாக அவர்களது சொந்த நாட்டில் வாழும் வரை தமிழுணர்வோடு போராடுவோம்&#8230;</p>
<p>மே 18 இல் கடலூரில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழே நம் முகவரி என்கிற தலைப்பில் ப.அருளியார், விடுதலை விதை நெல் என்கிற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அத்துடன் கலை நிகழ்ச்சிகளும் பேரணியும் நடைபெறவிருக்கிறது.</p>
<p>இந்திய அளவில் இருந்து ஈழப்போரினைப் புரிந்து கொண்ட இயக்கங்களின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளயிருக்கின்றனர்&#8230;” என்று குறிப்பிட்டார்.</p>
<p>இன்றைய சாதீய மோதல்களைக் கடுமையாகச்சாடிய சீமான், ”இந்தத் தலைவர்கள் இன்று அரங்கேற்றிய போராட்டங்களை ஈழப்போர் நடந்த சமயத்தில் அரங்கேற்றியிருந்தால் இந்தியாவையே நம் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம்.. ஆனால் தங்களது சுய நலத்திற்காக இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுத் தமிழர்களைப் பிரித்தாளப் பார்க்கிறார்கள்&#8230; ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சாதி என்று சொல்லவே கூச்சப்படுகிறார்கள்&#8230; குறிப்பாக நாம் தமிழர் கட்சி நடத்தும் விழாக்களிலும் போராட்டங்களிலும் இன்று மோதிக்கொள்ளும் தலைவர்களின் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாகக் கலந்து கொள்கிறார்கள்&#8230; ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரல்கொடுக்கிறார்கள்..” என்றார்.</p>
<p>தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்த சீமான் ஈழத்தமிழர்களுக்கான பாராளுமன்றம் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39666</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/08/seeman-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/08/seeman.jpg" medium="image">
			<media:title type="html">seeman</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/08/seeman-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் இனஅழிப்புநாள் மே18 ஐ முன்ட்டு நெதர்லாந்தில் நடைப்பயணம் &#8211; இரன்டாவது நாளில்&#8230;</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39662</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39662#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 08:38:46 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39662</guid>
		<description><![CDATA[தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும். நெதர்லாந்து நாட்டு மக்களுக்கானதும். நெதர்லாந்தைச்சேர்ந்த ஊடகங்களினதும். ஆதரவைத் அம்ஸ்ரர்டாம்நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் நடை பயணம் ஒன்று நேற்று அம்ஸ்ரர்டாம் நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று(15-05-2013) காலை 11:15 மணியளவில் இவ் இருவர்களால் நெதர்லாந்தின் பிரபல ஊடகமான நொஸ் (Nழுளு) தொலைக்காட்ச்சி நிறுவனத்திடம் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/pay-nr-10-100x80.jpg" alt="pay-nr-10" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39663" />தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன  ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்.</p>
<p>நெதர்லாந்து நா<span id="more-39662"></span>ட்டு மக்களுக்கானதும். நெதர்லாந்தைச்சேர்ந்த ஊடகங்களினதும். ஆதரவைத் அம்ஸ்ரர்டாம்நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் நடை பயணம் ஒன்று நேற்று அம்ஸ்ரர்டாம் நகரிலிருந்து    ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p>இரண்டாம் நாளான இன்று(15-05-2013)  காலை 11:15 மணியளவில் இவ் இருவர்களால்  நெதர்லாந்தின் பிரபல ஊடகமான நொஸ் (Nழுளு) தொலைக்காட்ச்சி நிறுவனத்திடம் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மையம் , சனல்4 போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும் காணெளிக்காச்சிகள் அடங்கிய கோவை ஒன்று கையளிக்கப்பட்டது.</p>
<p>அதனை தொடர்ந்து  நடைபயணத்தை ஹில்வர்சம் மீடிய பாரக்;கிலிருந்து தொடர்ந்தனர்   இவ் நடைபயணம் இன்று மாலை மைதிரக் நகரை சென்றடையும்.</p>
<p>நெதர்லாந்து தமிழர் பேரவை.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39662</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/pay-nr-10-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/pay-nr-10.jpg" medium="image">
			<media:title type="html">pay-nr-10</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/pay-nr-10-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் தமிழ் எனக்கூறியவாறே தாக்கினர்! தங்காலையினில் தாக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39657</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39657#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 08:36:47 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39657</guid>
		<description><![CDATA[தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் நேற்று) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப்பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலின்போது காயமடைந்த தமிழர்களான ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/paran-2-100x80.jpg" alt="paran (2)" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39658" />தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் நே<span id="more-39657"></span>ற்று) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப்பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலின்போது காயமடைந்த தமிழர்களான ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு</p>
<p>&#8216;முதலில் எமது வீட்டை தாக்கினர். அனைத்தையும் அடித்து நொருக்குமாறு நகரசபை தலைவர் கூறியதாக தெரிவித்தே தாக்கினர். சமிந்த, லால், லாலின் மகன் ஆகியோர் எமது வீட்டை தாக்கினர்.என தமிழ் பொதுமகன் ஒருவரும் &#8216;தமிழர்கள் அனைவரையும் அடித்து கொலை செய்யவும் என தலைவர் கூறியதாக சொல்லியே தாக்கினர். வீடுகளை உடைத்தனர். நாம் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு ஓடி ஒழிந்துவிட்டோம். 12, 15 பேர் வந்தனர். இரும்பு, வாள், கத்தி என்பனவற்றை வைத்திருந்தனர். ஏன மற்றொரு தமிழரும் தெரிவித்தார்.</p>
<p>இது மகிந்த மாத்தியாவின் ஊர். அவருடைய ஊராக இருந்து ஜாதி, இன, பேதம் இல்லை என கூறினாலும் அதுபோன்று நடப்பதில்லை. சரியாக உழைத்து சாப்பிட முடியவில்லை. எந்த நேரத்தில் நெருப்பு எரியும் என்ற அச்சத்தில் சரியாக தூங்குவதும் இல்லை. இவை கஸ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் இவற்றுக்கு யார் நட்டஈடு வழங்குவது.&#8221;தமிழ்.. தமிழ்.. என்று சொல்லிக்கொண்டு மக்களின் வீடுகளை நாளாந்தம் உடைக்கின்றனர். குடித்தால் இங்குதான் வருவர். மகிந்த இதனை பார்க்க வேண்டும். நாங்கள் தமிழர்கள் தங்காலையில் எமக்கும் உரிமை உண்டு.  எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39657</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/paran-2-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/paran-2.jpg" medium="image">
			<media:title type="html">paran (2)</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/paran-2-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இறுதிப்போர் தொடர்பினில் சுயாதீன விசாரணை! அமெரிக்க கோரிக்கையினை நிராகரித்தது இலங்கை!!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39654</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39654#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 08:34:56 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39654</guid>
		<description><![CDATA[இறுதி யுத்தகாலப்போர் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்துமாறு அமெரிக்கா விடு;த்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத்தகவலை வெளியிட்டுள்ளது. வன்னி போர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் 19ம் திகதி வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.இந்த மோதலின் போது 6000 படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.12 ஆயிரம் படைவீரர்கள் ஊனமுற்றுள்ளனர். இவ்வாறான ஓர் நிலையில் போர் வெற்றியை திசை திருப்பும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. குறிப்பாக [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Flag-Sri-Lanka3.JPG" alt="Flag-Sri-Lanka" width="100" height="80" class="alignleft size-full wp-image-1143" />இறுதி யுத்தகாலப்போர் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்துமாறு அமெரிக்கா விடு;த்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத்தகவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>வன்னி போர் தொ<span id="more-39654"></span>டர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் 19ம் திகதி வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.இந்த மோதலின் போது 6000 படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.12 ஆயிரம் படைவீரர்கள் ஊனமுற்றுள்ளனர்.</p>
<p>இவ்வாறான ஓர் நிலையில் போர் வெற்றியை திசை திருப்பும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. குறிப்பாக படையினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என இராணுவ உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தமக்கு தொவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>இறுதிக் கட்ட போர் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் ஓர் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த விசாரணை அறிக்கை பாதுகாப்புச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார். </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39654</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Flag-Sri-Lanka3.JPG" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Flag-Sri-Lanka3.JPG" medium="image">
			<media:title type="html">Flag-Sri-Lanka</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- சர்வதேச மன்னிப்புச் சபை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39651</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39651#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 08:31:26 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39651</guid>
		<description><![CDATA[இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/amnesty-international-lead-logo-100x80.jpg" alt="amnesty" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-7458" />இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகளி<span id="more-39651"></span>ன் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.</p>
<p>சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பு கோருகின்றவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான முறையில் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தமது கடிதத்தில் கோரியுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39651</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/amnesty-international-lead-logo-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/amnesty-international-lead-logo.jpg" medium="image">
			<media:title type="html">amnesty</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/amnesty-international-lead-logo-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39648</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39648#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 16:21:01 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39648</guid>
		<description><![CDATA[திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam_ltte_002-100x80.jpg" alt="sornam_ltte_002" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39649" />திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.</p>
<p>இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு<span id="more-39648"></span> ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.</p>
<p>தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.</p>
<p>பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.</p>
<p>இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.</p>
<p>திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.</p>
<p>ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.</p>
<p>சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.</p>
<p>வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.</p>
<p>இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். �சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்� அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.</p>
<p>இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை �புலிப்பாய்ச்சல்� நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.</p>
<p>ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.</p>
<p>இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.</p>
<p>இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.</p>
<p>அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.</p>
<p>�நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்� வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.</p>
<p>இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.</p>
<p>இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.</p>
<p>எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.</p>
<p><iframe width="640" height="480" src="http://www.youtube.com/embed/dR95kye6yCE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39648</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam_ltte_002-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam_ltte_002.jpg" medium="image">
			<media:title type="html">sornam_ltte_002</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam_ltte_002-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39641</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39641#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 15:53:41 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39641</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும், வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasi-100x80.jpg" alt="sasi" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39642" />தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், எதிரியின் அனைத்து நடவடிக்கைகளை<span id="more-39641"></span>யும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும், வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது.</p>
<p>அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.</p>
<p>தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள், தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில், பல வழிகளை தன வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள்.</p>
<p>போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் வேவுத் திட்டமிடல்களாலும் பெருமதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார்.</p>
<p>ஆயினும் மக்கள் மத்தியில் அறிந்திருந்தும் இப்படியான ஓர் தளபதி உள்ளார் என்றும் ஆயினும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள்.</p>
<p>தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் வழிகாட்டலில் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறை – வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.</p>
<p>விடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே, பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் !தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …</p>
<p>எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது. அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது உன்னதமானது!</p>
<p>தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல். தளர்ச்சியற்ற பிணைப்பு !அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக் கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.</p>
<p>எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.</p>
<p>பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராளிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.</p>
<p>இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தகிக்கும் தகிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாக்கி அவரின் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.</p>
