<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>Puthinam News</title>
	<atom:link href="http://www.puthinamnews.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.puthinamnews.com</link>
	<description>Tamil News</description>
	<lastBuildDate>Thu, 17 May 2012 10:52:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>தமிழ் இன அழித்தலுக்கு நீதி கேட்டு அணி திரள சீமான் அழைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32403</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32403#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:47:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32403</guid>
		<description><![CDATA[தமிழ் இன அழித்தலுக்கு நீதி கேட்டு அணி திரள சீமான் அழைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-21267" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/03/seeman-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18.</p>
<p style="text-align: justify;">மூன்று ஆண்டுகள்<span id="more-32403"></span> ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் மக்களின் உறவுகளுக்கு இதுவரை நியாயம் கிட்டவில்லை.</p>
<p style="text-align: justify;">அங்கு நடந்தது திட்டமிட்ட தமிழினப் படுகொலைதான் என்பதை நிரூபிக்கும் சான்றுகளும், புகைப்படங்கள், அருகில் இருந்து பதிவு செய்யப்பட்ட காண்பொலிக்காட்சிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்று பலவும் சானல் 4 உள்ளிட்ட பல ஊடங்கங்களில் வெளிவந்தும் இன்று வரை உலகில் ஒரு நாடு கூட அது இனப் படுகொலைதான் என்று கூறவில்லை. எல்லோரும் போர்க் குற்றம் நடந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது என்றுதான் கூறுகின்றனரே தவிர, ஐ.நா.வின் இன அழித்தல் குற்றமும் தண்டனையும் என்கிற பிரகடனத்தின்படி, அங்கு இன அழித்தல் நடந்துள்ளது என்று கூறவில்லை. அதனை நிரூபிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா.வும் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.</p>
<p style="text-align: justify;">இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழினப் படுகொலை நடந்த முடிந்த மூன்றாவது ஆண்டு நினைவு நாளான மே 18ஆம் நாளன்று, தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரி கோவையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறது. இலங்கையில் நமது சொந்தங்கள் எதிர்கொண்ட கொடுமையான அந்தப் போரை இங்கிருந்த அரசுகளும், கட்சிகளும் தடுத்து நிறுத்தத் தவறியதால் ஏற்பட்ட இரணத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. அதனால் நமது கட்சியின் தொடக்கத்தையும் 2010ஆம் ஆண்டு மே 18ஆம் நாளில் வைத்தோம். தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னெடுக்க உருவான தமிழரின் அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டாண்டுக் காலத்தில் இனத்தின் விடுதலைக்கும், உரிமைகளுக்கும் என்னெற்ற போராட்டங்களை நடத்தியுள்ள நாம் தமிழர் கட்சி, தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பெற்ற கட்சியாகவும் வளர்ந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆயினும், இனத்தின் விடுதலையை நோக்கிய நமது போராட்டங்கள் நாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. நாம் கெட்கும் நியாயத்திற்கும் உலக நாடுகளின் மனித உரிமை ரீதியிலான முன்னெடுப்புகளுக்கும் இடையே பெரிய இடைவெளியுள்ளது. நம் இனத்தின் விடுதலை என்பது இன்றைக்கு சர்வதேச அரங்கில் இராஜதந்திர வழியில் நமது மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் பங்கு அளப்பரியது. நம் இனத்தின் விடுதலை எனும் இலக்கை எட்ட இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியதுள்ளது. அதற்கு இனத்தின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட செயலாற்றலும் மிகவும் அவசியமானதாகும்.</p>
<p style="text-align: justify;">இன்றைக்கு போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட நமது சொந்தங்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படாமல் சொந்த மண்ணிலேயே அநாதைகளாக, நடை பிணங்களாக இருந்து வருகின்றனர். சிங்கள பெளத்த இனவெறி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அவர்கள் சந்தித்துவரும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. அவர்களின் நிலையறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு, ராஜபக்சவிடம் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறது. நமது இனத்தின் நீண்ட நெடிய தியாகப் போராட்டத்தின் இலக்கான விடுதலை என்பதை அம்மக்களே விரும்பவில்லை என்று அங்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜூம், டி.கே.ரங்கராஜனும் ஊடகங்களிடம் பேசி திசை திருப்புகின்றனர். இப்படிப்பட்ட இனத் துரோக சூழலில்தான் இன்றளவும் தமிழினத்தின் தலைவிதி சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்கவே, இனத்தின் திரட்சியே விடுதலை எனும் இலக்கை நோக்கி நாம் நகர்ந்துக்கொண்டிருக்கிறோம். அது நமக்கு தேவையான ஆற்றலைத் தரும்.</p>
<p style="text-align: justify;">இனத்தின் வலிமையை உறுதிப்படுத்த வாருங்கள் கோவையை நோக்கி, பல்லாயிரக்கணக்கில் திரண்டு இனத்தின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றுவோம். மக்களின் எழுச்சியே மாற்றத்திற்கான அரசியல் புரட்சி என்பதை நிரூபிப்போம். மே 18 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் சிலையருகே கூடி, அங்கிருந்து பேரணியாய் புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இனத்தின் மீட்சிக்கான நடவடிக்கைத் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம், எம்மை இன விடுதலையை வெல்ல விழ விழ எழுவோம்.</p>
<p style="text-align: justify;">நாம் தமிழர் கட்சிக்காக,</p>
<p style="text-align: justify;">செந்தமிழன் சீமான்<br />
தலைமை ஒருங்கிணைப்பாளர்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32403</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/03/seeman-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/03/seeman.jpg" medium="image">
			<media:title type="html">seeman</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/03/seeman-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கைக் குழுவிடம் தெளிவான தீர்வை எதிர்பார்த்துள்ளது அமெரிக்கா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32399</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32399#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:45:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32399</guid>
		<description><![CDATA[இலங்கைக் குழுவிடம் தெளிவான தீர்வை எதிர்பார்த்துள்ளது அமெரிக்கா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25241" title="kilari" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" alt="" width="100" height="80" />ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளா<span id="more-32399"></span>ர்.</p>
<p style="text-align: justify;">வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கை குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் இலங்கையின் மனிதஉரிமைகள் குறித்து ஆர்வம் கொண்டுள்ள சில செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும், அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதற்கிடையே வெளிவிவகாரக் குழுவில் அங்கம் வகிக்கும் அமெரிக்க செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்தவாரம் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவினர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த, பீரிசிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுதியாக முடிவெடுக்கும்படி, வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்துமாறு கோரும் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு அனுப்பி வைத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">அதேவேளை, வெளிவிவகார அமைச்சருடன் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக இறுக்கமாகப் பேச வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் ஹிலாரி கிளின்ரனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32399</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari.jpg" medium="image">
			<media:title type="html">kilari</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்! &#124; அமைச்சர் வளர்மதி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32394</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32394#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:41:50 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32394</guid>
		<description><![CDATA[அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்! &#124; அமைச்சர் வளர்மதி]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/valarmathi-100x80.jpg" alt="" title="valarmathi" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-32395" />நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின்&#8230;</p>
<p>&#8230;உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில்<span id="more-32394"></span> ஒருவரான பா. வளர்மதி.</p>
<p>சென்னையில் நேற்று புதன்கிழமை 16ம் திகதி நடைபெற்ற அ.தி.மு.க அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி வெற்றிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.</p>
<p>தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற ஜெயலலிதா அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவில் அவரது அரசாங்கம் செய்த நல்ல திட்டங்கள் தொடர்பான படங்களும் விபரங்களும் அடங்கிய சி.டி ஒன்றும் வெளியிடப்பட்டது. சட்டசபை சபாநாயகர் மேற்படி சி.டியை முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.</p>
<p>அமைச்சர் வளர்மதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,</p>
<p>நமது முதல்வர் ஜெயலலிதா இதுவரை எதற்கும் அஞ்சியதில்லை. முன்னைய ஆட்சியாளர்களி;ன் ஆதரவாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூபாய் 250 கோடிக்கு மேல் பெறுமதியுள்ள சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.</p>
<p>நமது முதல்வருடைய அறிவும் ஆற்றலும் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது. அவருடைய அறிவும் துணிவும் இந்த சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது.</p>
<p>எதிர்காலத்தில் “அம்மா” அவர்கள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் ஒரு அமரத்தான் போகின்றார். அப்போது சுதந்திரப் பறவைகளின் பாட்டரங்கமாகத் முன்னர் திகழ்ந்து தற்போது அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்” என்றார் அமைச்சர் வளர்மதி</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32394</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/valarmathi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/valarmathi.jpg" medium="image">
			<media:title type="html">valarmathi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/valarmathi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>அனோமாவை தேடிச் சென்ற ஜனாதிபதி மகிந்த</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32389</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32389#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:32:46 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32389</guid>
		<description><![CDATA[அனோமாவை தேடிச் சென்ற ஜனாதிபதி மகிந்த]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-16339" title="mahinda_anoma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/mahinda_anoma-100x80.jpg" alt="" width="100" height="80" />பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">முன்னதாக, அவச<span id="more-32389"></span>ரமாக லண்டனில் இருந்து திரும்பிய டிரான் அலஸ் நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதையடுத்தே டிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அலரிமாளிகையில் நேற்றுக் காலை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய பின்னர் டிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.</p>
<p style="text-align: justify;">அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்று காலை நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதற்கிடையே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, டிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32389</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/mahinda_anoma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/mahinda_anoma.jpg" medium="image">
			<media:title type="html">mahinda_anoma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/mahinda_anoma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32384</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32384#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:27:42 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32384</guid>
		<description><![CDATA[போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32385" title="oslo09" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/oslo09-100x80.jpg" alt="" width="100" height="80" />நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர்&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்<span id="more-32384"></span> ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.</p>
<p style="text-align: justify;">ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மீள் நல்லிணக்கம் தொடர்பாக வாயளவில் அதிகம் பேசிவரும் தற்போதைய அரசாங்கம், நடைமுறையில் அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா மீதான அண்மைய ஜெனீவாத் தீர்மானம் காத்திரமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளபோதும், அவற்றை நடைமுறைப்படுத்தும் நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இல்லை. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வெளித்தலையீடு ஏதும் அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.</p>
<p style="text-align: justify;">ஆனால் அரசியல் தீர்வுக்குரிய உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்குரிய அடிப்படைகள் அங்கு இல்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்குரிய அடிப்படைகளும் இல்லை. ஒரு ஆண்டுக்கு மேலாக தற்போதைய சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">ஆனால் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு சாண் கூட முன் நகரவில்லை அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்கு பேச்சுவார்த்தையை ஒரு கருவியாகக் சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்டு வந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம் மற்றும் நோர்வே தமிழர் கற்கை மையம் ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இக்கருத்தரங்கு நோர்வே நாடாளுமன்றத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கினை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உதவி சபாநாயகர்களில் ஒருவருமான Marit Nybakk தலைமையேற்று நடாத்தியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர் இலங்கைக்கான முன்னாள் சமாமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.</p>
<p style="text-align: justify;">கருத்துரைகளைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எரிக் சொல்கெய்ம் ஆகியோர் பதிலளித்தனர்.</p>
<p style="text-align: justify;">இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதும், இலங்கைத்தீவின் தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவதும் மிக அவசியமானது என தனதுரையில் Marit Nybakk வலியுறுத்தினார்.</p>
<p style="text-align: justify;">சுரேஸ் பிரேமச்சந்திரன் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">நிறுவன மயப்படுத்தப்பட்ட, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கெதிரான இன அடக்குமுறையின் பல்வேறு பரிமாணங்களையும் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்த சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் தாயகத்தின் சமகால நிலைமைகள் தொடர்பாகவும் விளக்கினார்.</p>
<p style="text-align: justify;">மே 2009 ற்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பல்வேறு முனைகளிலும் திட்டமிட்ட முறையில் முற்றுமுழுதான இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் திட்டமிட்ட இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளும், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகளில் பௌத்த சிங்கள மயப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றது.</p>
<p style="text-align: justify;">தமிழர் தாயகத்தின் மக்கட்தொகைச் சமநிலையை மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினை உடைப்பதில் சிறிலங்கா அரசு முனைப்புடன் செயற்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கம் இரண்டு வகைப்பட்டது. தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வு தொடர்புபட்டது ஒன்று. இயல்பு வாழ்வை ஏற்படுத்துவது, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது அதில் அடங்குகின்றன. நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கி நகர்வது இரண்டாவதாகும். ஆனால் எவற்றிலுமே முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.</p>
<p style="text-align: justify;">ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப்பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மணலாறு, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை கரையோர, எல்லைப் பிரதேசங்கள் உட்பட்ட தமிழர் தாயகப் பிரதேசங்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் பௌத்த சிங்கள மயப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை புள்ளிவிபரங்களோடு பிரேமச்சந்திரன் விளக்கினார்.</p>
<p style="text-align: justify;">தேசிய இன முரண்பாட்டிற்குரிய அரசியல் தீர்வினை எட்டுவதற்குரிய அக்கறையை சிறிலங்காவின் எந்தவொரு அரசாங்கமும் உரிய முறையில் முன்னெடுக்கவில்லை. தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மற்றும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் இனக்கலப்பு மற்றும் தமிழர் விரோத சீரழிவு நடவடிக்கைகளூடாகப் பெற்ற கடந்தகாலப் பட்டறிவுகள், தமிழ் மிதவாதத் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் கூற்றினை எனக்கு நினைவூட்டுகின்றது. ‘</p>
<p style="text-align: justify;">இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய அனைத்து வழிகளிலும் நான் முயன்றுவிட்டேன். எல்லா முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. எமது இழந்த இறைமையை மீட்டெடுப்பதைத் தவிர வேறெந்த வழிகளும் என்னிடம் இல்லை’ என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழிவகுத்த கூற்றினை சுரேஸ் பிரேமச்சந்திரன் நினைவு கூர்ந்தார்.</p>
<p style="text-align: justify;">35 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் பயங்கரவாதத்தின் பெயரின் கீழ் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. ஒரு முழுவட்டத்தின் பின் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளோம். தமிழ் மக்கள் நியாயமான உரிமைகளுக்காகக் போராடுகின்றார்கள் என்பதை உலகத்திற்கு மெய்ப்பிப்பதற்கு பல நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மிகவும் மோசமான அலைந்துளல்வு வாழ்க்கைக்குள் திட்டமிட்ட முறையில் தள்ளப்பட்டு வருகின்ற போதும், சுயாட்சி தொடர்பான உரிமைகளைச் சலுகைகளுக்காக விலைகொடுக்கத் தமிழ் மக்கள் தயாராக இல்லை.</p>
<p style="text-align: justify;">தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திடம் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது இருப்பா, அழிவா, கௌரவமான உயிர் வாழ்தலா அல்லது நிரந்தர அடிமைத்தனமா ஆகியன சார்ந்த பிரச்சினையாகும் என்று தனதுரையின் நிறைவில் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">எரிக் சொல்கெய்ம் உரை:</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென எரிக் சொல்கெய்ம் தனதுரையில் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">சொல்கெய்ம் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வுக்கு அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவிற்கும் அற்றுப் போய்விடும்.</p>
<p style="text-align: justify;">தமிழ் மக்கள் பாரிய அழிவுக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களே தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டுமென்ற பரவலான கருத்து அனைத்துலக மட்டத்தில் நிலவுகின்றது.</p>
<p style="text-align: justify;">போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்குரிய பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. பிரபாகரனும் அந்த அவலங்களைத் தவிர்ப்பதற்கு முனையவில்லை.</p>
<p style="text-align: justify;">2000ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வெற்றியை அடுத்து, படைபலத்தில் விடுதலைப்புலிகள் உச்சநிலையில் இருந்த போது சமாதான முயற்சிகள் தொடங்கப்பட்டது. இப்புறநிலையில் சமாதானப் பேச்சுகளைச் சாதகமாகக் கையாண்டிருப்பின் கூட்டாட்சித் தீர்வினை எட்டியிருக்க முடியும்.</p>
<p style="text-align: justify;">கூட்டாட்சித் தீர்வு பற்றி ஆராய்வதைத் தட்டிக் கழித்தமை, அனைத்துலக சமூகத்திடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தியமை, இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தமை ஆகியன விடுதலைப் புலிகளின் தலைவர் இழைத்த தவறுகள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது எரிக் சொல்கெய்ம் விமர்சனங்களை முன்வைத்தார்.</p>
<p style="text-align: justify;">அதேவேளை அனைத்துலக சமூகமும் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தியது. அனைத்துலக சமூகம் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியிருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இலங்கைத்தீவின் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு காலம் எடுக்கும். அனைத்துலக சமூகம் அக்கறை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடங்களில் இல்லை. உலக பொருளாதார நெருக்கடியும், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, எகிப்த் மற்றும் மத்திய கிழக்கு முரண்பாடுகளுமே அனைத்துலக சக்திகளின் அதீத கவனக்குவிப்பிற்குரிய பட்டியலில் முதலிடங்களில் உள்ளன.</p>
<p style="text-align: justify;">தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32384</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/oslo09-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/oslo09.jpg" medium="image">
			<media:title type="html">oslo09</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/oslo09-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32381</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32381#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:24:10 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32381</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு: இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-15301" title="mulli" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/mulli-100x80.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட போர் 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது<span id="more-32381"></span>. இந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை இராணுவம் கொன்று குவித்தது.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கான பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை அதிகரித்துள்ளது. அத்துடன் எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி, மகாபோதி நிலையம், உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இங்கு, வழக்கத்தை விட அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை சார்ந்த பணியகங்களுக்கு வரும் பொதுமக்களும், காவல்துறையினரின் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32381</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/mulli-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/mulli.jpg" medium="image">
			<media:title type="html">mulli</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/mulli-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32376</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32376#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:17:05 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32376</guid>
		<description><![CDATA[ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32377" title="sign5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sign5-100x80.jpg" alt="" width="100" height="80" />ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் &#8211; இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வு இன்று<span id="more-32376"></span> மாலை 6:00 மணியளவில் மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை குறுகிய காலத்தில் தோழர் திருமலை சிறப்பாக செய்திருந்தார். இந்தியப் பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்தினை இட்டு இந்நிகழ்வினை தொடங்கிவைத்தார். இரண்டாம் கையெழுத்தினை அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் மூன்றாம் கையெழுத்தினை மதிமுக பொதுச்செயலாளர் தோழர் வைகோ அவர்களும் இட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவஹருல்லா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தோழர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை இயக்க தோழர் பண்ருட்டி வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் தோழர் தனியரசு, பெரியார் திராவிடர் கழகத்தோழர் தபசி.குமரன், மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழரைக்காப்போம் அமைப்பின் தோழர் செந்தில், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மருத்துவர் எழிலன், பாவலர் அறிவுமதி, பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.</p>
<p style="text-align: justify;">மெரீனா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அமைப்பின் தோழர்கள் ஈழ விடுதலையின் அவசியத்தை வலியுறுத்து விளக்கி துண்டறிக்கையினை கொடுத்து கையெழுத்திட வைத்தனர்.</p>
<p style="text-align: justify;">பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பலரும் தமிழீழத்திற்கான தம் ஆதரவினை தெரிவித்து கையெழுத்திட்டனர். தமிழக காவல்துறையிலிருக்கும் உணர்வாளர்களும் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவினை தெரிவித்து கையெழுத்தினை இட்டது தோழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32376</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sign5-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sign5.jpg" medium="image">
			<media:title type="html">sign5</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sign5-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழதமிழ் இனத்தின் இனப்படுகொலையை நெஞ்சதில் நிறுத்தி போராட வேண்டும்: கொளத்தூர் மணி &#124; நெடுமாறன் (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32371</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32371#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 16:39:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32371</guid>
		<description><![CDATA[ஈழதமிழ் இனத்தின் இனப்படுகொலையை நெஞ்சதில் நிறுத்தி போராட வேண்டும்: கொளத்தூர் மணி &#124; நெடுமாறன் (காணொளி இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-4001" title="nedumaaran_anna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" alt="" width="100" height="80" />ஈழத்தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நெஞ்சகத்தில் நிறுத்தி தொடந்து போராடவேண்டும் என பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மே 19 திகதி லண்<span id="more-32371"></span>டனில் நடக்கவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுக்காக அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுமாறு உலகத்தமிழர் இயக்கத்தின் தலைவர் நெடுமாறனும் அறைகூவல் விடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் குறிப்பிடுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவேண்டும்.</p>
<p style="text-align: justify;"><iframe src="http://www.youtube.com/embed/ROP24MCvsI0" frameborder="0" width="640" height="360"></iframe></p>
<p style="text-align: justify;"><iframe src="http://www.youtube.com/embed/AlEJ6t4vKTQ" frameborder="0" width="640" height="360"></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32371</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya.jpg" medium="image">
			<media:title type="html">nedumaaran_anna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>உணர்வு மிக்க சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32367</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32367#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 16:21:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32367</guid>
		<description><![CDATA[உணர்வு மிக்க சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-16693" title="pulam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/pulam-100x80.jpg" alt="" width="100" height="80" />உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது.</p>
<p style="text-align: justify;">ஜம்பதாயிரத்திற்<span id="more-32367"></span>கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18.<br />
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்கள் மீதும் வீர மறவர்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அதிபாரக்குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் வீசி சிங்களம் விதைத்த மனிதப் பேரவலத்தில் தமிழ்மக்களின் குரல்கள் மரணத்திற்குள் அமிழ்தப்பட்ட நாள் மே18.<br />
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி பல்லாயிரம் போராளிகளைச் சிறைப்பிடித்து பல்லாயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கி எஞ்சிய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மிகப்பெரிய மனித அவலத்தை சிறிலங்காவின் இனவெறி அரசு நடாத்தியிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">உணர்வு மிக்க சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!<br />
2009ம் ஆண்டு மேமாத நடுப்பகுதியில் ஈழத்தமிழர்களிற்கு வரலாறுகாணாத பேரழிவினை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வினைச் சிதைத்து அநீதிகளையும் அக்கிரமங்களையும் செய்த மகிந்தஅரசாங்கம் முப்படைகளோடு முள்ளிவாய்க்கால் வெற்றிவிழாவினை இக்காலப்பகுதியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடிவருகின்றது.<br />
மறுபுறத்தில் உலக வல்லாதிக்க நாடுகள் இணைந்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனிதப்படுகொலைக்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்திருப்பதுடன் சுயாதீன விசாரணையின் அவசியத்தினையும் வலியுறுத்திவருகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">எமது இனத்திற்கு ஏற்பட்ட உயிரழிவுகள் காலத்தால் ஈடுசெய்யமுடியாதவை. எனினும் தமிழ்மக்களின் வாழ்வினை சீரழித்த சிங்கள அரசாங்கத்தினை சர்வதேசத்தின் முன் நிறுத்தி நீதி கேட்கவேண்டும். இதனை வயுறுத்தியும்; ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூர்வதற்காகவும், தமிழ் இனஅழிப்பு நாளான சிவந்த மே18 நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி 14:30 மணியளவில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசனின் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<br />
படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களினதும் எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடிய வீர மறவர்களின் தியாகத்தினையும் நெஞ்சினில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துவதற்கும், மனித அவலம் இடம்பெற்ற நாளான மே 18ம் திகதியினை தமிழ் இனஅழிப்பு நாளாக அறிவித்து போர்குற்ற விசாரணைகளை வலியுறுத்துவதற்குமாகவும், காலத்தின் தேவைஅறிந்து அனைத்து தமிழ்மக்களையும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இடம் பெற்ற கொடூர யுத்தத்தின் போது உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கும் சுவிசில் வசிக்கும் உறவினர்கள் அவர்களது உருவப்படங்களை ஜெனீவா முன்றலுக்கு 13:30 மணியளவில் எடுத்துவந்து வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 076 224 88 59, 078 713 09 18, 078 662 93 06 என்னும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.<br />
நன்றி.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32367</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/pulam-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/pulam.jpg" medium="image">
			<media:title type="html">pulam</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/pulam-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பொன்சேகாவை போல சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும்! மனோ</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32363</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32363#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 15:46:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32363</guid>
		<description><![CDATA[பொன்சேகாவை போல சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும்! மனோ ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-30234" title="mano" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" alt="" width="100" height="80" />பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தமது வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்ட வட-கிழக்கு, மலையக, கொழும்பு தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்ய<span id="more-32363"></span>ப்படவேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஆண்டாண்டு காலமாக சிறை வாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரைத் துடைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,</p>
<p style="text-align: justify;">சரத் பொன்சேகா சிறைக்கு போக முன், சிறை வாழ்க்கை அனுபவிக்க தொடங்கிய தமிழ் அரசியல் கைதிகள், இனி சரத் பொன்சேகா விடுதலை ஆன பின்னரும் தொடர்ந்து சிறையில் இருக்கப்போவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயம் அல்ல.</p>
<p style="text-align: justify;">ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் நாம் தொடர்ந்து பங்களித்துள்ளோம். இன்று அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எமது மகிழ்ச்சி முழுமையானது அல்ல.</p>
<p style="text-align: justify;">நீண்ட காலமாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம், பூசா ஆகிய சிறை கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பிரச்சினைமுற்று பெறுவதன் மூலமே அரசியல் கைதிகள் பிரச்சினை இந்நாட்டில் முழுமையாக முடிவுக்கு வர முடியும்.</p>
<p style="text-align: justify;">சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்க, இந்திய அரசுகளின் அழுத்தங்கள் காரணம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் கைதிகளின் மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இந்நாடு புரிந்து கொள்ள வேண்டும். மலையகம், வட-கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த தமிழர்கள் பலர் பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இவர்களில் ஒரு சிலர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. இன்னும் சிலரின் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதில் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்து-கிறிஸ்தவ மத துறவிகளும் இருக்கின்றார்கள். திருமணம் செய்த நிலையில் சடுதியாக கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். பலரது இளமைக்காலம் முழுக்க சிறையில் முடிந்து போயுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களும் இருக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஒரேதினத்தில் விடுதலை செய்யுங்கள் என நாம் கோரவில்லை. இவர்கள் தொடர்பில், விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு, துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நீண்ட நாட்கள் சிறையில் இருந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஏனையோர் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதுவே மக்கள் கண்காணிப்பு குழுவின் கோரிக்கை.</p>
<p style="text-align: justify;">இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறை கொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியுள்ளேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவரும்படி கூட்டமைப்பு சொல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும்படி நான் இன்று இலங்கையின் அமெரிக்க, இந்திய தூதுவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32363</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano.jpg" medium="image">
			<media:title type="html">mano</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படும் மே 18 போர்க்குற்ற நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32359</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32359#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 15:43:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32359</guid>
		<description><![CDATA[கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படும் மே 18 போர்க்குற்ற நாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-6766" title="imanu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/imanu-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம்&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;ஆண்டு மே 18 போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படுகின்ற போர்க்குற்ற நாள் நிகழ்வில் இம் முறை முக்கி<span id="more-32359"></span>ய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள் என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் உலக சமூகத்திடம் கொண்டு செல்லவும், நீதி விசாரணைக்கு உற்படுத்தவும் முன்நின்று உழைக்கின்ற முக்கிய பிரமுகர்கள் பலர் பல பயனுள்ள கருத்துக்களை மக்களுக்குத் தரவுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், அனைத்துக் கட்சித் தமிழ் விவகாரங்களை முன்னெடுக்கின்ற பாராளுமன்ற கூட்டுகுழுவின் உபதலைவருமான Ms. Siobhain McDonagh அவர்கள் உறையாற்றவுள்ளார். இவர் முழுக்க முழுக்க இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைப்பவர்.</p>
<p style="text-align: justify;">அதே போன்று போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைக்கும் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளாரும் சிறப்புரையாற்றவுள்ளார் மற்றும் கனடிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் அனைவரது உரைகளும் போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைத்து வரும் கனடிய தேசத்தோடு நாமும் கை கோர்த்து சேர்ந்து உழைப்பதற்கு வலுச்சேர்க்கும் என்பது உறுதி.</p>
<p style="text-align: justify;">மே 18, போர்க்குற்ற நாளில், இலங்கையின் போர்க்குற்றத்தை இனி எப்படி மிகப்பெரிய மாற்றத்துடன் நகர்த்த முடியும் என்பது பற்றியும், தமிழீழ மக்களின் விடியலுக்கு வீச்சாக எப்படி உழைக்கவேண்டும் என்பது பற்றியும் உறையாற்றவுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் அனைவரது உழைப்புக்கும் ஒன்றுபட்டு உரம் சேர்ப்பதற்கு மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும் மனதில் நிறுத்தி Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் அணியணியாய் ஆயிரமாயிரமாய் ஒன்று கூடுவோம்.</p>
<p style="text-align: justify;">மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை<br />
தொலைபேசி: 1.866.263.8622 &#8211; 416.646.7624<br />
மின்னஞ்சல்: info@ncctcanada.ca</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32359</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/imanu-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/imanu.jpg" medium="image">
			<media:title type="html">imanu</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/imanu-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஹிலாரி &#8211; பீரிஸ் 18ல் சந்திப்பு!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32355</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32355#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 15:30:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32355</guid>
		<description><![CDATA[ஹிலாரி - பீரிஸ் 18ல் சந்திப்பு!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25295" title="kilari" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" alt="" width="100" height="80" />நாளை மறுதினம் 18-ம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டனை சந்திக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய இருக்கும் முக்கிய செய்தியைக் கூறவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">உத்தியோகபூர்வ<span id="more-32355"></span> விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ் தலை மையிலான இலங்கையின் உயர் மட்டக்குழுவொன்று நேற்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதன்போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரியிடம் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளது என அறியமுடிகிறது. சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு இலங்கையை அமெரிக்கா தொடர்ச்சியாக அழுத்திவரும் நிலையில் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்ததான முழுமையான விபரங்களையும் வாசிங்டனிடம் கையளிப்பதற்கு மகிந்த அரசு தீர்மானித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இது விடயம் சம்பந்தமான அறிக்கையை கிலாரி கிளின்டனிடம் கையளிப்பார்.</p>
<p style="text-align: justify;">ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடுமையாக மோதிக் கொண்ட இரு நாடுகளும் அதன் பின்னர் முதற்தடவையாக சந்தித்து பேசுகின்றமையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய அண்மையில் இலங்கையில் உருவாக்கப்பட்ட மொழி அமுலாக்கத் திட்டம் குறித்து அதன் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரதுங்க வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் விளக்கவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதேவேளை, சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் எனக் கோரி வெள்ளை மாளிகையிடம் 25 ஆயிரம் பேர் கையயாப்பமிட்ட மகஜரை சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கையளித்தனர். சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32355</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1.jpg" medium="image">
			<media:title type="html">kilari</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பொன்சேகா இந்த வாரத்தில் விடுதலை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32352</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32352#comments</comments>
		<pubDate>Wed, 16 May 2012 15:24:05 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32352</guid>
		<description><![CDATA[பொன்சேகா இந்த வாரத்தில் விடுதலை ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-16928" title="sarath_court" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/sarath_court-100x80.jpg" alt="" width="100" height="80" />சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா &#8220;இந்த வாரத்தில்&#8217; விடுதலை செய்யப்படுவார் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அந்த அதிகாரி நே<span id="more-32352"></span>ற்று செவ்வாய்க்கிழமை இந்திய நாளேடான தினமணிக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">பொன்சேகா &#8220;விரைவில்&#8217; விடுவிக்கப்படுவார் என்று ராஜபக்ச திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். இதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டபோது அந்த அதிகாரி மேற்கண்ட பதிலைத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 2010 பிப்ரவரி 8-ம் நாள் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெவ்வேறு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின்படி அவருக்கு மொத்தம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், வரும் 18-ம் தேதி அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் சந்தித்துப் பேச இருக்கிறார். அதற்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்படலாம் என்று முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32352</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/sarath_court-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/sarath_court.jpg" medium="image">
			<media:title type="html">sarath_court</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/sarath_court-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32347</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32347#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 19:36:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32347</guid>
		<description><![CDATA[26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-23361" title="Sornam_anna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" alt="" width="100" height="80" />திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.</p>
<p style="text-align: justify;">மானிப்பாயில் பிற<span id="more-32347"></span>ந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.</p>
<p style="text-align: justify;">பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.</p>
<p style="text-align: justify;">இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.</p>
<p style="text-align: justify;">திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.</p>
<p style="text-align: justify;">ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.</p>
<p style="text-align: justify;">சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.</p>
<p style="text-align: justify;">இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.</p>
<p style="text-align: justify;">ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.</p>
<p style="text-align: justify;">இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.</p>
<p style="text-align: justify;">இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.</p>
<p style="text-align: justify;">“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.</p>
<p style="text-align: justify;">இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.</p>
<p style="text-align: justify;">இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.</p>
<p style="text-align: justify;">எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.</p>
<p style="text-align: justify;">விதுரன்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32347</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna.jpg" medium="image">
			<media:title type="html">Sornam_anna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/05/Sornam_anna-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள்: அனலை நிதிஸ் ச. குமாரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32343</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32343#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 19:32:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32343</guid>
		<description><![CDATA[தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள்: அனலை நிதிஸ் ச. குமாரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-29178" title="war" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x80.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில், உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">கொத்துக் கொத்தாக பல்லாயிரம் மக்களை பலியெடுத்தது சி<span id="more-32343"></span>ங்களம், அப்பாவிகளை அழித்த அரக்கர்கள் இன்று உலக அரங்கில் உலாவி வருகிறார்கள். நீதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெறுகிறது.</p>
<p style="text-align: justify;">அடிக்காமல் அடித்ததாக பொய்ப் புகார்களை கொடுத்தாலே அப்பாவிகளை கைது செய்து தண்டிக்கும் மேற்குலகத்தின் சட்டம், பல்லாயிரம் மக்களை அழித்ததை செய்மதி ஊடாக பார்த்த வேளையில் கூட, அவர்களைக் காப்பாற்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்குலக நாடுகள் எடுக்கவில்லை. தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டம் என்கிற வாதத்திற்கு ஏற்றவாறே செயற்பட்டன மேற்குலக நாடுகள்.</p>
