<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Puthinam News</title>
	<atom:link href="http://www.puthinamnews.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.puthinamnews.com</link>
	<description>Tamil News</description>
	<lastBuildDate>Sat, 04 Sep 2010 07:01:01 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கந்தளாயில் கைது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14913</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14913#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:58:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசியத் தலைவர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14913</guid>
		<description><![CDATA[தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கந்தளாயில் கைது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14914" title="Annai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Annai-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கந்தளாய், ஊறணி பிள்ளையார் பிரதேசத்தில் விடுதலைப் புலிக<span id="more-14913"></span>ளின் தலைவர் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்ட போதே இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்த வீடியோக் காட்சிகளை வழங்கிய நபரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d" title="தேசியத் தலைவர்" >தேசியத் தலைவர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8676" title="&#8220;தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது&#8221;: தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரகன் (April 17, 2010)">&#8220;தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது&#8221;: தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரகன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11152" title="தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்! (June 6, 2010)">தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8061" title="உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை (April 2, 2010)">உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2295" title="தேசியத் தலைவரின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத் (November 30, 2009)">தேசியத் தலைவரின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8043" title="தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய வீடு சிங்களக் காடையர்களால் உடைப்பு (April 2, 2010)">தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய வீடு சிங்களக் காடையர்களால் உடைப்பு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14913</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்! புலத்தை நோக்கி நகர்கின்றது!!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14909</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14909#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:50:37 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[5ம் கட்ட ஈழப்போர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14909</guid>
		<description><![CDATA[5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்! புலத்தை நோக்கி நகர்கின்றது!!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14337" title="senpakam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/senpakam1-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">அதை எதிர்கொள்<span id="more-14909"></span>ளச் சிங்கள அரசும் அதன் கூட்டாளி நாடுகளும் தயாராகி விட்டன. இது பிரகடனப் படுத்தப்படாத போர் ஆனால் உண்மையான போர்தான். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சிறிலங்கா அனுப்புகிறது.</p>
<p style="text-align: justify;">ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரும் வேரடி மண்ணுமான போராட்ட உணர்வை அழிக்கும் நடவடிக்கையில் இது முக்கிய அங்கமாக அமைகின்றது. படை அதிகாரிகளை அனுப்புவதானது ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் படை நடவடிக்கை என்பதற்குச் சந்தேகமில்லை.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழுணர்வுக்கு எதிரான கருத்துப் போரையும் சிங்கள அரசு தொடங்கியுள்ளது. சிங்கள ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன. அதன் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத சில தமிழ் ஊடகங்கள் இதற்குத் துணை போகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அனைத்து தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் என்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஐனவரி 2011ல் தலைநகர் கொழும்பில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பரந்துபட்ட பிரசாரத்தின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கவும் தூதரங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">போர்க் குற்றவாளிகளை தூதுவர்களாக நியமிக்கப்படுவதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதனால் தூதரங்களிற்கு நியமிக்கப்படும் படை அதிகாரிகளின் விபரங்களை இரகசியமாக மேற்கொள்ளுமாறு தூதரங்களிற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">போர் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து வரும் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது திரைமறைவில் முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றது.</p>
<p style="text-align: justify;">மே 18, 2009 அதிகாலை அரசியற் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் தமது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாக அலுவலர்களுடன் படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் மொத்தம் 60 பேருக்கு மேல் இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடையுமாறு நடேசன், புலித்தேவன் ஆகியோர் தொடர்பு கொண்ட நோர்வே அரசு, சிறிலங்கா அரசு, செஞ்சிலுவை சர்வதேச குழு, ஐ.நா செயலாளர் நாயக அலுவலகம் என்பன பரிந்துரை செய்திருந்தன.</p>
<p style="text-align: justify;">இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும். என்று சிறிலங்கா அரசு மற்றும் இராணுவ உயர்மட்டத்தினர் நடேசன், புலித்தேவன் ஆகியோருக்கு உத்தரவாதம் வழங்கியதை கொழும்பு இராசதந்திர வட்டராங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தன.</p>
<p style="text-align: justify;">இப்படியாக இருப்பினும் 58ம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஐர் ஜெனரல் சவீந்திர டி செல்வா பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஐபக்சவின் கட்டளைக்கு அமைவாக அனைவரையும் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டார்.</p>
<p style="text-align: justify;">வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் மீதான படுகொலை ஒரு பாரிய போர்குற்றமாகும். இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புடையவர்களான சவீந்திர டி சில்வாவும் கோத்தபாயா ராஐபக்சவும் குற்றவாளிகளாகக் கணிப்பிடப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.</p>
<p style="text-align: justify;">ஆனால் சவீந்திர டி சில்வா ஐ.நாவுக்கான சிறிலங்காவின் உதவி நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் முரணாக இருப்பினும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மறுக்காமல் நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஏற்கனவே இன்னுமொரு போர்குற்றவாளியான மேஐர் ஜெனரல் ஐகத் டயஸ் சிறிலங்காவின் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுவிற்ஸர்லாந்து வாழ் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">பிரித்தானியாவுக்கான தூதுவராக கடற்படை வைஸ் அட்மிரல் கரனாகொடவும் மலேசியாவுக்கான தூதுவராக ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் நியமிக்கப்படவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">தமிழின அழிப்பை தாயக மண்ணில் மேற்கொண்ட படைத் தளபதிகள் தமிழர்களுக்கு எதிரான போரை புலம்பெயர் நாடுகளுக்கு விரிவு படுத்தியுள்ளனர். இதை எமது உறவுகள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நாட்டுத் தூதுவர்களை போல் இராணுவப் படைத் தளபதிகள் தமது பணிகளை மேற்கொள்ள மாட்டார்கள். சதித்திட்டங்களையும், தகவல்களையும், குழப்பங்களையும் உருவாக்குவார்கள். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.</p>
<p style="text-align: justify;">பாரிஸில் 1996ம் ஆண்டு நடந்த சதித்திட்டங்களை போல் மாற்று வடிவிலான சதித்திட்டங்கள் திட்டுவார்கள் என்பதை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். போர்க் குற்றவாளிகளை நீதி மன்றத்தின் முன்நிறுத்த ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கவேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழீழத்திற்கான எமது இறுதிப் போரில் எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. உலக நாடுகளினுடைய மனித உரிமைகள் சார் வலுவான குரல்களும் வலுவான அமைப்புக்களும் சிறிலங்காவிற்கு முன்னால் செயலிழந்து நிற்கின்றன. சிறிலங்காவுக்கு வலுவான எதிர்ப்புக் காட்டும் போர்க் குணமும் ஓர்மமும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் உண்டு.</p>
<p style="text-align: justify;">போர் தொடங்கி விட்டது. இந்தப் போர் வலுவடைய வேண்டும். இந்தப் போர் உன்மத்தம் பெறவேண்டும். அங்கேயே பிறந்து வளர்ந்து அந்தந்த நாடுகளின் கலாசார வழக்கங்களையும் மொழிகளையும் இயல்புகளையும் அறிந்த இளம் தலைமுறையினர் இந்தப் போரைத் தலைமையேற்று நடத்த வேண்டும். வாழும் நாட்டு மக்கள் பேசுகின்ற மொழிகளிலே பேசும் தகுதி கொண்ட ஈழத்தமிழர்களுக்கு இந்த தகுதி உண்டு.</p>
<p style="text-align: justify;">அந்த நாட்டு மக்கள் எப்படி அரசியலையும் சமூக வாழ்வையும் ஒன்றிணைந்து நடத்துகிறார்களோ அப்படியே நடத்தி அவர்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வாதங்களை முன்வைக்க வேண்டும். அவர்களுக் கெல்லாம் இந்த நீதி உணர்வையும் இலட்சிய வெறியையும் ஈழ விடுதலைத் தாகத்தையும் அண்மையில் நடந்த இனப் படுகொலை வரலாற்றையும் எடுத்துக் கூறவேண்டும். அப்படிச் சொல்லும் உரிமை ஐனநாயக விழுமியங்கள் நிலவும் புலம்பெயர் நாடுகளில் சாசன ரீதியாக உறுதி செய்யப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அப்படிச் சொல்லாமல் விடுவோமானால் அது எமக்கு நாமே தேடிக் கொள்ளும் அவமானமாக அமையும். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறவே மாறாது. ஈழத்தமிழர்கள் நடத்தும் போர் கருத்துப் போராக அமையவேண்டியது தவிர்க்கமுடியாத நிகழ்ச்சி நிரலாகும். கவன ஈர்ப்பு போராட்டங்கள் எமது தரப்பு நியாயப்பாடுகளை உலகிற்கு உணர்த்த நிட்சயம் உதவும்.</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்களின் தேசியச் சின்னங்களான தேசியக் கொடி, தேசிய விலங்கு, தேசிய மரம், தேசியப் பறவை பற்றிய உணர்வுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும். முக்கியமாகக் கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகளில் தேசியக் கொடிக்குரிய முக்கியத்துவம் தவறாது தரல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">உலகத் தமிழினம் பேரியக்கமாக வளர்ச்சி கண்டாலும் போராட்ட முனைப்பு தீவிரமடைய வேண்டிய தேவை நிறைய இருக்கிறது. பலதரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து செயற்படும் போது ஏற்படும் உரசல்களும் முரண்பாடுகளும் தவிர்க்கப்பட்டால் போராட்ட வலு வீரியம் பெறும்.</p>
<p style="text-align: justify;">குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது ஆற்றலை அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இனிமேலும் கிடையாது. களத்தில் இறங்கியவர்கள் களமாடாமல் இருக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">ஈழப் போர் தாயகத்தில் அமைதியாக இருந்தாலும் உலக அரங்கிலே ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போர் விரிவடைந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் அனைவரும் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எல்லா இரவுகளும் முடியும். எல்லாக் கொடுமைகளும் முடிவுக்கு வரும். நிட்சயம் இருள் விலகும். இருளின் ஆட்சி மறையும் காலம் நெருங்கி விட்டது. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருப்பினும் இது நம்பிக்கைகளின் உதய காலமாக இருக்கிறது. தமிழீழத்தின் பிறப்பு நிச்சயமாகத் தெரிகிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d" title="5ம் கட்ட ஈழப்போர்" >5ம் கட்ட ஈழப்போர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14909</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14905</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14905#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:48:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14905</guid>
		<description><![CDATA[பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14906" title="de" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/de.jpg" alt="" width="100" height="80" />பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சரும் தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டேவிட் மிலிபாண்ட் இன்று சனிக்கிழமை சந்திக்கின்றார். இவர் முன்னர் உலகத்தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். இதனால் சிறிலங்கா அரசு கடும் சீற்றமடைந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் எதி<span id="more-14905"></span>ர்வரும் தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள டேவிட் மிலிபாண்ட் உடனான சந்திப்பு தமிழர்களை பொறுத்தவரை முக்கியமானதாகும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">பெருமளவான மக்களை திரண்டுவந்து தமிழ் மக்களின் கரிசனையை வெளிப்படுத்துமாறும் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களின் உரிமைக்கான குரலை வெளிப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் கேட்டுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வுக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னரே வந்தடையுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.</p>
<p style="text-align: justify;"><strong>சந்திப்பு நடைபெறும் இடம்:</strong></p>
<p style="text-align: justify;"><strong>Central Hall Westminister, Storey’s Gate, London, SW1H 9NH</strong></p>
No tags for this post.
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14905</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14899</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14899#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:43:52 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[மேஜர் கண்ணாளன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14899</guid>
		<description><![CDATA[மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14900" title="ltte" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/ltte.jpg" alt="" width="100" height="80" />மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள்.</p>
<p style="text-align: justify;">03.09.1995 இன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(விநா<span id="more-14899"></span>யகம் இளையதம்பி – மட்டக்களப்பு) மேஜர் நகுலன்(கந்தையா கிருஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள்(03.09.2010)</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14901" title="Maj-Kannaalan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Maj-Kannaalan.jpg" alt="" width="283" height="400" /><img class="aligncenter size-full wp-image-14902" title="Maj-Nagulan-Soman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Maj-Nagulan-Soman.jpg" alt="" width="283" height="400" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%87%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d" title="மேஜர் கண்ணாளன்" >மேஜர் கண்ணாளன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14899</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?: டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14895</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14895#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:38:36 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தாமரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14895</guid>
		<description><![CDATA[கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?: டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14896" title="thaamarai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/thaamarai-100x80.jpg" alt="" width="100" height="80" />‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.</p>
<p style="text-align: justify;">இத்தகைய நிலை<span id="more-14895"></span>யில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்’’</p>
<p style="text-align: justify;">இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.</p>
<p style="text-align: justify;">இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்&#8230;கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,</p>
<p style="text-align: justify;">‘‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது’’ என தனது தலைவர் கலைஞருக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்&#8230; ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி நம்மிடம் பேசிய கவிஞர் தாமரை, ‘‘தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.</p>
<p style="text-align: justify;">போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.</p>
<p style="text-align: justify;">வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்ஷவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?</p>
<p style="text-align: justify;">இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே&#8230; அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?’’ என்று காட்டமாகக் கேட்டார் தாமரை.</p>
<p style="text-align: justify;">அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு,</p>
<p style="text-align: justify;">‘‘ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது’’ என கூறியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">‘‘ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்ஷ குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது’’ என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88" title="தாமரை" >தாமரை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14895</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14890</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14890#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:32:42 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒபாமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14890</guid>
		<description><![CDATA[கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14891" title="writers" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/writers-100x80.jpg" alt="" width="100" height="80" />மஹிந்த அரசு கொழும்பில் நடத்தவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் சங்கமும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளன.</p>
<p style="text-align: justify;">2011 ஆம் ஆண்டு<span id="more-14890"></span> ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த சிலரும், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் சேர்ந்தே இதைத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது. இந்திய அரசின் கூட்டுச் சதியுடன் கடந்த ஆண்டு இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு இப்போது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகிறது.</p>
<p style="text-align: justify;">கடந்த ஆண்டு நடந்த போரில் இலங்கைப் படைகள் புரிந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச சமூகம் பல முனைகளிலும் இருந்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஐ.நா செயலாளரும் ஐ.நா அங்கத்துவ நாடுகள் பலவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இந்த அழுத்தங்களைக் குறைக்கவென இந்த ஆண்டு ஜூன் மாதம் 3,4,5 ஆம் திகதிகளில் இந்தியத் திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தியது இலங்கை. ஆனால் தமிழினத்துக்கு எதிராக இலங்கை புரிந்த கொடுமைகளுக்காக தமிழ்த் திரையுலகம் அவ்விழாவைப் புறக்கணித்ததோடு, இந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களும் தமிழர்களுக்காக அவ்விழாவைப் புறக்கணித்தனர். எனவே விழா தோல்வியடைந்ததால் தாம் தமிழர்களுக்கு விரோதியல்ல எனக் காண்பிக்க முனைந்த இலங்கையின் சூழ்ச்சியும் வாய்க்கவில்லை.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து தற்போது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தி தன் கைகளில் உறைந்துள்ள ஒரு இலட்சம் தமிழரின் இரத்தக் கறையை மறைக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. எழுத்தாளர்களின் முகங்களின் பின்னால் தனது கோர முகத்தை மறைக்க இலங்கை முனைகிறது.</p>
<p style="text-align: justify;">எனவே என்ன நோக்கத்துக்காக இந்த மாநாடு நடக்கிறது என்பதை தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்களையும் அதன் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரப் படுகொலைகளையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத விதமாக இலங்கை அரசு அரங்கேற்ற்றியது.</p>
<p style="text-align: justify;">எனவே தனது கோர முகத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் ஜனநாயக, தமிழ்ப் பாச, தமிழ் நேச அரிதாரம் பூசிக்காட்ட இலங்கை முயல்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் இலங்கையின் முயற்சிக்குத் துணை செல்லாமல் அந்த மாநாட்டை முற்றுமுழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழினத் துரோக கொழும்பு-சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, இம்மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் எவரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஒபாமாவுக்கான நியூயோர்க் தமிழர்கள் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. உலகின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடன் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் எழுத்தாளர் மாநாடும் அமைவதாகவும் இவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளதோடு அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிக்க் வேண்டும் என்றும் கேட்டுள்ளது.</p>
<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/writers.jpg" alt="" title="writers" width="500" height="207" class="aligncenter size-full wp-image-14891" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%92%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be" title="ஒபாமா" >ஒபாமா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14890</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி சட்டவிரோதமானது: மங்கள சமரவீர</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14887</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14887#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:29:47 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மங்கள சமரவீர]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14887</guid>
		<description><![CDATA[சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி சட்டவிரோதமானது: மங்கள சமரவீர]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-3917" title="Manhala" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Manhala-100x80.jpg" alt="" width="100" height="80" />ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் கால தேர்தல் தொடர்பான மனு தற்போதும் தீர்வுக்காக நிலுவையாக இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்கால வரையறையை அகற்றுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியானது சட்டவிரோதமானது என்றும் தார்மீகக் கோட்பாடற்றது எ<span id="more-14887"></span>ன்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கான பிரசாரத்தை ஜனாதிபதியும் அரசாங்கமும் நடத்திய வேளையில் ஜனாதிபதிப் பதவி தொடர்பான வரையறை அகற்றப்படும் என்று ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்களுக்கு உறுதியளித்திருக்கவில்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">அத்தகைய உறுதிமொழி எதுவும் அளிக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்குமாறும் அரசுக்கு அவர் சவால் விடுத்தார்.</p>
<p style="text-align: justify;">புதிய அரசியலமைப்புக்கோ அல்லது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கவோ நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. புதிய திருத்தங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">சில எம்.பி.க்கள் தனிப்பட்ட சிறப்புரிமைகளுக்காக கட்சி தாவிக்கொண்டிருக்கின்றனர். சர்வாதிகாரத்தனமான பாதைக்கு எதிராக அதிருப்தி கொண்டவர்கள் அரசாங்கத்திற்குள்ளும் இருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஆனால், தமது அபிப்பிராயத்திற்காக எழுந்து நிற்கும் முதுகு எலும்பு அவர்களுக்கு இல்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். சர்வாதிகார போக்குக்கு குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.</p>
<p style="text-align: justify;">தேர்தலின் போது ஜனாதிபதி பதவிக்காலத்தை வரையறையற்றதாக்குவது மற்றும் 17 ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிப்பது குறித்து பிரசாரக் கூட்டங்களில் பேசவில்லை. பேசியிருந்தால் எங்கென தெரிவிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியான சாவேஸ் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து பணம் வழங்கி எதிர்க்கட்சியிலுள்ளவர்களை வாங்கியும் அழுத்தம் கொடுத்தும் செய்ய முற்படவில்லை.</p>
<p style="text-align: justify;">மாறாக இரு தடவைகளுக்கு மேல்போட்டியிடுவது குறித்து மக்கள் விருப்பத்தை அறியுமுகமாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார்.</p>
<p style="text-align: justify;">மக்கள் அதனை ஏற்கவில்லை.மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தார். ஆனால், இங்கோ மக்கள் ஆணையை மீறி பலாத்காரமாக பாராளுமன்றத்தின் 2/3 பலத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 42% வாக்குகளை மக்கள் அளித்தனர். இந்நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பினை காண்பிக்குமுகமாக வாக்களிக்காத நிலையில் வாக்களித்த தொகையில் 1/3 பகுதியைக் கொண்டே அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற்றது.</p>
<p style="text-align: justify;">அரச பலம், வளம் என்பவற்றை பாவித்தும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தியும் 2/3 பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் இதனை செய்வது ஏற்கமுடியாது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் அரசு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெறுவதற்காகக் கட்சியை உடைக்கப்போவதாக அச்சுறுத்தியும் சகோதரர்களை மோதவிட்டும் உள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால், 2/3 பகுதி மக்கள் எமது கட்சியின் நிலைப்பாட்டில் உள்ளனரென நம்புகின்றேன்.</p>
<p style="text-align: justify;">ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகாநாட்டில் அரசியலமைப்பு திருத்தத்துக்கு கையுயர்த்திய போதிலும் பலருக்கு விருப்பமில்லையென்பது எனக்குத் தெரியும். அக்கட்சியிலுள்ளவர்கள் ஐ.தே.க. இதனை செய்யவிடக்கூடாது எனத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்.</p>
<p style="text-align: justify;">சந்திரிகா குமாரதுங்கவின் படம் கட்சி மகாநாட்டில் அகற்றப்பட்டுள்ளது. இது கட்சி வரலாற்றை திரிவுபடுத்தும் செயலாகும். 2005 சுதந்திர கட்சியுடன் ஜே.வி.பி.முக்கிய பணியாற்றி வெற்றிக்குக் காரணமாயிருந்தது.</p>
<p style="text-align: justify;">பின் நான் பிரசார முகாமையாளராகவும் இணைப்பாளராகவும் இருந்தேன்.எமக்கு என்ன நடந்தது. எல்லோருக்கும் இது தெரியும்.</p>
<p style="text-align: justify;">பயங்கரவாதத்தை அழிக்க தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவின் பதவியை இல்லாமல் செய்ததுடன், அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஆனால், கே.பி., மேர்வின் போன்றவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்து உண்மையை வெளிப்படுத்தாது வாக்களித்த மக்களை ஏமாற்றி மேற்கொள்ளும் நடவடிக்கையை கட்சி பேதமின்றி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபடுமாறு கோருகிறேன்.</p>
<p style="text-align: justify;">ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிரேஷ்ட தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியிலுள்ளவர்களாக இருக்கின்ற போதும் இதன் மூலம் அதிகாரம் கொடுக்கப்படமாட்டாது.</p>
<p style="text-align: justify;">இதேபோல் தற்போது மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரம் கையிலெடுக்கப்படுகின்றது. இது சர்வாதிகார போக்குக்கு அத்திபாரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0" title="மங்கள சமரவீர" >மங்கள சமரவீர</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12529" title="ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள மங்கள சமரவீர மறுப்பு (July 14, 2010)">ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள மங்கள சமரவீர மறுப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4971" title="மங்கள சமரவீர பயணம் செய்த வாகனம் மீது இனம்தெரியாதோர் தாக்குதல் (January 18, 2010)">மங்கள சமரவீர பயணம் செய்த வாகனம் மீது இனம்தெரியாதோர் தாக்குதல்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13423" title="மங்கள சமரவீர ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம் (August 2, 2010)">மங்கள சமரவீர ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14887</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14884</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14884#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:26:14 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14884</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-1050" title="Indian Flag" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Indian-Flag.jpg" alt="" width="100" height="80" />இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">முக்கியமாக அயல்<span id="more-14884"></span> நாடான இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் நிரந்தரமான நிலைப்பாட்டைப் பேணிக் கடைப்பிடிப்பதற்காக விசேட தூதுவர் ஒருவரை வைத்திருப்பது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக &#8220;ரைம்ஸ் ஒவ் இந்தியா&#8221; நேற்று குறிப்பிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் நிலைவரத்தை நேரடியாக ஆராய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரும் சாத்தியமிருப்பதாக இந்திய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்து அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கிருஷ்ணா இலங்கைத் தலைமைத்துவத்திற்கு வலியுறுத்தல் விடுப்பார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கலந்துரையாடலை நடத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இதய சுத்தியுடனான தலைமைத்துவம் குறைவாக இருப்பதால் அரசியல் தீர்வுக்காண விடயங்கள் தாமதமாகி வருகின்றது என்ற கருத்தை கொழும்பிலுள்ள தலைமைத்துவம் தொடர்ந்தும் கொண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளுடன் முன்னர் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கு விரும்பவில்லையென புதுடில்லிக்கு இலங்கை அரசு கூறியுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88" title="இலங்கை" >இலங்கை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1417" title="அதிபர் தேர்தலை அறிவிப்பதில்  இலங்கை அமைச்சரவை தயக்கம் (November 20, 2009)">அதிபர் தேர்தலை அறிவிப்பதில்  இலங்கை அமைச்சரவை தயக்கம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1479" title="வரும் 1ம் திகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திரமாம்: பசில் ராஜபக்சே (November 21, 2009)">வரும் 1ம் திகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திரமாம்: பசில் ராஜபக்சே</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12245" title="இலங்கை விடயத்தில் ஐ.நா.சபை இரட்டை வேடம் (July 7, 2010)">இலங்கை விடயத்தில் ஐ.நா.சபை இரட்டை வேடம்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14556" title="இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக கட்சிகள் இலங்கை மீது புகார் (August 26, 2010)">இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக கட்சிகள் இலங்கை மீது புகார்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1818" title="இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன் (November 25, 2009)">இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14884</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லண்டன் ஹரே கிருஷ்ணா கோவிலில் வெடிப்பு சம்பவம்: கூரை எரிந்து நாசம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14880</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14880#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:23:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14880</guid>
		<description><![CDATA[லண்டன் ஹரே கிருஷ்ணா கோவிலில் வெடிப்பு சம்பவம்: கூரை எரிந்து நாசம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14881" title="tembil" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/tembil-100x80.jpg" alt="" width="100" height="80" />பிரிட்டன், லெசிஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதுடன் கோவிலின் கூரைப்பகுதி பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">லெசிஸ்டர் பகுதியி<span id="more-14880"></span>ன் தொரொஸ்பை வீதியில் அமைந்துள்ள மேற்படி கோவிலிலேயே நேற்று மாலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதாகவும், எனினும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் லெசிஸ்டர் ஷயர் தீயணைப்பு பிரிவினர் உறுதிப்படுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கோவிலில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் ஒன்றே வெடித்து தீ பரவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. கட்டிடத்தை சூழ தீ பரவி எரிந்ததாகவும் நேற்று இரவுவரை கட்டிடம் அமைந்துள்ள பிரதேசம் புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சம்பவம் இடம்பெற்றபோது கோவிலில் இருந்த பக்தர்கள் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லையென ஆலய தர்மகர்த்தா குறிப்பிட்டுள்ளார். ஆயினும் சிலர் காயமுற்ற நிலையில் நடந்துசென்றதை தான் கண்டதாக பி.பி.சி. நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை சம்பவத்தை நேரில் கண்ட பற்றிமா சாட்றி என்பவர் கூறுகையில்,</p>
<p style="text-align: justify;">நாம் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது பாரிய சத்தம் ஒன்று கேட்டது. அது குண்டு வெடிப்பாக இருக்கலாமென நினைத்து நாம் தூர ஓடினோம். சில விநாடிகளில் மற்றுமொரு சத்தம் கேட்டது. குறித்த வீதிப் பகுதியே அதிர்ந்தது. அப்போது தீச்சுவாலையுடன் புகை கிளம்பியதை நான் அவதானித்தேன். அங்கு என்ன நடந்தது என்பதை எம்மால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லை. அங்கு நின்றவர்கள் அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனோம். கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்ததை எம்மால் காணக் கூடியதாக இருந்தது. குழந்தைகள், சிறுவர்கள் கதறி அழுதனர். அந்த சூழல் மிகவும் பயங்கரமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d" title="லண்டன்" >லண்டன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9635" title="நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான லண்டன் தோ்தல் முடிவுகள் (May 4, 2010)">நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான லண்டன் தோ்தல் முடிவுகள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6786" title="லண்டன் உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு (February 27, 2010)">லண்டன் உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14880</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ரணில் தலைவராக இருக்கும் வரைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது: ஐ.தே.க. எம்.பி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14877</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14877#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:20:33 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐ.தே.க]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14877</guid>
		<description><![CDATA[ரணில் தலைவராக இருக்கும் வரைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது: ஐ.தே.க. எம்.பி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-6860" title="RANIL" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/RANIL.jpg" alt="" width="100" height="80" />ஜனநாயக சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகதையே கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன கட்சியின் ஆயுள் காலத் தலைவராக பதவிவகிக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கும் அவர் எவ்வாறு ஜனநாயகம் பற்றிப் பேச முடியும் எனவும் கேள்வி எழுப்பினா<span id="more-14877"></span>ர்.</p>
<p style="text-align: justify;">நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே லக்ஷ்மன் செனவிரட்ன மேற்கண்டவாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.</p>
<p style="text-align: justify;">இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் துளியளவும் ஜனநாயகம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியைப் பாதுகாப்பதற்காக நாம் பல்வேறுபட்ட பகீரதப் பிரயத்தனங்களையும் எடுத்துவருகின்றோம். ஆனால், ரணில் சர்வாதிகாரப் போக்கு கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது என லக்ஷ்மன் செனவிரட்ன குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த போது கூறியதாவது;</p>
<p style="text-align: justify;">ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவராக இருக்கும்வரை அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது. அன்று ஐ.தே.க. உண்மையான ஜனநாயக அரசியல் பேரணியாகிக் காணப்பட்டது. இன்று ரணிலின் தலைமையில் ஐ.தே.க. ஒரு சர்வாதிகார அரசியல் அணியாக மாறிக் கொண்டிருக்கின்றது. பிரதிநிதிகளின் குரல் மக்களின் குரல் அங்கு எடுபடுவதாகத் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">சாகும்வரையில் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் தயாராக இல்லை என்பது இன்று நன்கு புலப்பட்டுள்ளது. தனது தலைமைப்பதவியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார்.</p>
<p style="text-align: justify;">ஜனநாயக உரிமை,அடிப்படைச்சுதந்திரம் பற்றியும் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு தார்மீக உரிமை கிடையாது. கட்சித் தலைமைத்துவத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக நாம் இதுவரையில் எதுவுமே பகிரங்கமாகக்கூற முற்படவில்லை. கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டோம். சொன்னவை பற்றி நாம் வெட்கப்படுகின்றோம். அவருக்கு அவை ஒரு பொருட்டாகக்கூடத் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">இப்போது கட்சியின் வருடாந்த மாநாட்டைக்கூட நடத்தாமல் சர்வாதிகாரப்போக்கில் கட்சியை வழி நடத்த ரணில் முயற்சிக்கின்றார்.தனக்குப்பிறகு கட்சிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கில் அவர் நடந்து கொள்கின்றார். தவறான முடிவுகளை எடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க மகா சூரராகக் காணப்படுகின்றார்.</p>
<p style="text-align: justify;">ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்காலம் இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. பலம்பொருந்திய ஜனநாயக அரசியல் அணி இன்று செல்வாக்கிழந்து நடைபாதைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.நாளை என்ன நடக்கப்போகின்றதோ என்று கட்சி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் எனவும் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%90-%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95" title="ஐ.தே.க" >ஐ.தே.க</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1542" title="கலவரத்தில் முடிந்த ஐ.தே.கவின் கூட்டம் (November 22, 2009)">கலவரத்தில் முடிந்த ஐ.தே.கவின் கூட்டம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3526" title="ஐ.தே.க. எம்.பிக்கள் இருவர் கட்சி தாவினர்! (December 16, 2009)">ஐ.தே.க. எம்.பிக்கள் இருவர் கட்சி தாவினர்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3878" title="அரசு கொள்வனவு செய்த கப்பலை புலிகளுடையது என்கிறது: ஐ.தே.க (December 22, 2009)">அரசு கொள்வனவு செய்த கப்பலை புலிகளுடையது என்கிறது: ஐ.தே.க</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8302" title="யாழ் மற்றும் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரங்கள் (April 9, 2010)">யாழ் மற்றும் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரங்கள்</a> (5)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4218" title="முகமூடி அணிந்த குழுவினரால் கடத்தப்பட்ட ஐ.தே.க. அமைப்பாளர் காவல்துறையினரின் தடுப்புக்காவலில்! (December 30, 2009)">முகமூடி அணிந்த குழுவினரால் கடத்தப்பட்ட ஐ.தே.க. அமைப்பாளர் காவல்துறையினரின் தடுப்புக்காவலில்!</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14877</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி என்கிறார் மகிந்த</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14871</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14871#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 12:31:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மகிந்த.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14871</guid>
		<description><![CDATA[சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி என்கிறார் மகிந்த]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-10884" title="mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/mahinda1-100x80.jpg" alt="" width="100" height="80" />அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அலரி மாளிகையி<span id="more-14871"></span>ல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.</p>
<p style="text-align: justify;"><strong>அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது:</strong></p>
<p style="text-align: justify;">எமது கட்சி வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை அமைக்கவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ இல்லை.</p>
<p style="text-align: justify;">நாம் சூழ்ச்சிகளில் ஈடுபடாவிட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக எப்போதும் சூழ்ச்சிகள் இருந்தே வந்துள்ளன. 1962 ஆம் ஆண்டு இராணுவ சூழ்ச்சி, 1964 ஆம் ஆண்டு பத்திரிகை சட்டமூலம் போன்ற சூழ்ச்சிகளுக்கு சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இன்றும் அந்த சூழ்ச்சி தொடர்ச்சியாக எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">அன்று பத்திரிகைச் சட்டமூலம் கொண்டு வந்தபோது அதற்கு தொடர்புபட்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சியில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் இன்றும் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இது பற்றி நாம் புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். இதேநேரம் தற்போதிருக்கும் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்றார்கள். எனினும் இன்று அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆசியாவிலேயே பலம்வாய்ந்த அரசாக விளங்க இந்த கட்சிக்கு முடிந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தற்போதிருக்கும் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது போகுமென அரசியலமைப்பு நிபுணர்கள் அன்று கருதினர். எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று கட்சியை பலமிக்கதாக கட்டியெழுப்ப எமக்கு முடிந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இது சூரியனும் நிலவும் இருக்கும் வரையில் இருக்க வேண்டிய அரசியலமைப்பல்ல. நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அது மாறவேண்டும். அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றுக்காக மாற வேண்டும். மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இதற்கமைய இவை மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நாம் இன்று அரசியலமைப்பொன்றை மக்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது மக்கள் மய அரசியலமைப்பு. எதிர்வரும் 8 ஆம் திகதி இதை (பாராளுமன்றத்தில்) நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்திக்காகவுமே இந்த அரசியலமைப்பு (திருத்தம்) கொண்டு வரப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">6 வருட பதவிக்காலத்தை 12 வருடங்களாக்கிக் கொள்வதற்காக இதை நிறைவேற்றவில்லை. ஏனெனில் இப்படித்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த அரசியலமைப்புத் திருத்தமானது எனது பதவிக் காலத்தை நீடிக்கும் ஒன்றல்ல. அது தவறு. இதன் மூலம் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமே வழங்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் பற்றி அரசியலமைப்பின் 92 ஆவது சரத்தில் குறிப்பிடப்படுகிறது. மனநோயாளி, இலஞ்சம் பெற்றோர், வங்குரோத்துக்காரர்கள் போன்றோர் தகுதியற்றவர்கள் என இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இருமுறை மக்களின் வாக்குகளால் தெரிவான ஒருவரும் இவர்களில் ஒருவராக இருக்க முடியாது. எனவே மக்கள் இதில் தீர்மானிப்பர். அவர்களுக்கு தேவையென்றால் தெரிவு செய்வார்கள். அதற்கு முன்னதாக யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதைக் கட்சியே தீர்மானிக்கும்.</p>
<p style="text-align: justify;">பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அம்மூவரும் பிரதிநிதித்துவப்படுத்தாத தமிழ் அல்லது முஸ்லிம் இன பிரதிநிதிகள் இருவர் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்ற பேரவை கொண்டு வரப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">பாராளுமன்றம் உயரிய ஸ்தானம் என்பதாலேயே மக்கள் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைத் தருகின்றனர். எனவே, இங்கு கூறப்படும் ஆபத்து எதுவும் இதில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு தனித்து அரசியல் செய்ய முடியாது.</p>
<p style="text-align: justify;">இடதுசாரி அரசியல் கட்சிகள் எப்போதும் எம்முடன் இருந்தன. எமது அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டு அந்தந்த கட்சிகளினதும் அடையாளங்களையும் பாதுகாத்து எமது கட்சியினுள் ஒன்றுபட்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்ற நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நாம் அனைத்துக் கட்சிகளுடனும் சகவாழ்வுடன் செயலாற்ற முடிந்திருக்க வேண்டும். நாம் இன்று இலங்கையில் பலமிக்க அரசியல் கட்சி என்பதற்காக சிறு அரசியல் கட்சிகளை அற்பமாகக் கருதி நாம் ஒருபோதும் செயற்பட முடியாது என்றார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4" title="மகிந்த." >மகிந்த.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5468" title="சிறிலங்காவில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் சிறுபான்மை மக்களுக்கு விரைவில் தீர்வு: மகிந்த தெரிவிப்பு (January 29, 2010)">சிறிலங்காவில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் சிறுபான்மை மக்களுக்கு விரைவில் தீர்வு: மகிந்த தெரிவிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5202" title="மகிந்தவுக்குத் துணைபோகும் துணைவேந்தர்கள் &#8211; மாணவர் அமைப்புக்கள் கண்டனம் (January 23, 2010)">மகிந்தவுக்குத் துணைபோகும் துணைவேந்தர்கள் &#8211; மாணவர் அமைப்புக்கள் கண்டனம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5355" title="சிங்கள தேசத்தில் வெற்றிநடை போடுகிறார் மகிந்த!! தமிழர் தாயகத்தில் பொன்சேகாவுக்கே அமோக வாக்களிப்பு!! (January 27, 2010)">சிங்கள தேசத்தில் வெற்றிநடை போடுகிறார் மகிந்த!! தமிழர் தாயகத்தில் பொன்சேகாவுக்கே அமோக வாக்களிப்பு!!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4270" title="ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம்: புத்தாண்டு செய்தியில் மகிந்த தெரிவிப்பு (January 1, 2010)">ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம்: புத்தாண்டு செய்தியில் மகிந்த தெரிவிப்பு</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6551" title="தேர்தலுக்கு பின்னர் அரசமைப்பு திருத்தம்: அமைச்சர்கள் 40 பேர் மட்டுமே: இது மகிந்தவின் புதிய திட்டமாம்! (February 22, 2010)">தேர்தலுக்கு பின்னர் அரசமைப்பு திருத்தம்: அமைச்சர்கள் 40 பேர் மட்டுமே: இது மகிந்தவின் புதிய திட்டமாம்!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14871</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்று லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் நினைவு நாள் (03-09-2010)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14863</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14863#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 12:25:55 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[லெப்.கேணல் இரும்பொறை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14863</guid>
		<description><![CDATA[இன்று லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் நினைவு நாள் (03-09-2010)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14864" title="maaveerar" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/maaveerar.jpg" alt="" width="100" height="80" />03.09.2008 இன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள்</p>