<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_001.jpg" alt="sasikumar_001" width="500" height="705" class="aligncenter size-full wp-image-39643" /><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_002.jpg" alt="sasikumar_002" width="500" height="334" class="aligncenter size-full wp-image-39644" /><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_003.jpg" alt="sasikumar_003" width="500" height="330" class="aligncenter size-full wp-image-39645" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39641</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasi.jpg" medium="image">
			<media:title type="html">sasi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasi-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_001.jpg" medium="image">
			<media:title type="html">sasikumar_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_001-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_002.jpg" medium="image">
			<media:title type="html">sasikumar_002</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_002-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_003.jpg" medium="image">
			<media:title type="html">sasikumar_003</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sasikumar_003-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>உயிரினும் மேலான ஈழ உறவுகளே மீண்டும் ஒரு முறை முழங்குக! -வைகோ அழைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39638</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39638#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 15:50:21 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39638</guid>
		<description><![CDATA[லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டியும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என மேலும் வேண்டியுள்ளார். எதிர்வரும் மே மாதம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/vaiko-100x80.jpg" alt="vaiko" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-28224" />லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து,  கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட   நீதி வேண்டி  உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் த<span id="more-39638"></span>மிழ் மக்களை  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார்.</p>
<p>பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டியும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என மேலும் வேண்டியுள்ளார்.</p>
<p>எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/MdziJWekxIw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39638</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/vaiko-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/vaiko.jpg" medium="image">
			<media:title type="html">vaiko</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/vaiko-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39634</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39634#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 15:44:19 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39634</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள், வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும். அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா, இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு, 2014 டிசம்பரில் காலாவதியாகிப் போவதால், மாலைதீவில் மாற்றுத் தளத்தை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/SriLanka-Flag.jpg" alt="SriLanka-Flag" width="100" height="80" class="alignleft size-full wp-image-19238" />முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள்,</p>
<p>வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்<span id="more-39634"></span>தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.</p>
<p>அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும்.</p>
<p>அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா, இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு, 2014 டிசம்பரில் காலாவதியாகிப் போவதால், மாலைதீவில் மாற்றுத் தளத்தை அமெரிக்கா தேடுகிறது என்கிற பார்வையும் உண்டு.</p>
<p>ஆனாலும் அமெரிக்காவின் &#8216;ஆசியா-பசுபிக் சுழலச்சு&#8217; என்ற புதிய மூலோபாய திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.</p>
<p>வரும் செடம்பரில் மாலைதீவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள டிவெகி சிட்டீ (Dhivehi Sitee) என்கிற இணையம், அமெரிக்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையே முன்மொழியப்பட்ட ,வரைபு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த ஆவணத்தை (Status of Forces Agreement -SOFA) கசியவிட்டுள்ளது.</p>
<p>ஆனால் அப்படியானதொரு எண்ணம் தங்களுக்கில்லை என்று கூறினாலும், கசிந்துள்ள ஆவணம் போலியானதென்று அமெரிக்கா மறுக்கவில்லை.</p>
<p>இவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், உலக ஆதிக்கத்தின் முக்கிய பிராந்தியமான இந்துமாகடல், மோதல் களமாக மாறும் என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.</p>
<p>இலங்கையில் இந்த வல்லரசுகளின் பனிப்போர் 80 களிலே ஆரம்பித்த கதையை அமைச்சர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருப்பதையிட்டு அதிகார வாசிகளுக்குக் கவலை இல்லை.</p>
<p>தென் ஆசியாவிலுள்ள பொருளாதார வளம் குறைந்த நாடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் படைத்தவர்கள் என்பது பொதுவான உண்மை. இதில் மாலைதீவும் விதிவிலக்கல்ல.</p>
<p>இருப்பினும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்படும் போட்டியில், வல்லரசுகள் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள், இரு அணிகளை உருவாக்கி விடும். அமெரிக்க சார்பு அணி, இந்திய சார்பு அணி என்கிற நிலைப்பாடுகளை அதிகாரப் போட்டியில் இறங்கும் அரசியல்வாதிகள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இந்திய-சீன மற்றும் அமெரிக்க- சீன முரண்நிலைகளை கையாள்வதாகக் கற்பிதம் கொண்டு, ஏதோவொரு பலமான அணியைத் தேர்ந்தெடுப்பார்கள்.</p>
<p>இலங்கை போன்று மாலைதீவும், நீண்டகாலமாகவே இத்தகைய சீனா-இந்தியா-அமெரிக்கா இடையேயான ஆதிக்க முறுகல் நிலைக்குள் அகப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.</p>
<p>இலங்கையில் போர் முடிவுற்று கடந்த நான்கு ஆண்டுகளில் பல மாற்றங்கள் பதிவாகியுள்ளன. பொருண்மிய ஆதிக்கத்திற்கான திரைமறைவு மோதல்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே தீவிரமடைவதையும் காண்கிறோம். பறிக்கப்படும் காணிகளை பங்கு போடுவதில் பன்னாட்டுக் கம்பனிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அடிக்கடி கூடுவதையும் பார்க்கிறோம்.</p>
<p>ஆட்சி மாற்றமொன்றிக்கான அமெரிக்காவின் ஐ.நா.தீர்மானங்களும், இருக்கும் ஆட்சி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடக்கூடாதென்பதற்காக &#8216;சீபா&#8217; ஒப்பந்தக் கனவோடு காத்திருக்கும் அண்டைநாடும், இயங்கமுடியாத நிறுவனங்களைக் கையேற்க தருணம் பார்க்கும் சீனாவும், திருமலைத் துறைமுகம் தம் வசமாகாதா என்று ஏங்கும் இவையனைத்தும், இலங்கையில் குவிக்கும் கவனத்தை மாலைதீவின் பக்கம் திருப்பியுள்ளது போல் தெரிகிறது.</p>
<p>இருதரப்போடு விளையாடும் மாலைதீவு குறித்து , இந்தியாவின் கவனம் எப்போதும் உண்டு.</p>
<p>ஆனாலும் இலங்கை, மாலைதீவு மற்றும் செசெல்ஸ் போன்ற சிறிய பிராந்திய நாடுகளுடன் ,கடல் கண்காணிப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா, இந்த நாடுகளின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிக்கான போதியளவு நிதி உதவியை வழங்க முடியாமல் இருக்கிறது. இந்த இடைவெளியை அல்லது இயலாத தன்மையையே சீனா பயன்படுத்துகிறது.</p>
<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொண்ட கடந்த காலத் தலையீடுகளை நோக்கினால், 1987 இல் அமைதிப்படையின் வருகை, 1988 ல், இரவல் படை மாலைதீவில் மேற்கொண்ட சதியினை முறியடிக்க வழங்கிய உதவி என்பன குறிப்பிடத்தக்கன.</p>
<p>பிரச்சினைகளை உருவாக்குவதும், பின்னர் அதனைத் தீர்க்க ஓடிச் செல்வது போல் நடிப்பதும், இந்த நவீன யுக சதித் தத்துவத்தின் ஒரு பரிமாணமாகவும் இருக்கிறது.</p>
<p>தற்போது, மத்தியில் நீர்த்தேக்கமுள்ள வட்ட வடிவிலான 26 பவழப்பாறைகளில் (atoll), கடற்கண்காணிப்பு ராடர் வலையமைப்பினை இந்தியா நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.</p>
<p>தமது தேசிய-பிராந்திய நலனோடு உடன்படும் ஆட்சியாளர்கள், அண்டைய நாடுகளில் இருக்க வேண்டும் என்பதைத்தான் எந்த நாடும் விரும்பும். இலங்கையிலும், மாலைதீவிலும் இதையே இந்தியா எதிர்ப்பார்க்கிறது.</p>
<p>ஆனால் அண்மையில் மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், இந்திய தேசம் விசனமடைந்தது என்பதனை மறுக்க முடியாது.</p>
<p>1965 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்த மாலைதீவில், முடியாட்சி போன்றதொரு எதேச்சாதிகார ஆட்சிதான் நடைபெற்றது.</p>
<p>அதிபர் மாமூன் கயூமின் 30 ஆண்டுகால ஆட்சி 2008 பொதுத்தேர்தலோடு முடிவிற்கு வருகிறது. அக்டோபரில் தேர்தல் நடைபெற்று, நவம்பரில் முஹமட் நசீட் புதிய அதிபர் பதவியை ஏற்கிறார்.</p>
<p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரச எதிர்ப்பாளர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட, குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முஹமட் அவர்களை, 2012 சனவரியில் கைது செய்கிறார் மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக சனநாயக ரீதியில் அதிபராகத் தெரிவானவர் என்று சொல்லப்படும் முகமட் நசீட்.</p>
<p>இதற்கு எதிராக பொலிசாரும் பொது மக்களும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் எதிர்வினையாக ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்து, அதிபர் நசீட் பதவி விலகுகின்றார்.</p>
<p>இது ஆட்சிக்கவிழ்ப்பா அல்லது பதவி விலகலா என்கிற விவாதங்கள் நீடிக்கும் போது, நீதிமன்ற அழைப்பாணையையும், பயணத் தடையையும் மீறிய குற்றச்சாட்டினை முன்வைத்து, அவர் மீது பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>பின்னர் அவர் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து ,10 நாள் கழித்து வெளியே வந்தார்.</p>
<p>தற்போது ஆட்சியில் இருக்கும் முகமட் வாஹீட் , தனது அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிற்கு எதிரான நகர்வொன்றினை மேற்கொண்டார்.</p>
<p>அதாவது, இந்தியாவின் பெங்களூரைத் தளமாகக் கொண்டியங்கும் GMR என்கிற நிறுவனம், முஹமட் நசீட் காலத்தில் செய்து கொண்ட மாலே விமானநிலைய நிர்வாக ஒப்பந்தத்தினை வகீட் ரத்து செய்தது விட்டார்.</p>
<p>511மில்லியன் டொலர் முதலீட்டில், புதுப்பிக்கக் கூடிய 10 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரம், தவறானது அல்ல என்கிற தீர்ப்பினை சிங்கப்பூர் உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கான நஷ்ட ஈடாக $800 மில்லியன் வழங்கவேண்டுமென GMR நிறுவனமும், அது அதிகமான தொகை ,சரியான தொகை ஏறத்தாள $150-350 மில்லியனாக இருக்குமென்று மாலைதீவு அரசு கூறுகிறது.</p>
<p>இந்த விடயம் பாதுகாப்பு மற்றும் பொருண்மிய உறவில் இவ்விரு நாடுகளுக்கிடையே உரசலை உருவாகியுள்ளது.</p>
<p>இந்த நிலையிலேயே அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்த இரகசிய ஆவணமும் கசிந்துள்ளது.</p>
<p>ஆசியாவின் கடல்வழித் தலைவாசலில் நிலைகொண்டுள்ள மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் அமைவிடம் என்பது , அவை கேந்திர முக்கியத்துவம் மிக்க மையங்களாகவும், மையச் சுழல் அச்சாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதனை சீனாவின் முத்துமாலைத் தந்திரோபாயங்கள் உட்பட, அமெரிக்கா -இந்தியா மேற்கொள்ளும் கடற்கண்காணிப்பு ராடர் நிர்மாணிப்புக்களும் உணர்த்துகின்றன.</p>
<p>வளம் குறைந்த சிறிய நாடுகளில், தமது பொருண்மிய மேலாதிக்க நலன்களுக்காக வல்லரசாளர்கள் மோதும் போக்கானது, அந்த நாடுகளின் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது அடிப்படை உரிமைகளை வெகுவிரைவில் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கப் போகிறது.</p>
<p> வடக்கில் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்ப இவர்கள் மறுப்பது, இந்த யதார்த்தத்தை புரிய வைக்கிறது.</p>
<p>-இதயச்சந்திரன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39634</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/SriLanka-Flag.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/12/SriLanka-Flag.jpg" medium="image">
			<media:title type="html">SriLanka-Flag</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிகேடியர் சொர்ணம்&#8230;</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39631</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39631#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:32:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39631</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார். தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார், இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sornam_1-100x80.jpg" alt="Sornam_Elilan" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-15689" />தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது<span id="more-39631"></span> வீரச்சாவடைந்துள்ளார்.</p>
<p>தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்,</p>
<p>இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.</p>
<p>இந்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களு+டாகவே வெற்றிகளை பெற்றர்கள்.</p>
<p>இவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார்.</p>
<p>பின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள்</p>
<p>இறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39631</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sornam_1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sornam_1.jpg" medium="image">
			<media:title type="html">Sornam_Elilan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sornam_1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>13ஆவது நாளாக பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39627</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39627#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:26:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39627</guid>
		<description><![CDATA[பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 13வது நாளில் திரு . நவரத்தினம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செய்யப்பட்டு கவனயீர்ப்பு போராட்த்தை தொடக்கி வைத்தார். மாலை 6.00 மணிவரை நடைபெற்றது வழமைபோலவே பலதமது கையெழுத்துகளை இட்டு தமது ஆதரவை நல்கியிருந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கள பேரினவாத அரசின் மிகப்பெரும் தமிழின அழிப்பின் உச்சகாலப்பகுதியாக இக்காலப்பகுதிகள் அமைந்திருந்தன. உலகெங்கிலும் இல்லாத வகையில் அப்பாவிதமிழ் மக்கள் மீது எறிகணை மழைகளாலும், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/france-mo-2-100x80.jpg" alt="france mo 2" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39628" />பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 13வது நாளில் திரு . நவரத்தினம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செய்யப்பட்டு கவனயீர்ப்பு போ<span id="more-39627"></span>ராட்த்தை தொடக்கி வைத்தார். மாலை 6.00 மணிவரை நடைபெற்றது வழமைபோலவே பலதமது கையெழுத்துகளை இட்டு தமது ஆதரவை நல்கியிருந்தனர்.</p>
<p>கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கள பேரினவாத அரசின் மிகப்பெரும் தமிழின அழிப்பின் உச்சகாலப்பகுதியாக இக்காலப்பகுதிகள் அமைந்திருந்தன. உலகெங்கிலும் இல்லாத வகையில் அப்பாவிதமிழ் மக்கள் மீது எறிகணை மழைகளாலும், பல்குழல் பீரங்கிகளாலும், கிபீர் குண்டு வீச்சு விமானங்களாலும், கனரக வாகனங்களாலும் எமது மக்கள் மிகவும் கொடுரமான முறையில் கொல்லப்பட்டனர். வைத்திய சாலைகள், பாடசாலைகள், வணக்கதலங்கள் மீது தாக்குதல் நடாத்தினர் சர்வதேச மனிநேய அமைப்புகளின் வேண்டுகோளை புறந்தள்ளி பாதுகாப்பு பகுதிக்கு வாருங்கள் என்று கூறி ஏமாற்றி படுகொலைகளை புரிந்தது. தினம் தினம் எமது மக்கள் கொத்துக்கொத்தாக் மண்ணில் சாகடிக்கப்பட்டனர். எமது மக்களின் உயிரைக்காப்பாற்றுங்கள் என்று உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் வீதிகளில் நாட்கணக்காக போராடினார்கள். தாய்த்தமிழகத்தில் தம்மைதாமே தீக்குள் இரையாக்கி உயிர் ஈந்தனர். சர்வதேசம் கண்ணை மூடியிருந்தது. எல்லாம் முடிந்து பல்லாயிரக்கணக்கான எமது மக்களை பறிகொடுத்து, பல இளைஞர் யுவதிகள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த போராளிகள் எங்கு என்று தெரியாததொரு நிலையில், எமது உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதப்போராட்டம் என்றுகூறி அதனை ஒழிக்கப்பட்டாயிற்று என்று மார்பு தட்டும் சிங்களமும் அதன் கைக்கூலிகளும் நான்கு வருடங்களாகிய நிலையில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எதுவும் செய்யாத நிலையில் மாறாக தமிழரின் தாயகப்பகுதியை படிப்படியாக சிங்கள் நிலம் ஆக்குவதிலேயே கங்கணம் கட்டிநிற்கின்றது. அதற்கு எதிராக மண்பற்று கொண்டவர்கள் சிங்களத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தம்மால் முடிந்த வரை குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றனர்.</p>