<p style="text-align: justify;">சாகடிக்கப்பட்ட மக்களை நினைவேந்தும் நிகழ்வுகளாக மட்டும் இவற்றை பார்க்காமல், பெரும் எண்ணிக்கையில் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உலக நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவதே இறந்த பல்லாயிரம் தமிழ் உறவுகளுக்கு உலகத் தமிழர்கள் தரும் உண்மையான காணிக்கையாக இருக்க முடியும்.</p>
<p style="text-align: justify;">சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்இறுதி யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து தமிழர்கள் பெருவாரியாக தாம் வாழும் நாடுகளில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">மே 19-ஆம் நாளன்று இங்கிலாந்தில் அமைந்திருக்கும் ரபால்கர் சதுக்கத்தில் மாபெரும் நினைவெழுச்சி நிகழ்வு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடமான ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் உள்ள அல்பேட் கம்பல் சதுக்கத்தில் போர்க்குற்ற நாள் நிகழ்வு மே 18-ஆம் தேதியன்று இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">19-ஆம் திகதி ஒன்ராரியோ பாரளுமன்ற குயின்ஸ்பார்க் திடலில் மீள் எழுச்சி நாள் நிகழ்வு கனடிய தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் மே 12-தேதி முதல் பல்வேறு பகுதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">நீதி கேட்ட கண்ணகி சிலையருகே, மே 20-ஆம் தேதி சென்னை மெரினாவில் தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூரும் வகையில், நிகழ்வுகளை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">இந்திய மத்திய அரசுக்கு தமிழரின் பலம் என்னவென்பதை பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வதன் மூலமாக காட்ட முடியும் என்று கூறுகிறார்கள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியுள்ள அமைப்பினர்.</p>
<p style="text-align: justify;">டென்மார்க், நோர்வே, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் மக்கள் மற்றும் பிற இனத்தவர்கள் கூட கலந்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருக்கும் அமைப்பினர்.</p>
<p style="text-align: justify;">விடுதலையை துரிதப்படுத்த வேண்டிய நேரமிதுசிங்கள ஆக்கிரமிப்பு படைகளிடமிருந்து பல்வேறு விதமான நெருக்குதல்களை நாளும் பொழுதும் சந்தித்துக் கொண்டு வாழுகிறார்கள் தமிழர்கள்.</p>
<p style="text-align: justify;">மூச்சு விடக்கூட சிங்கள ஆக்கிரமிப்பு படையினரிடம் கேட்டுத்தான் விட வேண்டுமென்கிற நிலையிலேயே தமிழர்கள் தமது ஈழத் திருநாட்டில் வாழ்கிறார்கள். இப்படியானதொரு இழிவு வாழ்வை அகற்ற வேண்டுமாயின் உலகத் தமிழர்கள் தமது ஆதங்கங்களை தாம் வாழும் நாடுகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்கா அரசின் அப்பட்டமான பல அரச பயங்கரவாத ஒளி நாடாக்களை ஒளிபரப்பி வேற்று இனத்தவரும் அறியும்படி பல்வேறு விதமான வகையில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழர்களை ‘புலிப் பயங்கரவாதிகள்’ என்று கூறியவர்கள் எல்லாம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை சரியானதென்கிற வாதத்தை இப்போது முன் வைக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழர்களுக்கு காலம் வழங்கியிருக்கும் இப் பொன்னான காலத்தை தக்க முறையில் பாவித்து தமிழீழத் தனியரசை நிறுவ வழி அமைத்துக் கொடுப்பதே இறந்த மக்களுக்கு உலகத் தமிழர்கள் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். தமிழீழ மக்களின் தார்மீகக் கோரிக்கையை உலகறியச் செய்ய வேண்டிய கடமை உலகம் அனைத்தும் செறிந்து வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு.</p>
<p style="text-align: justify;">மண் மீட்புப் போரிலே பங்கெடுத்தும், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழிகளில் ஆதரவளித்தும் தம் உயிர்களை அர்ப்பணித்த அனைத்து மக்களையும் கௌரவிப்பது தமிழர்களின் தார்மீகக் கடமை. ஆண்டுகள் வேகமாகவே உருண்டோடுகின்றன.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு நாளும் பொன்னான நாள் என்று கருதி அடுத்த வருடம் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழீழத்தில் என்று கூறி செய்ய வேண்டிய பணிகளை தக்க தருணத்தில் செய்து விடுதலையைத் துரிதப்படுத்துவோமாக.</p>
<p style="text-align: justify;">nithiskumaaran2010@gmail.com</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32343</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war.jpg" medium="image">
			<media:title type="html">war</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32338</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32338#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 19:28:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32338</guid>
		<description><![CDATA[மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32339" title="mulli1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mulli1-100x80.jpg" alt="" width="100" height="80" />பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினை<span id="more-32338"></span>வு கூரும் வகையில் நேற்று இரவு யாழ் பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சிவரொட்டிகளை மேற்கொண்டனர் .</p>
<p style="text-align: justify;">வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது: &#8220;முள்ளிவாய்கால் முடிவல்ல&#8221;,&#8221;வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்&#8221;,&#8221;உரிமைக்காய் குரல் கொடுப்போம் நீதிக்காய் போராடுவோம் &#8220;, &#8220;உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை&#8221;,தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள் &#8221; என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சிவரொட்டிகளை வெளிப்படுத்தினர் .</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதின் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள் . அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32338</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mulli1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mulli1.jpg" medium="image">
			<media:title type="html">mulli1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mulli1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவிடத்தில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார வணக்க பாடல்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32332</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32332#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 19:24:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32332</guid>
		<description><![CDATA[மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால், மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் வாரத்துக்கான வணக்கப் பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்-லாகூர்னெவப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களது நினைவிடத்தில், இந்த நினைவேந்தல் வணக்கப்பாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது. மே-12 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்துக்குரிய வணக்கப் பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகத்தினால் இது வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. பாடலுக்கான வரிகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32333" title="tamilcd04" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/tamilcd04-100x80.jpg" alt="" width="100" height="80" />மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால்,</p>
<p style="text-align: justify;">மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் வாரத்துக்கான வணக்கப் பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது<span id="more-32332"></span>.</p>
<p style="text-align: justify;">பிரான்ஸ்-லாகூர்னெவப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களது நினைவிடத்தில், இந்த நினைவேந்தல் வணக்கப்பாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">மே-12 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்துக்குரிய வணக்கப் பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகத்தினால் இது வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பாடலுக்கான வரிகளை திலோபா எழுதியிருக்க, ஸ்ரார் சிறியின் இசையில் மயிலையூர் இந்திரன் மற்றும் புலியாட்சி ஆகியோர் பாடியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்த நினைவேந்தல் வணக்கப் பாடலின் இறுவட்டினை பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.</p>
<p style="text-align: justify;">நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன், கலாச்சார பண்பாட்டுத்துறை துணை அமைச்சர் மைக்கல் கொலின்ஸ் மற்றும் தகவற்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ்) ஆகியோர் கலைஞர்களுக்கான நினைவேட்டினை வழங்கி கௌரவித்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">நினைவேந்தல் வாரத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் வணக்கத்திற்குரிய பாடலாக இது ஒலிக்கப்பட்டே, நிகழ்வுகள் தொடங்குவதாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32332</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/tamilcd04-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/tamilcd04.jpg" medium="image">
			<media:title type="html">tamilcd04</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/tamilcd04-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டும்: மகேந்திரன் (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32328</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32328#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 19:19:15 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32328</guid>
		<description><![CDATA[ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டும்: மகேந்திரன் (காணொளி இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-2558" title="Makkal" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Makkal05.JPG" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்காலில் மரணமுற்ற மக்களை பாதுகாக்க முடியாத ஒரு குற்றத்தை செய்துவிட்ட தமிழர்களாகிய நாம், அவர்களின் மரணத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக அவர்கள் எந்தக் காரணத்திற்காக தம் இன் உயிர்களை அந்த மண்ணிலே ஈந்தார்களோ,</p>
<p style="text-align: justify;">அந்த ஈகத்தின் தொ<span id="more-32328"></span>டர்ச்சியாக அவர்களுடைய ஆசைகளை, கனவுகளை, இலட்சியங்களை நிறைவேற்ற கூடிய வகையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்கின்ற உணர்வு தமிழகத்திலே மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.</p>
<p style="text-align: justify;">நான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, அண்மைக் காலத்திலே அடித்தள எழுச்சி என்பது மிகக் கூடுதலாக இருக்கின்றது. அதனுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">எனவே இந்தப் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் மே 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தப்பட இருக்கின்ற பேரெழுச்சியில் மக்கள் வெள்ளத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்கின்ற தமிழகத்தினுடைய விருப்பினை, வேண்டுகோளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் மகேந்திரன் தனது செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;"><iframe src="http://www.youtube.com/embed/5dNb7wSiwtQ" frameborder="0" width="640" height="360"></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32328</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Makkal05.JPG" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Makkal05.JPG" medium="image">
			<media:title type="html">Makkal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>லண்டன் வரவுள்ள போர்க்குற்ற வாளி மகிந்தவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32320</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32320#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 14:27:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32320</guid>
		<description><![CDATA[லண்டன் வரவுள்ள போர்க்குற்ற வாளி மகிந்தவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-29939" title="WAR_CRIMINAL_mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாச<span id="more-32320"></span>னத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.</p>
<p style="text-align: justify;">இதன் முதற் கட்டமாக மகிந்தவின் லண்டன் விஜயத்தை தடுத்து நிறுத்தக்கோரும் தபால் அட்டைகளை பிரித்தானிய மகாராணிக்கு அனுப்பும் போராட்டத்தினை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். இதனை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனையும் மீறி மகிந்த லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த, அவரது பாதுகாப்புப் பிரிவு கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர்க்குற்ற வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து இலங்கை ஜனாதிபதியின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் நீக்கம் செய்திருந்தது.</p>
<p style="text-align: justify;">அத்தோடு பிரித்தானியாவில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பாகவும் திடீரென நடாத்திய முற்றுகைப் போராட்டத்தால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச மாற்று வழியூடாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">அதனையும் எப்படியோ அறிந்த தமிழ் மக்கள் அங்கும் சென்று முற்றுகைப் போராட்டம் நடாத்தியதால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச நிலைமைகள் சிக்கலடைந்ததால் உடனடியாகவே பிரித்தானிய காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்போடு வெளியேறி அன்று இரவே கொழும்பு சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32321" title="uk-PostCard1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard1.jpg" alt="" width="500" height="345" /><br />
<img class="size-full wp-image-32322" title="uk-PostCard2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard2.jpg" alt="" width="500" height="345" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32320</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" medium="image">
			<media:title type="html">WAR_CRIMINAL_mahinda</media:title>
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard1.jpg" medium="image">
			<media:title type="html">uk-PostCard1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard1-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard2.jpg" medium="image">
			<media:title type="html">uk-PostCard2</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/uk-PostCard2-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஹிலாரியின் பிடியில் சிக்கப் போகிறார் ஜி.எல்.பீரிஸ்?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32315</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32315#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 14:19:46 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32315</guid>
		<description><![CDATA[ஹிலாரியின் பிடியில் சிக்கப் போகிறார் ஜி.எல்.பீரிஸ்?]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-9666" title="gl" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/gl.jpg" alt="" width="100" height="80" />அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் இன்று வொசிங்டன் புறப்படவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தச் சந்திப்புக்காக, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, நாடாளும<span id="more-32315"></span>ன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிகச்செயலர் சேனுகா செனிவிரத்ன, பீரிசின் இணைப்புச்செயலர் கம்லத் ஆகியோர் இன்று கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">எனினும் இந்தப் பயணத்துக்கு முன்னதாக, மகந்த ராஜபக்ச அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">பீரிசின் வொசிங்டன் பயணத்துக்கு முன்னதாக அரசின் செயற்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தம்மிடம் சமர்ப்பிக்க முன்னர் இந்த செயற்திட்டத்தை கொழும்பில் அதை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கடசிகளின் கருத்துகளை அறிந்து கொண்ட பின்னர் செயற்திட்டத்தை வகுக்க ஜனாதிபதி மகிந்த முடிவு செய்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் தமது கருத்துகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அத்துடன், முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சே, செயற்திட்டத்தை தயாரித்து, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதெனத் திட்டமிடப்பட்டது.</p>
<p style="text-align: justify;">பின்னர், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து செயற்திட்டத்தைத் தயாரிக்க சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தலைமையிலான குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த செயற்திட்டம் தயாரிப்புப் பணி இன்னமும் முடிவடையவில்லை என்பதுடன், அமெரிக்கா கேட்டுக் கொண்டபடி, கொழும்பில் வெளியிடப்படவும் இல்லை. இந்தநிலையில் வெறும் கையுடனேயே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்று வொசிங்டன் புறப்படவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">செயற்திட்டம் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்து அமெரிக்காவும் அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">கடந்தவாரம் வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவானதொரு திட்டத்துடன் தான் பீரிஸ் வொசிங்டன் வர வேண்டும் என்றும், வெறும் கையுடன் வரக் கூடாது என்றும் கூறியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் வெறும் கையுடன் வொசிங்டன் செல்லும் பீரிஸ் ஹிலாரி கிளின்ரனிடம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என்றும் கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32315</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/gl.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/gl.jpg" medium="image">
			<media:title type="html">gl</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கண்ணிவெடிக் கதைகளெல்லாம் மக்களை ஏமாற்றும் சோடிக்கப்பட்ட கற்பனை!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32312</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32312#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 14:13:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32312</guid>
		<description><![CDATA[கண்ணிவெடிக் கதைகளெல்லாம் மக்களை ஏமாற்றும் சோடிக்கப்பட்ட கற்பனை!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-29151" title="karuna_viki" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/karuna_viki.jpg" alt="" width="100" height="80" />வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியுமானால் ஏன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென கேள்வியெழுப்பும் நவசமசமாஜக் கட்சி கண்ணிவெடிக் கதைகள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக சோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகளாகுமென்றும் தெரிவித்தது.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக ந<span id="more-32312"></span>வசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">உள்நாட்டில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதோடு, நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அதேபோன்று சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">எனவே உள்நாட்டு மக்களின் அரச எதிர்ப்பலைகளை திசை திருப்பவும், அரசியல் பலத்துடன் மக்கள் ஆதரவுடன் அரசாங்கம் இருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளைக் கலைத்து அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தல்களை நடத்தவுள்ளது.</p>
<p style="text-align: justify;">வடபகுதி மக்களுக்கு இன்று ஜனநாயகம் சிவில் நிர்வாகம் தேவைப்படுகிறது. எனவே அங்கு தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சோடிக்கப்பட்ட கதையைச் சொல்லி தேர்தல் நடத்தப்படாமைக்கு கதை சொல்கிறது.</p>
<p style="text-align: justify;">அப்படியானால் எப்படி அங்கு பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அரசாங்கத்தின் உண்மையான &#8216;முகத்தை&#8217; புரிந்து கொண்டு தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்தால் தகுந்ததொரு அரசியல் பாடத்தை புகட்ட முடியும் என்றார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32312</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/karuna_viki.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/karuna_viki.jpg" medium="image">
			<media:title type="html">karuna_viki</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் யேர்மன் இளையோர்களின் அயராத பங்களிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32305</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32305#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 14:08:04 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32305</guid>
		<description><![CDATA[ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் யேர்மன் இளையோர்களின் அயராத பங்களிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32306" title="german_youth_006" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/german_youth_006-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;அரசியல் போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும் தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது. குறிப்பாக கடந்த பல மாதங்களாக யேர்மனிய மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் அ<span id="more-32305"></span>யராத முயற்சிகளால் இளையோர்கள் பல வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பை சார்ந்த செல்வன் ஈழவேந்தன், தனது பல்கலைக்கழகத்தில் சக உயர்கல்வி மாணவர்களுக்கான சந்திப்பில் ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான தகவல்கள், அத்துடன் அவர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்திய மற்றும் நடாத்தும் இனப்படுகொலை விடையமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">அந்நிகழ்வில் கலந்து கொண்ட யேர்மனிய மாணவர்கள் மிக ஆவலுடன் இவ் விடையங்களை அறிந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">அதைதொடர்ந்து, யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் மத்திய மாநில (NRW ) பேச்சாளர் செல்வன் கோகுலன், பாராளுமன்ற உறுப்பினர்களை (Karin Binder ,Gregor Gysi மற்றும் Paul Schäfer ) சந்தித்து ஈழத்தமிழர்கள் விடையமாக கலந்துரையாடி சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனு ஒன்றும் கையளித்தார்.</p>
<p style="text-align: justify;">மேலும், கட்சி சார்ந்து நடைபெற்ற அரசியல் நிகழ்விலும் ஈழத்தமிழர் சார்பில் செல்வி கஜனா அவர்களால் பரதநடனம் வழங்கப்பட்டு எமது கலாச்சார பண்புகள் முன்னிறுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">பதினைந்து வயது கொண்ட செல்வன் அருண், தனது பாடசாலையில் ஓர் வேலைத்திட்டமாய் இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் இலங்கையில் கொலைக்களம் காணொளியை யேர்மன் மொழியில் குரல்கொடுக்கும் முகமாக தான் வாழும் Weiterstadt எனும் நகரில் அந் நகரின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான வேலைத்திட்டத்தில் போட்டியில் இறங்கியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இப்போட்டியில் செல்வன் அருண், வெற்றி அடையும் பட்சத்தில் அதற்கான பரிசுப் பணம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது.</p>
<p style="text-align: justify;">அந்தவகையில், அப்பணத்தின் ஊடாக ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளிக்கு குரல்கொடுக்கும் வகையில் அந் நகர மக்களுக்கு கவனயீர்ப்பை ஏற்படுத்தும்.</p>
<p style="text-align: justify;">அத்தோடு அருண், இலங்கையில் கொலைக்களம் ஆவணப்படத்தை யேர்மன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கடும் முயற்சி எடுக்கின்றார். செல்வன் அருண் போட்டியில் வெல்வதற்கு இணையத்தளம் ஊடாக அனைவரும் வாக்களிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">வாக்களிக்க அழுத்த வேண்டிய இணையத்தள முகவரி : http://weiterstadt.de/deutsch/stadtinfo/kindertagesstaetten/voting_sonstiges.php இவ் முகவரியை அழுத்தி அங்கே காணப்படும் நான்காவது வேலைத்திட்டம்&#8221; Weiterstadt macht aufmerksam!&#8221; அதற்கு வாக்களிக்கவும். அதன் ஊடாக அச் சிறுவனின் முயற்சி மாபெரும் வெற்றி பெரும்.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் மே 18 Düsseldorf நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் போர்க்குற்ற நாள் 2012 அன்று, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஏனைய நாட்டு மக்களுக்கு ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரம் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32305</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/german_youth_006-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/german_youth_006.jpg" medium="image">
			<media:title type="html">german_youth_006</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/german_youth_006-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையில் கொலைக்களங்களும் இன்றைய நிலையும்: லண்டனில் கருத்தரங்கு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32302</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32302#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 14:03:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32302</guid>
		<description><![CDATA[இலங்கையில் கொலைக்களங்களும் இன்றைய நிலையும்: லண்டனில் கருத்தரங்கு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-24365" title="wars" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars.jpg" alt="" width="100" height="80" />“இலங்கையில் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்” என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கி<span id="more-32302"></span>ளப்‘ இந்த விவாத நிகழ்வை எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.</p>
<p style="text-align: justify;">80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் இலங்கையில் மரணமாக காரணமாக அமைந்த &#8211; 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளும், அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ‘புரொன்ட்லைன் கிளப்‘ தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் ஏனைய கொடூரங்களையும் இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ குறிப்பிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">லண்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கிறிஸ் நொனிசும் ஒரு பேச்சாளராக் பங்கேற்பார் என்று ‘புரொன்ட்லைன் கிளப்‘பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால் அவருக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து பங்கேற்பார் என்று தெரியவருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த நிகழ்வுக்கான ஆசனப்பதிவுகள் முடிவடைந்து விட்டதாகவும், இதனைப் பார்க்க விரும்புவோர் http://www.ustream.tv/frontlineclub என்ற இணையத்தளம் மூலம் நேரலையாகப் பார்க்கலாம் என்றும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ அறிவித்துள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32302</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars.jpg" medium="image">
			<media:title type="html">wars</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் &#8220;மீள் எழுச்சி நாள்&#8221; மே 19 நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32297</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32297#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 13:58:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32297</guid>
		<description><![CDATA[கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் "மீள் எழுச்சி நாள்" மே 19 நாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32298" title="canada_may19_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய..</p>
<p style="text-align: justify;">&#8230;முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு, கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் &#8216;மீள் எழுச்சி நாள்&#8217; நினைவு நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில் குயின்<span id="more-32297"></span>ஸ் பார்க்கில் நடைபெறும்.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று ஸ்காபுரோ சிவிக் சென்டரின் முன்னால் அமைந்துள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் போர்க்குற்றநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.</p>
<p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக, கனடிய மாணவர் சமூகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நினைவு நிகழ்வினை அனைந்து பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று நடத்தவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மூன்றான்டுகளுக்கு முன்னர் எம் கண்முன்னே எம் மக்களுக்கு நடந்த அவலத்தினை உலகின் முன் நிறுத்தி மீள் எழுச்சி கொண்டு எம் இலட்சியத்தினை அடையும் வரை ஓயோம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.</p>
<p style="text-align: justify;">எனவே அனைவரும் அன்றைய நாள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நாம் ஓயவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32298" title="canada_may19_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001.jpg" alt="" width="500" height="654" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32297</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001.jpg" medium="image">
			<media:title type="html">canada_may19_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001.jpg" medium="image">
			<media:title type="html">canada_may19_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada_may19_001-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கை மீது புதிய தாக்குதலுக்கு நோர்வேயில் திட்டம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32294</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32294#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 13:55:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32294</guid>
		<description><![CDATA[இலங்கை மீது புதிய தாக்குதலுக்கு நோர்வேயில் திட்டம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-20366" title="sol" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/01/sol-100x80.jpg" alt="" width="100" height="80" />நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும்,</p>
<p style="text-align: justify;">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனும் ஒஸ்லோவில் நாளை ஒன்றிணைந்து இலங்கை மீது புதிய தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில<span id="more-32294"></span> ஊடகமான ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், வெளிநாடுகளில் பல்வேறு அரசியல்கட்சிகளில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீளத் தொடங்குவதைக் குழப்பும் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கொழும்பு ஊடகத்திடம் கூறியுள்ளன.</p>
<p style="text-align: justify;">அவர்களின் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே ஒஸ்லோ கூட்டம் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">மேலும் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்மையிலேயே நம்பிக்கையிருந்தால், விரோத நடவடிக்கைளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாளை பிற்பகல் 6 மணியளவில் ஒஸ்லோவில் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ‘இலங்கை: மூன்றாண்டுகளுக்குப் பின்னர்’ என்ற தலைப்பில் கருத்தமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">இதற்கான ஏற்பாடுகளை நோர்வே தமிழ் கற்கை மையம், தொழிற்கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32294</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/01/sol-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/01/sol.jpg" medium="image">
			<media:title type="html">sol</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/01/sol-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! கனடாவில் முள்ளிவாய்க்கால நினைவகம் திறந்து வைப்பு!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32285</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32285#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 14:49:16 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32285</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! கனடாவில் முள்ளிவாய்க்கால நினைவகம் திறந்து வைப்பு!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32286" title="canada1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada1-100x80.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைந்து நினைவேந்தல் வாரம் தொடங்கியுள்ள நிலையில் கனடா-ரொற்ன்ரோவில் முள்ளிவாய்க்கால் நினைவகம் உணர்வுபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி மே<span id="more-32285"></span> 12 முதல் நினைவேந்தல் வாரமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தாண்டு பிரகனடப்படுத்தியிருந்தது.</p>
<p style="text-align: justify;">இததொனரு அங்கமாக நினைவேந்தல் வாரத்தில் மக்கள் தத்தமக்கு வசதியான வசிதிகளுக்கு அமைதியாக உணர்வுபூர்வமாக தமது வணக்கத்தினை செலுத்த ரொறன்ரோவில் உள்ள 2761 மார்க்கம் வீதியில் உள்ள சண்சிட்டிப் பிளாசாவில் &#8216;முள்ளிவாய்க்கால் நினைவகம்&#8217; திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">நினைவகத்தில் &#8216;முள்ளி வாய்க்காலில் உறுதி எடுப்போம்&#8217; எனும் முழக்கத்தின் கீழே மக்கள் தமது கையொப்பங்களை இட்டு உறுதி கொள்ளும் பலகையொன்றும் நிறுவப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனையொட்டி கனடாவில் இடம்பெறும் நினைவேந்தல் வார முன்னெடுப்புகள் தொடர்பில் கடந்த 11 ம் நாள் ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி பொதுச்சுடரினை ஏற்றி இந்நிகழ்வினைத் தொடக்கி வைத்தார்.</p>
<p style="text-align: justify;">நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் வின் மகாலிங்கம் நிகழ்வினை நெறிப்படுத்த, தொடர்ந்து நா.க.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம், சபாநாயகர் பொன் பாலராஜன், நா.த.அரசாங்கத்தின் அவை உறுப்பினர்கள் ஈழவேந்தன், ஐயம்பிள்ளை சண்முகநாதன், கனடியத் தமிழர் பேரவை (CTC ) உபதலைவி யுவனிரா நாதன், படைப்பாளிகள் கழகத் தலைவா வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடாத் தமிழர் இணையப் பிரமுகர் ஆ .தியாகலிங்கம், திருகோணமலை நலன்புரிச் சங்கப் பிரமுகர் வீரசுப்பிரமணியம், பருத்தித்துறை மக்கள் ஒன்றியப் பிரமுகர் வீர விஜேந்திரா, உட்பட பலரும் பங்கெடுத்து உணர்வுளை பகிர்ந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">12 ம்,13 ம் திகதிகளில் கனடா ஐயப்பன் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான மகா யாகம்</p>
<p style="text-align: justify;">13 ம் திகதி 3500 மக்நிக்கல் அவென்யுவில் உள்ள கிறிஸ்த்தவத் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனைகள்.</p>
<p style="text-align: justify;">17 ம் திகதி மாலை 7.15 மணிக்கு MIDLAND &#8211; KINGSTON சந்திப்பில் உள்ள தமிழ்க் கத்தோலிக்க மரியன்னை பங்குத் தேவாலயத்தினால் ஒழுங்கு செய்யப்படும் ஆராதனை நிகழ்வு</p>
<p style="text-align: justify;">18 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை ரொறொன்ரோ குயின்ஸ் பாக்கில் நடைபெறவிருக்கும் அனைத்துத் தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வு</p>
<p style="text-align: justify;">மற்றும் ஒழுங்கு செய்யப்படுகின்ற இஸ்லாமியப் பிராத்தனைகள் மற்றும் இரத்த தானங்கள் போன்றவை கனடாவில் இடம்பெறுகின்றன.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32285</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada1.jpg" medium="image">
			<media:title type="html">canada1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/canada1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக!- இதயச்சந்திரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32282</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32282#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 14:42:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32282</guid>
		<description><![CDATA[அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக!- இதயச்சந்திரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-997" title="sampanthan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" alt="" width="100" height="80" />யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம்,</p>
<p style="text-align: justify;">தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.</p>
<p style="text-align: justify;">கொடி பிடித்து நல்<span id="more-32282"></span>லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் விடுவதாக இல்லை.</p>
<p style="text-align: justify;">வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைகதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார்.</p>
<p style="text-align: justify;">திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம்.</p>
<p style="text-align: justify;">இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.</p>
<p style="text-align: justify;">இனக் கட்டமைப்புச் சிதைப்பு, கலாசார இனவழிப்பு என்கிற நிகழ்ச்சி நிரல், தம்புள்ளையிலிருந்து திருமலைப் பிள்ளையார் கோவில் வரை விரிவடைந்து செல்கிறது.</p>
<p style="text-align: justify;">வெசாக் பந்தலுக்கு அருகாமையில் மாட்டோடு செல்பவர்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், கிழக்கு மாகாண சபையைக் கலைத்து செப்டம்பரில் புதிய தேர்தல் ஒன்றை நடத்த அரசு திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசியல் யாப்பின் 148 ஆவது பிரிவின் கீழ், பொது நிதித்துறையின் முழுக் கட்டுப்பாடும் நாடாளுமன்றின் கைகளில் இருக்கும் நிலையில், மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் என்பவற்றோடு மாகாண நிதியம் குறித்த விடயங்களும் நோக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.</p>
<p style="text-align: justify;">1987 நவம்பரில் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் நிதி ஆணைக்குழு (Financial Commission) உருவாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இவ்வாணைக்குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் மூவினங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறற மூவரும் இடம்பெறுவார்கள்.</p>
<p style="text-align: justify;">இக்குழுவுடன் ஆலோசித்து அதற்கான நிதியை வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கும். எல்லாவற்றையும், புதிதாக உருவாக்கப்படும் மாகாண நிதியத்தை (Provincial Fund), ஜனாதிபதியும் மாகாண ஆளுநரும் நாடாளுமன்றமும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு மாகாணத்திற்கும் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டுமென்பதையும் இந்த உயர்குழுவே தீர்மானிக்கும்.</p>
<p style="text-align: justify;">காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பற்றிப் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த நிதிப் பங்கீடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து விடுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆயினும் நாட்டின் திரட்டிய செல்வத்தின் நியாயமான பங்கினை, மாகாண சபைகளுக்கு கொடுப்பதற்கு நிதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென 13 ஆவது திருத்தச் சட்டம் கூறுவதை நடைமுறையில் கொண்டுவர வேண்டுமென அன்றைய வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், ஒன்றரை இலட்சம் இந்தியப் படை பக்கபலமாக இருந்த நிலையில் எதிர்பார்த்தார்.</p>
<p style="text-align: justify;">எதுவுமே நடைபெறவில்லை. ஈழப் பிரகடனத்தை வெளியிட்டு இந்தியாவிற்கு சென்று விட்டார் வரதராஜப்பெருமாள்.</p>
<p style="text-align: justify;">பொறுப்புக் கூறும் தன்மையற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மறுப்பது போன்று, தாமே உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிதி ஆணைக்குழுவினை நிறுவ அன்று மறுத்திருந்தது அரசு.</p>
<p style="text-align: justify;">18 ஆவது திருத்தச் சட்டமானது, சகல ஆணைக்குழுக்களின் ஏகபோக அதிகாரத்தை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைத்துள்ள நிலையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு என்ன நடைபெறுமென்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.</p>
<p style="text-align: justify;">அரசியல் யாப்பில் 2001 இல் இணைக்கப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தும் கூட்டமைப்பின் புதிய பங்காளிக் கட்சியான யூ.என்.பி.க்கு, அதிக பெரும்பான்மையோடு 2010 ல் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டம் நினைவில் இல்லை போல் தெரிகிறது.</p>
<p style="text-align: justify;">13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் தீர்விற்கான அருமருந்தென வியாக்கியானமளிப்போர், புதிதாக முளைத்த 18 ஆவது திருத்தச்சட்டம் பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அதிகாரப் பகிர்விற்கும் (Power Sharing), அதிகாரப் பரவலாக்கத்திற்கும் (Devolution of Power) இடையிலுள்ள வேறுபாட்டினை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டுமாயின், 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய அமசங்களான காணி, காவல்துறை, நிதி போன்ற மூன்று விடயங்களை அவதானித்தாலே போதும்.</p>
<p style="text-align: justify;">பெரும்பான்மை இனத்தின் ஒட்டுமொத்த இலங்கையின் இறைமையை, ஏனைய தேசிய இனங்களேõடு பகிர்ந்து கொள்ள சிங்களம் விரும்பவில்லை என்பது புரியும்.</p>
<p style="text-align: justify;">எதனையும் தீர்மானிக்கும் இறுதியானதும் உறுதியானதுமான அதிகாரம், மத்தியில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பகிர்வு, பரவலாக்கம் என்கிற மயக்கமான வார்த்தைகள் ஊடாகப் புரியப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்&#8217; என்கிற தலைப்பிற்கு 2004 நவம்பரில் &#8216;தராக்கி&#8217; சிவராம் வீரகேசரி வார இதழில் எழுதிய கட்டுரையையும், 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு &#8216;நகைச்சுவை அரங்கம்&#8217; என்று நடேசன் சத்தியேந்திரா அவர்கள் எழுதிய ஆழமான விமர்சனக் கட்டுரையையும் இப்போது மீண்டும் வாசிப்பது அவசியமாகிறது.</p>
<p style="text-align: justify;">அதில் தேசிய செல்வத்தின் மீதான ஏகபோக உரிமையை அனுபவிப்பவர்கள், ஏனைய அரசியல் சுக போகங்களையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதோடு, தேசிய செல்வத்தில் நியாயமான உரிய பங்கினை ஒரு பகுதியைத் தானும் எவ்வாறு செலவிடுவதெனத் தமிழரே தீர்மானிப்பதற்கான ஒரு கட்டமைப்பை (இடைக்கால தன்னாட்சி அதிகார சபை) பற்றியே விடுதலைப்புலிகள் பேசினார்கள் என்றும் தராக்கி குறிப்பிடுகின்றார்.</p>
<p style="text-align: justify;">இவை குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வது போல் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்ல வேண்டுமா? சிங்கக் கொடியை ஏந்த வேண்டுமா? மாகாணசபைத் தேர்தலில் குதிக்க வேண்டுமா? என்பது குறித்தே அதிகம் விவாதிக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் விரிக்கும் இராஜதந்திர வலைக்குள், தாமாகவே விழும் வகையில் இவர்கள் நகர்வது போலுள்ளது.</p>
<p style="text-align: justify;">வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும்போது கிழக்கில் தேர்தலை நடத்த முயல்கிறது அரசு. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றச் சொன்னால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் வாருங்களென்று ரவூப் ஹக்கீம் ஊடாக தூதனுப்புகிறது இலங்கையரசு.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் சம்பந்தன் சுமந்திரனைப் பொறுத்தவரை, இந்திய -மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை தாம் புரிந்து கொண்டதாகக் கற்பிதம் கொண்டு, அதற்கேற்ற வகையில் தமது இராஜதந்திர காய் நகர்த்தலை மேற்கொள்வதாக கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் கூற முற்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">கொடி பிடித்த விவகாரத்தை நியாயப்படுத்தும் இவர்களின் நிலைப்பாடும் இதன் ஒரு அங்கமே .</p>
<p style="text-align: justify;">வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எதற்காக வாக்களிக்கிறோம் என்பதைக் கேட்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.</p>
<p style="text-align: justify;">ஆகவே, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முன்பாக அரசியல்தீர்வுத் திட்டம், அதற்கான வேலைத் திட்டம் என்பதை மிகத் தெளிவாக மக்கள் முன்வைக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஏனெனில், முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் தற்போது பேசுவதற்கும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32282</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" medium="image">
			<media:title type="html">sampanthan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையின் இராஜதந்திரம் மார்ச் 22 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32278</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32278#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 14:34:58 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32278</guid>
		<description><![CDATA[இலங்கையின் இராஜதந்திரம் மார்ச் 22 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31460" title="uno" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" alt="" width="100" height="80" />கடந்த மார்ச் 22 ஆம் திகதி, தற்கொலை மூலம் ‘இலங்கை தமது இராஜதந்திரத்தை மாய்த்துக்கொண்ட நாள்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூ<span id="more-32278"></span>லம் இந்த ஜனநாயக தற்கொலை இடம்பெற்றதாக இராஜதந்திரியும் முன்னாள் சமாதான செயலக தலைவருமான ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">கொழும்பின் தற்கொலை இராஜதந்திரம் மற்றும் அரசியல் வழிகாட்டல் என்பனவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான காரணங்களாகும்.</p>
<p style="text-align: justify;">எனவே 64 வருடங்களாக கட்டிக்காத்த இராஜதந்திர தன்மையை இலங்கை இழந்து விட்டது என்று ஜயந்த தனபால குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஏற்கனவே, கறுப்பு ஜூலைக்கு பின்னர் 1984 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போதும் அதற்கு பின்னரும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், இந்தியா உடபட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">ஆனால், இந்ததடவை இலங்கையினால் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்படுத்தப்படப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாமையே இலங்கையின் இராஜதந்திர தோல்விக்கான காரணம் என்று ஜயந்த தனபால குறிப்பிட்டுள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32278</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno.jpg" medium="image">
			<media:title type="html">uno</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கடல்தாண்டியும் நீளும் சிங்களத்தின் கரங்கள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32275</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32275#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 14:32:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32275</guid>
		<description><![CDATA[கடல்தாண்டியும் நீளும் சிங்களத்தின் கரங்கள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-30286" title="tamilar_naduvam_france" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/tamilar_naduvam_france.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு என்பது, இந்த நூற்றாண்டில், அரங்கேற்றப்பட்ட மிகக் கொடூரமான இனப்படுகொலை என்பது, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்<span id="more-32275"></span>கி தமிழினம் அனுபவித்துவரும் கொடுமைகளை, தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள சர்வதேச சமூகம், தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்து தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், புலத்தில், தமிழ் மக்களுக்காகப் போராடும் தமிழர் அமைப்புக்கள் மீது, அவற்றின் செயற்பாடுகள் மீது கடும் கோபத்தில் இருக்கின்ற சிங்களப் பேரினவாத அரசு, அவற்றை முடக்கும் செயற்பாடுகளிலும், அவற்றுக்கு எதிரான பரப்புரைகளிலும், ஈடுபட்டுவருகின்றது.</p>