<p style="text-align: justify;">03.09.2000 இன்று யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எ<span id="more-14863"></span>திரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட போராளிகளின் 10ம் ஆண்டு நினைவு நாள்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-large wp-image-14865" title="Lt Col Irumporai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Lt-Col-Irumporai-723x1024.jpg" alt="" width="723" height="1024" /><img class="aligncenter size-large wp-image-14866" title="Lt Col Santhan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/Lt-Col-Santhan-723x1024.jpg" alt="" width="723" height="1024" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%88" title="லெப்.கேணல் இரும்பொறை" >லெப்.கேணல் இரும்பொறை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14863</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகாவின் புதல்விகள் இந்து ஆலயத்தில் தேங்காய் அடித்து வழிபாடு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14859</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14859#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 12:09:18 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொன்சேகா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14859</guid>
		<description><![CDATA[பொன்சேகாவின் புதல்விகள் இந்து ஆலயத்தில் தேங்காய் அடித்து வழிபாடு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14860" title="fon" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/fon-100x80.jpg" alt="" width="100" height="80" />தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் தந்தையாராகிய சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி<span id="more-14859"></span>யும், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில்  உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.</p>
<p style="text-align: justify;">இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">சரத் பொன்சேகாவின் புதல்விகள் இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be" title="பொன்சேகா" >பொன்சேகா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4853" title="பொன்சேகாவுடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யவே இல்லை என்கிறது கூட்டமைப்பு (January 15, 2010)">பொன்சேகாவுடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யவே இல்லை என்கிறது கூட்டமைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1394" title="பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்த ரணில் போடும் 4 நிபந்தனைகள் (November 20, 2009)">பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்த ரணில் போடும் 4 நிபந்தனைகள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6689" title="துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்து பொன்சேகா ஜேவிபியுடன் இணைவு! (February 25, 2010)">துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்து பொன்சேகா ஜேவிபியுடன் இணைவு!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3419" title="அரச ஊடகங்களுக்கு எதிராக பொன்சேகா உயர்நீதிமன்றில் மனு (December 15, 2009)">அரச ஊடகங்களுக்கு எதிராக பொன்சேகா உயர்நீதிமன்றில் மனு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4277" title="யாழ்பாணத்தில் பொன்சேகா குழுவினர் பரப்புரை (படங்கள் இணபப்பு) (January 2, 2010)">யாழ்பாணத்தில் பொன்சேகா குழுவினர் பரப்புரை (படங்கள் இணபப்பு)</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14859</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் கூட்டமைப்பு அரங்கம் தொடர்பில் நிருபமா கேள்வி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14856</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14856#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 11:45:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் கூட்டமைப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14856</guid>
		<description><![CDATA[தமிழ் கூட்டமைப்பு அரங்கம் தொடர்பில் நிருபமா கேள்வி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14808" title="niru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/niru-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. அப்படியிருந்தும் இருதரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கைக்கான ப<span id="more-14856"></span>யணத்தினை மேற்கொண்டுள்ள நிருபமாவை நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">நேற்று முற்பகல் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் நிருபமா ராவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போதே நிருபமா இந்தக் கேள்வியை எழுப்பியதாக அரங்கத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">வடக்கு &#8211; கிழக்கில் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நிருபமா ராவிடம் முன்வைத்திருந்தனர். அதே கோரிக்கைகளை நேற்று தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளும் முன்வைத்த போதே நிருபமா இந்தக் கேள்விகளை எழுப்பியதாக அரங்கத்தினர் கூறியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் ஒன்றாக வரமுடியவில்லை. என்று அவர் அரங்க பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81" title="தமிழ் கூட்டமைப்பு" >தமிழ் கூட்டமைப்பு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11011" title="சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணித்த தமிழ் திரையுலகத்துக்கு தமிழ் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு (June 3, 2010)">சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணித்த தமிழ் திரையுலகத்துக்கு தமிழ் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12467" title="ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை (July 11, 2010)">ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை</a> (3)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13377" title="புதிய வாக்காளர் இடாப்பு தயாரிப்பு! குடாநாட்டில் இனச்சுத்திகரிப்புக்கான அடிக்கல்!! நீதிமன்றம் செல்கிறது தமிழ் கூட்டமைப்பு (August 1, 2010)">புதிய வாக்காளர் இடாப்பு தயாரிப்பு! குடாநாட்டில் இனச்சுத்திகரிப்புக்கான அடிக்கல்!! நீதிமன்றம் செல்கிறது தமிழ் கூட்டமைப்பு</a> (7)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5128" title="கடத்தல் முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய தமிழ் கூட்டமைப்பு முக்கியஸ்தர்! (January 21, 2010)">கடத்தல் முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய தமிழ் கூட்டமைப்பு முக்கியஸ்தர்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13468" title="மீள்குடியேற்றத்தை தாமதிப்பதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படாது: ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (August 2, 2010)">மீள்குடியேற்றத்தை தாமதிப்பதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படாது: ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14856</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: மகிந்த</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14852</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14852#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 11:41:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14852</guid>
		<description><![CDATA[விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: மகிந்த]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-6115" title="ranil_mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/ranil_mahinda-100x80.jpg" alt="" width="100" height="80" />எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்<span id="more-14852"></span>கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p style="text-align: justify;">யுத்தத்த்தை முன்னெடுக்க முடியவில்லை எனக்கூறிய எதிர்க்கட்சியினர்,  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதிகளை வழங்கினர்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், அபிவிருத்தி பணிகள் நிறைவடையாது முழுமையான பயனை பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf" title="ஜனாதிபதி." >ஜனாதிபதி.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6935" title="அவசர காலச் சட்டத்தை நீடிக்க கைச்சாத்திட்டார் ஜனாதிபதி (March 4, 2010)">அவசர காலச் சட்டத்தை நீடிக்க கைச்சாத்திட்டார் ஜனாதிபதி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1012" title="இலங்கை ஜனாதிபதி தேர்தல் தள்ளிவைப்பு (November 15, 2009)">இலங்கை ஜனாதிபதி தேர்தல் தள்ளிவைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1449" title="யார் தேர்தலில் வேட்பாளராக குதித்தாலும் அரசு அஞ்சாது (November 21, 2009)">யார் தேர்தலில் வேட்பாளராக குதித்தாலும் அரசு அஞ்சாது</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4725" title="பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்.. (January 12, 2010)">பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்..</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8578" title="வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர் இவர்கள் (April 14, 2010)">வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர் இவர்கள்</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14852</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு கடந்த தமிழீழ அரசவை இம்மாத இறுதியில் கூடுகிறது: முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14849</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14849#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 14:37:04 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14849</guid>
		<description><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசவை இம்மாத இறுதியில் கூடுகிறது: முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-3772" title="uruthirakumar" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/uruthirakumar-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை இம்மாத இறுதிப்பகுதியில் கூடி தமிழ் மக்களின் விடுதலை இலட்சியத்தை முன்னெடுக்ககூடிய காத்திரமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும் அவதூறுகள் தொ<span id="more-14849"></span>டர்பாகவும் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனை அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:</p>
<p style="text-align: justify;">நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப் பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது.</p>
<p style="text-align: justify;">மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது.</p>
<p style="text-align: justify;">அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.</p>
<p style="text-align: justify;">நாம் அமைத்துள்ள வெவ்வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் (convenor) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும்.</p>
<p style="text-align: justify;">நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம்.</p>
<p style="text-align: justify;">இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவுபடுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.</p>
<p style="text-align: justify;">நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம்.</p>
<p style="text-align: justify;">தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.</p>
<p style="text-align: justify;">எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்பூட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும்.</p>
<p style="text-align: justify;">நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.</p>
<p style="text-align: justify;">அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம்.</p>
<p style="text-align: justify;">தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன.</p>
<p style="text-align: justify;">கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுபூசும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது. மக்களை ஏமாற்றுவதற்காக வெவ்வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும்.</p>
<p style="text-align: justify;">நான் முன்னர் கூறியபடி எமது தற்போதைய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை (transparency) என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.</p>
<p style="text-align: justify;">செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.</p>
<p style="text-align: justify;"><strong>நன்றி</strong></p>
<p style="text-align: justify;"><strong>விசுவநாதன் ருத்ரகுமாரன்</strong></p>
<p style="text-align: justify;"><strong>இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்.</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4" title="நாடு கடந்த தமிழீழ" >நாடு கடந்த தமிழீழ</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10001" title="நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்குமாறு கொழும்பில் இராஜதந்திரிகளிடம் மகிந்த விசேட வேண்டுகோள் (May 10, 2010)">நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்குமாறு கொழும்பில் இராஜதந்திரிகளிடம் மகிந்த விசேட வேண்டுகோள்</a> (4)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9588" title="நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தல்: நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமோக ஆதரவு (May 3, 2010)">நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தல்: நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமோக ஆதரவு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9285" title="சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு 19 வேட்பாளர்கள் போட்டி (April 28, 2010)">சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு 19 வேட்பாளர்கள் போட்டி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9597" title="நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தல்: நோர்வே ஈழத்தமிழர் அவையின் நிலைப்பாட்டிற்கு வெற்றி (May 3, 2010)">நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தல்: நோர்வே ஈழத்தமிழர் அவையின் நிலைப்பாட்டிற்கு வெற்றி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9675" title="நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கனடா தோ்தல் முடிவுகள் (May 4, 2010)">நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கனடா தோ்தல் முடிவுகள்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14849</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்&#8230;&#8230;&#8230;உறவுகளே!!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14845</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14845#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 14:33:45 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[ஈழக் கவிதைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[செஞ்சோலை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14845</guid>
		<description><![CDATA[செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்.........உறவுகளே!! ]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/chencholai.jpg" alt="" title="chencholai" width="100" height="80" class="alignleft size-full wp-image-14846" />செஞ்சோலை தெருவெல்லாம்<br />
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;</p>
<p>தமிழ் படித்த சிறுமியின் குரல்<br />
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;</p>
<p>பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்<br />
மரண வாசலில் வீ<span id="more-14845"></span>ழ்ந்து துடிக்கிறதே;</p>
<p>மறக்க இயலா மரணச் சூட்டின் -<br />
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் -<br />
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் -<br />
முளைத்தெழு உறவுகளே;</p>
<p>அடிப்பவனை மன்னிக்கலாம்<br />
அவனே திருப்பி அடிபானெனில் &#8211; திருப்பி அடித்தவனை<br />
திருப்பி அடிக்கும் வரை<br />
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே<br />
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;</p>
<p>செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்<br />
சுப்பனும் குப்பனுமல்ல;<br />
எம் விடுதலையை &#8216;உயிர்விடும் வரை காத்த வீரர்கள் -<br />
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்<br />
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;</p>
<p>தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்<br />
தாலி பறித்தவன் சிங்களவன் -<br />
அவன் பொட்டில் அரைந்து சொல் &#8211; எம்<br />
விடுதலை எத்தனை வலிதென்று; எம்<br />
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!</p>
<p>இணைந்து வாழும் வேடம் பூண்டு<br />
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,</p>
<p>தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை<br />
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,</p>
<p>இரண்டாம் தர இடம் தந்தே எமை<br />
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை<br />
ஆணவத்தை -<br />
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;</p>
<p>உயிர் பறிக்கும் கழுகுகளுக்கு<br />
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?</p>
<p>உயிர் பறித்து<br />
ஆடை களைந்து<br />
நிர்வாணம் ரசித்து<br />
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?</p>
<p>உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்<br />
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு &#8211; நாம்<br />
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???</p>
<p>மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை<br />
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய<br />
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் -<br />
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்<br />
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென<br />
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி<br />
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!</p>
<p>அன்று அடங்கும்<br />
எம் வீரர்களின் -<br />
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!</p>
<p>அதுவரை ஓயாதீர் உறவுகளே&#8230;&#8230;&#8230;..</p>
<p><strong>வித்யாசாகர்</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88" title="செஞ்சோலை" >செஞ்சோலை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14018" title="செஞ்சோலை வளாக படுகொலை நாள் இன்று 14-08-2006 (பாடல்கள் இணைப்பு) (August 14, 2010)">செஞ்சோலை வளாக படுகொலை நாள் இன்று 14-08-2006 (பாடல்கள் இணைப்பு)</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14036" title="பிரித்தானியாவில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வு (August 15, 2010)">பிரித்தானியாவில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14087" title="சுவிசில் நடைபெற்ற செஞ்சோலை 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு (August 16, 2010)">சுவிசில் நடைபெற்ற செஞ்சோலை 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14044" title="பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு (August 15, 2010)">பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13980" title="இன்று லண்டனில் செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு (August 13, 2010)">இன்று லண்டனில் செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14845</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14842</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14842#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 14:30:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[வலம்புரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14842</guid>
		<description><![CDATA[நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14808" title="niru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/niru-100x80.jpg" alt="" width="100" height="80" />யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்<span id="more-14842"></span>துள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த முறை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் யாழப்பாணம் வந்தபோது டி.ஆர் பாலுவை சனீஸ்வரன் எனக்குறிப்பிட்ட வலம்புரி நாளேடு நிருபமா ராவின் யாழ் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட தனது பதிப்பின் ஆசிரியர் தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இச்சந்திப்பில் சபையோர் கருத்து இடம் பெற்ற வேளை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள்</p>
<p style="text-align: justify;">“இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியா எங்களை கைவிட்டு விட்டது. இந்தியா நினைத்திருந்தால் எங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். இப்போதும் எங்கள் பிரச்சினைக்கு இந்தியாவே தீர்வுகாண வேண்டும்.” என்ற கருத்தை முன் வைத்தபோது அவரது கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பது போன்ற பாவனையுடனும் நிருபமா ராவ் ஏற்றுக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது எனவும், நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன்நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதைப் பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த தடவை இலங்கையின் நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், டி.ஆர் பாலு கடும்போக்காளராக நடந்துகொண்டதாகவும் அவர் சீறிச் சினந்ததாகவும் பேராசிரியர்கள் முதற்டகொண்டு அவர் எவரையும் மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு அவரை சனீஸ்வரன் என குறிப்பிட்டு ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.</p>
<p style="text-align: justify;">இது இந்திய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டதால் இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் நிருபமா ராவின் யாழ் விஜயம் இந்திய நிலைப்பாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf" title="வலம்புரி" >வலம்புரி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5806" title="சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா? வலம்புரி ஆசிரியர் தலையங்கம் (February 4, 2010)">சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா? வலம்புரி ஆசிரியர் தலையங்கம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9530" title="யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க மடல்: வலம்புரி (May 2, 2010)">யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க மடல்: வலம்புரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9095" title="சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்: வலம்புரி (April 24, 2010)">சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்: வலம்புரி</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9213" title="நான் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அத்தியட்சகரானால்…: வலம்புரி (April 27, 2010)">நான் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அத்தியட்சகரானால்…: வலம்புரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14741" title="வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் (August 30, 2010)">வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14842</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14839</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14839#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 14:24:29 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[த.தே]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14839</guid>
		<description><![CDATA[நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-5129" title="tna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/tna-100x80.jpg" alt="" width="100" height="80" />02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பா.உ. சிவசக்தி ஆனந்தன்<span id="more-14839"></span> வெளியிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">வாக்களித்த மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மறுக்கப்படுவதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஓமந்தை, சேமமடு மக்கள் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இப்பொழுதுதான் தமது கிராமங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நடமாடும் சேவையின்பொழுது நான் இவைகளை நேரில் சென்று உரிய அதிகாரிகளிடம் விளக்கி அம்மகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த வேளையில் எம்மை அழைக்காதது எமக்கு வருத்தமளிப்பதுடன், எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்</p>
<p style="text-align: justify;">என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87" title="த.தே" >த.தே</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14839</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிருபமராவ் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14835</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14835#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 14:20:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14835</guid>
		<description><![CDATA[நிருபமராவ் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14836" title="mahinda_nirubama" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/mahinda_nirubama.jpg" alt="" width="100" height="80" />இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும், அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் <span id="more-14835"></span>இலங்கை சார்பிலும் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:</p>
<p style="text-align: justify;">இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் துரிதமாக அதிகரித்துவருகிறது இந்தியாவின் பல முன்னணி தொழில் முயற்சியாளர்களும் கைத்தொழிலதிபர்களும் வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காண்பித்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள், வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியன குறித்து ராவ் திருப்தி தெவித்தார். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பல இடங்களுக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்த ராவ், அவ்விடங்களில் நிலைமை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு ஆகியன உட்பட இந்தியா உதவியளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை இந்தியா விரைவில் செய்துகொடுக்கும் என ராவ் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களுக்கும் அப்பகுதியில் வாழும் ஏனையோருக்கும் தங்கள் சொந்த திட்டங்கள் என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்தத் திட்டங்களில், குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களில் அவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சிநேகபூர்வ உறவுகளையும் அயலக பந்தங்களையும் ஜனாதிபதியும் ராவும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோஹன் சிங்கின் நல்லாசிகளை ராவ் ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொண்டார்.</p>
<p style="text-align: justify;">இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேச் செயலாளர் டாக்டர் பி.பீ. ஜயசுந்தர, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்தியத் தூதுவர் அஷோக் கே காந்தா, கூட்டுச் செயலாளர் மூர்த்தி, பிரதித் தூதுவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4" title="மஹிந்த" >மஹிந்த</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3263" title="மஹிந்த அரசின் சர்வாதிகாரத்தை நீக்கி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க நல்ல தருணம் (December 13, 2009)">மஹிந்த அரசின் சர்வாதிகாரத்தை நீக்கி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க நல்ல தருணம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2652" title="மஹிந்த-சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை (December 4, 2009)">மஹிந்த-சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5165" title="தேர்தலில் தோற்றாலும் இராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க மஹிந்த தரப்புத் திட்டமாம் (January 22, 2010)">தேர்தலில் தோற்றாலும் இராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க மஹிந்த தரப்புத் திட்டமாம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1768" title="தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றதும் தமிழருக்கு நல்ல தீர்வை முன்வைப்பார் (November 25, 2009)">தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றதும் தமிழருக்கு நல்ல தீர்வை முன்வைப்பார்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3956" title="மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த இரு வாரங்களில் வெளியாகும் (December 24, 2009)">மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த இரு வாரங்களில் வெளியாகும்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14835</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்: சிவசக்தி ஆனந்தன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14829</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14829#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 20:59:16 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிவசக்தி ஆனந்தன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14829</guid>
		<description><![CDATA[வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்: சிவசக்தி ஆனந்தன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14830" title="anandan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/anandan-100x80.jpg" alt="" width="100" height="80" />வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அக்கடிதத்தில் தெரி<span id="more-14829"></span>விக்கப்பட்டுள்ளதாவது:</p>
<p style="text-align: justify;">வடபகுதியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் கீழ்வரும் பிரச்சினைகளைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.</p>
<p style="text-align: justify;">1. மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பாக</p>
<p style="text-align: justify;">தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மீள்குடியேறிய மக்களின் குடியிருப்புக்களை மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக நிரந்தர வீடுகளை அமைத்து அல்லது கொட்டைகைகளைப் பலமாக்கிக் கட்டித்தர ஆவன செய்யவும்.</p>
<p style="text-align: justify;">2. நன்னீர் மீன்பிடிப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்</p>
<p style="text-align: justify;">மீள்குடியேற்றம் இடம்பெறும் கிராமத்தின் குளங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகளைப் பெற்று மீன் பிடித்து வருவதால் மீள்குடியேறிய மக்களின் அன்றாட ஜீவனோபாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் ஏ-9 வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள மாளிகை, சேமமடு முதலான குளங்களில் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுவோர் குளத்தில் வளர்ந்துவரும் சிறிய மற்றும் பெரிய மீன்களை மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி பெருமளவில் அள்ளிச் செல்கின்றனர். அத்துடன் அங்கு மீள்குடியோர் சிறியளவில் தமது உணவுத்தேவைகளுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இங்கு கடமையில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர் மீள்குடியேறியோர் மீது மேற்கொள்ளும் இத்தகைய தடையை நீக்கவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஏதுவான நடவடிக்கையினை மேற்கொள்ளவும்.</p>
<p style="text-align: justify;">3. வானகங்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திர நடைமுறையை தளர்த்துங்கள்</p>
<p style="text-align: justify;">அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குக்கூட விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பமைச்சு அனுமதிப்பத்திர முறையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியோர் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அரிசி, சோடா மற்றும் சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உட்பட தொலைத்தொடர்பு சேவை மற்றும் அரச, அரசார்பற்ற தனியார் வாகனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்நுழைவு அனுமதிப் பத்திரங்களைப் பாதுகாப்பமைச்சில் பெறவேண்டிய நடைமுறையினை இரத்துச் செய்து பாதிக்கப்பட்ட மீள்குடியேறியோர் மற்றும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்திடுக.</p>
<p style="text-align: justify;">4. துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் (Shot Gun License) வழங்குதல்</p>
<p style="text-align: justify;">மேட்டுநில காணிகள் மற்றும் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மீள்குடியோர் யானை, பன்றி போன்ற காட்டு மிருகங்களால் பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டு உயிர் ஆபத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இவர்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே 1983களின் முன்னர் வழங்கிய துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள் மீளப் பெறப்பட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும்.</p>
<p style="text-align: justify;">5. பாதைகள் துப்புரவாக்குதல் மற்றும் செப்பனிடல்</p>
<p style="text-align: justify;">மீள்குடியேற்றக் கிராமங்களிற்குச் செல்லும் பாதைகளில் மண்டியுள்ள பற்றைக்காடுகளை அழித்து இப்பாதைகளை செப்பனிட டோசர் போன்ற கனரக வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துதவவும்.</p>
<p style="text-align: justify;">வன்னி மாவட்டக் கச்சேரிகளில் இவ்வாறான பணிகளுக்குப் போதுமான நிதிவளம் இன்மையால் அவற்றினை வழங்க முன்னுரிமை வழங்கவும்.</p>
<p style="text-align: justify;">மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் மேற்குறிப்பிட்டுள்ள அத்தியாவசிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d" title="சிவசக்தி ஆனந்தன்" >சிவசக்தி ஆனந்தன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3191" title="சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு (December 11, 2009)">சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12315" title="பெளத்தத்தின் பற்றாளர்கள் சொந்த மக்கள் மீது தாக்கிவிட்டு வெற்றிவிழாக் கொண்டாடுகின்றார்கள் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் (July 8, 2010)">பெளத்தத்தின் பற்றாளர்கள் சொந்த மக்கள் மீது தாக்கிவிட்டு வெற்றிவிழாக் கொண்டாடுகின்றார்கள் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9380" title="வன்னிப்பயங்கரங்களை தடுத்துநிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை (April 29, 2010)">வன்னிப்பயங்கரங்களை தடுத்துநிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12105" title="இறுதிப் போரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்! (July 2, 2010)">இறுதிப் போரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8160" title="தமிழர் அடையாள அழிப்பு! றிசாட் பதியுதினின் மிரட்டல் சம்பவங்கள்!!: சிவசக்தி ஆனந்தன் (April 5, 2010)">தமிழர் அடையாள அழிப்பு! றிசாட் பதியுதினின் மிரட்டல் சம்பவங்கள்!!: சிவசக்தி ஆனந்தன்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14829</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14825</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14825#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 20:45:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிருபமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14825</guid>
		<description><![CDATA[கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14826" title="niruma" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/niruma-100x80.jpg" alt="" width="100" height="80" />கடந்தகாலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூ<span id="more-14825"></span>றினார்.</p>
<p style="text-align: justify;">நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;</p>
<p style="text-align: justify;">கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள்.</p>
<p style="text-align: justify;">கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை. இதேவேளை உங்களது நலன்புரி நடவடிக்கைகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் உணர வேண்டும். கடந்த காலங்கள் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை. உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்திக் கேட்கிறேன்.</p>
<p style="text-align: justify;">இந்தியா உங்களது நெருக்கமான அயல்நாடு, நட்பு நாடு, கடந்த காலங்களில் பல விடயங்கள் நடந்திருக்கலாம். அதனை மறந்து எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் எவையும் உங்களது சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவப்போவதில்லையெனத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இது இவ்வாறிருக்க சொந்த இடங்களில் மீளக் குடியேற முடியாமல் கவலையும் விரக்தியும் அடைந்துள்ள, வன்னியில் ஏ9 வீதியை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆறுதலளித்தள்ளதுடன், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற, வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதே தனது வருகையின் முக்கியமான நோக்கம் என்றும் நிருபமா கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை அவதானிக்கவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராயவுமே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.</p>
<p style="text-align: justify;">யுத்த நடவடிக்கைகள் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் அமைதியுடன் வாழ வேண்டுமென்பதே எமது விருப்பமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">வவுனியாவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதேநேரம் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் நிருபமா ராவ் கலந்துகொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாயக்கிழமை காலை நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தி, உதவித் தூதுவர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சார்ள்ஸ், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி கமல் குணவர்தன உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">அதேநேரம், கிளிநொச்சி மாவட்டம் திருமுருகண்டி, சாந்தபுரம், இந்துபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 20 பிரதிநிதிகளும் இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர். திருமுருகண்டி, சாந்தபுரம், இந்துபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இக் காணிகளுக்குரியவர்களுக்கு வேறிடங்களில் காணிகள் தரப்பட்டு குடியமர்த்தப்பட வசதிகள் வழங்கப்படுமென்று கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்பிரதேச மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்திய வெளிவிகாரச் செயலாளர் நிருபமா ராவிடம் மகஜரொன்றையும் நேற்றைய சந்திப்பின் போது கையளித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அதேநேரம், குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சார்பில் அங்கு கருத்து வெளியிட்ட சக்திவேல் என்பவர் இந்திய பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது; சுமார் 4050 வருடங்களாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசித்து வரும் எம்மை வேறிடங்களுக்கு சென்று குடியேறுமாறு படையினரால் நிர்ப்பந்திக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.</p>
<p style="text-align: justify;">எமது காணிகளில் பனை,தென்னை உட்பட பயன்தரும் வளங்கள் பலவுள்ளன. நாம் வாழ்ந்த பூமியை விட்டு இடம்பெயர எம்மால் முடியாது. எமது சொந்த வாழ்விடத்தில் மீளக்குடியேற அனுமதிக்க இந்திய அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்த விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவதானிக்கவும் அதற்கான உதவிகளை வழங்குவது தொடர்பாகவுமே இலங்கைக்கு வந்துள்ளேன்.</p>
<p style="text-align: justify;">என்னிடம் சுட்டிக் காட்டிய மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதற்கான அனைத்து உதவிகள் ஒத்துழைப்புகளையும் இந்திய அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாமல் இருந்தபோதும் விசேடமாக இச் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be" title="நிருபமா" >நிருபமா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7095" title="முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு (March 9, 2010)">முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14719" title="நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள் (August 30, 2010)">நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7073" title="தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு (March 8, 2010)">தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14767" title="வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார் (August 31, 2010)">வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6938" title="இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார் (March 4, 2010)">இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14825</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14822</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14822#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 20:33:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[ஈழக் கவிதைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14822</guid>
		<description><![CDATA[சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman11-100x80.jpg" alt="" title="seeman1" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-14532" />இளமை கனவுகளை<br />
ஈழத்தில் தொலைத்தவரே,</p>
<p>விடுதலையின் எழுச்சிக்கு<br />
எட்டுதிக்கும் பறந்தவரே,</p>
<p>ஈழதேசம் என் நாடென்று<br />
எல்லை தமிழனுக்<span id="more-14822"></span>கும் சொன்னவரே,</p>
<p>எம்மின மக்களுக்காய்<br />
தன்னலம் துறந்தவரே,</p>
<p>அண்ணன் தம்பி நீயென்று<br />
என் சனத்தொட வாழ்பவரே,</p>
<p>லட்சியம் ஒன்றென்று<br />
சத்தியம் காத்தவரே,</p>
<p>கத்தி கத்தி பேசி பேசி<br />
எம் அடையாளம் மீட்டவரே,</p>
<p>சுட்டெரிக்கும் வார்த்தையினால்<br />
எதிரியை சுண்டி; சுண்டி எறிந்தவரே,</p>
<p>எரிக்கும் கனல் பேச்சாலே<br />
எமக்கு சுதந்திர தாகம் கொடுத்தவரே,</p>
<p>பணம் பார்க்கும் திரையில் கூட<br />
பாடம் சொல்லி தந்தவரே,</p>
<p>மொழிக் குற்றம் முதல் குற்றமென<br />
எம் காதுகளில் அறைந்தவரே,</p>
<p>அண்ணன் தம்பி பாசம் ஊட்டி<br />
இளைய பட்டாளம் வலைத்தவரே,</p>
<p>தமிழென்னும் அமுதுக்கு<br />
தவமாய் கிடப்பவரே………</p>
<p>சீமானே….. சீமானே…………</p>
<p>வடுகப் பட்டியிலிருந்து வாட்டிகன் சிட்டி வரை<br />
தமிழர் உள்ளம் நிறைந்த சீமானே -<br />
இளையோர் சொல்லி மகிழும் சீமானே….</p>
<p>உனை சிறைக்கம்பி என்ன செயும் – பார் உன்<br />
நரைமுடிக்குக் கூட பயந்து போகும் சீமானே……….</p>
<p>மண்டைக்கேறிய பயமும்<br />
கட்டிப் போடும் சூழ்ச்சியும் – உனை<br />
ஆயுள் முழுக்க என்ன அடக்கியா போட்டு விடும் சீமானே…..?</p>
<p>அடக்க இயலா எழுச்சியின்<br />
பெருந்……….. ‘தீ’ ………… நீயென அறியாமலா<br />
இருந்துவிடும் சீமானே……?</p>
<p>நீ கிளறிவிட்ட சுதந்திர புரட்சி – இனி நீ<br />
சொல்லாமலும் சுடர் விட்டெழும் சீமானே…….</p>
<p>மேஜை தட்டி தட்டி நீ பேசிய தமிழ்<br />
கையினை தூக்கி தூக்கி மேலே நிறுத்திய உன் தமிழ்<br />
உனை காக்கும் பொருட்டே<br />
விரைவில் ஓடிவரும் சீமானே………………</p>
<p>பொருள் படைத்தவர் அழைத்ததை எல்லாம்<br />
உதறிய உன் மனமும் உண்மையும் உனை<br />
எப்பொழுதுமே காக்கும் சீமானே…………..</p>
<p>எங்கள் இதயம் முழுதும் நீயிருக்க<br />
உனக்கு சின்ன சிறையென்ன<br />
அந்தமானில் கூட வைக்கட்டுமே சீமானே;<br />
அந்த – அந்தம்மான் கூட – உனைபெற்று<br />
தனை திருத்திக் கொள்ளும் சீமானே……..</p>
<p>உன்னோட தமிழ் கேட்டு<br />
அந்நிய மொழியை அறுத்துக் கொண்டதெம்<br />
தமிழ்மக்கள் சீமானே……….</p>
<p>திருத்திக் கொண்ட மொழியின் -<br />
மண்ணின் -<br />
நன்றிக் கடலெனப் பொங்கி – உனை<br />
வெல்லும் பலம் கொள்ளச் செய்யும் சீமானே……</p>
<p>உன் அன்பில், அக்கரையில், வேகத்தில், விவேகத்தில்..<br />
உடைபடும் சிறை – பார் சீமானே………</p>
<p>விரைவில் -<br />
வெற்றி கொள்ளுமுன் லட்சியமென்பேன் – காரணம்<br />
லட்சியத்தில் எனக்கும்; தமிழர்க்கும்; பங்குண்டு சீமானே!!</p>
<p><strong>வித்யாசாகர்</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88" title="சிறை" >சிறை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12669" title="சீமான் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுவார்! (July 18, 2010)">சீமான் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுவார்!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13087" title="ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை (July 27, 2010)">ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14822</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>மகிந்த மீண்டும் ஏமாற்றிவிட்டார்: ஐக்கிய தேசியக்கட்சி புலம்பல</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14817</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14817#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 20:20:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக்கட்சி!]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14817</guid>
		<description><![CDATA[மகிந்த மீண்டும் ஏமாற்றிவிட்டார்: ஐக்கிய தேசியக்கட்சி புலம்பல்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14573" title="thisa" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/thisa-100x80.jpg" alt="" width="100" height="80" />ஜனநாயகத்துக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அறிவித்தது.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி உள்நோ<span id="more-14817"></span>க்கத்துடன் செயற்பட்டு மீண்டுமொருதடவை ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றிவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது:</p>
<p style="text-align: justify;">ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தூதுக்குழுவைச்சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் விதத்தில் அரசியலமைப்புத்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் அதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">இந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்றோம். பலயோசனைகளும் முன்வைக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் இறுதியாக ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடரவேண்டுமென விரும்புவதாகவும் இரண்டுதடவைகள் என்ற அம்சத்தைமாற்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டியிடக்கூடியதாக அரசியலமைப்பை திருத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்ததோடு கட்சியின் முடிவுக்கு எதிராக தம்மால் செயற்பட முடியாதெனவும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">உண்மையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியை மற்றொரு தடவை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">2/3 பெரும்பான்மையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவிதத்தில் எதிரணியிலிருந்து சிலரை எடுக்கும் முயற்சியையே அவர் மேற்கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஜனநாயக அரசியல் கலாசாரத்துக்கு முரண்பட்ட விதத்தில் எதிரணிக் கட்சிகளை உடைக்கும் கலையை மகிந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.</p>
<p style="text-align: justify;">அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும் இந்த அரசியலமைப்புத்திருத்த யோசனைக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. ஆளும் தரப்பில் கூட பலர் இந்த அரசியலமைப்புத்திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றன.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதியின் சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூட தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அரசிலுள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆனால் எவராலும் எதுவும் பேச முடியாத நிலை காணப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்களின் ஆணைபெறப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">குறுக்குவழியில் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையை காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். அரசியலமைப்புத்திருத்தத்துக்கு மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த முன்வரவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இந்த அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் தொடர்பாக நாட்டுமக்களுக்கு விளக்கமளிக்கும் பேரணிகளை நாடுபூராவும் முன்னெடுக்க விருக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">எதிரணி அரசியல் சக்திகள், சிவில், சமய அமைப்புகளை உள்ளடக்கிய பொது அமைப்பொன்றை உருவாக்கி ஜனநாயகரீதியில் விவகாரத்தை அணுகி திட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.</p>