<p>புலத்தில் வாழும் தமிழ்மக்கள் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம். பிரான்சில் வாழும் மூதாளர் இந்தக்காலப்பகுதியை சர்வதேசத்திடம் நீதி கேட்கும் ஓர் கோலாக இந்த அடையாள கவயீர்ப்பு உண்ணா மறுப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் காககம் கட்டும் கூட்டுக்குள்ளே குயில் முட்டை இட்ட கதையாக மக்களை கூறுபடுத்தும் செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடுகின்றனர். ஒருசிலரோ நான் முள்ளிவாய்க்காலில் நின்று வந்தனான் கடசிவரை நின்று வந்தனான் எனக்கு எல்லாம் தெரியும் என்று கதைபேசிகதைபேசி ஒரு ரணகளத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எவர்யாராக இருந்தாலும் இன்று காலத்தின் தேவை இதுவரை எவ்வாறு இருந்ததோ அதே போலவே இனியும் தொடர வேண்டும் அது தொடரக்கூடாது என்பதற்காகவே சிங்களம் தனது கொலைக்கரத்தினை நாடுகடந்தும் நீட்டியபோதும் மக்கள் தமது உணர்வை தொடர்ந்தும் நீதியின் வழியில் நியாயத்தின் வழியில் அர்பணிப்புடன் எந்தவித சுயநலமற்ற பொதுநலத்துடன் செய்தே வருகின்றனர். அதன் ஓர் எடுத்துக்காட்டாவே மூதாளர் உண்ணா மறுப்போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதுவரை தேசவிடுதலைக்காக தமிழீழ அரசினதும், தேசியத்தலைமையின் வழிகாட்டலில் புலம்பெயர் மண்ணில் இன்று வரை செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், பிரான்சில் பல்வேறு மட்டங்களில் தனது அரசியல் பரப்புரைகளையும், செயற்பாடுகளை செய்து வரும் அரசியல் கட்டமைப்பான மக்கள் பேரவையை தவிர வேறு எந்த அமைப்புகளும் இதுவரை பங்கு பற்றவுமில்லை ஆதரவு கொடுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் முடிவில் இதனையே தமிழ்உணர்வாளர் ஒருவர் தனது கருத்தை முன்னைத்திருந்தார்.</p>
<p>ஏத்தனை தடைகள், அழுத்தங்கள், துரோகத்தனங்கள், குழப்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு முறியடித்து தமிழினப்படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வரை எமக்கொரு தேசம் கிடைக்கும் வரை ஒவ்வொரு வரும் தமது தாயகக்கடமையை தொடர்ந்து செய்வோம் என அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டனர். எதிர் வரும் 18ம் திகதி காலை 10.30 மணிக்கு கிளிச்சியில் நடைபெறவுள்ள சிலைத்திறப்பு நிகழ்விலும், மதியம் 2.00 நடைபெறவுள்ள மாபெரு நினைவுப்பேரணியிலும் ஆயிரக்கணக்காக மக்கள் கலந்து கொண்டு தமது தாயகக்கடமை உணர்வை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39627</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/france-mo-2-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/france-mo-2.jpg" medium="image">
			<media:title type="html">france mo 2</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/france-mo-2-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிகேடியர் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39623</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39623#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:23:41 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39623</guid>
		<description><![CDATA[தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை. எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" alt="Sornam_anna" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-23361" />தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் வி<span id="more-39623"></span>தையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.</p>
<p>எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன்.</p>
<p>அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி சொர்ணம்.</p>
<p>தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரிபூரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை.</p>
<p>திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம்.</p>
<p>சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும்.</p>
<p>திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள பூமியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது.</p>
<p>உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.</p>
<p>தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம்.</p>
<p>களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை.</p>
<p>அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் . பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி.</p>
<p>தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது.</p>
<p>அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா?</p>
<p>தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி.<br />
<img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam.jpg" alt="sornam" width="600" height="772" class="aligncenter size-full wp-image-39624" /><br />
வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே.</p>
<p>புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ?</p>
<p>யேர்மன் திருமலைச்செல்வன்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39623</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna.jpg" medium="image">
			<media:title type="html">Sornam_anna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam.jpg" medium="image">
			<media:title type="html">sornam</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/sornam-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>உரிமைப் போரை உலகமயப்படுத்திய முள்ளிவாய்க்கால் வீரம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39620</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39620#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:20:46 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39620</guid>
		<description><![CDATA[சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" alt="sri_lanka_civil_war_ap_4" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-15786" />சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழு<span id="more-39620"></span>ம் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது.</p>
<p>வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் பரவலான எறிகணைத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிகழ்த்தி பொதுமக்களைக் கொல்லுகின்ற வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.</p>
<p>இந்தப் பிரதேசங்களில் மக்கள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும், சற்று இடவசதி இருந்ததாலும் பொதுமக்கள் பதுங்குகுழிக்குள் காப்பெடுத்துக் கொண்டதாலும் மக்களுக்கு சுமாரான உயிரிழப்பு ஏற்பட்டது.</p>
<p>இந்தநிலையில் இலங்கையரசு புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய 12 கிலோமீற்றர் நீளம்கொண்ட பகுதிகளைப் ‘பாதுகாப்பு வலையமாக’ அறிவித்தது. அதற்கு முன்னர் சுதந்திரபுரத்தை ‘பாதுகாப்பு வலையமாக’ இலங்கையரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் இலங்கைப் படையினரின் மோசமான எறிகணை வீச்சுக்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.</p>
<p>இதனால் இலங்கையரசு அறிவித்த ‘பாதுகாப்பு வலையத்திற்குள்’ செல்ல மக்கள் தயங்கியபோதிலும், இலங்கைப் படையினர் ‘பாதுகாப்பு வலையம்’ இல்லாத ஏனையபகுதிகளில் குறிப்பாக மக்கள் வாழும் பகுதிகளில் கடுமையான எறிகணைவீச்சை நிகழ்த்தியதால் வேறுவழியின்றி அனைத்து மக்களும் அரசு அறிவித்த அந்தப் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.</p>
<p>ஆனால், அரசு அறிவித்த அந்தப் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ தான் இனிமேலும் இல்லாதவாறான ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணை வீச்சுக்களையும் கனரக, இலகுரகப் படைக்கலன்களையும் கொண்டு மிகச்செறிவான தாக்குதல்களை இலங்கைப்படை மக்கள்மீது நிகழ்த்தியது.</p>
<p>இதனால், ஒவ்வொரு மணித்துளியும் மக்கள் அங்கே கொல்லப்பட்டும் காயப்பட்டுக் கொண்டுமிருந்தனர். இறுதியாக புதுமாத்தளனிலிருந்து படிப்படியாகப் பின்வாங்கி முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பிற்குள் மூன்று இலச்சக்கணக்கான மக்கள் ஒதுங்கினர்.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகளை நிலைகுலையச் செய்யவேண்டுமானால் அல்லது நிர்மூலமாக்க வேண்டுமானால் அவர்களது இதயமாகவும் ஒருமித்த தாங்குசக்தியாகவும் விளங்கும் அந்த மக்களைத் தாக்கினாலே அதை சாத்தியப்படுத்த முடியுமென்பதை இலங்கைப் படையினர் வல்லரசு நாடுகளின் துணையோடு நன்கறிந்து இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை நிறைவேற்றினர்.</p>
<p>ஏனெனில், 2006-யூலை மாவிலாற்றிலிருந்து 2009-ஏப்பிரல் ஆனந்தபுரம் வரைக்குமான சுமார் மூன்றுவருடகாலப் போரில் ஒவ்வொரு நிலப்பரப்பையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான நூற்றுக்கணக்கான சமர்களில் இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கான உயிர்விலையைக் கொடுக்க நேர்ந்தது.</p>
<p>மூன்று வருடங்களாக நீடித்த இந்தப் போரில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் இறப்புகள் தென்னிலங்கை மக்களுக்குத் தெரியாதவாறு மகிந்தவின் குடும்ப அரச பயங்கரவாதம் மிகவும் இரகசியமாக மூடிமறைத்தது.</p>
<p>விடுதலைப் புலிகளுக்கு எறிகணை வெடிபொருள் பற்றாக்குறை பின்வாங்கல்களுக்கு மிக மூலக்காரணியாக இருந்தபோதிலும், தாமே சொந்த மண்ணிலே சொந்தவளத்தைப் பயன்படுத்தி பல எறிகணைகள், வெடிபொருட்கள் மற்றும் படையப்பொருட்களை உற்பத்திசெய்து முழுமையான சக்தியையும் பயன்படுத்தி இறுதிவரை போரிட்டார்கள்.</p>
<p>எறிகணைத் தாக்குதல்களுக்கு மாற்றீடாக விடுதலைப்புலிகள் சிறப்புக் குறிச்சூட்டு அணிகளையும் கனரகப் பீரங்கி அணிகளையும் உருவாக்கி மன்னாரிலிருந்து இறுதிவரைக்குமான சமர்களில் பல்லாயிரக்கணக்கான சிறிலங்காப் படையினரைக் கொன்று குவித்தனர்.</p>
<p>இந்த நீண்ட மரபுவழி மறிப்புப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான போராளிகள் எமது சுதந்திர இலட்சியத்திற்காக போராடி வீரமரணத்தைத் தழுவியுள்ளார்கள். இவர்கள் தங்கள் இறுதி மூச்சுவரை இருபத்துநான்கு மணிநேரமும் பெரும் சமரழுத்தங்களின் மத்தியிலும் சளைக்காது போராடினார்கள்.</p>
<p>ஆனந்தபுரத்தையடுத்து, முல்லைத்தீவின் சாலைப் பகுதியிலிருந்து வட்டுவாகல் வரைக்கும் மே-17, 2009 வரை ஒவ்வொரு அடி நிலத்தைப் படையினர் கைப்பற்றுவதற்கும் தம்மில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிடவேண்டியிருந்தது. போரில் வெற்றியின் தருணங்கள் என்பது இறுதிக்கணத்தில்கூட மாறமுடியும். இதற்கு விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் பல நிகழ்வுகள் உண்டு. இந்தத் தருணத்தை விட்டால் இனி ஒருபோதும் விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாதென்ற உண்மையை அரசதரப்பு நன்கறிந்திருந்தது.</p>
<p>முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகள் ஏதோவொரிடத்தால் தாக்குதல்செய்து போரைத் திசைமாற்றிவிடக் கூடாதென்பதற்காக பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட தாக்குதல்களைச் செய்தனர்.</p>
<p>விடுதலைப்புலிகளை மக்கள் மத்தியில் வெறுப்பையுண்டுபண்ணி, அவர்களை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தினாலே இந்தப்போரை வெல்லமுடியுமென்ற ஒரேநோக்கத்திற்காக அந்த மக்களைத் தாக்கி, ஒரு இலச்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைப் படுகொலைசெய்து, மாபெரும் இன அழிப்பை  இழைத்தனர் இலங்கைப் படையினர்.</p>
<p>இதற்காக அங்கே மக்கள் பதுங்குகுழிக்குள்கூட ஓய்வெடுக்க முடியாதவாறு எல்லா முனைகளிலிருந்தும் சகலவிதமான எறிகணைகளாலும் படைக்கலன்களாலும் மக்கள் மீது செறிவாகத் தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். காயப்பட்ட மக்கள் சிகிச்சைபெற முடியாதவாறு மருத்துவமனைகளைத் தாக்கினார்கள். அந்த மக்களுக்கான மருந்து விநியோகத்தைத் தடுத்தார்கள்.</p>
<p>காயப்பட்ட மக்களை வெளியே அப்புறப்படுத்துவதற்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பலின் வரவைத் தடுத்துநிறுத்தினார்கள். அந்த மக்களுக்கு வெளியாலிருந்து தருவிப்பதற்கான உணவு விநியோகத்தைத் தடுத்தார்கள்.</p>
<p>பட்டினிச்சாவைத் தடுப்பதற்காக ஒருவேளை உணவு வாங்குவதற்காக பசியோடு வரிசையாக குழுமிநின்ற மக்கள்மீது மிகவும் துல்லியமாகத் தாக்கினார்கள். மொத்தத்தில் 2008 இன் இறுதிக்காலத்திலிருந்து மே-18, 2009 இறுதி நாள்வரை அவர்கள் தொடர்ந்து திட்டமிட்ட பாரிய தாக்குதல்களை மக்கள்மீது நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்கள்.</p>
<p>இவ்வாறாக இலங்கை அரசு ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிடுவதற்காக மிகக் கோழைத்தனமாக அந்த அப்பாவிப் பொதுமக்களை வதைத்துக் கொன்றது.</p>
<p>தமிழீழப் போராட்டத்தின் எந்தச் சமரும் சந்தித்திராத உயிர், உடல் இழப்புக்களை இலங்கைப் படையினர் அங்கே எமது மக்களுக்கு இழைத்தனர். எங்களுடைய உறவுகள் அங்கே இரத்த ஆற்றில் நீந்தினர்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் இரகசியமாக நடந்தவையல்ல.இருந்தாலும் அவர்கள் மிக உறுதியோடுதான் இருந்தார்கள். எதுவானாலும் வரட்டுமே என இறுதிவரைக்கும் நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போரை உலகறியச் செய்துள்ளார்கள்.</p>
<p>சிங்கள அரச பயங்கரவாதத்தின் உண்மைத் தோற்றத்தை உலகுக்குக் காட்டியுள்ளார்கள். சிங்களத்துக்கு சகலவகையிலும் உதவிய நாடுகளை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளனர்.</p>
<p>அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே கடைசிநிமிடம் வரை சாவைத் துச்சமாக எண்ணி சழைக்காது போராடிய எங்கள் வீரத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பெற்றுவளர்த்து அவர்களோடு தூணாக நின்ற பொதுமக்கள் அனைவரினதும் தியாகங்கள் என்றும் உலக சரித்திரத்தில் நிலைத்துநிற்கும்.</p>
<p>கடந்த மாதங்களாக பல்வேறு இணையத்தளங்களில் தலைப்புச் செய்திகளாக வாசிக்கப்பட்ட விடையம், “ஐ.நா. மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது” என்பதே. நீதி வேண்டிப் போராடும் அனைத்துத் தமிழ் மக்களும் இந்தச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர்.</p>
<p>ஆனால், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால், அதில் ஆயிரமாயிரம் தமிழ் மக்களை கண்மூடித்தனமாய்க் கொன்றுகுவித்த சிங்கள இனவெறியரசு தம்மைத் தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய இராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை&#8221; ஆகும்.</p>
<p>அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும் காப்பாற்றுவதற்கு தானே எழுதிய தீர்ப்பே அதில் காணப்படுகின்றது. அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லியே அமெரிக்காவின் தீர்மானம் அடிப்படையாக அமைந்திருக்கின்றது. இதுவே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் அந்தத் “தீர்மானம்&#8221; ஆகும்.</p>
<p>இலங்கையரசின் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை&#8221; பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளாலும், அரசியல் பிரமுகர்களாலும் நிராகரிக்கப்பட்டு, அவர்களால் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே வலியுறுத்தப்படுகின்றது. அத்தோடு, நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழ் மக்கள் இலங்கையரசின் அறிக்கையை உள்ளடக்கத்தின் அப்பால் முற்றாக நிராகரிக்கின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் தமது அரசியல் வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கின்றனர்.</p>
<p>ஐ.நா. முன்றலில் ஈகைச்சுடர் முருகதாஸ் திடலில் பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்மக்கள் திரண்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார்கள்.</p>
<p>ஆனால், ஒருசில தமிழ் அமைப்புகள் அமெரிக்காவின் தீர்மானத்தை (இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை உள்ளடக்கி அமைந்திருக்கும்) வரவேற்பதாக அறிவித்துள்ளார்கள்.</p>
<p>அதாவது ஆகக்குறைந்தளவு போர்க்குற்ற விசாரைணையைக்கூட உள்ளடக்கி எழுதப்படாத அமெரிக்காவின் சுயநலம்கருதி கொண்ட அறிக்கை, ஈழத்தமிழர்களின் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பையும் அத்தோடு ஈழத்தமிழர்கள் 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெறுவதற்கான சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே கருதவேண்டும்.</p>
<p>ஆரம்பத்தில் இருந்து அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட இலங்கையரசின் அறிக்கை அமெரிக்காவின் தீர்மானத்தால் அங்கீகாரத்தைப் பெறுகின்றது. இன்றுவரை எந்தவித தயக்கமும் அல்லாமல் தமது விடுதலை அவாவை தமிழ்மக்கள் நிலத்தில் தெரியப்படுத்தி வருகின்றனர்.</p>
<p>இன்றுவரை எந்தவொரு சர்வதேச வல்லரசு நாடுகளின் சுயநல விருப்புக்கும் சிக்காமல் தமது சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு நீதியான, உண்மையான, நேர்மையான விடுதலைப் போராட்டத்தையே ஈழத்தமிழர்கள் நடாத்துகின்றார்கள். எந்தவொரு வரலாற்றிலும் இடம்பெறாத உன்னதமான போராட்டமே ஈழத்தமிழர்களின் போராட்டம்.</p>