<p style="text-align: justify;">சிங்களம் தன் கைக்கூலிகளின் துணையுடன், இந்தத் தமிழர் விரோதச் செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">தேசிய மாவீரர் நாளை தாயகத்தில், கடைப்பிடிக்க முடியாதவாறு இராணுவப் பிடிக்குள் மக்களை வைத்து, கொலை அச்சுறுத்தல் விடுத்துவரும் சிங்கள அரசு, மாவீரர் துயிலும் இல்லங்களையே இருந்த இடம்தெரியாமல் அழித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில், பல்லாயிரக்கணக்கில் எம் உறவுகள் அழித்தொழிக்கப்பட்ட கொடுமைகளை தாயகத்தில் யாருமே நினைவுகூர்ந்து, வணக்கநிகழ்வுகளை நடாத்தமுடியாத இராணுவஆட்சி தமிழர் தாயகத்தில் நடக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இறந்துபோன உறவுகளை நினைத்து, ஒரு துளி கண்ணீர்தன்னும் சொரியமுடியாத உரிமைகள் அற்ற அவலவாழ்க்கையே தாயகத்திலுள்ள தமிழரது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், புலம்பெயர்ந்த மண்ணில், தமிழர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் இந்நிகழ்வுகளை, தடுப்பதற்காக சிங்கள அரசு இராஜதந்திர வழிகளில் பல முயற்சிகளைச் செய்து தோற்றுப்போயுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே இனப்படுகொலை நினைவுப் பெருவலியை, நினைவுகூறும் நிகழ்வுகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள் பேருணர்வோடு நடாத்த திட்டமிட்டிருக்கும் இன்றைய நிலையில், அதனைக் குழப்பும் நோக்கோடு, சிங்களத்தின் கூலிகளின் நாசவேலைகள் பிரான்சில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.</p>
<p style="text-align: justify;">மே இனப்படுகொலை நினைவுநாளையும், தேசியத் துக்க நாள் நிகழ்வையும், நாடுகடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் தமிழர் நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஒழுங்கு செய்த நிகழ்வு எதிர்வரும் பதினேழாம் திகதி, துறோக்கட்ரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வை முன்னிட்டு, அச்சடிக்கப்பட்டு, லாச்சப்பல் பகுதியிலும், பிற புறநகர்ப் பகுதிகளிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், சிங்களக் கைக்கூலிகளால் இரவோடு இரவாக கிழித்தெறியப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை முடக்கவும், அதன் பிரதமர் உருத்திரகுமாரிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கவும், விசமத்தனமான திட்டமிட்ட பரப்புரைகளும், அதனை செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகளையும், சிங்களம் தன் கூலிகளின் துணையுடன் மேற்கொண்டு வருகின்றது.</p>
<p style="text-align: justify;">அதுபோன்று, தமிழ்மக்களின் ஏனைய அமைப்புக்கள் மீதும் சிங்களம் தன்கூலிகளின் துணையுடன் விசமப் பிரசாரங்களையும், தமிழ்மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளையும் முடக்க முயற்சித்து வருகின்றது.</p>
<p style="text-align: justify;">இவற்றையெல்லாம் முறியடித்து, தமிழ் மக்கள் தமது தேசிய இலக்கை அடைய தெளிவுடனும், அறிவுடனும் விளிப்புடனும் இருந்து செயற்படவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டுப்பெருவலி என்ற நிகழ்வு, எதிர்வரும் பதினேழாம் திகதி, துரோக்கத்ரோ என்ற இடத்தில் பிற்பகல் ஐந்து மணிக்கு நடைபெறும்.</p>
<p style="text-align: justify;">சிங்களம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினும், தேசியத் தலைவர் காட்டிய வழியில், எமது மக்களின் சுதந்திர வாழ்வுக்கான போராட்டத்தை, அனைத்துத் தமிழரும் இணைந்து மேற்கொள்வோம். உண்மையும் நேர்மையும் வெல்லும்.</p>
<p style="text-align: justify;">தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.</p>
<p style="text-align: justify;">தமிழர் நடுவம் &#8211; பிரான்ஸ்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32275</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/tamilar_naduvam_france.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/tamilar_naduvam_france.jpg" medium="image">
			<media:title type="html">tamilar_naduvam_france</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒற்றைக் கோரிக்கை ஆன தமிழீழ கோரிக்கையை முன்வைத்து &#8211; ரவல்கர் சதுக்கத்தி​ல் பிரித்தானி​ய மக்கள் யாவரும் ஒன்று திரளுவோம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32271</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32271#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 14:30:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32271</guid>
		<description><![CDATA[ஒற்றைக் கோரிக்கை ஆன தமிழீழ கோரிக்கையை முன்வைத்து - ரவல்கர் சதுக்கத்தி​ல் பிரித்தானி​ய மக்கள் யாவரும் ஒன்று திரளுவோம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32272" title="may17" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may17-100x80.jpg" alt="" width="100" height="80" />ஒற்றைக் கோரிக்கை ஆன தமிழீழ கோரிக்கையை முன்வைத்து மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ரவல்கர் சதுக்கத்தில் பிரித்தானிய மக்கள் யாவரும் ஒன்று திரளுவோம் திரு திருமுருகன் மே 17 இயக்கம்</p>
<p style="text-align: justify;">சர்வதேச சமூகம்<span id="more-32271"></span> எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும், தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 2009 மே மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற மே 19 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கல் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரலுக்கு பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரவல்கர் சதுக்கத்தில் மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ஆரம்பமாகும் இவ் நினைவு குரலுக்கு ஒன்று கூடுவோம் என்னும் இவரின் முழு ஒலிவடிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><iframe src="http://www.youtube.com/embed/afj0ERiIr7Q" frameborder="0" width="640" height="360"></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32271</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may17-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may17.jpg" medium="image">
			<media:title type="html">may17</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may17-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>உலகெங்கும் உணர்வுபூர்வமாக தொடங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32267</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32267#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 11:18:23 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32267</guid>
		<description><![CDATA[உலகெங்கும் உணர்வுபூர்வமாக தொடங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-24666" title="mulli" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/mulli-100x80.jpg" alt="" width="100" height="80" />ஈழத்தமிழர் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது தமிழினப் படுகொலையின் குறியீடாகிவிட்ட, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம், உலகெங்கும் உணர்வுபூர்வமாக இன்று ஆரம்பமாகின்றது.</p>
<p style="text-align: justify;">மே 12ஆம் நாள் மு<span id="more-32267"></span>தல் நினைவேந்தல் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு, மே 18ஆம் நாள் தமிழீழத் தேசியத் துக்க நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தாண்டு பிரகடனப்படுத்தியிருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்நினைவேந்தல் வாரத்தில் இரத்த தானம், கண்காட்சி , துண்டுப்பிரசுர பரப்புரை, வழிபாடுகள் என தமிழீழ இனப் படுகொலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினையும் வலியுறுத்தியும் பல்வேறு வடிவங்களிலும் இந்நாட்களில், முன்னெடுப்புகள் அமைந்திருக்கும்.</p>
<p style="text-align: justify;">அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா கண்டங்களெங்கும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து நாடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாடு , மலேசியா, சிங்கப்பூர் என உலகத் தமிழர்களாலும் இந்நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p>
<p style="text-align: justify;">இதேவேளை திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி, தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளையும் வெற்றி அணிவகுப்புக்களையும், தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள், முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தி, சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்கனவே அறைகூவல் விடுத்துள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32267</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/mulli-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/mulli.jpg" medium="image">
			<media:title type="html">mulli</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/mulli-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கருணாநிதி அழைக்காதது வருத்தமா? &#8216;டெசோ&#8217; குறித்து திருமாவளவன் விளக்கம்! &#8211; ஜூனியர் விகடன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32264</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32264#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 11:16:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32264</guid>
		<description><![CDATA[கருணாநிதி அழைக்காதது வருத்தமா? 'டெசோ' குறித்து திருமாவளவன் விளக்கம்! - ஜூனியர் விகடன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-25273" title="thiru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/thiru.jpg" alt="" width="100" height="80" />ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி மீண்டும் ஏற்படுத்தியுள்ள டெசோ அமைப்புக்கு, அழைப்பு இல்லாத நிலையிலும், ஆதரவு தெரிவித்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் திருமாவளவன்.</p>
<p style="text-align: justify;">விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக ஏடான ஜூனியர் விகடனுக்கு வழங்<span id="more-32264"></span>கிய செவ்வி</p>
<p style="text-align: justify;">கேள்வி: கருணாநிதி அழைக்காதது வருத்தமா?</p>
<p style="text-align: justify;">பதில்: ஈழத் தமிழர்களின் நலனுக்கான அமைப்பு எதுவாக இருந்தாலும், அந்த அமைப்பின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.</p>
<p style="text-align: justify;">ஈழத்துக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட​வேண்டி இருக்கிறது. குறிப்பாக, பொதுவாக்கெடுப்பு என்பது நாங்கள் நீண்டகாலமாகவே சொல்லிவரும் கருத்துதான். அதை டெசோ மூலமாகச் சொல்வதால் வரவேற்கிறேன்.</p>
<p style="text-align: justify;">மற்றபடி, அழைப்பு இல்லை என்பது எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், ஏன் என்னை அழைக்கவில்லை என்ற கேள்வி மட்டும் இருக்​கிறது.</p>
<p style="text-align: justify;">கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தள்ளி வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றுகிறதா?</p>
<p style="text-align: justify;">பதில்: தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இறந்த போது நான் இலங்கைக்குப் போனேன். அப்போது, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து என்னைத் திருப்பி அனுப்பினார்கள்.</p>
<p style="text-align: justify;">விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்ன என்பது ராஜபக்சவுக்குத் தெரியும். அதனால் உள்ளே விட​வில்லை.</p>
<p style="text-align: justify;">அதேமாதிரி, இலங்கைக்குப் போன நாடாளுமன்ற உறுப்பினர் தூதுக்குழுவில் என்னைப் புறக்கணித்தார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விடுதலைச் சிறுத்தைகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ஐந்து பேரைப் போட்டவர்கள், எங்களில் ஒருவரைப் போட்டிருக்கலாம். எங்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தார்கள்.</p>
<p style="text-align: justify;">கலைஞர் டெசோ உருவாக்குகிறார். சுபவீக்கு அழைப்பு போகுது, வீரமணிக்கு அழைப்பு போகுது. ஆனால், நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.</p>
<p style="text-align: justify;">ராஜபக்சவால் தடுக்கப்​படுவது, காங்கிரஸால் புறக்கணிக்கப்படுவது, டெசோ​வில் இணைக்கப்படாதது எல்லாமே நேர்கோட்டில் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இதில் இருந்து எங்கள் நிலையை உலகத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">கேள்வி: சோனியாவை எதற்காக சந்தித்தீர்கள்?</p>
<p style="text-align: justify;">பதில்: குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, என்னை அழைத்துப் பேசினார். தலித் கிறிஸ்த​வர் ஒருவரை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையைச் சொன்னேன்.</p>
<p style="text-align: justify;">மேலும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டேன். இரண்டையும் கவனத்தில் கொண்டுள்ளதாகச் சொன்னார்.</p>
<p style="text-align: justify;">கேள்வி: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு மாற்றாக, தி.மு.க-வுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஒன்றைத் தொடங்கினீர்கள்? அது என்ன ஆனது?</p>
<p style="text-align: justify;">பதில்: முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த சமயத்தில், உலகத் தமிழர்கள் சோர்வடைந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள், தி.க., சுப.வீ. இணைந்து ஒரு பிரசார இயக்கமாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் தொடங்கினோம்.</p>
<p style="text-align: justify;">அது, இலங்கைத் தமிழர் பாது​காப்பு இயக்கத்துக்கு மாற்று அல்ல. அந்த இயக்கம் கூடுவதற்கான சூழல் இப்போது இல்லை. என்றார்.</p>
<p style="text-align: justify;">ஜூனியர் விகடன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32264</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/thiru.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/thiru.jpg" medium="image">
			<media:title type="html">thiru</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழ இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரான்ஸ் அரசினைக் கோரும் கையெழுத்து போர் ஆரம்பம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32259</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32259#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 11:13:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32259</guid>
		<description><![CDATA[தமிழீழ இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரான்ஸ் அரசினைக் கோரும் கையெழுத்து போர் ஆரம்பம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32260" title="france_sign01" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/france_sign01-100x80.jpg" alt="" width="100" height="80" />சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசம், ஆர்மேனிய இனப்படுகொலையினை அங்கீகரித்தது போல், தமிழீழ இனப்படுகொலையினையும் அங்கீகரிக்க கோரும், கையெழுத்துப் போராட்டம் பிரான்சில் தொடங்கியது.</p>
<p style="text-align: justify;">கடந்தாண்டு ஆர்<span id="more-32259"></span>மேனிய படுகொலையினை ஒர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்று பிரென்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி ,தமிழீழத்திலும் நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, பிரென்சு அரசினை அங்கீரிக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் இக்கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே 12ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாள் முதல் இக்கையெழுத்துப் போராட்டம் தமிழர் வர்த்தக நிலையங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக மக்களின் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">பிரான்சில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து அடுத்து நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கின்ற நிலையில் பிரென்சு அரசியல் ஆட்சிபீடத்தினைக் கோரும் இக்கையெழுத்துப் போராட்டம் முக்கியமானதாக அமையுமென மேலும் அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இக்கையெழுத்துப் போராட்டத்தினை நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இக்கையெழுத்துப் போராட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட விரும்புவோர் 06 51 05 53 00 ஃ 06 62 36 50 07 ஆகிய தொடர்பிலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32259</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/france_sign01-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/france_sign01.jpg" medium="image">
			<media:title type="html">france_sign01</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/france_sign01-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் BAFTA விருதுக்கான கருத்து வாக்கெடுப்பில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ முன்னிலை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32256</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32256#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 11:10:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32256</guid>
		<description><![CDATA[பிரித்தானியாவின் BAFTA விருதுக்கான கருத்து வாக்கெடுப்பில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ முன்னிலை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-24470" title="wars" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" alt="" width="100" height="80" />பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">பிரித்தானியா திரை<span id="more-32256"></span>ப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி 1954ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் துறை சார்ந்த சிறந்த படைப்புகளுக்கு BAFTA விருதுகளை வழங்கி வருகிறது.</p>
<p style="text-align: justify;">2012ஆம் ஆண்டுக்கான BAFTA விருதுக்கு, சமகால விவகாரங்கள் குறித்த பிரிவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ உள்ளிட்ட 4 ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரேடியோ ரைம்ஸ் இணையத்தளத்தில் இந்த நான்கு ஆவணப்படங்கள் தொடர்பாகவும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இதில் பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த அல்ஜெசீரா தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்துக்கும், சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்கும் இடையில் கடந்த பல நாட்களாக கடும் போட்டி நிலவி வந்தது.</p>
<p style="text-align: justify;">‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு இதில் இரண்டாம் இடமே கிடைத்திருந்தது. ஆனால் தற்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் முன்னிலை பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா- இந்திய நேரம் இன்று காலை 5.40 மணி நிலவரப்படி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு 1,774,070 வாக்குகளும் (50.01 வீதம்), அல்ஜெசீரா தயாரித்த பஹ்ரெய்ன் தொடர்பாக ஆவணப்படத்துக்கு 1,769,159 வாக்குகளும் (49.87 வீதம்) கிடைத்துள்ளன.</p>
<p style="text-align: justify;">இந்த இணையத்தள வாக்கெடுப்பு விருதுக்கான தெரிவைத் தீர்மானிக்காது. நடுவர்களே அதனைத் தீர்மானிப்பர். ஆனாலும் வாசகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் பங்கேற்று வாக்களிக்கலாம்.</p>
<p style="text-align: justify;"><a href="http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811" target="_blank">http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs&#8212;which-should-win#pd_a_6166811</a></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32256</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" medium="image">
			<media:title type="html">wars</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லையா? சுஷ்மாவுக்கு சீமான் கடும் கண்டனம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32251</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32251#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 20:46:18 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32251</guid>
		<description><![CDATA[தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லையா? சுஷ்மாவுக்கு சீமான் கடும் கண்டனம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25125" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கைத் தமிழர்கள் தனித் தமிழீழத்தை விரும்பவில்லை என்று பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:</p>
<p style="text-align: justify;">மதுரையில் நடந்<span id="more-32251"></span>த தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா சுவராஜ், இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழர் கட்சியினர் என அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது, இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகிறதா, இந்திய அரசு அளித்த உதவிகள் அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவே தவிர, தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதல்ல.</p>
<p style="text-align: justify;">ஆனால் தமிழர்களின் நிலை அங்கு எப்படியிருக்கிறது, எந்த அளவிற்கு அங்கு இராணுவத்தின் அடக்குமுறை இன்றும் தொடர்கிறது, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு அளிக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்கள காலனிகளாக மாற்றப்படுகின்றனவே, இராணுவ ஆக்கிரமிப்பினால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே என்று தமிழர்கள் கூறியதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தங்கள் மாநாட்டில் பேசாத சுஷ்மா சுவராஜ், அவர்களின் அரசியல் விருப்பம் தனித் தமிழ் ஈழம் அல்ல என்பதை மட்டும் அழுத்தமாக கூற முற்படுவது ஏன்?</p>
<p style="text-align: justify;">தமிழர் பகுதிகளில் ஒரிரு நாட்கள் மட்டும் பயணம் செய்து ஒரிரு மணி நேரங்கள் மட்டும் சில தமிழர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் விரும்புவது தனித் தமிழ் ஈழம் அல்ல என்று சுஷ்மா பேசிகிறார் என்றால், அவர் தமிழர்களின் விருப்பத்தை விட, தமிழ் ஈழம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டையும், ராஜபக்சவின் விருப்பத்தையும்தான் பேசியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">தங்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்க, பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த தங்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் ஆகியவற்றை போட்டு கொத்துக் கொத்தாக தங்கள் சொந்தங்களை ஈவிரக்கமின்றி அழித்த இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா?</p>
<p style="text-align: justify;">இரண்டரையாண்டுக் காலப் போரில் தங்கள் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை திட்டமிட்டு இனப் படுகொலை செய்து, தங்கள் சகோதரிகள் ஒரு லட்சம் பேரை விதவையாக்கி, வாழ வழியற்ற நிலையை ஏற்படுத்திய இனவெறி இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா?</p>
<p style="text-align: justify;">அரை நூற்றாண்டுக் காலமாக ராணுவத்தை பயன்படுத்தி தங்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் கட்டவிழ்த்துவிட்ட அரசுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று சுஷ்மாவிடம் எங்களது தமிழ்ச் சொந்தங்கள் கூறினரா? எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்.</p>
<p style="text-align: justify;">இலங்கைத் தமிழர்களின் விருப்பம் தனித் தமிழ் ஈழமல்ல என்று கூறும் சுஷ்மா சுவராஜூம், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இலங்கைத் தமிழர்களின் முடிவை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தயாரா என்று நாங்கள் கேட்கிறோம்.</p>
<p style="text-align: justify;">இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கும், ஐ.நா.விற்கும் தமிழினம் விடுக்கும் கோரிக்கை இதுவே. அதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி முன் வைக்குமா? என்று கேட்கிறோம்.</p>
<p style="text-align: justify;">அப்படிச் செய்தால் அது அறிவு நாணயமுடைய செயலாக இருக்கும். ஒரிரு மணி நேரங்கள் மட்டும் அங்குள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து அவர்கள் தமிழீழ தனி நாட்டை ஏற்கவில்லை என்று கூறுவது இந்திய, இலங்கை அரசுகளின் இரகசியத் திட்டத்தையே பிரதிபலிக்கிறதே தவிர, உண்மையை அல்ல.</p>
<p style="text-align: justify;">பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, தங்கள் இனத்தை அழித்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதன் மூலம் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழினம் உலகளாவிய அளவில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் இருந்து தமிழினம் ஒரு போதும் பின்வாங்காது. தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல், எத்தனை மாநாடுகள் போட்டாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளராது.</p>
<p style="text-align: justify;">தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை இந்திய நாடாளுமன்றக் கருவூலத்திற்கு அளித்துவிட்டதாகக் கூறுகிறார் சுஷ்மா சுவராஜ். இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சென்ற உங்களுக்கு தமிழினத்தை அழித்தொழித்த ராஜபக்ச எதற்காக பரிசுப் பொருட்களை வழங்க வேண்டும்? அதனை எதற்காக நீங்கள் பெற்றுக்கொண்டு வரவேண்டும்?</p>
<p style="text-align: justify;">உங்களுக்குப் பரிசுப் பொருட்களை ராஜபக்ச அளிக்கிறார் என்றால், நீங்கள் தமிழர்களுடைய சகோதரியா அல்லது ராஜபக்சவின் அறிவிக்கப்படாத தூதரா?</p>
<p style="text-align: justify;">தமிழினப் படுகொலை செய்த குற்றத்திற்காக உலகின் முன் ராஜபக்ச கும்பல் நடுநடுங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் ராஜபக்ச அரசை தூக்கி பிடித்துக்கொண்டு, தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இது கடும் கண்டனத்திற்குரியது. என்றார் இயக்குனர் செந்தமிழன் சீமான்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32251</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5.jpg" medium="image">
			<media:title type="html">seeman</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/seeman_5-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32246</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32246#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 20:42:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32246</guid>
		<description><![CDATA[ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-18074" title="nedumaaran" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/11/nedumaaran-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழக அரசியல் கட்சிகள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் க<span id="more-32246"></span>ண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதற்கு கண்டனம் தெரிவித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:</p>
<p style="text-align: justify;">இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">தமிழீழமே தீர்வு</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர்.</p>
<p style="text-align: justify;">தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல.</p>
<p style="text-align: justify;">கடந்த போர் முடிந்த பிறகு இராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.</p>
<p style="text-align: justify;">சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">அவமானப்படுத்தாதீர்</p>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும். இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும்.</p>
<p style="text-align: justify;">இந்தக் கோரிக்கையை ராஜபக்சவிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்றார் அவர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32246</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/11/nedumaaran-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/11/nedumaaran.jpg" medium="image">
			<media:title type="html">nedumaaran</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/11/nedumaaran-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் பிரித்தானிய நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32240</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32240#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 20:38:55 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32240</guid>
		<description><![CDATA[மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் பிரித்தானிய நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32242" title="IM-uk-2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2-100x80.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி,</p>
<p style="text-align: justify;">மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய, பிரித்தானிய நிகழ்வுகள் தொடர்பிலான விபரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.<span id="more-32240"></span></p>
<p style="text-align: justify;">மே-12ம் நாள் தொடங்கவுள்ள நினைவேந்தல் வாரத்தில் இரத்ததானம், ஒளிப்படக் கண்காட்சிப் பரப்புரை, வழிபாட்டு நிகழ்வுகளோடு, மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், மாபெரும் வணக்க நிகழ்வும் முருகதாசன் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே12 &#8211; 13 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், சிறிலங்கா தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையினைக் கோரும் கையொப்பத்திற்காக, மக்களை நாடி ஒப்பம் வேண்டுதலும், தமிழீழ இனப்படுகொலையினை அங்கீகரிக்க கோரி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரைக் நோக்கிய தொலைநகல் அனுப்புதலும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே 14ம் நாள் திங்கட்கிழமை TOOTING / WIMBLEDON / SYDENHAM / EDGWERE / WALTHAMSTOW ஆகிய பகுதிகளில் இரத்தம் தோய்ந்த ஈழத்தமிழர் வரலாற்றினை நினைவேந்தி, இரத்த தான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p>
<p style="text-align: justify;">மே 15ம் நாள் செவ்வாய்க்கிழமை லண்டனில் சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p>
<p style="text-align: justify;">மே 16 &#8211; 17 ஆகிய புதன், வியாழன் ஆகிய நாட்களில் லண்டன் பேருந்துகளில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் ஒளிப்படக் கண்காட்சிப் பரப்புரைகள் இடம்பெறுகின்றன.</p>
<p style="text-align: justify;">மே 18ம் தமிழீழத் தேசிய துக்க நாளில், மைய நிகழ்வாக, ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் பொது அமைப்புகளின் கூட்டிணைவாக, முருகதாசன் திடலில் (SKLPC (UK), West End Road<br />
Northolt,Middlesex, UB5 6RE) வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வுகள் தொடர்பில் மேலதிக விபரங்களை 079 293 49302 / 078 772 04123 குறித்த இந்த தொடர்பிலக்கங்கள் வழியே பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32241" title="IM-uk-1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-1.jpg" alt="" width="500" height="706" /><br />
<img class="size-full wp-image-32242" title="IM-uk-2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2.jpg" alt="" width="500" height="706" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32240</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2.jpg" medium="image">
			<media:title type="html">IM-uk-2</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-1.jpg" medium="image">
			<media:title type="html">IM-uk-1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-1-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2.jpg" medium="image">
			<media:title type="html">IM-uk-2</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-uk-2-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடிவு!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32237</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32237#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 20:33:58 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32237</guid>
		<description><![CDATA[இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடிவு!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32207" title="kilary_kilari_mohan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;">இந்தியா சென்றுள்<span id="more-32237"></span>ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட் டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;">இந்தப் பொது இணக்கப்பாட்டின் அடிப்படை யில் இலங்கை இனப் பிரச்சினை விட யத்தில் இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தமிழ் அரசியல் கட்சிகளைப் பேச்சு மேசைக்கு அழைத்து வருவது தொடர்பில் பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்கும் இருநாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இனிவரும் காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் செயலக வட்டாரங்கள் மேலும் கூறின.</p>
<p style="text-align: justify;">பிரதமருடனான சந்திப்பின்போது இலங்கை இனப்பிரச்சினை விடயம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் அதிக அக்கறை காட்டியதாகவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32237</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan.jpg" medium="image">
			<media:title type="html">kilary_kilari_mohan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை: மதுரை மாநாட்டில் சுஸ்மா சுவராஜ்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32234</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32234#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 20:27:13 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32234</guid>
		<description><![CDATA[தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை: மதுரை மாநாட்டில் சுஸ்மா சுவராஜ்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-24674" title="susma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி,</p>
<p style="text-align: justify;">இலங்கையைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய<span id="more-32234"></span> நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியுமான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜகவின் மாநில மாநாட்டில் உரையாற்றிய அவர், தனது இலங்கைப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.</p>
<p style="text-align: justify;">சமீபத்தில் எனது தலைமையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலை குறித்து அறிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் குழு ஒன்று சென்றது. இலங்கை செல்வதற்கு முன்பே, நாங்கள் சொல்லும் இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம்.</p>
<p style="text-align: justify;">அங்கு முகாம்களிலுள்ள தமிழர்கள் எங்களிடம் தங்களது துன்பங்களை எடுத்துக் கூறினர். இலங்கைத் தமிழர்கள் உணர்வுகள், தமிழ்நாட்டினது உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வு என்று நாம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தோம்.</p>
<p style="text-align: justify;">தமிழர் சகோதரர்களுக்கு இலங்கையில் உண்மையான அரசியல்தீர்வு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் போர் குறித்து ஆய்வு செய்ய, இலங்கை அரசு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்க மறுப்பது ஏன் என ராஜபக்சவிடம் கேட்டோம்.</p>
<p style="text-align: justify;">இலங்கை நாடாளுமன்றக் குழு அமைத்து, ஏன் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடாது என அவரிடம் கேள்வி எழுப்பினோம். இந்த முறையிலான தீர்வுக்கு ஏன் முயற்சிக்கக் கூடாது என தமிழர் பிரதிநிதிகளிடமும் தெரிவித்தோம்.</p>
<p style="text-align: justify;">தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, இலங்கையில் பிளவை உண்டாக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை.</p>
<p style="text-align: justify;">ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு தனியான அரசியல் தீர்வு வேண்டும் என்றே கேட்கின்றனர். நாங்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றதாகவும், இலங்கை ஜனாதிபதியிடம் கைநிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்ததாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அது எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் சொல்வது தவறானது. நான் இந்திய அரசு சார்பில் சென்றதால், மரியாதை நிமித்தமாக ராஜபக்ச பரிசளித்தார். அந்தப் பரிசை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்திய அரசு சார்பில் சென்றதால், எனக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசை, நாடாளுமன்ற கருவூலத்தில் ஒப்படைத்து விட்டேன். இலங்கைக்கு நான் சென்ற பயணத்தின் நோக்கத்தை உண்மையாக நிறைவேற்றி விட்டேன் என்று சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இவர் தனியே இலங்கைப் பயணம் குறித்தே உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32234</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma.jpg" medium="image">
			<media:title type="html">susma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத்தை விதைத்த &#8216;டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான்!: வைகோ</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32228</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32228#comments</comments>
		<pubDate>Thu, 10 May 2012 12:20:00 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32228</guid>
		<description><![CDATA[ஈழத்தை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான்!: வைகோ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-24797" title="vaiko_tamil" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/vaiko_tamil.jpg" alt="" width="100" height="80" />கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை.</p>
<p style="text-align: justify;">வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். இவ்வாறு வைகோ விகடனுக்கு வழ<span id="more-32228"></span>ங்கிய பேட்டியில் ஆவேசமாக தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் &#8216;ஈழம்’ என்ற சொல்லை விதைத்த &#8216;டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து&#8230; பாடம் பண்ணி&#8230; படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!</p>
<p style="text-align: justify;">யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்&#8230;</p>
<p style="text-align: justify;">வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப்பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்&#8230;</p>
<p style="text-align: justify;">தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்&#8230;</p>
<p style="text-align: justify;">ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்&#8230;</p>
<p style="text-align: justify;">உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்&#8230;</p>
<p style="text-align: justify;">இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.</p>
<p style="text-align: justify;">நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்சவினால் நடத்தப்பட்ட இரத்த வெறியாட்டம். இன்றைக்கு &#8216;டெசோ’வை உயிர்த்தெழ வைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன?</p>
<p style="text-align: justify;">தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத்தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக்குத் துரோகம் இழைத்தார்.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் &#8211; சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.</p>
<p style="text-align: justify;">தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒருமுறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32228</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/vaiko_tamil.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/vaiko_tamil.jpg" medium="image">
			<media:title type="html">vaiko_tamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>போர்க்குற்ற நாளில் டென்மார்க் இளையோரால் முன்னெடுக்கப்படும் பேஸ்புக் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32223</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32223#comments</comments>
		<pubDate>Thu, 10 May 2012 12:17:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32223</guid>
		<description><![CDATA[போர்க்குற்ற நாளில் டென்மார்க் இளையோரால் முன்னெடுக்கப்படும் பேஸ்புக் கவனயீர்ப்பு போராட்டம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-15786" title="sri_lanka_civil_war_ap_4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" alt="" width="100" height="80" />டென்மார்க் திசைகள் இளையோர் அமைப்பினரால் பேஸ்புக் ஊடாக,</p>
<p style="text-align: justify;">டென்மார்க் வாழ் அனைத்து மக்களுக்கும், எமது தாயக தேசத்தில் என்ன நடந்தது, என்பதனைத் தெரியப்படுத்தும் நோக்கத்துடன், ‘இலங்கைத் தீவில் நடாத்தப்படும் தமிழர் மீதான இனப்படுகொலை<span id="more-32223"></span>யை நாம் கண்டிக்கின்றோம்’ என்னும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழர் வரலாற்றில், நினைத்தாலே நெஞ்சம் கதறியழும் கொடூரமான நாள் மே 18. பல்லாயிரக் கணக்கான நம் உறவுகளை ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்’ நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">அந்த வகையில 2009ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களிலும், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடூரமான குற்றங்களில் சிலவற்றையே சுட்டிக் காட்டி இக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், தமிழ் மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கைதுகள் மற்றும் சித்திரவதைகள், சர்வதேசஅளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பசி மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழ்நிலை மற்றும் பொதுமக்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள் ஆகிய குற்றங்களே இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">டென்மார்க் வாழ் அனைத்து மக்களுக்கும் கடந்த 2009 ஆண்டு தமிழர் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலை பற்றித் தெரியப்படுத்தி, நினைவுபடுத்தும் முகமாக திசைகள் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் இக் கவனயீர்ப்பு போராட்டம் மே மாதம் 10ம் நாளிலிருந்து http://www.facebook.com/groups/66648005478/ , http://thisaigal.dk/ ஆகிய இணைய முகவரிகளில் பதிவேற்றப்படும்.</p>
<p style="text-align: justify;">இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் அனைவராலும் தமிழினப் படுகொலை தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையவேண்டும், சென்றடையும் என்ற நம்பிக்கையிலே பேஸ்புக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">அத்துடன் பேஸ்புக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ யில் உயிர் துறந்த எம் மக்களுக்கும், எம் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிய மாவீரர்களுக்கும் கண்ணீருடன் அர்ப்பணிக்கின்றோம்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32223</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4.jpg" medium="image">
			<media:title type="html">sri_lanka_civil_war_ap_4</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/sri_lanka_civil_war_ap_4-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பதவி வேண்டாம் அடம்பிடிக்கும் தமரா குணநாயகம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32220</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32220#comments</comments>
		<pubDate>Thu, 10 May 2012 12:14:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32220</guid>
		<description><![CDATA[பதவி வேண்டாம் அடம்பிடிக்கும் தமரா குணநாயகம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32174" title="thamara" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" alt="" width="100" height="80" />ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">வெனிசூலாவில் <span id="more-32220"></span>கூடிய விரைவில் திறக்கப்படவுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் தூதுவராக தன்னை நியமிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">எனினும் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எவ்வித கருத்துக்களும் வெளியிடவில்லை. நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சினால் கியூபாவுக்கான தூதுவராக தமரா குணநாயகம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32220</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara.jpg" medium="image">
			<media:title type="html">thamara</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஐ.நா. தீர்மானத்தை ஏற்க மறுத்தால் சாத்வீக போராட்டம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32217</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32217#comments</comments>
		<pubDate>Thu, 10 May 2012 12:08:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32217</guid>
		<description><![CDATA[ஐ.நா. தீர்மானத்தை ஏற்க மறுத்தால் சாத்வீக போராட்டம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25310" title="maavai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" alt="" width="100" height="80" />ஐ.நா.வின் தீர்மானத்தையும் தமிழ் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்க மறுத்தால் எமது மக்களை அணிதிரட்டி சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்கும் கட்டம் உருவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில்<span id="more-32217"></span> எச்சரிக்கை விடுத்தார்.</p>
<p style="text-align: justify;">பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே மாவை எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,</p>
<p style="text-align: justify;">30 வருட ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.<br />
ஐ.நா.பையின் அறிக்கையின் பிரகாரம் இன்னும் 6000 பேரே மீள்குடியேற்றப்பட விருப்பதாகக் கூறப்படுகின்றது. இது உண்மைக்குப் புறம்பானதும் முற்றிலும் தவறானதுமான தகவலாகும். எமது தகவலின்படி இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்படுவதற்காக இன்னும் மூன்று இலட்த்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.</p>
<p style="text-align: justify;">எமது மக்களுக்கு சொந்தமான காணிகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகிவருகின்றன.</p>
<p style="text-align: justify;">எமது கடற்பரப்புகளுக்கு செல்ல எமது மக்கள் மறுக்கப்படுகின்றனர். அதேவேளை, தெற்கிலிருந்து சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இது இவ்வாறிருக்க வடக்கில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் இராணுவம் நிற்கின்றது. அங்கு புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு பாதுகாப்பாகவும் நிற்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">முல்லைத்தீவில் 2500ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவக் கட்டமைப்புகளும் இராணுவக் குடியேற்றங்களும் இடம்பெற்றுள்ளன.</p>
<p style="text-align: justify;">நந்திக்கடல் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மாதகல் பகுதியில் எமது மக்கள் விரட்டப்பட்டு விகாரைகளையும் இராணுவ நிறுவனங்களையும் அமைத்திருக்கின்றனர் இராணுவத்தினர். சிங்களவர்கள் அங்கு சென்று உல்லாசமாக சுகபோகம் அனுபவிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தத்தை திணிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.</p>
<p style="text-align: justify;">சிறுபான்மை பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றி பௌத்த மதத்தை திணித்து ஆக்கிரமிப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் செயற்பாடுகள் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படப்போகின்றதா?</p>
<p style="text-align: justify;">எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கைதானவர்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்வுக்கும் என அரசாங்கத்துடனான ஒரு வருடகால பேச்சுக்களில் நாம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். எனினும் எதனையாவது அரசாங்கம் நிறைவேற்றியதாக இல்லை.</p>