<p style="text-align: justify;">அரசின் உத்தேச அரசியலமைப்புத் திருத்த நகலை ஐக்கிய தேசியக்கட்சி சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருகின்றது. இதனை முறியடிக்க சட்டரீதியாக செயற்படும் வழிகளை நாம் ஆராய்ந்துவருகின்றோம். இது குறித்து இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும்’ எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf" title="ஐக்கிய தேசியக்கட்சி!" >ஐக்கிய தேசியக்கட்சி!</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7106" title="அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு (March 9, 2010)">அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4091" title="அரச தரப்பில் இருந்து தாவ பலர் தயார் ஐக்கிய தேசியக்கட்சி! (December 27, 2009)">அரச தரப்பில் இருந்து தாவ பலர் தயார் ஐக்கிய தேசியக்கட்சி!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14817</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14813</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14813#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 12:06:19 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தியாகி திலீபன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14813</guid>
		<description><![CDATA[தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-7846" title="Thileepan_TamilNational" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/03/Thileepan_TamilNational-100x80.jpg" alt="" width="100" height="80" />&#8216;மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்&#8217;  ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப் போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்.</p>
<p style="text-align: justify;">தற்கொலை என்பது <span id="more-14813"></span>கோழைகளின் மொழி! தற்கொடை என்பது தியாகிகளின் மொழி! காந்தீய தேசத்திற்கு மட்டுமல்ல, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட முழு உலகத்திற்கும் அகிம்சைப்போரின் மகத்துவத்தை போதித்தவன் தியாகச்சுடர் திலீபன்.</p>
<p style="text-align: justify;">1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் நாள் தியாகி திலீபனின் அஸ்தமனத்தோடு அறப்போரின் முற்றுப்புள்ளி அதுவென ஏமாந்தவர்கள் ஏராளம். ஈழப்போர் வரலாற்றில் மிகப்பெரிய பாரதப் படையணியினருக்கெதிரான மறப்போர்த் தடத்தின் தொடக்கப்புள்ளி என்பதை பலர் உணர மறுத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் திலீபனின் தற்கொடை பெரும் சாட்டையடி.</p>
<p style="text-align: justify;">திலீபனின் ஆகுதியில் தர்மமிருந்தது! நீதியிருந்தது! நேயமிருந்தது! அதனால் தான் அவனையும் அவன் கொள்கையையும் இன்றுவரை மக்கள் மனதில் கலங்கரை விளக்காக வைத்திருக்கிறார்கள். அகிம்சைப் போரினூடாக தன்னை ஈந்த திலீபனின் அர்பணிப்புக்கு பின்னால் மறைந்து கிடக்கும் தீர்க்க தரிசனங்கள் யாவை? அவை இன்றுவரை எதை உணர்த்துகிறது? தமிழர் தாயகத்திற்காக தியாகச் செம்மலால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளின் நிறைவேறியவை தான் எத்தனை? இயல்பாக, விடையின்றி எம்முள்ளே பொசுங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. இந்தக் கோரிக்கைகளினூடாக நிஜத்தின் விம்பமாக தமிழ்மக்களின் மனத்திரைகளில் நிதர்சனமாக வாழ்ந்துவருவது தவிர்க்க முடியாததாகின்றது.</p>
<p style="text-align: justify;"><strong>திலீபனின் கோரிக்கைகள்</strong></p>
<p style="text-align: justify;">* மீள்குடியமர்வு என்ற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல்<br />
* சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் தகுந்த காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க்கைதிகளை விடுதலை செய்தல்.<br />
* இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்குதல்.<br />
* ஊர்காவல், கூலிப்படையினரின் ஆயுதங்களைக் களைதல்.<br />
* தமிழ்ப் பிரதேசங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைத்தலை நிறுத்தல்.</p>
<p style="text-align: justify;">திலீபனின் இன்றுவரையிலான தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்துவதன் பொருட்டு சில நிகழ்வுகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாக அமையும்.</p>
<p style="text-align: justify;">திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர்க்கிழக்கு, திரியாய் போன்ற பல பிரதேசத்து மக்கள் மோதல் காரணமாக முற்றாக இடம்பெயர்ந்தது அறியப்பட்டதே. இதுவரைக்கும் தமிழ்மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை. வரலாற்றுக்காலங்களையும் தாண்டி தாயகத்திலே புரான தமிழ்க் கிராமங்களில் தற்பொழுது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. இது விடயமாக எத்தனை எதிர்ப்புக் குரல்கள் எழும்பியும் இலங்கை அரசை அசைக்க முடியாமல் உள்ளது. அதோடு இணைந்ததாக சிங்களக் குடியேற்றங்களும் அவர்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையங்களும் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவோம். தியாகி திலீபனின் கோரிக்கைகளில் முதலாவதும் இறுதியானதும் இன்றுவரை நிதர்சனமாகி வருவதற்கான சில உதாரணங்களாகும்.</p>
<p style="text-align: justify;"><strong>இலங்கை அரசின் உயர் பாதுகாப்பு வலயங்கள்</strong></p>
<p style="text-align: justify;">இலங்கையின் பேரினவாதிகள் தங்களுக்கு சாதகமாகவும் தமிழ்மக்களுக்கு பாதகமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கென இரு சொற்பிரயோகங்களை காலம் காலமாக பாவித்து வருவது ஒரு தந்திரமாகும். ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்பட வைக்காமல் ஒரு &#8216;வழுவல்&#8217; தன்மையை ஏற்படுத்துவது இலங்கை அரசின் வழக்கமாகும்.</p>
<p style="text-align: justify;">ஒன்று &#8216;பாதுகாப்பு வலயம்&#8217; மற்றையது &#8216;அபிவிருத்தி&#8217;. இவை இரண்டினூடாக தேவையான போது தமிழ்மக்களை குடியகற்றவும், சிங்கள மக்களை குடியேற்றவும் இலங்கை அரசினால் பிரயோகப்படுத்தப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">மூதூர்க் கிழக்கைச் சார்ந்த மக்களும், பலாலி பகுதி மக்களும் &#8216;உயர் பாதுகாப்பு வலயம்&#8217; என்ற போர்வையில் குடியகற்றப்பட்டதை நினைவில் கொள்ளலாம். அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகம் பறிபோவதும், இணைந்ததாக முஸ்லிம் தமிழ் மக்களின் அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நாளாந்தம் மேற்கொள்வதையும் அறியலாம்</p>
<p style="text-align: justify;">இவற்றுக்கும் மேலாக தடுப்பு முகாம்களையும் காவல் நிலையங்களையும் தமிழர் பகுதிகளில் நிறுவி, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கான சக்திகளை அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நாட்டு மக்களை சட்ட விரோத செயல்களில் இருந்து தடுப்பதற்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குமாகும்.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் குறிப்பாக தமிழ்மக்களின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலாக அமைவது காவல் நிலையங்களாகும். தமிழர் பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டால் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் &#8216;இயமன் வந்திறங்கிய&#8217; பயமாக இருக்கும். இவைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்க்கையில் தியாகி திலீபன் முன்வைத்த கோரிக்கைகளிலுள்ள நியாயங்கள் வெளித்தெரியும். அவனது தற்கொடையிலும் அர்த்தம் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">தியாகி திலீபனின் மரணம் அனைத்து தமிழ்பேசும் மக்களை நோக்கிய சுதந்திரத்திற்கான தூர நோக்கு. அதுவே சுதந்திர வாழ்விற்கான அறைகூவல். வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென கோஷமிடுபவர்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டுகிறேன். வடக்கையும் கிழக்கையும் பிரித்ததன் பின் அமைந்த சூழலை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலவந்தமான தமிழ்மக்கள் குடியகற்றலுக்கும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கும் இவர்களால் தீர்வுகாண முடியுமா? தாயினும் மேலான தாய்மண்ணை அன்னியவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க தன்மானமுள்ள தமிழினத்தால் முடியாதென்பதை பிரதிபலிப்பதே தியாகச்சுடர் திலீபனின் தற்கொடை மரணமாகும்.</p>
<p style="text-align: justify;">தியாகி திலீபனின் மரணம் உலக அரங்கில் வாழும் தமிழ்மக்கள் மனதில் என்றுமே அழியாது நிற்கும். அதற்கான பிரதான காரணம் யாதெனில் திலீபனால் முன்வைக்கப்பட்ட நியாயமிக்க 5 கோரிக்கைகளையும் அரசு என்றுமே நிறைவேற்றாது என்பது காலம் கூறும் பதில். இதற்கான வழிதான் என்ன என்பதை தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவரும் நேர்மையாகவும் நியாயமாகவும் சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட தேவைகளையும் சுயநலங்களையும் புறம்தள்ளிவிட்டு பேதங்களுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைத்தல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">&#8216;தேனீ கொட்டினால் உன்னோடு! தேனெடுத்தால் எனக்கும் பங்கு&#8217; என்ற நிலை தமிழ்பேசும் மக்களிடமிருந்து மறையவேண்டும். அனைவரும் சர்வதேசரீதியாக ஒற்றுமையாய் நின்று ஓங்கி அழுத்தம் கொடுத்தால் பேரினவாதிகள் நியாயத்தை நோக்கி வருவார்கள். இன்றைய இந்த கால கட்டத்தில் மெளனமாக இருப்பின் ஈழத்தமிழினம் முற்றாகவே தொலைந்துவிடும். தலைமுறை தலைமுறையாய் இந்த வரலாற்றுத் தவறுகள் தொடர்ந்துகொண்டே வருமாயின் முடிவுதான் யாது? திலீபனின் மரணத்தில் ஒரு அர்த்தம் வேண்டுமென்றால் அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அவனது தற்கொடையை நினைவுகூருவதோடு மட்டுமல்லாது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வழிவகைகளையும் கண்டு ஆராயவேண்டும். இல்லையெனில் தியாகி திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அவன்போன்று என்றுமே மரணமின்றி நிரந்தரமாய் வாழும்.</p>
<p style="text-align: justify;"><strong>கனக கடாட்சம்<br />
trincokadatcham@yahoo.com</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d" title="தியாகி திலீபன்" >தியாகி திலீபன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7820" title="தியாகி திலீபனின் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட செயல் மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகம்: சங்கரி (March 25, 2010)">தியாகி திலீபனின் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட செயல் மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகம்: சங்கரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13241" title="அவுஸ்திரேலியாவில் &#8220;தியாகி திலீபன்&#8221; நினைவுப் பேச்சுப் போட்டிகள் (July 29, 2010)">அவுஸ்திரேலியாவில் &#8220;தியாகி திலீபன்&#8221; நினைவுப் பேச்சுப் போட்டிகள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7751" title="தியாகி திலீபன் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது: சிங்களக் காடயரின் அட்டகாசம் (March 23, 2010)">தியாகி திலீபன் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது: சிங்களக் காடயரின் அட்டகாசம்</a> (3)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7845" title="தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன? வலம்புரி (March 25, 2010)">தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன? வலம்புரி</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14813</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>நிரூபமா ராவ் முல்லைத்தீவுக்கு விஜயம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14807</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14807#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 11:40:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிரூபமா ராவ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14807</guid>
		<description><![CDATA[நிரூபமா ராவ் முல்லைத்தீவுக்கு விஜயம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14808" title="niru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/09/niru-100x80.jpg" alt="" width="100" height="80" />இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்று திரும்பியுள்ளார். இன்று காலை 8.30 அளவில் அவர் முல்லைத்தீவுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மீள்குடியமர்ந்தோரின் நிலைமை மற்றும் இந்திய உதவி நிவா<span id="more-14807"></span>ரணங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் இந்திய நிவாரணப் பொருட்களும் இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இதேவேளை இதன் பின்னர் திருகோணமலைக்கு சென்ற அங்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.</p>
<p style="text-align: justify;">இதன் போது வன்னியில் இருந்தும் கிழக்கிலும் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்களுக்கு இந்தியா உதவவேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்தார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன், கணவர்மாரை இழந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இந்தியா உதவவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இவற்றை ஏற்றுக்கொண்ட நிரூபமா ராவ், உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p>
<p style="text-align: justify;">இதற்கிடையில் தமிழ் தேசிய கூடட்டமைப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%8d" title="நிரூபமா ராவ்" >நிரூபமா ராவ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14807</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகா திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14802</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14802#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 11:24:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொன்சேகா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14802</guid>
		<description><![CDATA[பொன்சேகா திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-5351" title="fonsega" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/Generalface-100x80.jpg" alt="" width="100" height="80" />ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சரத் பொன்சேகாவை கடற்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">அவரது இரத்தம் ப<span id="more-14802"></span>ரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நோய் நிலைமையினால் இரண்டாம் யுத்த நீதிமன்றின் விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் விசாரணைகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இன்றைய விசாரணைகள் இராணுவத் தளபாட கொள்வனவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவே நடைபெறவுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%be" title="பொன்சேகா" >பொன்சேகா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7807" title="எனது உயிருக்கு ஆபத்து: பொன்சேகா (March 24, 2010)">எனது உயிருக்கு ஆபத்து: பொன்சேகா</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1886" title="பொன்சேகா ஒரு பயந்தாங்குளி &#8211; இலங்கை அரசு:  சபாஷ் சரியான போட்டி! (November 26, 2009)">பொன்சேகா ஒரு பயந்தாங்குளி &#8211; இலங்கை அரசு:  சபாஷ் சரியான போட்டி!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11430" title="நாட்டை காட்டிக்கொடுக்க முற்பட்டால் பொன்சேகாவை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்வேன்: மேர்வின் (June 12, 2010)">நாட்டை காட்டிக்கொடுக்க முற்பட்டால் பொன்சேகாவை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்வேன்: மேர்வின்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12127" title="பொருளாதாரத்தில் வங்குரோத்தடைந்துள்ளமையால் படைக்கு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் பொன்சேகா (July 3, 2010)">பொருளாதாரத்தில் வங்குரோத்தடைந்துள்ளமையால் படைக்கு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் பொன்சேகா</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7098" title="மகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அனுமதித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் சரத் பொன்சேகா (March 9, 2010)">மகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அனுமதித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் சரத் பொன்சேகா</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14802</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வன்னி மக்களின் சொத்துக்கள் சூறை: அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14795</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14795#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 15:13:35 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[வன்னி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14795</guid>
		<description><![CDATA[வன்னி மக்களின் சொத்துக்கள் சூறை: அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14799" title="Redbana_-_04" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Redbana_-_04-100x80.jpg" alt="" width="100" height="80" />வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அ<span id="more-14795"></span>றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,<br />
வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம்.</p>
<p style="text-align: justify;">எமது மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்தமண்ணில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் அளவிடமுடியாத பல்லாயிரம் உயிர்கள் சிதைக்கப்பட்டு மீண்டும் தமது வாழ்க்கையை பழைய நிலைக்குக் கொண்டு செல்ல பல பத்தாண்டுகளைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் போர் மூலம் அழிந்தவை போக, எஞ்சிய சொத்துக்களையாவது மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற உரிமையுடன் கூடிய ஏக்கம் அந்த மக்களிடத்தில் காணப்படுகின்ற நிலையில், தமது சொத்துக்கள் தமது பகுதிகளில் இருந்து வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் அவர்கள் பல்வேறு தடைவைகள் எம்மிடம் முறையிட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">தமக்குச் சொந்தமான கால்நடைகள், வீட்டுத் தளபாடங்கள், உபகரணங்கள், இயந்திரங்கள், அவற்றின் உதிரிப்பாகங்கள், வாகனங்கள் உட்பட்ட பல கோடிக்கணக்கான பொருட்கள் வன்னியில் இருந்து அகற்றப்படுவதாகவும், அவற்றையாவது தடுத்து நிறுத்துமாறும் அந்த மக்கள் எம்மிடம் வினயமாகக் கேட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும், இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். இவை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக எமக்கு வழமைபோலவே வாக்குறுதிகள் அரச தரப்பினால் வழங்கப்பட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">ஆனாலும், அந்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டம், விசுவமடுப் பகுதிக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த நாம், றெட்பானாப் பகுதியில் வியாபாரத்திற்காகத் தயார் செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட பொருட்களைக் கண்ணுற்றோம். அவற்றினை புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">விசுவமடு றெட்பானா சந்திப்பகுதியில் பாரிய தடுப்பு போடப்பட்டு அதற்கு அப்பால் செல்லவிடாமல் குமாரசுவாமிபுரம் கிராம மக்கள் மூன்று மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ஆனால் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்ற மக்களின் சொத்துக்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவந்தே சேர்க்கப்படுகின்றன என்று அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">மக்களின் சொத்துக்கள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள மூன்று இடங்களை நாங்கள் நேரடியாகப் பார்வையிட்டோம். வீட்டுத்தளபாடப் பொருட்கள், வாகனங்கள், உழவியந்திரங்கள், இருசக்கர உழவியந்திரங்கள், மின்பிறப்பாக்கிகள், உந்துருளிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதனப்பெட்டிகள், வாகனங்களின் பெறுமதி வாய்ந்த உதிரிப்பாகங்கள், வீட்டுக் கதவுகள், அலுமினியப் பிற்றிங் பொருட்கள் என பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் தயார் நிலையில் இருக்கின்றமையை நாங்கள் நேரடியாகக் கண்ணுற்றோம்.</p>
<p style="text-align: justify;">விற்பனைக்காகப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருந்த ஒருவரைச் சந்தித்தோம். அவர் தான் யாழ்ப்பாணம் ஐந்து இலாம்படிச் சந்தியில் வசிப்பதாகவும், தனது பெயர் எஸ்.எம்.நௌபர் என்றும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தாம் மட்டுமல்ல இன்னும் பலரும் நாள் ஒன்று சாராசரி நான்கு லொறிகளில் வன்னிப் பகுதிகளில் இருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவித்த அவர், மக்கள் செல்ல அனுமதிக்கப்படாத பகுதிகளில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் தமக்கு தரப்படுவதாகவும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அவர் கூறியதைப் போன்று நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்குவரையான லொறிகளில் வன்னிமக்களின் சொத்துக்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றமையை தாமும் அவதானிப்பதாக அங்கிருக்கும் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">குறித்த பகுதியில் இருந்து பரந்தன் சந்திக்கு வரும் வரைக்கும் நான்கு இடங்களில் &#8216;இரும்பு, அலுமினியம், பித்தளை, செப்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது&#8217; என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">எமது வாகனத்தினை மட்டும் மூன்று தடைவைகள் இடைமறித்து எமது விபரம் குறித்து கேட்டதன் பின்னரே அனுமதித்தார்கள். இந் நிலையில் அங்கிருந்து பெருமளவான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கின்ற மக்களும், குறித்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வியாபாரிகளும் எம்மிடம் தெரித்தனர்.</p>
<p style="text-align: justify;">எனவே இந்தச் சம்பவங்களுடன் முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கும் அதிகாரிகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என்றே நாம் கருதுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">குறித்த வியாபார நடவடிக்கையில் தருமபுரம் பகுதியைச் சேர்ந்த &#8216;ஜீவன்&#8217; மற்றும் &#8216;நஜீ&#8217; உட்பட்ட நபர்கள் ஈடுபட்டுவருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்தச் சம்பவங்களில் முஸ்லிம் மற்றும் தமிழ் வியாபாரிகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டு வன்னி மக்களுக்குச் சொந்தமானவற்றில் எஞ்சியிருப்பவற்றைச் சூறையாடிச் செல்கின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">எமது மக்களுக்குச் சொந்தமான, அவர்களின் உழைப்பின் பலனாய் அவர்கள் சேமித்த அவர்களின் பரம்பரை பரம்பரையான சொத்துக்களை அவர்களில் இருந்து பிடுங்கி எடுக்கும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், இதற்கான அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று சர்வதேசத்திடமும் வேண்டிநிற்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">வன்னி மக்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிப்பதன் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">நன்றி,</p>
<p style="text-align: justify;">தமிழ் தேசியக் கூட்டமைப்பு (பேச்சாளர் சுரேஷ; பிறேமச்சந்திரன்)</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14797" title="vanni" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Redbana_-_02.jpg" alt="" width="500" height="335" /><img class="aligncenter size-full wp-image-14798" title="vanni" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Redbana_-_03.jpg" alt="" width="500" height="335" /><img class="aligncenter size-full wp-image-14799" title="Redbana_-_04" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Redbana_-_04.jpg" alt="" width="500" height="335" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf" title="வன்னி" >வன்னி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1641" title="வன்னி மக்களின் மீள்குடியேற்றம் அரசின் வெறும் கண்துடைப்பா? (November 24, 2009)">வன்னி மக்களின் மீள்குடியேற்றம் அரசின் வெறும் கண்துடைப்பா?</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12955" title="வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறும் அபாயம் (July 24, 2010)">வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறும் அபாயம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11164" title="தென்னிந்திய திரைப்படதுறையினருக்கு வன்னி மக்களின் நன்றிகள் (June 6, 2010)">தென்னிந்திய திரைப்படதுறையினருக்கு வன்னி மக்களின் நன்றிகள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10101" title="வன்னிப் பெண்ணை, பெண்கேட்டு கடத்தியவர்கள் சகோதரர்களாம்! (May 13, 2010)">வன்னிப் பெண்ணை, பெண்கேட்டு கடத்தியவர்கள் சகோதரர்களாம்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4993" title="வன்னி இறுதி மோதல்களில் 30,000 படையினர் பலி! 36,000 படையினர் அங்கவீனம்! (January 18, 2010)">வன்னி இறுதி மோதல்களில் 30,000 படையினர் பலி! 36,000 படையினர் அங்கவீனம்!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14795</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14785</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14785#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 15:00:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈழ உணர்வாளர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14785</guid>
		<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14789" title="eu_04" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_04-100x80.jpg" alt="" width="100" height="80" />ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (31.08.2010) 5வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">கனடா மற்றும் ஐ<span id="more-14785"></span>ரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வாழ்த்துச்செய்திகளுடன் உற்சாகத்துடன் 5வது நாளாக தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மோசமான காலநிலையிலும் நேற்று (30.08.2010) Lausanne-Renens பிரதேசத்திலிருந்து Epalinges, Ropraz ஊடாக 29km தூரம் நடந்து Moudon பிரதேசத்தை மாலை 21.00 மணியளவில் சென்றடைந்தனர். இன்று (31.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடருகின்றது.</p>
<p style="text-align: justify;">நேற்றும் இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் நடப்பதற்கு உகந்த சப்பாத்துக்கள் மற்றும் ஆடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் பலர் இவர்களோடு இணைந்து நடந்து சென்றதுடன் தொடர்ந்து இணைந்து நடப்பதற்கு ஆர்வத்துடன் பலர் எம்முடன் தொடர்புகொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சுவிஸ், கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் தொடர்புகொண்டு இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமளித்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார்.</p>
<p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14786" title="eu_01" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_01.jpg" alt="" width="500" height="390" /><img class="aligncenter size-full wp-image-14787" title="eu_02" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_02.jpg" alt="" width="500" height="247" /><img class="aligncenter size-full wp-image-14788" title="eu_03" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_03.jpg" alt="" width="500" height="388" /><img class="aligncenter size-full wp-image-14789" title="eu_04" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_04.jpg" alt="" width="500" height="241" /><img class="aligncenter size-full wp-image-14790" title="eu_05" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_05.jpg" alt="" width="500" height="389" /><img class="aligncenter size-full wp-image-14791" title="eu_06" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/eu_06.jpg" alt="" width="500" height="338" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d" title="ஈழ உணர்வாளர்" >ஈழ உணர்வாளர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14785</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14780</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14780#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 14:51:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒரு பெண் போராளி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14780</guid>
		<description><![CDATA[ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14781" title="porali" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/porali-100x80.jpg" alt="" width="100" height="80" />தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அவர்களி<span id="more-14780"></span>ன் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.</p>
<p style="text-align: justify;">கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத்திற்காகவும் முழுக்குடும்பமுமே தம்மை அர்ப்பணித்திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரு குடும்பம். கடந்த வாரம் அந்த குடும்பத்தில் எஞ்சியிருந்த போராளித் தாயும் இறந்து போனபோது அவர்களின் இரு பிள்ளைகள் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என மேற்குலக நாடுகளில் இருந்து வீரப்பிரதாபம் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டிருக்காது.</p>
<p style="text-align: justify;">கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் எத்தனை கோடி ரூபா என்றாலும் தருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு மட்டக்களப்பில் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவை நிறுத்த வேண்டும் என லண்டனிலிருந்து கங்கணம் கட்டி நின்ற அந்த அரசியல்வாதிக்கு கூட தனது பிரதேசத்தில் கேட்கும் அவலக்குரல்கள் கேட்டிருக்காது. ஏனெனில் அவர்கள் அந்த அழுகுரல்கள் கேட்கும் திசையை நோக்கி தமது புலன்களை செலுத்த தயாராக இல்லை. அவர்கள் பயணிப்பதெல்லாம் தமது மக்களை பலிகொடுத்து தமது சொகுசு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காகத்தான்.</p>
<p style="text-align: justify;">பெண்போராளியான ஒரு தாய் தனது மருத்துவ செலவுக்கு வேண்டிநின்றதெல்லாம் வெறும் 38ஆயிரம் ரூபாதான். ஆனால் அந்த பணம் அவளது கைகளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி தனது இரு குழந்தைகளையும் அனாதைகளாக விட்டு இந்த உலகைவிட்டு பிரிந்து போனாள். அவள் மட்டுமல்ல அவளின் கணவன், தந்தை என முழுக்குடும்பமுமே இனவிடுதலைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தியாக குடும்பத்தின் வாரிசுகளான இரு பிஞ்சுக்குழந்தைகள் இன்று அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">செங்கலடியிலிருந்து 4கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளைவீதியில் அமைந்துள்ள கிராமம்தான் பன்குடாவெளியாகும். புளொட் இயக்க கொலைகாரக் குழுக்கள் ஆக்கிரமித்திருந்த கறுப்பு பாலத்தை கடந்து சென்றால் வரும் கிராமம்தான் பன்குடாவெளியாகும். பல போராளிகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தந்த கிராமம்தான் அது.</p>
<p style="text-align: justify;">அக்கிராமத்தில் பிறந்தவள்தான் சித்திரா என்ற ஷகிலா. அவளது தந்தை சீனித்தம்பி பத்மநாதன் அந்த கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். வயல் காணி என பொருளாதார ரீதியில் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த குடும்பம்.</p>
<p style="text-align: justify;">இந்திய இராணுவம் வடகிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையில் விடுதலைப்புலிகள் காடுகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். இனவிடுதலையை நேசித்த பத்மநாதன் விடுதலைப்புலிகளுக்கு உணவு உட்பட அனைத்து உதவிகளையும் கொண்டு சென்று சேர்ப்பிப்பதில் அவரும் அவரது குடும்பமும் பெரும்பங்களிப்பு செய்தது.</p>
<p style="text-align: justify;">இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த போது மட்டக்களப்பு அம்பாறை பிரதேச போராளிகள் காடுகளில் சில இடங்களில் குழுக்களாக தங்கியிருந்தனர். வாகரை, அம்பாறை காட்டுப்பகுதிகளில் இரு குழுக்களும், தாந்தாமலை, மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை, மீசைக்கல்திடல் ஆகிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏனைய மூன்று குழுக்களும் தங்கியிருந்தனர். இவர்களில் மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை போன்ற காட்டுப்பகுதியில் இருந்த போராளிகளுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதில் பத்மநாதன் பெரும்பங்கு வகித்தார். சகல காட்டுப்பாதைகளையும் பரிச்சயமாக கொண்ட பத்மநாதன் மகியங்கனை வீதிவரை போராளிகளை கொண்டு சேர்த்திருக்கிறார். பத்மநாதன் அண்ணன் என்றால் அப்போதையை போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒருவர்.</p>
<p style="text-align: justify;">ஒரு சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த போராளிகளுக்கு உணவுப்பொருள்களை எடுத்து சென்ற போது இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன் இந்திய இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தமிழ்குழுக்களாலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் விடுதலையானார்.</p>
<p style="text-align: justify;">விடுதலையான பத்மநாதன் 1990ம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து படுவான்கரைப் பிரதேசத்தில் செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு பல வழிகளிலும் தொடர்ந்து உதவி செய்து வந்தார். இதனால் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் அரச ஆதரவுத் தமிழ் குழுக்களாலும் பல முறை தாக்கப்பட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">அதன் பின்னர் 1991 ஏப்ரல் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் போன்ற ஆயுதக்குழுக்களும், இலுப்பையடிச்சேனையில் வைத்து பத்மநாதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். காலில் காயமடைந்த பத்மநாதனை கரடியனாறு இராணுவ முகாமுக்கு கட்டி இழுத்து சென்றனர். பின்னர் சடலத்தை கூட அவரின் குடும்பத்தினருக்கு இராணுவத்தினர் கொடுக்கவில்லை. அவரின் தேச விடுதலைப்பற்றையும் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மதித்து விடுதலைப்புலிகளின் தேசியத்தலைமை அவருக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்திருந்தது.</p>
<p style="text-align: justify;">அவரது மூத்தமகள் ஷகிலா 1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்போராளியாக இணைந்து சித்திரா என்ற பெயரோடு ஆயுதப்போரட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">1990 ஜனவரியில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி அரசியல் கட்சியின் உருவாக்கத்தை தொடந்து வாகரையில் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டது இம் மகாநாடுக்கு விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பு பிரதிநிதி சுந்தரியும் வருகை தந்திருந்தார். அங்கு வந்த அவர் பெண்கள் மத்தியில் நடத்திய பல சந்திப்புக்களை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து பல பெண்போராளிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். அந்த பெண் போராளிகளில் ஒருவர்தான் பன்குடாவெளி பத்மநாதனின் மகள் ஷகிலா என்ற சித்திரா. க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றிருந்த அவர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பிருந்த போதிலும் அதை துறந்து இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு சென்ற சித்திரா அங்கு ஆயுதப்பயிற்சி பெற்று போராட்ட களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். 1991 முற்பகுதியில் ஆனையிறவு சமரின் போது சித்திரா காயமடைந்தார். அவரது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஓரளவு குணமடைந்த சித்திரா தொடர்ந்து பல களங்களைச் சந்தித்தார்.</p>
<p style="text-align: justify;">சித்திரா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டதையடுத்து அவரது கிராமத்தை சேர்ந்த அவரது காதலனான உருத்தியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு வன்னியில் திருமணமும் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இரு பிள்ளைகள் பிறந்ததை தொடர்ந்தும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்ததாலும் சித்திரா இயக்க பணிகளிலிருந்து விலகியிருந்தார். ஆனால் அவரது கணவன் உருத்தி தொடர்ந்து போராட்ட களத்திலேயே இருந்தார்.</p>
<p style="text-align: justify;">வன்னியிலிருந்த உருத்தி 2007ஆம் ஆண்டு இயக்க பணிகளுக்காக மட்டக்களப்பு தளவாய் பகுதிக்கு அனுப்பபட்டிருந்த போது 2007ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவருக்கு விடுதலைப்புலிகளால் மேஜர் தரம் வழங்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">அதன் பின்னர் தனது இரு பிள்ளைகளுடன் பன்குடாவெளியில் வாழ்ந்து வந்த சித்திராவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் வரை விடுதலைப்புலிகளால் வன்னியிலிருந்து மாவீரர் குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நிதியில் தனது இரு பிள்ளைகளையும் சித்திரா படிப்பித்துக்கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">ஆனையிறவு சமரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் நீண்டகாலமாக அந்த நோவினால் பாதிக்கப்பட்டிருந்த சித்திராவுக்கு முள்ளந்தண்டில் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். அதற்காக அவளுக்கு 38ஆயிரம் ரூபா தேவைப்பட்டது. தனக்கு தெரிந்த வெளிநாடுகளில் உள்ள சிலரிடமும் உதவியை கோரியிருந்தாள். ஆனால் அந்த உதவி அவளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி (17.08.2010) தனது இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு இந்த உலகைவிட்டே சென்றுவிட்டாள். அவள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முதல் வெளிநாடு ஒன்றில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கும் போராளி ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிள்ளைகள் இரண்டும் அநாதைகளாக போய்விடப்போகிறார்கள் என கவலைப்பட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்றதெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப்போகிறது.</p>
<p style="text-align: justify;">சித்திராவின் தந்தையும் அவரது குடும்பமும் விடுதலைப்புலி போராளிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சம் அல்ல. ஓடி ஒடி உதவி செய்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று அனாதைகளாக நடுவீதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">போராளிகளுக்கு அவரது குடும்பம் செய்த உதவிகளில் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளரும் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு வடக்கு வட்டவையின் தலைவராகவும் இருந்த சட்டத்தரணி வேணுதாஸ் 1990 யூன் மாதத்தின் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முழுநேரமாக இணைந்து பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து சென்ற வேணுதாஸின் மனைவியை இராணுவத்தினர் பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டு செங்கலடி கறுப்பு பாலத்திற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">அதை அறிந்த பத்மநாதனும் சிலரும் அங்கு சென்று வேணுதாஸின் மனைவியின் சடலத்தை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தனர். சவ அடக்கத்தை செய்திருந்தனர். அதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வேணுதாசும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதேபோன்றுதான் வேணுதாஸின் இரு பெண் பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">வேணுதாஸின் மரணம் குறித்து மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகள் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்கவே இல்லை. தமிழ் இளைஞர் பேரவையின் மட்டக்களப்பு செயலாளரும் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட சட்டத்தரணி வேணுதாஸ் பற்றி ஈழநாதம் பத்திரிகையில் செய்தி வெளிவந்த போதுதான் அதை அறிந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வேணுதாஸிற்கு மேஜர் தரம் வழங்கி மதிப்பளித்திருந்தார். வேணுதாஸ் தனது ஆரம்பகால நண்பர் என்பதையும் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல விடுதலைப் போராளிகள் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் உதவிகளை செய்து வந்த ஒரு குடும்பம்தான் பன்குடாவெளி பத்மநாதனின் குடும்பம். தமிழ் இனத்தின் விடுதலையை அதீதமாக நேசித்ததன் காரணமாக அவரின் பேரப்பிள்ளைகளான சங்கீதா (11வயது) சங்கீத் ( 7வயது) ஆகியோர் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவரின் போராளி மகள் வெறும் மருத்துவச் செலவுக்கு 38ஆயிரம் ரூபா கிடைக்காமல் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.</p>
<p style="text-align: justify;">யுத்தத்தின் கோரத்தின் ஒரு துளிதான் சித்திராவின் கதை. சித்திராவைப்போல ஆயிரம் ஆயிரம் போராளிகளும், போராளிகளின் இழப்பினால் அனாதைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளும் மட்டக்களப்பு வன்னி என தமிழர் தேசம் எங்கும் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களின் அழுகுரல்களை மட்டும் இந்த சமூகம் கேட்கமறுக்கிறது.</p>
<p style="text-align: justify;">மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. கேட்டாலும் அதைப்பற்றி இரங்குவதற்கு அவர்களுக்கு மனங்களும் இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் அழுகுரல்களின் ஊடாக அவலங்களின் ஊடாக மரணங்களின் ஊடாக தமது சொகுசு வாழ்க்கையை அமைப்பதுதான்</p>
<p style="text-align: justify;">இந்த வீராப்பு பேசுபவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழ் இனமும் அழிந்து போகவேண்டும் என்பதுதான்.</p>
<p style="text-align: justify;">இப்போது தமிழ் இனம் வேண்டிநிற்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதுதான். இனவிடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய அந்த தாயினதும் தந்தையினதும் ஆத்மாக்கள் வேண்டுதெல்லாம் தங்களின் குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள் என்பதுதான். அனாதைகளாக்கப்பட்ட சித்திராவின் இரு பிள்ளைகளைப்போல கண்ணீருடன் எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் பிஞ்சுகளுக்கு யார் உதவ முன்வருவார்?</p>
<p style="text-align: justify;">thurair@hotmail.com</p>
<p style="text-align: justify;">இரா.துரைரத்தினம்</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf" title="ஒரு பெண் போராளி" >ஒரு பெண் போராளி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14780</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளில் ஒரு தேங்காய் கூட எடுக்க முடியாத நிலை: சுரேஸ் பிறேமச்சந்திரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14772</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14772#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 14:45:10 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிறேமச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14772</guid>
		<description><![CDATA[மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளில் ஒரு தேங்காய் கூட எடுக்க முடியாத நிலை: சுரேஸ் பிறேமச்சந்திரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14776" title="sures" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/sures-100x80.jpg" alt="" width="100" height="80" />மீள்குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரத்து இருநூற்று பதினைந்து மக்கள் விசுமடுப் பகுதியில் மூன்று மாதகாலமாக எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெ<span id="more-14772"></span>ரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">நேற்று முன்னாள் (30-08-2010) முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பிரதேசத்திற்கான பயணத்தினை மேற்கொண்டு மக்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><strong>அவர் மேலும் தெரிவிக்கையில்:<br />
</strong><br />
விசுவடுப் பிரதேசத்தின் குமாரசுவாமிபுரம், மயில்வாகனபுரம், கொழுந்துப்புலவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 255குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து இருநூற்றுப் பதினைந்து மக்கள் கடந்த யூன் மாதம் வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து கொண்டுவரப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">இவர்களில் குமாரசுவாமிபுரம் கிராமத்தினைச் சேர்ந்த 69 குடும்பங்கள் றெட்பானாப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">மயில்வாகனபுரம், கொழுந்துப்புலவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏனைய குடும்பங்கள் பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">உலக உணவுத்திட்டத்தினால் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற பொருட்களில் அரிசி வழங்கப்படுவதில்லை. எந்தவித வருமானமும் இன்றி வாழ்ந்து வருகின்ற மக்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">எந்தவருமானமும் இன்றி வாழ்ந்து வருகின்ற மக்கள் சில மீற்றர்கள் தூரத்தில் உள்ள தமது காணிகளுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றவர்கள் தாக்குதல்களுக்கு உட்படுவதாக கண்ணீர் மல்க எம்மிடம் கவலை வெளியிட்டனர்.<br />
தமது சொந்தக் காணிகளில் தாம் சென்று ஒரு தேங்காய் கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், அங்கிருந்து தேங்காய்கள் திருடப்பட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.</p>
<p style="text-align: justify;">மலசல கூட வசதிகள் இல்லாத நிலையில் அயலில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் செல்வதாகவும், இரவுவேளையில் அதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அந்த மக்கள், குறிப்பாக பெண்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">இதேபோன்று றெட்பானாப் பகுதியில் உள்ள குமாரசுவாமிபுரம் மக்களின் பாவனைக்கென ஒரு கிணறு மட்டுமே உள்ளது. ஆனாலும் அந்தக் கிணறு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அந்தக் கிணற்று நீரினையே குடிநீராகவும், ஏனைய தேவைக்காகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். அதே கிணற்றினையே அப்பகுதி இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ள அதேவேளை நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவருகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த மக்களுக்கான சுகாதார வசதி தொடர்பில் குறித்த பகுதிக்குப் பொறுப்பான சுகாதார அமைப்புக்களோ, பிரதேச சபையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">மீள்குடியேற்றத் தாமதம் குறித்துக் கேட்டபோது,</p>
<p style="text-align: justify;">குறித்த கிராமங்களின் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களை குடியமர அனுமதிப்பதாக அதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தெரிவிப்பதாகவும், முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் குடியமர அந்த மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி அனுமதி மறுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">மூன்று மாதங்களாகியும் எந்தவித தொழில் முயற்சியும் இன்றி வாழ்ந்து வருகின்ற குறித்த கிராம மக்கள் தம்மை தமது பகுதிகளில் மீளக் குடியமர அனுமதித்தால் போதும், எமது பொருளாதாரம் உட்பட்ட அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்வோம் எனக் கோரிக்கை விடுத்தனர் என்றும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-large wp-image-14773" title="viswamadu1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/viswamadu1-1024x667.jpg" alt="" width="1024" height="667" /><img class="aligncenter size-large wp-image-14774" title="viswamadu2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/viswamadu2-1024x957.jpg" alt="" width="1024" height="957" /><img class="aligncenter size-large wp-image-14775" title="viswamadu3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/viswamadu3-1024x773.jpg" alt="" width="1024" height="773" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d" title="பிறேமச்சந்திரன்" >பிறேமச்சந்திரன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8128" title="கூட்டமைப்பினைத் தடை செய்யும் நடவடிக்கை தனி நாட்டைப் பெற்றுத்தரவே வழிவகுக்கும்: சுரேஷ் பிறேமச்சந்திரன் (April 4, 2010)">கூட்டமைப்பினைத் தடை செய்யும் நடவடிக்கை தனி நாட்டைப் பெற்றுத்தரவே வழிவகுக்கும்: சுரேஷ் பிறேமச்சந்திரன்</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9974" title="மாவீரர் கல்லறைகளை அழிக்கும் அநாகரிக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்: சுரேஷ் (May 10, 2010)">மாவீரர் கல்லறைகளை அழிக்கும் அநாகரிக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்: சுரேஷ்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4729" title="தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன் (January 12, 2010)">தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9132" title="வரலாற்றை மறைக்க முயற்சி; சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு! (April 25, 2010)">வரலாற்றை மறைக்க முயற்சி; சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14772</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14767</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14767#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 14:33:10 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிருபமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14767</guid>
		<description><![CDATA[வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14768" title="niru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/niru-100x80.jpg" alt="" width="100" height="80" />நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், இன்று வவுனியா மெனிக் பாம் முகாமுக்குச் சென்றுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமாராவ் திரு<span id="more-14767"></span>முருகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை இன்று 31.8.2010 அன்று காலை சுமார் 11.30மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சந்தித்தார்.</p>