<p>அதற்காகவே தமது உயிர்களை முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் அர்ப்பணித்தார்கள் அதனூடாகத் தமது உன்னத இலட்சியத்தை உயிர்வாழ வைத்தார்கள். அந்த உன்னத இலட்சியத்தை அடைவதற்கே உலகத் தமிழ்மக்கள் தமது ஆணையையும் ஆதரவையும் கொடுத்தார்கள்.</p>
<p>அரசியல் செய்யவேண்டும், சர்வதேசம் எம்முடன் பேசவேண்டும் என்ற காரணத்தால் நாம் உண்மைகளை மறைக்கமுடியாது அநீதியை ஏற்கமுடியாது. அதன் பொருட்டு பின்விளைவுகளை ஆராயாமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பேரவாவை சவப்பெட்டிக்குள் தள்ளிவிடும். ‘நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு’ இது விளையாட்டுப்பொருள் அல்ல. இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம்.</p>
<p>வரலாறு எம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எமது தேசம், வரலாற்றில் என்றுமில்லாதவாறு மும்முனை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆயினும், உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும் கைவிடப்படமுடியாதது.</p>
<p>போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்; போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது.</p>
<p>பேரவலம், துக்கம், தோல்வியென்ற சொற்களைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் வரலாற்றை நாம் குறைத்துக் கூறிவிடமுடியாது. எமது மக்கள் கண்டிராத பேரவலங்களோ, துக்கங்களோ அல்ல முள்ளிவாய்கால்.</p>
<p>எமது மண்ணிலே காலாகாலம் அவற்றைக் கண்டுபழகியவர்கள் எமது மக்கள். நாம் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு தேசிய இனம். மே 18 தமிழ் இன அழிப்பு நாளாக பல்லின சமூகத்திடம் நீதி கோரி போராடும் நாளாகவும், முள்ளிவாய்க்கால் மண் தமிழர் வீரத்தின் குறியீடாகவும் பதிவுசெய்யப்படவேண்டும்.</p>
<p>அது ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை மற்றுமொரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கிறது. அந்தப் பரிமாணத்தினூடாக, எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் போராட வேண்டும். உண்மையில் முள்ளிவாய்க்கால் என்பது ஒரு முடிவல்ல அது எமது ஆயுதப் போராட்டத்திற்குத்தான் காலவரையறையற்ற மௌனிப்பைக் கொடுத்ததேயொளிய எமது உரிமைப் போராட்டத்திற்கான முடிவைக்கொடுக்கவில்லை.</p>
<p>நாம் இன்றும் எமது உரிமைக்காக ஏதோவொரு வடிவில் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.</p>
<p>கலைவண்ணன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39620</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4.jpg" medium="image">
			<media:title type="html">sri_lanka_civil_war_ap_4</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>“நோ பயர் சோன்” ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39617</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39617#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:17:02 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39617</guid>
		<description><![CDATA[“நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் &#8211; 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/No-Fire-Zone-100x80.jpg" alt="No Fire Zone" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-37644" />“நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் &#8211; 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாத<span id="more-39617"></span>மொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.</p>
<p>ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர், சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் லோட் லீச்ட் உள்ளிட்டோர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.</p>
<p><iframe src="http://player.vimeo.com/video/57211223" width="640" height="360" frameborder="0" webkitAllowFullScreen mozallowfullscreen allowFullScreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39617</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/No-Fire-Zone-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/No-Fire-Zone.jpg" medium="image">
			<media:title type="html">No Fire Zone</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/No-Fire-Zone-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>18ம் திகதி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு! தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39614</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39614#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:13:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39614</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 18 ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 2009 மே மாதத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் உயிர்த் தியாகம் என்றைக்கும் வீண் போகாது. அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் ஆத்மசாந்திப் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/tna-100x80.jpg" alt="tna" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-5129" />முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 18 ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.</p>
<p>இந்த நிகழ்வில்<span id="more-39614"></span> அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன் அறிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:</p>
<p>2009 மே மாதத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் உயிர்த் தியாகம் என்றைக்கும் வீண் போகாது.</p>
<p>அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p>
<p>முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கூட்டம் &#8211; தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு</p>
<p>இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை அனுஸ்டித்து ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கூட்டமொன்றை வவுனியாவில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.</p>
<p>எதிர்வரும் 18ம் நாள் காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் இப் பிரார்த்தனை நிகழ்வை உணர்வுர்வமாக அனுஸ்டிக்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.</p>
<p>கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஏனைய கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அனைவரையும் உணர்வபூர்வமாகக் கலந்து கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p>இன அழிப்பு நோக்குடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டியது தமிழர்களாகிய நமது ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமையாகும். “மே 18” உலகத்திலுள்ள அனைத்துத்தமிழ் மக்களாலும் மறக்க முடியாத ஓர் வரலாற்றுத்துயரம் நிறைந்த நாளாகவே நோக்கப்படுகின்றது.</p>
<p>யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் உயிர் நீத்த இந்நாளை, தமிழ் மக்கள் அனைவரும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும், அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் நாளாகவும் அனுஷரித்து வருகின்றமை கவனத்துக்குரியதாகும்.</p>
<p>இந்த நாளில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் எங்கள் வீடுகளில் உயிர் நீத்த ஓர் உறவினை நினைவு கூருவதைப்போலவே நினைந்துருகி, வன்னி இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கும் அஞ்சலி செய்வோமாக. அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒன்று கூடிப் பிரார்த்திப்போமாக.</p>
<p>மே 18,19 நாட்களை சிறீலங்கா அரசு போர் வெற்றி நாளாகப் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களினால் இந்நாட்களில் நடைபெற்ற ஓர் இன அழிப்பு நடவடிக்கையை சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் மூடிமறைத்து வருகின்றது.</p>
<p>இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த இந்நாட்டுப் பிரஜைகளை இந்த அரசு இந்நாட்களில் ஒரு சிறு கணப்பொழுதேனும்; நினைவுகூரத்தலைப்பட்டதில்லை. மாறாக இறந்த எம் மக்களின் புதைகுழிகளுக்கு மேல் நின்று யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களைக் கொண்டாடி வருகின்றது.</p>
<p>எனவே இந்நாளில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு உணர்வுபூர்வத்துடன் எமது உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும். இதன் மூலம் இந்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் பேரவலத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39614</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/tna-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/tna.jpg" medium="image">
			<media:title type="html">tna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/tna-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவில் தமிழீழ சுதந்திர சாசனம் முழங்கட்டும்:-வி.உருத்திரகுமாரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39611</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39611#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:06:02 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39611</guid>
		<description><![CDATA[மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான நினைவேந்தல் வாரம் உலகத்தமிழ் பரப்பெங்கும் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ள இவ்வேளை தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இத் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எதிர்வரும் மே-18ம் நாள் சனிக்கிழமை அமெரிக்க நியூயோர்க் நேரம் மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் மற்றும் தமிழ் சமூக பொதுஅமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசனம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" alt="uruthirakumar" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-3772" />மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான நினைவேந்தல் வாரம் உலகத்தமிழ் பரப்பெங்கும் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ள இவ்வேளை தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்<span id="more-39611"></span>தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>
<p>இத் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எதிர்வரும் மே-18ம் நாள் சனிக்கிழமை அமெரிக்க நியூயோர்க் நேரம் மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் மற்றும் தமிழ் சமூக பொதுஅமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு முழங்கட்டும் என அறைகூவல் விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இந்நாளில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் அன்புரிமையோடு அழைத்துள்ளார்.</p>
<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :</p>
<p>முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு [Collective memory] ஆகும். யூதர்கள் மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு [holocaust] எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.</p>
<p>துயர் தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை.<br />
தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல்அரசாக தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.</p>
<p>இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.</p>
<p>தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன.</p>
<p>இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால்.</p>
<p>இச் சவாலை எதிர் கொள்வதாயின், அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.</p>
<p>தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது.</p>
<p>உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது.</p>
<p>நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒருங்குபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம் எல்லோருக்கும் தருவதோடு அச்சக்தியின் உச்ச வெளிப்பாடாக தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் முரசறையப்படவிருக்கின்றது.</p>
<p>இவ்வேளை முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் மற்றும் தமிழ் சமூக பொதுஅமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு முழங்கட்டும்.</p>
<p>இந்நாளில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ள அன்புரிமையோடு அழைக்கின்றேன். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39611</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar.jpg" medium="image">
			<media:title type="html">uruthirakumar</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39608</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39608#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 13:04:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39608</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி மே-18ம் திகதி மதியம் 1 மணிக்கு North carriage Drive,Hyde Park [W1C 1LX] இடத்திலிருந்து ஆரம்பிக்கும். அருகாமையில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம் [Closest Tube Station, Marble Arch] இங்கிருந்து ஆரம்பித்து பிற்பகல் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vollyball-100x80.jpg" alt="vollyball" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39542" />முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெற<span id="more-39608"></span>வுள்ளது.</p>
<p>பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி மே-18ம் திகதி மதியம் 1 மணிக்கு North carriage Drive,Hyde Park [W1C 1LX]  இடத்திலிருந்து ஆரம்பிக்கும்.</p>
<p>அருகாமையில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம் [Closest Tube Station, Marble Arch] இங்கிருந்து ஆரம்பித்து பிற்பகல் 5 மணியளவில் WATERLOO Palace , Westminster (SW1 Y4AU) என்னும் இடத்தில் நிறைவடையும். அருகாமையிலுள்ள நிலக் கீழ் தொடருந்து நிலையம் [Piccadilly  Circus ] அதனைத் தொடர்ந்து தாயகம் மற்றும் தமிழகத்திலிருந்து வருகை தரும் தமிழின உணர்வாளர்களின் உரையும் இடம் பெறும்.</p>
<p>பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி.</p>
<p>நாங்கள் இன்று வரலாற்றின் முக்கிய தருணத்தில் நிற்கின்றோம், ஒரு புறம் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் வெளிவந்து உலகின் மனச்சாட்சியை உலுப்புகின்றது. மறுபுறம் அப்பாலகன் அடங்கலாக பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கரங்களோடு இலங்கை அரசு நடாத்தும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எமது பிரித்தானிய பிரதமர் செல்ல தயாராகின்றார்.</p>
<p>சனநாயக விழுமியங்களை மதிக்கும் நாட்டின் பிரதமர் ஒரு இனப்படுகொலை அரசின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது ஒரு வரலாற்று துயரம், அதை நாம் சனநாயக வழியில் எதிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் நாம் செய்யவிருக்கும் ஒவ்வொரு போராட்டமும் பிரதமரின் அலுவலகத்துக்கும் , பக்கிங்காம் அரண்மனைக்கும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.</p>
<p>சாட்சியங்கள் அற்ற நிலையில் நடாத்தப்பட்ட போரின் சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.</p>
<p>நாங்கள் கேட்பது எல்லாம் அப்போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் ஓர் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே.</p>
<p>அவ்வாறான விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது ஈழத்தில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என நிரூபணமாகும் மக்கள் சக்தியே மகத்தான சக்தியாகும், எமது உணர்ச்சியும் எழுச்சியும் ஒரு சக்தியாக வெளிப்படும் போது அது பலனை தந்ததை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். லண்டன் பேரணிகள் தமிழர் போராட்ட வரலாற்றில் மைற் கல்கள். அவ்வாறான ஒரு மைற் கல்லுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை மீண்டும் அழைக்கின்றது.</p>
<p>2009ம் ஆண்டு பேரணிகள் ஏற்படுத்திய மாற்றங்கள்</p>
<p>தமிழர் தொடர்பான பிரித்தானியாவின் கொள்கைகளில் ஒரு மாற்றத்தை 2009ம் ஆண்டு பேரணிகள் ஏற்படுத்தின. ஈழப்போரை ஒரு பயங்கரவாதப் போராக தடைசெய்த பிரித்தானிய அரசு, பின்னர் தமிழர்களின் நியாயங்களை ஓரளவு உணர்வதற்கு தலைப்பட்டதே 2009ம் ஆண்டில் நடைபெற்ற பேரணிகளின் பின்னர்தான். வீதியில் மக்கள் திரண்ட அந்தப்பொழுதுகளில் தான் பிரித்தானிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தோம்.</p>
<p>2009களில் லட்சக்கணக்கில் நாம் தேம்ஸ் நதியோரம் நீதி கேட்டு நடந்தோம் , உலகின் ஊடகங்களில் கவனத்தை வன்னி நோக்கி திருப்ப வேண்டி நடந்தோம்  அதே போன்ற தருணம் மீண்டும் வந்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக லட்சக்கணக்கில் வீதியில் நடந்தால் அது பிரித்தானிய பிரதமரின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.</p>
<p>பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது.</p>