<p style="text-align: justify;">எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வினை எட்டுவதற்கும் என அரசாங்கத்துடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கம் எமது நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஆயுதப்போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட எமது மக்கள் இன்று ஜனநாயக ரீதியில் எழுந்து நிற்கின்றனர். எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தையும் தமிழ் மக்களுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக கோரிக்கைகளை ஏற்று அரசாங்கம் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கும் அதற்கு முன்பதாக எமது மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">இதிலிருந்து அரசாங்கம் தவறும் பட்சத்தில் தந்தை செல்வா காட்டிய வழியில் நாமமது மக்களை அணிதிரட்டி சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும் என்றார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32217</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai.jpg" medium="image">
			<media:title type="html">maavai</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே 18 தமிழீழத் தேசிய துக்க நாள்! கனடாவில் குவீன்ஸ் பார்க்கில் நடைபெறும்!- தமிழீழ அரசாங்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32210</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32210#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 13:15:06 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32210</guid>
		<description><![CDATA[மே 18 தமிழீழத் தேசிய துக்க நாள்! கனடாவில் குவீன்ஸ் பார்க்கில் நடைபெறும்!- தமிழீழ அரசாங்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32211" title="IM-canada" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada-100x80.jpg" alt="" width="100" height="80" />முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தும், மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா- ரொறன்ரோவின் குவீன்ஸ் பார்க் திடலில் இடம்பெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ரொறன்ரோவில் உள்ள ஒன்ராறியோ பாராளுமன்றத்தி<span id="more-32210"></span>ன் முன்பாக அமைந்துள்ள குவீன்ஸ் பார்க் திடலில், கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில், இந் நிகழ்வு இடம்பெறவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மே-18ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 8:00 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் மே-12 முதல் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் வகையில் ஏகாதச ருத்திர மகா யாகமொன்று இடம்பெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த மகா யாகம் ரொறன்ரோ-ஸ்காபுறோ ஐயப்பன் ஆலயத்தில் மே-13ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு இடம்பெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே-12 முதல் 2761 மார்க்ம் வீதியில் உள்ள, சண் சிற்றி பிளாசாவில் இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் கண்காட்சியும் வைக்கப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">மே-18ம் இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னிறுத்தி, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களதும், கல்விமான்களும், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அறிஞர்களதும் சிறப்புரைகள், இடம்பெறவுள்ளதாகவும் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32211" title="IM-canada" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada.jpg" alt="" width="500" height="705" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32210</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada.jpg" medium="image">
			<media:title type="html">IM-canada</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada.jpg" medium="image">
			<media:title type="html">IM-canada</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/IM-canada-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கை விவகாரம் தொடர்பில் மன்மோகன் &#8211; ஹிலாரி பேச்சு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32206</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32206#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 13:10:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32206</guid>
		<description><![CDATA[இலங்கை விவகாரம் தொடர்பில் மன்மோகன் - ஹிலாரி பேச்சு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32207" title="kilary_kilari_mohan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்ரன் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்தினார்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி நேற்று பிரதமர் மன்மோக<span id="more-32206"></span>ன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.</p>
<p style="text-align: justify;">உலகப் பொருளாதாரம் மற்றும் தீவிரவாத ஒழிப்புக் குறித்து இந்தப் பேச்சின் போது விரிவாக ஆராயப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தமை குறித்தும் இதில் பேசப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பது எனவும் இருவரும் பேச்சின்போது உடன்பாடு தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிகளை ஏற்படுத்துவதற்காக தமிழ்க் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான பெறுபேறுகளை அமெரிக்க வெளியுறவுச் செயலர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறின.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32206</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan.jpg" medium="image">
			<media:title type="html">kilary_kilari_mohan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/kilary_kilari_mohan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>146,679 தமிழர்கள் எங்கே? இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32202</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32202#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 13:06:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32202</guid>
		<description><![CDATA[146,679 தமிழர்கள் எங்கே? இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-29427" title="war-100x80" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" alt="" width="100" height="80" />தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசு மேற்கொண்டது&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46,679 தமிழர்கள் நிலை என்பது பற்றி விளக்குமாறு, இலங்கை மீது சர்<span id="more-32202"></span>வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.</p>
<p style="text-align: justify;">2008ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட சனத்தொகை புள்ளி விபரத்துக்கும், 2009ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து, 1 46,679 தமிழர்களின் நிலை என்ன என, மன்னார் மாவாட்ட வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்விருபுள்ளி விபரங்களின் ஆவணங்களை சாட்சியமாக கொண்டு, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இது குறித்து இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையிலேயே இவ்விவகாரம் குறித்து, இலங்கை மீது பல சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.</p>
<p style="text-align: justify;">வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள,; தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இவ்விடயம், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினைப் பெற்றிருந்ததோடு , பல நாடுகள் இது தொடர்பில் தங்களது கருத்துக்களை ஏலவே வெளியிட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">வன்னிப் போரின் இறுதி 7 மாதங்களில் மட்டும் காணாமல் போனவர்களின் தொகையாவே, 1 46,679 பேரினை வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழ் மக்கள் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32202</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/war-100x801.jpg" medium="image">
			<media:title type="html">war-100&#215;80</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிட்டன் ஊடக விழாவில் கொலைக்களங்கள் ஆவணப்படத்திற்கு இரு விருதுகள்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32199</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32199#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 13:03:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32199</guid>
		<description><![CDATA[பிரிட்டன் ஊடக விழாவில் கொலைக்களங்கள் ஆவணப்படத்திற்கு இரு விருதுகள்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-24470" title="wars" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" alt="" width="100" height="80" />பிரித்தானியாவின் One World Media awards எனப்படும் புகழ்பெற்ற ஊடக விருது விழாவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த<span id="more-32199"></span> தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வென்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த விருதுகளைத் தெரிவு செய்த இரு நடுவர்களும் சனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கண்டிப்பாக பதிலளிக்கப்பட வேண்டிய கொடூரங்களை சனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32199</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/wars1.jpg" medium="image">
			<media:title type="html">wars</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கிளின்டனுக்கு அரசாங்கம் இரசிய அறிக்கை சமர்ப்பிக்கத் தீர்மானம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32195</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32195#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 12:53:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32195</guid>
		<description><![CDATA[கிளின்டனுக்கு அரசாங்கம் இரசிய அறிக்கை சமர்ப்பிக்கத் தீர்மானம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25241" title="kilari" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" alt="" width="100" height="80" />அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு அரசாங்கம் அனுப்பி வைக்க உள்ள இரகசிய அறிக்கை,நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">வெளிவிவகார அ<span id="more-32195"></span>மைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 18ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளது.இந்தக் குழுவினர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">குறித்த அறிக்கை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அமெரிக்காவை எதிர்க்குமாறு பிரசாரம் செய்த இந்த அரசாங்கம் தற்போது அமெரிக்காவிடம் மண்டியிட்டு உதவி கோரி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32195</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari.jpg" medium="image">
			<media:title type="html">kilari</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்கமாட்டோம்!: இரா.சம்பந்தன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32191</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32191#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 12:49:46 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32191</guid>
		<description><![CDATA[தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்கமாட்டோம்!: இரா.சம்பந்தன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-7383" title="Sampanthan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/Sampanthan-100x80.jpg" alt="" width="100" height="80" />சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்ற தமிழ்மக்களை ஒரு போதும் கைவிடவோ,</p>
<p style="text-align: justify;">அன்றேல் துரோகம் செய்யவோ மாட்டோம். எம்மால் இயன்றளவு முயற்சித்து இனப்பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வை பெற்றுக் கொடுப்போம். என்று<span id="more-32191"></span> தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெவித்தார்.</p>
<p style="text-align: justify;">நாம் சிங்கள மக்களையும் மதிக்கின்றோம். அவர்களின் ஆதரவு எமக்குத் தேவை. நல்லெண்ணம் அவசியம். சிங்கள மக்களை ஒரு சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். அதாவது அவர்கள் மத்தியில் துவேசத்தை பரப்ப முனைகின்றார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தற்போதைய அரசியல் நிலைவரங்கள் மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற கைதுகள், ஆலய விவகாரம் தொடர்பில் கருத்துத் தெவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p style="text-align: justify;">திருகோணமலை பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வொன்று எட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் திருகோணமலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">மேலும் அவர் கூறுகையில்,</p>
<p style="text-align: justify;">திருகோணமலை பொது வைத்தியசாலை வளவை அண்மித்த வைத்தியசாலை வீதி பாவனையில் இல்லை. இதனை வைத்தியசாலையுடன் இணைப்பதன் மூலம் பிள்ளையார் கோவிலை கட்டிடிக்க முடியும். இது தொடர்பில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினேன்.</p>
<p style="text-align: justify;">என@வ அதற்கு கமான டிவை @மற்கொள்வதாக அவர் உறுதியளித் துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நகரஅபிவிருத்தி அதிகாரபை அதிகாகளை ந்தித்து @பவுள்@ளன். அதன் லம் அத னை தீர்க்கக் கூடியதாக இருக்கும்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை சந்தேகத்தின் பேரில் திருகோணமலைப் பகுதியில் கைதான 37 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென பாதுகாப்புச் செயலாளடம் கோரிக்கை விடுத்தேன். அண்மையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்தும் தொடர்பு கொண்ட ஒருவர் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">எவ்வாறெனினும் புனர்வாழ்வு பெறாத புலி உறுப்பினர்களை புனர்வாழ்வு அளிக்கும் நோக்குடனேயே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறும் அதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வழிவகுக்குமாறும் நான் பாதுகாப்புச் செயலரை கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இன்றைய சூழலில் எமக்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அதைவிடுத்து சிறு சிறு விடயங்களில் கவனம் செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை தமிழ் மக்களுக்கு நாம் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் தமிழ் மக்களை துயரத்தில் விட்டு விடவும் மாட்டோம் என்றும் அவர் கூறினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32191</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/Sampanthan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/Sampanthan.jpg" medium="image">
			<media:title type="html">Sampanthan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/Sampanthan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தமிழினத்தின் அடையாளம் பேண உறுதி பூணுவோம்: தமிழீழ அரசாங்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32184</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32184#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2012 18:43:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32184</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தமிழினத்தின் அடையாளம் பேண உறுதி பூணுவோம்: தமிழீழ அரசாங்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-29299" title="naadu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/naadu-100x80.jpg" alt="" width="100" height="80" />சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தி ஈழ<span id="more-32184"></span>த்தமிழர்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுபூணுவோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">கவனயீர்ப்பு நிகழ்வுகள், பரப்புரைகள், வணக்க நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் , கண்காட்சிகள் என பல்வேறு வகையிலும், முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்த உலகெங்கும் வாழும் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில், சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு, ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது மாகாண ஆளுநர்களின் தலைமையில், போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளை, தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.</p>
<p style="text-align: justify;">ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தாயக தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை, போரில் மடிந்தவர்களை நினைவுகூர்ந்து வெளிப்படுத்த முடியாத இன்றைய இலங்கைத்தீவின் சூழலில், இனநல்லிணக்கம் என சொல்லாடல் ஊடாக சர்வதேசத்தினை ஏமாற்றி வரும் சிறிலங்கா அரசாங்கமானது, தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே, இந்நிகழ்வுகளை முன்னெடுக்க முனைகின்றது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, மே-18ம் நாள் போரின் வெற்றிநாளாக காலி முகத்திடலில் வெற்றி அணிவகுப்புக்கு சிங்கள தேசம் தயாராகி வருகின்றது. இந்நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டினை உறுதியெடுப்போம்.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா தொடர்பில் ஓரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்வோம்!</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாளர் நாயகத்தை கோருவோம்!</p>
<p style="text-align: justify;">ஆகிய கோரிக்கைகளை சர்வதேசம் நோக்கும் வண்ணம், உரக்க முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் முழங்குவோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32184</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/naadu-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/naadu.jpg" medium="image">
			<media:title type="html">naadu</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/01/naadu-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சுவிஸில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24ஆவது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32179</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32179#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2012 18:40:55 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32179</guid>
		<description><![CDATA[சுவிஸில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24ஆவது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32180" title="swiss_nikalvu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/swiss_nikalvu-100x80.jpg" alt="" width="100" height="80" />உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த அன்னை பூபதி உட்பட நாட்டுப் பற்றாளர்களுடன்.</p>
<p style="text-align: justify;">மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களையும் நினைவுகூரும் நிகழ்வு நேற்று முன்தினம் சூரிச் மாநகரில் வோல்க்ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.<span id="more-32179"></span></p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வில் கவி வணக்கம், எழுச்சியுரை, சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலுடன், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, துர்காவ் மாநிலச் சிறார்களால் அளிக்கை செய்யப்பட்ட எழுச்சி நடனம் மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்திருந்ததுடன் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களின் நினைவாக, இந்த நிகழ்வு நடாத்தப்பட்ட போதிலும் பங்கு கொண்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையை அவதானிக்க முடிந்தது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32179</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/swiss_nikalvu-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/swiss_nikalvu.jpg" medium="image">
			<media:title type="html">swiss_nikalvu</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/swiss_nikalvu-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமரா குணநாயகம் ஐக்கிய நாடுகள் பதவியில் இருந்து நீக்கம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32173</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32173#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2012 18:34:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32173</guid>
		<description><![CDATA[தமரா குணநாயகம் ஐக்கிய நாடுகள் பதவியில் இருந்து நீக்கம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32174" title="thamara" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" alt="" width="100" height="80" />சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த ஜெனீவாவுக்கான ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்த&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவர் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமை<span id="more-32173"></span>ச்சு அறிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">அதேநேரம் ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவரது நியமனம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் தமக்கான நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ரவிநாத ஆரியசிங்க இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஏற்கனவே ஜெனீவாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டால், இது இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்ற சர்வதேச பிரசாரத்துக்கு வலுச் சேர்க்கப்படும் என்று தமரா குணநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">தமிழரான தமரா குணநாயகம்,ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது, இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் தாம் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து நீக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் பிபிசிக்கு தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதனையடுத்து இவ்வாறான பதவி மாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை தமது புதிய பதவிக்குறித்து தமரா குணநாயகத்தின் கருத்து எவையும் இதுவரை வெளியாகவில்லை.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32173</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara.jpg" medium="image">
			<media:title type="html">thamara</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/thamara-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மூவின மக்களும் மகிந்தவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32170</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32170#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2012 18:25:21 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32170</guid>
		<description><![CDATA[மூவின மக்களும் மகிந்தவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-8089" title="ariya" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/ariya-100x80.jpg" alt="" width="100" height="80" />நாட்டில் என்றுமில்லாதவாறு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து,</p>
<p style="text-align: justify;">மக்களைப் பட்டினியால் வதைக்கின்றது மஹிந்த அரசு. வாழ வழியின்றித் திண்டாடும் மக்கள் மரணத்தின் வாசலில் நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.<span id="more-32170"></span></p>
<p style="text-align: justify;">பால்மா பைக்கற், சமையல் காஸ் மற்றும் சிமெந்து பைக்கற் ஆகியவற்றின் விலைகளை அரசு திடீரென அதிகரித்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">எரிபொருள்களின் விலையை அதிகரித்து, பின்னர் கோதுமை மாவின் விலையை அதிகரித்த அரசு, மூன்று பொருள்களின் விலைகளைத் திடீரென அதிகரித்துள்ளது. உழைக்கும் தொழிலாளர் தினமான மேதினம் அனுஷ்டிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின்னர் நாட்டில் மூன்று பொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இதிலிருந்து தொழிலாளர்களை எவ்வாறு இந்த அரசு துன்புறுத்துகின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது. வெளிநாடுகளுக்கு குடும்ப சகிதம் உல்லாசமாகப் பயணங்களை மேற்கொள்ளும் மஹிந்த அரசு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">மஹிந்த அரசின் இந்தப் படுமோசமான செயல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த அரசின் நடவடிக்கைகளை இனியாவது சிங்கள சகோதரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டில் மூவின மக்களும் அணிதிரண்டு மஹிந்த அரசின் அராஜகச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கி பொருள்களின் விலையேற்றத்திற்கெதிராகத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் மஹிந்த அரசு கதிகலங்கும். குடும்ப ஆட்சியும் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32170</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/ariya-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/ariya.jpg" medium="image">
			<media:title type="html">ariya</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/ariya-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியது: திருமா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32165</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32165#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 16:15:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32165</guid>
		<description><![CDATA[தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியது: திருமா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-4509" title="thiruma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/thiruma-100x80.jpg" alt="" width="100" height="80" />ஈழத்தை பற்றி கவலைப்படாத தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நி<span id="more-32165"></span>ருபர்களுக்கு பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அப்போது அவர் கூறியதாவது:</p>
<p style="text-align: justify;">ஈழத்தை பற்றி கவலைப்படாத தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அந்த குழு சட்டபூர்வமான அதிகாரம் இல்லாமல் தான் சென்று திரும்பியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த பயணம் பயனில்லாத பயணமாக அமைந்துவிட்டது.</p>
<p style="text-align: justify;">இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு இலங்கையில் கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும். தமிழர் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இந்திய அரசு உடனடியாக இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32165</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/thiruma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/thiruma.jpg" medium="image">
			<media:title type="html">thiruma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/thiruma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளர்களாக அல்ல! மக்கள் பங்காளிகளாக மாற வேண்டும்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32161</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32161#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 16:13:50 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32161</guid>
		<description><![CDATA[விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளர்களாக அல்ல! மக்கள் பங்காளிகளாக மாற வேண்டும்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-27532" title="TYO" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/TYO.jpg" alt="" width="100" height="80" />இன்றைய நவீன உலகில் வரலாறு காணாத இனப் படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு மேற்கொண்டமை நாம் அனைவரும் அறிந்த உண்மை.</p>
<p style="text-align: justify;">இந்த உண்மையை உலகுக்கு எடுத்துச் செல்லும் வகையில், முதல் முதலாக இலங்கை ஜனநாயகத்திற்கா<span id="more-32161"></span>ன ஊடகவியாளர் அமைப்பால் இலங்கை அரசின் போர்க்குற்ற காணொளி சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அதை தொடர்ந்து, சனல் 4 தொலைக்காட்சி &#8220;இலங்கையில் கொலைக்களம்&#8221; மற்றும் &#8220;தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்&#8221; எனும் இரு ஆவணப் படங்களை வெளியிட்டு, இலங்கை அரசின் கொலைவெறியை உலகிற்கு திரையிட்டு காட்டியது.</p>
<p style="text-align: justify;">அவ்வகையில் பல்வேறு நாடுகளின் அரச மட்டங்களில் இலங்கையின் கொலைக்களம் திரையிட்டு காட்டப்பட்டு, சிங்கள அரசின் மீது கடும் அழுத்தங்கள் ஏற்ப்படுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">தற்சமயம் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டியில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளபோதும், கொலைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்றின் ஆவணப்படத்துக்கான வாக்குகள் அதிகரித்திச் சென்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால், இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படும் 2ஆம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படங்கள் முதலாம் இடத்தை பெறுவதற்கு உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் வாக்களித்து, இறுதியாக முடிவெடுக்கும் நடுவர்களின் தீர்ப்பில் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதை இளையோர்கள் ஆகிய நாம் வேண்டிக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">உலகம் எல்லாம் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் அனைவரும், ஏனைய சக நண்பர்களுக்கும் அத்தோடு அந்தந்த நாடுகளின் மக்களுக்கும் மின்னஞ்சல், முகப்புத்தகம் மற்றும் பல வழிகளின் ஊடாக தெரியப்படுத்தி, அவர்களையும் வாக்களிக்க வைக்கவேண்டும்.</p>
<p style="text-align: justify;">அத்தோடு இதில் முக்கிய விடையம் ஒருவர் பலதடவையும் வாக்களிக்க முடியும் என்பதனையும் அறிவித்துள்ளார்கள். ஆதலால் இளையோர்கள் இவ்விடயத்தில் அதிகமாக ஆர்வம் காட்டி தமது நேரத்தை ஒதிக்கி செயல்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் கொலைக்களம் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டியில் வெற்றி கொள்ளும் போது, தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் தொடர்ச்சியான நிகழ்கால விடையமாக பார்க்கப்படும்.</p>
<p style="text-align: justify;">அதன் ஊடாக நாம் எமது அரசியல் வேலைத்திட்டங்களை சர்வதேச மக்களிடம் இலகுவாக எடுத்துச்செல்ல முடியம். எமது தேசியத் தலைவர் கூறியபடி &#8220;விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இராது , நேரடிப் பங்காளிகளாக மாற வேண்டும்&#8221; என்பதிற்கிணங்க, அனைவரும் இவ்வாக்களிப்பில் கலந்துகொண்டு, எமது தேசிய விடுதலைப் பாதையை அமைப்பதற்கு சிறு கற்களாக மாறவேண்டும் என்பதை நாம் இங்கு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">தமிழ் இளையோர் அமைப்பு &#8211; யேர்மனி</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32161</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/TYO.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/11/TYO.jpg" medium="image">
			<media:title type="html">TYO</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்!: மணியரசன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32157</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32157#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 16:11:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32157</guid>
		<description><![CDATA[பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்!: மணியரசன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32158" title="mani_po" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mani_po-100x80.jpg" alt="" width="100" height="80" />2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில் துணைபோன இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரித்தால் மன்னிக்கமுடியாத தமிழினத் துரோகம் ஆகும். என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ. மணியரசன் தெரி<span id="more-32157"></span>வித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:</p>
<p style="text-align: justify;">இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, பிராணப் முகர்ஜி தமது நீண்ட நாள் நண்பர் என்றும் அவரை ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">2009ல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில் இந்தியாவும் பங்கெடுத்துத் துணை செய்தது. சிங்கள இன வெறி அரசுக்குத் துணையாக பங்காற்றி தமிழினத்தை அழித்த முயற்சியில் துடிப்பாகச் செயல்பட்டவர்களில் மலையாளிகளும் வங்காளிகளும் முக்கியமானவர்கள்.</p>
<p style="text-align: justify;">வங்காளத்திலிருந்து இலங்கையில் குடியேறிய விஜயன் வழிவந்தவர்கள் என்று சிங்களர்கள் தங்களைக் கூறிக் கொள்கின்றனர். வங்காளிகள் தங்கள் பங்காளிகள்என்று சிங்களவர்கள் கருதுகிறார்கள். அதே போல் இந்திய நாட்டு வங்காளிகளும் சிங்களரைக் கருதுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">நமது இக் கருத்துக்குச் சான்றாக 25.3.2012 அன்று டைம்ஸ் ஆஃப் இண்டியா ஏட்டில், ஸ்வப்பன் தாஸ் குப்பதா என்ற வங்காளிப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்து அதன் பிறகு அதை இந்தியா ஆதரித்தது.</p>
<p style="text-align: justify;">இதைக் கூட வங்காளி இதழாளர் ஸ்வப்பன் தாஸ் குப்பதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ஒரு நட்பு நாட்டின் நம்பிக்கைத் துரோகம்“ என்ற தலைப்பில் அவர் 25.3.2012 டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதில்,1980லிருந்து 2009 உள்நாட்டுப் போர் முடியும் வரை கொழும்பிற்குப் பயணம் செய்வது ஒரு மகிழ்ச்சிகரமானதும் அதே நேரம் மனச் சோர்வு தருவதுமான அனுபவம் ஆகும்.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயா வங்களாத்திலிருந்து கடல் மூலமாக இலங்கை சென்ற வங்காளி என்பதால் இங்கிருந்து கொழும்பு செல்லும் வங்காளிகளைச் சிங்களவர்கள் மிக்க அன்புடனும் சகோதர பாசத்துடனும் விருந்தோம்புகின்றனர். மனச் சோர்வு தரும் செய்தி என்னவென்றால் விடுதலைப் புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பு சுட்டும், குண்டுவைத்தும் சிங்களவர்களைக் கொன்ற சம்பவங்களே.</p>
<p style="text-align: justify;">“பொதுமக்களையும் அவர்களில் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து இனம் காண முடியாது. ஆகவே இறுதிப்போரில் நாற்பதாயிரம் பேரைக் கொல்லவேண்டி வந்ததும் தவிர்க்க முடியாததே“. என்று எழுதியுள்ளார் தாஸ் குப்தா.</p>
<p style="text-align: justify;">இதே வங்காளி மன நிலையில் உள்ளவர்தான் நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. 2009ல் அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அடிக்கடி இலங்கை சென்று வந்தார். இலங்கைப் போர் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் அவர் இருந்தார்.</p>
<p style="text-align: justify;">2009 ல் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை சென்றபிரணாப் முகர்ஜி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் இருந்த மூன்றரை இலட்சம் மக்கள் தொகையை வெறும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் என்று குறைத்து அங்கிருந்தே அறிக்கைவிட்டார்.</p>
<p style="text-align: justify;">இலட்சக் கணக்கான மக்கள் இறுதிப்போரில் கொல்லப்படலாம் என்பதை முன்னறிந்து அப்பொழுது அதை மூடி மறைக்க சதித்திட்டம் போட்டுராஜபட்சே, பிரபாகரனுடன் இருந்த மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னார். அதைஅப்படியே ஏற்று இலங்கையிலிருந்துபடியே சொன்னவர்தான் பிரணாப் முகர்ஜி.</p>
<p style="text-align: justify;">ஈழத்தில் போரை நிறுத்தவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற ஒரு நாடகத்தை கருணாநிதி நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து வைக்க சென்னை வந்தவர் இதே பிரணாப் முகர்ஜி. கருணாநிதியைச் சந்தித்துவிட்டு அவரது வீட்டிலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு போர் நிறுத்தம் வருமா என்று கேட்டபோது நாங்கள் போர் நிறுத்தம் கோரவில்லை. (We are not for ceasefire) என்று அறிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இனிமேல்இலங்கை அரசுக்கு ஆயுதம் தரமாட்டீர்களே என்று செய்தியாளர் கேட்டதற்கு இந்தியாவின் தென்பகுதியில் நாம் சில அமைப்புகளை நிறுவியுள்ளோம். (Wehave some installations) அவற்றைப் பாதுகாக்க இலங்கை அரசுக்குச் சில போர்க்கருவிகளைத் தரவேண்டியுள்ளது என்றார்.</p>
<p style="text-align: justify;">அடுத்து சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் இனிமேலும் பயிற்சி தரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல நாட்டு இராணுவத்தினர் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார்கள், இந்திய இராணுவ வீரர்களும் பல நாடுகளில் பயிற்சி பெறுகிறார்கள். அதைப் போல் இலங்கை இராணுவ வீரர்களும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என்று பதில் சொன்னார்.</p>
<p style="text-align: justify;">டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டுரையாளர் ஒளிவு மறைவின்றி சிங்கள இனவெறியை வங்காளி இன உணர்ச்சியாகப் பாசத்தோடு கூறியிருக்கிறார். அதே உணர்வோடுதான் பிரணாப் முகர்ஜி செயல்பட்டார். செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">எனவே இப்படிப்பட்ட தமிழினப் பகைவராகவும் சிங்கள இனப்பங்காளியாகவும் செயல்பட்டு ஈழத் தமிழர் பேரழிவுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதற்குத் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆதரவுதரக் கூடாது.</p>
<p style="text-align: justify;">பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதற்கு வாக்களித்தால் அது மன்னிக்க முடியாதத் தமிழினத் துரோகம் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இன உணர்ச்சியோடும் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த இன அழிப்பை நினைவுகூர்ந்தும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p style="text-align: justify;">பெ.மணியரசன்<br />
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி<br />
இடம்: சென்னை</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32157</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mani_po-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mani_po.jpg" medium="image">
			<media:title type="html">mani_po</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/mani_po-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு தேவை! ஹிலாரியிடம் விளக்குவார் கிருஷ்ணா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32154</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32154#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 16:08:05 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32154</guid>
		<description><![CDATA[தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு தேவை! ஹிலாரியிடம் விளக்குவார் கிருஷ்ணா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25295" title="kilari" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் விடயத்தில் எடுக்கவுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கவுள்ளாரென இந்திய உயர்மட்ட இராஜ<span id="more-32154"></span>தந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;">சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் பின் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து இந்தியாவிற்கு நேற்று வந்தடைந்த திருமதி ஹிலாரி கிளின்டன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இன்றைய சந்திப்பின் போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான நிலைவரம் குறித்தும் ஹிலாரியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா எடுத்துரைப்பாரென்று இந்திய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.</p>
<p style="text-align: justify;">இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டு வருவதும் உண்மையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட நேரடி விஜயம் உட்பட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் கிருஷ்ணா, ஹிலாரியிடம் விளக்குவார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை விடயத்தில் அமெரிக்காவுடன், அதன் ஆலோசனையின்படியே செயற்பட புதுடில்லி விரும்புகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32154</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1.jpg" medium="image">
			<media:title type="html">kilari</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/kilari1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப்பெருவலி: பல அமைப்புகள் சேர்ந்து பிரான்சில் கூட்டுவெளிப்பாடு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32150</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32150#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2012 15:58:48 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32150</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப்பெருவலி: பல அமைப்புகள் சேர்ந்து பிரான்சில் கூட்டுவெளிப்பாடு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32151" title="may18_france_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001-100x80.jpg" alt="" width="100" height="80" />நெஞ்சுவலிக்கின்ற பேரவலத்தை சுமந்து நின்கின்ற தமிழினம்,</p>
<p style="text-align: justify;">தன்மீது பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட பெருங்கொடுமையை, இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து, நீதிகேட்கவும் எம்மினத்தின் நிம்மதியான சுதந்திர வாழ்வை மீட்கும் குறியோடு<span id="more-32150"></span> முன்னோக்கி கைகோர்த்து நடக்குமாறு உணர்த்தவும் இக்காலம் எம்முன் விரிகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த உலகம் பார்த்திருக்க, கொத்துக்கொத்தாய், வகைதொகையின்றி, எம் உறவுகள், சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட, மனிதநாகரீகம் வெட்கப்படும் காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டு ஆண்டு மூன்றுகள் ஆகிவிட்டன.</p>
<p style="text-align: justify;">ஆறாத மனக்காயத்தில் இருந்து வடியும் வேதனைக் குருதி, எத்தனை ஆண்டுகள் போனாலும் வடித்தோயாது. தமிழர்களின் விடுதலைக்கான செயற்பாட்டை, உயிர்ப்போடும், ஈரலிப்போடும் பேணியவாறு ஆண்டுகள் கடந்தும் அது ஓயாது.</p>
<p style="text-align: justify;">எங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையை, உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி உணரவைக்கும் செயற்திட்டத்துடன், பல அமைப்புக்கள் இணைந்து, பிரான்சில் எதிர்வரும் 17ஆம் திகதி, மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வையும், பிரசார இயக்கத்தையும் மேற்கொள்ளவுள்ளன.</p>
<p style="text-align: justify;">நாடுகடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் தமிழர் நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் து பே ஆகிய அமைப்புக்கள் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்படுகின்றன. அத்துடன் ஏனைய தமிழர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மனித நேய அமைப்புக்கள் என்பனவற்றிற்கும் இந்த கூட்டுவெளிப்பாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அன்பான தமிழீழ மக்களே! இறந்துபோன எம் மக்களுக்காக, இழந்துபோன எம் இனிய உறவுகளுக்காக, தாங்கிநின்ற எங்கள் அருமைகளுக்காக, உயிர்போடு நிமிர்ந்து நீதிகேட்பது எங்கள் தலையாய கடமை.</p>
<p style="text-align: justify;">நாங்கள் துயரப்பிழிவில் கரைந்துபோய்விடவில்லை. தலைசாய்ந்து தளர்ந்துபோய்விடவில்லை.</p>
<p style="text-align: justify;">முன்னிலும் மூர்க்கமாய், போர்க்குணத்தோடு, விடுதலை வேட்கையோடு, சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம் என்ற முழு நம்பிக்கையோடு உலகப்பரப்பில் நிமிர்கின்றோம் என்ற செய்தியோடு வாருங்கள்.</p>
<p style="text-align: justify;">எமக்கான சபதத்தையும், எதிரி நோக்கிய சவாலையும் நெஞ்சில் நிரப்பியபடி வாருங்கள் உறவுகளே!</p>
<p style="text-align: justify;">தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.<br />
தமிழர் நடுவம் பிரான்ஸ்</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32151" title="may18_france_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001.jpg" alt="" width="500" height="695" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32150</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001.jpg" medium="image">
			<media:title type="html">may18_france_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001.jpg" medium="image">
			<media:title type="html">may18_france_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/may18_france_001-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு: &#8220;முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப் பேரிணைவு&#8221;</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32142</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32142#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 14:22:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32142</guid>
		<description><![CDATA[லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு: "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப் பேரிணைவு"]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32143" title="london_may18_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001-100x80.jpg" alt="" width="100" height="80" />பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில் &#8220;முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு&#8221; நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">லண்டன் SKLPC (UK), West End Road, Northolt, Middlesex, UB5 6RE<span id="more-32142"></span> எனும் முகவரியில் அமைந்துள்ள &#8220;முருகதாசன் நினைவுத் திடலில்&#8221; எதிர்வரும் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த &#8220;நினைவு வணக்க பேரிணைவில்&#8221;, முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் தாயக உறவுகளையும் நினைந்து அஞ்சலிக்கவும், அவர்கள் நினைவில் சங்கமிக்கவும் ஒன்றுகூடி வருமாறு பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இவ் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சிங்களப் பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறுவுகளை நினைவுகொள்ளும் இந்த நிகழ்வை, பிரித்தானியாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அக்ட் நவ் அமைப்பு, பிரித்தானியத் தமிழர் ஒன்றியம், நீதிக்கும் சமாதானத்துக்குமான பரப்புரை அமைப்பு, பிரித்தானியத் தமிழர் விளையாட்டுக் கழகங்கள், பிரித்தானியத் தமிழ்ப் பாடசாலைகள், பிரித்தானியத் தமிழர் மதவழிபாட்டுத் தலங்கள், பிரித்தானியத் தமிழர் நிலையம் போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரு நிகழ்வாக ஏற்பாடுசெய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">உயிர்களாய் இருந்த எம் உறவுகளை உடல்களாய் குருதியில் இட்ட சிங்கள பேரினவாதத்தின் முகமூடியை கிழித்தெறிவோம். தமிழத் தாயகத்தில் தொடரும் இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு சத்தமிட்டுச் சொல்வோம்.</p>
<p style="text-align: justify;">உறவுகளே… உறங்கியது போதும் உணர்வுடன் எழுந்திடு!</p>
<p style="text-align: justify;">மண்ணுறங்கும் உண்மைகளை உலகறியச் செய்து ஈழ விடுதலைக்கு தோழ்கொடுத்து மரணித்த மக்களின் குருதிக்கு பதில் தேடு!</p>
<p style="text-align: justify;">நஞ்சையும், குண்டையும் கொண்டு நடந்திட்ட கொள்கை வீரராம் மாவீரர் இலட்சியத்தை நனவாக்க நடை போடு!</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32143" title="london_may18_001" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001.jpg" alt="" width="500" height="713" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32142</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001.jpg" medium="image">
			<media:title type="html">london_may18_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001.jpg" medium="image">
			<media:title type="html">london_may18_001</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/london_may18_001-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>“இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்&#8221; கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்!: சூசை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32139</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32139#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 14:19:28 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32139</guid>