<p style="text-align: justify;">இச்சந்திப்பிற்கு வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். இடம் பெயர்ந்த மக்களின் சார்பில் திரு.சக்திவேல் உரையாற்றியதுடன் இலங்கை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்த மகஜரின் நகலையும் திருமதி நிருபமா ராவிடம் கையளித்தார்.</p>
<p style="text-align: justify;">சிவசக்தி ஆனந்தன் தனது தலைமையுரையில், 1977இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் மலையகத்தில் விரட்டியடிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கிளிநொச்சிப் பகுதியில் குடியேறினர். அப்பகுதியில் அவர்களது கடின உழைப்பினால் காணிகளைத் துப்பரவாக்கி பயன்தரும் மரங்களை வளர்த்ததுடன் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்பொழுது அவர்கள் மீண்டும் இடப்பெயர்வினைச் சந்தித்துள்ளனர். இப்பொழுது அவர்கள் மீண்டும் தமது காணிகளில் குடியேற முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை. அவர்கள் தமது சொந்தக்காணிகளில் மீண்டும் குடியேறுவதற்குத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களின் சார்பாக உரையாற்றிய திரு. சக்திவேல் தனது உரையில், நாங்கள் 1977ஆம் ஆண்டிலிருந்து சாந்தபுரம், இந்துபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இப்பொழுது நாங்கள் அங்கு குடியேற முடியாது என்று வவுனியா அரசாங்க அதிபர் கூறுகின்றார். நாங்கள் எமது பகுதியில் மா, பலா, தென்னை, வாழை, பனை மற்றும் தென்னை என்று பல்வேறு பயன்தருகின்ற மரங்களைப் பயிராக்கியதுடன் நெற்செய்கையையும் மேற்கொண்டிருந்தோம். இப்பொழுது அம்மரங்கள் நன்கு வளர்ந்து பலனளிக்கின்ற வகையில் வளர்ந்துள்ளன. இப்பொழுது நாங்கள் அங்கு குடிபுக முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே தாங்கள் எங்களை எமது சொந்தங்களில் குடியேறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">இறுதியுரை நிகழ்த்திய திருமதி நிருபமாராவ் தனது உரையில், மீள்குடியேற்றம் எந்தளவிற்கு நடைபெற்றுள்ளது என்பதையும் இந்தியா வழங்கிய உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிவதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும். நீங்கள் கூறிய விடயங்களை நான் அரசாங்க அதிபருடனும் ஆளுநருடனும் கலந்தாலோசித்து அவர்களது கருத்துக்களை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிப்பேன் என்றும் இருநாடுகளும் இணைந்தே மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி ஆகியவிடயங்களை மேற்கொள்ளும் என்றும் உங்களை நேரில் சந்தித்து விடயங்களைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14769" title="DSCI3693" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/DSCI3693.jpg" alt="" width="500" height="374" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be" title="நிருபமா" >நிருபமா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7095" title="முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு (March 9, 2010)">முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14719" title="நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள் (August 30, 2010)">நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7073" title="தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு (March 8, 2010)">தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6938" title="இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார் (March 4, 2010)">இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14825" title="கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா (September 1, 2010)">கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா</a> (6)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14767</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14763</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14763#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 06:37:02 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈழத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14763</guid>
		<description><![CDATA[தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-8633" title="ncet" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/ncet.jpg" alt="" width="100" height="80" />பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்<span id="more-14763"></span>விளையோர்களுக்கு தலை வணங்குகிறது..</p>
<p style="text-align: justify;">இவ்வுலக சமுதாயத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் எமக்கான நியாயத்தை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நாம் மேற்கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில், உலகின் மனசாட்சியைக் கேள்வி கேட்பது போலவும், அறவழிப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் இக்காலக்கட்டத்திற்கு ஏற்பவும் லண்டன் நகரில் இருந்து ஐ.நா. மன்றம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டதோடு, நீண்ட நெடிய எமது போராட்டத்தில் தொடர்ச்சியாக எம்மோடு பயணித்த மக்களை நடைப்பயணமெங்கும் சந்தித்து அவர்கள் சோர்வுறாது காத்து எம் வருங்காலம் மீது நம்பிக்கையூட்டிய திரு. சிவந்தன் அவர்களை இவ்வேளையில் மனதார பாராட்டுகிறது .</p>
<p style="text-align: justify;">சிவந்தன் அவர்களது பெருமுயற்சியைத் தொடர்ந்து தற்பொழுது அவ்வகையான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் திரு. ஜெகன், திருமதி தேவகி குமார் மற்றும் திரு. வினோத் அவர்களது முயற்சிக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது.</p>
<p style="text-align: justify;">போர் இறுதிகட்டத்தை நெருங்கிவந்த வேளையில் சூழலுக்கேற்ப தனது நடனத்திறமையை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதிபலித்து ஊடக வழிப்போராட்டத்தை தனிமனிதாய் முன்னெடுத்திருந்த திரு. பிரேம் கோபால் அவர்கள் மீண்டும் அதே விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் எம் இனத்தின் வலியை சுமந்து பதித்து இருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">திரு.பிரேம் கோபால் அவர்களுக்கும், அவரோடு இணைந்து நடனமாடியதோடு எம் இனத்திற்காய் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் குரல் கொடுப்போம் என்று நிகழ்ச்சி மேடையிலேயே அறிவித்த செல்வி பிரேமினி அவர்களுக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை பணிவான வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறது.</p>
<p style="text-align: justify;">எம் இனப்போராட்டத்தை சுமக்க அடுத்தத் தலைமுறையினர் வீரியமுடன் வெளிவருவதைக் கண்டு மகிழ்வடைவதுடன், தமிழ் இளையோர்கள் அனைவரையும் இதுபோன்று பெரும் முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்ள நோர்வே ஈழத்தமிழர் அவை அன்புடனும் உரிமையுடனும் அழைப்பு விடுக்கிறது.</p>
<p style="text-align: justify;">பஞ்சகுலசிங்கம் கந்தையா,<br />
(வைத்திய கலாநிதி)<br />
தலைவர்,<br />
நோர்வே ஈழத்தமிழர் அவை,<br />
நோர்வே.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d" title="ஈழத்தமிழர்" >ஈழத்தமிழர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3782" title="ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த கருத்தரங்கு: டெல்லி (December 20, 2009)">ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த கருத்தரங்கு: டெல்லி</a> (6)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2597" title="ஈழத்தமிழர்களை இந்தோனேசியாவில் சுற்றி வளைத்த மர்ம படகுகள் (December 3, 2009)">ஈழத்தமிழர்களை இந்தோனேசியாவில் சுற்றி வளைத்த மர்ம படகுகள்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10452" title="துயர்நிறைந்த ஒருவருடமும் இனி வரப்போகும் காலமும் (May 18, 2010)">துயர்நிறைந்த ஒருவருடமும் இனி வரப்போகும் காலமும்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11959" title="ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வலியுறுத்தி செம்மொழி மாநாட்டில் தீர்மானம் அறிவித்தார் கருணாநிதி! (June 28, 2010)">ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வலியுறுத்தி செம்மொழி மாநாட்டில் தீர்மானம் அறிவித்தார் கருணாநிதி!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8668" title="மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை (April 17, 2010)">மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14763</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>“கலைஞ”ரின் சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14759</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14759#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 06:35:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத் தளபதி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14759</guid>
		<description><![CDATA[“கலைஞ”ரின் சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்! ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-5790" title="karunanithi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/karunanithi-100x80.jpg" alt="" width="100" height="80" />29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் &#8220;தேசத் துரோகி&#8221;யு(?)மான சரத் பொன்சேகாவினால் &#8220;அரசியல் கோமாளிகள்&#8221; என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இந்தப் &#8220;பெருமகன்&#8221;<span id="more-14759"></span> முன்னர் இந்தியா அனுப்பிவைத்த குழுவில் முக்கிய அங்கம் வகித்து, இலங்கையின் &#8220;மனிதாபிமானம் மிக்க&#8221; செயல்பாடுகளைப் புகழ்ந்து கூறியவர் என்பதையும் தமிழர்கள் இன்னும் மறந்துவிடவில்லை.</p>
<p style="text-align: justify;">தமிழர் பிரதேசங்களில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது தொடர்பான கேள்வி ஒன்றுக்குக்குப் பதில் அளித்த அவர், அவ்வாறு தமிழர் கூட்டமைப்பினர் உட்படப் பலரும் கூறுகிறார்கள் என்றாலும் அதனை நாம் நேரடியாகப் பார்வையிட்ட பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பசில் ராஜபக்சவிடம் இது பற்றித் தாம் பேசிய போது, அவர் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இதே பசில் ராஜபக்ச, இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தடுப்பு முகாம்களில் இன்னும் 35,000 பேர் இருப்பதாகக் கூறிய போது, அப்படி ஏதும் இல்லை இன்னும் சிலரே இருக்கிறார்கள் என அறிவித்திருந்தார். கலைஞரின் சீடர், ஐ.நா பிரதிநிதியின் கூற்றை நம்பாது, இந்தியாவின் நட்பு நாடான இலங்கையின் &#8220;பொருளாதார மேம்பாட்டு&#8221; அமைச்சரின் சொல்லை ஏற்றுக்கொள்கிறார் போலும்.</p>
<p style="text-align: justify;">நல்ல வேளை முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் தமிழர்கள் மூன்றே நாட்களில் பலியானதற்கும் ஆதாரம் தேவை என்று சொல்லாமல் விட்ட அவரது &#8220;தமிழ் உணர்வை&#8221;ப் பாராட்டத்தான் வேண்டும்!</p>
<p style="text-align: justify;">இந்தியா இலங்கைக்கு உதவி செய்யத்தான் முடியும். அங்கு &#8220;பொலீஸ்காரன்&#8221; வேலை பார்க்க முடியாது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படி ஒரு வேளை &#8220;பொலீஸ் வேலை&#8221; பார்த்தாலும் ஆகப் போவது எதுவும் இல்லை என்பது தெரிந்ததே. சிவசங்கர் மேனனும்,பிரணாப் முகர்ஜியும், கலைஞரின் &#8220;சிறப்பு&#8221; உண்ணா நோன்பும் சாதிக்காத வித்தையையா &#8220;பொலீஸ்காரன் வேலை&#8221; நிகழ்த்திவிடும் ?</p>
<p style="text-align: justify;">இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மாநிலப் பொதுத் தேர்தல்; மீண்டும் உங்கள் அரசையும், மத்திய அரசையும் ஈழத் தமிழர்களுக்காகக் &#8220;கண்ணீர் உகுக்கும்&#8221; நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை  &#8220;தமிழக அரசியல்&#8221; பற்றிய ஆரம்ப அறிவு படைத்தவர்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை!</p>
<p style="text-align: justify;">என்றாலும், நீங்கள் பேசுவதும்,செய்வதும் உங்களுக்கே &#8220;நியாயமாக&#8221;ப் படுகிறதா ?</p>
<p style="text-align: justify;">அண்டை மாநிலம் ஒன்றில், அதுவும் ஒரே இனத்தினராய் வாழும் உங்களுக்கே, உங்கள் சகோதரர்களது உணர்வினையும், அவர்கள் படும் துயரினையும் புரிந்து கொள்ள இயலாமல் அவர்கள் அடையும் அத்தனை அவமானங்களுக்கும், உயிர்-உடமை இழப்புகளுக்கும் சாட்சிகள் தேவை என்று சொல்வீர்களேயானால் உங்களிடம்போய் தமிழினத்தின் அவல நிலையைக் கூறுவதே அவமானம் அல்லவா?</p>
<p style="text-align: justify;">&#8220;தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்&#8221; என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா? பதவிகளில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பொருந்தாதா ?</p>
<p style="text-align: justify;">இதோ உங்களது பேட்டி வெளியான அதே &#8220;வீர கேசரி&#8221;யின் 29 ஆம் பக்கத்தில், சரணடைந்த தமிழ்ப் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகி இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">சென்றவாரம் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அரசின் பொலீசாரும்,சிறை அதிகாரிகளும் அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொண்ட சோதனை மிலேச்சத்தனமாக இருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">ஆண்கள் சுற்றியிருக்க பெண்களின் உள்ளாடைகளைத் தளர்த்திவிட்டுப் போதைப் பொருள், &#8220;சிம் கார்ட்&#8221; இவைகளைத் தேடும் போர்வையில் அவ்வதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள். தமது இன உறுப்புகளின் மீது நடத்தப்பட்ட இவ் வக்கிரத்தைப் பொறுக்க முடியாமல், அப் பெண்களில் சிலர்,” நாம் திருமணம் ஆகாதவர்கள். இப்படியான மோசமான பரிசோதனைகளை எமக்குச் செய்யாதீர்கள்” எனக் கூறிய போது, ஓர் தமிழ் பேசும் அரச அதிகாரி …”நான் இன்று எதுவும் செய்யக்கூடாது சமய ரீதியான முக்கிய நாள் இது” என்று &#8220;நக்கலாக&#8221;ப் பதில் உரைத்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">கலைஞரின் சீடருக்கு, இவை போன்ற சம்பவங்களுக்கும் சாட்சியங்கள் தேவைப்பட்டால் நாம் என்ன செயவது?</p>
<p style="text-align: justify;">ஓர் அரசியல் வாதியாக, ஆளும் கட்சி ஒன்றின் முதிர்ந்த தலைவராக இருக்கும் ரி.ஆர். பாலு அவர்களே, நீங்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசமாக இருங்கள்.அதுதான உங்களுக்கும் பாதுகாப்பு. ஆனால், அதற்காக ஈழத்தில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை உங்கள் அரசியல் சதுரங்கத்தின் துருப்புச் சீட்டு என எண்ணிச் செயல்படுவது &#8220;மானிட விழுமியங்களுக்கு&#8221; எதிரானதாகும் என்பதை உணருங்கள். ஈழத்தின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் &#8220;கலைஞ&#8221;ரிடம் எடுத்துச் சொன்னவற்றை விடவும் உங்களுக்கு, பசில் ராஜ பக்சே கூறியது வேதவாக்காக இருக்கலாம். ஆனால் ஈழத்தில் கடந்த அறுபது வருடங்களாக அரசியல் முகவரியைச் சிறிது சிறிதாகச் சிங்களப் பெரும்பான்மையிடம் பறிகொடுத்து, இன்று மானத்தையும் இழந்து நிற்கும் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கூறுவன யாவும் ஓர் &#8220;மூன்றாந்தர அரசியல் வாதியின் தந்திரப் பேச்சாகவே&#8221; தோன்றும்.</p>
<p style="text-align: justify;">ஈழத்தமிழனின் அரசியல் வரலாறு, உங்கள் தலைவர் &#8220;கலைஞ&#8221;ருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும், அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய வீர வசனங்களையே மறந்துவிட்டு &#8220;எட்டிய மட்டும்கூடப் பாயத்துணியாத&#8221; வர்களாய் இருப்பது தமிழினத்தின் சாபக் கேடே!</p>
<p style="text-align: justify;"><strong>சர்வசித்தன்</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf" title="இராணுவத் தளபதி" >இராணுவத் தளபதி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8563" title="அடுத்த இராணுவத் தளபதியும் அமெரிக்காவிற்கு போகிறாராம்! (April 14, 2010)">அடுத்த இராணுவத் தளபதியும் அமெரிக்காவிற்கு போகிறாராம்!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14759</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் விசாரணை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14756</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14756#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 06:24:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[விடுதலைப் புலிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14756</guid>
		<description><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் விசாரணை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-2527" title="pulam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/n-22112009-ulakirku-erravaru-mudiyathu-01.JPG" alt="" width="100" height="80" />தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">பல்வேறு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவக்கை எ<span id="more-14756"></span>டுக்கப்படும் என குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலி உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது குற்றத் தடுப்புப் பிரிவினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மீன் பிடிப் படகுகளின் மூலம் இவ்வாறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் கிடைக்கப் பெறும் பணத்தைக் கொண்டு விடுதலைப் புலிகளை மீள அமைப்பதற்கு நிதி உதவிகள் வழங்கப்படுவதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d" title="விடுதலைப் புலிகள்" >விடுதலைப் புலிகள்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8068" title="இங்கிலாந்து விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிக்கு தற்காலிகத் தடை (April 2, 2010)">இங்கிலாந்து விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிக்கு தற்காலிகத் தடை</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1329" title="பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்! பொன்சேகோ (November 19, 2009)">பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்! பொன்சேகோ</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5017" title="யாழில் தேர்தலைப் புறக்கணியுங்கள்: விடுதலைப் புலிகள் பெயரில் ஈ.பி.டி.பியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் (January 19, 2010)">யாழில் தேர்தலைப் புறக்கணியுங்கள்: விடுதலைப் புலிகள் பெயரில் ஈ.பி.டி.பியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14187" title="வட பிராந்திய மக்களின் மனங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் ஆதரவு உள்ளது: கோத்தபாய (August 18, 2010)">வட பிராந்திய மக்களின் மனங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் இன்னமும் ஆதரவு உள்ளது: கோத்தபாய</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7272" title="ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா? (March 13, 2010)">ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14756</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>3வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மனிதநேய நடை பயணம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14746</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14746#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 15:17:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14746</guid>
		<description><![CDATA[3வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மனிதநேய நடை பயணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14748" title="2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/24-100x80.jpg" alt="" width="100" height="80" />ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (30.08.2010) 3வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">நேற்று முன்தினம் <span id="more-14746"></span>(28.08.2010) ஜெனீவாவிலிருந்து Nyon வரை 23km தூரம் வந்தடைந்த இவர்கள் நேற்று (29.08.2010) தொடர்ந்து Rolle, Morges ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42km தூரம் நடந்து Lausanne-Renens பிரதேசத்தை சென்றடைந்தனர். இன்று (30.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடரும்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் பலர் இணைந்து நடந்தும் சென்றனர்.<br />
இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார்.</p>
<p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14747" title="1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/14.jpg" alt="" width="500" height="397" /><img class="aligncenter size-full wp-image-14748" title="2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/24.jpg" alt="" width="500" height="536" /><img class="aligncenter size-full wp-image-14749" title="3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/34.jpg" alt="" width="500" height="381" /><img class="aligncenter size-full wp-image-14750" title="4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/44.jpg" alt="" width="500" height="236" /><img class="aligncenter size-full wp-image-14751" title="5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/54.jpg" alt="" width="500" height="381" /><img class="aligncenter size-full wp-image-14752" title="6" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/63.jpg" alt="" width="500" height="336" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d" title="ஐரோப்பிய ஒன்றியம்" >ஐரோப்பிய ஒன்றியம்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6276" title="சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது (February 15, 2010)">சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14746</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14741</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14741#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 15:01:22 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[வலம்புரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14741</guid>
		<description><![CDATA[வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-9196" title="Vanni" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/Vanni.jpg" alt="" width="100" height="80" />யுத்தத்தின் வெற்றி மூலம் நாட்டை இணைத் தாலும் மக்களை இணைக்க முடியவில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்த கருத் துக்கள் ஆழமானவை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை யுத்த வெற்றி மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது.</p>
<p style="text-align: justify;">ஆனால் சிங்கள, த<span id="more-14741"></span>மிழ் இனங்கள் ஒற்றுமைப்படவில்லை. அவர்களிடையே இன்னமும் வேற்றுமை அதிகரித்துள்ளது என்பதே அமைச்சர் டியூ.குணசேகரவின் கருத்து. அப்படியானால் மக்களை இணைக்க வேண்டும். ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பது அமைச்சரின் முடிபாக இருக்கும். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியமை வர வேற்கப்பட வேண்டியதொன்றாகும்.</p>
<p style="text-align: justify;">அதேநேரம் அவர் கூட மக்களை இணைப்பதற்கான திட்ட முன்மொழிவுகளை முன்வைக்க முடியாதென்பதும் நிறுத்திட்டமான உண்மை. அந்தளவிற்கு இந்த நாட்டில் பேரினவாதம் புரையோடிப் போயுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர், ஏ-9 பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தென் பகுதி மக்கள் பெருந்தொகையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இவர்களின் வருகை குறித்து தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. இவர்கள் தாங்கள் உண்டு. தங்கள் பாடு உண்டு என்ற நிலையில் எதையோ இழந்தவர்களாக நடமாடுகின்றனர். அவர்களோ தாங்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி எதுவும் செய்யலாம் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">சில இடங்களில் வீதிகளில் வாகனங்களை மறித்து பொலிஸாரும் படையினரும் தங்கள் சிங்கள உறவுகளிடம் குசலம் விசாரிக்கின்றனர். பிரதான வீதிகளில் கூட இந்த நிலை காணப்படுகின்றது. இதற்கு மேலாக தென் பகுதியில் இருந்து வருபவர்கள் கலாசாரப் பிறழ்வான செயற்பாடுகளை இங்கு அறிமுகப்படுத்துவதான செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. எவரும் எதுவும் கேட்கமுடியாதென்ற நிலையில் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து அரசு கவனம் செலுத்த தவறுமாயின், அமைச்சர் டியூ.குணசேகர கூறிய மக்களை இணைக்க முடியவில்லை என்ற குறைபாடு நிரந்தரமாக நீண்டு செல்வதைத் தடுக்க முடியாது போய் விடும்.</p>
<p style="text-align: justify;">எனவே யாழ்.குடாநாட்டுக்கு வருகை தருகின்ற தென்பகுதி மக்கள் யாழ்ப்பாண மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாதென்பதுடன் தென் பகுதி மக்களுக்கு மட்டுமே நாம் உறவானவர்கள் என்ற உணர்வை படையினர் வெளிப்படையாகக் காட்டுவதும் அவ்வளவு நல்லதல்ல.</p>
<p style="text-align: justify;">வலம்புரி</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf" title="வலம்புரி" >வலம்புரி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10495" title="வன்னிப் போர் வரலாறு நூலுருப் பெற வேண்டும்: வலம்புரி (May 19, 2010)">வன்னிப் போர் வரலாறு நூலுருப் பெற வேண்டும்: வலம்புரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9459" title="யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்: வலம்புரி (May 1, 2010)">யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்: வலம்புரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9095" title="சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்: வலம்புரி (April 24, 2010)">சம்பந்தனுக்கு ஓர் அன்பு மடல்: வலம்புரி</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5806" title="சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா? வலம்புரி ஆசிரியர் தலையங்கம் (February 4, 2010)">சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா? வலம்புரி ஆசிரியர் தலையங்கம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8326" title="வாருங்கள் கங்கையில் நீராடி காசியில் பிரதட்சணம் செய்வோம்: வலம்புரி (April 10, 2010)">வாருங்கள் கங்கையில் நீராடி காசியில் பிரதட்சணம் செய்வோம்: வலம்புரி</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14741</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் வெளியீடு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14734</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14734#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:55:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முத்துக்குமார்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14734</guid>
		<description><![CDATA[ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் வெளியீடு ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14735" title="muthu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/muthu-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரை நிறுத்தக் கோரி, தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் ஜனவரி 29 என்கிற பெயரில் உருவாகி உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா 29.08.2010 அன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள<span id="more-14734"></span> பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு படத்தை வெளியிடுகிறார். முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இயக்குநர்கள் சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை, எழுத்தாளர் பாலமுரளி வர்மன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14736" title="muthukumar" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/muthukumar.jpg" alt="" width="495" height="720" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d" title="முத்துக்குமார்" >முத்துக்குமார்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4887" title="29ல் சென்னை தங்கசாலையில் முத்துக்குமார் நினைவுக்கூட்டம் (January 16, 2010)">29ல் சென்னை தங்கசாலையில் முத்துக்குமார் நினைவுக்கூட்டம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5365" title="கனடாவில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்கள் நினைவு நாள் (January 27, 2010)">கனடாவில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்கள் நினைவு நாள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6036" title="தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம் (February 10, 2010)">தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5439" title="சிதம்பரத்தில் முத்துக்குமார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் (January 28, 2010)">சிதம்பரத்தில் முத்துக்குமார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5586" title="மதுரையில், முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் (January 31, 2010)">மதுரையில், முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14734</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மணலாறு ஒப்பரேசன் மின்னல் படையெடுப்பு முடியடிக்கபட்ட நாள் (30-08-1991)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14730</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14730#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:51:21 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[மணலாறு ஒப்பரேசன் மின்னல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14730</guid>
		<description><![CDATA[மணலாறு ஒப்பரேசன் மின்னல் படையெடுப்பு முடியடிக்கபட்ட நாள் (30-08-1991)]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/manara.jpg" alt="" title="manara" width="100" height="80" class="alignleft size-full wp-image-14731" />29.08.1991 அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லேப்.கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர்.</p>
<p>300 வரையான தம<span id="more-14730"></span>து சிப்பாய்களை இழந்து சிங்களப் படை தோல்வியைச் சந்தித்தது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d" title="மணலாறு ஒப்பரேசன் மின்னல்" >மணலாறு ஒப்பரேசன் மின்னல்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14730</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8221;பூவுக்குள்&#8221; குறும்படம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14725</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14725#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:46:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பூவுக்குள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14725</guid>
		<description><![CDATA[''பூவுக்குள்'' குறும்படம் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14726" title="poovukkul" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/poovukkul-100x80.jpg" alt="" width="100" height="80" />&#8221;பூவுக்குள்&#8221; இது ஒரு மிகச் சிறிய குறும்படம்.</p>
<p style="text-align: justify;">ஒரு சிறுமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்லாது, உண்மைச் சம்பவத்தையும் உள்ளடக்கியது. சுனாமியினால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த ஒரு சிறுமியின் வலியையும், எமது இனம் படுகொலை செய்<span id="more-14725"></span>யப்பட்டதற்குக் காரணமானவர்களையும் தெளிவாக சுட்டிக்காட்டும் படம்.</p>
<p style="text-align: justify;">இப்படத்தில் தன் குடும்பத்தை பறித்தெடுத்த கடலையே மன்னிக்க மறுக்கும் பிஞ்சு உள்ளம், ஆனால் தெரிந்தே எம் உறவுகளை கொன்றொழித்த சிங்களத்தோடு, சேர்ந்தியங்க நினைப்பவர்களுக்கு செருப்படியாகும்.</p>
<p style="text-align: justify;">சுனாமியினால் சுருண்ட எமது மக்களை சுதாரிக்க விடாமல் உலக வல்லாதிக்க சக்திகளோடு இணைந்து எமது இனத்தை அழித்ததையும் தெளிவாக்கும் படம். சுனாமி விட்டுச்சென்ற பூக்களையும் சுட்டுக் கொன்றவனையும் இனம் காட்டும் படமாக இது அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/mbFPMVWn0E8?fs=1&amp;hl=en_US" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="385" src="http://www.youtube.com/v/mbFPMVWn0E8?fs=1&amp;hl=en_US" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object><c/enter></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d" title="பூவுக்குள்" >பூவுக்குள்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14725</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நீதிக்காக அலையும் ஒரு தேசிய இனத்தின் குரல்: நாடுகடந்த தமிழீழ அரசு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14722</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14722#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:38:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடுகடந்த தமிழீழ அரசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14722</guid>
		<description><![CDATA[நீதிக்காக அலையும் ஒரு தேசிய இனத்தின் குரல்: நாடுகடந்த தமிழீழ அரசு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-9001" title="naadu_logo" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/naadu_logo.jpg" alt="" width="100" height="80" />அன்பானவர்களே!, உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழை தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனத்தவர்கள் நாம். இலங்கையின் வடக்கு-கிழக்கு பாரம்பரிய நிலத்தை எமது தாயகமாகக்கொண்ட ஈழத்தமிழ் இனத்தவர்கள் நாம்.</p>
<p style="text-align: justify;">உலகில் வரையறை<span id="more-14722"></span> செய்யப்பட்ட சுயநிர்ணய உரிமையை முழுமையாக பெற்றவர்களும் அதை மிகச்சிறிய அளவிலேனும் செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாதவர்களும் நாம்தான். எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சென்ற வருடத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் மிகமோசமாக அழிக்கப்பட்ட பொழுதினில் நிகழ்ந்த இனப்படுகொலையையும், இன்றுவரை தொடரும் இனச்சுத்திகரிப்புகளையும் நீங்கள் அறிவீர்கள்.</p>
<p style="text-align: justify;">சென்றவருடத்தில் யுத்தம் மிகஉச்சத்தில் இருந்தபொழுதில் பாதுகாப்பு பிரதேசங்கள் என்று சிறீலங்கா அரசாங்கமே பிரகடனம் செய்த பகுதிகளில் தஞ்சம் புகுந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு செறிவான தாக்குதல்களை நடாத்தி எமது மக்களை கொன்று குவித்த சிறீலங்காவின் படைகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் எமது தேசிய இனத்தின் மீது நிகழ்த்தி இருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">அந்த இறுதிநாட்களில் 50,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டதையும் உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">இது நிகழ்ந்து ஒருவருடத்துக்கும் மேலாகிய பொழுதிலும் இந்த மானுட விரோத செயலை செய்தவர்களும், அதற்கு உத்தரவு வழங்கியவர்களும் இன்னும் நீதியின் முன்நிறுத்தப்படாதது மட்டுமல்ல அவர்கள் இன்றுவரையும் இலங்கையில் தமிழ் தேசிய இனத்தின் அனைத்து இருப்புகளையும் சிதைக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் இருப்பதும் வேதனைக்குரியது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் கடந்த யூலை மாதம் 23ம் திகதி லண்டனில் இருந்து சிவந்தன் என்ற தமிழ் இளைஞன் மறுக்கப்பட்டதும், மறக்கப்பட்டதுமான நீதியைத் தேடி கால்நடையாக ஐ.நாவின் ஜெனீவா செயலகத்தை நோக்கி  நடந்துள்ளார். ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமான சாலைகளில் மேடும், பள்ளமுமான வீதிகளில் மழையிலும், கடும்வெயிலிலும் அந்த இளைஞன் தொடர்ந்து நடந்த பொழுதில் அந்தப் பிரதேசத்து தமிழ்மக்களும், ஐரோப்பிய மக்களும் திரண்டு தமது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளனர். ஆகஸ்ட் 20ம் திகதி ஜெனீவா ஐ.நா முன்றலில் கூடும் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மத்தியில் தனது கோரிக்கைகளை அந்த இளைஞன் ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">அந்த இளைஞனின் குரலுடன் எமது கோரிக்கைகளும் இணைந்து நாமும் எமது வேண்டுகோளை உலகின் பொதுவான அமைப்புகளுக்கும், நாடுகளின் தூதரகங்களுக்கும், மானிட உரிமை மற்றும் சுதந்திரத்துக்கான அமைப்புகளின் முன்னிலையில் வைக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">அன்பானவர்களே!, ஆயிரக்கணக்கான மைல் தூரம் நடந்துவந்து உலக பொது அமைப்பான ஐ.நாவின் முன்பாக</p>
<p style="text-align: justify;">1. தமிழ்த் தேசிய இனத்தின் மக்கள் மீதான சிங்களத்தின் போர்க்குற்றங்கள் சுயாதீன முறையில் விசாரிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">2. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்களும், போராளிகளும் நிபந்தனை இன்றி விடுவிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">3. மனித உரிமைகளை முழுமையாக பேணும்வரை சிறீலங்கா அரசை சர்வதேசம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">போன்ற கோரிக்கைகளை கையளித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">சர்வதேச உரிமை பிரகடனங்களின் மூலம் அவர் இத்தகைய கோரிக்கைகளை விடுவதற்கு அனைத்து உரிமையும் உள்ள ஒரு பொதுமகன் என்பதை ஏற்பீர்கள் என்றுநாம் நம்புகின்றோம். ஒரு தேசிய இனமும் அதன் மக்களும் தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் சூழல் எதிர்காலத்தில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை அந்த பிரதேசங்களில் ஏற்படுத்தும் என்பதை கடந்த பல நாட்டு வரலாறுகளில் இருந்து அறிவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">அதிலும் இப்போது ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்துள்ள இளைஞன் எமது இனத்தின் வருங்கால மனிதர்களில் ஒருவர். இவரைப் போன்ற பல லட்சம் இளைஞர்கள் இருக்கின்றார்கள். எமது வருங்கால தலைமுறையினருக்கு இன்னமும் உலகில் மனிதநேயமும், நீதியும் இருக்கின்றது என்பதை நிரூபணம் செய்தாகவேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.அதற்காகவேனும் சர்வதேச அமைப்புகள் இதில் தமது கவனத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் செலுத்தவேண்டிய அவசரத்தேவை உள்ளதை அன்புடன் சுட்டிக்காட்டவேண்டிய தேவை உள்ளது.</p>
<p style="text-align: justify;">எனவே, போர்க்குற்ற விசாரணையை எந்தவித தாமதமும் இன்றி நேர்மையுடன் முன்னெடுக்க வேண்டுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">அதைப்போலவே யுத்த இறுதி நாட்களில் சரண் அடைந்ததும், சிறைபிடிக்கப்பட்டதுமான பல ஆயிரம் போராளிகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய ‘போர்க்கைதிகள்’ என்ற வரையறைக்குள் பராமரிக்கவும், அதற்குள்ளான உரிமைகளை வழங்கவும் வேண்டுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">(இதற்கு முன்பு பல தடவைகள் அந்த போராளிகள் சார்ந்த அமைப்பும், சிறீலங்கா அரசும் போர்க்கைதிகள் என்ற வரையறைக்குள் பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொண்டதை நினைவுபடுத்துகின்றோம்).</p>
<p style="text-align: justify;">மற்றும், சிறீலங்கா அரசு இன்னமும் தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதனை சர்வதேசம் உன்னிப்பாக கண்காணித்து மனித உரிமை அங்கு முழுமையாக பேணும் வரைக்கும் அந்த அரசைப் புறக்கணித்து வைக்க ஆவனசெய்யுமாறு வேண்டுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">மிகுந்த அன்புடனும், உள நேர்மையுடனும் இந்த கோரிக்கைகளை உங்கள் முன்வைக்கும் நாம் இவை சம்பந்தமான அனைத்து விபரக் கோர்வையையும், அதனுடன் இணைந்த சாட்சியங்களையும் எந்தநேரத்திலும், நீங்கள் கேட்கும் பட்சத்தில், வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றோம்.</p>
<p style="text-align: justify;">நன்றி.</p>
<p style="text-align: justify;">திரு உருத்திராபதி சேகர் &#8211; ஒருங்கு கூட்டுனர்<br />
போராளிகள், மாவீரர்கள் குடும்ப நலன்பேணல் குழு,<br />
நாடு கடந்த தமிழீழ அரசு.<br />
Room No. 10, 27 Northolt Road, South Harrow, Middlesex</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81" title="நாடுகடந்த தமிழீழ அரசு" >நாடுகடந்த தமிழீழ அரசு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10294" title="நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்நோக்கும் சவால்கள் (May 16, 2010)">நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்நோக்கும் சவால்கள்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1116" title="நாடு கடந்த தமிழீழ அரசு பயனற்ற கட்டமைப்பாம் (November 17, 2009)">நாடு கடந்த தமிழீழ அரசு பயனற்ற கட்டமைப்பாம்</a> (3)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5072" title="தமிழர்களை இருதுருவப்படுத்த முயல்பவர்களின் அரங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசு (January 20, 2010)">தமிழர்களை இருதுருவப்படுத்த முயல்பவர்களின் அரங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசு</a> (6)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14722</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14719</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14719#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:35:44 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிருபமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14719</guid>
		<description><![CDATA[நிருபமா ராவ் வருகையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இடம்பெயர் மக்கள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-9724" title="camp" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/camp.jpg" alt="" width="100" height="80" />செட்டிகுளம் &#8220;வலயம் நான்கு&#8221; நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள &#8220;வலயம் நான்கு&#8221; நலன்புரி நிலையத்தில் நான்காயிரத்திற்கு<span id="more-14719"></span> மேற்பட்ட மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கடந்த வாரம் குறித்த கிராம மக்களை அங்கிருந்து வெளியேறி கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்குமாறு இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் ஏழாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த &#8220;வலயம் நான்கு&#8221; மக்கள் &#8220;எம்மை எமது வீடுகளிற்குச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் பறவாய் இல்லை. எமது ஊர்களில் உள்ள பாடசாலைகளிலாவது தங்கவையுங்கள். மீண்டுமொரு முகாமிற்கு நாங்கள் இடம்பெயரத் தயார் இல்லை&#8221; என வலியுறித்தித் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">இதனை அடுத்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினை இடைநிறுத்தியிருந்த இராணுவத்தினர் இன்று முற்பகல் மக்களை அழைத்து நாளை பத்து மணிக்கு முன்னர் வெளியேறவேண்டும் என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை மக்களின் பிரதிநிதிகள் இராணுவத்தினரை நாடி இந் நடவடிக்கையினைக் கைவிடுமாறு கேட்ட போது தமக்கு மேலிடத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தம்மால் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் வலயம் நான்கில் வசதிகள் அற்ற நிலையில் வாழ்கின்ற மக்களைப் பார்வையிடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திடீர் மாற்றம் என பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவப் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be" title="நிருபமா" >நிருபமா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7073" title="தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு (March 8, 2010)">தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடனும் சிறிலங்காவுடனும் இந்தியா முக்கிய பேச்சுக்களை நடத்தும்: நிருபமா தெரிவிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7095" title="முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு (March 9, 2010)">முதலமைச்சர் சந்திரகாந்தனை இந்தியா வருமாறு நிருபமா அழைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6938" title="இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார் (March 4, 2010)">இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14767" title="வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார் (August 31, 2010)">வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14825" title="கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா (September 1, 2010)">கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை: யாழ்.மக்கள் முன் நிருபமா</a> (6)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14719</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தில் இரவு நேரப் பேருந்துகளில் இளைஞர்களின் தொல்லை அதிகரிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14716</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14716#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:28:49 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14716</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் இரவு நேரப் பேருந்துகளில் இளைஞர்களின் தொல்லை அதிகரிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-13919" title="jaffna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/jaffna-100x80.jpg" alt="" width="100" height="80" />யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவ<span id="more-14716"></span>தால் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால் வேலைக்குச் சென்று திரும் புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது குறிப்பிடத் தக்கது.</p>
<p style="text-align: justify;">எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்திவிட்டு வரும் சில இளைஞர்கள் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முனைவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இவை கூடுதலாகத் தனியார் சிற்றூர்திகளிலேயே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஒரு சில நடத்துநர்கள் கண்டித்தாலும், பல நடத்துநர்கள் கண்டும் காணாதது போல் செயற்படுவதாகவும், பொதுமக்களால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d" title="யாழ்" >யாழ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7371" title="யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்க வேண்டும் (March 15, 2010)">யாழ்ப்பாண மக்களை அறிய ஏழு பிறப்பு எடுக்க வேண்டும்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6118" title="பொதுதேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 25 பேருக்கு அவசர அழைப்பு (February 12, 2010)">பொதுதேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து 25 பேருக்கு அவசர அழைப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8310" title="யாழ்.மாவட்ட வாக்காளரின் மனநிலை என்னவாயிற்று…..? (April 9, 2010)">யாழ்.மாவட்ட வாக்காளரின் மனநிலை என்னவாயிற்று…..?</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9459" title="யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்: வலம்புரி (May 1, 2010)">யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்: வலம்புரி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8153" title="கூட்டமைப்பிற்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விலக்கியது? (April 4, 2010)">கூட்டமைப்பிற்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விலக்கியது?</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14716</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி முக்கியமானதாம்: பசில்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14713</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14713#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 06:24:03 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14713</guid>
		<description><![CDATA[இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி முக்கியமானதாம்: பசில்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-1576" title="kilinochi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/kilinochi-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களி<span id="more-14713"></span>ல் மீளக்குடியமர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடர்பான உயர்மட்ட மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே இதனை அவர் கூறியிருக்கின்றார். இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிகவும் முக்கியமானது. இங்குள்ள விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க முடியும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் ஏ9 வீதியில் காணப்படுகின்ற கூரையற்ற கட்டிடங்கள் அனைத்தையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும், மற்றவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசில் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் மூலம், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 222 பேரைக் கொண்ட 33 ஆயிரத்து 657 குடும்பங்கள் இதுவரையில் அந்த மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள விவசாய குடும்பங்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88" title="இலங்கை" >இலங்கை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5076" title="இலங்கை ஐனாதிபதித் தேர்தலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் (January 20, 2010)">இலங்கை ஐனாதிபதித் தேர்தலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12682" title="இலங்கை நிலைவரம் தொடர்பில் ஆராய தூதரை அனுப்புங்கள் மன்மோகனுக்கு கருணாநிதி கடிதம்! (July 18, 2010)">இலங்கை நிலைவரம் தொடர்பில் ஆராய தூதரை அனுப்புங்கள் மன்மோகனுக்கு கருணாநிதி கடிதம்!</a> (7)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1007" title="இலங்கையில் நடக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல்; இந்தியாவுக்கு &#8220;தலையிடி&#8221; (November 15, 2009)">இலங்கையில் நடக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல்; இந்தியாவுக்கு &#8220;தலையிடி&#8221;</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10972" title="ஆதாரம் காட்டியும் அசையாத இலங்கை அரசு! (June 2, 2010)">ஆதாரம் காட்டியும் அசையாத இலங்கை அரசு!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14255" title="மலேசியாவிலே வாடும் 75 இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலக்குரல் (August 19, 2010)">மலேசியாவிலே வாடும் 75 இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலக்குரல்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14713</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14708</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14708#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 13:59:08 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14708</guid>