<p>இலங்கை தீவில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது சர்வதேச விசாரனை நடாத்தப்பட வேண்டும் , நீதிக்கு புறம்பான விதத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரச ஆதரவோடு உருவாகி வரும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களை இலங்கை மதிக்க வேண்டும் அதுவரை இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலத்தி வைக்கப்பட வேண்டும்.</p>
<p>இதனை வலியுறுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் லண்டன் வீதிகளில் அணிதிரள்வோம் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/66t4szhyPNg?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/EOWGb62mTN0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/CASqtJ3fDRA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39608</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vollyball-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vollyball.jpg" medium="image">
			<media:title type="html">vollyball</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/vollyball-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கனடாவில் வன்னி வீதி!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39601</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39601#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 13:35:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39601</guid>
		<description><![CDATA[கனடா நாட்டில் மார்க்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு வன்னி தெரு என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் நேற்று காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள வன்னி வீதி திறந்துவைக்கப்பட்டது. இவ் வீதியானது புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் சமூக நிலையத்தற்கு செல்லும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada_vanni_road-100x80.jpg" alt="canada_vanni_road" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39602" />கனடா நாட்டில் மார்க்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு வன்னி தெரு என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.</p>
<p>இவ் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கண<span id="more-39601"></span>பதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் நேற்று காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள வன்னி வீதி திறந்துவைக்கப்பட்டது.</p>
<p>இவ் வீதியானது புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் சமூக நிலையத்தற்கு செல்லும் பாதையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>“வன்னி றோட்” என்ற பெயரினைச் சூட்டும் நிகழ்வு டெனிசன் வீதியிலுள்ள “அமடேல்” சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. வைபவத்தில் மார்க்கம் மேயர் திரு.பிராங்க் ஸ்காபிற்றி உரையாற்றுகையில்,</p>
<p>கனடாவில் வன்னி என்னும் தமிழ் பெயரில் திறக்கப்படும் முதல் வீதி இதுவாகும்.</p>
<p>“கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ஏனைய நாட்டு மக்களைப் போலவே ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் மக்களாகிய நீங்களும் உங்கள் நாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமலே கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தீர்கள்.</p>
<p>கனடாவுக்கு வரும் மக்களை பாகுபாடு எதுவுமே இன்றி வரவேற்று, மதிப்பளிப்பதில் எமது மார்க்கம் நகர சபை முன்நிற்கின்றது.</p>
<p>உங்கள் தாயகத்தை நினைவுறுத்தும் வகையில் 14வது அவெனியூவிலுள்ள வீதிக்கு வன்னி றோட் என்ற பெயரினைச் சூட்டுவதில் நாம் பெருமை அடைகின்றோம்.  நீங்கள் தினமும் 14வது அவெனியூவின் ஊடாகச் செல்லும் போது வன்னி வீதியை பார்க்க முடியும்” என்றார்.</p>
<p>ஆரம்பத்தில் வரவேற்புரை நிகழ்த்திய திரு.லோகன் கணபதி உரையாற்றிய போது,</p>
<p>“மார்க்கம் மாநகர் கனடாவில் மாத்திரமல்ல உலகிலேயே சிறந்த மாநகராகத் திகழ்கின்றது. இங்கு அதிகளவு தமிழ் மக்களும் தென் ஆசிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p>அதனால் இவ்வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தினை தமிழ் மக்களின் பாரம்பரிய தினமாக முதன் முதலில் பிரகடனப்படுத்திய பெருமை எமது மார்க்கம் மாநகர சபைக்கு உண்டு.</p>
<p>அது போலவே கடந்த மூன்று தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு அபயமளித்து வந்த சரித்திரப் பிரசித்தி வாய்ந்த வன்னி மாநகரின் பெயரினை இங்குள்ள வீதிக்கு சூட்டுவதற்கு உதவிய மார்க்கம் மேயருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் மற்றும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39601</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada_vanni_road-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada_vanni_road.jpg" medium="image">
			<media:title type="html">canada_vanni_road</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/canada_vanni_road-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>அதிகாரத்துடன், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வார்!- ச. வி. கிருபாகரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39598</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39598#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 13:31:00 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39598</guid>
		<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் &#8216;ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கானது எனக் கூறியுள்ளார். ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் என்பது, பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இவ் கண்டனத் தீர்மானம், ஐ. நா. மனித [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/kirupa-100x80.jpg" alt="kirupa" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-8110" />ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் &#8216;ஐ. நா. மனித உரிமை சபையினால்  இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்<span id="more-39598"></span>கானது எனக் கூறியுள்ளார்.</p>
<p>ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் என்பது, பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.</p>
<p>இவ் கண்டனத் தீர்மானம், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்திற்கு, இலங்கையினால் மேற்கொள்ளப்படவிருக்கும் உள்நாட்டு விசாரணைகளை கண்காணிப்பதற்கான அதிகாரத்தை கொடுத்துள்ளது.</p>
<p>இத் தீர்மானத்தின் அடிப்படையில், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் தனது குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு, இலங்கை அரசிடம் முன்வைக்க முடியும். அத்துடன், கொழும்பில் தமது காரியாலயம் ஒன்றை திறப்பதற்கான வேண்டுகோளை முன் வைப்பதற்கு வழிவகுத்துள்ளது.</p>
<p>இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இவரது காரியாலயம் உள்நாட்டிலிருந்தே கண்காணிப்பதற்கு வழிவகுக்கிறது.</p>
<p>இதேவேளை ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் முழு அதிகாரத்துடன் இலங்கைக்கு ஒரு முறை அல்ல பல முறை விஜயம் செய்வதற்கும் வழிவகுத்துள்ளது. இவரது முதலாவது விஜயம் கூடிய விரைவில் இடம்பெறும்.</p>
<p>ஆனால்…. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையுடைய இலங்கைக்கான விஜயம் என்பது, முன்னைய ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபாருடைய இலங்கை விஜயம் போல் அல்லாது, மனித உரிமைச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கண்காணிப்பு அதிகாரத்தை அடிப்படைய கொண்டதாகவே அமையும். </p>
<p>இவரது விஜயத்தை மறுக்கவோ அல்லாது காலநேரத்தை இழுத்தடிக்க இலங்கை முனைந்தால், அதன் பெறுபெறுகளை அவர்கள் மேலும் அனுபவிக்க வேண்டிய சங்கடங்களை உருவாக்கும். இவை மட்டுமல்லாது  இலங்கை மீதான இவ் கண்டனத் தீர்மானம் பல சூத்திரங்கள் அடக்கியதே.</p>
<p>விடயங்களை அலசி ஆராய முடியாதவர்கள, குருட்டுத்தனமாக இவ்விடயங்களை தீர்மானத்தில் காணவில்லை என்ற விதண்டாவாதங்களை முன்வைப்போருக்கு ஒர் உதராணத்தை இங்கு கூற முடியும்.</p>
<p>கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி, ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கையின் பின்ணனியை பலர் அறிவது, அவ் அறிக்கையை பாராட்டியது மட்டுமல்லாது அதை தமது பிராச்சார வேலைகளுக்கும் பாவித்தனர்.</p>
<p>அதாவது கடந்த வருடம், மார்ச் மாதம், ஐ. நா. மனித உரிமை சபையினால் நிறைவேற்றபட்ட இலங்கை மீதான கண்டன தீர்மானமே, இவ் அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் வெளியிடுவதற்கு வழிவகுத்தது. இல்லையேல் இவ் அறிக்கை ஒரு பொழுதும் வெளியாகியிருக்க முடியாது.</p>
<p>இது போன்றே கண்டன தீர்மானம் என்பது, பல நெழிவு சுழிவுகளை உள்ளடக்கிய சூத்திரங்களை கொண்டது என்பதை விதண்டாவாதம் பேசுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>இலங்கையும் கண்டன தீர்மானமும்</p>
<p>இவ் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே, மனித உரிமை சபையில் உரையாற்றிய ஜனதிபதி ராஜபக்சவின் பிரதிநிதி, தாம் இவ் பிரேரணையை ஏற்க மாட்டோம் என்பதை உடனேயே கூறிவிட்டார்.</p>
<p>இதேவேளை இலங்கை அரசு, 12,000 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு செய்துள்ளதாகவும், வடமாகாணத்தின் பொருளாதார 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். உண்மையில் இவை யாவும் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுவதற்கான புள்ளி விபரங்களே அல்லாது இவற்றில் எந்தவித உண்மைகளும் இல்லை.</p>
<p>வடக்கின் பொருளாதார வளர்ச்சியில் பங்குகொள்பவர்களும் பயனடைபவர்களும் தெற்கை சார்ந்த சிங்கள வர்த்தகர்களே. இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாக்காரர்களை கவர்வதற்காக, வேறுபட்ட பிரச்சார வேலைகளை இலங்கை அரசு பயன்படுத்துகிறது. பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்களில் பெரும்பான்மையானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகிறார்கள்.</p>
<p>முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு என்பது, சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுவதற்கான இன்னுமொரு கபடமான செயற்பாடும் புள்ளி விபரங்களும். இலங்கை அரசினால் தடுப்புக்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் யாவரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிலேயே தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>மிக வேடிக்கையான விடயம் என்னவெனில், 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையின் இராணுவத்திடம், தமது குடும்ப அங்கத்தவர்களின் முன்னிலையில் சரணடைந்த பெரும்பான்மையோனேர் பற்றிய விபரங்கள் ஒன்றையும் தமக்கு தெரியாதுவென  இலங்கை அரசு கை விரித்துள்ளது.</p>
<p>ஆனால் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட முறையை பார்க்கும் எவரும், சரணடைந்த பெரும்பான்மையான போராளிகளுக்கு என்ன நடத்திருக்கலாம் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.</p>
<p>ஆகையால் &#8216;போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழிக்கு அமைய &#8211; இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தை, இலங்கை அரசுடன் கைகோர்த்து நின்று எதிர்ப்பதை தவிர்த்து, அதில் உள்ள நன்மையான விடயங்களை, சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசத்துடன் இணைந்து நின்று, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதே உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரது கடமையாகும்.</p>
<p>கண்டனத் தீர்மானமும் தமிழரும் </p>
<p>இலங்கை மீதான கண்டனத் தீர்மானம் பற்றி நாம் ஆராயும் வேளையில் சில ஈழத் தமிழர் உலகத் தமிழரிடையே, மூன்று முக்கிய விடயங்கள் இவ் தீர்மானத்தில் இணைக்கப்படாததையிட்டு மனக்கசப்பு உள்ளது.</p>
<p>இதில் விடயங்கள் விளங்கிய சிலர் யதார்த்தங்களை புரிந்து கொண்டும், தமது சுயநல அரசியலுக்காக, மற்றவர்களை பிழையான வழிகளில் நகர்த்துவதை நாம் காண்கின்றோம். இவர்கள் எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விடயங்களாவன -</p>
<p>சர்வதேச சுதந்திர விசாரணை, பொருளாதார தடை அடுத்து சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு. இவ் கண்டனத் தீர்மானத்தை முன்னின்று நடத்தி வரும் உலக வல்லரசான அமெரிக்கா, அடுத்த கட்ட கண்டனத் தீர்மானத்தில், தாம்; சர்வதேச சுதந்திர விசாரணையை முன்வைக்கவிருப்பதாக ஏற்கனவே வெளிப்படையாக கூறிவிட்டார்கள்.</p>
<p>ஆனால் பொருளாதார தடை, சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஆகிய இரு விடயங்களும,; ஐ.நா.மனித உரிமை சபையினால் எந்த நாடு மீதும் நிறைவேற்றும் அதிகாரம,; இச் சபைக்கு கிடையாது.</p>
<p>ஆகையால், பொருளாதார தடை, சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும,; இவ் விடங்களை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் பொதுச் சபை அல்லது ஐ.நா.வின் பாதுகாப்புச்சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எது என்னவானலும், நாம் ஒன்றை மட்டும் மனதில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.</p>
<p>ஐ.நா. பொதுச்சபையில் 193 நாடுகளும், ஐ. நா. பாதுகாப்பு சபையில் வீற்ரோ அதிகாரத்துடன் சீனா, ராஷ்யா ஆகிய நாடுகளும் உள்ளன. ஆகையால் இவ்விரு சபைகளிலும் ஈழத் தமிழர் விடயத்தை தற்போதைய நிலையில் கவனத்தில் கொள்வார்களா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.</p>
<p>மனித உரிமை சபையினால், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட சகல விடயங்களும் உள்ளடக்கிய  இலங்கை மீதான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை யாவற்றையும்  இலங்கை தொடர்ந்து அலட்சியம் செய்யும் கட்டத்தில், நிட்சயம் ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு சபை ஆகியவை அக்கறை கொள்ள ஆரம்பிக்கும் என்பதே யாதார்தம்.</p>
<p>இதற்கு ஈழத் தமிழர் உலகத் தமிழர், ஒருங்கிணைந்த ஒற்றுமையான குரலுடன் வேலைத்திட்டங்கள் அமைவது மிக மிக அவசியம். நாம் இவற்றை செய்யத் தவறிவிட்டு, சர்வதேச சமுதாயத்தையும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து குறை சொல்வதினால், இலங்கைதீவில் தமிழர் தாயாகபூமியில் வாழும் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை.</p>
<p>முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் புதிது புதிதாக முளைத்துள்ள தமிழ் மின் மினி அமைப்புக்களின் பிரமுகர்கள் பொய் பிரட்டுகள் சொல்லி தம்மை வளர்பதற்கும், மக்களை மடையர்களாக்குவதற்கு மட்டுமே இவை பயன்படும்;.</p>
<p>புலம்பெயர் தேசத்தில் தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமை என்பது மிக தூரத்திலேயே காணப்படுவதற்கு காரணங்கள் பல! இவ்வேளையில், தமிழ்நாட்டில் ‘துக்ளக்‘ பத்திரிகையின் ஆசிரியர் 1980களில் ஒரு கேள்விக்கு எழுதியிருந்த பதில் தான் நினைவுக்கு வருகிறது.</p>
<p>கேள்வி &#8211; இந்தியாவில் அரசியல் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம்? பதில் &#8211; இந்தியாவின் உத்தியோக மொழியாக இந்தியை வைத்தால,; தமிழ், மலையாளம், தெலுக்கு, மராட்டி, பெங்காலி போன்ற மற்றைய மொழி பேசுவோர் எதிர்ப்பார்கள் ஆகையால் ‘அராபிய‘ மொழியை இந்தியாவின் உத்தியோக மொழியாக வைப்பதே சிறந்தது.</p>
<p>இதேவேளை, பெரும்பான்மையானோருக்கு தகமை இருந்ததோ இல்லையோ, தாம் தலைமை வகிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆகையால், ஒருவரை மட்டும் பிரதமராக நியமித்து விட்டு, மற்றைய யாவரையும் உதவி பிரதமராக நியமித்தால், இந்தியாவின் அரசியல் பிரச்சினை தீர்ந்துவிடுமென பதில் கூறியிருந்தார்.</p>
<p>நான், துக்ளக் சஞ்சிகையுடைனையதோ அல்லது ஆசிரியர் சோ வினுடைய பிரியன் அல்ல. இதே பிரச்சினையை தான் நாம் புலம்பெயர் தேசத்து தமிழ் அமைப்புகளிடையே காணுகிறோம். இவர்கள் யாவரையும் ஒன்றுமைப் படுத்துவதற்கு, சோவின் ஆலோசனை தான் சிறந்த வழியோ தெரியவில்லை.</p>
<p>வெட்கம், எமது உடன் பிறவா சகோதர சகோதரிகள் தமது உயிரை பணயம் வைத்து எமது தயாக பூமியிலும், தடுப்பு காவலிலும், முகாம்களிலும் வாழ்கின்ற வேளையில, இவர்கள் பதவி, பணத்திற்கு போட்டி போடுகிறார்கள். இவர்கள் தான் தமிழீழ மக்களின் விமோசனத்திற்கு வேலை செய்பவர்களா?</p>
<p>பொருளாதார தடையும் அகதி விவகாரமும்</p>
<p>பொருளாதார தடை, பகிஷ்கரிப்பு என்பவை இரு வேறுபட்ட விடயங்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டு;. ஓரு நாட்டின் மீதான பொருளாளதார தடையை, ஐக்கிய நாடுகள் சபையின் முதுகெலும்பான பாதுகாப்பு சபையினலேயே கொண்டுவர முடியும்.</p>
<p>அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கு நிகராக, நாடுகளின் அங்கத்துவத்தை கொண்ட ஐரோப்பியா யூனியன், பொதுநாலவாய அமைப்பு போன்றவற்றினாலும் கொண்டுவர முடியும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்படும் பொருளாளதார தடையே உலகில் சகல நாடுகளும் ஏற்றுக் கொள்வார்கள்.</p>
<p>ஆனால் பகிஷ்கரிப்பை நடைமுறைபடுத்துவதற்கு உலகில் எந்த அமைப்பினுடைய அனுமதி, யாருக்கும் தேவை இல்லை. இவ்விடயத்தை ஒவ்வொரு பொருளின் பவனையாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பம். அதில் பெரிதாக நாடுகள் அங்கத்துவ வகிக்கவில்லை.</p>
<p>இவவேளையில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை சாத்வீக வழியில் முன்னின்று நடத்திய மாகத்மா காந்தி அவர்கள், பிரித்தானியா உற்பத்திப் பொருளான புடவையை பகிஷ்கரித்து, தாம் இந்தியாவில் தயாரித்த புடவையை மட்டுமே அணிந்தார். இவ் பகிஷ்கரிப்பில் மற்றைய இந்தியர்களும் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.</p>