		<description><![CDATA[“இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'' கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்!: சூசை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-10485" title="channel4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/channel4-100x80.jpg" alt="" width="100" height="80" />“இரத்தின துவீபம்&#8217;, “இந்து சமுத்திரத்தின் முத்து&#8217; என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்&#8217; என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது.</p>
<p style="text-align: justify;">வரலாற்றில் கறைபடிந்த அழிக்க முடியாத அவமானம் இது<span id="more-32139"></span>. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள்.</p>
<p style="text-align: justify;">நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோன் துல்லியமான பரிசோதனையின் பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த “கெலம் மெக்ரே&#8217; கூறுகின்றார்.</p>
<p style="text-align: justify;">உலகத்தின் மனச்சாட்சியையே உலுக்கிய இவை யாவும் போலியானவை என மீண்டும் ஒரு பொய் கூறியுள்ளது இலங்கை அரசு. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் என்பார் இவைகள் அனைத்தும் போலியானவை எனக் கூறுகின்றார். பேராசிரியர் இவ்வாறு பொய் கூறுவது கல்வி உலகிற்கே பெரும் அவமானம்.</p>
<p style="text-align: justify;">மேற்குறித்த அறிக்கையும் தொலைக்காட்சி ஆவணம் பொய் எனில், அறுபது ஆண்டுகளாக, இலங்கை அரசு இலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு இழைத்து வந்துள்ள அத்தனை அநியாயங்களும் அட்டூழியங்களும் பொய்.</p>
<p style="text-align: justify;">கிளாலிப் பயணிகள் படுகொலை, மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை, குமுதினிப் படகு கோரக்கொலை, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை, செஞ்சோலை சிறுவர் படுகொலை இப்படிப் பல படுகொலைகள் இவையாவும் பொய் “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை&#8217; இலங்கை அறுபது வருடங்களாக சர்வதேச சமூகத்தின் முன் கூறிவருகின்ற பொய்மொழிகள் இவை.</p>
<p style="text-align: justify;">கடவுளின் பத்துக்கட்டளைகளில் (Ten Commandments) ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக, இன்னொன்று “பொய் சொல்லாதிருப்பாயாக&#8217; எனக் கூறுகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசு கொலைகளையும் செய்துவிட்டு சுத்தப் பொய்யும் கூறி கடவுளின் பத்துக் கட்டளைகளையும் மீறியுள்ளது.</p>
<p style="text-align: justify;">தொடர்ச்சியாக செய்துவரும் படுகொலைகளும் பொய்களுக்கும் சேர்த்து இன்று இலங்கைக்கு கிடைத்துள்ள மகத்தான பட்டம் “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்&#8217;.</p>
<p style="text-align: justify;">இலட்சக்கணக்கான மக்களை வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காது தாம் விரும்பியவாறு தமது காட்டுத்தர்பார் நாடகத்தை நடத்தி முடித்துள்ளது இலங்கைப் படை. தமது வெறியாட்டம் எவருக்கும் தெரியவாய்ப்பில்லை என்றுதான் அப்போது எண்ணியிருந்தது.</p>
<p style="text-align: justify;">சனல் 4 ஆவணப்படம் வெளிவரத் தொடங்கிய போதுதான் தொலை நுகர்வுத் தொழில்நுட்பம் தமது தலைக்கு மேலே சுழன்று கொண்டிருந்த இரகசியம் தெரியவந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இப்போது கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்.</p>
<p style="text-align: justify;">சனல் 4 ஆவணப்படத்தின் தொடர் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் இனிப்போகப் போகத்தான் வெளிவரப் போகிறது.</p>
<p style="text-align: justify;">மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் யூதப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம்களின் படுகொலை, ஆபிரிக்காவில் றுவாண்டா குட்சி இனப்படுகொலை, மேற்கு ஆசியா ஈராக்கில் சதாமின் குர்டிஸ் இனப்படுகொலை. தென்கிழக்காசியாவில் பொல்பெட்டின் கம்பூச்சிய படுகொலை இந்த வரிசையில் இப்போது தென் ஆசியாவின் கொலைக்களத்தில் சிங்களத்தின் தமிழர் படுகொலை.</p>
<p style="text-align: justify;">ஹிட்லர், பொல்பொட், சதாம் ஆகியோரின் இழிவுச்சாவுகளை இலங்கை ஆட்சியாளர்களும் நினைவிற் கொள்வது பொருத்தமானது.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழியில் போடப்பட்டது தமிழ் தேசியம் மட்டுமல்ல, புத்தரின் அஹிம்சையும், இந்தியாவின் காந்தீயம், அசோக தர்மமாகும். தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தி ஆகணும்.</p>
<p style="text-align: justify;">இங்கே தவறு செய்தவன் திருந்தும் எண்ணம் இல்லை. தப்பு செய்தவன் வருந்தும் எண்ணம் இல்லை.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32139</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/channel4-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/channel4.jpg" medium="image">
			<media:title type="html">channel4</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/channel4-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>யேர்மனி தலைநகரத்தில் நடைபெற்ற போருக்கு எதிரான கவனயீர்ப்பு நிகழ்வு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32134</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32134#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 14:13:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32134</guid>
		<description><![CDATA[யேர்மனி தலைநகரத்தில் நடைபெற்ற போருக்கு எதிரான கவனயீர்ப்பு நிகழ்வு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32135" title="Benews" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Benews-100x80.jpg" alt="" width="100" height="80" />நேற்று(5.5.2012) சனிக்கிழமை அன்று யேர்மன் தலைநகரத்தில் போருக்கும் மற்றும் அரச அடக்குமுறைக்கும் எதிராக பல்லின மக்கள் ஆர்ப்பாடத்தில் இறங்கினர்.</p>
<p style="text-align: justify;">இவ் நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் பெர்லின் மக்கள் பிரதிநிதி அவர்களும் இணைந்துகொண்டார்<span id="more-32134"></span>. இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டின் பிரச்சனை விடையமாக மக்கள் கண்டனம் தெரிவித்தனர் .அத்தோடு இஸ்ரேல் நாட்டுக்கு யேர்மன் அரசாங்கமும் ஆயுதஉபகரணங்கள் விற்பதையும் மக்கள் கண்டித்தனர் இவ் நாடுகளின் பின்னணியில் தமது பிராந்திய நலம் சார் அரசியலை முன்னகர்த்தும் சில வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இவ் கண்டன பேரணியில் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Annete Groth அவர்களும் கலந்து கொண்டார் .இறுதியாக &#8220;தமிழ்மக்களின் உரிமைப் போராட்டமும் சர்வதேசத்தின் ஈடுபாடும்&#8221; எனும் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு வழங்கப்பட்டது .</p>
<p style="text-align: justify;">தகவல்<br />
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை<br />
www.vetd.info</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32134</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Benews-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Benews.jpg" medium="image">
			<media:title type="html">Benews</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Benews-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தனி ஈழம் &#124; கருணாநிதியின் கருத்தை ஏற்க முடியாது!: சுஷ்மா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32131</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32131#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 14:10:30 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32131</guid>
		<description><![CDATA[தனி ஈழம் &#124; கருணாநிதியின் கருத்தை ஏற்க முடியாது!: சுஷ்மா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-24674" title="susma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்&#8217; ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும்.</p>
<p style="text-align: justify;">இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும்<span id="more-32131"></span> சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன் ஸ்ரீரங்கா எம்.பி. சந்திப்பு</p>
<p style="text-align: justify;">இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜை கடந்த புதன்கிழமை மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இந்த சந்திப்பு இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள சுஷ்மா சுவராஜின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கையில் இருந்து திரும்பிய பிறகு அவர்களின் பொதுவான கருத்து குறித்து சுஷ்மாவிடம் அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து எந்த விதமான விவாதம் நடத்தவில்லை என்ற தகவல்கள் இலங்கையில் இருந்து வெளிவருவது குறித்து சுஷ்மா சுவராஜிடம் கேட்டதற்கு எனது தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை இலங்கையில் சந்தித்த போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் .</p>
<p style="text-align: justify;">இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து, இலங்கை நாடாளுமன்ற கட்சிகளின் குழு ஒன்றை அமைத்து விவாதித்து முடிவு காணும் வகையில் இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால் இந்த குழுவில் பங்குகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்து வருகிறது என்றும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அவர்களை வலியுறுத்தி இந்த குழுவில் கலந்து கொள்ளச் செய்யவேண்டும் என இலங்கை ஜனாதிபதி தங்களிடம் கேட்டுக் கொண்டதாக இந்திய எம்.பி.க்கள் குழுவை தலைமை தாங்கி இலங்கைக்கு சென்று வந்த சுஷ்மா சுவராஜ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32131</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma.jpg" medium="image">
			<media:title type="html">susma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>யாழ் மேதின தேசிய கொடி விவகாரம் தமிழர்களை பிளவுபடுத்த கூடாது!: மனோ</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32128</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32128#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 14:04:26 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32128</guid>
		<description><![CDATA[யாழ் மேதின தேசிய கொடி விவகாரம் தமிழர்களை பிளவுபடுத்த கூடாது!: மனோ ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-30234" title="mano" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" alt="" width="100" height="80" />யாழ்ப்பாணத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பொது மேதின நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தேசிய சிங்க கொடியை ஏந்திய சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இனி அதன் மூலம் விளையக்கூடிய நன்மைகளை மாத்திரம் நாம் பார்க்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.<span id="more-32128"></span></p>
<p style="text-align: justify;">யாழ். பொது மேதின நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தேசிய சிங்க கொடியை, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தூக்கி பிடித்த நிகழ்வு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும், தமிழ் கட்சிகளையும் பிளவு படுத்தும் காரணியாக அமைந்துவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் மனோ கணேசன் மேலும்கூறியதாவது,</p>
<p style="text-align: justify;">பிரிபடாத ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு தமிழர்கள் தயார் என்பதை இலங்கை அரசுக்கும், சிங்கள மக்களுக்கும், உலகத்திற்கும் வெளிக்காட்டும் ஒரு அடையாளமாக சம்பந்தன் இலங்கைதேசிய சிங்க கொடியை தூக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இன்று நடைமுறையில் நாட்டுக்குள்ளே இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், எமக்கு இருக்கின்ற பலத்தையும், சாதக பாதகங்களையும் சீர்தூக்கி பார்த்து இந்த நடவடிக்கையை சம்பந்தன் சுய விருப்புடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவருடன் இணைந்து செய்துள்ளார் என தெரிகிறது.</p>
<p style="text-align: justify;">மறுபுறத்தில் இந்த சிங்க கொடி,தேசிய கொடியாக கருதப்பட்டாலும், அது சிங்கள பெளத்த இனவாதத்தை அடையாளப்படுத்துகிறது என தமிழ் தேசிய வாதிகளும்,இலங்கையின் சிங்கள முற்போக்காளர்களும் முழுமையாக நம்புகிறார்கள். அது முற்றிலும் உண்மையானதும், துரதிஷ்டவசமானதும் ஆன நம்பிக்கை ஆகும்.</p>
<p style="text-align: justify;">இந்த துரதிஷ்டவசமான நம்பிக்கைக்கு இலங்கையில் நிலவும் பேரினவாத சிந்தனையே அடிப்படை காரணமாகும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த வித அரசியல் உரிமைகளும் தந்து விட கூடாது என்ற இனவாத சிந்தனையுடன் செயல்படும், இன்றைய அரசாங்கம் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இன்றைய அரசு மட்டும் அல்ல,எதிர்கட்சி கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த கால அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த தேசிய சிங்க கொடி தூக்கல் தொடர்பிலான நிகழ்ச்சி நிரல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை என்பது இன்று பகிரங்கமாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அதேபோல், எதிர்க்கட்சி கூட்டமைப்பில் உள்ள எமது ஜனநாயக மக்கள் முன்னணி,நவ சம சமாஜகட்சி, ஐக்கிய சமவுடமை கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இது பற்றி எதுவும் தெரியாது. இவை நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்.</p>
<p style="text-align: justify;">ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது. அதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">சம்பந்தன் ஒரு அக்கினி பரீட்சையை தமது நல்லெண்ண அடையாளத்தை அறிவித்துள்ளார். இதை இலங்கை அரசாங்கம் ஒரு நல்ல அடையாளமாக பார்த்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழருக்கு எதுவும் தந்துவிட கூடாது என்று கூக்குரல் இடும் சிங்கள இனவாத சக்திகளை புறந்தள்ளி, தேசிய இனப்பிரச்சினைக்கு, தமிழர் அபிலாசைகளுக்கு ஏற்புடைய நியாயமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தரப்படும் தீர்வுதான், தேசிய கொடியை தூக்கிய கூட்டமைப்பு தலைவருக்கு செய்யும் உபகாரமாகும்.</p>
<p style="text-align: justify;">கூட்டமைப்பு தலைவரை தேசிய சிங்ககொடியை தூக்க வைத்த பெருமை கொண்ட ஐதேக தலைவருக்கும் இதில் சம பொறுப்பு இருக்கின்றது. சம்பந்தன் தேசிய கொடி தூக்கியதை வரவேற்று, இதுதொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை பாரட்டுகின்ற அரசாங்கம், பேச்சுவார்த்தை தொடர்பில் தொடர்ந்து கடும் போக்கிலேயே இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">தேவையற்ற நிபந்தனைகளை கைவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை அறிவிக்கும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அதேபோல் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சின் அடிப்படை நிலைப்பாடுகளை அறிவிக்கும்படி, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், தம்முடன் சேர்ந்து தேசிய கொடியை தூக்கிய ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பிரிபடாத ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு தமிழர்கள் தயார் என்ற நல்லெண்ண சமிக்ஞையை அரசாங்கத்துக்கு காட்டிய முதல் தமிழ் தலைவர் சம்பந்தன் அல்ல. ஆனால் நல்லெண்ணத்தை காட்டி ஏமாற்றப்பட்ட இன்னொரு தமிழ் தலைவராக அவர் சரித்திரத்தில் இடம்பெற்று விடக்கூடாது என நான் விரும்புகிறேன்.</p>
<p style="text-align: justify;">இந்த சம்பவம் இன்று நடந்து முடிந்து விட்டது. இனி அதன் மூலம் விளையக்கூடிய நன்மைகளை நாம் பார்க்க வேண்டும். அது நம் மத்தியில் மேலும் பிளவுகளை உருவாக்கும் காரணமாக அமைந்து விடக்கூடாது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32128</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano.jpg" medium="image">
			<media:title type="html">mano</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/mano-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32123</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32123#comments</comments>
		<pubDate>Sat, 05 May 2012 10:44:42 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32123</guid>
		<description><![CDATA[தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-997" title="sampanthan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" alt="" width="100" height="80" />ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">தேசியக் கொடியை<span id="more-32123"></span> ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32123</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/sampanthan.jpg" medium="image">
			<media:title type="html">sampanthan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகிறது இந்தியா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32119</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32119#comments</comments>
		<pubDate>Sat, 05 May 2012 10:39:47 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32119</guid>
		<description><![CDATA[இலங்கையின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகிறது இந்தியா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32120" title="sushma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sushma-100x80.jpg" alt="" width="100" height="80" />புதுடெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இந்தியப் பிரதமரின் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, சுஸ்மா சுவராஜ் குழு தமது இலங்கைப் பயணம் தொடர்பாக தயாரித்த அறிக்கை மன்மோகன்சிங்கிடம் கையளிக்கப்பட்டது</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமி<span id="more-32119"></span>ழர்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வலியுறுத்துவதுடன் நின்று விடாமல், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கவும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இலங்கை சென்று திரும்பிய சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">நேற்றுக்காலை 10 மணி தொடக்கம் சுமார் 45 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, மற்றும் இந்தியப் பிரதமர் பணியக துணை அமைச்சர் நாராயணசாமி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">இந்தச் சந்திப்பின் போது குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடமும் மன்மோகன்சிங் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதேவேளை, இந்தச் சந்திப்பின் போதும், குழுவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் பின்வரும் விடயங்கள் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமிழர் பிரச்சினையை தீர்க்க அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இதை ஏற்படுத்தாவிட்டால், தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. எனவே, பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும்படி, இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒன்றிணைந்த இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண அரசுகளிடம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். இதை இலங்கை அரசு எதிர்க்கிறது. தமிழர்கள் பகுதியில் இராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டு.ம்</p>
<p style="text-align: justify;">வடக்கில் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் தமிழர்களின் கையில் நிர்வாகத்தைக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br />
இலங்கை</p>
<p style="text-align: justify;">அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுப் போய் உள்ள பேச்சுக்களை உடனடியாக மீளத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போதைய உடனடி தேவையாகும்.</p>
<p style="text-align: justify;">பேச்சுக்களில் எந்தெந்த விடயங்கள் குறித்துப் பேசுவது என்ற விவரத்தை, இலங்கை அரசாங்கம் சொல்ல மறுப்பதே இந்தப் பேச்சுக்கள் முடங்கிப் போயிருப்பதற்குக் காரணம்.</p>
<p style="text-align: justify;">எனவே, பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்யும்படி, இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதன்பின், பேச்சுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">வடக்கில், வளங்கள் நிறைந்த விளைநிலங்களில், தற்போது இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளைநிலங்களில் இருந்து, இராணுவத்தை அகற்றிவிட்டு அவற்றை நிலத்தின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழர் பகுதிகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள எண்ணிலடங்கா இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும். இராணுவத்துக்குப் பதிலாக காவல்துறையை அந்தப் பகுதிகளில் நிறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா தமிழர் பிரச்சினையை, தமிழகத்துப் பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினையாக கருத வேண்டும். அங்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட நிதி உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையாகச் சென்றடைகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தற்போது இந்தக் கண்காணிப்பை, இலங்கை இராணுவம் செய்து வருகிறது. இந்தக் கண்காணிப்பைச் செய்வதற்கு இந்தியா சார்பில் நிபுணர்களை அனுப்ப வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழர் வசிக்கும் பகுதிகளில், அவர்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழ் அதிகாரிகளை அதிகளவில் நியமனமிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மீள்குடியமர்வைப் பொறுத்தவரை, 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே அங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இது தவறானது. 2005ஆம் ஆண்டுக்கு முன்பே இரண்டரை லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் இடங்கள் பறிபோய் உள்ளன. எனவே, அவர்களையும் மீள்குடியேற்றம் செய்ய வகை ஏற்படுத்திட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களிடையே ஒருவித அச்சம் இப்போதும் உள்ளது.</p>
<p style="text-align: justify;">கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் இராணுவத்தினர் நிறைந்து காணப்படுகின்றனர். இது தமிழர்களிடையே ஒருவித பீதியை இன்னும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இது தவிர வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கூட இராணுவத்தினரின் கெடுபிடிகள் உள்ளன. இது தேவையற்ற குழப்பத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தி வருவதால், இதை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்தியக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">நாடாளுமன்றக் குழுவின் கருத்துகளைக் கேட்டபின்னர், அவர்களிடம் பேசிய மன்மோகன்சிங்,</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா செயற்பட்டு வருகிறது என்றும் அங்குள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு பக்கபலமாக நிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32119</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sushma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sushma.jpg" medium="image">
			<media:title type="html">sushma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/sushma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம்: தமிழீழ அரசாங்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32114</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32114#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 19:51:48 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32114</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம்: தமிழீழ அரசாங்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-22551" title="may_18" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/may_18-100x80.jpg" alt="" width="100" height="80" />சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தி, ஈழத்<span id="more-32114"></span>தமிழர்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதிபூணுவோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">கவனயீர்ப்பு நிகழ்வுகள், பரப்புரைகள், வணக்க நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் என பல்வேறு வகையிலும், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்த உலகெங்கும் வாழும் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில், சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி, தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது மாகாண ஆளுநர்களின் தலைமையில், போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளை, தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.</p>
<p style="text-align: justify;">ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தாயக தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை, போரில் மடிந்தவர்களை நினைவுகூர்ந்து வெளிப்படுத்த முடியாத இன்றைய இலங்கைத்தீவின் சூழலில், இனநல்லிணக்கம் என சொல்லாடல் ஊடாக சர்வதேசத்தினை ஏமாற்றி வரும் சிறிலங்கா அரசாங்கமானது, தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே, இந்நிகழ்வுகளை முன்னெடுக்க முனைகின்றது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, மே-18ஆம் நாள் போரின் வெற்றிநாளாக காலி முகத்திடலில் வெற்றி அணிவகுப்புக்கு சிங்கள தேசம் தயாராகி வருகின்றது.</p>
<p style="text-align: justify;">இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை உறுதியெடுப்போம். சிறிலங்கா தொடர்பில் ஒரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துவோம்!</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாளர் நாயகத்தை கோருவோம்!</p>
<p style="text-align: justify;">மேற்கூறிய கோரிக்கைககைள சர்வதேசம் நோக்கும் இன்னும் உரக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் முழங்குவோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><iframe src="http://www.youtube.com/embed/U2ZkYdI9vaw" frameborder="0" width="640" height="360"></iframe></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32114</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/may_18-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/may_18.jpg" medium="image">
			<media:title type="html">may_18</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/may_18-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே 18 &#8211; தமிழீழ தேசிய துக்க நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32110</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32110#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 19:47:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32110</guid>
		<description><![CDATA[மே 18 - தமிழீழ தேசிய துக்க நாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-8932" title="war crime3  may18" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/war-crime3-may18-1-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழரின் சரித்திரத்திலே மறக்க முடியாத துன்பங்கள் நிறைந்த ஓர் முக்கியமான நாள்.</p>
<p style="text-align: justify;">சர்வதேச ரீதியிலே ஆண்டு தோறும் நினைவு கூற வேண்டிய வாரத்தின் முடிவு நாள்.</p>
<p style="text-align: justify;">30 வருடப் போரிலே அழிக்கப் பட்ட அல்லது அழியப்பட்ட எம் <span id="more-32110"></span>உறவுகளை விட பல மடங்கு தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட இறுதி நாட்கள். 40இ000 எம் உறவுகள் கொல்லப் பட்டதாகவும்147,000௦௦ எம்மவர் காணமல் போனதாகவும் உலகத்தின் கண்பார்வைக்கு நிருபிக்கப் பட்ட வேதானை மிக்க நாட்கள்.</p>
<p style="text-align: justify;">சிங்கள பேரினவாத அரசால்இ உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சரமாரியாக பொழிந்த நாட்களைஇ இரசாயன குண்டுகளை ஈன இரக்கம் இன்றி எறிந்த நாட்களைஇ அதிலும் மேலாகபதுங்கு குழிகளில் மறைத்து இருந்த சிறுவர்களையும் பெண்களையும் மண்ணால் மூடி மடித்த நாட்களை எடுத்துக் காட்டும் விதத்தில்தான் இந்த மே 18 அமைகிறது.</p>
<p style="text-align: justify;">தேசியத் தலைவரின் இலட்சிப் பாதையில் செவ்வனே செயற்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிந்தனையாளர்களாலும் உணர்வு மிக்க பிரதிநிதிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்ட பெயர் தான் தமிழீழ தேசிய துக்க நாள்.</p>
<p style="text-align: justify;">அதாவது இதை ஆங்கிலத்தில் கூறப் போனால் National day of Mourning.</p>
<p style="text-align: justify;">இந்தப் பெயரின் பொருத்தத்தை அல்லது அதன் அர்த்தத்தை புரியாதவர்கள் மே 18 ஆம் நாளை விளக்கும் போதுதேசியம் அகற்றப்பட்ட நாள் தலைமை அழிக்கப்பட்ட நாள் என்று கூறும் பித்தலாட்டக் காரர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.</p>
<p style="text-align: justify;">தவறிக் கூட வானம் மண்ணில் விழுந்தது இல்லையே. அது போலவே எம் தேசியத்தையோ தலைமையையோ அழக்க யாராலும் முடியாதுஎன்பதை ஆணித்தரமாக கூற விரும்புகிறேன்.</p>
<p style="text-align: justify;">எங்கள்தேசியத் தலைவரின் யுக்தியை தெரியாதவர்கள் அவரின் செயற் திறனைப் புரியாதவர்கள் இனியாவது இதனைப் புரிந்து கொண்டு எம் மக்களை குழப்பும் பேச்சுகளை நிறுத்தாவிடில் எம்மவர் சீற்றத்துக்கு உள்ளாவது நிச்சியம் என்பதையும் இங்கு நான் கூற விரும்புகிறேன்.</p>
<p style="text-align: justify;">போர் குற்றங்களையும் மனித உரிமை மீறல் களையும் உலகம் கண்டிராத வகையில் புரிந்த சிங்கள பேரினவாத அரசுக்கு பயத்தையும் தண்டனையையும் தரும் வகையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி உலகளாவிய ரீதியில் இந்த துன்பம் நிறைந்த நாட்களை நினைவு கூருவோமாக.</p>
<p style="text-align: justify;">நன்றி,<br />
Dr. Ram Sivalingam.</p>
<p style="text-align: justify;">நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.<br />
உதவிப் பிரதமர்.<br />
sivalingham@sympatico.ca</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32110</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/war-crime3-may18-1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/war-crime3-may18-1.jpg" medium="image">
			<media:title type="html">war crime3  may18</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/war-crime3-may18-1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32104</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32104#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 19:39:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32104</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-3450" title="Mahinda_S" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Mahinda_Rajapakse_with_Dr__Manmohan_Singh-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கூடங்குளம் அணுமின் உலை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதியளித்தமை<span id="more-32104"></span>யே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அணு உலை உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் வாக்களித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">பி.பி.சீ இந்திய சேவையின் ஊடகவியாளர் நராண் பூசன் இதனை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அணுஉலை தயாரிப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என ஜெயலலிதா அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32104</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Mahinda_Rajapakse_with_Dr__Manmohan_Singh-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Mahinda_Rajapakse_with_Dr__Manmohan_Singh.jpg" medium="image">
			<media:title type="html">Mahinda_S</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Mahinda_Rajapakse_with_Dr__Manmohan_Singh-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32100</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32100#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 19:34:58 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32100</guid>
		<description><![CDATA[வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25075" title="army" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/army-100x80.jpg" alt="" width="100" height="80" />சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் ப<span id="more-32100"></span>ணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">கடந்த டிசம்பரில், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் 2010 இல் காணாமற்போன கேலிச் சித்திரவடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை உள்ளடங்கலாக, கடந்த காலங்களில் காணாமற் போனோர் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா காவற்துறையினர் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் பிரித்தானிய வெளியுறவுப் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போதிலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்த முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை என பிரித்தானிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அறிக்கை, உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த சிறிலங்கா தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சிறிலங்காவில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டில் கேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் பிரித்தானிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32100</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/army-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/army.jpg" medium="image">
			<media:title type="html">army</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/army-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தனி தமிழீழம் &#8211; கருணாநிதியின் கோரிக்கை நிராகரிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32094</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32094#comments</comments>
		<pubDate>Fri, 04 May 2012 19:27:03 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32094</guid>
		<description><![CDATA[தனி தமிழீழம் - கருணாநிதியின் கோரிக்கை நிராகரிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32095" title="g.k.Vasan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/g.k.Vasan_-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு,</p>
<p style="text-align: justify;">இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையை நிரா<span id="more-32094"></span>கரித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் எனவும், இதற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கருணாநிதி கோரி இருந்தார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் தமிழீழ ஆதரவாளர்களின் மாநாடு ஒன்றையும் கடந்த திங்கட்கிழமை சென்னையில் அவர் தலைமையில் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">எனினும் கருணாநிதியின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள ஜீ.கே.வாசன், இலங்கை தமிழர் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உயர்ந்தபட்ச ஆதரவினை வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதன் அடிப்படையிலேயே அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில்; முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கும் இந்தியா ஆதரவளித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32094</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/g.k.Vasan_-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/g.k.Vasan_.jpg" medium="image">
			<media:title type="html">g.k.Vasan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/g.k.Vasan_-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றால், தமக்கு ஆபத்து என உணர்ந்த இந்தியா &#8211; பழ.நெடுமாறன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32088</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32088#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:45:19 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32088</guid>
		<description><![CDATA[விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றால், தமக்கு ஆபத்து என உணர்ந்த இந்தியா - பழ.நெடுமாறன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-4001" title="nedumaaran_anna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால்,</p>
<p style="text-align: justify;">இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்டமிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார்கள்! இவ்வாறு தமிழர்<span id="more-32088"></span> தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விகளுக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும் அவரிடம் விகடன் மேடையில் கேட்கப்பட்ட இலங்கை தொடர்பான கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு:</p>
<p style="text-align: justify;">கேள்வி: நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது பொலிஸ் உறவினர் ஒருவர்&#8230; அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?</p>
<p style="text-align: justify;">பதில்: நிறைய தடவை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சரியமூட்டும்.</p>
<p style="text-align: justify;">1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்கு இளைஞர்கள் வந்தனர்.</p>
<p style="text-align: justify;">இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவதாக நின்ற இளைஞர், அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள். நான்தான் பிரபாகரன் என்று சொன்னபோது, திகைத்துப்போனேன்.</p>
<p style="text-align: justify;">ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என் வீட்டில் அவரும் வேறு சில இளைஞர்களும் அதற்கு முன் பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த நான் பெரும்பாலும் வெளியூர்களில்தான் இருப்பேன். சென்னை வீட்டில் இந்த இளைஞர்கள்தான் தங்கியிருப்பார்கள்.</p>
<p style="text-align: justify;">அவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருக்கிறார் என்பதும் அதை வெளிப்படுத்தாமலேயே அத்தனை நாட்கள் என்னிடம் பழகி வந்திருக்கிறார் என்பதும் பெரும் ஆச்சரியம் அளித்தது.</p>
<p style="text-align: justify;">அப்போது எல்லாம் நான் பிரபாகரனிடமே பலமுறை, உங்கள் தலைவர் பிரபாகரனை அழைத்து வாருங்கள், சந்திக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். &#8216;சரி, சரி’ என்று அவரும் பணிவாகத் தலையாட்டியிருக்கிறார். அவரும் அவருடைய தோழர்களும் இரகசியம் காத்த தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தக் கட்டுக்கோப்புதான் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய பலம்.</p>
<p style="text-align: justify;">கேள்வி: தமிழீழம் பற்றி ஆதியோடு அந்தமாகத் தெரிந்துகொள்ள நான் என்ன புத்தகம் படிக்க வேண்டும்?</p>
<p style="text-align: justify;">பதில்: வரலாற்று அறிஞர் முருகர் குணசிங்கம் எழுதிய &#8216;இலங்கைத் தமிழர் வரலாறு’ என்ற நூல் படித்தால், முழுமையான வரலாறு அறிந்துகொள்ளலாம்!</p>
<p style="text-align: justify;">கேள்வி: ராஜீவ் காந்தியின் மரணச் செய்தியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?</p>
<p style="text-align: justify;">பதில்: கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய ஓர் அதிகாலைப் பொழுதில் ராஜீவ் கொலை செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இந்திராவின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், என்னை ராஜீவின் மரணம் கூடுதலாகப் பாதித்தது.</p>
<p style="text-align: justify;">ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!</p>
<p style="text-align: justify;">கேள்வி: இலங்கைப் போரை இந்தியா ஆதரித்ததற்கு &#8216;சீனாவின் ஆதிக்கம் அங்கே வந்துவிடும்’ என்பது மட்டும்தான் காரணமா?</p>
<p style="text-align: justify;">பதில்: இது ஒரு திசைதிருப்பும் பேச்சு. ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில், இலங்கையில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தைக் கொண்டுவருவதற்கான இரகசிய முயற்சி நடந்தது.</p>
<p style="text-align: justify;">உடனே இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில், &#8216;இந்தியப் பெருங்கடல் எல்லையில் எந்த நாட்டு இராணுவத்தளம் அமைக்கப்பட்டாலும், இந்தியா அதைத் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும்’ என எச்சரித்தார். உடனே, ஜெயவர்த்தன அடங்கிப்போனார்.</p>
<p style="text-align: justify;">அதைப்போல, &#8216;சீனாவிடம் உதவி பெற்றால், அதை நாங்கள் எங்களுக்கு எதிரானதாகக் கருதுவோம்’ என்று ராஜபக்சவை நோக்கி இந்தியா எச்சரித்திருந்தாலே இலங்கை அடங்கிப்போயிருக்கும்.</p>
<p style="text-align: justify;">ஆகவே, சீனாவைக் காட்டி இந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவது சரியானது அல்ல. உண்மையான காரணம் என்ன? இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மிசோரம் எனப் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய இராணுவத்தின் சரிபாதி அங்குதான் நிற்கிறது.</p>
<p style="text-align: justify;">ஒருவேளை இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்டமிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார்கள்!</p>
<p style="text-align: justify;">கேள்வி: விலைவாசி உயர்வு, லஞ்சம், தமிழ்நாட்டு சாதிப் பிரச்னைகள்பற்றி எல்லாம் பேசாமல் எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது ஏன்?</p>
<p style="text-align: justify;">பதில்: யார் சொன்னது? நாங்கள் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசியும் எழுதியும் போராடியும்வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதி நீர்ப் பிரச்னைகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது எங்கள் தமிழர் தேசிய இயக்கம்தான்.</p>
<p style="text-align: justify;">ஆனால், இலங்கைப் பிரச்சினைபற்றி நான் சொல்வது மட்டுமே ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">எங்களுடைய மற்ற போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது தவறு.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்குத் தமிழ்நாட்டு தமிழர் நலனும் முக்கியமே.</p>
<p style="text-align: justify;">கேள்வி: உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் அடைய விரும்பிய இலட்சியத்தை இன்று வந்து சேர்ந்துவிட்டீர்களா?</p>
<p style="text-align: justify;">பதில்: மாணவர் பருவத்தில் அண்ணன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன்.</p>
<p style="text-align: justify;">பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தபோது, ஒர் தமிழன் பெரும் பதவியில் இருக்கும்போது அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார் சம்பத். பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்துவிட்டது.</p>
<p style="text-align: justify;">என்றைக்கு இந்திய இராணுவம் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ, அன்றைக்கே நாங்கள் காங்கிரஸ் கட்சியை மறந்துவிட்டோம்.</p>
<p style="text-align: justify;">தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். எங்கள் இலட்சியம், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறோம்!</p>
<p style="text-align: justify;">ஆனந்த விகடன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32088</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya.jpg" medium="image">
			<media:title type="html">nedumaaran_anna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/nedumaaran-Aiya-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இந்தியாவை நிராகரித்துவிட்டு சீனாவோடு கைகுலுக்குகிறது இலங்கை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32085</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32085#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:39:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32085</guid>
		<description><![CDATA[இந்தியாவை நிராகரித்துவிட்டு சீனாவோடு கைகுலுக்குகிறது இலங்கை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31177" title="sri" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/03/sri-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கை அரசு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள சீனாவிடம் மீண்டும் 1.5 பில்லியன் டொலரை கடனாகப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவின் திறைசேரிப் பணிப்பாளர் பி.பி.ஜெயசுந்தர தலைமையிலான அதிகாரிகள் அண்மையில் சீனா<span id="more-32085"></span>வுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அங்குள்ள அரச வங்கி ஒன்றின் மூலம் 1.5 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுவதற்கான உறுதிமொழியைப் பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தநிதியில் இருந்தே, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மறுசீரமைப்பும், மொறகஹகந்தை திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. சிறிலங்காவுக்கு கடன் வழங்கவுள்ள சீன அரச வங்கி எது என்பது பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தற்போதைய சுத்திகரிப்புத் திறனான – நாளொன்று 50 ஆயிரம் பரல் என்ற அளவை இரட்டிப்பாக தரமுயர்த்துவது குறித்த சாத்திய வள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இந்த ஆலையை 2 பில்லியன் டொலர் செலவில் மறுசீரமைப்பதற்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் விருப்பம் வெளியிட்டிருந்தது. ஆனால், சிறிலங்கா அதனை நிராகரித்து விட்டது.</p>
<p style="text-align: justify;">எனினும், இது குறித்து சீனா, ரஸ்யா, செக் குடியரசு, தென்கொரியா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது. இந்தியாவின் விருப்பத்தை நிராகரித்து விட்ட சிறிலங்கா அரசாங்கம் இந்த வாய்ப்பை சீனாவுக்கே வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">மேற்குலகுடனான மோதல் போக்கினாலும், சீன வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்கும், நிபந்தனைகள் அதிகமின்றியும் கடன் பெற முடியும் என்பதாலும், சீனாவின் உதவியைப் பெறவே சிறிலங்கா விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32085</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/03/sri-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/03/sri.jpg" medium="image">
			<media:title type="html">sri</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/03/sri-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>டெசோவின் செயல்திட்டம் என்ன : கருணாநிதியிடம் ராமதாஸ் கேள்வி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32082</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32082#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:34:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32082</guid>
		<description><![CDATA[டெசோவின் செயல்திட்டம் என்ன : கருணாநிதியிடம் ராமதாஸ் கேள்வி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-22618" title="ramadas" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/ramadas.jpg" alt="" width="100" height="80" />டெசோ அமைப்பு உருவாக்கியுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமி<span id="more-32082"></span>ழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ஒன்றினைத்து &#8220;தமிழீழம்&#8217; அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமிழீழம் ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ)<br />
தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தி.மு.க. தலைவர் தெரிவித்திக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதில் தமிழ் உணர்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து<br />
முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் எவரும் மறுக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">ஆனால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழீழம் அமைப்பதற்காக அல்லது ஈழத் தமிழர் படுகொலையை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத கருணாநிதி, ஆட்சிப்பொறுப்பை இழந்த பிறகு தமிழீழம் அமைத்தே தீருவேன் என்று முழங்க தொடங்கியிருப்பதுதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">அதுமட்டுமின்றி டேசோ அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துவிட்ட போதிலும், தமிழீழம் அமைப்பதற்கான அதன் செயல்திட்டம் என்ன என்பது அறிவிக்கபடவில்லை.</p>
<p style="text-align: justify;">மாறாக தனித் தமிழீழம் அமைக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் எந்த பயனும் ஏற்ப்பட போவதில்லை.</p>
<p style="text-align: justify;">அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மிக மூத்த தலைவர் கருணாநிதி தான்.<br />
இவ்வளவு செல்வாக்குள்ள மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட்டுவிட்டு, தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமைக்கு நிர்பந்திக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் வரும் மே 22ம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">அப்போது தனி தமிழீழம் அமைப்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கருணாநிதி முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதேப்போன்ற தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கவேண்டும்.</p>