		<description><![CDATA[நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-13670" title="pulikkodi_new" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pulikkodi_new-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் மே<span id="more-14708"></span>லும் தெரியவருவதாவது:</p>
<p style="text-align: justify;">நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27) பரிந்துரை செய்துள்ளது.</p>
<p style="text-align: justify;">மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய சிறீலங்கா அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d" title="தமிழீழ விடுதலைப்புலிகள்" >தமிழீழ விடுதலைப்புலிகள்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3979" title="மதுரையில் எம்.ஜி.ஆரின் நினைவை முன்னிட்டு &#8220;நாம் தமிழரின்&#8221; சுவரொட்டிகள் (December 24, 2009)">மதுரையில் எம்.ஜி.ஆரின் நினைவை முன்னிட்டு &#8220;நாம் தமிழரின்&#8221; சுவரொட்டிகள்</a> (5)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14708</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜோடி நம்பர் வண் நிகழ்ச்சியில் ஈழத்து கலைஞர்களின் தாயக நிலவரம் (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14703</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14703#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 12:24:01 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோடி நம்பர் வண்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14703</guid>
		<description><![CDATA[ஜோடி நம்பர் வண் நிகழ்ச்சியில் ஈழத்து கலைஞர்களின் தாயக நிலவரம் (காணொளி இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14704" title="jodi" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/jodi-100x80.jpg" alt="" width="100" height="80" />தாயக நிலவரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வை விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் வண் என்ற நிகழ்ச்சி ஊடாக ஈழத்து கலைஞர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">மனதை உருக்கும் நிகழ்வை பாடலுக்கான நடனமாக ஏற்படுத்தி அனைவரின மனதிதையும் தொட்ட நிகழ்வாக <span id="more-14703"></span>அமைந்திருந்தது.</p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/p/28FB8A18C5ED9917?hl=en_US&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="385" src="http://www.youtube.com/p/28FB8A18C5ED9917?hl=en_US&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d" title="ஜோடி நம்பர் வண்" >ஜோடி நம்பர் வண்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14703</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக கனடிய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14695</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14695#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 11:03:25 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் அகதி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14695</guid>
		<description><![CDATA[தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக கனடிய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14696" title="canadian_arppaaddam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/canadian_arppaaddam-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரைக் கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கனடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அணுகுமுறை மீது ஆத்திரம் கொண்டே இவர்கள் வன்கூவ<span id="more-14695"></span>ர் கலா பவனத்தில் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சில வாரங்களுக்கு முன்னர் சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைந்த தமிழ்க் குடியேற்றவாசிகள் 492 பேரும் குடிவரவு குறித்த நடைமுறைகளின் பேரில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் திசுக் கடதாசிகளில் செய்யப்பட்ட பூக்களை விநியோகித்ததுடன் கனடிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜேசன் கென்னியையும் கொடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருடைய அமைச்சு இருவகை வழிமுறைகளைக் கொண்டதென்றும், வறிய நாடுகளில் இருந்து வரும் வெள்ளையரல்லாத குடியேற்றவாசிகளை தண்டிக்கிறதென்றும் கோஷமிட்டனர்.</p>
<p style="text-align: justify;">அகதிகள் தொடர்பில் விரோத எண்ணமும் அச்சமும் தெரிவிக்கப்பட்டு வருவதைக் கண்டு நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்&#8217; என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவரான ஹர் ஷா வாலியா தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அகதிகள் குறித்து வசையாக வந்து குதிப்பவர்கள், பயங்கரவாதிகள், குற்றச்செயலில் ஈடுபட்டோர் போன்ற வார்த்தைகளை மறவாதிருக்கும் வகையில் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">ஆனால் சட்டத்தில் இவைகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறவில்லை. அப்படியிருந்தும் அரச அதிகாரிகள் அலுப்புத் தட்டும் அந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்&#8221; என்றார் அவர்.</p>
<p style="text-align: justify;">வாலியாவும் ஏனையோரும் ““ஒருவரும் சட்டவிரோதமானவர் அல்லர்&#8221; என்ற சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் 492 பேர்களின் இதயங்களை வண்ணத்தால் தீட்டிய பதாகையொன்றையும் அவர்கள் கொண்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்த 492  இதயங்களும் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வந்த 492 பேர்களையும் குறிப்பதாகும்.</p>
<p style="text-align: justify;">இதேபோன்று அகதிகள் ஆதரவு கூட்டங்கள் விக்டோரியா, டொரன்டோ ஒட்டாவா, மொன்ட்றியல் மற்றும் கிச்சனர் வாட்டர்லூவிலும் நடத்தப்பட்டதாகத் தெகிறது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14696" title="canadian_arppaaddam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/canadian_arppaaddam.jpg" alt="" width="500" height="351" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf" title="தமிழ் அகதி" >தமிழ் அகதி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14695</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எறிகணைத் தாக்குதல் காயங்களுடன் எம்.வி.சன் சி பெண் பயணி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14692</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14692#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 10:59:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[எம்.வி.சன் சி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14692</guid>
		<description><![CDATA[எறிகணைத் தாக்குதல் காயங்களுடன் எம்.வி.சன் சி பெண் பயணி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14320" title="mvsunsea" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/mvsunsea.jpg" alt="" width="100" height="80" />கனடா சென்ற எம்.வி.சன் சி கப்பல் பயணிகளில் பெண்ணொருவர் எறிகணைத் தாக்குதலில் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக மிகவும் அவதியுறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் அந்த இளம் யுவதியின் <span id="more-14692"></span>காயத்தில் பாரதூரமான கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">தான் இலங்கையிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றதாகவும், பின்னர், தான் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக சிகிச்சை பெறாமலேயே திரும்பி வந்து விட்டதாகவும் கனேடிய அதிகாகளுக்கு அவர் தெரிவித்துள்ளார் எனவும் செய்திகள் தெவிக்கின்றன.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf" title="எம்.வி.சன் சி" >எம்.வி.சன் சி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14692</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14684</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14684#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 10:48:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[மேஜர் புகழரசன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14684</guid>
		<description><![CDATA[கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14687" title="karu" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/karu-100x80.jpg" alt="" width="100" height="80" />கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்.</p>
<p style="text-align: justify;">திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தி<span id="more-14684"></span>த்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14685" title="pic227" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pic227.jpg" alt="" width="540" height="764" /><img class="aligncenter size-full wp-image-14686" title="pic228" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pic228.jpg" alt="" width="540" height="764" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%87%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d" title="மேஜர் புகழரசன்" >மேஜர் புகழரசன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14684</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லெப்.கேணல் ராஜனின் 18ம் ஆண்டு நினைவுநாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14679</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14679#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 10:45:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[லெப்.கேணல் ராஜன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14679</guid>
		<description><![CDATA[லெப்.கேணல் ராஜனின் 18ம் ஆண்டு நினைவுநாள் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14680" title="rajan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/rajan.jpg" alt="" width="100" height="80" />லெப்.கேணல் ராஜன்<br />
சோமசுந்தரம் சற்குணம்<br />
மாதகல்</p>
<p style="text-align: justify;">வீரப்பிறப்பு: 11.02.1966</p>
<p style="text-align: justify;">வீரமரணம்: 27.08.1992</p>
<p style="text-align: justify;">புலிகளின் முதன்<span id="more-14679"></span>நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர்.</p>
<p style="text-align: justify;">சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் மாதகல் பகுதியில் இராணுவம் மீதானா தாக்குதலில் வீரச்சவடைந்தார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14681" title="Lt-Col-Rajan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Lt-Col-Rajan.jpg" alt="" width="282" height="400" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d" title="லெப்.கேணல் ராஜன்" >லெப்.கேணல் ராஜன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14679</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14672</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14672#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 10:42:05 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[மேஜர் நிலவன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14672</guid>
		<description><![CDATA[கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14676" title="nilavan-mathan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/nilavan-mathan1.jpg" alt="" width="100" height="80" />யாழ்.குடாநாடு மீதான முற்றுகை வலையின் பிரதான முடிச்சான கிளாலி நிரேரியில் சிங்கள தேசத்தின் கடற்படைப் படகான நீருந்து விசைப்படகுகள் இரண்டினை வெவ்வேறு கரும்புலித் தாக்குதல்கள் மூலம் மேஜர் வரதனும் , கப்டன் மதனும் மூழ்கடித்தனர்.</p>
<p style="text-align: justify;">இவ் இரண்டு வீரர்<span id="more-14672"></span>களும் அடுத்தடுத்து நடாத்திய கரும்புலித் தாக்குதலால் கிளாலியின் மேலாதிக்கம் புலிகளின் கைகளில் வந்து வீழ்ந்தது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14673" title="nilavan-mathan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/nilavan-mathan.jpg" alt="" width="400" height="334" /><img class="aligncenter size-full wp-image-14674" title="maj_nilavan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/maj_nilavan.jpg" alt="" width="283" height="400" /><img class="aligncenter size-full wp-image-14675" title="capt_mathan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/capt_mathan.jpg" alt="" width="283" height="400" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%87%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d" title="மேஜர் நிலவன்" >மேஜர் நிலவன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14672</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படாது என நம்புகின்றோம்: கூட்டமைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14669</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14669#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 10:32:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம் காங்கிரஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14669</guid>
		<description><![CDATA[சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படாது என நம்புகின்றோம்: கூட்டமைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-4444" title="tna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/01/prasana_3-100x80.jpg" alt="" width="100" height="80" />அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காதென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.</p>
<p style="text-align: justify;">பாராளுமன்றத்துக்<span id="more-14669"></span>கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடி முடிவெடுத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பேச்சுக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏதேனும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது;</p>
<p style="text-align: justify;">இது முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்டமுடிவு. இதனால் எம்மிடையேயான பேச்சுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுமென நினைக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">அது முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி.மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் சரி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே,அந்தப் பேச்சுகளுக்கு ஆபத்து இருக்காதென நினைக்கிறேன்.</p>
<p style="text-align: justify;">அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க விரும்பினாலும் முஸ்லிம மக்கள் உட்பட சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு நிச்சயம் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதேநேரம், அரசியலமைப்பு திருத்தம் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதேனும் தீர்மானம் எடுத்திருக்கிறதா என்று கேட்டபோது;</p>
<p style="text-align: justify;">அரசாங்கம் அது பற்றிய பேச்சுகளுக்கு எம்மை அழைக்கவில்லை. ஆகையால் அரசியலமைப்பு திருத்தம் பற்றிய பேச்சுகளுக்கு போகவேண்டிய தேவையும் எமக்கில்லை.அரசியலமைப்புக்குக் கொண்டு வரப்படும் திருத்தம் என்னவென்பது பற்றி தெரியாமல் அது பற்றி பேசவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ முடியாது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d" title="முஸ்லிம் காங்கிரஸ்" >முஸ்லிம் காங்கிரஸ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12498" title="வடக்கு &#8211; கிழக்கு இணைப்பா? நடக்கவே நடக்காது என்று தமிழ் கூட்டமைப்பு மேல் பாய்கிறது முஸ்லிம் காங்கிரஸ் (July 12, 2010)">வடக்கு &#8211; கிழக்கு இணைப்பா? நடக்கவே நடக்காது என்று தமிழ் கூட்டமைப்பு மேல் பாய்கிறது முஸ்லிம் காங்கிரஸ்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14492" title="முஸ்லிம் காங்கிரஸ் எந்நேரமும் அரசு பக்கம் தாவலாம் (August 25, 2010)">முஸ்லிம் காங்கிரஸ் எந்நேரமும் அரசு பக்கம் தாவலாம்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14669</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜெனீவாவில் இருந்து பெல்யியம் நோக்கி நடைபயணம் ஆரம்பம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14644</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14644#comments</comments>
		<pubDate>Sun, 29 Aug 2010 00:09:17 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14644</guid>
		<description><![CDATA[ஜெனீவாவில் இருந்து பெல்யியம் நோக்கி நடைபயணம் ஆரம்பம் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14649" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev4-100x80.jpg" alt="" width="100" height="80" />சுவிஸ் ஜெனீவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புருசல்ஸிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைப்பயணமொன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மனிதநேயன் சிவ<span id="more-14644"></span>ந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி முருகதாசன் திடலில் தனது பயணத்தின் கோலை விட்டுச்சென்றார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">முருகதாசன் உட்பட 18 தியாகிகளின் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபயணம் ஆரம்பமானது. எதிர்வரும் 26.09.2010 அன்று தியாகதீபம் திலீபன் நினைவு நாளன்று மூன்று ஈழ உணர்வாளர்களும் சென்றடைவர். இவர்கள் சென்றடைவதை முன்னிட்டு எதிர்வரும் 27.09.2010 புருசல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முன்பாக மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும் மனுக்கையளிப்பும் இடம்பெறவுள்ளது.</p>
<p style="text-align: justify;">* இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.<br />
* எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.<br />
* மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.<br />
* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய உணர்வாளர்களே இப்பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இன்று நடைபயணத்தை மேற்கொள்வோர் கேட்டுக்கொண்டதற்கமைய சுவிஸ் ஈழத்தமிழரவையால் இந் நடைபயணம் ஒருங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தமாக 23 கி.மீ தூரத்தை கடந்து Nyon  பிரதேசத்தை சென்றடைந்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">நாளை Nyon னிலிருந்து Morges வரை செல்லவுள்ளனர். அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இணைந்து நடந்து தமது ஆதரவை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் அனைத்து ஐரோப்பா வாழ் மக்களையும் இப்பணயத்திற்கான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு நாடுவாரியான ஈழத்தமிழர் அவைகள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p>
<p><center><iframe class="youtube-player" type="text/html" width="540" height="380" src="http://www.youtube.com/embed/i0QksA0yQJE" frameborder="0"></iframe></center></p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14645" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev.jpg" alt="" width="450" height="338" /><img class="aligncenter size-full wp-image-14646" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev1.jpg" alt="" width="500" height="375" /><img class="aligncenter size-full wp-image-14647" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev2.jpg" alt="" width="450" height="338" /><img class="aligncenter size-full wp-image-14648" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev3.jpg" alt="" width="450" height="338" /><img class="aligncenter size-full wp-image-14649" title="OLYMPUS DIGITAL CAMERA" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/genev4.jpg" alt="" width="450" height="338" /><img class="aligncenter size-full wp-image-14656" title="swiss28810_1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_1.jpg" alt="" width="500" height="336" /><img class="aligncenter size-full wp-image-14657" title="swiss28810_2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_2.jpg" alt="" width="500" height="326" /><img class="aligncenter size-full wp-image-14658" title="swiss28810_3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_3.jpg" alt="" width="500" height="310" /><img class="aligncenter size-full wp-image-14659" title="swiss28810_4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_4.jpg" alt="" width="500" height="333" /><img class="aligncenter size-full wp-image-14660" title="swiss28810_5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_5.jpg" alt="" width="500" height="331" /><img class="aligncenter size-full wp-image-14661" title="swiss28810_6" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_6.jpg" alt="" width="500" height="333" /><img class="aligncenter size-full wp-image-14662" title="swiss28810_7" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_7.jpg" alt="" width="500" height="333" /><img class="aligncenter size-full wp-image-14663" title="swiss28810_8" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_8.jpg" alt="" width="500" height="325" /><img class="aligncenter size-full wp-image-14664" title="swiss28810_9" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_9.jpg" alt="" width="500" height="748" /><img class="aligncenter size-full wp-image-14665" title="swiss28810_10" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/swiss28810_10.jpg" alt="" width="500" height="788" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%80%e0%ae%b5%e0%ae%be" title="ஜெனீவா" >ஜெனீவா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13655" title="சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது (படங்கள் இணைப்பு) (August 5, 2010)">சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது (படங்கள் இணைப்பு)</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13501" title="பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம் (படங்கள் இணைப்பு) (August 3, 2010)">பரிஸ் நகரில் இருந்து ஜெனீவா நோக்கி நகரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம் (படங்கள் இணைப்பு)</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=889" title="ஈழத் தமிழர்கள் சித்தரவதைப்படுகிறார்கள்: திருமாவளவன் (November 14, 2009)">ஈழத் தமிழர்கள் சித்தரவதைப்படுகிறார்கள்: திருமாவளவன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4459" title="தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த! பின்னணி தகவல்கள்!! (January 7, 2010)">தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த! பின்னணி தகவல்கள்!!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13591" title="12வது நாளில் தொடரும் மனிதநேயப் பயணம்: ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் (படங்கள் இணைப்பு) (August 4, 2010)">12வது நாளில் தொடரும் மனிதநேயப் பயணம்: ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் (படங்கள் இணைப்பு)</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14644</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ் சிறுவர் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணாக சிறுமி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14639</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14639#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 23:43:42 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுமி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14639</guid>
		<description><![CDATA[யாழ் சிறுவர் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணாக சிறுமி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14640" title="vino" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/vino-100x80.jpg" alt="" width="100" height="80" />யாழ் நகர சிறுவர் பாடசாலை விளையாட்டு போட்டி நிகழ்வின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணாக வினோத உடை நிகழ்வுக்காக பங்குபற்றிய சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அண்மையில் நடை<span id="more-14639"></span>பெற்ற சிறுவர் விளையாட்டு நிகழ்வின்போது வினோத உடைக்கான போட்டியில் போரின்போது தனது கணவனையும் தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த பெண் ஒருவரைப்போன்று பாவனை செய்த சிறுமியே அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் முதலாவது இடத்திற்கான பரிசினையும் பெற்றுக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14641" title="jaffna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/jaffna7.jpg" alt="" width="371" height="327" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf" title="சிறுமி" >சிறுமி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8176" title="சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கு பொன்னாடை (April 5, 2010)">சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கு பொன்னாடை</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14639</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? &#8211; வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14636</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14636#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 23:15:28 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணத்தில்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14636</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? - வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-6831" title="jaffna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/jaffna-bus-stand.jpg" alt="" width="100" height="80" />யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக யா<span id="more-14636"></span>ழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெறு வதாகவும் தெரியவருகின்றது. விமான ரிக்கெட் பெறப்பட்டு விட்டது. பயண ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அறிகிறோம்.</p>
<p style="text-align: justify;">நாம் அங்கு வரலாமா? என்ற கேள்விக் கணைகளையே வெளிநாட்டிலிருந்து கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு வந் துள்ள வெளிநாட்டு உறவுகள் அச்சம் காரண மாக உடனடியாகத் திரும்புவதற்கு எண்ணியுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை வெளிநாட்டிலிருந்து வந்து வடமராட்சியில் தங்கியிருந்த ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் மற்றும் கொக்குவில் பகுதியில் தங்கியிருந்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவங்கள் போன்றனவே வெளிநாட்டவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த வாரம் லண்டனிலிருந்து வந்து வடமராட்சியில் தங்கியிருந்த ஒருவர் கப்பம் கேட்டுக் கடந்த 25 ஆம் திகதி மிரட்டப்பட்டதுடன் அவரின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் என்பன மிரட்டல்காரர்களால் பறித்துச் செல்லப்பட்டன.</p>
<p style="text-align: justify;">தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அறிமுகப்படுத்திய சிலரே இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. இதேவேளை நேற்று முன்தினம் இரவு இவ்வாறான மிரட்டல் சம்பவம் ஒன்று கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வு நேற்று நடைபெறவிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவ்வீட்டுக்குச் சென்ற சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன் கப்பமும் கோரியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் மக்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தும் பணம் பறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எவரும் முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d" title="யாழ்ப்பாணத்தில்" >யாழ்ப்பாணத்தில்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5283" title="யாழ்ப்பாணத்தில் பரவலாக பல வெடிகுண்டு சத்தங்கள் (January 26, 2010)">யாழ்ப்பாணத்தில் பரவலாக பல வெடிகுண்டு சத்தங்கள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5132" title="யாழ்ப்பாணத்தில் கஜேந்திரன் எம்.பிக்கு கொலை மிரட்டல் (January 21, 2010)">யாழ்ப்பாணத்தில் கஜேந்திரன் எம்.பிக்கு கொலை மிரட்டல்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4357" title="யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலை! (January 5, 2010)">யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலை!</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14636</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்: ரணில் ஆவேசம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14633</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14633#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 23:12:11 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14633</guid>
		<description><![CDATA[ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்: ரணில் ஆவேசம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-3542" title="Ranil" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/Ranil.jpeg" alt="" width="100" height="80" />ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட துரோகம். நாம் அவர்களுக்கு அதிக இடங்களை தேர்தலின்போது வழங்கினோம் என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவேசத்துடன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">நாம் எமது தலை<span id="more-14633"></span>மையில் பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மஹிந்தவினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல்யாப்பு சீர்திருத்தத்தினை ஒழுங்கமைக்கவும், வேண்டுமெனில் மாற்றம் கொண்டுவரவும் செயற்பட்டோம். ஆனால் ஹக்கீம் இதனை குழப்பிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">நேற்று கட்சியின் அதிஉயர்பீடம் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் எனத் தெரிவித்துள்ள ரணில்,</p>
<p style="text-align: justify;">நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் தலைமையிலான ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மஹிந்தவினால் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித நிபந்தனையுமின்றி ரணில் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள மறைமுகமாக துணை போவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d" title="ரணில்" >ரணில்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4243" title="மஹிந்தா, ரணில் இருவருடனும் சம்பந்தன் தொடர்ந்தும் பேச்சு (January 1, 2010)">மஹிந்தா, ரணில் இருவருடனும் சம்பந்தன் தொடர்ந்தும் பேச்சு</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12323" title="ஐ.நா.வின் நிபுணர் குழுவால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பில்லை: ரணில் (July 8, 2010)">ஐ.நா.வின் நிபுணர் குழுவால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பில்லை: ரணில்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5547" title="தேர்தல் தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளருக்கு என்ன நடந்தது? ரணில் கேள்வி (January 30, 2010)">தேர்தல் தினத்தன்று இரவு தேர்தல் ஆணையாளருக்கு என்ன நடந்தது? ரணில் கேள்வி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6382" title="அரசாங்கம் தனது அரசியல் இலாபத்திற்காக அனைத்தையும் பிளவு படுத்த முயல்கிறது: ரணில் (February 18, 2010)">அரசாங்கம் தனது அரசியல் இலாபத்திற்காக அனைத்தையும் பிளவு படுத்த முயல்கிறது: ரணில்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6857" title="பொதுத் தேர்தலின் பின்னர் யார் வென்றாலும் ரணில் பிரதமராம் (March 1, 2010)">பொதுத் தேர்தலின் பின்னர் யார் வென்றாலும் ரணில் பிரதமராம்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14633</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கிருஷ்ணன் தூது பயனுள்ளதா?</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14630</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14630#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 22:57:54 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிருஷ்ணன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14630</guid>
		<description><![CDATA[கிருஷ்ணன் தூது பயனுள்ளதா?]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14337" title="senpakam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/senpakam1-100x80.jpg" alt="" width="100" height="80" />இந்திய பேரரசின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எஸ் கிருஷ்ணா கொழும்புக்கு வருகிறார் என்று செய்திகள் அடிபடுகின்றன. இந்தச் செய்தி ஈழத் தமிழர் வயிற்றில் பாலை வார்க்கவில்லை. முன்பு நிருபமா ராவ், மேனன் வந்தார். இப்போது கிருஷ்ணா வருகிறார் அவ்வளவுதான்.</p>
<p style="text-align: justify;">கிருஷ்ணன் பாரத் <span id="more-14630"></span>போரில் மகுடச் செய்தி. ஆனால் இப்போதைய கிருஸ்ணனின் தூது உப்புச் சப்பற்ற புளித்துப் போன செய்தி. ஈழத் தமிழர்களின் மீள்குடியேற்றம் பற்றிப் பேச அவர் வருகிறாரம். ஆனால் பிரச்சனை நிலவும் தமிழர் பகுதிக்கு அவர் வரமாட்டாராம். இரு பக்கச் பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன என்ற வாசகம் கட்டாயமாக இந்த அறிக்கையில் இடம்பெறும். அதனால் ஈழத் தமிழர்கள் ஒரு பயனும் அடையப் போவதில்லை.</p>
<p style="text-align: justify;">வெளிவிவகாரம் என்பது உள்நாட்டுப் பிரச்சனையின் நீட்சி என்பார்கள். கிருஷ்ணாவின் வருகையும் அத்தகையது தான். தமிழ் நாட்டு முதல்வர் ஈழத் தமிழர்களுக்காக வழமைபோல் மனம் மெய் உருகி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்திய அரசு கொடுத்த பணம் ஈழத் தமிழர்கள் நலனுக்குச் செலவிடப் படுகிறதா என்று உறுதி செய்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்புங்கள். இது தான் கடிதத்தின் பொருள். நானே செல்கிறேன் என்று கிருஷ்ணா கிளம்பிவிட்டார்.</p>
<p style="text-align: justify;">தமிழ் நாட்டின் மாக்சிஸ்ற் கொமியூனிஸ்ற் கட்சியின் கோரிக்கை வித்தியாசமானது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை மீள்குடியேற்றப் பிரச்சனை நிலவும் பகுதிகளுக்கு அனுப்புங்கள். அவர்கள் நேரில் சென்று அவதானிப்புக்களை மேற்கொள்ளட்டும் இது தான் இந்தக் கட்சியின் கோரிக்கை. அதைக் காதில் போட மத்திய அரசின் ஆளும்தரப்போ தமிழ் நாட்டு அரசோ தயாரில்லை. உண்மை வெளிவந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு.</p>
<p style="text-align: justify;">நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. காங்கிரஸ் &#8211; திமுக அரசியல் கூட்டணி இப்போது ஆட்டங்காணும் தறுவாயில் இருக்கிறது. சோனியாவுக்குக் கலைஞரைப் பிடிக்கம் ராகுலுக்குப் பிடிக்காது. இதற்கிடையில் ஜெயலலிதா ராகுலுக்கு வலை வீசுகிறார்.</p>
<p style="text-align: justify;">இதன் எதிரொலியாகக் கிருஷ்ணா பயணம் இடம்பெற இருக்கிறது. ஈழப் பிரச்சனை இந்தியாவில் அரசியல் பிரச்சனையாக மாறி விட்டது. ஒரு இனத்தின் மாபெரும் துயரம் கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பதை தீர்மானிக்கும் கருவியாக மாற்றப் பட்டு விட்டது. மீள்குடியேற்றம் பற்றி இந்தியாவுக்குக் கவலை இருப்பதாக ஈழத் தமிழர்கள் நம்பத் தயாரில்லை. இந்தியாவின் நகர்வுகளைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">இரு தினங்களுக்கு முன் அதிபர் மகிந்த ராஐபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஐபக்ச புது டில்லி வந்தார். அவர் மீள்குடியேற்றம் முற்றுப் பெறும் தறுவாயை நெருங்கி விட்டது. செட்டிகுளம் முகாமில் இன்னும் 10,000 இடம் பெயர்ந்தோர் மாத்திரம் இருக்கிறார்கள். இவர்களை குடியமர்த்தியவுடன் பிரச்சனை முடிந்து விடும் என்று சொன்னார்.</p>
<p style="text-align: justify;">இதைப் புது டில்லி நம்புவதற்குத் தயாராக இருக்கிறது. ஈழத் தமிழர்கள் நம்பத் தயாரில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மாத்திரமே. வடக்கு – கிழக்கிற்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்த்தால் உண்மை நிலை புலப்படும். பாதிக்கப்பட்ட மக்களோடு பேசுவதற்கு இந்தியப் பிரதிநிதிகள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதில் மர்மம் இல்லை. இந்திய – சிங்களக் கூட்டணியைப் பலப்படுத்தும் நோக்கில் கிருஷ்ணாவின் பயணம் மேற் கொள்ளப் படுகிறது. மீள்குடியேற்றம் திருப்திகரமாக நடக்கவில்லை என்பது உலகறிந்த விடயம். ஒரு தொலைபேசி அழைப்பு உண்மையாக எடுத்துச் சொல்லப் போதுமானது.</p>
<p style="text-align: justify;">மீள்குடியேற்றம் ஏன் திருப்தி அளிக்கவில்லை? தலையணையை மாற்றினால் தலைவலி தீராது. செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களுடைய சுதந்திர நடமாட்டம் தடுக்கப் பட்டுள்ளது. விடுதலை புலிகள் கட்டிக் கொடுத்த வீடு என்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாழ்ந்த வீடு என்றும் காரணங் கூறும் இராணுவத்தினர் அங்கு உரிமையாளர்கள் குடியேறுவதைத் தடுத்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த வீடுகளும் நிலங்களும் இராணுவத்திற்குச் சொந்தம் என்று எழுதப்படாத சட்டம் வன்னியில் நிலவுகிறது. பெருமளவு வன்னி நிலப்பரப்பை சிங்களப் படையினர் வாழ்விடத்திற்காகவும் முகாம் அமைப்பதற்காகவும் இராணுவத்தினர் கையகப் படுத்தியுள்ளனர். மீள் குடியேற்றம் எப்படி முழுமையாக நடைபெறும். யாழ் குடா நாட்டில் இரு தசாப்தங்களுக்கு மேலாக நலன்புரி நிலையங்கள் என்ற பெயருடன் இடம்பெயர் மக்கள் வாழும் இடங்கள் காணப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">வன்னியிலும் இந்த வகை நலன்புரி நிலையங்கள் தோன்றும் ஏது நிலை காணப்படுகிறது. தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கும் பணிகளைச் சிங்கள அரசு சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. 50 வரையான முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழர் வாழவாதாரங்கள் பறிபோகும் நிலையில் உள்ளன. இது பற்றிய அக்கறை இந்திய அரசிற்கு இல்லை.</p>
<p style="text-align: justify;">சீனாவிடம் துறைமுக மேம்பாட்டுப் பணியம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மீன்பிடி உரிமை, இறால் பண்ணை அமைக்கும் உரிமை என்பனவம் சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நெற் களஞ்சியமாக நிலவிய வன்னி மண் இன்று பாழ்பட்டுக் கிடக்கிறது அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் எப்படி நடைபெறும்?.</p>
<p style="text-align: justify;">இது பற்றிச் சிந்திக்காமல் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில் என்ன பயன்? காந்திநகர் என்ற கிளிநொச்சி மாவட்டக் குடியிருப்பில் வாழும் மக்களை குடி எழுப்பும் நடவடிக்கையை இராணுவத்தினர் தொடங்கியுள்ளனர். இப்பகுதி வீடுகள் தமக்குத் தேவையாம். இது தான் அவர்கள் வாதம்.</p>
<p style="text-align: justify;">உடையார்கட்டு என்ற வளமான நிலப்பரப்பில் குடியேற அந்தப் பகுதி மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பயிற்சிக் களரிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளன. பயன் தரும் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. காடு சுடுகாடாக மாற்றம் கண்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பசில் ராஐபக்ச குறிப்பிட்ட செட்டிகுளத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளது 10,000 பேரில் பெரும் பகுதியினர் உடையார்கட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய எதிர்காலம் தொங்கு நிலையில் இருக்கிறது. உடையார்கட்டில் உள்ள நீர்த தேக்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுற்றாடல் கிராமங்களில் விவசாயம் படுத்து விட்டது.</p>
<p style="text-align: justify;">இரணைமடுக் குளமும் இராணுவக் கட்டுபாட்டில் கிடப்பதால் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இது போன்ற குறைபாடுகள் வருகை தரவிருக்கும் கிருஷ்ணாவின் காதில் விழப் போவதில்லை. அவர் கேட்க விரும்பும் செய்திகள் அவர் காதில் போடப்படும் என்பது தான் நிதர்சனம். கிருஷ்ணாவை அனுப்புவதிலும் பார்க்க டி.ஆர் பாலு தலைமையில் தொல் திருமாவளவன் போன்ற ஒட்டுண்ணிகளை மீண்டும் அனுப்பலாம். அடுத்த தேர்தல் பிரசாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா!</p>
<p style="text-align: justify;">ஈழத் தமிழர்களின் கட்டாய இடப்பெயர்வுக்குக் காரணமான இந்திய மத்திய அரசு தனது பிரதிநிதியை அது பற்றி பேசுவதற்கு அனுப்புவது ஈழத் தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது. சம்பூர் மாவட்ட விவசாயக் குடும்பங்களின் இடம்பெயர்வுக்கும் இந்தியா நேரடிக் காரணியாக அமைகிறது. திருகோணமலை, சம்பூரில் இந்திய கோடீஸ்வர நிறுவனமொன்று அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் கால்பதிக்கும் மத்திய அரசின் நெடுநாட் திட்டத்தின் அங்கமாக மின் நிலைய அமைப்பு இடம்பெறுகிறது.</p>
<p style="text-align: justify;">சம்பூரில் இருந்து 1000 வரையிலான விவசாயக் குடும்பங்கள் குடியெழுப்பப் பட்டுள்ளன. இவர்கள் மட்டக்களப்புக்குக் கால் நடையாகச் சென்றுள்ளனர். பின்பு சிங்கள அரசு அவர்களை சம்பூர் கிளிவெட்டி இடம்பெயர்ந்தோர் முகாமுக்குள் தடுத்து வைத்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">கிருஷ்ணாவின் அருட்பார்வையில் இந்தச் செய்தி படும் என்று சம்பூர் விவசாயிகள் நம்புகின்றனர். 50,000 வீடுகளைக் கட்டித் தரப்போவதாக இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆசை காட்டி வருகிறது. நீங்கள் வீடு கட்டித் தரவேண்டாம். சொந்த மண்ணில் மர நிழலில் தன்னும் வாழ வகை செய்யுங்கள். அது ஒன்றே போதும் என்று ஈழத் தமிழர்கள் வினயமாகக் கேட்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>சோறு சோறென்றே வேறு நாடாகித்<br />
துன்புறும் சோதரர் தமையே<br />
ஆறு ஆறென்றே அமைவுறக் கூட்டி<br />
அருகினில் மனைதர வேண்டும்</strong></p>
<p style="text-align: justify;">இது கவிஞர் கண்ணதாசனின் ஈழத் தமிழர்களுக்கான பாடல். கவிஞன் வாக்கு வீண் போவதில்லை. ஈழத் தமிழர்களை நீங்கள் வாழ விட்டால் போதும். அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d" title="கிருஷ்ணன்" >கிருஷ்ணன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14630</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுதலைத் தீ அணையாது &#8211; மீண்டும் தொடங்குகிறது 842 கி.மீற்றர் நடைப்பயணம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14620</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14620#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 07:25:39 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[விடுதலைத் தீ]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14620</guid>
		<description><![CDATA[விடுதலைத் தீ அணையாது - மீண்டும் தொடங்குகிறது 842 கி.மீற்றர் நடைப்பயணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-2527" title="pulam" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/n-22112009-ulakirku-erravaru-mudiyathu-01.JPG" alt="" width="100" height="80" />சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. இன்று சனிக்கிழமை அனைவரும் கூடுவோம் ஜெனீவா ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில்!</p>
<p style="text-align: justify;">28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்<span id="more-14620"></span>துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடங்குகின்றது.</p>
<p style="text-align: justify;">நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கி நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.</p>
<p style="text-align: justify;">“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்”; என்றார் எங்கள் திலீபன் அண்ணா. உலகத் தமிழ் உறவுகளே! அனைவரும் ஒன்று திரளுவோம்! நடைப்பயணத்தில் நம்மையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுவோம்.</p>
<p style="text-align: justify;">06.08.2010அன்று ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைத்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன் இந்த நெடும் பயணம் முடிந்து விடக் கூடாது. இது இன்னம் தொடரவேண்டும். ஒரு மரதன் ஓட்டம் போல் இல்லாமல், ஒரு அஞ்சலோட்டமாக இதனை மாற்றவேண்டும். இதனை மாற்றம் வல்லமை இந்த முதலடியை எடுத்து வைத்துள்ள சிவந்தனுக்குரியது.</p>
<p style="text-align: justify;">சிவந்தன் கையில் இருக்கும் நீதிக்கான கோரிக்கையை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்ததன் மூலம் சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு ஒரு வகையில் உற்சாகத்தை வழங்கி உதவி புரிந்த பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கி நீதி கேட்டு நடக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அங்கிருந்து இத்தனை அவலங்களுக்குப் பின்னரும் தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ள, போர்க் குற்றவாளியை தங்கள் நாட்டின் தூதுவராக அங்கீகரித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்திடமும், அங்கிருந்து நெதர்லாந்து நாடாளுமன்றம் நோக்கியும் நீதி கேட்டுச் செல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;">கடந்த அறுபது வருடங்களாகத் தொடரும் இந்த இன அழிவுக்கும் தமிழ் மக்கள் இன்று தமது தாயகத்தை முழுமையாக இழந்து போகும் நிலைக்கும் காரணமாகிவிட்ட இலங்கைத் தீவிலிருந்த இரு நாடுகளை தங்கள் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைத்து ஆட்சி புரிந்துவிட்டு, அந்நாட்டைவிட்டு வெளியேறியபோது, ஒரே நாடாக்கி ஒரு இனத்தின் கையில் ஆட்சி ஒப்படைத்து விட்டுவந்த பிரித்தானிய முடியாட்சியிடம் நீதி கேட்டுச் செல்ல வேண்டும்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80" title="விடுதலைத் தீ" >விடுதலைத் தீ</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6200" title="சுவிசில் நேற்று நடைபெற்ற விடுதலைத் தீ தீர்மானம் (February 14, 2010)">சுவிசில் நேற்று நடைபெற்ற விடுதலைத் தீ தீர்மானம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5719" title="சுவிசில் எதிர்வரும் 13ம் திகதி விடுதலைத் தீ (February 2, 2010)">சுவிசில் எதிர்வரும் 13ம் திகதி விடுதலைத் தீ</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14620</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14615</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14615#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 07:21:12 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கே.பி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14615</guid>
		<description><![CDATA[இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14193" title="kp" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/kp-100x80.jpg" alt="" width="100" height="80" />இந்தியா எதைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய தகவல்களை தெரி<span id="more-14615"></span>வித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">சமீபத்தில் கே.பியினால் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்பாக தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வை.கோ மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் ஆகியோரின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனது. இதன் விளைவே பல்லாயிரம் உயிர்கள் சாக காரணமாகிவிட்டது என்று கேபி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">கே.பி ஒரு அணுகுண்டையே தமிழக அரசியல் புள்ளிகள் மீது போட்டுவிட்டார். குறிப்பாக கே.பி கூறியதாவது: “இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்தது. எனினும், இந்தத் தகவல்கள் வை.கோவிடம் பரிமாறப்பட்டதாகவும் இதனை வை.கோ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை.&#8221;</p>
<p style="text-align: justify;">கே.பியின் இந்த குற்றச்சாட்டுக்கள் எதற்காக இப்பொழுது குறிப்பாக மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் பசில் ராஜபக்ச இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவதற்கு சில தினங்களுக்கு முன்னராகவரும் அத்துடன் இந்தியாவின் வெளியுறவு மந்திரி தான் செப்டம்பர் இறுதியில் சிறிலங்கா செல்ல உள்ளதாகவும் மேலும் இந்தியாவின் வெளியுறவுச்செயலாளர் நிருபமா றாவ் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மந்திரியான சிதம்பரம் கலைஞர் கருணாநிதியை சந்தித்த சில தினங்களுக்குப் பின்னராக வந்திருக்கும் இந்த குற்றச்சாட்டைப்பார்க்கும்போது நிச்சயம் கே.பி இந்தியாவின் நடுவன் அரசின் வேண்டுதலினாலையே இப்படியான தகவலை கூறியிருக்கக்கூடும் என்று தமிழக அரசியல் வல்லுனர்கள் சந்தேகங்களை தெரிவிக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இந்திய நடுவண் அரசு மற்றும் அதன் உளவுத்துறையான றோவின் ஆலோசனைகள் இல்லாமல் கே.பி இப்படியான தகவல்களை அளித்திருக்க சந்தர்ப்பமில்லை. புலிகளின் ஆதரவு கட்சிகளை எப்படியேனும் ஓதுக்கிவிடவேண்டும் என்று இந்திய நடுவன் அரசும் மற்றும் சிறிலங்கா அரசும் கங்கணம் கட்டி செயல்படுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை. இந்தியாவின் அறிவுறுத்தலின்படி கே.பி வெளியிடும் தகவல்கள் பொய் என்று எதிர்ப்பிரச்சாரங்களை வை.கோ மற்றும் நெடுமாறன் போன்ற தலைவர்கள் புலம்பெயர் ஈழத் தமிழர் மத்தியில் கூறிவருகின்றதானது இந்தியா மற்றும் சிறிலங்கா ஈழத்தமிழருக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எதிராக இருப்பதனால் எப்படியேனும் இவர்களை பொய்க்குற்றச்சாட்டுக்கள் மூலமாக ஓரங்கட்டி, தேவைப்பட்டால் சிறைக்குள் தள்ளி இவர்களின் வாயை அடைத்துவிடலாமென்று நினைக்கின்றது புலிகளுக்கு எதிரான சக்திகள்.</p>