<p>இந்தியா சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு சுபாஷ் சந்திரபோஸின் பங்கும் அளப்பரியது. ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை  இலங்கை தொடர்ந்து நடத்துவதற்கும், இறுதியில் வெற்றி பெறுவதற்கும் இலங்கையின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி பெறுவதற்கு, புலம்பெயர் வாழ் தமிழர்கள், இலங்கையின் உற்பத்திப் பொருட்களை கோடிக் கணக்கில் இறக்குமதி செய்து உதவினார்கள் என்பதே உண்மை.</p>
<p>தற்போதைய நிலை இன்னும்; மோசமானது. புலம்பெயர் தேசங்களில் உள்ள பெரும்பாலான தமிழ் கடைகளுக்கு சென்று பார்த்தால், குறைந்தது 50 வீதத்திற்கு மேல், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே காணப்படுகிறது. புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் உணவகங்களின் நிலையும் இதே.</p>
<p>இவற்றை இறக்குமதி செய்பவர்கள் யார்? இதன் பாவனையாளர்கள் யார்? இவர்கள் தான்  சர்வதேச சமுதாயமும், ஐக்கிய நாடுகள் சபையும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முன்வருகிறார்கள் இல்லையென்று முதலைக் கண்ணீர் விடுபவர்களா? 2005ம் ஆண்டு, பிரான்ஸின் ஸ்ராஸ்பேக் நகரில் நடந்த ஓர் பொதுக்கூட்டத்தில் தயவு செய்து  இலங்கை உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரித்து, வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் குளிர், குடி பானங்களையும், உணவு வகைகளை வாங்கி பாவியுங்கள் எனக் கூறியிருந்தேன்.</p>
<p>அன்றைய கூட்டத்தை, ரி.ரி.என். தொலைகாட்சியினர் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதனால் பகிஷ்கரிப்பு பற்றிய எனது உரையை பெரும்பான்மையான விற்பனை ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் உடன் அறிந்தார்கள். அவ்வளவு தான்….. இவ் வியாபரிகளில் பெரும்பான்மையானேர் என் மீது போர் கோடி தூக்கிவிட்டனர்.</p>
<p>எமது களஞ்சியங்களில் உள்ள ஆயிரங்கள் பெறுமதியான  இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு, கிருபாகரன் பணம் தருவாரா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். சிலர் இவர்கள் மீது பரிதாபப்பட்டு இவர்களது களஞ்சியங்களில் உள்ள பொருட்கள் விற்பனை செய்து முடிப்பதற்கு கால அவகாசம் கொடுப்போம் என்றனர்.</p>
<p>இன்று எத்தனை வருடங்கள்? அவ்வேளையில் வேறுசிலர் கூறினார்கள், இறக்குமதி செய்பவர்களும் அவர்களே, கடைகளுக்கு விநியோகிப்பவர்களும் அவர்களேயென இவர்கள் யார் என்பது இன்றும் எனக்கு புதிராகவே உள்ளது. தற்பொழுது  இலங்கை உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி முன்னைய விட பல மடங்கு கூடியுள்ளது.</p>
<p>இவற்றின் இறக்குமதியாளர், விற்பனையாளர், பாவனையாளர் இன்றும் இவற்றை பகிஷ்கரிப்பதற்கு முன்வரவில்லை. இதை யாராவது உணர்கிறீர்களா? புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மின் மினி அமைப்புக்களின் பிரமுகர்கள,; தலைவர்கள் இவ்விடயத்தில் என்ன செய்கிறார்கள்? ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை மீதான பொருளாதார தடைக்கான வேண்டுகோள் வைப்பதற்கு முன், நீங்கள் இலங்கையின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரியுங்கள்.</p>
<p>இது தான் நீதி, இது தான் வழிமுறை. இலங்கை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களும், விற்பனை செய்பவர்களும், பாவனையாளர்களும் ஒரு யதார்த்தத்தை உணர வேண்டும். இவ் உற்பத்திப் பொருட்கள் யாவும், உங்கள் சகோதர, சகோதரிகள் பெற்றோர், நண்பர்கள் ஆயிரக்கணக்கான உடன்பிறவா ஈழத் தமிழர்களை, ஈவிரக்கமின்றி படுகொலை செய்த, முகாம்களிலும,; தடுப்பு முகாம்களிலும் வாடவைத்த  இலங்கை அரசின் பொருளாதாரத்தை பலப்படுத்தவே நீங்கள் யாவரும் துணை போகிறீர்கள்.</p>
<p>மானம் கௌரவம் உணர்ச்சியுள்ள தமிழர் ஒவ்வொருவரும், இலங்கை உற்பத்திப் பொருட்களை உடன் பகிஷ்கரிக்க வேண்டும். மிக அண்மையில், கனடாவில் ஓர் சந்தையில், சில தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சென்று, இலங்கையின் உற்பத்திப் பொருட்களை அங்கு விற்கப்படாது என கட்டளையிட்டதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தனா.</p>
<p>இப்போராட்டத்தினை ஒழுங்கு செய்த செயற்பாட்டாளர்கள், முதலில், தமிழ் கடைகள், உணவகங்களுக்கு சென்று இவ்வேண்டுகோளை முன்வைத்திருக்க வேண்டும். இதேவேளை, இலங்கை பாதுகாப்பு படைகளின் கைது, சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலை ஆகியவற்றிலிருந்து தப்பித்து கொள்வதற்காக, பெரும் தொகையான ஈழத் தமிழர், இலங்கையிலிருந்து தப்பி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றனார்.</p>
<p>ஆனால், தினமும் நூற்றுக் கணக்கான புலம் பெயர் வாழ் தமிழா,; சிறிலங்காவின் விமானம் மூலமாக இலங்கைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலைமையில் சர்வதேச மனித உரிமை, மனித அபிமான அமைப்புகள், தஞ்சம் கோரிவந்த தமிழர்களை, சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பாதீர்கள் என்ற வேண்டுகோளை முன் வைப்பது வலுவிளக்கிறது.</p>
<p>இதுபற்றி சிறிலங்காவிற்கு சுற்றுலா சென்றுவரும் புலம்பெயர்வாழ் தமிழர் சிறிது சிந்திக்க வேண்டும். தயுவ செய்து சுயநலத்துடன் வாழாதீர்கள். இது எமது இனம் இலங்கைதீவில் பூண்டோடு அழிவதற்கே வழிகோலுகிறது.</p>
<p>இரு தசாப்தங்களுக்கு பின்னார் இந்தியா</p>
<p>கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக, இலங்கை விடயத்தில் அமைதிகாத்து வந்த இந்தியா, கடந்த மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமை சபையில் தனது அமைதியை குலைத்து, இலங்கை தமிழர் சார்பாக குரல் கொடுத்ததை, ஈழத்தமிழர், உலகத் தமிழர் அலட்சியம் செய்ய முடியாது.</p>
<p>தமது சுயநலத்திற்காக விதண்டவாதம் பேசுவோருக்கு, இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது ஓர் முக்கியமான நிலைபாடு. இந்தியாவினுடன் எமக்கு உருவாகிய நீண்டகாலப் பகை, இன்று எமது இந்த நிலைக்கு ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.</p>
<p>எமக்கு இந்தியாவுடன் ஏற்பட்ட பகையை, இராஜதந்திரம், கபடம் தெரிந்த ராஜபக்ச அரசு செவ்வையாக பாவித்து, எமது கட்டுமானங்கள் யாவற்றையும் நிர்மூலமாக்கி, தாயகத்தில் வாழ்ந்த சகலரையும் அநாதரவாக்கியுள்ளது. ஆகையால் இந்தியாவினால் காட்டப்பட்ட பச்சை விளக்கை, நாம் வரவேற்று, அனுசரித்து செல்வதே சரியான இராஜதந்திரம்.</p>
<p> இல்லையேல் நாம் மீண்டும் உலகில் யாருடைய உதவியுமின்றி அநாதைகள் ஆக்கப்பட்டு, எமது இனமும் இலங்கைத்தீவில் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு காரணமாவோம். கடந்த ஐ. நா. மனித உரிமை சபையில் உரையாற்றிய, இந்தியாவின் ஜெனிவாவிற்கான பிரதிநிதி திரு. டீலிப் சிங்கா, இலங்கையில் நம்பிக்கை வாய்ந்த ஓர் விசாரணையை வலியுறுத்துவதாகவும், ஐ. நா. மனித உரிமைச் சபையில் இலங்கையினால் 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணயில் கூறப்பட் விடயங்களை கூட இன்னும் நடைமுறைப் படுத்தவில்லையென  இலங்கையை கடுமையாக சாடியிருந்தார்.</p>
<p>திரு. டீலிப் சிங்கா தொடர்ந்து கூறுகையில், தமிழர்கள் உட்பட சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அங்கு ஓர் நீண்டகால அரசியல் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும், தனிப்பட்ட நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனவும், இலங்கையினால் மேற்கொள்ளவிருக்கும் &#8211; தடுத்து வைக்கப்பட்டோர், காணமல் போனோர், கடத்தப்பட்டோர் போன்றவற்றவற்றின் உள்நாட்டு விசாரணைகள் யாவும், சர்வதேச பொறிமுறைகளை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென கூறியதோடு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இலங்கையுடன் உறவுகளை கொண்ட அயல்நாடானா இந்தியா, அங்கு நடப்பவை பற்றி அலட்சியமாக இருக்க முடியாதெனவும், இந்தியா தொடர்ந்து விழிப்பாக இருக்குமென கூறியிருந்தார்.</p>
<p>ஐ.நா.வின் &#8216;ஆர் 2 பி&#8221;</p>
<p>கூடிய விரைவில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. ஆகையால் இவரின் விஜயத்தின் பொழுது, இவரை நேரில் சந்திக்க விரும்பிய, மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்கள், சந்திப்பதற்கான ஒழுங்களை உடன்செய்ய வேண்டும்.</p>
<p>இதனது முதல் கட்டமாக, ஜெனிவாவில் உள்ள அவரது காரியாலயத்தினுடன் உடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உங்கள் விபரங்களை அவரது கவனத்திற் காலம் தாழ்த்தாது கொண்டுவர வேண்டும்.</p>
<p>இவ்வேலைத்திட்டத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய சமூக அமைப்புக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து கொடுக்க முடியும். ஐ. நா. மனித உரிமை சபையின் 23வது கூட்டத் தொடர் இவ் மே மாதம் 27ம் திகதி முதல் மூன்று வாரம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், ஒர் இரு நாடுகளும் உரையாற்ற முன் வரலாம்.</p>
<p>இலங்கையின் விடயத்தை பொறுத்த வரையில 24வது கூட்டத் தொடர் முக்கியமானது. இவ் கூட்டத்தொடர் பற்றி, இலங்கை மீதான கண்டனப் பிரேணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 25வது கூட்டத் தொடர் மிக முக்கியமானது. இக் கூட்டத் தொடரில், இலங்கை வழமைக்கு மேலான பல சர்ச்சைகள் எதிர்கொள்ளும். இது ஈழத் தமிழர்கள் விடயத்தில் பல திருப்பு முனைகளை உருவாக்கலாம்.</p>
<p>அதாவாது ஏற்கனவே  இலங்கை மீது நிறைவேற்றபட்ட கண்டனத் தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொறிமுறையான ஆர் 2 பி யுடன் மறைமுகமாக தொடர்பு படுத்தப்படுகிறது. இவ் 25வது கூட்டத் தொடரில் நடக்கவிருக்கும் சம்பவங்களுடன், இலங்கை நிச்சயம் ஆர் 2 பி பொறிமுறைக்குள் அகப்படவுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொறிமுறையான, &#8216;ஆர் 2 பி&#8221; என்பது (R2P – Responsibility to Protect)  ஓர் ஐ. நா. அங்கத்துவ நாட்டினால், தமது பிரஜைகளை இன அழிப்பு, போர்க்குற்றம், படுகொலைகளிலிருந்து காப்பாற்ற முடியாவிடில், சர்வதேச சமூதாயம் நேரடியாக களம் இறங்கி, பாதிக்கபடுபவர்களை காப்பாற்றுவதற்கு உரித்துடையவர் ஆவார்கள்.</p>
<p>ஆகையால்  இலங்கை மீது நிறைவேற்றபட்ட கண்டனத் தீர்மானத்தை, குருட்டுத்தனமாக தமது சுயநல அரசியலுக்காக எதிர்ப்பவர்கள், இவ்விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் உங்களுக்கு ஒன்றும் விளக்கமில்லையானால், கேளுங்கள் சொல்லித் தருகிறோம்.</p>
<p>இறுதியாக என்னால் எழுதப்பட்ட &#8217;13வது திருத்த சட்டமும், இடைகால நிலைமாற்று நிர்வாகமும்&#8221; என்ற கட்டுரையில், இலங்கை அரசு தினமும் தமக்கு எதிரானவர்களை விசாரிப்பதும், தொல்லை கொடுப்பதுமாகவுள்ளது. ஆனால் இவர்கள் மீது  இலங்கை அரசு எந்தவித விசாரணை நடத்துவதாக நாம் அறியவில்லை என எழுதியிருந்தேன்.</p>
<p>இக் கட்டுரை வெளியாகி சில தினங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான, திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு சிறிதரன் ஆகியோரை, இலங்கையின் பயங்கரவாதப் பிரிவினால் விசாரணக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே பயங்கரவாத பிரிவினால் விசாரிக்கபட்டுள்ளதாக அறிகிறோம்.</p>
<p>திரு சிறிதரன் முன்பு பல தடவை விசாரிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மே 1ம் திகதி அன்று, பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்கள் நெல்லியடியில் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், இவரது வீட்டிற்கு நான்கு முகமூடியணிந்த மர்ம நபர்கள் சென்று, கஜேந்திரகுமார் எங்கேயென விசாரித்ததாக, ஒரு சில தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p>
<p>ஆனால் இச் சம்பவம் பற்றிய எந்தச் செய்தியையும், இவர்களுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வரும், மாமனிதர் சிவராமின் ஆங்கில இணையதளம் பிரசுரிக்கவில்லை? இச் சம்பவத்தை தொடர்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, சிவராமின் ஆங்கில இணையதளம் பிரசுரிக்குமானால், இச் சம்பவம் பற்றிய சர்வதேச நடவடிக்கைக்கு மிக உதவியாகவிருக்கும்.</p>
<p>TCHR France<br />
tchrfrance@hotmail.com </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39598</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/kirupa-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/kirupa.jpg" medium="image">
			<media:title type="html">kirupa</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/kirupa-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மகாராணி போகாத மாநாட்டுக்கு சார்லஸ் மட்டும் போகலாமா? &#8211; புகழேந்தி தங்கராஜ்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39594</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39594#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 08:44:02 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39594</guid>
		<description><![CDATA[இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் எலிசபெத் மகாராணி பங்கேற்கமாட்டார் &#8211; என்று அறிவித்துவிட்டது பக்கிங்காம் அரண்மனை. மகாராணிக்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் கலந்துகொள்வார் என்பதையும் தெரிவித்துவிட்டார்கள். (சென்ற இதழ் அச்சுக்குப் போனபின்தான் இந்தத் தகவல் கிடைத்தது.) ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா ஆதரிக்காதா &#8211; என்பதையே கடைசி நிமிடம் வரை மர்மமாக வைத்திருந்த மர்மயோகி மன்மோகன்சிங் மாதிரி இல்லாமல் இப்போதே கையை விரித்துக் காட்டிவிட்டது பிரிட்டன். இலங்கை மாநாட்டுக்கு மகாராணி போகமாட்டார் &#8211; என்று மார்ச் மாதமே [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/makarane-100x80.jpg" alt="makarane" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39595" />இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் எலிசபெத் மகாராணி பங்கேற்கமாட்டார் &#8211; என்று அறிவித்துவிட்டது பக்கிங்காம் அரண்மனை. மகாராணிக்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் கலந்துகொள்வார் என்பதையும் தெரிவித்துவிட்<span id="more-39594"></span>டார்கள்.  (சென்ற இதழ் அச்சுக்குப் போனபின்தான் இந்தத் தகவல் கிடைத்தது.) ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா ஆதரிக்காதா &#8211; என்பதையே கடைசி நிமிடம் வரை மர்மமாக வைத்திருந்த மர்மயோகி மன்மோகன்சிங் மாதிரி இல்லாமல் இப்போதே கையை விரித்துக் காட்டிவிட்டது பிரிட்டன்.</p>
<p>இலங்கை மாநாட்டுக்கு மகாராணி போகமாட்டார் &#8211; என்று மார்ச் மாதமே தெளிவாக எழுதியிருந்தது லண்டன் கார்டியன் பத்திரிகை. ராணி போகாவிட்டால் மாநாட்டுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதையும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தது.</p>
<p>இங்கிலாந்து அரசியல் சட்டப்படி  ராணி தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைவர். அந்த அடிப்படையில் காமன்வெல்த் அமைப்புக்கும் அவர்தான் தலைவர். ஒரு பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள அதன்  தலைவரே தயங்கும் நிலையில் அந்த அமைப்பிலுள்ள உறுப்பு நாடுகள் தயங்குவார்களா மாட்டார்களா? மகாராணிக்குப் பதில் சார்லஸ் என்றானபிறகு பல நாடுகள் தங்களது உச்சத் தலைவர் எவரோ அவரை அனுப்பாமல் அடுத்த நிலை தலைவர்களை அனுப்பி வைக்கக்கூடும். உதாரணத்துக்கு இந்தியாவிலிருந்து மன்மோகன் சிங்குக்குப் பதில் நாராயணசாமியை அனுப்புகிறார்கள் என்று வையுங்கள்&#8230;. அது இலங்கையின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்குமா இருக்காதா?</p>
<p>காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் கூட்டம் &#8211; என்றே அழைக்கப்படும் இப்படியொரு மாநாட்டுக்கு அரசுத் தலைவர்கள் போகாமல் அப்புசாமிகளையும் குப்புசாமிகளையும் அனுப்பி  வைத்தால் மாநாடு நடக்கிற அரங்கத்தின் வெளியே இருக்கிற கொடிக்கம்பத்தில் பறக்கப்போவது இலங்கையின் மானம் மரியாதையாகத்தான் இருக்குமே தவிர காமன்வெல்த்தின் கொடியாக இருக்காது.</p>
<p>இலங்கையின் மான அவமானம் பற்றியெல்லாம் கவலைப்படாமல்தான் பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரண்மனையைப் பொறுத்தவரை  மாட்சிமைதங்கிய அரசியின் மானம்தான் பெரிது. மகிந்த ராஜபட்சே என்கிற மிருகத்துடன் கைகுலுக்க நேரும் பட்சத்தில்  அரசியின் மானம் மரியாதை என்னாவது? அதனால்தான் அட்வான்ஸாகத் தெரிவித்துவிட்டார்கள் ராணி வரமாட்டார் என்பதை!</p>
<p>மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை &#8211; என்று மகாராணிக்கு முன்பே அறிவித்தவர் கனடா பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர். அவரது முடிவுக்கும் பக்கிங்காம் அரண்மனையின் அறிவிப்புக்கும் நிச்சயமாகத் தொடர்பிருக்கிறது. கனடாவைத் தொடர்ந்து இன்னும் பல நாடுகளின் உச்சத் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வாய்ப்பு இருக்கிற நிலையில் மாநாட்டுக்காக மகாராணி இலங்கை போகிறார் என்று வையுங்கள்&#8230; பல நாடுகளில் இருந்தும் அரசுத் தலைவர்களுக்குப் பதில் அனாமத்துப் பேர்வழிகளே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வையுங்கள்.. அது மகிந்தனுக்கு அவமானமோ இல்லையோ&#8230; கண்டிப்பாக மகாராணிக்கு அவமானமாக இருந்திருக்கும். இதையெல்லாம் யோசித்துப் பார்த்துத்தான்  முடிவெடுத்திக்க வேண்டும் எலிசபெத் மகாராணி.</p>
<p>கனடா எடுக்கப்போகும் அடுத்த முடிவு இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். கனடா சார்பில் பிரதமர் மட்டுமல்ல பிரதமர் அலுவலக குமாஸ்தா கூட இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிடக் கூடாது என்கிற குரல் அங்கே வலுத்து வருகிறது.</p>