<p style="text-align: justify;">டெசோ அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை இனச்சிக்கலுக்கு தனி தமிழீழம் அமைப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற உண்மை நிலையை வடஇந்திய தலைவர்களுக்கும், உலக நாடுகளின் தலைவர்களுக்கும் உணர்த்தவும், அவர்களின் ஆதரவை திரட்டவும் தேவையான நடவடிக்கைகளையும் உடனே தொடங்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32082</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/ramadas.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/04/ramadas.jpg" medium="image">
			<media:title type="html">ramadas</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜென்ம பூமியிலிருந்து ஜெனீவாவிற்கு புலம்பெயர்ந்து விட்ட தமிழர் தேர்தல்! &#8211; பூநகரான்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32079</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32079#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:32:18 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32079</guid>
		<description><![CDATA[ஜென்ம பூமியிலிருந்து ஜெனீவாவிற்கு புலம்பெயர்ந்து விட்ட தமிழர் தேர்தல்! - பூநகரான்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31460" title="uno" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" alt="" width="100" height="80" />ஈழத் தமிழராகிய எங்களது அரசியல் தலைவிதியை நிர்ணயித்து வந்ததில் தேர்தல்களின் பங்குகள் அளப்பரியவை. இந்தியப் பொதுத் தேர்தல் காலத்தையே கபடத்துடன் முள்ளிவாய்க்கால் அழிப்பிற்கு உகந்த காலமாய் எதிரிகள் தேர்ந்தெடுத்தனர்</p>
<p style="text-align: justify;">இராவோ பகலோ<span id="more-32079"></span> இல்லாத செக்கல் பொழுதை சத்துரு சங்காரத்திற்காய் புராண இதிகாச இந்தியர்கள் தான் பரிந்துரைத்திருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அல்லது முடிவெடுக்கவல்ல இந்திய அரச கட்டில் அதிகாரம் வலுவற்றிருந்த நேரத்தை சூதிலும் வாதிலும் மிக்க கொழும்பும் அக் காலத்தை தெரிந்திருக்கலாம்.</p>
<p style="text-align: justify;">எது எப்படியிருப்பினும் இந்தியத் தேர்தல் முடிவுகளிற்கும் முள்ளிவாய்க்காலிற்கும் உள்ள தொடர்பை , “மேற்குலக &#8211; இந்து சமத்திர” பூகோள ராஜீக தந்திர உபாய பனிப் போர் அரசியலிற்கூடாக தமிழர் போராட்டத்தை பார்த்தால் எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள இயலும்.</p>
<p style="text-align: justify;">தமிழர் தலைவிதியை ஆரம்பத்தில், தீவின் வடக்கு கிழக்கில் திணிக்கப்பட்ட தேர்தல்கள் தீர்மானித்து வந்தன. பின்னர் கொழும்பில் ஆட்சிக்கு வரும் கட்சிகளும் அந்த முடிவை நிர்ணயித்தன.</p>
<p style="text-align: justify;">அதனாற் தான் அக் காலத்தில் , தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு வித நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடித்து வந்திருக்க வேண்டும்</p>
<p style="text-align: justify;">1983 ஆடி அடியைத் தொடர்ந்து ஏற்பட்ட “அமிர் &#8211; இந்திரா” சந்திப்பின் பின் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்த தேர்தல்களும் தமிழ் அபிமானிகளாலும், இன உணர்வாளர்களினாலும் அவதானிக்கப்பட்டு வந்தன.</p>
<p style="text-align: justify;">தேசத்தின் குரல் என்று அறியப்பட்ட திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டதைப் போல் பின்லாடனின் இரடடைக் கோபுரங்களின் மீதான தாக்குதலின் பின் உலகின் போக்கும் பார்வையும் சடுதியாக மாறின.</p>
<p style="text-align: justify;">இந்த உலக மாறுதலை வெளிநாடுகளில் இருந்த புலம் பெயர் தமிழராகிய நாங்கள் விரைந்து கவனித்து வன்னிக்கு தெரிவிக்க தவறி விட்டோமோ என்னமோ?</p>
<p style="text-align: justify;">அதற்கேற்ப தற்காலிக் வடிவ மாற்றங்களையும் தற்காப்பு நெகிச்சியையும் செய்ய, நாம் பிந்தி விட்டோமா என்றெல்லாம் இன்று என் மனம் அங்கலாய்க்கிறது.</p>
<p style="text-align: justify;">காலா காலமாக நம்மை வதைத்த தெற்கின் இன வாத உக்கிரமும் அதனால் விளைந்த, “உயிரையும் கொடுக்க வல்ல இலட்சிய வேட்கையும்’ நம்மை நாணல் போல வளைந்து பின் நிமிரும் தந்திரோபாய “தற்காப்பு உத்தியை” மறைத்திருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தலிபானகளினாலும், குர்டிஜ் போராளிகளினாலும் இன்னுமாக எத்தனை எத்தனையோ சிறிய போராட்டக் குழுக்களினாலும் “புஷ்” குடும்ப பயங்கரவாதத்திற்கு எதிரான வெடி கொழுத்தலிருந்து தப்ப முடிந்திருப்பதை எண்ணும் போதும், எங்கள் போராட்டம் மட்டும் ஆரியங்களின் கூட்டால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வந்த இந்தியத் தேர்தல் காலத்தைப் பார்த்து கபடமாக துடைத்து அழிக்கப்படதை என்னும் போது இதய வலி மேலும் அதிகரிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">கொழும்பிலிருந்தவர்கள், இந்தியாவின் புலிகள் மீதான கோபத்தையும், “புஷ்’” இன் மூர்க்கத்தனமான உலக போக்கையும் தமக்கு சாதகமாக்கி கொண்டு, எமக்கெதிராக ஏவி விட்டார்கள் என்பதே உண்மை.</p>
<p style="text-align: justify;">பேயிடமிருந்தாவது உதவி பெற தயாரான அவர்கள் சர்வ தேசத்தின் போராட்ட அழிப்பு போக்கை நன்றாகப் பயன்படுத்தி விட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">அதே சக்தி இன்று மகிந்தவுடன் நல்லுறவுடனில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பு மட்டும் அந்த சக்தியை பயன்படுத்த முயல்வதாகத் தெரிகிறது.</p>
<p style="text-align: justify;">வெளிநாடுகளில் உள்ள நாங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துகிறோமா?</p>
<p style="text-align: justify;">வெளிநாடுகளில் உள்ள நாங்கள் தான் முழுமையாக சர்வதேச அரசியல் மயப்படாது இருக்கிறோம் என்பது என் கணிப்பு.</p>
<p style="text-align: justify;">அடுத்த ஜெனீவாத் தேர்தல் தொடர்பாக புலம் பெயர் தமிழராகிய நாம் என்ன செய்கிறோம்?</p>
<p style="text-align: justify;">ஏனென்றால் நமது விதியை ஜெனீவாவில் நடக்கவுள்ள தேர்தல்களே அடுத்து நிர்ணயிக்கவுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆம். தமிழரின் தேர்தல் இன்று ஜென்ம பூமியிலிருந்து ஜெனீவாவிற்கு சென்று விட்டது.</p>
<p style="text-align: justify;">அந்தத் தேர்தலின் வாக்காளர்கள் தமிழர்கள் அல்ல உலக நாடுகள்.</p>
<p style="text-align: justify;">எனவே அந்த வாக்காளரை நோக்கி நாம் செல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;">வெளிநாடுகளில் நாமென்ன செய்கிறோம் என்பதை அவர்கள் காண்பார்கள் .</p>
<p style="text-align: justify;">யாழ்ப்பாணத்தில் தோன்றிய தமிழ் &#8211; முஸ்லீம் முரண்பாட்டை பூதாகாரமாக்கித் தான் பாகிஸ்தான், பங்களாதேஷ் அடங்கலாக அனைத்துலக இஸ்லாமிய நாடுகளையும் கொழும்பு தனது கைக்குள் போட்டு வைத்திருந்து.</p>
<p style="text-align: justify;">இதனை இந்த இஸ்லாமிய நாடுகள் தங்கனது முடிவிற்கான காரணமாக ஜெனீவாவில்த் தெரிவித்து மாதங்கள் பல கடந்தும் எங்கள் நடவடிக்கைகள் மாறவில்லை.</p>
<p style="text-align: justify;">ஆனால், தம்புள்ள விவகாரத்தால் இன்று உண்மையின் யதார்த்தம் வெளிப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த சந்தரப்பத்தில் தாயகத்தில் , தமிழர் கட்சிகள் இரண்டு முஸ்லீம்களிற்கு உரிய ஜனநாயக ஆதரவை வழங்கியுள்ளன.</p>
<p style="text-align: justify;">உலக முஸ்லீம் நாடுகள் நிட்சயமாக சிறீலங்காவின் இந்த இனவாதத்தை விரும்ப இடமில்லை. அடுத்த ஜெனீவாவில் இவை என்ன செய்யப் போகிறன்றன?</p>
<p style="text-align: justify;">எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இலகுவில் சிறீலங்காவிற்கு வாக்களிக்கும் என முடிவு செய்ய இயலாது.</p>
<p style="text-align: justify;">அன்றிருந்த புலிகள் இந்தியாவின் எதிரி என்றால், எதிரியின் எதிரி நமக்கு நன்பண் என்று பாகிஸ்தான் நம்மை ஆதரிக்கவில்லையே? அது ஏன்?</p>
<p style="text-align: justify;">யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேறியமையை அதற்கு காரணமாக சிறீலங்கா பரப்புரை செய்திருக்கும்.</p>
<p style="text-align: justify;">புலிகளை தமிழராக அல்ல இந்துக்களாக, இந்திய முலாம் பூசியிருக்கும்.</p>
<p style="text-align: justify;">எனவே நாம் முஸ்லீம்களை அனுசரிக்கவும் ஆதரிக்கவும் வேண்டிய தமிழரின் தார்மீகக் கடமையுடன் அவசர தேவையும் இன்று தோன்றியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தச் சந்தரப்பத்தில் ராஜதந்திரத்துடன் “நகரும்” அறிவார்ந்த புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆவது முஸ்லீம் சகோதர்களுடான பழைய துன்பியல் சம்பவங்களை மறக்குமாறும் மன்னிக்குமாறும் வெளிநாடுகளிலிருந்து குரல் எழுப்புவதால் உலக மட்டத்தில் ஏற்படவல்ல அனைத்து நன்மைகள் பற்றியும் எங்கள் அமைப்புக்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதே இன்றைய எனது ஆதங்கமாகும்.</p>
<p style="text-align: justify;">சிங்கள இனம் இதுவரை தான் தொடர்ந்து தமிழர்களிற்கு செய்த அகோரங்களிற்கு முறைப்படி மன்னிப்புக் கோராததைப் போல , நாங்களும் மௌணம் சாதிக்கப் போகிறோமா?</p>
<p style="text-align: justify;">இங்குள்ள புலம் பெயர்ந்த அமைப்புக்களிலும் பல தமிழர் விரும்பும் அபிலாஜைகளை கூவி ஆதரவைத் திரட்டி , சுய மய அரசியல் நடத்த முனைவது முள்ளிவாய்க்காலிற்கு பின்னரும் தொடரலாமா?</p>
<p style="text-align: justify;">தமிழ் சிங்கள இணக்கம் சாத்தியமோ இல்லையோ தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் சாத்தியமானதே.</p>
<p style="text-align: justify;">நாம் நமது முஸ்லீம் சகோதரர்கள் பற்றி கரிசனை கொள்ள வேண்டிய நேரமிது.</p>
<p style="text-align: justify;">எங்களிற்குள் இருப்பதைப் போல் அவர்களிடையே உள்ள ஒட்டுக் குழுவினரூடாக நாம் ஒட்டு மொத்த முஸ்லீங்களையும் பார்க்கக் கூடாது.</p>
<p style="text-align: justify;">மேற்கே உடப்பிலிருந்து வடக்கினூடாக கிழக்கு வரை அன்றே நமது அகிம்சை வழி அறப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த முஸ்லீம்களும் நம்மைப் போன்ற சிறுபான்மையினரே<br />
48 இல் தீவ சுதந்திரமடைமந்ததும், இன வாதம் முதலில் மலையகத் தமிழரை இலக்கு வைத்தது.</p>
<p style="text-align: justify;">பின்னர் வட கிழக்கு தமிழரை குறி வைத்த போது எதிர்த்த இந்தியாவை சமாளிக்கவும், உலகத்தில் தாம் தமிழரிற்கு எதிரானவர்கள் அல்ல என்று காட்ட மாறி மாறி வந்த இரண்டு அரசாங்களுமே மலையகத் தமிழரை அரவணைத்து வந்தன.</p>
<p style="text-align: justify;">இந்த திட்டமிட்ட தமிழ் இன அழிப்பை தொடர மலையத் தமிழரையும், முஸ்லீம்களையும் இனவாதம் அணைத்ததுடன் பல சலுகைகளையும் வழங்கியது.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழரின் மற வழி ஆயுதப் போராட்டத்தால் வட கிழக்குத் தமிழரிற்கு எதுவும் கிடைக்காது போனாலும் பக்க விளைவாக மலையகமும் முஸ்லீங்களும் பலனடைந்ததாகவே நான் பாரக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">இன்று தமிழரின் வேர்களை முற்றாக அறுத்த நிலையில் சன்னதமாடும் இனவாத பூதம் முஸ்லீஙகளின் முக்காட்டில் கையை வைக்கிறதென்றே நான் நினைக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">சர்வதேச வான்பரப்பில் புலம் பெயரந்த தமிழர்கள் ஒன்றாக அஞ்சலி செய்வதோடு நில்லாமல் உலகின் கவனத்தை ஈர்க்க வல்ல நியாமான ஜனநாயகம் மிக்க காரியங்களிற்காக குரல் எழுப்ப வேண்டும். அப் பணியினை பிரித்தானிய தமிழர் அமைப்பொன்று செய்தாலும் அது தமிழரை மட்டும் நோக்கியதாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">எப்பாடு பட்டாவது இந்த எங்களது மாறுதல்களை உலகிற்கு உரத்துக் கூவினால் ஒரு வேளை இஸ்லாமிய நாடுகள் அவர்கள் ஜெனீவாவில் நமக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லவா!</p>
<p style="text-align: justify;">தவறுகள் சில சமயங்களில் தவிர்க்க முடியாத தேவைகளாகி விடுவதுண்டு &#8211; அவ்வாறே திருத்தங்களும் மாறுதல்களும் சூழ்நிலை மாற்றத்தோடு ஏற்கப்பட வேண்டியதும் தவிர்க்க கூடாதவையாகும்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32079</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno.jpg" medium="image">
			<media:title type="html">uno</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/uno-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்தியா பயணம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32075</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32075#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:22:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32075</guid>
		<description><![CDATA[கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்தியா பயணம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25788" title="tna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/tna-100x80.jpg" alt="" width="100" height="80" />இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் உள்ள தடைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று அடுத்த வாரம் இந்தியா பயணமாகிறது.</p>
<p style="text-align: justify;">கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்<span id="more-32075"></span>தக் குழு அங்கு செல்கிறது.</p>
<p style="text-align: justify;">இந்தக் குழுவினர் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது உள்ள தடைகள், இலங்கை அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள், இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் என்பன உட்பட பல விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவர் என்று கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் செய்து இங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதும் இந்தப் பயணத்தின் நோக்கம் என்று தெரியவருகிறது.</p>
<p style="text-align: justify;">கூட்டமைப்புக்குழு இந்தியா பயணமாகின்றபோதும் அவர்கள் அங்கு யார் யாரை சந்தித்துப் பேசுவர் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32075</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/tna-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/tna.jpg" medium="image">
			<media:title type="html">tna</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/tna-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தேசியக் கொடியை சம்பந்தன் கையில் எடுத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32072</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32072#comments</comments>
		<pubDate>Thu, 03 May 2012 18:19:26 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32072</guid>
		<description><![CDATA[தேசியக் கொடியை சம்பந்தன் கையில் எடுத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-7501" title="sampanthan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/sampanthan.jpg" alt="" width="100" height="80" />இலங்கையின் தேசியக் கொடியை சம்பந்தன் கையில் எடுத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.</p>
<p style="text-align: justify;">நாட்டைப் பிரிக்கும் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் சதித் திட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தே<span id="more-32072"></span>சிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர எச்சரித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:</p>
<p style="text-align: justify;">ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், இந்திய விஜயம் மற்றும் எமது நாட்டுக்கு எதிரான அறிக்கை என்பவற்றைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இவையனைத்தும் பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்குவதற்கான இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டத்தின் உச்சக்கட்டமாகும். இது பயங்கரமான சூழ் நிலையா கும்.</p>
<p style="text-align: justify;">இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் நாட்டுக்குள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் பின்னணியிலும் அமெரிக்காவின் இலங்கை ஏஜண்டுகள் செயற்படுகின்றன. இதன் மூலம் உலக முஸ்லிம் நாடுகள் எமக்கு வழங்கி வரும் ஆதரவை இல்லாதொழிப்பதே திட்டமாகும்.</p>
<p style="text-align: justify;">லிபியாவைப் போன்று இலங்கையில் புலி ஆதரவாளர்களான இளைஞர்களையும் முஸ்லிம் இளைஞர்களையும் மோதவைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது. லிபியாவில் காண்பித்த விளையாட்டை இங்கு காண்பிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் தேசியக் கொடியை சம்பந்தன் கையில் எடுத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. செல்வநாயகத்தின் கோட்பாட்டை கையிலெடுத்துள்ளார். அதாவது ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகார பரவலாக்கலை கோரியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதாவது முதலில் காணி, பொலிஸ் அதிகாரமில்லாத பரவலாக்கலை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் அவ் அதிகாரங்களை இந்தியா, அமெரிக்காவின் அழுத்தங்களுடன் பெற்றுக்கொள்வதே திட்டமாகும். இது நிறைவேறினால் தனித் தமிழீழம் தானாக உருவாகும் .</p>
<p style="text-align: justify;">எமது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதா இல்லையா? என்பதை ஆராய பிரிட்டனுக்கு அதிகாரம் கிடையாது. பிரிட்டன் தனது வேலையை பார்த்துக் கொண்டு சிவனே என்று இருக்க வேண்டும். அதை விடுத்து எமது பிரச்சினையில் மூக்கை நுழைத்தால் மூக்குடைபடும்.</p>
<p style="text-align: justify;">இலங்கையைப் பிரித்து பிரபாகரனின் கனவை நனவாக்க பலமுனை சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசாங்கம் விழிப்பாக செயல்பட வேண்டும். இந்த சதிக்காரர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32072</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/sampanthan.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/sampanthan.jpg" medium="image">
			<media:title type="html">sampanthan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாரிஸில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32062</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32062#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 15:31:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32062</guid>
		<description><![CDATA[பாரிஸில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32063" title="MAY 14" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-14-100x80.jpg" alt="" width="100" height="80" />சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சு பாரிஸ் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;">பாரிஸ் நகரின் Denfert Rochereaum பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக<span id="more-32062"></span> நகர்ந்து Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது.</p>
<p style="text-align: justify;">பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பட்ட இனங்களினதும் கட்சிகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-32064" title="MAY 1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-1-300x225.jpg" alt="" width="300" height="225" />இம்முறை பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறும் காலமாகையால் பிரான்சு நாட்டின் கட்சிகள் பிரமாண்டமான முறையில் தமது நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் மற்றும் பலூன்கள் கட்டப்பட்டு தமிழீழத் தேசியத் தலைவரின் பிரமாண்டமான உருவப்படங்களைத் தாங்கி, ஊர்திகள் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப் பட்டிருந்தது.<br />
தமிழ் மக்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும் மேள வாத்தியங்கள் முன்னால் தமிழீழத் தேசிய கானங்களை முழங்க உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களின் ஊர்திகள் வீதியில் அணிவகுத்துச் சென்றன.</p>
<p style="text-align: justify;">அவற்றின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.<br />
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழ தேசியக் கொடிகளையும் தமிழீழத் தேசியத் தலைவரது வர்ணப் படங்களையும் ஏந்தியவாறே காணப்பட்டனர். ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தன. பேரணியின் மத்தியில் போர்க் குற்றவாளி மகிந்தவின் உருவ பொம்மையும் கொண்டு செல்லப்பட்டது.</p>
<p style="text-align: justify;"><img class="alignright size-medium wp-image-32066" title="MAY 3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-3-300x225.jpg" alt="" width="300" height="225" />பிரான்ஸ் இளையோர் அமைப்பினர் இந்த மேதினத்தில் உற்சாகத்துடன் தமது பங்களிப்பைச் செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இரவு 8 மணியளவில் தமிழ் மக்களின் பேரணி Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது. அந்தவேளை, நினைவுத்தூபியின் உயரமான பகுதியில் ஏனைய நாட்டுக்கொடிகள் கட்சிக்கொடிகள் தாங்கியோரின் மத்தியில் ஒரு தமிழ் இளைஞன் தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கியிருந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து அங்கு நினைவுக் கூட்டம் இடம்பெற்றது. சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஆசிரியர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றினார்.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-32067" title="MAY 17" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-17-300x225.jpg" alt="" width="300" height="225" />அவர்தனது உரையில், மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் இனத்தின் தேசிய ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின் மூலம் அடிமை கொள்வதே எதிரியின் திட்டம் என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக நாம் எழுச்சி கொள்ளவேண்டும்.<br />
ஏனைய நாட்டவர்களுடன் நாம் இன்று இணைந்து 126 ஆவது மேதினத்தில் எழுச்சி கொண்டு நிற்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">60 ஆண்டுகளாக தமிழ் மக்களை சிங்களவர் கொடுமைப் படுத்திவந்துள்ளனர். அதன் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். நாம் 1983 ஜீலைப்படுகொலையினையே அதி உச்சமாகக் கருதிவந்த நிலையில், இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை எமது மனத்தில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்டது. இதனைக் கருத்திற்கொண்டு வரும் மே 18 இல் முள்ளிவாய்க்கால் 3 ஆம் ஆண்டு நினைவில் அனைவரும் திரண்டு ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும் என்றார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள், எமது தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் பிரெஞ்சுமொழியில் சுருக்கமாக விளக்கமளித்தார்.</p>
<p style="text-align: justify;">நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. பாடல் நிறைவடையும் வரை தமிழ் மக்களுடன் இணைந்து பிரெஞ்சு மக்களும் கைகளைத் தட்டி உற்சாகமளித்தனர். இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் தொழிலாளர் தின நிகழ்வு நிறைவுற்றது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32062</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-14-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-14.jpg" medium="image">
			<media:title type="html">MAY 14</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-14-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-1.jpg" medium="image">
			<media:title type="html">MAY 1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-1-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-3.jpg" medium="image">
			<media:title type="html">MAY 3</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-3-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-17.jpg" medium="image">
			<media:title type="html">MAY 17</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/MAY-17-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழ தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தார்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32057</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32057#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 15:23:56 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32057</guid>
		<description><![CDATA[தமிழீழ தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தார்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32058" title="Samp-Sig" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig-100x80.jpg" alt="" width="100" height="80" />ஒரு நாளில் கூட தமிழீழத் தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் யாழ் மண்ணில் வைத்து சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இவர் எவ்வாறு தமிழ் இனத்திற்குத் தலைமை தாங்க முடியும் எ<span id="more-32057"></span>ன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேளிவி எழுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மே தினத்தை முன்னிட்டு ஐ.தே.கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வு தொடர்பாக ஊடகமொன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த பொதுமக்கள் மற்றும் போராளிகளினதும் தியாகத்தை மறந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர். இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தமது கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்</p>
<p style="text-align: justify;">தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை தேசியத் தலைவரின் சிந்தனையின் அடிப்படையில் நாம் உருவாக்கினோம். அக்காலகட்டதில் நான்கு கட்சிகளைக் கொண்டு உருவாக்கும்போது உறுதியான கொள்கையுடனேயே உருவாக்கினோம். தமிழ் மக்களுக்குகான நிரந்தரத்தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்பதே கொள்கையாகவும் உறுதியாகவும் இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள் மறந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வே தமிழர்களுக்குத் தேவை எனவும் கூறிவருவதுடன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் சம்பந்தன் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகல இனமக்களும் இணைந்து வாழும் தீர்வையே நாம் வேண்டி நிற்கின்றோம் என கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனிநாட்டுக் கொள்கைக்கு ஆப்பு வைக்கும் செயலாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் தமது சுயநலத்திற்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இவ்வாறு செயற்பட்டு வருவதுடன் தமிழ் மக்களின் கொள்கையை சிறிலங்கா அரசிடமும் சிங்கள இனத்திடமும் அடவு வைக்க முற்படுகின்றனர். இது எதிர்காலத்தில் தமிழினத்திற்கு பாரிய பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தும்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-32058" title="Samp-Sig" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig.jpg" alt="" width="400" height="260" /></p>
<p style="text-align: justify;">எமது இனம் யாரிடமும் கையேந்தியோ தலைகுனிற்தோ வாழ்ததில்லை. தமிழ் மன்னர்களின் வீரமிக்க ஆட்சி தொடக்கம் எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வரை எவரிடமும் அடிபணியாத வரலாறு உள்ளது. எமது விடுதலைப்போராட்டதின் காரணமாக இலட்சக்கணக்கான மக்களும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இதைக் கூட உணர்ந்து கொள்ளாத வகையிலேயே கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">கூட்டமைப்பில் உள்ள இவர்கள் தமது சுயநலத்திற்காக ஒரு உள்னதமான கொள்கையுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு இவர்கள் செயற்படுவதாயின் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாக இருக்கும் இல்லையேல் தொடர்ந்து இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி எமது கொள்கைக்கு ஆப்பு வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களானால் எதிர்காலத்தில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.</p>
<p style="text-align: justify;">தற்போது உள்ள மகிந்த அரசாங்கத்திற்கும் ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சிக்கும் பாரிய வேறுபாடு கிடையாது. இக்கட்சிகளும் இக்கூட்டத்தினரும் தமிழ் மக்களுக்கான விரோதப்போக்கைக் கொண்டவர்கள். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கக் கூடாது என்பதில் உறுதியான கொள்கை உள்ளவர்கள்.</p>
<p style="text-align: justify;">ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இனப்படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டன ஆயிரக்கணக்கான தமிழர்கள் கிராமம் கிராமமாகவும் கூட்டம் கூட்டமாகவும் படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்றே மாறிமாறி வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் எமது இனம் தொடர்ந்து அழிக்கப்பட்டது. இறுதியாக மகிந்த அரசு முள்ளிவாய்க்காலில் வைத்து இந்தியா மற்றும் சில சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்தது.</p>
<p style="text-align: justify;">அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சியே பேச்சு வார்த்தை என்ற போர்வையில் விடுதலைப்போராட்டத்திற்குள் பிழவை ஏற்படுத்தியும் போராட்டத்தை அழிக்கவும் அடிகோலியாக அமைந்திருந்தது. இந்த இலட்சணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐ.தே.கட்சியுடன் கைகோர்க்க முடியும் என நான் கேட்க விரும்புகின்றேன்.</p>
<p style="text-align: justify;">அது மாத்திரமின்றி வெட்கக்கேடான அதேவேளை தமிழ் மக்களால் என்றுமே மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகமொன்றையும் சம்பந்தன் செய்துள்ளார். மேதினக் கூட்ட மேடையில் வைத்து மிகக் கம்பீரமாக நின்று சிறிலங்காவின் சிங்கக் கொடியை அவர் உயர்த்திப் பிடித்துள்ளார். இதைவிட அவர் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் எதுவாகவும் இருக்க முடியாது. இந்த வாள் ஏந்திய சிங்கக் கொடியே எமது இனத்தை அழிக்க சிங்களவர்களையும் சிங்கள அரசையும் ஊக்குவித்திருந்தது.</p>
<p style="text-align: justify;">அது மாத்திரமின்றி இக்கொடிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாகவும் அதை எரித்ததன் காரணமாகவும் எத்தனயோ இளைஞர்கள் சிங்கள அரசினால் படுகொலை செய்யப்பட்டனர். இவற்றையெல்லாம் மறந்து சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்தியிருப்பது கேவலமான செயலாகும்.</p>
<p style="text-align: justify;">இவர்களின் இச்செயற்பாடு நிட்சயமாக இன உணர்வுடனும் உறுதியான கொள்கையுடனும் உள்ள எமது மக்களுக்கு ஆத்திரத்தையும் வெறுப்பையும் எற்படுத்தும் என ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32057</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig.jpg" medium="image">
			<media:title type="html">Samp-Sig</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig.jpg" medium="image">
			<media:title type="html">Samp-Sig</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/Samp-Sig-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மே தினத்தில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்தமை, மகிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32053</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32053#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 15:18:33 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32053</guid>
		<description><![CDATA[மே தினத்தில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்தமை, மகிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32054" title="methinam7" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/methinam7-100x80.jpg" alt="" width="100" height="80" />யாழ்ப்பாணத்தில் நேற்று மே முதலாம் திகதியன்று நடைபெற்ற எழுச்சிமிகு மேதினக் கூட்டத்தில் ஐ;க்கிய தேசியக் கட்சி,</p>
<p style="text-align: justify;">தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றியமையானது பல நல்ல விடயங்களை எங்களுக்கு சொல்<span id="more-32053"></span>லி நிற்கின்றது.</p>
<p style="text-align: justify;">முதலாவதாக, நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்தும் கஸ்டங்களும் அனைத்து இன மக்களுக்கும், முக்கியமான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஒரு பாரிய சுமையாக உள்ளது. இதனை எதிர்த்து போராடுவதற்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பதாகும்.</p>
<p style="text-align: justify;">அடுத்தது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் மகிந்தா ராஜபக்சாவையும் அவரது சகாக்களையும் முக்கியமான அவரது சகோதரர்களையும் பதவிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்ற அவசியத்தையும் எமக்கு உணர்த்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது குழு எமது நடவடிக்கைகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. அவற்றில் முக்கிய நோக்கம் மகிந்தா ராஜபக்சாவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஆரம்ப வேலைகளை புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்வதே ஆகும்.</p>
<p style="text-align: justify;">வேறு எந்தக் கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும் அதில் மகிந்தவோ அன்றி அவரது சகோதரர்களோ பங்காளிகளாக வரக்கூடாது. இந்த உண்மையை உணர்ந்து இலங்கையில் மேற்குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தொடர்ந்தும் ஒன்றாக இணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு நேற்றைய யாழ்;ப்பாண மேதினக் கூட்டம் தொடர்பாக கனடா தமிழ் அரசியல் அவதானிகள் குழு தனது ஆதரவைத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p>
<p style="text-align: justify;">இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற இலட்சியத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டிய ஒரு தேவை அங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு அவசியமாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">அதிலும் மகிந்த ராஜபக்சவையும் அவரது கட்சியையும் ஆட்சியிலிருந்த அகற்றுவதன் மூலம் நாட்டை ஒரு பெரும் அழிவிலிருந்து காப்பாற்றலாம் என்பதே உண்மை.</p>
<p style="text-align: justify;">இந்த வகையில் நாம் பார்க்கும்போது நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக; கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு மனோ கணேசன் ஆகியோர் தலைமையில் மேற்படி கட்சிகளில் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஒன்றாக திரண்டது மகிந்தவின் அரசியல் எதிர்காலத்திற்கு சாவு மணி அடிப்பதற்கான ஆரம்பமே என்று நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்கள் ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32053</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/methinam7-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/methinam7.jpg" medium="image">
			<media:title type="html">methinam7</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/05/methinam7-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையின் உடைந்துபோன வாக்குறுதிகள்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32049</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32049#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 14:55:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32049</guid>
		<description><![CDATA[இலங்கையின் உடைந்துபோன வாக்குறுதிகள்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-24674" title="susma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையின் உடைந்துபோகும் வாக்குறுதிகள் தொடர்பில் இந்தியா புதிய நிலைப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய இணைத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது</p>
<p style="text-align: justify;">இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக 13 ஆம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப்போவதாக<span id="more-32049"></span> இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உலகத்தில் எங்கும் காணப்படாத குறிப்பாக,உள்ளுரில் உருவாக்கப்பட்ட தீர்வே காணப்படும் என்றும் அவர் கூறிவருகிறார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில், அவர் ஏற்கனவே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கைக்கு சென்ற போது 13 க்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இதனை கிருஸ்ணாவும் பிரசித்தமாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். ஆனால் அவர் இந்தியாவுக்கு சென்ற பின்னர் அவ்வாறான உறுதிமொழியை தாம் வழங்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">அதேபோல, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவ்ராஜிடமும் காலை உணவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் சுஸ்மா இந்தியாவுக்கு சென்ற பின்னர் மஹிந்த ராஜபக்ச, அவ்வாறான உறுதிமொழி ஒன்றை தாம் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">எனவே இந்தியாவை இலங்கை பல தடவைகள் முட்டாளாக்கியுள்ளது என்பது உண்மை. எனவே இந்தியா இலங்கை விடயத்தில் தமது புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32049</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma.jpg" medium="image">
			<media:title type="html">susma</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/06/susma-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>போரில் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசு, கூட்டமைப்பை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறது! சிவசக்தி ஆனந்தன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32046</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32046#comments</comments>
		<pubDate>Wed, 02 May 2012 14:53:21 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32046</guid>
		<description><![CDATA[போரில் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசு, கூட்டமைப்பை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறது! சிவசக்தி ஆனந்தன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14830" title="anandan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/anandan-100x80.jpg" alt="" width="100" height="80" />சர்வதேச தொழிலாளர் தினமான மேதின நிகழ்வுகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார்.<span id="more-32046"></span></p>
<p style="text-align: justify;">இதன்போது வவுனியா நகரசபையிலிருந்து வவுனியா இந்து இளைஞர்மன்றம், மணிக்கூட்டு கோபுரம், வவுனியா காவல்நிலையம் வழியாக மீண்டும் வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடையும் வகையில் ஒரு ஊர்வலமும் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">ஊர்வலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களன த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபை தலைவர், வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை தலைவர், வவுனியா வடக்கு பிரதேசபை தலைவர், கரைச்சி பிரதேசசபை தலைவர், உபதலைவர்கள், உறுப்பினர்கள், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">வந்திருந்தவர்களை வவுனியா நகரசபை தலைவர் ஐ.கனகையா வரவேற்றதுடன், நன்றியுரையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தலைவர் சிவலிங்கம் வழங்கினார். இந்நிகழ்சில் வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் ஐவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">நிகழ்விற்குத் தலைமைதாங்கி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:</p>
<p style="text-align: justify;">ஏனைய உலக நாடுகளில் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களுக்கான விழா எடுப்பதாக அமைகின்றது. எமது நாட்டில் வடக்கு-கிழக்கைப் பொறுத்தமட்டில் இது தொழிலாளர்களை மட்டும் உள்ளடக்கிய நிகழ்வாக இதனை எம்மால் நிகழ்த்தமுடியவில்லை.</p>
<p style="text-align: justify;">எமது மண்ணில் நீண்டகாலமாக நாம் குரல்கொடுத்து வரும் வாழ்வுரிமை உட்பட அடிப்படை உரிமைகளையும் வலியுறுத்தும் ஒருநாளாகவே எம்மால் இத்தினத்தை அனுட்டிக்க முடியும். ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களுக்கான ஒரு முக்கிய நாளாகவே இத்தினத்தினை நாம் அணுகவேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">எமது நாட்டில் பல்லாயிரக்கணக்கா இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் தென்னிலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி வாழ்கின்ற குடும்பங்கள், அவர்களது பிள்ளைகள் கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்ற விடயங்கள் கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">தென்னிலங்கை மக்களைப் பொருத்தவரை விலைவாசி ஏற்றம் மட்டும்தான் அவர்களுடைய பிரச்சினை. ஆனால் வடக்கு-கிழக்கு மக்களைப் பொருத்தவரை ஏற்கனவே வருமானம் ஈட்டித்தரும் குடும்ப உறுப்பினரை இழந்து பொருளாதாரரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் இப்பொழுது நிலவுகின்ற விலைவாசி ஏற்றத்தினாலும் பெரும் துன்பப்படுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">போர்க்காலத்தில் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்காமையால் எமது மக்கள் அன்று குண்டுவீச்சுக்குப் பலியானதுடன் பட்டினியாலும் மடிந்தார்கள். இன்று அதே நிலையை அரசாங்கம் வேறுவிதமாகச் செய்கின்றது.</p>
<p style="text-align: justify;">குடும்பத்தலைவர்களையும் இளைஞர்களையும் தடுப்பில் வைத்துள்ளதுடன், காணாமல் போகவும் செய்துள்ளது. இதனால் மீண்டும் ஒருமுறை இத்தகைய குடும்பத்தினர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ஆண்துணையின்றி வாழுகின்ற குடும்பங்கள் சடுதியில் பெருகிவிட்டதால் இதுவரை வீட்டுநிர்வாகத்தை மட்டுமே ஏற்றுவந்த பெண்கள் இப்பொழுது பொருளாதாரத்தையும் ஈட்டி குடும்ப நிர்வாகத்தையும் கொண்டுசெல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எதுவித பணிஅனுபமும் அற்ற பெண்களின் இந்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.</p>
<p style="text-align: justify;">ஆகவே விலைவாசி ஏற்றம் என்பது வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை ஏனைய பகுதிகளைவிட மோசமாகப் பாதித்துள்ளது. எனினும் எமது மக்கள் விலைவாசி ஏற்றத்தை மட்டும் கணக்கிலெடுக்காமல் தமது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்பதையே இன்றைய ஊர்வலத்தில் வலியுறுத்தினர். அவர்களின் இந்த உணர்வுதான் எம்மைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கில் உண்மையான சுதந்திர சுவாசக்காற்றை அனுபவிப்பதற்கான உரிமைகளை வலியுத்தி இம் மேதினத்தை அனுட்டித்துக்கொண்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">எமது மக்கள் என்றைக்கு தென்னிலங்கை மக்களைப்போன்று சுதந்திரமாகத் தமது கருத்துக்களை எடுத்துரைக்க முடிகின்றதோ, எவ்வித அச்சமுமின்றி இரவு நேரங்களிலும் தெருக்களிலும் நடமாட முடிகின்றதோ, தனது பிரதேசத்தில் தங்களுக்கான அபிவிருத்தியைத் தாங்களே தீர்மானிக்க முடிகின்றதோ, தங்களது பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்ய முடிகின்றதோ அன்றுதான் எமது தொழிலாளர்களுக்கு உண்மையான மேதினமாகும். ஆகவே இந்தநாளானது எமது பிரச்சினைக்கு ஒரு முழுமையான அரசியல் தீர்வை வலியுறுத்தும் தினமாகவே நாம் அனுட்டிக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">இந்த அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அன்றாட பிரச்சினைகள் தொடக்கம் நிரந்தர அரசியல்தீர்வுவரை கடந்த ஓராண்டிற்றும் மேலாக பலசுற்றுப் பேச்சுவார்த்கைளை நடாத்தியும் இதுவரை எத்தகைய முடிவும் எட்டப்படவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.</p>
<p style="text-align: justify;">அண்மையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்கு வந்துவிடக்கூடாது என்று இந்நாட்டு அரசு தானாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்னும் ஆணைக்குழுவை நியமித்தது.</p>
<p style="text-align: justify;">அந்த ஆணைக்குழுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையில் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. அதில் ஏற்றுக்கொள்ள முடியாத பல விடயங்கள் இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தை நெறிப்படுத்தக்கூடிய சில பரிந்துரைகளும் இருந்தன. இதனை நடைமுறைப்படுத்தும்படியே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம்கொடுத்தன. அதனை வலியுறுத்தியே ஜெனிவாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த அரசு தான் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தும்படி சர்வதேசம் கொண்டுவந்த தீர்மானத்தை தனக்கு எதிரான தீர்மானம் என்று திசைதிருப்பியது.</p>
<p style="text-align: justify;">இன்று அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர். ஜெனிவாவில் அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்டவர்கள் இங்கு வந்ததும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் குறிப்பாக தந்தை செல்வா முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புவரையும் ஏமாற்றி வந்தவர்கள் இன்று சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் இந்த அரசு இன்று ஒருபாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசாங்கம் இந்த நெருக்கடியிலிருந்து அவ்வளவு எளிதில் மீளக்கூடியதாகத் தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆதரவற்ற அவலநிலை இன்று இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவுற்றவுடன் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதாக சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்தது.</p>
<p style="text-align: justify;">ஆனால் போரை நடத்துவதற்கு அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் போருக்குப்பின்னர் தான் வழங்கிய உறுதிமொழியை மீறியதுடன், இந்நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடே கிடையாது என்று சொன்னதுடன், முன்னெப்பொழுதையும்விட தமிழர்களின்மீதான ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்தியது.</p>
<p style="text-align: justify;">இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவு அமைச்சர், அண்மையில் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தலைமையில் இந்நாட்டிற்கு விஜயம் செய்த இந்தியப் பாராளுமன்றகுழுவினர் ஆகியோரிடம் இந்நாட்டு அதிபர் பதிமூன்றாவது திருத்தச் சட்டத்திற்கும் மேலாகச் சென்று தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பேன் என்று வாக்குறுதி வழங்கினார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தவுடன் நான் அப்படிச் சொல்லவில்லை என்று இங்குள்ள ஊடகங்களுக்கு மறுப்பறிக்கை விடுகிறார். அரசின் இந்த அறிக்கையால் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்த்து நீங்கள் பாராளுமன்றத் தெரிவிக்குழுவிற்கு வாருங்கள் என்று இந்த அரசாங்கம் சொல்கிறது. இரண்டு தரப்பினர் பேசியே ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளடங்கப்போகும் அதிதீவிர சிங்கள இனவாதிகளுடன் பேசி எத்தகைய தீர்வை எட்டமுடியும்? எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயலே அன்றி வேறில்லை என்பது எமது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.</p>
<p style="text-align: justify;">தந்தை செல்வா முதல் பிரபாகரன்வரை அனைவரையும் ஏமாற்றிவிட்டோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏமாற்றிவிடலாம் என்று இந்த அரசு நினைக்கின்றது. போரில் வெற்றியீட்டிய மமதையில் இந்த அரசு இருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளையோ, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையோ அல்லது தந்தை செல்வாவையோ ஏமாற்றியதுபோல் இந்த அரசு சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கின்றது. இங்குதான் அரசு மாபெரும் தவறைச் செய்கின்றது. இனியும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இப்பொழுது நடைபெறுபவைகளை நீங்கள் அறிவீர்கள்.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் 18ஆம் திகதி இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகிறார். இவர் அங்கு சென்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டு வரவிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக வட-கிழக்கிலிருந்து எவ்வளவு காலத்திற்குள் இராணுவத்தை வெளியேற்றப் போகிறீர்கள்? எங்கிருந்து வெளியேற்றப் போகிறீர்கள்? எப்படி வெளியேற்றப் போகிறீர்கள்? மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரை எவ்வளவு காலத்திற்குள் மீள்குடியேற்றத்தைச் செய்து முடிப்பீர்கள்? தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எத்தகைய அணுகுமுறைகளை வைத்துள்ளீர்கள்? எவ்வளவு காலத்திறகுள் எத்தகைய அதிகாரங்களை வழங்கப்போகிறீர்கள்? போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அமெரிக்காவிடம் எழுத்துமூலம் வழங்கிவரவேண்டிய ஒரு கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இன்றைய சர்வதேச அரசியல் நிலை தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு சாதகமான சூழலைத் தோற்றுவித்துள்ளது. ஆகவே இந்தத் தொழிலாளர் தினத்தில் எம்மிடையே தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல் கட்சிகள் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆத்மார்த்தமான ஐக்கியத்துடன் இணைந்து கனிந்து வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையை நாம் பற்றிப் பிடிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எம்மைப் பிரிப்பதற்குப் பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது தலைவர்கள் மத்தியில் ஆத்மார்த்தமான ஒரு ஐக்கியம் வரவேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் நீங்கள் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இன்று நீங்கள் அதனை நிறைவேற்றியுள்ளீர்கள். இது தொடரவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இன்று நாம் நடத்திய இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும் எமது மக்களுக்கு நிச்சயம் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கின்றேன். இனியும் எம்மீதான அடக்குமுறைகள் தொடருமானால் அகிம்சைவழியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.</p>