<p style="text-align: justify;"><strong>வை.கோ மற்றும் மகேந்திரன் என்னதான் கூறுகின்றார்கள்<br />
</strong><br />
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கூறியுள்ளதாவது: “பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார். 2008 டிசம்பர் 31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார். ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரணடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா? நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">“அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆபிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நோர்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார். ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">“குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கொத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.</p>
<p style="text-align: justify;">“சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கோத்தபாயவிடம், நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம். கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்.&#8221;</p>
<p style="text-align: justify;">அவர் மேலும் கூறியதாவது: “இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள். தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம். விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?</p>
<p style="text-align: justify;">“தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர். ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம். இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான்.</p>
<p style="text-align: justify;">“ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங் அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார். இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன். அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.</p>
<p style="text-align: justify;">“தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன். இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு. இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை. அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள். இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்,&#8221; இவ்வாறு வை.கோ கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும் ஒரு படிமேல் சென்று வை.கோ கூறுகையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை. தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால் குமரன் பத்மநாதன்இ கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார். ராஜபக்சே கூட்டம் வை.கோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள், இப்படியாக கொதித்திருக்கின்றார் வைகோ.</p>
<p style="text-align: justify;">இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்பூர் எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் கூறியுள்ளதாவது: “விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தனக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து குமரன் பத்மநாதனை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நடேசன் யுத்தநிறுத்த யோசனை குறித்து என்னுடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை எமது கட்சி எப்போதும் எதிர்த்துவந்தது. இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருந்தோம். மறுபுறத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்பதை நாம் ஆதரவாக இருந்து வருகிறோம்.”</p>
<p style="text-align: justify;">இப்படியாக சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் தெரிவித்திருக்கையில் தமிழக முதலமைச்சரோ தனது நாடகத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி, தமிழகத் தலைவர்களுக்கு எதிரான தகவல் வந்த அடுத்த கணமே அடுத்த கட்ட நாடகத்திற்கான அரங்கை தயார்படுத்தினார்.</p>
<p style="text-align: justify;"><strong>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கருணாநிதி<br />
</strong><br />
சிறிலங்காவில் இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே.பி விளக்கமளிக்கவேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்தார். கே.பி கூறியிருக்கும் தகவல்களை ஆராய்ந்து எது உண்மை என்பதை கண்டறிய கேபி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் கலைஞர் தனக்கு ஒன்றும் தெரியாது மாதிரியான அறிக்கையை விட்டு, தான் ஒன்றும் தெரியாத பாப்பா என்ற தோரணையில் நாடக படப்பிடிப்புக்கு இடம் தேடத்தொடங்கிவிட்டார் போலும்.</p>
<p style="text-align: justify;">இந்தியா நினைத்திருந்தால் பல ஆயிரம் உயிர்களை சிங்;களக் காடையர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியும்இ ஆனால் இந்தியா தனது முழு ஆதரவையும் அளித்து புலிகளை எப்படியேனும் அழித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது என்பது தான் உண்மை. மேலும், இந்தியாவின் பரம எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் நேரடியாகவே சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது. ஆனால், இந்தியாவோ அவர்களுடன் கைகோர்த்து நின்று தமிழர்களை அழிக்க காரணமாகி இருந்தது. இதனை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ தயாராகவில்லை.</p>
<p style="text-align: justify;">ராஜீவ் என்ற ஒரு மனிதனுக்காக பல ஆயிரம் உயிர்களை காவுகொண்ட இந்தியா இன்று சிங்களத்துடன் நின்றுகொண்டு தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களில் செயல்படுகின்றது என்பது தான் உண்மை. இன்றைய யாழ்ப்பாண நிலவரம் என்னவென்றால், முப்பதிற்கும் அதிகமான பேருந்துகளில் சிங்களவர்களை ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்குள் விடப்பட்டுள்ளார்கள். தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்க பல பிரயத்தனங்களை சிங்கள அரசு செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவோ இவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு சிங்கள அரசிற்கு முழு ஆதரவையும் அளிக்கின்றது என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையிலையே தான் நடைபெறுகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்தியாவின் தமிழினத்திற்கு எதிரான செயல்கள் என்பது இன்று நேற்றல்ல நடைபெறுகின்றது. இந்தியா தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக பல காலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. அந்தமான்இ நிகோபார் தீவுகளில் ஒருகாலத்தில் தமிழர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஆனால், இந்திய நடுவண் அரசு இதனைச் சகிதித்துக்கொள்ள முடியவில்லை. பல ஆயிரக்கணக்கான பங்காளிகளை இந்த தீவுகளுக்கு அனுப்பி தமிழர்களிலும் விட பல மடங்கு அதிகரித்து ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இன்று தமிழ்நாடு இழந்து நிற்கின்றது.</p>
<p style="text-align: justify;">இதைப்போல பல உதாரணங்களை சொல்லலாம். குறிப்பாக, மொரீசியஸ், பிஜி, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகளில் பல தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இன்று அவர்களின் மொழி தெரியாமல் தமது அடையாளத்தையையே தொலைத்து நிற்கின்றார்கள். இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக, இவர்களுக்கு ஹிந்தி வகுப்புக்களை நடாத்தி இவர்கள் இன்று தம்மை ஹிந்திக்காரர்கள் என்று சொல்லுமளவு இந்திய நடுவன் அரசு வெற்றிகண்டுவிட்டது. இப்படியாக இந்தியாவின் போக்கு இருக்கையில், தான் ஏதோ தமிழர்களின் காவலன் என்று தம்பட்டம் அடிக்கும் கலைஞரோ தமிழர்களை அழிக்க நடுவன் அரசிற்கு துணைபோகின்றார்; என்று சொன்னால்;, தாம் இராஜதந்திரங்களை பாவித்து தமிழரின் வாழ்வில் ஒரு புத்தெழுச்சியை கொண்டுவரப்போவதாக அரட்டை அடிக்கின்றார்கள். கேட்கும் ஏமாளிகள் இருக்கும் வரை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். பாவப்பட்ட தமிழ்ச்சாதியின் குணம் என்னவென்றால், உணர்சிகளுக்கு ஆளாவதும் மற்றும் ஒருவர் சொல்வதைக் கேட்டு அதனை ஏற்று ஏமாறுவதுமே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.</p>
<p style="text-align: justify;">சிலவருடங்களுக்கு முன்னர் கே.பியை இந்தியா பிடித்துவந்து ராஜீவ் கொலைக்கு அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறிய இந்தியா இன்று அவருக்கு விருந்துபசாரங்கள் அளிப்பதும் மற்றும் அவருக்கு தேவையான அத்தனை வசதியையும் செய்து அவர் மூலமாக தமது திட்டங்களை செய்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் இந்திய நடுவன் அரசிட்;கும் மற்றும் சிறிலங்கா அரசிட்கும் ஊதுகுழலாக இருக்கும் கலைஞர் நிச்சயம் ஒருநாள் தாம் செய்வதையறிந்து வெட்கித்தலைகுனியும் நாள் வெகுதொலைவிலில்லை என்பது மட்டும் உண்மை. அரசியல் பழிவாங்களுக்காக தமிழின விடுதலையை விலைபேசும் எட்டப்பர்களை தூண்டி விட்டு அவர்களை வளர்ப்பதன் மூலமாக மென்மேலும் தவறுகளை இழைக்கின்றார்கள் போலும்.</p>
<p style="text-align: justify;"><strong>அனலை நிதிஸ் ச. குமாரன்</strong></p>
<p style="text-align: justify;"><strong>nithiskumaaran@yahoo.com</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf" title="கே.பி" >கே.பி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14404" title="கே.பி யின் கூற்றுக்கு இந்திய எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவிப்பு: கடைசி போரில் தனது பங்களிப்பு குறித்தும் விவரிப்பு (August 23, 2010)">கே.பி யின் கூற்றுக்கு இந்திய எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவிப்பு: கடைசி போரில் தனது பங்களிப்பு குறித்தும் விவரிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13182" title="கருணாவை &#8221;கைகழுவ&#8221; ஆரம்பித்துள்ள மகிந்த கே.பி. யை அடுத்த பகடைக்காயாக்குவதற்கு தீவிர முயற்சி! (July 28, 2010)">கருணாவை &#8221;கைகழுவ&#8221; ஆரம்பித்துள்ள மகிந்த கே.பி. யை அடுத்த பகடைக்காயாக்குவதற்கு தீவிர முயற்சி!</a> (5)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14192" title="இராணுவத்தில் இணைகிறார் கே.பி: அவருக்கு பிரிகேடியர் பதவியாம் (August 18, 2010)">இராணுவத்தில் இணைகிறார் கே.பி: அவருக்கு பிரிகேடியர் பதவியாம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14455" title="கே.பி, கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ (August 25, 2010)">கே.பி, கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13643" title="கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்! (August 5, 2010)">கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்!</a> (6)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14615</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>சீமான் கைதைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14599</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14599#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 07:17:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14599</guid>
		<description><![CDATA[சீமான் கைதைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14612" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman4-100x80.jpg" alt="" width="100" height="80" />நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சிறையில் அடைத்து வைத்துள்ளதைக் கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய தமிழக அரiசையும், மத்திய அரசையும் கண்டித்து ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இதில் நூற்றுக்கண<span id="more-14599"></span>க்கான மக்கள் கலந்து கொண்டு இந்திய அரசிற்கான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.</p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="359" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/GFM-GPBp-CM?fs=1&amp;hl=en_US" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="359" src="http://www.youtube.com/v/GFM-GPBp-CM?fs=1&amp;hl=en_US" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14600" title="pic215" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pic215.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14601" title="seeman_canada2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada2.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14602" title="seeman_canada3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada3.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14603" title="seeman_canada4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada4.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14604" title="seeman_canada5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada5.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14605" title="seeman_canada6" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada6.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14606" title="seeman_canada7" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada7.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14607" title="seeman_canada8" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada8.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14608" title="seeman_canada9" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada9.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14609" title="seeman_canada10" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada10.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14610" title="seeman_canada11" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada11.jpg" alt="" width="540" height="359" /><img class="aligncenter size-full wp-image-14611" title="seeman_canada12" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman_canada12.jpg" alt="" width="540" height="359" /></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d" title="சீமான்." >சீமான்.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2471" title="கனடா தமிழர்களிடம் தொலைபேசியில் சீமான் சிறப்புரை (December 1, 2009)">கனடா தமிழர்களிடம் தொலைபேசியில் சீமான் சிறப்புரை</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9799" title="முத்துக்குமாருக்கு ஜாமீன்: சீமான் மாலை அணிவித்து வரவேற்பு (May 7, 2010)">முத்துக்குமாருக்கு ஜாமீன்: சீமான் மாலை அணிவித்து வரவேற்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9069" title="இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி &#8211; ஐஸ்வர்யாராய் படத்தை புறக்கணிப்போம்: சீமான் (April 24, 2010)">இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி &#8211; ஐஸ்வர்யாராய் படத்தை புறக்கணிப்போம்: சீமான்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1628" title="இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் செந்தமிழன் சீமான் (November 23, 2009)">இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் செந்தமிழன் சீமான்</a> (4)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10115" title="இந்தியாவுக்கு வர மறுத்த பார்வதி அம்மாளை வணங்குகிறேன்: சீமான் (May 13, 2010)">இந்தியாவுக்கு வர மறுத்த பார்வதி அம்மாளை வணங்குகிறேன்: சீமான்</a> (5)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14599</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>மகிந்த மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வர முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க தீர்மானம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14596</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14596#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 07:08:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மகிந்த.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14596</guid>
		<description><![CDATA[மகிந்த மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வர முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க தீர்மானம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-10884" title="mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/mahinda1-100x80.jpg" alt="" width="100" height="80" />சிறிலங்காவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னனியின் கூட்டு கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் யாப்பில் அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள இரண்டு திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த அரசாங்கம் பெற்றுக்கொள்ளு<span id="more-14596"></span>ம்.</p>
<p style="text-align: justify;">அக் கட்சியிலுள்ள ஒரு சாரார் அரசிற்கு அதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதேவேளை அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமிற்கும் மகிந்தவுக்கும் இடையில் இரு தினங்களுக்கு முன்பு சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர்பீடம் கொழும்பில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இரண்டு பதவிக்காலங்கள் அரச தலைவராக இருந்த ஒருவர் மீண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தற்போதை யாப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கும், அரசியலமைப்பின் 17வது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான அரசின் திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">&#8220;இத் தீர்மானம் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தனது கட்சிக்குமிடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, அரசிற்கு தொடர்ந்தும் ஆதரவு தேவைப்பட்டால் கட்சியின் அரசியல் உயர்பீடம் அவ்வப்போது கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்&#8221; என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது தலைவர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமது கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடி இந்த தீர்மானத்தை எடு்த்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் தமிழோசையிடம் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 8 பேர் தற்போது அங்கம் வகிக்கின்றார்கள். உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அதரவு வழங்குவது என்று அக்கட்சி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4" title="மகிந்த." >மகிந்த.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11262" title="சிங்கள மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தமிழருக்கு தீர்வு: கூட்டமைப்பிடம் மகிந்த திட்டவட்டமாக தெரிவிப்பு (June 8, 2010)">சிங்கள மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தமிழருக்கு தீர்வு: கூட்டமைப்பிடம் மகிந்த திட்டவட்டமாக தெரிவிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5202" title="மகிந்தவுக்குத் துணைபோகும் துணைவேந்தர்கள் &#8211; மாணவர் அமைப்புக்கள் கண்டனம் (January 23, 2010)">மகிந்தவுக்குத் துணைபோகும் துணைவேந்தர்கள் &#8211; மாணவர் அமைப்புக்கள் கண்டனம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11343" title="கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு வெளிச்சம் தருமா? (June 9, 2010)">கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு வெளிச்சம் தருமா?</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9819" title="கடைசிநேர போர் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிப்பு: மகிந்தவின் அதிரடி நடவடிக்கை!! (May 7, 2010)">கடைசிநேர போர் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிப்பு: மகிந்தவின் அதிரடி நடவடிக்கை!!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3493" title="மகிந்தவும் கோத்தபாயவும் சிங்களவர்களின் வரலாற்றில் கரும்புள்ளிகள்: விக்கிரமபாகு கருணாரட்ண (December 16, 2009)">மகிந்தவும் கோத்தபாயவும் சிங்களவர்களின் வரலாற்றில் கரும்புள்ளிகள்: விக்கிரமபாகு கருணாரட்ண</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14596</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் காணாமல் போதல் தொடர்கிறது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14592</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14592#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 07:04:41 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14592</guid>
		<description><![CDATA[மட்டக்களப்பில் காணாமல் போதல் தொடர்கிறது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14593" title="batti" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/batti-100x80.jpg" alt="" width="100" height="80" />மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்படிக்காக கடலுக்குச் சென்ற மூவரைக்காணவில்லை என கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த 19ஆம் திகதி மீன்பிடிக்குச் சென்ற 53வயதுடைய கண<span id="more-14592"></span>பதிப்பிள்ளை சிவராஜ், 20 வயதுடைய சிவராஜ் ஜீவராஜ், 41 வயதுடைய செல்லப்பா மனோகரன் ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அவர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய குணவர்த்தனாவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன் மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ணவுக்கும் இக் காணாமல் போனமை குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை மாநகர சபை உறுப்பினரும் பிள்ளையான் குழுவின் உறுப்பினருமான பி.சகாயமணி காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81" title="மட்டக்களப்பு" >மட்டக்களப்பு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2839" title="படையினர் சுட்டதில் இளைஞர் ஒருவர் பலி: மட்டக்களப்பு (December 7, 2009)">படையினர் சுட்டதில் இளைஞர் ஒருவர் பலி: மட்டக்களப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8723" title="தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு &#8211; மட்டக்களப்பில் இருந்து ஒரு செய்தி (April 17, 2010)">தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு &#8211; மட்டக்களப்பில் இருந்து ஒரு செய்தி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6565" title="மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் 5 புதுமுகங்கள் போட்டி (February 22, 2010)">மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் 5 புதுமுகங்கள் போட்டி</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14592</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நிதியா?: ச.வி.கிருபாகரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14587</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14587#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 12:00:15 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிருபாகரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14587</guid>
		<description><![CDATA[வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நிதியா?: ச.வி.கிருபாகரன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-8110" title="kirupa" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/kirupa-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கைத் தீவில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இதில் வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயகம். இங்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக ஏறக்குறைய மூன்று சகாப்தங்களாக சாத்வீகப் போராட்ட மூலம் போராடிப் பலன் எதுவும் கிடையாத காரணத்தினால், ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது.</p>
<p style="text-align: justify;">அதன் மூலம் ஏறக்<span id="more-14587"></span>குறைய இரண்டு சகாப்பதங்களாக வடக்கு &#8211; கிழக்கின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ், சகல கட்டுமானங்களுடன் சிறப்பாக இயங்கி வந்துள்ளது என்பது உலகறிந்த சரித்திரம்.</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப் போராட்டக் காலங்களில், பௌத்த சிங்கள அரசுகள் உலகம் எங்கும் சென்று பொய்யும் புரட்டுக்களும் கூறி, உலகநாடுகள் கொடுத்த பணம், ஆயுதம், மனிதவலு ஆகியவற்றினால் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு &#8211; கிழக்கை தமது கண்மூடித் தனமான விமானத் தாக்குதலினாலும், குண்டு வீச்சுக்களினாலும் செல்வம் கொழித்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சூறையாடி அழித்து சாம்பல் மேடுகள் ஆக்கினர்.</p>
<p style="text-align: justify;">உலகில் பல ஆயுதப் போராட்டங்கள் தோல்வியடைந்தது போல் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தோல்வி கண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று சிங்கள பௌத்த அரசும் அதன் வால்பிடிகளும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்கி, தமிழ் மக்களை தம்மைப்போன்று சரிசமனான உரிமைகொண்ட பிரசைகளாக பார்க்க முன்வராது, வடக்கு, கிழக்கில் பாரிய சிங்களக் குடியேற்றங்களையும், பௌத்த கோயில்களையும் நிறுவுவதோடு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் புராதன கோயில்களையும், கலாச்சாரத்தையும் தினமும் நாசம் செய்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற பெயரில் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிடம் பௌத்த சிங்கள அரசும் அவர்களது பால்குடிகளும், வால்பிடிகளும், நிதிசேகரிக்க அல்ல பணம் பறிப்பதற்கு செயல் திட்டங்கள் நடைபெறுகின்றன. இது எவ்விதம் நியாயமானது?</p>
<p style="text-align: justify;">வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில், அபிவிருத்திக்கு புலம்பெயர் வாழ் சிங்கள மக்களா நிதி கொடுத்தனர்?</p>
<p style="text-align: justify;">புலம் பெயர் வாழ் சிங்களவர்களில் பெரும்பாலானோர், தமிழ் மக்களின சொத்துக்களை அழிக்கவும், கொல்லவும் சர்வதேச அளவில் நிதிசேகரித்து சிறீலங்காவுக்கு அனுப்பியதை நாம் ஒரு பொழுதும் மறக்க மாட்டோம்.</p>
<p style="text-align: justify;">சிங்களவர்கள் வாழும் ஏழு மாகாணங்களின், அபிவிருத்தியையும், சீனா, ஈரான் போன்ற நாடுகளின் நிதி உதவியினாலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன.</p>
<p style="text-align: justify;">தமிழில் ஓர் பழமொழி சொல்வார்கள் உலகில் ஏமாற்றப்படுபவன் இருக்கும்வரை, ஏமாற்றுகிறவன் இருப்பான் என. இதேபோல் சிறீலங்காவின் அரச பரம்பரையான ராஜபக்சாக்கள் தொடர்ந்து ஏமாற்றுவதற்கு, எம்மிடையே ஏமாறுபவன் இருக்கக் கூடாது.</p>
<p style="text-align: justify;">புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும், இவ் விசித்திரமான சிறீலங்காவின் வேண்டுகோளை மிக அவதானமாக கையாளவேண்டும். எமது பணத்தில் சிங்களக் குடியேற்றம் செய்யவும், பௌத்த கோயில்கள் அமைக்கவும், வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வர்த்தகம் செய்யவும் ரோசமுள்ள புலம்பெயர்வாழ் தமிழர்கள் எவரும் துணைபோகக் கூடாது.</p>
<p style="text-align: justify;">இன்று உள்நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழனிடம் மிஞ்சிய சொத்துக்களாக இருப்பது ரோசம், மானம், மரியாதையே. இவற்றை நாம் இப்பொழுது விட்டுக் கொடுக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">இன்று எமது உடன் பிறவாச் சகோதரர்கள் யாவரும், வடக்கு கிழக்கில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது உண்மை.</p>
<p style="text-align: justify;">இவர்களுக்கு உதவி செய்ய விரும்பிய யாவரும் தமது தனிப்பட்ட முயற்சியினால் உறவினர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள், புலம்பெயர்வாழ் நீண்டகால அமைப்பினர் மூலமாக உதவி செய்வதே மிகச்சிறந்த பணி.</p>
<p style="text-align: justify;">இவை தவிர்ந்த எந்த உதவியையும் பௌத்த சிங்கள அரசிற்கு, அதனுடன் இணைந்து இயங்கும் பால்குடி, வால்பிடிகள் வளர உதவும் என்பதே உண்மை.</p>
<p style="text-align: justify;">ச.வி.கிருபாகரன்,<br />
தமிழர் மனித உரிமைகள் மையம்,<br />
பிரான்ஸ்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d" title="கிருபாகரன்" >கிருபாகரன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13839" title="கொக்கரிக்கட்டும் இலங்கை அரசும் அதன் கையாட்களும்: ச.வி.கிருபாகரன் (August 10, 2010)">கொக்கரிக்கட்டும் இலங்கை அரசும் அதன் கையாட்களும்: ச.வி.கிருபாகரன்</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8109" title="கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன் (April 3, 2010)">கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12629" title="இலங்கை அரசை நம்புவது, மண் குதிரையை நம்புவதற்கு சமன்!: கிருபாகரன் (July 17, 2010)">இலங்கை அரசை நம்புவது, மண் குதிரையை நம்புவதற்கு சமன்!: கிருபாகரன்</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14587</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>முகாம் மக்கள் தொடர்பில் ஐ.நா &#8211; இலங்கை ஒரே நாளில் முரண்பட்ட தகவல்கள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14580</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14580#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 11:46:02 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14580</guid>
		<description><![CDATA[முகாம் மக்கள் தொடர்பில் ஐ.நா - இலங்கை ஒரே நாளில் முரண்பட்ட தகவல்கள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-3432" title="uno" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/11057_1764567001-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று இலங்கைக்கான ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கான உதவிகளையும், மீண்டும் தமது பகுதிக்கு திரும்பியுள்ளவர்களுக்கான அவசரத் தேவைகளையும்<span id="more-14580"></span> மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் சர்வதேச அமைப்புகளின் உதவி இலங்கைக்கு இன்றியமையாததாகவே இருக்கின்றது எனவும் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் பணிகள் முடிவடைந்துவிட வில்லை என்பதையும் தெளிவாக தனது அறிக்கையில் நீல் பூனே சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் தொடர்ந்து சர்வதேச அமைப்புகளின் ஆதரவை ஐ நா கோருகிறது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.</p>
<p style="text-align: justify;">மிகவும் தேவைப்படும் இக்காலத்தில் அளிக்கப்படும் உதவிகள் தேவையான மக்களுக்கு நேரடியாகவும், இலங்கையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் எனவும் நீல் பூண் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கள் பேணப்படுவது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவசியம் என்றும், நீடித்திருக்கக் கூடிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அது அத்தியாவசியம் எனவும் தெரிவித்துள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி, அதற்கு இந்த நிதியாதாரங்கள் மிகவும் தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி இதுவரை இரண்டு லட்சம் மக்கள் வடகிழக்கில் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர் எனவும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது எனவும் நீல் பூனே கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஆனாலும், இன்னமும் 70,000 மக்கள் இடம் பெயர்ந்த நிலையிலேயோ அல்லது தமது இருப்பிடங்களுக்கு அருகில் வேறு ஒரு இடைத்தங்கல் முகாமிலேயோ இருப்பதாக தாங்கள் கணக்கீடு செய்துள்ளதாகவும் ஐ நா வின் பிரதிநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இன்னமும் 35,000 பேருக்கும் குறைவானவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இன்னமும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இது வரை சர்வதேச அமைப்புகளிடமிருந்து 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருந்தாலும், இந்த ஆண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் மட்டுமே, ஐ நா திட்டமிட்டுள்ள மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க 165 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன எனவும் நீல் பூனே தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">என்னதான் ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் உதவிப் பணிகளை முன்னெடுத்திருந்தாலும், இடம் பெயர்ந்த மக்களும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களும் இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் வாழ்வாதாரங்கள் மீண்டும் முழுமையாக கிடைக்கப் பெறும் வரையில், அவர்கள் உதவி தேவைப்படும் நிலையிலேயே உள்ளனர் எனவும் ஐ நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை இன்னும் 14 ஆயிரம் மக்கள்தான் முகாம்களில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களும் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் பஷில் ராஜபக்ச இந்தியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88" title="இலங்கை" >இலங்கை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3195" title="இலங்கை விடயத்தில் யதார்த்தபூர்வ கொள்கையை உருவாக்குங்கள் ஒபாமாவிடம் தமிழர் அமைப்பு வலியுறுத்து (December 11, 2009)">இலங்கை விடயத்தில் யதார்த்தபூர்வ கொள்கையை உருவாக்குங்கள் ஒபாமாவிடம் தமிழர் அமைப்பு வலியுறுத்து</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3207" title="இடதுசாரித் தத்துவம் இனவாதமான கதை! (December 11, 2009)">இடதுசாரித் தத்துவம் இனவாதமான கதை!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3253" title="இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!! (December 12, 2009)">இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11168" title="இலங்கை தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் (June 7, 2010)">இலங்கை தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12852" title="இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை &#8211; அமெரிக்காவிற்கு இலங்கை எச்சரிக்கை! (July 23, 2010)">இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை &#8211; அமெரிக்காவிற்கு இலங்கை எச்சரிக்கை!</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14580</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை: ஜோன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14576</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14576#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 11:40:45 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோன் ஹோம்ஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14576</guid>
		<description><![CDATA[இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை: ஜோன்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14577" title="john" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/john-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருப்பதாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">நியூயோர்க்கில் நே<span id="more-14576"></span>ற்று நடைபெற்ற பி யாவிடை செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p style="text-align: justify;">ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி எனும் தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகம்கொடுத்ததாக ஜோன் ஹோம்ஸ் கூறினார்.</p>
<p style="text-align: justify;">எனினும் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு ஜோன்ஸ் ஹோம்ஸ் பதிலளிக்கையில்,</p>
<p style="text-align: justify;">யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரசாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோது ஐ.நா.கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டதாக கூறினார்.</p>
<p style="text-align: justify;">யுத்தத்தின்பின் எதிர்பார்க்கப்பட்ட மிக மோசமான விடயம் இடம்பெறவில்லை.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான பணியில் தவறுகளைவிட அதிக சரியானவற்றை செய்ய முடிந்தது எனவும் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">எனினும் பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருக்கின்றன என அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">யுத்தத்தின்போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று என அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">மூதூரில் ஏ.சி.எவ். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d" title="ஜோன் ஹோம்ஸ்" >ஜோன் ஹோம்ஸ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14576</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>போருக்குப் பின்னர் அரசு “அதீத வளர்ச்சி”! இந்த ஆண்டில் மட்டும் 2800 மதுச்சாலைகள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14572</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14572#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 11:19:15 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மதுச்சாலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14572</guid>
		<description><![CDATA[போருக்குப் பின்னர் அரசு “அதீத வளர்ச்சி”! இந்த ஆண்டில் மட்டும் 2800 மதுச்சாலைகள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14573" title="thisa" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/thisa-100x80.jpg" alt="" width="100" height="80" />இந்த வருடத்தில் மாத்திரம் அரசு 2800 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மகிந்த சிந்தனையின் மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் பொய்யாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சித் தலை<span id="more-14572"></span>வர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;</p>
<p style="text-align: justify;">மகிந்த சிந்தனை திட்டத்தில் மதுவுக்கு முற்றுப்புள்ளி இடும் விடயம் முக்கியமானதாகக் காணப்பட்டது. அரசுடன் இணைந்துள்ள ஹெலஉறுமய இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டும் ஒரு கட்சியாகும்.</p>
<p style="text-align: justify;">மது ஒழிப்பு விவகாரத்தில் மகிந்த சிந்தனை தோற்றுப்போயுள்ளதை இவ்வாண்டுக்கான அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த வருடத்தில் மாத்திரம் 2800 புதிய மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒரு வருடகாலத்துக்குள் 2800 அனுமதிப்பத்திரம் வழங்கியிருப்பது மிக முக்கியமான தொன்றாகும். முன்னொருபோதும் இந்தளவு பெரிய தொகை வழங்கப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்த 2800 அனுமதிப்பத்திரம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நட்சத்திரஹோட்டல்களுக்கும், சுற்றுலா விடுதிகளுக்கும் வழங்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. இந்த வருடத்துக்குள் 2800 ஹோட்டல்களும், சுற்றுலா விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளனவா அவை ஏங்கு, எப்போது திறக்கப்பட்டன என்பதைப் பற்றியும் அரசு நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">இன்று அரசாங்கம் ஒரு பொய்யை, தவறை மூடிமறைக்க 10 பொய் சொல்லும் நிலைக்குள்ளாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் மது விற்பனைக்கு அனுமதிவழங்குவதை ஹெல உறுமயவும் கண்டும் காணாமல் மௌனமாகியுள்ளது. ஹெல உறுமய அரசின் இந்த நடவடிக்கை குறித்து என்ன கூறப்போகின்றது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d" title="மதுச்சாலைகள்" >மதுச்சாலைகள்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14572</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கிழக்கில் நடைபெறும் சம்பவங்களின் பின்னனி: நா.உ. பா.அரியநேத்திரன்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14566</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14566#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 15:50:55 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரியநேந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14566</guid>
		<description><![CDATA[கிழக்கில் நடைபெறும் சம்பவங்களின் பின்னனி: நா.உ. பா.அரியநேத்திரன் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14074" title="ari" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/ari-100x80.jpg" alt="" width="100" height="80" />மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் நடைபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பறிப்பு முதல், மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை வரை மக்கள் மத்தியில் மீண்டும்<span id="more-14566"></span> அச்சமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">பிள்ளையானின் கட்சியை சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் அண்மையில் காணாமல் போனதை தொடர்ந்து சனநாயக வழியில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தப்போவதாகவும் இதன் பின்னால் உள்ள சக்திகள் தமது உறுப்பினரை விடுவிக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த படையினரும் ஏனையவர்களும் முன்வர வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இச்சம்பவங்களின் பின்னனியில் சிறிலங்கா ஆயுதப்படைகளை சேர்ந்தவர்களே இருப்பதனை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">இவ்வாறான சம்பவங்களின் மூலம் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்களின் காரியங்களை நிறைவேற்றவும் அச்சமடைந்துமுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d" title="அரியநேந்திரன்" >அரியநேந்திரன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13306" title="யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகம் மீது அராஜகமா?: அரியநேந்திரன் (July 30, 2010)">யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகம் மீது அராஜகமா?: அரியநேந்திரன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10848" title="தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உருத்திரகுமாரா? பின்னணியிலுள்ள சதித்திட்டத்தை விளக்குகிறார் அரியநேந்திரன் எம்.பி (May 30, 2010)">தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உருத்திரகுமாரா? பின்னணியிலுள்ள சதித்திட்டத்தை விளக்குகிறார் அரியநேந்திரன் எம்.பி</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=4837" title="தைத்திருநாளில் தமிழ் மக்களின் இழந்துவிட்ட உரிமைகள் கிடைக்க பிரார்த்திப்போம்: அரியநேந்திரன் (January 14, 2010)">தைத்திருநாளில் தமிழ் மக்களின் இழந்துவிட்ட உரிமைகள் கிடைக்க பிரார்த்திப்போம்: அரியநேந்திரன்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14566</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது: தியாகு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14559</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14559#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 15:44:10 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தியாகு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14559</guid>
		<description><![CDATA[தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது: தியாகு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14561" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman3.jpg" alt="" width="100" height="80" />சீமானை  தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி  நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல.  நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது  சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா  என்று      பரிந்துரை செய்வா<span id="more-14559"></span>ர்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும்  சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.</p>
<p style="text-align: justify;">2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று  நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம்  அதற்கு  பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும்  அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட   உச்ச நீதி மன்ற  உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால்  வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே.  எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே.  அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி  படையை பற்றி  பேசியதை பற்றி கேட்டனர். அதற்க்கு சீமான் நாம் பேசியது  உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே  என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த  பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் .  இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம்   உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.</p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/O1FzXLC5tyQ&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="385" src="http://www.youtube.com/v/O1FzXLC5tyQ&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81" title="தியாகு" >தியாகு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9965" title="சோனியா, மன்மோகனும் யுத்தக் குற்றவாளிகளே: தோழர் தியாகு (May 10, 2010)">சோனியா, மன்மோகனும் யுத்தக் குற்றவாளிகளே: தோழர் தியாகு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14559</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக கட்சிகள் இலங்கை மீது புகார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14556</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14556#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 15:36:25 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14556</guid>
		<description><![CDATA[இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக கட்சிகள் இலங்கை மீது புகார்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-1595" title="Flag-Sri-Lanka" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Flag-Sri-Lanka5.JPG" alt="" width="100" height="80" />இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டுக்குப் பிறகும், இடம் பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலையும் பரிதாபகரமாக உள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று, தமிழகக் கட்சிகளின் சார்பில் கவலை <span id="more-14556"></span>தெரிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அது குறித்து, இலங்கை செல்லும்போது அந்நாட்டு அரசுடன் தான் விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மறுவாழ்வு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, நேற்று மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.</p>
<p style="text-align: justify;">அப்போது அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்ய இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று உறுதியளித்தார்.</p>
<p style="text-align: justify;">அப்போது குறுக்கிட்டு் பேசிய டி.ஆர். பாலு, இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்றும், இன்னும் 52 ஆயிரம் பேர் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்திய – இலங்கை உடன்பாட்டின்படி, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த இலங்கை முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய பாலு, சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த ஒரு பேட்டியில், அரசியல் தீர்வு காண்பதற்கு அவசரம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அரசியல் தீர்வு காணும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை அது குறிப்புணர்த்துவதாகவும் பாலு புகார் கூறினார்..</p>
<p style="text-align: justify;">தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த 14 முகாம்களுக்கு மட்டும் தாங்கள் அழைத்துச்ச செல்லப்பபடவில்லை என்று குற்றம் சாட்டினார். அந்தச் சிறுவர்கள், விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்று தங்களிடம் அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், அவ்வாறு இருந்தாலும் கூட அவர்கள் மனிதாபிமான அடிப்படையி்ல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்தியா அதுபற்றிக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p style="text-align: justify;">இந்தியா அளிக்கும் உதவிகள், இலங்கைத் தமிழ் மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்றும் பாலு புகார் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இந்தப் பிரச்சினை குறித்து அதிமுக உறுப்பினர் தம்பித்துரை, மதிமுக உறு்ப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரும் கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.</p>