<p>அண்மையில் காமன்வெல்த் நாடுகளுக்கான சாசனம் ஒன்றை மகாராணி வெளியிட்டிருந்தார். அந்த சாசனத்தை காமன்வெல்த் நாடுகள் கடைப்பிடிக்கவேண்டும் என்கிற தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார். &#8216;நல்லாட்சி நடத்துவது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவது கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பது&#8217; &#8211; ஆகியவை சாசனத்தின் முக்கிய அம்சங்கள். இதெல்லாம் கிலோ என்ன விலை &#8211; என்று கேட்கிறவர்களாயிற்றே மகிந்தனும் கோதபாயவும்! அப்படியொரு நாட்டுக்கு மகாராணி எப்படிப் போக முடியும்!</p>
<p>பிரிட்டனில் எந்த அரசியல் நடவடிக்கையும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்ப முடியாது. அப்படியொரு விமர்சனம் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதாக மகாராணி அறிவித்திருந்தால் கடுமையாக எழுந்திருக்கும். &#8216;மகாராணி போகமாட்டார்&#8217; என்கிற அறிவிப்பு பற்றி விமர்சனம் எதுவும் பெரிதாக எழுந்துவிடவில்லை&#8230; அந்த அளவுக்கு இலங்கையின் மானம் லண்டனிலும் காற்றில் பறக்கிறது.</p>
<p>எலிசபெத் ராணியின் முடிவுக்கு அவரது வயதுதான் காரணம் &#8211;  என்று சப்பைக்கட்டு கட்ட முயல்கின்றன கொலைகார கோதபாயவைப் பார்த்து நடுங்கும் கொழும்பு பத்திரிகைகள் சில. லசந்தவுக்கு என்ன நடந்தது என்பதை கண்ணெதிரே பார்த்த அவர்கள் வேறெப்படிப் பேச முடியும்?</p>
<p>மகாராணி தனது பொறுப்புகளை இளவரசரிடம் சிறுகச் சிறுக ஒப்படைத்து வருவதை இந்த முடிவு உணர்த்துவதாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன சில பத்திரிகைகள். இன்ஸ்டால்மென்டில் கொடுக்க இது நம்மூர் பொறியியல் கல்லூரி கட்டணமா என்ன!</p>
<p>அமெரிக்காவிலிருந்து இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இல்லினாய்ஸ் சட்டக் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர் பிரான்சிஸ் பாயல் &#8211; &#8216;இனப்படுகொலை செய்தவர்களுடன் ஒரே மேடையில் நிற்பதை அரசியல் அதிகாரமுள்ள எலிசபெத் மகாராணி விரும்பவில்லை &#8211; என்பதை இந்த முடிவு தெளிவாக உணர்த்துகிறது&#8217; என்கிறார்.</p>
<p>இளவரசர் சார்லஸை அனுப்புவதென்ற முடிவுக்கு என்ன காரணம் &#8211; என்பதையும் விளக்குகிறார் பாயல். &#8216;அரசியல் சட்டப்படி பிரிட்டனின் தலைவராகவும் காமன்வெல்த் தலைவராகவும் இருப்பவர் மகாராணி தான். இளவரசர் சார்லஸ் இந்த இரண்டுக்கு மட்டுமல்ல அரசியல் சட்ட அடிப்படையில் எந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பிலும் இருப்பவர் அல்ல! இனப் படுகொலை செய்த ஒரு நாட்டுக்கு அவர் போவது சார்லஸ் என்கிற தனிநபருக்கு ஏற்படும் அவமதிப்பே அன்றி அரசியல் சட்ட ரீதியான எந்த அமைப்புக்கும் அவமதிப்பை ஏற்படுத்துவது அல்ல! அதனால்தான் சார்லஸை அனுப்பிவைக்கிறார்கள்&#8217; என்கிறார் அவர்.</p>
<p>மகாராணி இலங்கைக்குப் போகும் நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் அங்கே போவதைத் தவிர்க்கமுடியாது &#8211; என்று இவ்வளவு நாளாகக் கூறிவந்தது பிரிட்டன். இப்போது மகாராணி போகவில்லை &#8211; என்பது உறுதியாகிவிட்ட நிலையில் கேமரூன் என்ன செய்யப் போகிறார்? கனடா பிரதமரைப் பின்பற்றப் போகிறாரா? அல்லது கூச்சநாச்சமில்லாத இந்தியாமாதிரி மனித மாண்புகளுக்குக் குழி பறிக்கப் போகிறாரா? கூடியவிரைவில் தெரிந்துவிடும்.</p>
<p>சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேச அடுத்த சில தினங்களில் கேமரூன் அமெரிக்கா போவதாகச் செய்தி வந்துள்ளது. சிரியா விவகாரத்தில் காட்டும் அக்கறையில் ஒரே ஒரு சதவிகிதத்தையாவது இலங்கை விஷயத்தில் ஐ.நா.வும் பிரிட்டனும் அமெரிக்காவும் உலக நாடுகளும் காட்டியிருந்தால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கண்டிப்பாகக் காப்பாற்றியிருக்க முடியும்.</p>
<p>சிரியாவில் கொல்லப்பட்ட 80 ஆயிரம் பேருக்காக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் எத்தனை முறை கூடியுள்ளது என்பதை அறிந்தால் இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது அதைப் பற்றி விவாதிக்க ஐ.நா.  கூடவேயில்லையே ஏன் &#8211; என்று அதிர்ச்சியடைவீர்கள். அது முழுக்க முழுக்க விஜய் நம்பியார் என்கிற கேரளச் சேட்டனின் கைவண்ணம். அவர் விரும்பினால்தான் ஐ.நா. கூடும் அவர் விரும்பாவிட்டால் கூடாது என்றால் அது ஐ.நா. சபையா நம்பியாரின் நைனா சபையா?</p>
<p>கிளர்ச்சி செய்பவர்களை நசுக்க சிரிய அரசு ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் &#8211; என்று வதந்திகள் பரவிய நிலையிலேயே சர்வதேசமும் சிரியாவைக் கடுமையாக எச்சரித்ததே! 2009 ஏப்ரலில் ஆனந்தபுரத்தில் இதே ரசாயன ஆயுதங்களை இலங்கை பயன்படுத்தியதால்தானே ஐநூறுக்கும் மேற்பட்ட எங்கள் சொந்தங்கள் உடல் கருகிச் செத்தனர். மொத்த உடலும் கருகிய நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த   அவர்களது உடல்களைப் புகைப்படங்களில் பார்த்து  உலகே அதிர்ந்ததே&#8230;. அந்த கோழைத்தனமான மனித நேயமற்ற கொடூரமான நடவடிக்கைக்காக உலக நாடுகள் இலங்கையைக் கண்டிக்கவேயில்லையே ஏன்?</p>
<p>விஜய் நம்பியார் சாப்பிட்டால்தான் ஐ.நா. ஏப்பம்விடும் &#8211; என்றால் அதற்கு எதற்கு ஒரு செயலர் நாயகம் அதற்கு எதற்கு ஒரு பாதுகாப்பு கவுன்சில் அதற்கு எதற்கு ஒரு பொதுச் சபை அதற்கு எதற்கு ஒரு மனித உரிமைகள் பேரவை? இழுத்துமூடிவிட்டு சிங்களர்கள் சொன்னார்களே&#8230; அந்த வேலையைச் செய்யப் போகவேண்டியதுதானே பான் கீ மூன்!</p>
<p>தமிழ்நாட்டிலிருந்து நாம் கேட்கவில்லை இந்தக் கேள்வியை! உலகம் முழுவதும் மனசாட்சியுள்ள மனிதர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்&#8230; அவர்கள் கேட்கிறார்கள் இதை! கனடாவின் நேஷனல் போஸ்டில் சர்வதேசத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறமாதிரி சில கேள்விகளை எலிசபெத் ஹக்  கேட்டிருந்தார். &#8216;ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்திருந்தும் சர்வதேசமும் அதைக் கண்டுகொள்ளாதது ஏன்? சிரியர்கள் விஷயத்திலும் பாலஸ்தீனியர்கள் விஷயத்திலும் காட்டுகிற அக்கறையை தமிழர்கள் விஷயத்தில் ஐ.நா. காட்டாதது ஏன்? ஈழத் தமிழர் விஷயத்தில் மேற்குலகம் மனசாட்சியுடன் நடந்துகொள்ளாதது ஏன்&#8217; &#8211; என்று ஏகப்பட்ட &#8216;ஏன்&#8217;கள் எலிசபெத்திடமிருந்து.</p>
<p>கனடாவின் எலிசபெத்தை பிரிட்டனின் எலிசபெத் படித்தாரோ என்னவோ பக்கிங்காம் அரண்மனையின் கதவைச் சாத்திவிட்டார். இதையெல்லாம் படிப்பதேயில்லையா டேவிட் கேமரூன்களும் மன்மோகன் சிங்குகளும்! இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலா காமன்வெல்த் மாநாட்டில் போய் கொடியேற்றப் போகிறார்கள் அவர்கள்?</p>
<p>அவர்களை விடுங்கள்&#8230;. நம்முடைய உள்நாட்டு ஊடகங்களில் இருக்கும் நண்பர்களாவது இதையெல்லாம் படிக்க வேண்டாமா? காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது நியாயமா &#8211; என்று கேட்கவேண்டாமா? ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் சிரியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள் பாலஸ்தீனம் விஷயத்தில் பரிவு காட்டுபவர்கள் &#8211; ஏன் 26 மைலில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்க மறுக்கிறார்கள்? அங்கே கொல்லப்படுபவை அரிய உயிர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டவை அற்ப உயிர்களா?</p>
<p>நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்க வேண்டும் தொடரும் இனவெறியாட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் &#8211; என்று நினைக்காமல் அஞ்சலியைக் காணோமென்று தேடிக் கொண்டிருந்தால் அடுத்த சந்ததி இவர்களை எப்படி மன்னிக்கும்? இந்த ஊடக அராஜகம் ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் அறிவுஜீவிகளின் அபத்தங்கள். &#8216;போருக்குப் பிறகு மெல்ல இன அடிப்படை வாதத்திலிருந்து விலகி வேறு திசை நோக்கி நகர்கிறது இலங்கை அரசியல்&#8217; என்று கூசாமல் பேசுகிறார்கள் இவர்கள்.</p>
<p>தலாய்லாமா என்கிற ஒரு சாத்விகப் போராளி&#8230;.. அவரைச் சொல்லலாம் புத்தரின் தொடர்ச்சி என்று&#8230; அந்த மனிதர் மனம்திறந்து கண்டிக்கிறார் இலங்கை மற்றும் பர்மாவில் புத்த பிக்குகளின் இன வெறியையும் மத வெறியையும்! &#8216;மதத்தின் பெயரால் மனிதர்களைக் கொல்வது நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை. அன்பையும் அகிம்சையையும் கடைப்பிடிக்க வேண்டிய புத்த பிக்குகளும் இந்த வன்முறைப் பாதையில் செல்வது என்னை வேதனைப்படுத்துகிறது&#8217; என்று மனம் நொந்துபோய்ச் சொல்லியிருக்கிறார் அவர். என்ன செய்வதுஇ தலாய்லாமா இதயத்தைத் திறந்து வைத்துக்கொண்டு உலகைப்  பார்க்கிறார். நம்மூர் அறிவுஜீவிகள் கல்லாப்பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள்.</p>
<p>சுதந்திரமா கேட்கிறாய்&#8230; சுய உரிமையா கேட்கிறாய்&#8230; மீண்டும் கேட்பாயா&#8230; இன்னொரு முறை போராடுவாயா&#8230; என்று கேட்டுக் கேட்டு அடித்து உதைத்து கற்பழித்து கொன்று குவித்து நசுக்கியிருக்கிறது  தமிழர்களை &#8211; இலங்கை. அந்த சிங்கள பௌத்த வெறியர்களின் அடுத்த குறி இலங்கையிலிருக்கும் முஸ்லீம் சமூகம் தான் என்பதற்கான அறிகுறிகள் அப்போதே தெரிந்தன. இப்போது தன்னுடைய அந்த சுயரூபத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள் பௌத்த வெறியர்கள். முஸ்லீம்களின் கடைகளைத் தீக்கிரையாக்கியதுடன் நில்லாது முஸ்லீம் கடைகளைப் புறக்கணியுங்கள் &#8211; என்று வேண்டுகோளும் வைக்கிறார்கள். 1983ல் தமிழ் வணிகர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்த இஸ்லாமிய சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கிறது.</p>
<p>தலாய்லாமா சொல்வதையெல்லாம் சிங்கள பௌத்த வெறியர்கள் கேட்க வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அவர் சார்ந்த பௌத்த மதப் பிரிவுக்கும் இலங்கையில் வேரூன்றியிருக்கும் தேரவாத &#8211; பிரிவுக்கும் ஏழாம் பொருத்தம்.</p>
<p>&#8216;போருக்குப் பிறகு வேறு திசையை நோக்கி நகர்கிறது இலங்கை அரசியல்&#8217; என்று கூசாமல் பேசும் அறிவாளிகள் சைவக் கோயில்களை இடித்து நாசமாக்கிய பிக்குகளின் கும்பல் இப்போது மசூதிகள் மற்றும் முஸ்லிம் கடைகள் இருக்கும் திசை நோக்கி நகர்வதைத் தான் பூடகமாகக் குறிப்பிடுகிறார்களோ என்னவோ! அப்படித்தான் &#8211; என்றால் ஜெகத்ரட்சகன் செலவிலாவது அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தியாகவேண்டும். (ஜெகத் அண்ணா அந்த -ஜமுக்காளம்- அமைப்பு இருக்கா இல்லையா?)</p>
<p>முதல்வர் ஜெயலலிதாவைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த அறிவாளிகள். நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு எழுகிற குரல்களை வலுப்படுத்தும் விதத்தில்தான் &#8216;சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை ஆட்டக்காரர்கள் பங்கேற்கக்கூடாது&#8217; &#8211; என்றார் ஜெயலலிதா. உடனேயே  &#8216;விளையாட்டை விளையாட்டாத் தான் பார்க்கணும்&#8217; &#8211; என்று நம்முடைய அறிவுஜீவிகளில் சிலர்  கிளர்ந்து எழுந்தார்கள்.  கிரிக்கெட்டைக் கூட இல்லை&#8230; ஐ.பி.எல்.லைக் காப்பாற்றுவதுதான் அவர்களது நோக்கம். அங்கேதானே பணம் புரள்கிறது!</p>
<p>விளையாட்டை விளையாட்டாத் தான் பார்க்கணும் &#8211; என்று சொன்ன இந்த அறிவுஜீவிகளுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் கிரிக்கெட்டைக் கிரிக்கெட்டாகவே விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய இதயம் திறந்து பேசியிருக்கிறார் ஓர் ஆங்கில நாளிதழில்! அப்பழுக்கில்லாத கிரிக்கெட் பேட்டிங் நுட்பம் தெரிந்து விளையாடி பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்ததால் &#8216;ரன் மெஷின்&#8217; என்றே அழைக்கப்பட்ட அந்த கறுப்பு வைரம் இந்த பேட்டியில் அடித்திருப்பது தான் உண்மையான &#8216;சிக்ஸர்&#8217;.</p>
<p>கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத எத்தனையோ இன்னிங்ஸ்களை விளையாடியவர் ரிச்சர்ட்ஸ். அவருடைய கிரேட்டஸ்ட் இன்னிங்ஸ் எதுவாம் தெரியுமா? &#8216;இனவெறியின் பிடியில் இருந்த தென் ஆப்பிரிக்காவில் விளையாட மறுத்ததுதான் என்னுடைய மகத்தான இன்னிங்ஸ்&#8217; என்கிறார் ரிச்சர்ட்ஸ்  பெருமிதத்துடன். அந்தக் கறுப்பு வைரத்தின் மீதிருந்த மரியாதை அதைப் படித்த நொடியே பலமடங்காக உயர்ந்துவிட்டது எனக்கு!</p>
<p>விளையாட்டை விளையாட்டாத் தான் எடுத்துக்கணும் &#8211; என்று உள்குத்து குத்துகிற ஐ.பி.எல். உபாசகர்கள்இ குத்தாட்டம் நடந்துகொண்டிருக்கிற சேப்பாக்கம் மைதானத்திலிருந்து வெளியே வந்து அமைதி தவழும் கடற்கரையில் தனிமையில் அமர்ந்து ஒரு நொடி யோசித்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் ரிச்சர்ட்ஸ் சொல்வதற்கும் ஜெயலலிதா சொன்னதற்கும் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒற்றுமைக் கூறு புலப்படும்.</p>
<p>முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை ஐ.பி.எல். போட்டியுடன் அவரது பயணம் முடிந்துவிடப் போவதில்லை. காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதன் பின்னணியிலும் அவரது எதிர்ப்பு முதலிடம் பெறவேண்டும். அது முதல்வரின் இன்னொரு கிரேட்டஸ்ட் இன்னிங்ஸாக இருக்கும் இருக்கவேண்டும் என்பதே நமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்!</p>
<p>மகாராணி தான் போகவில்லையே &#8211; என்று நாம் குப்புறப்படுத்துவிட முடியாது. இளவரசர்கூட போகமுடியாத நிலையை &#8211; 7 கோடி தமிழரான நாமும் நம் முதல்வரும் இங்கிருந்தே ஏற்படுத்த முடியும்! சார்லஸும் போகாவிட்டால் இங்கேயிருந்து நாராயணசாமியையேனும் அனுப்பிவைப்பார்கள் என்று நினைக்கிறீர்களா நீங்கள்?</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39594</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/makarane-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/makarane.jpg" medium="image">
			<media:title type="html">makarane</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/makarane-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரான்சில் மூதாளர்களின் உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 11ம் நாளில்&#8230;</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39589</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39589#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:48:53 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39589</guid>
		<description><![CDATA[பிரான்சில் கடந்த 1ம் திகதி முதல் நடைபெற்றுவரும் மூதாளர்களின் உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 11ம் நாளினை மூதாளர்களில் ஒருவரான திரு. சிவராசா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்திருந்தார். வழமைபோல் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மக்களின் கவனத்தை இப்போராட்டம் ஈர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. No tags for this post.]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-thumbnail wp-image-39590" alt="11-fr-mu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/11-fr-mu-100x80.jpg" width="100" height="80" />பிரான்சில் கடந்த 1ம் திகதி முதல் நடைபெற்றுவரும் மூதாளர்களின் உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 11ம் நாளினை மூதாளர்களில் ஒருவரான திரு. சிவராசா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்திருந்தார். வழமைபோல் பல நூற்றுக்கணக்கா<span id="more-39589"></span>ன வெளிநாட்டு மக்களின் கவனத்தை இப்போராட்டம் ஈர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.<br />
<img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-1.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-2.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-3.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-4.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-5.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-6.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-7.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-8.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-9.JPG" width="600" height="450" /><img alt="" src="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-10.JPG" width="600" height="450" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39589</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/11-fr-mu-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/11-fr-mu.jpg" medium="image">
			<media:title type="html">11-fr-mu</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/11-fr-mu-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-1.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-2.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-3.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-4.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-5.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-6.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-7.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-8.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-9.JPG" medium="image" />
		<media:content url="http://www.pathivu.com/uploads/images/2013/05/11-fr-mu-10.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>மகிந்த கும்பலை கலைக்க மக்கள் அமைப்பு தோற்றம்! ஜ.தே.கட்சியின் புதிய வியூகம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39586</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39586#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:45:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39586</guid>