<p style="text-align: justify;">கடந்த முப்பதாண்டுகளில் நாம் எத்தனையோ உயிர்களைப் பலிகொடுத்துள்ளதுடன் கணக்கிடமுடியாத அளவிற்கு சொத்துக்களையும் இழந்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">ஆகவே இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை அடைவதற்கு திடசங்கல்பம் ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32046</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/anandan-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/anandan.jpg" medium="image">
			<media:title type="html">anandan</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/anandan-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் &#8211; வைகோ</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32043</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32043#comments</comments>
		<pubDate>Tue, 01 May 2012 20:36:47 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32043</guid>
		<description><![CDATA[ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் - வைகோ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-16020" title="vaiko" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/vaiko-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான்.</p>
<p style="text-align: justify;">ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அ<span id="more-32043"></span>வர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.</p>
<p style="text-align: justify;">இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.</p>
<p style="text-align: justify;">&#8216;தமிழ் இனப்படுகொலைக்கு இவரும் ஒரு காரணம்’ என்று உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தி.மு.கழகத்தின் தொண்டர்​களை ஏமாற்றுவதற்காகவும், தமிழ் ஈழ விடுதலை முகமூடியை அணிந்துகொண்டு, தமிழர் தரணியில் இப்போது பவனி வரத் துடிக்கிறார்.</p>
<p style="text-align: justify;">2004-ம் ஆண்டு, சோனியாவின் ஆளுமையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், இலங்கையோடு இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்ய இருக்கிறது என்ற செய்திகள் வெளியானபோது, அதைத் தடுப்பதற்குக் கருணாநிதி, ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டாரா? ஆட்சேபணை தெரிவித்தாரா? எடுத்ததற்கெல்லாம் கடிதங்கள் எழுதினேன் என்று பட்டியல் போடுகிறவர், இதுகுறித்து ஏதாவது ஒரு கடிதம் எழுதியதாகச் சொல்ல முடியுமா?</p>
<p style="text-align: justify;">சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ராடார்கள் கொடுக்க இருக்கின்ற செய்தி வந்தபோது, அது தமிழர்களைக் குண்டு வீசிக் கொல்வதற்குத்தான் பயன்படும் என்று பதறித் தடுக்க முனைந்தாரா? 2007-ல் இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தபோது, இவர் அதைக் கண்டித்தது உண்டா?</p>
<p style="text-align: justify;">இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அழிக்க, சிங்கள அரசுக்குச் செய்து வந்த உதவிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, எழுத்து மூலமாகக் குறிப்பிட்டு, இந்திய அரசைக் கண்டித்து, இந்தத் துரோகத்தைத் தமிழ் இனமும், வருங்காலத் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, நேரடியாகப் பலமுறை சந்தித்துத் தந்த கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், நூலாக நான் வெளியிட்டதற்காக என் மீது, கருணாநிதி அரசு தேசத்துரோக வழக்கைத்தானே பதிவு செய்தது.</p>
<p style="text-align: justify;">தமிழ் ஈழம் என்ற உயிர் மூச்சான லட்சியத்துக்காக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், &#8216;ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று நான் பேசியதற்காக, அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து என்னைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தவர் அவர்.</p>
<p style="text-align: justify;">1993-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதுதான் பழியைச் சுமத்தினார். எனது அரசியல் முன்னேற்றத்துக்காக, கலைஞர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற ஊர்ஜிதமாகாத, மத்திய அரசின் உளவுப்பிரிவுத் தகவலைக் குற்றச்சாட்டாக ஆக்கி, என்னைத் தி.மு.கழகத்​தில் இருந்து நீக்கினார்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகள் மீது அல்லவோ அன்று கொடும் பழியைச் சுமத்தினார்?</p>
<p style="text-align: justify;">எதற்கெடுத்தாலும், சகோதர யுத்தம்தான் ஈழத் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று, ஒரு நாடக ஒப்பாரி வைக்கிறாரே, கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில், அண்ணாவின் இயக்கத்தைச் சுடராக ஏற்றிய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இவர் சகித்தாரா? விளக்க அறிக்கைக்கான கெடு முடிவதற்கு உள்ளாகவே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அல்லவா அவரை நீக்கச் செய்தார்?</p>
<p style="text-align: justify;">கட்சியை, தலைமையை, உயிருக்கும் மேலாக நேசித்து, சர்வபரித் தியாகத்துக்கும் சித்தமாக இருந்த என் மீது கொலைப் பழி சுமத்திய​போது, அதை உண்மை என்று தொண்டர்கள் நம்பி இருந்தால் என்ன ஆகும்? &#8216;எத்தகைய துன்பத்துக்கு அவன் ஆளாவான்? எத்தனைத் தலைமுறைகளுக்கு, அவனும் அவனது குடும்பமும் இந்தப் பழியைச் சுமக்க நேரும்?’ என்று கடுகு அளவேனும் கருதியது உண்டா? மனிதாபிமானமோ, மனிதநேயமோ, அவர் மனதில் நிழலாடியது உண்டா?</p>
<p style="text-align: justify;">புரட்சி அமைப்புகளில் விடுதலை இயக்கங்​களில் எதிர்ப் புரட்சியாளரை, ஊடுருவல் துரோகிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு, சரிதத்தில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் உயிர் குடிக்கச் சதி செய்த மாத்தையாவை, மாவீரன் என்றும், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் கைக்கூலியான கருணாவை, வீரத் தளபதி என்றும் இவர்களையெல்லாம் பிரபாகரன் அழித்துவிட்டார் என்றும் வசை பாடியது யார்? அதைவிடக் கொடுமை என்னவென்றால், &#8216;லட்சியத்துக்காகப் போராடும் வேளையில், களத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லறைகள், துயிலகங்கள், கட்டுவதில் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கினார்கள்’ என்று புலிகளை ஏகடியம் செய்தவர் யார்?</p>
<p style="text-align: justify;">தமிழ் இனத்தின் ஒளி விளக்காம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறத் தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டு மண்ணில் அவர் கால் எடுத்துவைக்கவும் அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே, மேலும் நான்கு மணி நேரம் திரும்பிப் பயணிக்கின்றபோது, அந்தத் தாயின் உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமே என்ற அபாயத்தைப் பற்றியும் எள் அளவும் எண்ணிப் பார்க்காமல் விரட்டி அடித்த குற்றவாளி கலைஞர் கருணாநிதி.</p>
<p style="text-align: justify;">உலகில் எங்கும் நடைபெற்று இராத இக்கொடுமையைக் கண்டித்து, இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த முனைந்த என்னையும், அண்ணன் பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், ஆவடி மனோகரன், பாவலர் இராமச்சந்திரன், எம்.நடராசன் உள்ளிட்ட அனை​வரையும், கைது செய்தது மட்டும் அல்ல, தனித்தனியாக நான்கு மத்தியச் சிறைகளுக்குப் பிரித்து அனுப்ப உத்தரவிட்டவரும் இந்தப் பெரிய மனிதர்தான்.</p>
<p style="text-align: justify;">தமிழர் மனமெல்லாம் அணையாத சுடராக ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற தியாக தீபங்களாம் முத்துக்​குமார் உள்ளிட்ட 17 பேர், ஈழத் தமிழரைக் காக்க, யுத்தத்தை நிறுத்த, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, தீக்குளித்து மடிந்தபோது இவர் இரங்கல் தெரிவித்தது உண்டா? தனது மகன் பிறந்த நாளை, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுப் பீதாம்பரத்துடன் இவர் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது தியாகச்சுடர் முத்துக்குமாரின் உயிர் அற்ற சடலம், கொளத்தூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஈழத் தமிழருக்காகப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தபோது, &#8216;குடும்பச் சண்டையால் செத்தான்’ என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளி​யிட வைத்தவரும் இவர்தான். ஈழத் தமிழர்க்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக லத்தியைத் தூக்கியதும் இவரே.</p>
<p style="text-align: justify;">சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன் என்று, எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்றைக்கு எழுதுகிறார்.</p>
<p style="text-align: justify;">முதல் நாள் இரவு, வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசிகளில், ஈழத் தமிழர்கள் பதற்றத்தோடு, விம்மலும், புலம்பலுமாக, &#8221;நாளை மாலைக்குள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரை முடித்துவிடுவார்கள் என்று செய்தி வருகிறதே? தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடமும் இதுபற்றி நாங்கள் முறையிட்டு உள்ளோம்&#8221; என்று என்னிடம் சொன்னார்கள். அப்படி ஒன்று நடந்தால், பழிக்கும் வெறுப்புக்கும் தானும் ஆளாக நேரும் என்று கருதித்தான் இவர் கடற்கரை உண்ணாவிரத நாடகத்தைப் போட்​டார்.</p>
<p style="text-align: justify;">ஆனால், தில்லி ஜன்பத் சாலை, 10-ம் எண் வீட்டில் இருந்து, மிரட்டல் தொனியில் எதிர்ப்பு முக்கிய நபர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதால், உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்திலேயே முடித்துக்கொண்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது சாகும் வரை உண்ணாவிரதம் அன்று சந்தி சிரித்தது.</p>
<p style="text-align: justify;">&#8216;இனி பலத்த தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதி சொன்னதால், அன்று மாலையில் பதுங்கு குழிகளில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீதும் ராஜபக்ஷே குண்டு வீசினான்.</p>
<p style="text-align: justify;">அதுபற்றிக் கேட்டதற்கு, &#8216;மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று அலட்சியமாகச் சொன்ன​வர் கருணாநிதி.</p>
<p style="text-align: justify;">தமிழகத்திலும், தரணியெங்கும் தமிழர்கள் வேதனையில் துடித்தபோது, &#8216;இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை’ என்று திட்டவட்டமாக அல்லவோ சொன்னார்? அப்படியானால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தில், நடத்தப்பட்ட இனப் படுகொலையிலும், தானும் கூட்டுக் குற்றவாளி என்பதுதானே இவரது ஒப்புதல் வாக்குமூலம். &#8216;ராஜபக்சேவை விமர்சிப்பது, அவருக்கு ஆத்திரத்தை மூட்டிவிடும். அதனால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, அவரைக் குறை சொல்லக் கூடாது’ என்று கீதோபதேசம் செய்தவர்.</p>
<p style="text-align: justify;">ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை விரித்தபோது, அதை உடைப்பதற்காக டெல்லிக்கு வந்தார் ராஜபக்சே. அவருக்கு, இவர் முட்டுக்கொடுக்கும் மத்திய அரசுதான் கோலாகல வரவேற்புக் கொடுத்தது. அதை கருணாநிதி விமர்சித்தது உண்டா? திருப்பதி கோயிலில் கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்றுப் பூரண கும்ப மரியாதை செய்ததை, இவர் விமர்சித்தது உண்டா?</p>
<p style="text-align: justify;">2008-ம் ஆண்டில், ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, அம்மணமாக்கி கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மிருகங்களான சிங்களச் சிப்பாய்கள் காலால் எட்டி மிதித்து, மண்டியிடச் செய்து, பிடறியில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை, லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படமாகவே வெளியிட்டது. அதைக் கண்டு, அகிலமே அதிர்ச்சியுற்றது. ஆனால், இது போலிப் படம் என்று சொன்னார்கள் இருவர். ஒருவர், மகிந்த ராஜபக்சே. &#8221;இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது&#8221; என்று ஏளனமாகப் பரிகசித்தவர் கலைஞர் கருணாநிதி.</p>
<p style="text-align: justify;">ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார். அந்த மூவர் குழு, இலங்கைத் தீவில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இதயத்தைப் பிளக்கும் வகையில் ஆதாரங்களோடு அறிக்கை​யாகத் தந்தார்களே. அந்த அறிக்கையைப் படிக்கும்போதே நெஞ்சம் நடுங்கும், கண்ணீர் கொட்டுமே. பக்கம் பக்கமாக எதற்கெல்லாமோ அறிக்கைகளும் மடல்களும் தீட்டுகின்ற கலைஞர் கருணாநிதி, இந்த மூவர் குழு அறிக்கையைப் பற்றி இதுவரை ஏதாவது எழுதியது உண்டா? கிடையாது.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்க, சிங்களவனுக்கு இந்திய அரசு செய்த உதவிக்கு, முழுக்க முழுக்கத் துணையாக இருந்து, தமிழகம் கொந்தளித்து எழாமல் தடுக்கின்ற மாய்மால வேலைகள் செய்து, அவ்வப்போது நீலிக்கண்ணீர் அறிக்கைகளையும் வழங்கி ஏமாற்றியதைத் தவிர இவர், இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.</p>
<p style="text-align: justify;">தந்தை செல்வா வெற்றி பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தல், 1975-ல் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குக் கட்டியம் கூறிற்று. 1976 மே 16-ல், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தந்தை செல்வா தலைமையில், தமிழர் அமைப்புகள் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. &#8221;இனி, இளந்தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும்&#8221; என்றார் தந்தை செல்வா. ஈவு இரக்கம் அற்ற கொலை வெறியுடன், தமிழ் இனத்தை அழிக்க முப்படைத் தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து, பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போர் நடத்தினார். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசங்களை, யுத்தக் களத்தில் செய்து, வெற்றி மேல் வெற்றியும் குவித்தார்.</p>
<p style="text-align: justify;">ஓர் அரசுக்கான அனைத்துத் துறைகளையும் அமைத்தார். தரைப் படை, கடற் படை, வான் படை நிறுவினார். மலரும் தமிழ் ஈழத்துக்கு இனி உலகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழலில்தான், இந்தியா முழு ஆயுதப் பலத்தையும் தந்து, பல வல்லரசுகளின் ஆயுத உதவிகளையும் சிங்களவன் பெறுவதற்கு உடன்பட்டு, யுத்தக் களத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவையும் சரிவையும் ஏற்படுத்தியது.</p>
<p style="text-align: justify;">&#8216;இந்த யுத்தத்தை நடத்தியதும் இயக்கியதும் இந்திய அரசுதான்’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ராஜபக்சே. அவரது அமைச்சர்களும் சொன்னார்கள். இதைக் கருணாநிதி​யால் மறுக்க முடியுமா?</p>
<p style="text-align: justify;">கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்னை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு. அதுதான், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்றேன்.</p>
<p style="text-align: justify;">தமிழர் தாயகமான, தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, சிங்கள ராணுவமும், போலீஸும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க, தமிழர் தாயகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் உலகத்தின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா.மன்றமும், அனைத்துலக நாடுகளும் தக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பொது வாக்கெடுப்பு என்பதையும், உலகம் முழுவதையும் பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அதில் பங்கேற்க வழி செய்ய வேண்டும் என்பதையும், ஈழத் தமிழர் பிரச்னையில் நான் முதன்முதலாகப் பதிவு செய்தேன்.</p>
<p style="text-align: justify;">இப்படி நான் முன்வைத்த கருத்தை, உலகெங்கும் உள்ள தமிழ் ஈழச் சொந்தங்கள், எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்று மனதாரப் பாராட்​டியதோடு, &#8221;இதுதான் நமது இலக்கு, இந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம்&#8221; என்றனர். என் வாழ்நாளில், மன நிறைவாக ஆற்றிய கடமைகளுள் இதுவும் ஒன்று என எண்ணி, அந்த இரவில் நான் நிம்மதியுற்றேன். ஆனால், திடீரென்று கலைஞர் கருணாநிதி, பொதுவாக்கெடுப்பு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்கிறார். இவரது மாய்மாலத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழர்கள் சிந்திய செங்குருதியும், தரப்பட்ட உயிர்ப் பலிகளும், தமிழ் இனத்துக்கு எவரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, அவர்களுக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து கருணாநிதி தனது புதிய அறுவடையைத் தொடங்குகிறார். அதை முளையிலேயே முறிக்க வேண்டும்!</p>
<p style="text-align: justify;">கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்க&#8230; சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்!</p>
<p style="text-align: justify;">நன்றி<br />
ஜூனியர் விகடன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32043</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/vaiko-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/vaiko.jpg" medium="image">
			<media:title type="html">vaiko</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/vaiko-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இராணுவமே வெளியேறு! எங்கள் நிலத்தை நாங்கள் ஆளவேண்டும்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32040</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32040#comments</comments>
		<pubDate>Tue, 01 May 2012 20:33:28 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32040</guid>
		<description><![CDATA[இராணுவமே வெளியேறு! எங்கள் நிலத்தை நாங்கள் ஆளவேண்டும்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-25310" title="maavai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" alt="" width="100" height="80" />இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும் சுமார் 3 லட்சத்திற்கும் மே<span id="more-32040"></span>ற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">அந்த மக்களுடைய நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்து கொண்டு, மீள்குடியேற விடாமல் அடாவடி புரிந்து கொண்டிருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் நாங்கள் இந்த மே தினத்தில் ஒரு அறைகூவலை விடுக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">இராணுவமே வெளியேறு, யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாங்கள் எங்கள் நிலத்தை ஆள வேண்டும். எங்கள் நிலத்தில் வாழ வேண்டும். நீ உன் நிலததிற்குப் போ என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றிருந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இதில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,</p>
<p style="text-align: justify;">இன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அது தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதொன்றாக அமையாவிடினும், அதில் கூறப்பட்டிருக்கின்ற தமிழர் பகுதியின் நில ஆக்கிரமிப்பு, இராணுவ வெளியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.</p>
<p style="text-align: justify;">அரசியல் ரீதியான போராட்டத்தில், ஆயுத ரீதியான போராட்டத்தில் தமிழர்களை தோற்கடித்து விட்டதாக கூறிக்கொண்டிருந்தாலும், இன்று நடந்து கொண்டிருக்கும் இராஜதந்திரப் போராட்டத்தில் எம்மை தோற்கடிக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">கடந்த 60வருடங்கள் எங்களை ஏமாற்றியதுபோதும், இனியும் நாங்கள் ஏமாந்து போவதற்குத் தயாராகவில்லை. எங்களின் சுயத்தை அழித்து முடித்துக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.</p>
<p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து, அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,</p>
<p style="text-align: justify;">எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு, அதிலிருந்து எமது மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் புலிகள் வைத்திருந்தனர் என்ற பெயரில் எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">புலிகள் வைத்திருந்தனர். புலிகள் செய்தனர் என்பதற்காக அரசும் இராணுவத்தினரும் இணைந்து அதனையே செய்தால், இராணுவத்தினரின் பயங்கரவாதத்தை எப்படி எவ்வாறு நாங்கள் சொல்லிக் கொள்வது என்பது தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">எங்களின் விவசாய நிலங்களில், எங்களின் கடல்களில், எங்களின் குளங்களில் இறங்க முடியவில்லை. இந்த நிலையில் பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து நடத்தவேண்டும் என்றார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனதுரையில்,</p>
<p style="text-align: justify;">கிளிநொச்சி மண் ஒரு மகத்தான மண் இந்த மண்தான் உலகம் வியந்த வீரத்தையும், அதன் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டிருந்த மண், இங்கிருந்தே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இங்கிருந்தே பிரகடனங்கள் வெளியிடப்படவேண்டும். இதுதான் தமிழர்களின் இருதய பூமி. மேலும் இன்றிருக்கின்ற அரசாங்கம், ஒரு முட்டாள்தனமான அரசாங்கம். அதனால்தான் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்த அரசாங்கம் படுதோல்வி கண்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">அதேபோன்று அன்று கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்டபோது நாங்கள் புலிகள் என்றும் எங்களை புலி ஆதரவு சக்திகள் என்றும் சிங்களவர்கள் பேசியிருந்தனர்.<br />
அன்று இனவாதம் பேசியவர்கள், இனவாதம் கக்கியவர்கள் இன்று அரச பயங்கரவாதத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நடராஜா குருபரன் தனதுரையில் குறிப்பிடுகையில்,</p>
<p style="text-align: justify;">அரசாங்கம் இராணுவத்தின் இறைமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அவை தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். எங்களின் இராஜதந்திரப் போராட்டம் நிச்சயமாக வெற்றிபெறும்.</p>
<p style="text-align: justify;">இன்று தம்புள்ளவில் இடம்பெற்றது. நாளை இன்னும் பல இடங்களில் இடம்பெறும் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். என்றார்.</p>
<p style="text-align: justify;">இந்த நிகழ்வு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில், மண்ணுக்காக மரணித்துப்போன மாவீரர்களிற்கும், மக்களிற்கும் அகவணக்கம் செலுத்தி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32040</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai.jpg" medium="image">
			<media:title type="html">maavai</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/07/maavai-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஸ்டாலின் &#8211; அழகிரி மோதலை தமிழ்ஈழம் மூலம் திசைதிருப்புகிறார் கருணாநிதி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32035</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32035#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:35:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32035</guid>
		<description><![CDATA[ஸ்டாலின் - அழகிரி மோதலை தமிழ்ஈழம் மூலம் திசைதிருப்புகிறார் கருணாநிதி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32036" title="stalin - azhakiri" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/stalin-azhakiri-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் தமிழ்ஈழம் அமைக்கப்படவேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் கோரி வருகிறார்.</p>
<p style="text-align: justify;">இது, தமது மகன்மாரான ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கு இடையிலான பிரச்சினையை தி<span id="more-32035"></span>சைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தியாகும்; என்று “தெ டெலிகிராப்” தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமிழ்ஈழம் உருவாக்கப்படவேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையி;ல் கருணாநிதியின் தலைமையில் இடம்பெறுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த அமைப்பு செயற்பட்டு வந்தபோதும் 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் செயல் இழந்து போனது.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் கருணாநிதியின் புதிய பிரவாகம் தமது மகன்மார்களுக்கு இடையிலான போரை மறைப்பதற்கான உத்தியாகும் என்று தெ டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் இடம்பெற்ற போது, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தங்களையும் கருணாநிதி கொடுக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">அதேவேளை, இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழர்களை காப்பாற்றவேண்டும் என்று அப்போதைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரியபோது அதனை அரசியல் லாபம் என்று கருணாநிதி குறிப்பிட்டதாக தெ டெலிகிராப் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது தமிழ் ஈழம் மீது காதல் பிறந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இது 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படும் பிரசாரம் என்று தமிழகத்தின் அரசியல்வாதிகளான வைகோ மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">எனினும் இந்திய தேர்தலில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெ டெலிகிராப் தெரிவி;த்துள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32035</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/stalin-azhakiri-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/stalin-azhakiri.jpg" medium="image">
			<media:title type="html">stalin &#8211; azhakiri</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/stalin-azhakiri-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சிவராமின் நினைவாக “பத்திரிகையாளனின் பயணம்” ஆவணப்படம் (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32028</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32028#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:26:32 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32028</guid>
		<description><![CDATA[சிவராமின் நினைவாக “பத்திரிகையாளனின் பயணம்” ஆவணப்படம் (காணொளி இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32029" title="sivaram_documentry" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/sivaram_documentry-100x80.jpg" alt="" width="100" height="80" />படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளன் சிவராம் நினைவு நிகழ்வு மற்றும் தராக்கி ஆவணப்படம் திரையிடல் சென்னையில் நேற்று நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">திரைப்படத்துறையினர் சென்னை ஊடகவியலாளர்கள் ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்ட<span id="more-32028"></span>னர். சென்னை எம் எம் திரையரங்கில் தராக்கி ஆவணப்படம் திரையிடப்பட்டது.</p>
<p style="text-align: justify;">சிவராம் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது. சிவராம் கொல்லப்பட்டபோது சென்னையில் ஒரு சில கண்டனக் கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் முதல் தடவையாக இந்த நினைவு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆவணப்படதினை ஊடவியலாளரும் ஆவணப்பட இயக்குனருமான சோமிதரன் தயாரித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">சிவாரம் கொலைக்கு பின்னர் சரிநிகர் பத்திரிகை ஆசிரியர் சிவகுமாருடன் இணைந்து, இலங்கை தமிழ் ஊடவியாலாளர்கள் மற்றும் ஊடகவியல் குறித்து ஒரு ஆவணப்படத்திற்கான ஓளிப்பதிவை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் அதில் ஒரு பகுதியாக சிவராம் நினைவாக தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பயணம் ஆவணப்படம் சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் அனுசரணையுடன் திரையடப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த படத்தில் சிவராமுடன் நெருக்கமாக இருந்தவர்கள் சிவராமின் மனைவி மற்றும் பிள்ளைகள் எனப் பலரும் சிவராம் குறித்து இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். ஒரு ஊடகவியலாளனின் பயணமும் மரணத்துள்ளான வாழ்வும் கண்ணெதிரே தெரியும் மரணத்தை எதிர்கொண்டு ஊடகப் பணியாற்றியதும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p><center><iframe src="http://www.youtube.com/embed/abWzlxVFzIY" frameborder="0" width="640" height="360"></iframe></center></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32028</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/sivaram_documentry-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/sivaram_documentry.jpg" medium="image">
			<media:title type="html">sivaram_documentry</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/sivaram_documentry-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இராஜதந்திர நெறிமுறைகளை மீறிய மகிந்த</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32024</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32024#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:17:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32024</guid>
		<description><![CDATA[இராஜதந்திர நெறிமுறைகளை மீறிய மகிந்த]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-29939" title="WAR_CRIMINAL_mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" alt="" width="100" height="80" />மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுவதால், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், துறைசார்ந்த அமைச்சர்களும் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அண்மையில் இந்தி<span id="more-32024"></span>ய நாடாளுமன்றக் குழுவின் இலங்கை பயணத்தின் போது, இராஜதந்திர நெறிமுறைகள் மீறப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழு, இரண்டாம் நிலைக் குழுவே என்றும், ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இரண்டாம் நிலைக்குழுவான இந்தியக் குழுவுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மகிந்த இரண்டுமுறை அவர்களைச் சந்தித்திருந்தார். முதலில் சுஸ்மா சுவராஜை தனியாகவும், மறுநாள் இந்திய நாடாளுமன்றக் குழுவுடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இது வெளிவிவகார அமைச்சரை நெருக்கடிக்குள் தள்ளியது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த இராஜதந்திர நெறிமுறையை பலமுறை மீறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர் கொழும்பிலும், இந்தியக்குழுவினர் பயணம் செய்த, முல்லைத்தீவு, ஹற்றன், மட்டக்களப்பு என்று ஏனைய பல இடங்களிலும் அவர்களைச் சந்தித்துள்ளார். இது இராஜதந்திர நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32024</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/02/WAR_CRIMINAL_mahinda.jpg" medium="image">
			<media:title type="html">WAR_CRIMINAL_mahinda</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு: டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32021</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32021#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:15:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32021</guid>
		<description><![CDATA[தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு: டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-5790" title="karunanithi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" alt="" width="100" height="80" />தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இன்று நடைபெற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கை:</p>
<p style="text-align: justify;">கருணாநிதி தலைமையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து<span id="more-32021"></span> தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">அமைப்பின் குறிக்கோள்</p>
<p style="text-align: justify;">பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம் மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணிஅணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வ தேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில்கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.</p>
<p style="text-align: justify;">அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது.</p>
<p style="text-align: justify;">தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32021</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi.jpg" medium="image">
			<media:title type="html">karunanithi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்தவும்: மகிந்தவுக்கு மூன் அழுத்தம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32018</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32018#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:13:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32018</guid>
		<description><![CDATA[ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்தவும்: மகிந்தவுக்கு மூன் அழுத்தம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-4523" title="bmoon" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/bmoon-100x80.jpg" alt="" width="100" height="80" />மகிந்த ராஜபக்ஸவிடம் வலுவான அரசியல் அதிகாரம் உள்ள நிலையில், கூடிய விரைவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவுக்குப் ப<span id="more-32018"></span>யணம் மேற்கொண்டிருந்த பான் கீ மூன், ‘இந்தியா ரூடே‘க்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற கடினமான வழியை இலங்கை மேற்கொண்டதை நான் மதிக்கின்றேன். ஆனால் இராணுவ நடவடிக்கையில் இறுதி சில மாதங்களில் துரதிஸ்டவசமாக பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொலலப்பட்டனர். மனித உரிமைகள் மிக மாசமாக மீறப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இந்த விவகாரம் குறித்து பொருத்தமான சமூக அரசியல் வழியில் பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் நான் கேட்டுக் கொண்டேன். இதற்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நான் ஒரு நிபுணர் குழுவை நியமித்தேன். அனைத்துலக சமூகத்திடமிருந்து எழுந்த பலமான கோரிக்கைகளையடுத்து இலங்கை அரசும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. அது நல்ல பரிந்துரைகளை செய்தது.</p>
<p style="text-align: justify;">இலங்கை ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.</p>
<p style="text-align: justify;">இலங்கை ஜனாதிபதி மகிந்த மீளத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் பலமான ஆணையைக் கொண்டுள்ளார். முழுமையான பொறுப்புக் கூறும் பொறிமுறை மிக விரைவில் உருவாக்கப்பட வேண்டும். என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32018</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/bmoon-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/bmoon.jpg" medium="image">
			<media:title type="html">bmoon</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/bmoon-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையில் மசூதிகள், கோயில்களை நாசப்படுத்தும் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவை! கருணாநிதி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32014</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32014#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:10:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32014</guid>
		<description><![CDATA[இலங்கையில் மசூதிகள், கோயில்களை நாசப்படுத்தும் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவை! கருணாநிதி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31950" title="kalaigar-11111" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/kalaigar-11111-100x80.jpg" alt="" width="100" height="80" />மசூதிகள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர். இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் ம<span id="more-32014"></span>சூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி குறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:</p>
<p style="text-align: justify;">கேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?</p>
<p style="text-align: justify;">கலைஞர்:- இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ள என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">தென்னிலங்கையில் தம்புள்ள என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது,</p>
<p style="text-align: justify;">இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் நடைபெற்று வரும் ராஜபக்ச அரசு &#8211; சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுவதிலும், சிங்கள மொழி ஒன்றையே முதன்மை இடத்தில் வைத்துக் கொண்டாடுவதிலும், இலங்கை முழுவதையும் பௌத்த மயமாக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவர்.</p>
<p style="text-align: justify;">இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர்களை விரட்டி அடித்து விட்டு சிங்களர்களை குடியேற்றுதல், மிச்சமிருக்கும் தமிழர் பகுதிகளை எந்நேரமும் இராணுவக் கண்காணிப்பில் வைத்திருத்தல், இந்துக் கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் நாசப்படுத்துதல் போன்ற இன &#8211; மதங்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.</p>
<p style="text-align: justify;">அவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை.</p>
<p style="text-align: justify;">மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர். இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை. என்றார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32014</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/kalaigar-11111-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/kalaigar-11111.jpg" medium="image">
			<media:title type="html">kalaigar-11111</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/kalaigar-11111-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தனி தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே&#8230; என்ன மேட்டர்?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32006</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32006#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 11:07:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32006</guid>
		<description><![CDATA[தனி தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே... என்ன மேட்டர்?]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32007" title="eelam-karunnithi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi-100x80.jpg" alt="" width="100" height="80" />கருணாநிதியின் தமிழீழப் பாசத்தைப் பார்த்து தமிழீழ ஆதர​வாளர்களே கலவரமாகி​ விட்டனர். ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கும்​போதெல்லாம் &#8216;தமிழ் ஈழம்தான் என் லட்சியம்’ என்பார் கருணாநிதி.</p>
<p style="text-align: justify;">சீஸன் முடிந்ததும் அவரும் மறந்து விடுவார். மற்றவர்களும் அ<span id="more-32006"></span>வரிடம் அதுபற்றிக் கேட்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக தினமும் தமிழ் ஈழ முழக்கம்தான். ஒரு காலத்தில் அவர் நடத்தி வந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் டெசோ அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கும் அளவுக்கு கருணாநிதி மும்​முரமாக இருப்பதுதான் புதிர்!</p>
<p style="text-align: justify;">&#8221;இந்தப் புதுப்பிக்கும் வேலைக்குப் பின்னணியாக இருப்பது கருணாநிதியின் புதுக் கூட்டணிக் கனவு என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழற்றிவிடும் மன​நிலைக்கு கருணாநிதி வந்து விட்டாராம்.</p>
<p style="text-align: justify;">இலங்கைப் பிரச்னை​யை அதிகமாகக் கையில் எடுத்தால்தான், டெல்லி மேலிடம் கோபிக்கும். அதன் பிறகு கழன்றுகொள்ளலாம் என்பது திட்டமாம். &#8216;அடுத்து வரப்​போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸுக்குச் சாதகமாக அமையாது. அப்படி இருக்க, அவர்களுடன் நாம் ஏன் இருக்க வேண்டும். நைஸாக நடுவிலேயே வெட்டிக்கொள்வது நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் இருந்து கடைசித் தருணத்தில் கழன்றுகொண்டதற்கும் இது​தான் காரணம். இப்போது தினமும் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசி வருவதற்கும் இதுவேதான் காரணம்!&#8221;</p>
<p style="text-align: justify;">&#8221;காங்கிரஸைக் கழற்றிவிட்டால் என்னவாகும்..?&#8221;<br />
&#8221;காங்கிரஸுடன் இருப்பதால்தானே பலரும் கருணாநிதி பக்கம் வரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டையும் தனது கூட்டணிக்குள் கொண்டுவரலாம்.</p>
<p style="text-align: justify;">அதைவிட வைகோ, விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரையும் தனது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை. அப்படி ஓர் அணியைத் தொடங்கினால் மட்டுமே, நாடாளு​மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மரியாதையைக் காப்பாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.</p>
<p style="text-align: justify;">தி.மு.க.வை நோக்கி இவர்களை இழுப்பதற்காகத்தான் தமிழ் ஈழத் தூண்டிலைக் கருணாநிதி வீச ஆரம்பிக்கிறார். அதற்கு முன்னோட்​டமாக, சென்னைக் கொளத்தூரில் அவர் பேச்சிலேயே சில வார்த்தைகள் வந்து விழுந்தன&#8230;&#8221;</p>
<p style="text-align: justify;">&#8221;டெசோவைக் கருணாநிதி ஆரம்பித்த காலத்தில் ஐந்து பேர் அதில் அங்கம் வகித்தார்கள். கருணாநிதி, அன்பழகன், வீரமணி, பழ.நெடு​மாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர். இப்போது, கருணாநிதி அனைவரையும் அழைக்கிறார்.</p>
<p style="text-align: justify;">&#8216;இன்னும் யார் யாரை அதிலே இணைத்துக்கொள்ள வேண்டுமோ, அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது அரசியல் கூட்டணிக்கான ஒரு முன்னோட்டமாகவே சொல்லப்​படுகிறது!&#8221;</p>
<p style="text-align: justify;"><img class="size-full wp-image-32007" title="eelam-karunnithi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi.jpg" alt="" width="500" height="651" /></p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32006</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi.jpg" medium="image">
			<media:title type="html">eelam-karunnithi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi-100x80.jpg" />
		</media:content>
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi.jpg" medium="image">
			<media:title type="html">eelam-karunnithi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/eelam-karunnithi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>“தமிழ் ஈழ வாக்கெடுப்பு கோரவே டெசோ அமைப்பு” &#8211; சுப வீரபாண்டியன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=32002</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=32002#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 11:04:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=32002</guid>
		<description><![CDATA[“தமிழ் ஈழ வாக்கெடுப்பு கோரவே டெசோ அமைப்பு” - சுப வீரபாண்டியன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-32003" title="veera" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/veera-100x80.jpg" alt="" width="100" height="80" />தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">மேற்படி டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவி<span id="more-32002"></span>டர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">80களில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்று திரட்டும் முகமாக உருவாக்கப்பட்ட டெசோ அமைப்புக்கு இன்றைய தேவை என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் தொடரும்வரை டெசோவுக்கான தேவையும் இருக்கிறது என்றார்.</p>
<p style="text-align: justify;">2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதன் தலைவருமான மு கருணாநிதியும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், இப்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போது மட்டும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அதி தீவிர நிலைப்பாடு எடுப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகாதா என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திமுக எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தான் இப்படியான குதர்க்கமான கேள்வியை எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.</p>
<p style="text-align: justify;">ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் மற்ற கட்சிகள் மற்ற இயக்கங்களும் போராடுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றும், அதிமுக உள்ளிட்ட மற்ற தமிழ்நாட்டு கட்சிகளும் அவரவர் மட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தலாம் என்றும் அவர் கூறினார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=32002</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/veera-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/veera.jpg" medium="image">
			<media:title type="html">veera</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/veera-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>பிணி தீர்க்குமா ஈழப் பிக்னிக்? &#8211; தமிழருவி மணியன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31998</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31998#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 11:01:11 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31998</guid>
		<description><![CDATA[பிணி தீர்க்குமா ஈழப் பிக்னிக்? - தமிழருவி மணியன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-26284" title="manit" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/manit-100x80.jpg" alt="" width="100" height="80" />&#8216;உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ முறையாகக் கற்றாக வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஆனால், ஓர் அரசியல்வாதியாக உருவாவதற்குத் தன்னுடைய சொ<span id="more-31998"></span>ந்த நலன்களைப் பராமரிக்கத் தெரிந்தால்&#8230; அதுவே போதும்’ என்றார் அறிஞர் மேக்ஸ் ஓரேல். ஈழத் தமிழர் விவகாரத்தில் நம் அரசியல் தலைவர்கள் அரிதாரம் பூசாமல் அன்றாடம் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தால், இந்தப் பொன்மொழிதான் பொருத்தமாகப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">ஈழம் ரத்த நிலமானபோது, அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரவர் படுகொலை செய்யப்பட்டபோது, எம் குலப் பெண்டிர் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டபோது, வயது முதிர்ந்தோரும், வாய் திறந்து பேசவியலாத சின்னஞ்சிறாரும் வெடிகுண்டுகளில் உடல் சிதறி உருக்குலைந்தபோது, உயிரிழந்தும் உறுப்பிழந்தும் உடைமையிழந்தும் எழுத்தில் வடிக்க முடியாத பேரழிவைச் சந்தித்து நம் தமிழினம் கண்ணீர்க் கடலில் மூழ்கிய போதும்&#8230; இந்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?</p>
<p style="text-align: justify;">தமிழ் இனத்தை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் தந்த போது, தெலுங்கானா காங்கிரஸ்காரர்களைப்போல், அன்னை சோனியாவின் அருட்பார்வைக்கு அன்றாடம் தவமிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இனஉணர்வுடன் தொண்டர்களைத் திரட்டி தெருவில் நின்று குரல் கொடுத்தார்களா? நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஆட்சி பீடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களா? இல்லையே. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பா.ஜ.க., மன்மோகன் சிங் அரசின் தவறான அணுகுமுறைகளால் ஈழம் எரிந்த போது, அதைத்தடுக்க எந்தெந்த வகைகளில் முயற்சி மேற்கொண்டது? அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், தன் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு நடத்திய நாடகங்கள் ஒன்றா? இரண்டா?</p>
<p style="text-align: justify;">இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து வாழ்வாதாரங்களும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட பின்பு, இந்திய அரசு நிவாரண நாடகத்தை அரங்கேற்றி 500 கோடி ரூபாயை ராஜபக்ஷேவுக்கு அள்ளிக் கொடுத்தது. போர் முடிந்து, ஈழம் எரிந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும், அங்குள்ள தமிழர் வாழ்வில் அமைதி தழைக்கவில்லை. சிங்கள ராணுவத்தின் மிருகவெறிச் செயல்கள் &#8216;சேனல் 4’ மூலம் உலகின் பார்வையில் பட்டதும் மனித உரிமை அமைப்பில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழகம் தந்த நிர்பந்தத்தால் தீர்மானத்தை ஆதரித்த இந்திய அரசு, ராஜபக்ஷேவை மகிழ்விக்கவும், சர்வதேச நாடு களிடம் இலங்கை அரசு தமிழருக்கு ஆற்றியுள்ள நற்பணிகளைப் பட்டியலிடவும் நாடாளுமன்றக் குழுவை அனுப்பி, நாடகத்தின் அடுத்த காட்சியை நடத்திக் காட்டியது.</p>