<p style="text-align: justify;">பின்னர் அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, இடைத்தங்கல் முகாம்களில் இன்னும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை உள்ளதாகவும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இந்தியா வழங்கும் உதவிகள் தமிழ் மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்ட்டுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மூலம் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்லவிருப்பதாகவும், அவர் அங்குள்ள நிலைமையைத் தெரிந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அதன் பிறகு தானும் அடுத்த மாதம் இலங்கை செல்லும்போது, அப்போது,. மூத்த அதிகாரி அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் இலங்கை அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88" title="இலங்கை" >இலங்கை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3253" title="இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!! (December 12, 2009)">இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13326" title="இலங்கைக்கு நிதி அனுப்புவதை நிறுத்த வேண்டும்: ஈஸ்வரலிங்கம் வேண்டுகோள் (July 31, 2010)">இலங்கைக்கு நிதி அனுப்புவதை நிறுத்த வேண்டும்: ஈஸ்வரலிங்கம் வேண்டுகோள்</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1141" title="வரலாறு காணாத மிகவும் மோசமான தேர்தல்களை சந்திக்கப்போகும் இலங்கை (November 17, 2009)">வரலாறு காணாத மிகவும் மோசமான தேர்தல்களை சந்திக்கப்போகும் இலங்கை</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9342" title="உலகின் எந்தவொரு இனமும் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதிக்கப்படாது: பிரதமர் (April 29, 2010)">உலகின் எந்தவொரு இனமும் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதிக்கப்படாது: பிரதமர்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6799" title="ஐனவரி முதல் 23 பேர் காணாமல் போயுள்ளனர்: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு (February 28, 2010)">ஐனவரி முதல் 23 பேர் காணாமல் போயுள்ளனர்: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14556</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது &#8211; பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14552</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14552#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:11:21 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிவந்தன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14552</guid>
		<description><![CDATA[சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது - பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-13601" title="sivanthan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/sivanthan1.jpg" alt="" width="100" height="80" />சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம். தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும் தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் 28.08<span id="more-14552"></span>.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து  இலங்கை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கிய நடைப்பயணம்.</p>
<p style="text-align: justify;">இந்த நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் முன்னெடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.</p>
<p style="text-align: justify;">“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார் எங்கள் திலீபன் அண்ணா.</p>
<p style="text-align: justify;">உலகத் தமிழ் உறவுகளே!  அனைவரும் ஒன்று திரளுவோம்!</p>
<p style="text-align: justify;">நடைப்பயணத்தில் நம்மையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுவோம்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d" title="சிவந்தன்" >சிவந்தன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13949" title="20வது நாளாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம் (படங்கள் இணைப்பு) (August 12, 2010)">20வது நாளாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம் (படங்கள் இணைப்பு)</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14148" title="ஐ.நாவை நோக்கிய நடைபயணத்தை தொடரும் சிவந்தன் அவர்களின் ஒலி வடிவம் (August 17, 2010)">ஐ.நாவை நோக்கிய நடைபயணத்தை தொடரும் சிவந்தன் அவர்களின் ஒலி வடிவம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13178" title="சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார் (July 28, 2010)">சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13008" title="சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள் (படம், காணொளி இணைப்பு) (July 25, 2010)">சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள் (படம், காணொளி இணைப்பு)</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13492" title="லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய 11வது நாள் நடைப் பயணம் (படங்கள் இணைப்பு) (August 3, 2010)">லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய 11வது நாள் நடைப் பயணம் (படங்கள் இணைப்பு)</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14552</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் (காணொளி இணைப்பு)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14541</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14541#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:59:09 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்வாணி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14541</guid>
		<description><![CDATA[பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் (காணொளி இணைப்பு)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14543" title="tamilvaani" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/tamilvaani-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்</p>
<p style="text-align: justify;">தாயகத்தில் நிகழ்ந்த பேரவலத்தின்போது அங்கு வாழந்து அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரித்தானியா வாழ் தமிழ்வாணி CMRTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அங்<span id="more-14541"></span>கு தான் செய்த பணிகள் தொடர்பிலும் அங்கு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் எவ்வாறு மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="380" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/zFPwEYdR0RA&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="380" src="http://www.youtube.com/v/zFPwEYdR0RA&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="380" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/tl9NTsyXdx8&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="380" src="http://www.youtube.com/v/tl9NTsyXdx8&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>
<p style="text-align: justify;"><center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="380" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/Cotg03PT0f0&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="380" src="http://www.youtube.com/v/Cotg03PT0f0&amp;rel=0&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_GB&amp;feature=player_embedded&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf" title="தமிழ்வாணி" >தமிழ்வாணி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14541</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14537</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14537#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:50:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராமசாமி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14537</guid>
		<description><![CDATA[ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-12966" title="anna_ramasamy" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/07/anna_ramasamy.jpg" alt="" width="100" height="80" />தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">பேராசிரியர் இரா<span id="more-14537"></span>மசாமி, &#8216;பினாங்கு ராமசாமி&#8217; என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!</p>
<p style="text-align: justify;">செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், &#8216;மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்&#8217; என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;"><strong>பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:</strong></p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே&#8230; என்ன காரணம்?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.</p>
<p style="text-align: justify;">இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.</p>
<p style="text-align: justify;">தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.</p>
<p style="text-align: justify;">செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்&#8230; வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.</p>
<p style="text-align: justify;">புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான &#8216;பிரவசி பாரதிய திவாஸ்&#8217; மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.</p>
<p style="text-align: justify;">இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14538" title="anna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/anna1.jpg" alt="" width="604" height="453" /></p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> எனக்கு மட்டுமல்ல&#8230; உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப்  பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.</p>
<p style="text-align: justify;">பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> கடந்த காலங்களில் &#8216;தீவிரவாதம்&#8217; என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.</p>
<p style="text-align: justify;">என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.</p>
<p style="text-align: justify;">நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.</p>
<p style="text-align: justify;">பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.</p>
<p style="text-align: justify;">தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.</p>
<p style="text-align: justify;">மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify;">ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!</p>
<p style="text-align: justify;"><strong>கேள்வி:</strong> இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?</p>
<p style="text-align: justify;"><strong>பதில்:</strong> மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.</p>
<p style="text-align: justify;">எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.</p>
<p style="text-align: justify;">ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.</p>
<p style="text-align: justify;">கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.</p>
<p style="text-align: justify;">இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf" title="இராமசாமி" >இராமசாமி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11676" title="தமிழீழ உருவாக்கத்துக்கான அரசியல் மாற்றம் தமிழகத்திலேயே உருவாகவேண்டும்: இராமசாமி (June 17, 2010)">தமிழீழ உருவாக்கத்துக்கான அரசியல் மாற்றம் தமிழகத்திலேயே உருவாகவேண்டும்: இராமசாமி</a> (7)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14084" title="மன்மோகன், சோனியா, கருணாநிதியிடமும் இலங்கை போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பேராசிரியர் இராமசாமி (August 16, 2010)">மன்மோகன், சோனியா, கருணாநிதியிடமும் இலங்கை போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பேராசிரியர் இராமசாமி</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14537</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>செந்தமிழன் சீமான் அவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14530</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14530#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:40:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14530</guid>
		<description><![CDATA[செந்தமிழன் சீமான் அவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14532" title="seeman1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman11-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி<span id="more-14530"></span>மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள்ள தேசியப் பாதுகாப்பு சட்ட அறிவுரைத் தீர்ப்பாயதிற்கு அழைத்து வருதவதாக செய்தி அறிந்து ஏராளமான பொது மக்களுடன் நூற்றுகணக்கான நாம் தமிழர் கட்சியினர் காலையிலிருந்தே திரண்டு இருந்தனர். மதியம் ஒரு மணியளவில் அண்ணன் சீமானை காவல்துறையினர் அழைத்து வந்தனர்.</p>
<p style="text-align: justify;">அறிவுரை கழகத்திற்கு மதிப்புக்குரிய தமிழ் தேசிய முன்னணி தோழர் தியாகு அவர்கள் தனது வாதங்களை முன் வைத்தார், அதை கேட்டு கொண்ட நீதி அரசர்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்கள், அதன் பின் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வேலூர் சிறைக்கு திருப்பி அழைத்து செல்லப்பட்டார்.</p>
<p style="text-align: justify;">அதன் பிறகு தோழர் தியாகு அவர்கள் நமது நாம் தமிழர் இயக்க தமிழ் தேவனுக்கு பேட்டியில் கூறியதாவது :</p>
<p style="text-align: justify;">சீமானை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல. நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும் சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14531" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman2.jpg" alt="" width="558" height="200" /></p>
<p style="text-align: justify;">2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம் அதற்கு பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.</p>
<p style="text-align: justify;">அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும் அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட உச்ச நீதி மன்ற உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.</p>
<p style="text-align: justify;">தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால் வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர்.</p>
<p style="text-align: justify;">அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே. எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே. அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி படையை பற்றி பேசியதை பற்றி கேட்டனர்.</p>
<p style="text-align: justify;">அதற்க்கு சீமான் நாம் பேசியது உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் .</p>
<p style="text-align: justify;">இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம் உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14532" title="seeman1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman11.jpg" alt="" width="558" height="200" /></p>
<p style="text-align: justify;">அதற்க்கு அவர்களாலும் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் என்றார் மதிப்புக்குரிய தமிழ் தேசிய முன்னணி தோழர் தியாகு அவர்கள்.</p>
<p style="text-align: justify;">சென்னையிலிருந்து 495 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தொண்டியை சேர்ந்த 65 வயதாகும் முத்து என்ற முதியவர் அண்ணன் சீமான் வருவதை அறிந்து வந்திருந்தார். தொண்டியில் உள்ள சரவணா என்ற உணவு விடுதியில் சமையல் செய்யும் வேலையை செய்யும் இவர் ஒரு நாளைக்கு 150 ரூபாய் ஈட்டுகிறார் இந்த நிலையிலும் இந்திய் நாட்டு இறையாண்மை என்ற தலைப்பில் ஈழ மக்கள் படும் அவலங்களை இந்திய அரசு செய்யும் துரோகத்தை ஆறு பக்கங்கள் அடங்கிய அறிக்கையை அங்கிருந்த எல்லோருக்கும் இலசவமாக அளித்து கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">எல்லோரையும் நெகிழ வைப்பதாக இருந்தது .இந்த வயதில்அவருக்கு இருக்கும் கடமை உணர்ச்சி இங்குள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால் நாம் இனத்தை காப்பாற்றி இருக்கலாம்.அவரதது வருகை நாம் தமிழர் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது .அவருக்கு சிறிய அளவிலான நிதி உதவியும் செந்தமிழன் சீமானின் அணிந்த்துரையில் இலங்கையின் பூர்வீக தமிழர்கள் மற்றும் மே நாள் வீர வணக்கம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14533" title="seeman2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman21.jpg" alt="" width="558" height="200" /></p>
<p style="text-align: justify;">அவர் பேசும் பொழுது கூறிய வார்த்தை சிங்கள ராணுவம் பிறந்த மேனியாக்கி சித்திரவதை செய்து சுட்டு கொல்வது தமிழக மீனவர்களை அல்ல இந்த இந்திய இறையாண்மையை,மன்மோகன் சிங்கை, சோனியாவை, இந்த நாட்டிலுள்ள 110 கோடி இந்திய குடிமக்களை இதை இங்குள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். உணர்ந்து கொள்வார்களா ?</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d" title="சீமான்." >சீமான்.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2807" title="தமிழர்களின் உணர்வை பாதிக்கும் என்று தெரிந்தே பிரபாகரன் படத்தை கிழித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: சீமான் ஆவேசம் (December 6, 2009)">தமிழர்களின் உணர்வை பாதிக்கும் என்று தெரிந்தே பிரபாகரன் படத்தை கிழித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: சீமான் ஆவேசம்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9585" title="உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள் (May 3, 2010)">உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3740" title="ஜெயலலிதா போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்: சீமான் (December 19, 2009)">ஜெயலலிதா போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்: சீமான்</a> (3)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9209" title="தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொழும்பு செல்வது பற்றி பரீசீலிக்கும் அமிதாப் பச்சனுக்கு சீமான் நன்றி (April 27, 2010)">தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொழும்பு செல்வது பற்றி பரீசீலிக்கும் அமிதாப் பச்சனுக்கு சீமான் நன்றி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10115" title="இந்தியாவுக்கு வர மறுத்த பார்வதி அம்மாளை வணங்குகிறேன்: சீமான் (May 13, 2010)">இந்தியாவுக்கு வர மறுத்த பார்வதி அம்மாளை வணங்குகிறேன்: சீமான்</a> (5)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14530</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>492 தமிழர்களினதும் அடையாளத்தை உறுதிப்படுத்த திணறும் கனடிய அதிகாரிகள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14527</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14527#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:35:57 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14527</guid>
		<description><![CDATA[492 தமிழர்களினதும் அடையாளத்தை உறுதிப்படுத்த திணறும் கனடிய அதிகாரிகள்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14320" title="mvsunsea" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/mvsunsea.jpg" alt="" width="100" height="80" />புகலிடம் கோரும் 492 இலங்கைத் தமிழர்களையும் தடுத்து வைத்து விசாரணை நடத்திவரும் கனடிய அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு குடியே<span id="more-14527"></span>ற்றவாசியினதும் அடையாள ஆவணங்கள் ஆய்வுக்காக வன்கூவரிலுள்ள கனடாவின் எல்லைச் சேவை முகவர் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்படவேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அதேசமயம் இக்குடியேற்றவாசிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரணை நடத்தவேண்டியுள்ளது. அவர்களின் ஆவணங்களும் அவர்கள் கூறும் விடயங்களும் பொருத்தமானவையாக உள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">சில குடியேற்றவாசிகள் ஒருபகுதி ஆவணங்களையே வைத்திருக்கின்றனர். சிலர் புகைப்படப்பிரதிகளை மட்டும் வைத்திருக்கின்றனர். அவர்கள் இலங்கையிலுள்ள தமது உறவினர்களிடமிருந்தோ அல்லது இதர இடங்களிலிருந்தோ ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">குடியேற்றவாசிகள் சிலர் தம்முடன் ஆவணங்களை எடுத்துவந்துள்ள நிலையில் சிலர் கப்பலில் அவற்றை விட்டுவிட்டு வந்துள்ளனர். அதனால் அதிகாரிகள் அவற்றைப் பெற்று சம்பந்தப்பட்ட நபருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">செவ்வாய்க்கிழமை குடியேற்றவாசிப் பெண் ஒருவரிடம் விசாரணை நடத்திய போது அப்பெண் எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் கனடாவை வந்தடைந்ததாகக் கனடாவின் எல்லைச் சேவைகள் முகவர் நிலையத்தின் சட்டத்துறை பிரதிநிதியான அசீம் லால்ஜி குடிவரவு அகதிகள் சபையின் விசாரணையாளரிடம் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட தனது அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழை அப்பெண் கையளித்ததாகக் குடியேற்றவாசிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவரான எரிக் புட்ங்கி கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மற்றொரு அறையில் வேறொரு பெண் குடியேற்றவாசியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அப்பெண்ணிடமிருந்த ஆவணங்களை பரிசீலிப்பது கடினமானதாக இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நடவடிக்கைகளுக்காக 10 தமிழ் உரைபெயர்ப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">விசாரணை நடவடிக்கைகளில் பெண்கள், சிறுவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d" title="தமிழர்" >தமிழர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=852" title="&#8216;ஈழம் மௌனத்தின் வலி&#8217; புத்தக வெளியீட்டு விழா! (November 14, 2009)">&#8216;ஈழம் மௌனத்தின் வலி&#8217; புத்தக வெளியீட்டு விழா!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5862" title="கனடியத் தமிழர் தேசிய அவைக்கான மக்கள் பார்வைக்கான யாப்பு (February 5, 2010)">கனடியத் தமிழர் தேசிய அவைக்கான மக்கள் பார்வைக்கான யாப்பு</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8955" title="தமிழர் தாயகத்தில் துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு (April 21, 2010)">தமிழர் தாயகத்தில் துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11505" title="கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் &#8211; வேட்பப்பாளார்கள் வேடப்பு மனுத்தாக்கல் (June 13, 2010)">கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் &#8211; வேட்பப்பாளார்கள் வேடப்பு மனுத்தாக்கல்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8356" title="தமிழர் தாயகத்தில் இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்பது எதனை? (April 10, 2010)">தமிழர் தாயகத்தில் இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்பது எதனை?</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14527</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சவேந்திர சில்வா பிரதி வதிவிடப் பிரதிநிதி, வசந்த கரன்னகொட வதிவிட பிரதிநிதியா?: இன்னர்சிற்றி பிரஸ்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14524</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14524#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:28:28 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இன்னர்சிற்றி பிரஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14524</guid>
		<description><![CDATA[சவேந்திர சில்வா பிரதி வதிவிடப் பிரதிநிதி, வசந்த கரன்னகொட வதிவிட பிரதிநிதியா?: இன்னர்சிற்றி பிரஸ்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-12387" title="inner city press" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/07/inner-city-press.jpg" alt="" width="100" height="80" />நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிரந்தர பிரதிநிதியாக இலங்கையின் யுத்தக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  நேற்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பின்போது, கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர்கள்<span id="more-14524"></span> இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி, அது தொடர்பில் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்த புலிகளை 58 வது படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கே உத்தரவிடப்பட்டது என முன்னாள் இராணுவ தளபதி  சரத் பொன்சேகா தெரிவித்திருந்த நிலையில் எவ்வாறு இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வது என இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அனுமானங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் என மார்டின் நெசர்கி இதற்கு பதிலளித்தார்</p>
<p style="text-align: justify;">இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கு பதிலாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.</p>
<p style="text-align: justify;">எனினும் அந்த விடயம் குறித்து தனக்கு தெரியாது என மார்டின் நெசர்கி பதிலளித்தார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கையின் இராஜதந்திரி ஒருவரை கோடிட்டு இன்னர் சிற்றி பிரஸ், வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் இடமாற்றப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d" title="இன்னர்சிற்றி பிரஸ்" >இன்னர்சிற்றி பிரஸ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14524</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கடந்தகால தவறுகளுக்கு சகல தரப்பும் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14519</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14519#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 06:20:45 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14519</guid>
		<description><![CDATA[கடந்தகால தவறுகளுக்கு சகல தரப்பும் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14520" title="thavaru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/thavaru-100x80.jpg" alt="" width="100" height="80" />கடந்தகால தவறுகள் மற்றும் இன நெருக்கடிக்கு காரணமாகவிருந்த மோசமான ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒருமித்த மன்னிப்புக் கோரவேண்டும். என முன்னாள் அரச சமாதான செயலகத்தின் மு<span id="more-14519"></span>ன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த தனபால தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. காரணம் மோசமான ஆட்சி முறைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும். வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என கலாநிதி ஜயந்த தனபால தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு அரசாங்கம் விரைவில் செல்லவேண்டும். இதன்மூலம் புலம்பெயர் மக்களை இணைத்துக்கொண்டு எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அத்துடன் குறுகிய காலத்தில் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு செல்வது மிகவும் முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே ஜய ந்த தனபால மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த ஜயந்த தனபால கூறியதாவது:-</p>
<p style="text-align: justify;"><strong>நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய பயங்கரவாத பிரச்சினைக்கு புலிகளின் செயற்பாடுகள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. மாறாக கடந்தகாலங்களில் கொண்டுநடத்தப்பட்ட தவறான ஆட்சி முறைகளும் ஒரு காரணமாகும். தவறான ஆட்சி முறைமைகள் குழுக்கள் ஆயுதங்களை எடுப்பதற்கு காரணமாகியது.</strong></p>
<p style="text-align: justify;">எந்தவொரு மக்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் கல்வி செயற்பாடுகள் அமையவேண்டும். நாட்டின் கல்வி திட்டம் தொடர்பில் நாம் பாரிய வகையில் ஆராயவேண்டியுள்ளது. கடந்தகால பிரச்சினைகளுக்கு பல காரணங்களை முன்வைக்கலாம். ஆனால் சிறப்பான எண்ணக்கருக்கள் ஏற்படும் வகையில் கல்வி றைமை அமைய வேண்டும் என்பது முக்கியமாகும்.</p>
<p style="text-align: justify;">அடுத்ததாக புலம் பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது. முக்கியமாக பல்வேறு காரணங்களினால் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் அபிலாஷைகள் உள்ளன. அதாவது அநீதிகள் முரண்பாடுகள் பொருளாதார காரணங்கள் என்பவற்றினால் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அந்தக் காரணங்களை நாம் மதிக்கவேண்டும். எனவே அவர்களுடன் சிறப்பாக செயற்படுவது தொடர்பில் ஆராயவேண்டும்.</p>
<p style="text-align: justify;">புலம்பெயர்ந்தவர்களின் கணிப்பீடு தேவை மேலும் சரியான மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் புலம் பெயர் மக்களுடன் சிறப்பான முறையில் இணைந்து செயற்படலாம் என்று நம்புகின்றேன். அவர்களை இந்த நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தூண்ட முடியும். இல்லாவிடின் தவறான புரிந்துகொள்ளல்கள் இடம்பெறலாம்.</p>
<p style="text-align: justify;">அடுத்த விடயமாக எமது நாட்டின் இராஜ தந்திர சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு பல பொறுப்புகள் உள்ளன. வெளி விவகார அமைச்சின் செயற்பாடுகள் அனைத்து மொழிகளிலும் இடம்பெறவேண்டும். அதாவது சர்வதேசத்துக்கு சிறந்த றையில் விளக்கமளிப்புகள் வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி அரசியல் தீர்வு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மனித உரிமை விடயம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதாவது சர்வ தேச ரீதியில் பல உடன்படிக்கைகளில் நாங்கள் கைச்சாத்திட்டுள்ளோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் உரிமையை நாம் மதிக் கவேண்டும். மேலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஆராயவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் சகல குழுக்களிடமிருந்தும் ஆயுதங்கள் அகற்றப்படவேண்டும். அதாவது சட்டத்தை நடைறைப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை வைத்திருக்கலாம். மாறாக ஏனையவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும். யுத்த காலத்தில் பல இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். அந்த ஆயுதங்கள் தொடர்பில் ஆராயவேண்டும்.</p>
<p style="text-align: justify;">இன மற்றும் மத சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதன் மூலம் நிறுவனம் ஒன்று அமைக்கப்படவேண்டும். அதனூடாக இனம் மதம் ஆகியவற்றின் உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும். யாருக்கும் அநீதிகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.</p>
<p style="text-align: justify;">மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வுகளில் தமிழில் பேசுவது சிறப்பான விடயமாகும். இது ஏனைய மொழிகளை மதிப்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றது. இதனை ஏனைய அமைச்சர்கள் பின்பற்றவேண்டும். அரசியல்வாதிகளும் பின்பற்றவேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>இங்கு ஒரு விடயத்தை முன்வைக்கின்றேன். அதாவது 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்றதும் அப்போதைய பேராயராக இருந்த லக்ஷ்மன் விஜேசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது சிங்கள மக்கள் சார்பாக தான் மன்னிப்புக் கோருவதாக அவர் அதில் தெவித்திருந்தார். அவ்வாறான விடயம் இங்கு அவசியம் என்று நான் கருதுகின்றேன்.</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81" title="மன்னிப்பு" >மன்னிப்பு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14519</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14506</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14506#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 21:11:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழர் படை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14506</guid>
		<description><![CDATA[ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14507" title="Thamilar_Padai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Thamilar_Padai.jpg" alt="" width="100" height="80" />ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.</p>
<p style="text-align: justify;">ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.</p>
<p style="text-align: justify;">இலங்கைத்தீவில் <span id="more-14506"></span>யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14514" title="Thamilar_Padai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Thamilar_Padai_21.jpg" alt="" width="727" height="744" /></p>
<p style="text-align: justify;">முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-14508" title="pandara_vanniyan" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pandara_vanniyan-213x300.jpg" alt="" width="213" height="300" />அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.</p>
<p style="text-align: justify;">வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.<br />
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">****************************************************</p>
<p style="text-align: justify;">சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.</p>
<p style="text-align: justify;">****************************************************</p>
<p style="text-align: justify;">அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.</p>
<p style="text-align: justify;">தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14509" title="ltte_arty" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/ltte_arty.jpg" alt="" width="600" height="395" /></p>
<p style="text-align: justify;">அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.</p>
<p style="text-align: justify;">புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.</p>
<p style="text-align: justify;">யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.</p>
<p style="text-align: justify;">ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.</p>
<p style="text-align: justify;">தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-14510" title="Raju-in-side" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/Raju-in-side-300x225.jpg" alt="" width="300" height="225" />அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.</p>
<p style="text-align: justify;">விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக &#8216;சிறுத்தைகள்&#8217; என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.</p>
<p style="text-align: justify;">இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட  நினைவுநாளில்தான் &#8211; சாவடைந்தார்.</p>
<p style="text-align: justify;">மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88" title="தமிழர் படை" >தமிழர் படை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14506</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அசின், விவேக் ஓபராய் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14498</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14498#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 20:56:45 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசின்]]></category>
		<category><![CDATA[விவேக்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14498</guid>
		<description><![CDATA[அசின், விவேக் ஓபராய் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14489" title="asin_vivek" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/asin_vivek.jpg" alt="" width="100" height="80" />நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் சர்வ<span id="more-14498"></span>தேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்பாவி தமிழர்களை சிங்கள இராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்து இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இதில் நிர்வாகிகள் பரமேஸ்வரன், முருகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை பேசும் போது, இலங்கையில் இந்து கோவில்களை இடித்து விட்டு புத்தமத கோவில்களை அதிபர் ராஜபக்சே கட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d" title="அசின்" >அசின்</a>, <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%af%8d" title="விவேக்" >விவேக்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14498</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>முஸ்லிம் காங்கிரஸ் எந்நேரமும் அரசு பக்கம் தாவலாம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14492</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14492#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 20:34:51 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம் காங்கிரஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14492</guid>
		<description><![CDATA[முஸ்லிம் காங்கிரஸ் எந்நேரமும் அரசு பக்கம் தாவலாம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14493" title="muna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/muna-100x80.jpg" alt="" width="100" height="80" />ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இவ்வாரம் இணையவுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக் கள் பலர் அரசுடன் இணைய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை மைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">எதிர்க்கட்சியில் தொ<span id="more-14492"></span>டர்ந்து ஸ்ரீல.மு.கா. இருந்தால் தமக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவித சேவையையும் செய்ய முடியாது எனவும் இதனால் எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் புறக்கணித்து விடுவார்கள் எனவும் அந்த எம்.பிக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திடம் எடுத்துரைத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்தபோது ரவூப் ஹக்கீம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இங்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே நேற்றைய சந்திப்பு இடம்பெற விருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d" title="முஸ்லிம் காங்கிரஸ்" >முஸ்லிம் காங்கிரஸ்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14669" title="சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படாது என நம்புகின்றோம்: கூட்டமைப்பு (August 29, 2010)">சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படாது என நம்புகின்றோம்: கூட்டமைப்பு</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12498" title="வடக்கு &#8211; கிழக்கு இணைப்பா? நடக்கவே நடக்காது என்று தமிழ் கூட்டமைப்பு மேல் பாய்கிறது முஸ்லிம் காங்கிரஸ் (July 12, 2010)">வடக்கு &#8211; கிழக்கு இணைப்பா? நடக்கவே நடக்காது என்று தமிழ் கூட்டமைப்பு மேல் பாய்கிறது முஸ்லிம் காங்கிரஸ்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14492</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கோத்தபாயவை கொலை செய்ய முயற்சித்த மூவர் கைது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14488</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14488#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 20:29:20 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோத்தபாய]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14488</guid>
		<description><![CDATA[கோத்தபாயவை கொலை செய்ய முயற்சித்த மூவர் கைது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-9486" title="go" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/05/go-100x80.jpg" alt="" width="100" height="80" />பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட தலைவர்களை கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்டு இரண்டு தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னணிலை ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் எட்டாம்<span id="more-14488"></span> திகதி வரை தடுத்து வைத்து இவர்களை விசாரணை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p>
<p style="text-align: justify;">கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்களும் செல்வமோகன் மற்றும் பிரபாகரன் என்ற பெயரைக் கொண்டவர்கள் என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்வதற்காக இலங்கை வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af" title="கோத்தபாய" >கோத்தபாய</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6730" title="யுத்தத்தின் இறுதி நாள் மே 18இல் நடந்ததை விவரிக்கிறார் கோத்தபாய (February 26, 2010)">யுத்தத்தின் இறுதி நாள் மே 18இல் நடந்ததை விவரிக்கிறார் கோத்தபாய</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1084" title="இந்தியாவின் உதவி மீண்டும்  தேவைபடுகிறது: கோத்தபாய (November 16, 2009)">இந்தியாவின் உதவி மீண்டும்  தேவைபடுகிறது: கோத்தபாய</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1872" title="எனக்கு எதிராக மக்களைத் திருப்ப மஹிந்தவும் கோத்தபாயவும் முயற்சி (November 26, 2009)">எனக்கு எதிராக மக்களைத் திருப்ப மஹிந்தவும் கோத்தபாயவும் முயற்சி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10556" title="வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்!: கோத்தபாய (May 21, 2010)">வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்!: கோத்தபாய</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6827" title="எரித்திரியா எம்மோடு உறவாட மறுக்கின்றது: கோத்தபாய (February 28, 2010)">எரித்திரியா எம்மோடு உறவாட மறுக்கின்றது: கோத்தபாய</a> (2)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14488</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கேணல் ராயுவின் 8ம் ஆண்டு நினைவு நாள் (25.08.2002)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14474</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14474#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:54:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[கேணல் ராயு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14474</guid>
		<description><![CDATA[கேணல் ராயுவின் 8ம் ஆண்டு நினைவு நாள் (25.08.2002)
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14475" title="rajuf" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/rajuf-100x80.jpg" alt="" width="100" height="80" />ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயரு டைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய் ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ ப<span id="more-14474"></span>ணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக் கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமான வரை அவரின்கீழ் செயற்படும் போராளிக ளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொ ள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டு பிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமை ந்தது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14476" title="raju1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju1.jpg" alt="" width="540" height="375" /></p>
<p style="text-align: justify;">“முடியாது என்றால் முயற்சிக்க வில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரய ங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த வொரு வேலையிலும் முழுத்திருப்தி அடை ந்துவிட மாட்டார்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம் படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட் பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.</p>
<p style="text-align: justify;">ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்க ளுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெ ரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற் பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர் களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத் தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படை யாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந் துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்ட த்திலும் மறைபொருளாக இருந்தது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14477" title="raju2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju2.jpg" alt="" width="540" height="380" /></p>
<p style="text-align: justify;">இந்தியப் படையினருடனான போர்க் காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படு த்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போ திருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.</p>
<p style="text-align: justify;">கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற் புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குத லாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகு தியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.</p>
<p style="text-align: justify;">பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இத னை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியி னை மேம்படுத்துவதற்காக அயராது உழை த்துக் கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;">தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந் திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14478" title="raju3" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju3.jpg" alt="" width="540" height="379" /></p>
<p style="text-align: justify;">1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற் றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்க ளாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறி களையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதை விட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.</p>
<p style="text-align: justify;">அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப் பாட்டுத் தொகுதிகள் (குசைந ஊழவெசழட) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லை த்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறை வான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப் திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக் கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுப டுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லிய மாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக் கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணை யையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளி டமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறி யீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கை கள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கிய மான பங்கினைப் பெற்றிருந்தது.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14479" title="raju4" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju4.jpg" alt="" width="540" height="637" /></p>
<p style="text-align: justify;">சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலை யை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற் றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணை யின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப் புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.</p>
<p style="text-align: justify;">அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்கு வதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவி க்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண் ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லா மல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ் வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல் வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறி வைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப் பட்டது.<br />
&#8230;&#8230;<br />
1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படை யணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத் தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணி யின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படை யணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்தி ருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத் தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந் தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத் தினார்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களி லும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங் கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14480" title="raju5" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju5.jpg" alt="" width="540" height="353" /></p>
<p style="text-align: justify;">1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார்.</p>
<p style="text-align: justify;">நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இட த்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.</p>
<p style="text-align: justify;">ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட் சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளு க்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர் வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்ப தற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந் துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியி னையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசி ரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவி டுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.</p>
<p style="text-align: justify;">பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக் கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார் ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக் குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.</p>