		<description><![CDATA[மகிந்த கும்பலின் ஆட்சியினில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த புதிய வியூகத்தை அமைத்துள்ளது. இதற்கென வாக்களிப்பு நிலையங்களின் அடிப்படையில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த மக்கள் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு விரோதமான கருத்துக்கைள பிரச்சாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூன் மாதமளவில் இந்த மக்கள் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடிய ஓர் சக்தியாக [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/ranil-80x80.gif" alt="ranil" width="80" height="80" class="alignleft size-thumbnail wp-image-56" />மகிந்த கும்பலின் ஆட்சியினில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தள்ளது.</p>
<p>அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி<span id="more-39586"></span> இந்த புதிய வியூகத்தை அமைத்துள்ளது.<br />
இதற்கென வாக்களிப்பு நிலையங்களின் அடிப்படையில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த மக்கள் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு விரோதமான கருத்துக்கைள பிரச்சாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூன் மாதமளவில் இந்த மக்கள் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p>
<p>தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடிய ஓர் சக்தியாக இந்த மக்கள் அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39586</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/ranil-80x80.gif" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/ranil.gif" medium="image">
			<media:title type="html">ranil</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/ranil-80x80.gif" />
		</media:content>
	</item>
		<item>
		<title>த.தே.ம.முன்னணிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39581</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39581#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:36:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39581</guid>
		<description><![CDATA[தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியல் தீர்வு தொடர்பில் குறைந்தபட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னாரில் இடம்பெற்றது. காலை 11.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைரீதியான இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலையில் கூட்டம் முடிவுற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் 13 ம் திருத்தத்தினை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/neu-1-100x80.jpg" alt="neu-1" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-39582" />தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியல் தீர்வு தொடர்பில் குறைந்தபட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னாரில் இடம்பெற்றது. காலை 11.00 மணி தொட<span id="more-39581"></span>க்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைரீதியான இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலையில் கூட்டம் முடிவுற்றது.</p>
<p>தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் 13 ம் திருத்தத்தினை நிராகரிக்க முடியாது என்றும், கெழும்பிலுள்ள முக்கிய சில இராயதந்திரிகள் வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டிக்காட்ட வேண்டுமென தம்மிடம் கூறியுள்ளதாகவும் எனவே தாம் அதில் கட்டாயம் போட்டியிடுவோம் என்றும் உறுதிபடக் கூறினர். அத்துடன் படிப்படியாக அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வை பெறும் முயற்சியை தாம் முன்னெடுப்போம் என்றும் எனவே அதிகாரப்பகிர்வுப் பாதையை நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டனர்.  </p>
<p>தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில், இறைமையுடைய தமிழ்த் தேசமும், இறைமையுடைய சிங்கள தேசமும் இணைந்து தேசங்களின் கூட்டாக ஒரு இறுதித்தீர்வு எட்டப்பட்ட வேண்டும் எனவும் இத்தீர்வை அடைவதற்கான அரசியல் பாதையானது 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளை நிராகரிப்பதாகவும், அதிகாரப் பகிர்வுப் பாதையை நிராகரிப்பதாகவும் அமைய வேண்டுமெனவும் தமது கருத்துக்களை தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினர் முன்வைத்தனர். தீர்வைப் பெறுவதற்கான இவ்விரு அணுகுமுறைகளும் தமிழ்த் தேசத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலிப்பதாக இருக்கும் எனவே தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்று கூறிக்கொண்டு அவ்வாறான தீர்வுப் பாதையில் ஒருபோது செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாதிட்டனர்.</p>
<p>இவ்விரு தரப்பும் தத்தம் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்றமையினால் கொள்கை விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாடொன்றை எட்ட முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் மிகமிகக் காரசாரமான விவாதம் 6.00 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.</p>
<p> எனினும் கொள்கைவிடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக கொள்கை விடயங்களை தீர்மானிப்பதற்கும், கொள்கையை அடைந்து கொள்வதற்கான அரசியற் பாதை என்ன என்பதனை தீர்மானிப்பதற்குமான நான்குபேர் கொண்ட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளுமான புவிதரன், குருபரன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இச்சந்திப்பில் தமிழ் தேசிய அவை(Tamil National Council) ஒன்றினை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களை இணைத்து உருவாக்குவது பற்றியும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறான கவுண்சில் அமைப்பதற்கு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஆரம்பத்தில் இணங்க மறுத்தாலும் அங்கிருந்தவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கொள்கையளவில் இணங்கினர். இக்கவுண்சில் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது நிலைப்பாடு கவுண்சிலானது தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தைக் கோரும் நோக்கில் அமையுமாயின் தமது ஆதரவு உண்டென்று கூறியிருந்தனர்.</p>
<p>அடுத்து தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் பற்றியும், அதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது. அதன்போது இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை நாம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறப்பட்டபோது இன அழிப்பு என்று குறிப்பிடுதவற்கு ஆரம்பத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இணங்கவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகத்தினர் ஆகியோர் உறுதியாக இருந்தமையினால் இறுதியில் இன அழிப்பு என்று குறிப்பிட்டு பொது அறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு அவ்விருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>மன்னார் ஆயர் அதி வண தோமஸ்சவுந்தரநாயகம் அவர்களது தலைமையிலான தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதயம் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன், சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், விநோனோகராதலிங்கம், சிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39581</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/neu-1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/neu-1.jpg" medium="image">
			<media:title type="html">neu-1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/05/neu-1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!- கருணாநிதி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39578</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39578#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:28:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39578</guid>
		<description><![CDATA[ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/Karunanithi_01-3-100x80.jpg" alt="Karunanithi" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-37184" />ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>இது குறித்து அவ<span id="more-39578"></span>ர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p>
<p>ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.</p>
<p>பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>அதில் இலங்கையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. போர் முடிந்த பிறகும் அரசியல், சமூக நடவடிக்கைகளில் இலங்கை அரசு பொறுமையின்மையை கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமைகளும், சர்வதேச சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.</p>
<p>அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.</p>
<p>பொதுமன்னிப்பு சபை, சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை.</p>
<p>எனவே, ராஜபட்ச அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நாமும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39578</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/Karunanithi_01-3-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/Karunanithi_01-3.jpg" medium="image">
			<media:title type="html">Karunanithi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2013/02/Karunanithi_01-3-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜெயலலிதா பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும்: நாஞ்சில் சம்பத்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39575</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39575#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:26:13 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39575</guid>
		<description><![CDATA[தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் என அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/jeya-100x80.jpg" alt="jeya" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-24216" />தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் என அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.</p>
<p>கோவை மாவட்ட<span id="more-39575"></span>ம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது.</p>
<p>இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.</p>
<p>இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும்.</p>
<p>கருணாநிதி டெசோ உள்ளிட்ட பயணிக்காத அமைப்புகளின் மூலம் அறிக்கைகள் விட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். இதனை மக்கள் நன்கு அறிவார்கள். மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் இப் பிரச்சினையை தீர்ப்பதை விட்டு விட்டு இப்போது முதல்வரை வசை பாடுகிறார். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.</p>
<p>நதி நீர் பிரச்சினை, இலங்கை பிரச்சினை போன்றவற்றை முழுமையாக நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி காண வேண்டும்’’ என்று தெரிவித்தார். </p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=39575</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/jeya-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/jeya.jpg" medium="image">
			<media:title type="html">jeya</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/jeya-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மாலைதீவில் அமெரிக்கத் தளம்! இலங்கைக்கு அடிக்கும் காய்ச்சல்! &#8211; சுபத்ரா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=39572</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=39572#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 07:22:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=39572</guid>
		<description><![CDATA[மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரப் படைத்தளத்தை அமைக்கப் போவதாகவும் அதனால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அபாய எச்சரிக்கை ஒன்றை கடந்த வாரம் விடுத்திருந்தார் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், நகர்வுகளின் பின்னணியில், சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு இந்த விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை வளர்த்து விடுவதற்குத் துணைபோகும் இலங்கை, தன்னருகே உலகின் மிகப்பெரிய வல்லரசு இன்னொரு தளம் அமைக்கப் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/usa-100x80.jpg" alt="usa" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-2877" />மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரப் படைத்தளத்தை அமைக்கப் போவதாகவும் அதனால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அபாய எச்சரிக்கை ஒன்றை கடந்த வாரம் விடுத்திருந்தார் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்<span id="more-39572"></span>க.</p>
<p>இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், நகர்வுகளின் பின்னணியில், சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு இந்த விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.</p>
<p>தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை வளர்த்து விடுவதற்குத் துணைபோகும் இலங்கை, தன்னருகே உலகின் மிகப்பெரிய வல்லரசு இன்னொரு தளம் அமைக்கப் போவதை நிம்மதியோடு பார்க்க முடியாது தான்.</p>
<p>மாலைதீவுடன் அமெரிக்கா விரைவில் செய்து கொள்ளவுள்ள உடன்பாட்டின் பிரதி ஒன்று வெளியானதை இடுத்தே இந்த அச்சம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்தியாவிலும் கூட இந்த உடன்பாடு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த உடன்பாட்டுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தியாவிடம் கவலைகளை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்.</p>
<p>இந்திய சார்பாளரான அவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் கூட நெருக்கமானவர்.</p>
<p>தற்போது ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள அவர் சீன சார்புடைய தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதற்குப் பெரும் பாடுபட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>மாலைதீவு அரசாங்கம் பல்வேறு விடயங்களில் இந்தியாவுடன் முட்டி மோதினாலும் சீனாவுடன் இணைந்து செயற்பட்டிருந்தாலும் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும் அளவுக்கும் போயுள்ளது.</p>
<p>தெற்காசியாவில், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கைத் தோற்கடிக்கும் அமெரிக்க மூலோபாயத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மாலைதீவுடன் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.</p>
<p>சீனாவின் செல்வாக்கை முறியடிக்கின்ற மூலோபாயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே இருந்தாலும் மாலைதீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு கவலைகள் இருப்பதை மறுக்க முடியாது.</p>
<p>இந்தியாவில் இருந்து மிகக்குறுகிய தொலைவில் அமெரிக்கத் தளம் அமைவதை இந்தியாவினால் அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது தான்.</p>
<p>மாலைதீவின் செய்மதிகளை ஏவும் விடயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை உடைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ள இந்தியாவுக்கு இப்போது அமெரிக்காவின் நகர்வு கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>அதுபோலவே சீனாவின் அரவணைப்பில் உள்ள இலங்கைக்கும் இந்த அமெரிக்க நகர்வு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தநிலையில் மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரத் தளத்தை அமைக்கப் போகிறதா? அவ்வாறு தளம் எதையும் அமைக்கும் திட்டம் ஏதும் தம்மிட்ம் கிடையாது என்று அமெரிக்கா கூறுவது உண்மையா? என்ற கேள்விகள் எழுகின்றன.</p>
<p>மாலைதீவில் நிரந்தரத் தளத்தை அமைக்கும் எந்தத் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும், இது வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடே என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது.</p>
<p>இது குறித்து அமெரிக்கத் தரப்பில் இருவர் விளக்கமளித்துள்ளனர்.</p>
<p>ஒருவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்.</p>
<p>இரண்டாமவர் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.</p>
<p>இவர்கள் இருவருமே நிரந்தரத் தளத்தை அமைக்கும் திட்டம் ஏதும் கிடையாது என்று அடித்துக் கூறியுள்ளனர்.</p>
<p>அவ்வாறாயின் சோபா எனப்படும் இந்த உடன்பாடு எதற்கானது? என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>முதலில் சோபா என்றால் என்ன? இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்று பார்க்க வேண்டும்.</p>
<p>அமெரிக்கா உள்ளிட்ட வலிமையான நாடுகள் தமது படைகளை பிற நாடுகள