<p style="text-align: justify;">திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற 12 பேர் அடங்கிய குழு ஆறு நாட்கள் ஆய்வு மேற்கொண்டு இலங்கை அரசின் நிவாரணப் பணிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி, ராஜபக்ஷே சகோதரர்களுடன் விருந்து உண்டு இளைப்பாறி விட்டு இந்தியா திரும்பியது. &#8216;தமிழர்கள் சிங்களருடன் சமமாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கேற்ப அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்டும். 13-வது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று ராஜபக்ஷே தன்னிடம் உறுதி அளித்ததாக சுஷ்மா தெரிவித்தார். இந்தக் குழுவில் இடம் பெற்ற காங்கிரஸ் நாயன்மார்கள் நால்வரும் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளரிடம் தங்கள் சாதனைகளைப் பரிமாறிக்கொண்டனர். தோழர் ரங்கராஜன், &#8216;இலங்கைப் போரில் 35 ஆயிரம் பெண்கள் விதவையராகி விட்டதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் பேர், 23 வயதுக்கும் குறைவானவர்கள்’ என்ற கண்ணீர்ச் செய்தியைத் தெரிவித்ததுடன், &#8216;அங்கு உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றன’ என்ற தகவலையும் தந்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">&#8216;ஒன்றுபட்ட இலங்கையில் சிங்களருக்குச் சம​மாகத் தமிழருக்கு அரசியல் உரிமைகளும் அதிகாரப் பகிர்வும் கிடைத்தால் போதும். தமிழ் ஈழம் தேவையற்ற பிரிவினை’ என்பதே காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் அணுகுமுறை. ஆனால், ஜெயலலிதாவும் கலைஞரும் ஈழ நாடகத்தில் இரு வேடமிட்டு நடிப்பதில் இணையற்றவர்கள். இருவரும் கலையுலகப் பின்புலத்தோடு களம் இறங்கியதால், மற்றவர்களைவிட இவர்களுடைய நடிப்பில்தான் நவரசங்களும் பளிச்சிடுகின்றன.</p>
<p style="text-align: justify;">தனி ஈழம் காண &#8216;டெசோ’ கண்டவர் கலைஞர். &#8216;படை இங்கே&#8230; தடை எங்கே?’ என்று பரணி பாடி​யவர். கோட்டை நாற்காலி கொடுத்த ஞானத்தால், &#8216;ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வன்றித் தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை’ என்று தன் பாட்டின் பல்லவியை மாற்றிக்கொண்டவர். அதிகாரம் பறிபோனதும், &#8216;தனி ஈழமே என் தணியாத தாகம்’ என்று இன்று வீதி நாடகத்தில் வீரப்பண் இசைப்பவர். ஏமாளித் தமிழர்களுக்குக் காசில்லாத பொழுதுபோக்கு நம் கலைஞரின் தயவால் தொடர்கிறது.</p>
<p style="text-align: justify;">ஜெயலலிதா, 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது முள்ளிவாய்க்கால் சோகத்தில் மூழ்கிக் கிடந்தவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய, &#8216;இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறுவோம்’ என்று சங்கநாதம் செய்தவர். &#8216;அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியைத் தந்தால், தமிழ் ஈழம் காண அடித்தளம் அமைப்பேன்’ என்று சபதம் பூண்டவர். ஆனால், இன்று முதல்வர் மகுடம் சூடிய பின்பு, &#8216;இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்​களாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் &#8216;ஈழம்’&#8230; பதவியில் அமர்ந்தால் &#8216;அதிகாரப் பகிர்வு’ என்பதுதான் ஜெயலலிதாவும் கலைஞரும் போடும் இரு வேடங்கள். போகட்டும். அதிகாரப் பகிர்வே நல்லது என்று பேசுபவர்கள் சிந்தனைக்குச் சில செய்திகளைச் சமர்ப்பிப்போம்.</p>
<p style="text-align: justify;">ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் செய்து​கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழருக்கு மிகக் குறைந்த அதிகாரங்களை வழங்கும் இந்த 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் சோனியாவுக்கும், சுஷ்மாவுக்கும், காம்ரேடுகளுக்கும் ஒத்த கருத்து உண்டு. மன்மோகன் அரசின் நிலைப்பாடும் இதுதான். வாஜ்பாய் அரசின் விருப்பமும் இதுவேதான். ஆனால், ஒப்பந்தம் நிறைவேறி, 13-வது அரசியல் சட்டத் திருத்தம் அரங்கேறி 25 ஆண்டுகள் முடிந்த பின்பும் இலங்கையில் தமிழருக்கு மிகக்குறைந்த உரிமைகள்கூட இன்று வரை வழங்கப்படவில்லையே&#8230; ஏன்? இந்தியாவால் இலங்கையின் மீது எந்த அழுத்தத்தையும் இதுவரை செலுத்த முடியாத நிலையில் இனிமேல் அதிகாரப் பகிர்வு எப்படிச் சாத்தியமாகும்?<br />
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தம் மாகாண அரசுக்கு நிதி நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்த உரிமையையும் வழங்கவில்லை. மத்திய அரசை முழுமையாகச் சார்ந்தே மாகாண அரசு நிதியைப் பெற முடியும். அரசின் வருவாயை உயர்த்தும் எந்த நடவடிக்கையிலும் மாகாண அரசு ஈடுபடுவதற்கு உரிமை இல்லை. பொதுப் பட்டியலில் உள்ள எல்லா அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது. &#8216;தேசிய நலன்’ என்ற போர்வையில் மாகாண அரசுகளை அதிகாரமற்ற அலங்காரப் பொம்மைகளாக வைத்திருப்பதற்கே 13-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது. &#8216;வடக்கு கிழக்குப் பகுதிகள் ஒன்றிணைப்பு’ பொதுவாக்கெடுப்பு(Referendum)மூலம் உறுதி செய்யப்படும் என்ற உருப்படியான ஓர் அம்சம்கூட இலங்கை உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது. நிலம், காவல் துறை இரண்டின் மீதும் மாகாண அரசுக்கு உரிமை வழங்க இலங்கை அரசு தயாராக இல்லை. ஓர் உரிமையைக்கூட ஒழுங்காகத் தராத இந்த 13-வது திருத்தமே இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் ஒரு மாநில அரசுக்குரிய உரிமைகளை இலங்கை அரசு வடக்கிலும் கிழக்கிலும் எப்படி வழங்கக் கூடும்?</p>
<p style="text-align: justify;">&#8216;விடுதலைப் புலிகளின் பிரச்னைக்கு முற்றுப்​புள்ளி வைக்கப்பட்டதும், இலங்கை அரசு 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளோடு கூடுதலாகச் சில உரிமைகளையும் சேர்த்து வழங்கும் என்று உறுதியளித்த ராஜபக்ஷே, &#8217;13 ப்ளஸ்’ என்று அதற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 18-வது திருத்தத்தை அறிமுகப்படுத்தி 13-வது திருத்தம் வழங்கும் குறைந்த உரிமைகளையும் குழி தோண்டிப் புதைத்தார் என்பதை அதிகாரப் பகிர்வுக்குப் பரிந்துரை செய்யும் நம் அறிவுஜீவிகள் அறிவார்களா?</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசின் 1978-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அதிபராக ஒருவர் இரு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்று விதித்திருந்த தடை 18-வது திருத்தம் மூலம் தகர்க்கப்பட்டது. தேர்தல் கமிஷன், தேசிய போலீஸ் கமிஷன், பொதுப் பணிக் கமிஷன், இலங்கை மனித உரிமைக் கமிஷன், ஊழல் விசாரணைக் கமிஷன் ஆகியவை சுயேச்சையாகச் செயற்படுவதில் தடை விதிக்கப்பட்டது. 17-வது திருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நீதித்துறை, காவல்துறை நியமனங்கள் அதிபரின் அளவற்ற அதிகார வளையத்தில் வரு வதற்கேற்ப 17-வது திருத்தம், 18-வது திருத்தம் மூலம் மாற்றப்பட்டது. சுருங்கச் சொல்வதெனில், ராஜபக்​ஷேவை ஒரு சர்வாதிகாரிக்குரிய சகல குணாம் சங்களுடன் செயற்படுவதற்கு 18-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">ராஜபக்ஷே திருமதி சுஷ்மாவிடம், &#8216;தமிழர்கள் சமத்துவத்தோடு கண்ணியமாக வாழும் வகையில் &#8217;13 ப்ளஸ்’ விரைவில் நிறைவேறும்’ என்று வாக்குறுதி அளித்து விட்டாராம். &#8217;25 ஆண்டு களாக நிறைவேற்றப்படாத 13-வது திருத்தம் எப்போது நிறைவேற்றப்படும் என்று கால வரம்பை உங்களிடம் அவர் அறிவித்தாரா?’ என்ற கேள்விக்கு &#8216;இல்லை’ என்று பதில் அளித்திருக்கிறார் சுஷ்மா. ராஜபக்ஷேவின் வாக்குறுதிகள் அனைத்தும் நீர் மேல் எழுத்துக்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இலங்கைப் பிரதமரே தலைமை நிர்வாகியாக இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்ற ராஜபக்ஷே, ஜனாதிபதி ஆட்சியை மேலும் வலுப்படுத்தவே 18-வது திருத்தத்தை நிறைவேற்றினார்.</p>
<p style="text-align: justify;">&#8216;அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழிவகுப்பேன்’ என்று 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் ராஜபக்ஷே கூறினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2010 ஜூலை மாதம், &#8217;13 ப்ளஸ் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று சத்தியம் செய்தார். வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், &#8217;2012 ஜனவரி மாதம் அதிகாரப் பகிர்வு விரைவில் செயல்வடிவம் பெறும்’ என்று உறுதிமொழி வழங்கினார். இன்று சுஷ்மாவிடம், &#8216;விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும்’ என்று சபதம் செய்திருக்கிறார். அந்த &#8216;விரைவில்’ என்பது எப்போது என்று யாரறிவார் பராபரமே!</p>
<p style="text-align: justify;">இந்திய நாடாளுமன்றக் குழு நாடு திரும்​பியதும், &#8216;இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமே எங்களால் அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறும் சாத்தியம் இல்லை. இலங்கை நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு (select committee) மட்டுமே எந்தத் தீர்வையும் தீர்மானிக்க முடியும். 13 ப்ளஸ் குறித்து நான் எந்த உறுதிமொழியும் தரவில்லை’ என்று அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜபக்ஷே கூறியதை சுஷ்மாவும் அவருடைய குழுவினரும் அறிவார்களா? 13-வது திருத்தத்தின்படி மாகாண வரம்புக்குட்பட்ட நிலமும், காவல் துறையும்கூட தமிழர் பகுதிகளுக்குத் தரப்படாதெனில் அதற்குப் பெயர் அதிகாரப் பகிர்வா? இதுதான் உண்மையான அரசியல் தீர்வா? இதைத்தான் ஈழத் தமிழர் வேண்டுவதாக நம் தோழர் ரங்கராஜன் சொல்கிறாரா? ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர மக்களாகத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என்பது நம் தேசியக் கட்சிகளின் பெரு விருப்பமா?</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்களின் இன்னல் தீர்வதற்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். பதவி நாற்காலியில் அமர்ந்திருந்த​போது அதிகார மயக்கத்தில் இனஉணர்வை மறந்துவிட்ட கலைஞர், இப்போது தமிழீழ தாகம் கொண்டவராக மாறிவிட்டார். இனஉ​ணர்வும், தமிழ்ப் பற்றும்கொண்ட போராளி​யாய் கலைஞர் இறுதிவரை இருக்க வேண்டும் என்று தமிழகத்து வாக்காளர்கள் விரும்பினால்&#8230; மறந்தும் அவரை முதல்வராகவோ, தி.மு.க-வை ஆளும் கட்சியாகவோ மீண்டும் கொண்டுவர முயலக் கூடாது.</p>
<p style="text-align: justify;">ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் இருபெரும் அரசியல் சக்திகளான ஜெயலலிதாவும் கலைஞரும் இணைந்து குரல் கொடுத்ததனால்தான், மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது. இந்த இருவரும் சேர்ந்து அணி திரண்டால்தான், ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்திய அரசு வழி வகுக்கும். தமிழினம்தான் இருவருக்கும் பெரிய பேரும் புகழும் உருவாவதற்குக் காரணம். அதற்கு இவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு, ஒற்றைக் குரலில் ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க முனைந்து செயற்படுவதுதான்.</p>
<p style="text-align: justify;">&#8216;ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா விழுந்தது. அதே ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா மீண்டும் எழும்’ என்று யூதர்கள் இசைத்தனர். இஸ்ரேல் பிறந்தது. மீண்டும் ரத்தமும் நெருப்பும் இல்லாமல் ஈழம் எழும். அதற்கு இந்தியாவின் துணை தேவை. இந்திய அரசை நிர்பந்திக்க தமிழகம் ஒன்றாய் நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.</p>
<p style="text-align: justify;">நன்றி<br />
ஜூனியர் விக்டன்</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31998</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/manit-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/manit.jpg" medium="image">
			<media:title type="html">manit</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/08/manit-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை: அனலை நிதிஸ் ச. குமாரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31995</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31995#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 10:58:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31995</guid>
		<description><![CDATA[மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை: அனலை நிதிஸ் ச. குமாரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-16871" title="Tamil_eelam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/Tamil_eelam-100x80.jpg" alt="" width="100" height="80" />போரை வெற்றிகொள்ள களம் இருந்தால் மட்டும் போதாது. புறநிலைக் களம் மற்றும் மக்களின் ஆதரவுகள் இருந்தால்த்தான் போரை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் நியதி. இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தமிழகம் புறநிலைக் களமாக இருந்திருந்தால் தமிழீழத் தனியரசை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருக்<span id="more-31995"></span>க முடியும்.</p>
<p style="text-align: justify;">1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் தமிழீழம் அடையும் நோக்கத்திற்கு தடையாக இருந்தது. 1991-ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளுக்கு முன்னர் பல ஆண்டுகள் தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தமிழீழம் அமைக்கும் நோக்கம் பலிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போர் தமிழீழக் கோரிக்கைக்கு தடைக் கற்களாகவே அமைந்தது. தமிழர்களுக்கென்று ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தலைமைத்துவம் இன்றுவரை இருந்ததில்லை.</p>
<p style="text-align: justify;">இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைப் பண்புகளை கொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக தமது தலைமைப் பண்பை உருவாக்கி வரும் வேளையில் இறுதிப் போருடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.</p>
<p style="text-align: justify;">ஏறத்தாள எட்டுக் கோடித் தமிழர்களைத் தன்னகத்தே வைத்துள்ள தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் பின்னுக்கு முன் முரணான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் நிலையில் இல்லை.</p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு மற்றும் தமிழர் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்டால், ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை வசைபாடி மக்களை பிழையான வழிக்கே அழைத்துச் சென்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.</p>
<p style="text-align: justify;">தலைமைப் பண்புகளுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையே கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் இதுநாள் வரை செய்து வந்துள்ளார்கள். கொள்கை ஒன்றை வகுத்துவிட்டால் அதற்காக இறுதிவரை போராடும் தன்மை ஒரு தலைவருக்கு இருத்தல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தொண்டர்கள் அக்கொள்கைகளில் இருந்து மாறாமல் இருக்க தலைவர் தொடர்ந்தும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மறைந்த தமிழகத் தலைவர்கள் தமது கொள்கைகள் என்னவோ அதற்காக போராடி வெற்றியடைந்தவர்கள்.</p>
<p style="text-align: justify;">போராட்டப் பாதைகள் மாறலாம் ஆனால் போராட்டம் மாறிவிடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி கூறுவார். இவருடைய கூற்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒற்றையடிப் பாதையில் சென்று போராட்டத்தை வெல்லலாம் என்பது மடத்தனம்.போராட்டத்தின் தன்மைகளை அறிந்து நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு போராட்டத்தை செய்தாலே வெற்றிகொள்ள முடியும்.</p>
<p style="text-align: justify;">காலத்திற்கு ஏற்றவாறு மாறும் தலைமைகள்</p>
<p style="text-align: justify;">முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் உயரிய தலைமைப் பண்பைக் கொண்டவர். தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை பற்றுக்கொண்டு வெல்லும் மனம் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழீழப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு உதவிகளைச் செய்தவரே எம்.ஜி.ஆர் என்பது உலகறிந்த உண்மை.</p>
<p style="text-align: justify;">1970 மற்றும் 1980-களில் தமிழ்ப் போராளிகள் தமிழகம் சென்றபோது அவர்களைப் பிடித்து சிறிலங்காவிடம் ஒப்படைத்த கலைஞர் பின்னர் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி, ரெசோ என்கிற அமைப்பின் தலைவராக செயற்பட்டார்.</p>
<p style="text-align: justify;">இயக்கங்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதில் அவர்களை பிரித்துப் பார்க்கவே விரும்பினார் கலைஞர். டெலோ போன்ற போராளி இயக்கங்களுக்கு பண உதவிகளை செய்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஓரம்கட்ட வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டார் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">காலத்திற்குக் காலம் மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டு செயற்பட்டவரே கலைஞர். இராஜீவ் மரணத்திற்குப் பினனர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல் காரணமாக1991-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் பேசுகையில்,விடுதலைப் புலிகளின் தனி ஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்கிற வாதத்தை முன்வைத்துப் பேசிவந்தவர் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">பிரபாகரன் இல்லையென்றால் தமிழர்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறி வந்தவரே ஜெயலலிதா. 1990-ஆம் ஆண்டில் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தி அதன் மூலமாக தான் ஆட்சிக்கட்டில் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் பொய்ப் பிரச்சாரங்களை ஜெயலலிதா மேற்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">சிங்கள அரச படைகளுடன் மீண்டும் 1990-ஆம் ஆண்டில் போர் ஆரம்பித்தவுடன் பல்லாயிரம் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக படையெடுத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் உட்புகுந்து விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டதாகவும் கூறி தமிழக ஆட்சியைக் கலைக்க உத்தரவிடும்படி போராட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா வெற்றியும் கண்டார்.</p>
<p style="text-align: justify;">இந்திய மத்திய சர்க்கார் தமிழக அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தது. 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இதனைச் சாட்டாக வைத்து கலைஞர் தலைமையிலான தி.மு.காவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று தமிழக முதல்வரானார். இதன் பின்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் ஈழத் தமிழர்கள் பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றியோ தமிழகத்தில் பேசுவதற்குக்கூட இடமளிக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் சிறை அடைக்கப்பட்டனர். அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை கைது செய்து புலி எனும் முத்திரை குத்தி பல்லாண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வழி அமைத்து கொடுத்தார் ஜெயலலிதா. காலங்கள் உருண்டோடின. பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் ஈழத்தில் அழியும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தமிழக அரசியல்வாதிகள்.தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகள் புறநிலைக் களமின்றி தவித்தார்கள்.</p>
<p style="text-align: justify;">பல்வேறுபட்ட தடைகளை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களை வதைப்படுத்தியது சிங்கள அரசுகள். தமிழ் நாடு பக்கபலமாக இருந்திருந்தால் எவ்வித தடைகளுமின்றி பொருட்களை கொள்முதல் செய்து பல்லாயிரம் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றி இருக்கலாம்.</p>
<p style="text-align: justify;">புறநிலைக் களம் இல்லாத காரணத்தினால்த்தான் ஈழத் தமிழர்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஈழத்திற்கு ஆதரவாக தாம் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்கள் போராட்டங்களைச் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ந்தார்கள். ஆனால், புறநிலைக் களம் இல்லாத காரணத்தினாலேயே நான்காம் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்தது.</p>
<p style="text-align: justify;">மீண்டும் ஈழத்திற்கான குரல்</p>
<p style="text-align: justify;">ஈழப் போர் உச்சிக்கட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவின் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தது. தமிழக மக்களின் எழுச்சியைக் கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுத்தார் ஜெயலலிதா.</p>
<p style="text-align: justify;">கலைஞருக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு மீண்டும் அரச நாற்காலியைப் பிடித்துக் கொண்ட ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என்று கூறாமல் இலங்கைத் தமிழர்கள் என்றே கூறிவருகிறார் ஜெயலலிதா.</p>
<p style="text-align: justify;">கலைஞர் தலைமையிலான தி.மு.க. கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பேச்சுக்களை பேசி வருகிறார் கலைஞர்.பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் சில தினங்களுக்கு முன்னர் பேசும்போது, “தமிழீழம் மலராததற்கு காரணம் நிறைய உண்டு. அது பற்றி ஆராய்ந்து சொல்ல விரும்பவில்லை.</p>
<p style="text-align: justify;">தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். தமிழீழத்துக்கு இன்றைய தினம் புதிய எழுச்சியை உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.நான் முன்பு சொன்னது போல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன்&#8221;என்றார் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்கு நிறைவேறாத ஆசை உண்டா?என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ஈழம் மலர வேண்டும் என்பதே என் ஆசை என்றேன். தமிழ் மலர பாடுபட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நானும்இ பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி இடம்பெறுவோம்&#8221; என்றார் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">கடந்த வாரம் சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இடம்பெற்று இருந்தார். நாடு திரும்பியதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான பல சொற்பதங்களை பாவித்தே வந்தார் இவர்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக தாம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற போது தமிழ் மக்கள் தனித் தமிழீழம் கோரவில்லையெனவும், இலங்கை நாட்டிற்குள் சில அரசியல் அதிகாரங்களைப் பெற்று வாழ வேண்டுமென்பதே தமது விருப்பம் என்று தம்மிடம் தமிழ் மக்கள் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் ரங்கராஜன். இது குறித்து இவருடைய கருத்துக்களை நிராகரிக்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">கலைஞர் தனது அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.&#8221;</p>
<p style="text-align: justify;">“டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன்.இலங்கைப் போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில்13,000 விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.&#8221;</p>
<p style="text-align: justify;">“தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன்.</p>
<p style="text-align: justify;">1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து ‘தனித் தமிழ் ஈழம்’ தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள்.தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.”</p>
<p style="text-align: justify;">“தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977-ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடக்குமுறை அடாவடிகளாலோ,அதிகார அத்து மீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது&#8221; என்று தனது அறிக்கையில் கூறினார் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">“தனி ஈழக் கோரிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ள கலைஞருக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் தெரிவித்ததாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p>
<p style="text-align: justify;">“தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.&#8221;</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார்.இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை.</p>
<p style="text-align: justify;">மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது&#8221; என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.</p>
<p style="text-align: justify;">தமிழீழம் அடையும் வரை ஓயமாட்டேன் மற்றும் வன்முறையின்றி ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு உதவ வேண்டுமென்று கருணாநிதி குரல் கொடுத்துள்ளதானது உலகத் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கலைஞர் பேசுவது நாடகம் என்று கருதுகிறார்கள் உலகத்தமிழர்கள்.</p>
<p style="text-align: justify;">ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு அதுவே தனது நிலைப்பாடும் என்று கலைஞர் தொடர்ந்து கூறிவந்தார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளது வெறும் நாடகம் என்று கருத வேண்டியுள்ளது. சிங்களவர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னர் பேசியவரே கலைஞர். தனி ஈழம் என்கிற வாதத்தை இப்போது முன்வைத்துப் பேசும்போது மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சா கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.ஈழத்தை இந்தியாவில் அமைப்பதே சிறந்ததாகவும் கலைஞர்ருக்கு அறிவுரை கூறியுள்ளார் கோத்தபாய.</p>
<p style="text-align: justify;">பல்லாயிரம் தமிழ் மக்கள் ஈழத்தில் சாகும்போது ஆட்சியில் இருந்தவரே கலைஞர்.இந்திய மத்திய அரசில் கலைஞருடைய கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தனது கட்சியின் செல்வாக்கை பாவித்து மனிதாபிமான ரீதியிலாவது ஈழத் தமிழர்களின் துயரை துடைக்க முனையாமல் வெறும் கண்துடைப்பு நாடகங்களை நடத்தியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை.</p>
<p style="text-align: justify;">இப்படிப்பட்டவர் தற்போது தொடர்ந்தும் ஈழம் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். இவருடைய அறிக்கைகளுக்கு பதில் அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் ஜெயலலிதா இது சம்பந்தமாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைக்கான குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது என்பது உண்மையே. தலைமைப் பண்புகள் இல்லாமல் வெறும் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக ஈழப் போராட்டத்தைப் பாவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தமிழீழமே சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு இறுதியும் அறுதியுமான தீர்வு என்று கூறி அறவழிப் போராட்டத்தை ஆரம்பிப்பதே தமிழீழ தனியரசை நிறுவ வழி வகுக்கும். இதுவே லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும்.</p>
<p style="text-align: justify;">nithiskumaaran@yahoo.com</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31995</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/Tamil_eelam-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/Tamil_eelam.jpg" medium="image">
			<media:title type="html">Tamil_eelam</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/10/Tamil_eelam-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31991</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31991#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 10:56:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31991</guid>
		<description><![CDATA[கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31992" title="cluster1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/cluster1-100x80.jpg" alt="" width="100" height="80" />விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால்<span id="more-31991"></span> கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம்.</p>
<p style="text-align: justify;">புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;">கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">கிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை.</p>
<p style="text-align: justify;">ஒரு குண்டை விமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும்.</p>
<p style="text-align: justify;">பேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.</p>
<p style="text-align: justify;">உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.</p>
<p style="text-align: justify;">கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.</p>
<p style="text-align: justify;">பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது.</p>
<p style="text-align: justify;">அதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.</p>
<p style="text-align: justify;">புதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.</p>
<p style="text-align: justify;">ஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான்.</p>
<p style="text-align: justify;">அரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது.</p>
<p style="text-align: justify;">சிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது.</p>
<p style="text-align: justify;">புதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது.</p>
<p style="text-align: justify;">இதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது.</p>
<p style="text-align: justify;">எனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.</p>
<p style="text-align: justify;">2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது.</p>
<p style="text-align: justify;">அதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது.</p>
<p style="text-align: justify;">இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">அந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.</p>
<p style="text-align: justify;">இந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">எனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">போன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">ஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது.</p>
<p style="text-align: justify;">அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.</p>
<p style="text-align: justify;">விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும்.</p>
<p style="text-align: justify;">ஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.</p>
<p style="text-align: justify;">எனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது.</p>
<p style="text-align: justify;">தாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது.</p>
<p style="text-align: justify;">அப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.</p>
<p style="text-align: justify;">வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">சர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;">கிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின.</p>
<p style="text-align: justify;">விமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.</p>
<p style="text-align: justify;">ரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">அப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.</p>
<p style="text-align: justify;">ஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.</p>
<p style="text-align: justify;">போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது.</p>
<p style="text-align: justify;">சுபத்ரா</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31991</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/cluster1-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/cluster1.jpg" medium="image">
			<media:title type="html">cluster1</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/cluster1-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>தோழனே&#8230; உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31987</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31987#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 10:54:01 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31987</guid>
		<description><![CDATA[தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31988" title="tharaki" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/tharaki-100x80.jpg" alt="" width="100" height="80" />ஊடகச் சமராடி, தோழர். &#8216;தராகி சிவராம்&#8217; மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன. அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">இந்தியாதான் எம<span id="more-31987"></span>து உலகம் என்று குறுகிக் கிடந்தவர்களின் சிந்தனைத் தளத்தினை விரித்துவிட்டவரே நண்பன் சிவராம்.</p>
<p style="text-align: justify;">கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு நிலை சீர்குலைந்து போனதிற்கான அடிப்படைக் காரணியை, தான் கற்றுக்கொண்ட மாக்சிய இயங்கியல் தத்துவத்தின் ஊடாக புரியவைத்தவரும் அவர்தான்.</p>
<p style="text-align: justify;">மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக , கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நீர்,நிலவளங்களை அபகரித்த சிங்களத்தின் செயற்பாடு, அவர்களிடையே எவ்வாறு முரண்நிலையைத் தோற்றுவித்தது என்பதனை ஒரு நேர்காணலில் விளக்கமாகக் கூறியிருந்தார் சிவராம்.</p>
<p style="text-align: justify;">தராக்கி மறைந்த ஏழு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். சீனாவின் எழுச்சி, மேற்குலகின் வீழ்ச்சி, &#8216;பிரிக்ஸ்&#8217; இன் தோற்றம், ஆசியாவில் அமெரிக்காவின் &#8216;புதிய பார்வை&#8217; என்று ஏகப்பட்ட திருப்பங்கள்.</p>
<p style="text-align: justify;">அதுமட்டுமல்லாது, யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஊடகத்துறையில் புதிய பரிமாணங்களை உள்வாங்கும் வகையில், நிதியியல் ஊடகவியலின் [Financial Journalism ] காத்திரமான பங்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் நிதியியல், வர்த்தகம் குறித்த பத்தி எழுத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழ் பரப்பில் இதன் வகிபாகம் போதுமானதாக இல்லை என்பதையும் இந்நாளில் குறிப்பிட்டாக வேண்டும்.</p>
<p style="text-align: justify;">இருப்பினும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் என்கிற விடயங்களை தனது எழுத்துக்களில் ஆய்வுக்குட்படுத்திய , பேசுபொருளாக்கிய, மாமனிதர் சிவராமின் பங்கினை இந்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது.</p>
<p style="text-align: justify;">துப்பாக்கிச் சன்னங்கள் அறிவியலாளனின் இயக்கத்தை நிறுத்தலாம். ஆனால் அவன் மக்களிடம் விதைத்த புதிய சிந்தனை முறைமைகளை அழிக்கமுடியாது .</p>
<p style="text-align: justify;">நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜன், சத்தியமூர்த்தி போன்ற எண்ணற்ற தமிழ் தேசிய ஊடக எழுத்துச் சமராடிகளை நாம் இழந்தாலும், அவர்கள் அக்காலத்தில் ஆற்றிய பெரும்பணி முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் ஊடக வீச்செல்லை விரிந்து கொண்டு செல்கிறது.</p>
<p style="text-align: justify;">அவர்களின் ஆளுமை, எமது ஒவ்வொரு எழுத்திலும் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது.</p>
<p style="text-align: justify;">போராட்ட வடிவங்கள் மாறினாலும், விடுதலைக்காக எழுதிக் குவிக்கும் எழுத்தாளனின் இலக்கு மாறாது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31987</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/tharaki-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/tharaki.jpg" medium="image">
			<media:title type="html">tharaki</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/tharaki-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ஈழத்தமிழ் அடையாளங்களி​னுடனான ‘இளந்தளிர்​’</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31982</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31982#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 10:49:23 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31982</guid>
		<description><![CDATA[கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ஈழத்தமிழ் அடையாளங்களி​னுடனான ‘இளந்தளிர்​’]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31983" title="canada_ilanhalir" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/canada_ilanhalir-100x80.jpg" alt="" width="100" height="80" />கனடா தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய ‘இளந்தளிர்’ எனும் மாபெரும் நாடக நிகழ்வென்று நேற்று முன்தினம் ரொறன்ரோவில் மார்க்கம்-ஷெப்பேர்ட் சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள சீன கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஈழத்தமிழர்களின்<span id="more-31982"></span> வரலாற்றினையும் அடையாளங்களையும் எடுத்தியம்பும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு, பாடசாலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் அரங்கேற்றப்பட அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற நடந்தேறியது.</p>
<p style="text-align: justify;">இளையோரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழர்களின் பல்வேறு கலைவடிவங்கள் இங்கு அரங்கேற்ப்பட்டன. கனடிய தேசியப் பாடலும், தமிழீழக் கொடியேற்றப் பாடலும் மாணவர்களால் மேடையில் இசைக்கப்பட கொடியேற்றத்துடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வு ஆரம்பமாகியது.</p>
<p style="text-align: justify;">இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் ஒருங்குசேர தமிழர் சமூகத்தின் பல்வேறு கலைவடிவங்களைத் திரட்டித் தனியொரு மேடைநிகழ்வாக, தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் நாளை மலரும் தமிழீழத் தனியரசு வரையிலான காட்சிப்படுத்தலாக பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுத் தன்னகத்தே கூட்டிச்சென்று அவர்களையும் அக்காலகட்டங்களை உணரவைப்பதாக விரிந்தன.</p>
<p style="text-align: justify;">இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒன்றாரியோ புதிய ஜனநாயகக் கட்சியின் தவிசாளரான நீதன் சண் கலந்துகொண்டு உரையாற்றுகையில், சிங்கள அரசு எமது வரலாற்றினையும் அடையாளங்களையம் அழித்துவிடக் கங்கணங்கட்டிச் செயற்பட்டுவரும் இவ்வேளையில், அதனைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பாரிய பொறுப்பும் திறனும் இளையோர் கைகளிலேயே தங்கியுள்ளன என்பதுடன் அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்வார்கள் என்ற அசையாத நம்பிக்கை தனக்குண்டு என்று தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து கனடா தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளரான செல்வன் பிரியந்த நன்றியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31982</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/canada_ilanhalir-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/canada_ilanhalir.jpg" medium="image">
			<media:title type="html">canada_ilanhalir</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/canada_ilanhalir-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கைக்கு சென்று மதசுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்: ஐக்கிய நாடுகளுக்கு பிரதமர் வி.ருத்திரகுமாரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31977</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31977#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 12:41:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31977</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு சென்று மதசுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்: ஐக்கிய நாடுகளுக்கு பிரதமர் வி.ருத்திரகுமாரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-3772" title="uruthirakumar" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கைக்கு சென்று அங்கு இடம்பெற்ற மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளிடம் கோரியுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் மற்றும் மத விடுத<span id="more-31977"></span>லை தொடர்பான விசேட நிபுணர் Heiner Bielefelt (ஹெய்னர் பிலபெல்ட்) க்கு இது இந்தக் கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் கடிதம் மூலம் விடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் பௌத்த பிக்குமாரால், முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன.அண்மையில் தம்புள்ளை பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் இலங்கை அரசாங்கத்தினால் இந்துக்கோயில்கள் மூடப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">எனவே உடனடியாக இலங்கைக்கு சென்று பௌத்த மதங்களை தவிர்ந்த ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று ருத்திரகுமாரன் கோரியுள்ளார். அத்துடன் மதங்களை பாதுகாப்பதற்காக சர்வதேச பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் பௌத்த பிக்குமார் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகின்றனர். 1958 ஆம் ஆண்டு தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியமைக்காகவே அப்போதைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டமையை ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில், தற்போது ஏனைய மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கையின் அமைச்சரவை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னின்று செயற்பட்டு வருகிறார்.</p>
<p style="text-align: justify;">தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட அதேநேரம், திருகோணமலையில் 60 வருட பழமைவாய்ந்த பிள்ளையார் கோயில் ஒன்றை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அத்துடன் மன்னார் மடுத்திருப்பதியில் கிறிஸ்தவ பூமிப்பகுதியில் புத்தர் சிலைகளை வைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ருத்திரகுமாரன் ஐக்கியநாடுகளின் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31977</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar.jpg" medium="image">
			<media:title type="html">uruthirakumar</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31974</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31974#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 12:38:00 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31974</guid>
		<description><![CDATA[கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-5790" title="karunanithi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" alt="" width="100" height="80" />தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கை<span id="more-31974"></span>யை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,</p>
<p style="text-align: justify;">’’தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31974</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi.jpg" medium="image">
			<media:title type="html">karunanithi</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>விடுதலை கிடைக்கும்வரை தந்தை செல்வாவின் பாதையில் போராட்டம் தொடரும்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31970</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31970#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 12:35:06 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31970</guid>
		<description><![CDATA[விடுதலை கிடைக்கும்வரை தந்தை செல்வாவின் பாதையில் போராட்டம் தொடரும்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-31971" title="selva" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/selva-100x80.jpg" alt="" width="100" height="80" />தந்தை செல்வா எவ்வாறு மதிக்கப்படுகிறாரோ அவரின் கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்த இளைஞர்களும் மதிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">கடந்த 26.04.2012 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு<span id="more-31970"></span> பிரதேசத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 35ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,</p>
<p style="text-align: justify;">1977 ஆம் ஆண்டு தந்தை செல்வா இறந்தபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன் அந்த நாளை மறக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">அவரின் கொள்கைக்காகவும் அவரின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகவும் உருவான போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாக சிலபேர் கூறுகிறார்கள் அது உண்மையல்ல.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்கால் விடுதலைப் போராட்டத்தின் முடிவல்ல. அது ஒரு இடைத்தங்கல் முகாம். எமது அகிம்சைப் போராட்டமோ அல்லது அறிவு போராட்டமோ இன்னும் ஓய்ந்துவிடவில்லை விடுதலை கிடைக்கும்வரை தந்தை செல்வா அவர்களின் பாதையில் போராட்டம் தொடரும்.</p>
<p style="text-align: justify;">இதற்காக அரசியல் அரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும் வடக்கு கிழக்கில் நடைபெற இருக்கின்ற தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பு போட்டியிட வெண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.</p>
<p style="text-align: justify;">கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோக பூர்வமாக தேர்தல் ஆணையாளர் தேர்தலை அறிவித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக அறிவிக்கும்.</p>
<p style="text-align: justify;">ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலோ அல்லது வட மாகாண சபைத் தேர்தலிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதால் எமது கொள்கையில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்கின்றதென்பது அர்த்தமல்ல தேர்தலில் வெற்றிபெற்றால் கிடைப்பது ஒரு இடைக்காலத் தீர்வேதான்.</p>
<p style="text-align: justify;">இந்தத் தீர்வைப் பெற்றாலும் வடகிழக்கு இணைந்த ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிய எமது பயணம் தொடரும் இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எனவே தந்தை செல்வாவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். அதேபோன்று தந்தை செல்வா தமிழ் மக்களால் எவ்வாறு மதிக்கப்படுகிறாரோ அதேபோன்று அவரின் கொள்கைக்காக 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர்த் தியாகம் செய்த இளைஞர்களையும் மதித்து நினைவு கூருவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31970</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/selva-100x80.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/selva.jpg" medium="image">
			<media:title type="html">selva</media:title>
			<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2012/04/selva-100x80.jpg" />
		</media:content>
	</item>
		<item>
		<title>சர்வதேச சமூகங்கள் ஒன்றுகூடும் மே தினப் பேரணியில் சர்வதேச சுயாதீன விசாரணையினை கோரும் மனுக் கையெழுத்துவேட்டை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=31964</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=31964#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 10:11:18 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=31964</guid>
		<description><![CDATA[சர்வதேச சமூகங்கள் ஒன்றுகூடும் மே தினப் பேரணியில் சர்வதேச சுயாதீன விசாரணையினை கோரும் மனுக் கையெழுத்துவேட்டை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-11997" title="BTFlogo" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/BTFlogo.jpg" alt="" width="100" height="80" />மத்திய லண்டனில் நடைபெறும் மே 1 ம் திகதி சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலத்தில்&#8230;</p>
<p style="text-align: justify;">&#8230;அனைத்து தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிறிலங்காஅரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை பிரித்தானிய வாழ் அனைத்து இன சமூக மக்களுக்கும் எடுத்<span id="more-31964"></span>துச் சொல்வோம்.</p>
<p style="text-align: justify;">தமிழினம் ஓர் தனித்துவமான இறையாண்மை உள்ள இனம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான இணையத்தள மனுவில் கையொப்பங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் பிரத்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு இணைய தள மனுவில் கையெழுத்துப் பெறுவதற்கு உதவ விரும்புவோர் முற்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும், கொண்டுசெல்லும் இணையத்தள வசதிகள் உள்ள மடிக் கணணி(Laptop) உள்ளவர்கள் இவ் இணையவழி கையொப்பமிடலுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">காலம்: 1 May 2012 10:30 செவ்வாய் கிழமை<br />
நடை பெறும் இடம்.<br />
Clerkenwell Green EC1<br />
(nearest tube – Farringdon)<br />
தொடர்புகளுக்கு:<br />
020 8808 0465<br />
078 2544 8753</p>
No tags for this post.]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&#038;p=31964</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:thumbnail url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/BTFlogo.jpg" />
		<media:content url="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/06/BTFlogo.jpg" medium="image">
			<media:title type="html">BTFlogo</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>