<p style="text-align: justify;">1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்பு லித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையி னால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போரா ளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப் போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிரு வரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14481" title="raju6" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/raju6.jpg" alt="" width="540" height="358" /></p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விட யங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.<br />
எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண் டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற் பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்க ளது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வ தாகவே இருக்கும்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொ டிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக் கொண்டி ருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.<br />
அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயி ருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.</p>
<p style="text-align: justify;">தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண் ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவ ரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றி யநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில் லை, மூழ்கிப் போகவுமில்லை.</p>
<p style="text-align: justify;">வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட் டங்களை அறிந்துகொள்வா ர்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.<br />
இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்கு தல் பிசகியதைக் கேள்விப்ப ட்டராயு அண்ணையே நேரடி யாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத் தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற் கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படை யினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட கேணல் ராயு படைய அறிவியல் தொழி நுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் <strong>“நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”</strong></p>
<p style="text-align: justify;">ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.</p>
<p style="text-align: justify;"><center><strong>ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு, தலைவர், தளபதிகள் பங்கேற்பு.</strong></center><br />
<center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="580" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="playlistId=101905575&amp;isCarouselEnabled=1&amp;lang=en-us&amp;intl=us" /><param name="src" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="flashvars" value="playlistId=101905575&amp;isCarouselEnabled=1&amp;lang=en-us&amp;intl=us" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="580" src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" flashvars="playlistId=101905575&amp;isCarouselEnabled=1&amp;lang=en-us&amp;intl=us" bgcolor="#000000" allowfullscreen="true"></embed></object></center></p>
<p style="text-align: justify;"><center><span style="font-weight: bold;">மாவீரர் மகுடம்: கேணல் ராயு</span></center><br />
<center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="100" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://www.4shared.com/embed/144397714/bef15501" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="100" src="http://www.4shared.com/embed/144397714/bef15501" allowfullscreen="true"></embed></object></center></p>
<p style="text-align: justify;"><center><span style="font-weight: bold;">தொடு வானம்: கேணல் ராயு</span></center><br />
<center><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="540" height="380" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/p/E7EA8E7EE185308E?hl=en_US&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="540" height="380" src="http://www.youtube.com/p/E7EA8E7EE185308E?hl=en_US&amp;fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></center></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%81" title="கேணல் ராயு" >கேணல் ராயு</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14474</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலம்பெயர்ந்த தமிழர்களே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழந்தமைக்கான காரணம்: அரசாங்கம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14471</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14471#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:42:59 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்த தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14471</guid>
		<description><![CDATA[புலம்பெயர்ந்த தமிழர்களே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழந்தமைக்கான காரணம்: அரசாங்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-2468" title="pulam_makkal" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/pulam_makkal.JPG" alt="" width="100" height="80" />ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காரணமாகவே இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போனதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">ஜி எஸ் பி பிளஸ் <span id="more-14471"></span>வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய அண்மையில் குற்றம் சுமத்தியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களையே ஐக்கிய தேசியக் கட்சியும் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d" title="புலம்பெயர்ந்த தமிழர்" >புலம்பெயர்ந்த தமிழர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10098" title="புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு போர் பிரகடனம்! அனைத்து சிங்கள மக்களுக்கும் அறைகூவல் (May 13, 2010)">புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு போர் பிரகடனம்! அனைத்து சிங்கள மக்களுக்கும் அறைகூவல்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14471</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.நா பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக ஷவேந்திர சில்வா</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14466</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14466#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:40:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சில்வா]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14466</guid>
		<description><![CDATA[ஐ.நா பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக ஷவேந்திர சில்வா ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14467" title="silva" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/silva-96x80.jpg" alt="" width="96" height="80" />வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்</p>
<p style="text-align: justify;">அவர் உடனடியா<span id="more-14466"></span>க தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ள நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பிரதி வதிவிடப்பிரதிநிதி பந்துல ஜயசேகரவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்து உரிய விளக்கங்களை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு 58 வது பிரிவு தளபதியான சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தமையும் இதற்காக சரத் பொன்சேகா பின்னர் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே மன்னார், நாச்சிக்குடா, பூநகரி, கிளிநொச்சி, ஆனையிறவு, விஸ்வமடு, புதுகுடியிருப்பு ஆகிய இடங்களை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be" title="சில்வா" >சில்வா</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14466</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி தலைவர்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14463</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14463#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:36:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைவர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14463</guid>
		<description><![CDATA[ஜனாதிபதியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி தலைவர்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-6115" title="ranil_mahinda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/02/ranil_mahinda-100x80.jpg" alt="" width="100" height="80" />ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு  இடம்பெற்ற போது, ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஏற்கனவே நிறை<span id="more-14463"></span>வேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை  நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">எனினும் இதற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இணக்கத்தை மாற்றி ஜனாதிபதி முறைமையை மாற்ற விருமபவில்லை என தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியுள்ளார்</p>
<p style="text-align: justify;">இதன் போது அதிர்ச்சிக்குள்ளான ரணில் விக்கிரமசிங்க, எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தரப்புகள் தெரிவித்துள்ளன.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d" title="தலைவர்" >தலைவர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1781" title="தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும் (November 25, 2009)">தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12965" title="உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர்: டாக்டர் பி. இராமசாமி (July 24, 2010)">உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர்: டாக்டர் பி. இராமசாமி</a> (25)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7518" title="யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா? (March 17, 2010)">யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14463</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளை எதிர்க்க அரசுடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் கடுமையான எச்சரிக்கை</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14460</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14460#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:32:53 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[புலி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14460</guid>
		<description><![CDATA[புலிகளை எதிர்க்க அரசுடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் கடுமையான எச்சரிக்கை]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-13670" title="pulikkodi_new" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/pulikkodi_new-100x80.jpg" alt="" width="100" height="80" />பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சிறீலங்கா அரசாங்<span id="more-14460"></span>கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf" title="புலி" >புலி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9847" title="புலிகளுக்கு உயிர்கொடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் (May 8, 2010)">புலிகளுக்கு உயிர்கொடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10544" title="இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள் (May 21, 2010)">இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10751" title="புலிக்கொடி இனியும் தேவைதானா? (May 26, 2010)">புலிக்கொடி இனியும் தேவைதானா?</a> (14)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11333" title="ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது! (June 9, 2010)">ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13558" title="மீள அணி சேர்வதில் புலிகள் தீவிரமாம்: கடந்த மாதம் மாத்திரம் 1562 புலிகள் கைதாம்: பிரதமர் (August 4, 2010)">மீள அணி சேர்வதில் புலிகள் தீவிரமாம்: கடந்த மாதம் மாத்திரம் 1562 புலிகள் கைதாம்: பிரதமர்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14460</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கே.பி, கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14455</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14455#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 06:28:09 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[கே.பி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14455</guid>
		<description><![CDATA[கே.பி, கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14458" title="vaiko" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/vaiko-100x80.jpg" alt="" width="100" height="80" />தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.<br />
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p>
<p style="text-align: justify;">2009 ஆம் ஆண்டு <span id="more-14455"></span>ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா? என்று கேட்டார்.</p>
<p style="text-align: justify;">கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால், அணிமாற மாட்டேன்; தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்றேன்.</p>
<p style="text-align: justify;">அதற்கு அவர் நீங்கள் போட்டியிட சிவகாசித் தொகுதி ஒதுக்கப்படுகிறதா? என்றார்.</p>
<p style="text-align: justify;">தற்போது விருதுநகர் தொகுதி அது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது என்றேன்.</p>
<p style="text-align: justify;">நீங்கள் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், ஐநூறு எம்.பி.க்கள் எங்களுக்காகச் செல்வதாக நினைப்போம். எனவே, நீங்கள் போட்டியிட வேண்டும் என்றார்.</p>
<p style="text-align: justify;">நான் யோசிக்கிறேன் என்றேன்.</p>
<p style="text-align: justify;">அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். அண்ணா, பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சேட்டிலைட் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன் என்றேன்.</p>
<p style="text-align: justify;">அன்று நடந்த இந்த உரையாடல் அருகில் இருந்த என் இயக்க முன்னோடிகளுக்குத் தெரியும்.<br />
மே 10ஆம் தேதி அன்று கடற்புலிகளின் தலைவர் சூசை என்னிடம் பேசினார். காயம்பட்ட தமிழ் மக்களின் புண்களில் புழுக்கள் நெளிகின்றன.</p>
<p style="text-align: justify;">மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் சிலரை இந்திய அரசு ஒரு குழுவை அனுப்பிப் பார்வையிடச் செய்யுங்கள் என்றார்.</p>
<p style="text-align: justify;">மே 11 கடைசி நாள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன். அடுத்த நான்கு நாட்களுக்குள் கோரமான போரை சிங்கள அரசு நடத்தப் போகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கத் திட்டமிட்டு விட்டனர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழர்களை அழிக்க சிங்கள அரசு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டது என்று குறிப்பிட்டேன்.</p>
<p style="text-align: justify;">மே 12 அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் காடன் பிரௌன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்டத் தலைவர்களுக்கு தமிழர்களின் துயரத்தை மின் அஞ்சலில் வடித்துப் போரை நிறுத்த மன்றாடி செய்தி அனுப்பினேன்.</p>
<p style="text-align: justify;">நான் எந்தப் பதவியிலும் இல்லை. என் மனதில் ஏற்பட்ட பதற்றத்தால் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றே செயல்பட்டேன்.</p>
<p style="text-align: justify;">மே 13 வாக்குப் பதிவு முடிந்து இரவு பத்தே கால் மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். ஜெயித்துவிடலாமா? அண்ணா என்றார்.</p>
<p style="text-align: justify;">என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளும் தரப்பு பணத்தைக் கொட்டிவிட்டது. சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன். பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றிக் கவலைப்பட்டபோது &#8220;பயப்படாதீங்க அண்ணா! நாங்க வெல்வோம் அண்ணா! என்றார்.</p>
<p style="text-align: justify;">சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி, அவரையும் அவரது மனைவியையும், புலித்தேவனையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது.</p>
<p style="text-align: justify;">கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை.</p>
<p style="text-align: justify;">தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.</p>
<p style="text-align: justify;">துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.</p>
<p style="text-align: justify;">ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be" title="கருணா" >கருணா</a>, <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf" title="கே.பி" >கே.பி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1563" title="பொன்சேகா படுகொலை சதி: செய்தி வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியருக்கு கருணா குழு மிரட்டல்! (November 22, 2009)">பொன்சேகா படுகொலை சதி: செய்தி வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியருக்கு கருணா குழு மிரட்டல்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6449" title="வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி இணைவு? (February 19, 2010)">வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி இணைவு?</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=5495" title="சம்பந்தன் உட்பட மூன்று கூட்டமைப்பு எம்.பிக்களை படுகொலை செய்வதற்கு கருணா தலைமையில் இரகசிய திட்டம்! (January 29, 2010)">சம்பந்தன் உட்பட மூன்று கூட்டமைப்பு எம்.பிக்களை படுகொலை செய்வதற்கு கருணா தலைமையில் இரகசிய திட்டம்!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12302" title="கருணாவின் போதை நடனம், மீள்குடியேற்ற அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம் (July 8, 2010)">கருணாவின் போதை நடனம், மீள்குடியேற்ற அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12018" title="கே.பி. தொடர்பான செய்திக்கு கோத்தபாய மறுப்பு: தடுப்புக்காவலில் கே.பி (June 30, 2010)">கே.பி. தொடர்பான செய்திக்கு கோத்தபாய மறுப்பு: தடுப்புக்காவலில் கே.பி</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14455</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கனடியத் தமிழர் பேரவை Vancouver இல் இருந்து நேரடியாக வழங்கும் மேலதிக தகவல்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14448</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14448#comments</comments>
		<pubDate>Wed, 25 Aug 2010 00:04:40 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடியத் தமிழர் பேரவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14448</guid>
		<description><![CDATA[கனடியத் தமிழர் பேரவை Vancouver இல் இருந்து நேரடியாக வழங்கும் மேலதிக தகவல்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14449" title="ctc" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/ctc.jpg" alt="" width="100" height="80" />எம்வி சன் சீ கப்பலில் வந்திறங்கிய ஆண்கள் அனைவருக்குமான 48 மணிநேர தடுப்பு மீளாய்வு விசாரணைகள பிரேசர் பிராந்திய தடுப்பு மையத்தில் அமைந்துள்ள IRB யின் தற்காலிக அமைவிடத்தில் கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி 2010 அன்று நிறைவடைந்துள்ளன.  அவர்கள் அனைவரும் தங்களின் அடையா<span id="more-14448"></span>ளத்தை உறுதிப்படுத்த வேண்டி மேலும் ஏழு நாட்களுக்கு தொடர்ந்து தடுப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆண்களுக்கான ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும்.</p>
<p style="text-align: justify;">இன்று பெண்களுக்கான ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் முதல் 10 பெண்களுக்கு IRB யினால் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் விசாரணையின்போது IRB யின் வன்கூவர் செயலகத்துடன் தொலைபேசியில் தோற்றியிருந்ததோடு அனைவருக்கும் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்வரை தடுப்பு நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">பெண்களுக்கான ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் வன்கூவரில் உள்ள IRB செயலகத்தில் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி 2010 அன்று தொடர்ந்து நடைபெறும்.  நேரில் விசாரணைக்குத் தோன்றும் இப்பெண்களின் விசாரணைகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.</p>
<p style="text-align: justify;">கனடிய எல்லை சேவைகள் முகவம் எம்விசன்சீ குடிவரவாளர்கள் தொடர்பாக ஒரு விபரக்கொத்து ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.  அதன் தமிழாக்கத்தை கீழே தருகின்றோம்.</p>
<p style="text-align: justify;">மேலதிக விபரங்களுக்கு, கனடியத் தமிழர் பேரவையை 416.240.0078 என்னும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.</p>
<p style="text-align: justify;">விபரக் கொத்து</p>
<p style="text-align: justify;">எம் வி சன் சீ கப்பலில் வந்திறங்கியவர்கள் தொடர்பாக:</p>
<p style="text-align: justify;">ஆகஸ்ட் 23- 2010</p>
<p style="text-align: justify;">கனடிய அரசாங்கமும் கனடிய எல்லைச் சேவைகள் முகவமும் (CBSA) கனடியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் முன்னிலைப்படுத்தியே செயற்டுவது முக்கியமானது. பாதுகாப்பு மற்று குற்றவியல் அச்சுறுத்தல் காரணமாக முறையற்று வந்திறங்கிய அனைத்து குடிவரவாளர்களையும் சரியான பரிசோதனைகளுக்கு கனடிய எல்லைச் சேவைகள் முகவம் உட்படுத்தி வருகின்றது.  வயது வந்தவர்கள் நகரத்தின் தென்பகுதியின் பிரதான நிலப்பகுதியில் அவர்களுக்கு உரிய தடுப்பகங்களுக்கு மாற்றப்பட்டு இந்த நாட்டினுள் அனுமதிப்பதை தீர்மானிப்பதற்கான விபரமான பரிசோதனைகள் கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">குறிப்பிட்ட வயதெல்லையை அடையாத சிறுவர்கள் தடுப்பில் வைக்கப்படவில்லை.  உறவினர்களுடன் வந்தடைந்திருக்கும் சிறுவயதினர் அபாயம் குறைந்த இடங்களில் அவர்களின் தாயின் கவனிப்பில் விடப்படுவார்கள். சாத்தியமான நேரங்களில் அவர்களின் தங்குமிடங்கள் ஒன்றாகவே இருக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்படும்.  குழந்தைகளின் சிறந்த நலனைக் கருத்திற்கொண்டு உறவினர்களற்று வந்த சிறிய வயதினர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாண குழந்தைகள் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் விடப்பட்டு பாதுகாப்பான, ஆபத்தற்ற இடத்தில் பராமரிக்கப்படுவார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>உரிமைகள்<br />
</strong><br />
எம்விசன்சீயில் உள்ள குடிவரவாளர்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும், ஒரு சட்டத்தரணியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பின் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறியும் உரிமையும் அவர்களின் தடுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளருக்கோ அல்லது அவர்களின் தூதுவருக்கோ தெரியப்படுத்தும் உரிமையும் கொண்டிருப்பார்கள்</p>
<p style="text-align: justify;">தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சட்டத் தேவைகளுக்கான நிதி உதவி வழங்கப்படும்.  வந்திறங்கியவர்கள் தங்களின் சட்டத்தரணியைத் தாமே தெரிவு செய்து கொள்ளவும் தடுப்பு மீளாய்வு விசாரணைகளின் முன்னர் சட்டத்தரணியுடன் சந்திப்பதற்கும் முடியும்.</p>
<p style="text-align: justify;"><strong>பெறுவழி</strong></p>
<p style="text-align: justify;">வயது வந்தவர்கள் வெளியில் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொள்ளவும் தபால் மூலமான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அவர்களைப் பார்வையிட வருவதற்கான அனுமதி உள்ளவர்கள் பட்டியலில் பெயர்களை அவர்களால் இணைத்துக் கொள்ளவும் முடியும். பார்வையிட அனுமதி பெற்றவர்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண தடுப்புப் பிரிவைத் தொடர்பு கொண்டு பார்வையிடுவதற்கான ஒழுங்குகளைச் செய்ய இயலும்.</p>
<p style="text-align: justify;"><strong>தொடர்புகளுக்கு</strong></p>
<p style="text-align: justify;">எம்விசன்சீ கப்பலில் உறவினர் இருப்பதாக நீங்கள் எண்ணினால், உங்கள் உள்ளுர் கனடிய செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88" title="கனடியத் தமிழர் பேரவை" >கனடியத் தமிழர் பேரவை</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14448</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>நான் ஒரு குற்றவாளி</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14441</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14441#comments</comments>
		<pubDate>Tue, 24 Aug 2010 15:02:07 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நான் ஒரு குற்றவாளி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14441</guid>
		<description><![CDATA[நான் ஒரு குற்றவாளி]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14442" title="ich_bin" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/ich_bin-100x80.jpg" alt="" width="100" height="80" />யேர்மனியில் கைது செய்யப்பட்ட பணியாளர்களுக்காக ஆதரவு தெரிவித்து நீதி கோரி நிற்கும் யேர்மனி தமிழர்கள்.</p>
<p style="text-align: justify;">பல ஆண்டுகளாக யேர்மனியில் பிறந்தோ அல்லது அகதியாக வந்தோ வாழ்ந்து வேலை செய்துவரும் தமிழர்கள், இறுதி யுத்தத்தின்போது ப<span id="more-14441"></span>ல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கண்மூடித்தனமாக கொல்வதற்கு பொறுப்பாக இருந்த ஜெனரல் மேஜர் ஜெகத் டையஸின் யேர்மனி வருகையாலும் அத்தோடு அவரின் யேர்மனிய நாட்டின் அலுவலகத்தின் நடவடிக்கையாலும், பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளியாக்கப்பட்டவர்களாகவும் காண்பிக்கப்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">சமாதான காலத்தில் பல ஆண்டுகளாக சொந்த நாட்டுக்கு அபிவிருத்தி உதவி செய்வதும,  நிலவிய இனப்பிரச்சனைக்கு சமாதானமான வழியில் ஆதரவு தெரிவிப்பதும் அத்தோடு தனிப்பட்ட ரீதியாக போரால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு துணைநிற்பதும் சாதாரணமாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருந்த போதிலும் மேஜர் ஜெகத் டையஸின் வருகைக்குப்பின்னர் இப்பொழுது அவ்வாறான செயல்கள் யேர்மன் அரசால் குற்றங்களாக கணிக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">இந்த அநீதியை எதிர்த்து நீதியை பெறுவதற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நிற்கும் பல மக்களில் ஒரு சில நபர்களின் கருத்தை பின்வரும் இணையத்தளத்தின் பக்கத்தில் காணொளியூடாக பார்க்கலாம்.</p>
<p style="text-align: justify;"><a href="http://www.humanrights-server.org/index.php?option=com_content&amp;view=article&amp;id=33%3Ai-am-a-criminal&amp;catid=9%3Ai-am-a-criminal&amp;lang=de" target="_self">http://www.humanrights-server.org/index.php?option=com_content&amp;view=article&amp;id=33%3Ai-am-a-criminal&amp;catid=9%3Ai-am-a-criminal〈=de</a></p>
<p style="text-align: justify;">இலங்கையில் தமிழர்களின் விடுதலைக்காக சேவைப்புரிந்த பணியாளர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற வேளையில் சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் எங்கள் முகத்தை காண்பித்து ஆதரவு தெரிவிக்கும் நேரம் இது!</p>
<p style="text-align: justify;">காணொளியூடாக தங்கள் ஆதரவை பதிவு செய்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:</p>
<p style="text-align: justify;">Internationaler Menschenrechtsverein Bremen e.V.<br />
Herdentorsteinweg 38/39<br />
28195 Bremen</p>
<p style="text-align: justify;">மேலதிக விபரங்களுக்கு:<br />
<a href="http://www.humanrights-server.org/" target="_self">http://www.humanrights-server.org/</a></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf" title="நான் ஒரு குற்றவாளி" >நான் ஒரு குற்றவாளி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14441</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பசில் இந்தியா சென்றதைக் கண்டித்து சிங்களக் கொடி எரிப்பு: நாம் தமிழர் இயக்கத்தினர் பலர் கைது</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14437</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14437#comments</comments>
		<pubDate>Tue, 24 Aug 2010 14:39:30 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பசில்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14437</guid>
		<description><![CDATA[பசில் இந்தியா சென்றதைக் கண்டித்து சிங்களக் கொடி எரிப்பு: நாம் தமிழர் இயக்கத்தினர் பலர் கைது]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-1204" title="pasil_rajapakse" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/pasil_rajapakse_02.jpg" alt="" width="100" height="80" />இன்று போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இந்திய சென்றதைக்  கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .இதில் சிங்களத்தின் கொடியும் பசில் ராஜபக்சே புகைப்படமும் தீகரை ஆக்கப்பட்டது இதன் போது 15 நாம் தமிழர் இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .</p>
<p style="text-align: justify;">கைதானோர் விவர<span id="more-14437"></span>ம்</p>
<p style="text-align: justify;">1. வெற்றி குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், நாம் தமிழர்<br />
2. செந்தில்<br />
3. செங்கண்ணன்<br />
4. சிவா<br />
5. நாகராஜன்<br />
6. தமிழ் குமரன்<br />
7. பிரபாகரன்<br />
8. காந்தி<br />
9. பாண்டியராஜன்<br />
10. முத்தையா<br />
11. சண்முகம்<br />
12. முத்துகுமரன்<br />
13. பாண்டியன்<br />
14. சுதாகரன்<br />
15. ராஜ் குமார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d" title="பசில்" >பசில்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8499" title="புதிய அமைச்சரவையில் பிரதமர் ரட்ணசிறீ, வெளிவிவகார அமைச்சர் பசில்! (April 13, 2010)">புதிய அமைச்சரவையில் பிரதமர் ரட்ணசிறீ, வெளிவிவகார அமைச்சர் பசில்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=3845" title="வடக்கின் வசந்தத்தில் சிறு திரைக்கூடங்களும், துடுப்பாட்ட மைதானங்களும் அமைக்க முன்னுரிமையாம் பசில் (December 22, 2009)">வடக்கின் வசந்தத்தில் சிறு திரைக்கூடங்களும், துடுப்பாட்ட மைதானங்களும் அமைக்க முன்னுரிமையாம் பசில்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10969" title="போரினால் சேதமடைந்த வீடுகளை உரிமையாளர்களே புனரமைக்கவேண்டும்: பசில் (June 2, 2010)">போரினால் சேதமடைந்த வீடுகளை உரிமையாளர்களே புனரமைக்கவேண்டும்: பசில்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9297" title="பசில் கன்னத்தில் அறைந்த மனிதக் குரங்கு (காணொளி இணைப்பு) (April 28, 2010)">பசில் கன்னத்தில் அறைந்த மனிதக் குரங்கு (காணொளி இணைப்பு)</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14437</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளுக்கோ சர்வதேசத்துக்கோ அரசு அடிபணியப் போவதில்லை: சுசில் பிரேமஜயந்த</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14432</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14432#comments</comments>
		<pubDate>Tue, 24 Aug 2010 14:27:43 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14432</guid>
		<description><![CDATA[புலிகளுக்கோ சர்வதேசத்துக்கோ அரசு அடிபணியப் போவதில்லை: சுசில் பிரேமஜயந்த]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14433" title="susil" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/susil-100x80.jpg" alt="" width="100" height="80" />புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இன்றுவரை மீட்கப்படுகின்றன. இந்நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமாகிறது. இதனை நீக்குமாறு எவரும் கோர முடியாது. புலிகளுக்கோ எந்தவொரு நாட்டுக்கோ அரசாங்கம் அடிபணியப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">பயங்கரவாதத் தடுப்<span id="more-14432"></span>புச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லா தொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.</p>
<p style="text-align: justify;">1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.</p>
<p style="text-align: justify;">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் அதனை நீக்குமாறு இன்று வெளிநாட்டுக்குச் சென்று கோருகின்றனர் என்ன நிலையிலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கமுடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. புதைத்துவைத்துள்ள இடங்களிலிருந்து ஆயுதங்கள் இன்றுவரை மீட்கப்படுகின்றன. எனவே அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டியது அவசியமாகும்.</p>
<p style="text-align: justify;">இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான சட்டங்களை மாற்றுமாறு கோருவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது?இவ்வாறு கோரிக்கை விடுப்பதானது இலங்கையின் இறைமைக்கு ஏற்படுத்தும் அழுத்தம். விடுதலைப்புலிகளுக்கோ உலகில் எந்தவொரு நாட்டுக்கோ அரசாங்கம் அடிபணியப் போவதில்லை.</p>
<p style="text-align: justify;">ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லாதொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?</p>
<p style="text-align: justify;">தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட் டது. 1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கியதேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது என்றார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4" title="சுசில் பிரேமஜயந்த" >சுசில் பிரேமஜயந்த</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14432</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14421</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14421#comments</comments>
		<pubDate>Tue, 24 Aug 2010 06:40:13 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈழத் தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14421</guid>
		<description><![CDATA[எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14422" title="jaffna" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/jaffna6-100x80.jpg" alt="" width="100" height="80" />ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம்.</p>
<p style="text-align: justify;">சொந்தங்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து சோகத்தின் உச்சத்தில் அடுத்த வேளைக் கஞ்சிக்<span id="more-14421"></span>கு என்ன செய்வது என அங்கலாய்த்தவாறு ஈழத்தில் எங்கள் உறவுகளின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எங்கள் சொந்தங்களைக் காப்பதற்கு எதனையாவது செய்யவேண்டும் என்ற உறுதி உங்களிடம் இருப்பது எமக்குத் தெரியும்.</p>
<p style="text-align: justify;">இன்று சீனர்கள், சிங்களவர்கள் இந்தியர்கள் என ஈழ மண் பலராலும் கூறுபோடப்படும் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் அரங்கேறிவரும் குறிப்பிட்ட சில சம்பவங்களை புலம்பெயர் தமிழர்களாகிய, குறிப்பாக புலம்பெயர் வாழும் ஈழத்தினைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் முன்வைக்க விரும்புகிறேன். காரணம், இதற்கான தீர்வு உங்களிடம்தான் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இன்று பல்வேறு நாடுகளும் கொடையாக வழங்கும் நிதிகளைக் கொண்டு பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகள் நாட்டினது வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி, கட்டட நிர்மானம் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுக்கான ஒப்பந்தகாரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருமே சிங்கவர்கள்தான்.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-14423" title="keeratheevu-1" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/keeratheevu-1-300x224.jpg" alt="" width="300" height="224" />ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் அகலமாக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியாக இருக்கலாம், மாங்குளம் முல்லைத்தீவு வீதியாக இருக்கலாம் இதற்கான ஒப்பந்தகாரர்களாக சிங்கள நிறுவனங்களே இருக்கின்றன. மாங்குளத்தில் தனது வட பிராந்திய அலுவலகத்தினைத் திறந்திருக்கும் ஷஹமாட் நிர்மாணத்தாரர்&#8217; என்ற சிங்களவர்களுக்குச் சொந்தமான நிறுவனமே இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான ஒப்பந்காரராக உள்ளது.</p>
<p style="text-align: justify;">இதுபோல ஓமந்தை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதையினை மீள நிர்மானிப்பதற்கான ஒப்பந்தமும் இந்திய நிறுவனம் ஒன்றிடமே போய்ச் சேர்ந்திருக்கிறது. அச்சுவேலி பொருளாதார வர்த்தக வலயத்தில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் கொழும்பினைத் தளமாகக் கொண்ட பல நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இவை தவிர நாட்டினது வடக்குப் பகுதியில் முதலிடுவதற்கு சிங்கள மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் முண்டியடிக்கிறார்கள். பெரும்பாலும் சிங்களவர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்ற ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தங்களது தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><img class="alignright size-full wp-image-14424" title="keeratheevu-2" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/keeratheevu-2.jpg" alt="" width="300" height="224" />சிறிலங்காவின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான சிங்களவர்களுக்குச் சொந்தமான மாஸ் இன்ரிமேற்ஸ் என்ற நிறுவனம் வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தைப் பகுதியில் 3 மில்லியன் டொலர் செலவில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிர்மானித்து வருகிறது. இந்தத் தொழிற்சாலையானது 1500 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாம். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் வகையில் செயற்படும் இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இப்பகுதிகளில் நிறுவுவதற்கு யூ.எஸ் எயிட் நிறுவனம் உதவிகளை வழங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">யாழ்பாணத்தின் கேரதீவு இறங்குதுறையினையும் பூநகரியின் சங்குப்பிட்டி இறங்குதுறையினையும் இணைக்கும் சுமார் 450 மீற்றர் நீளமான பாலத்தினை நிர்மானிக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிர்மானப் பணியினையும் கொழும்பினைச் சேர்ந்த சிங்களவருக்குச் சொந்தமான முன்னணிக் கட்டுமான நிறுவனம் ஒன்றுதான் முன்னெடுக்கிறது.</p>
<p style="text-align: justify;">இவை தவிர, யாழ்ப்பாணம், முறிகண்டி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் நட்சத்திர விடுதிகளை அமைப்பதற்கான முன்முனைப்புக்கள் முழு வேகத்துடன் இடம்பெற்று வருகின்றன. முறிகண்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விடுதி அதன் நிறைவுக்கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுப்பவர்கள் வேறு யாருமல்ல, செல்வந்தச் சிங்கள நிறுவனங்களே.</p>
<p style="text-align: justify;">இதுபோன்ற முனைப்புக்கள் அனைத்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் தமிழர்களது வழங்களை இவர்கள் சுரண்டுவதற்கும் இந்தப் பிராந்தியத்தினது குடிப்பரம்பலில் மாற்றம் ஏற்படுவதற்குமே வழிசெய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.</p>
<p style="text-align: justify;">தமிழர் தாயகப் பகுதிகளில் இதுபோன்ற முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈழத் தமிழரை விட எவருக்கும் அதிக உரிமை கிடையாது. இதுவொன்றும் இயலாத காரியமன்று.</p>
<p style="text-align: justify;">இது தவிர, எங்களது பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் தரமானதாகவும் சிறப்பாகவும் அமையவேண்டுமெனில் தமிழர்களது கட்டுமான நிறுவனங்கள் இந்தப் பணிகளைப் பொறுப்பெடுக்கவேண்டும். இதுபோன்ற பாரிய கட்டுமான நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் மேற்கொள்ளக்கூடிய தமிழ் நிறுவனங்கள் இன்று இங்கில்லை. ஐ.எஸ்.ஓ 9001 என்ற சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்ற தமிழருக்குச் சொந்தமான யூரோவிலி பொறியியல் மற்றும் கட்டுமானத் தனியார் நிறுவனம் என்ற ஒரேயொரு கட்டுமான நிறுவனம்தான் யாழ்ப்பாணத்திலுள்ளது.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14425" title="valukky-aaru" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/valukky-aaru-1.jpg" alt="" width="300" height="224" />அமைதிக் காலத்தின் போது கிளிநொச்சி மருத்துவமனை பல மில்லியன் டொலர் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இந்த மருத்துவமனையின் நிர்மானத்திற்கான ஒப்பந்தத்தினை ஒரு தமிழருக்குச் சொந்தமான, அதுவும் புலம்பெயர் நாடு ஒன்றைத் தளமாகக் கொண்ட கட்டுமான நிறுவனம் ஒன்று கையில் எடுத்தமையினால்தான் கிளிநொச்சி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அனைவரும் புகழும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தன. அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட பிரைம் எஞ்சினியறிங் என்ற நிறுவனமே இதன் கட்டுமானப் பணியினை மேற்கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">இதுபோல புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் தங்களது முதலீடுகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். பல்வேறுபட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகார நிறுவனங்களை அமைக்கலாம் அல்லது அதிகரிக்கும் உல்லாசப் பயணிகளின் வருகையினைக் கருத்திற்கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் நட்சத்திர விடுதிகளை அமைக்கலாம்.</p>
<p style="text-align: justify;">புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மருத்துவர்கள் அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட தனியார் மருத்துவமனை ஒன்றை அமைக்காலம். இதுபோன்ற மருத்துவமனை ஒன்றிற்கான தேவை குடாநாட்டில் அதிகமுள்ளது.</p>
<p style="text-align: justify;">மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை முல்லைத்தீவிலோ அன்றி யாழ்ப்பாணத்திலோ அமைக்கலாம். இதற்கான வளமும் திறனும் புலம்பெயர் தமிழர்களாகிய உங்களிடம்தான் இருக்கிறது. வன்னியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்தி பாரிய மரத் தளபாடத் தொழிற்சாலை ஒன்றை அங்கு நிறுவுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.</p>
<p style="text-align: justify;">புலம்பெயர்வாழ் தமிழ் கல்விமான்கள் ஒன்றிணைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்களுக்கான உயர் கல்வி வசதிகளையும் தொழிற்கல்வி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பெரும்பாலும் கொழும்பில் மட்டுமே இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் நிலைகொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களை அமைப்பது தமிழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும். வடக்குக் கிழக்கில் பெருமளவு மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கும் பொருத்தமான தொழிற்கல்வியைப் பெற்று வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகையின்றித் தவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">தற்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் சரியாகப் பற்றிப்பிடிப்பதற்குத் தவறுவோமானால் சிங்களவர்களும் சீனர்கள் இந்தியர்களும் எங்களது வீதிகளில் உலா வருவதை எவரும் தடுக்கமுடியாது. காலங்கடந்தபின் ஐயோ கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவதற்குத் தவறிவிட்டோமே என பின்னர் அழுவதிற் பயனில்லை.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு தமிழர் தாயகப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வது சிங்கள ஆட்சியாளர்களது பிரச்சாரத்திற்கு வழிசெய்துவிடும் என்று எண்ணிவிடவேண்டாம். எங்களது மண்ணில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டியது நாங்கள்தான். இந்த உரிமையினை நாம் எதற்காகவும் யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">இதுபோன்ற பணிகள் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். இதுவுமொரு போராட்டம்தான். சிங்கள, சீன, இந்திய முதலீட்டாளர்களை எதிர்த்தும் நாம் எமது மண்ணில் போராடவேண்டும். தமிழர்களது தனித்துவம் நிலைபெறவேண்டுமெனில் நாம் எத்துணை இடர் வரினும், எப்படிப்பட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அனைத்தையும் வெற்றியுடன் முறியடித்து முன்னேறவேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழர்களுக்குத் தனிநாடு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டாம் இடைநின்று போயிருக்கலாம். அதுதந்த தோல்வியினால் நாங்கள் துவண்டுவிடக்கூடாது. நாங்கள் தொடர்ந்து போராடவேண்டும். எங்களது வளத்தையும் செல்வத்தையும் சுரண்டுவதற்காக எங்களூரில் கடை விரிக்கும் மாற்றானை எதிர்த்து நின்று தமிழர்களாகிய நாங்களும் எங்களூரில் முதலிடவேண்டும்.</p>
<p style="text-align: justify;"><strong>யாழினி</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d" title="ஈழத் தமிழர்" >ஈழத் தமிழர்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7798" title="ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்! (March 24, 2010)">ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14336" title="ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்? (August 21, 2010)">ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்?</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8590" title="ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்! (April 14, 2010)">ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்!</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13801" title="புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்களை குற்றவாளிகள் போல் நடத்தவே கூடாது (August 9, 2010)">புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்களை குற்றவாளிகள் போல் நடத்தவே கூடாது</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11808" title="ஈழத் தமிழர்களை விடுவிக்ககோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம் (June 22, 2010)">ஈழத் தமிழர்களை விடுவிக்ககோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14421</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை அகதிகளின் அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என்கிறது நியூசிலாந்து</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14417</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14417#comments</comments>
		<pubDate>Tue, 24 Aug 2010 06:19:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14417</guid>
		<description><![CDATA[இலங்கை அகதிகளின் அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என்கிறது நியூசிலாந்து]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14418" title="kappal" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/kappal-100x80.jpg" alt="" width="100" height="80" />இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. அகதிகள் தற்போது தமது நாட்டை இலக்கு வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">நியூசிலாந்து ஊட<span id="more-14417"></span>கமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">சுமார் 490 இலங்கை அகதிகளுடன் எம்.வீ. சன் சீ என்ற கப்பல் கனடாவை அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அகதிகளுடனான பொருட்களை ஏற்றிவரும் அடுத்த கப்பல் சர்வதேச கடற்பரப்பினூடாக தமது நாட்டை அடையலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும், இதுவரை காலமும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை நோக்கியே அதிகளவான அகதிகள் சென்றுள்ளதாக தெரிவித்த நியூசிலாந்து பிரதமர், அடுத்த அகதிகள் கப்பல் தமது நாட்டை இலக்கு வைப்பதாகவும் கூறியுள்ளார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81" title="நியூசிலாந்து" >நியூசிலாந்து</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14417</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்தியத்தரப்பிலிருந்து சிதம்பரம் அல்லது பாலுவை ஈழத்தமிழர் விவகாரத்திற்கு நியமிக்கும் சாத்தியம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14412</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14412#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 14:50:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிதம்பரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14412</guid>
		<description><![CDATA[இந்தியத்தரப்பிலிருந்து சிதம்பரம் அல்லது பாலுவை ஈழத்தமிழர் விவகாரத்திற்கு நியமிக்கும் சாத்தியம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-2564" title="makkal" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/12/m.JPG" alt="" width="100" height="80" />தமிழர் விவகாரத்துக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக புதுடில்லி இலங்கைக்கு அனுப்பவுள்ள விசேட தூதுவர் இருநாட்டு உறவுகளிலும் இராஜதந்திர ரீதியாக நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒருவராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் இந்திய அரசியல் அரங்கில் செல்வாக்குமிக்க ஒருவரையே புதுடி<span id="more-14412"></span>ல்லி இலங்கைக்கு அனுப்பும் சாத்தியம் காணப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">நிர்வாகத்துறை, இராஜதந்திர வட்டாரங்களைச் சேர்ந்தவர்களை இலங்கைக்கு அனுப்புவதிலும் பார்க்க அரசியல் ரீதியாக செல்வாக்கு மிகுந்த ஒருவரையே இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பும் சாத்தியம் காணப்படுவதாக &#8220;ஏசியன் ரிபியூன்&#8221; இணையத்தளம் சூசகமாக நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் நிலைமையை நேரில் கண்டறிய விசேட தூதுவராக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இந்தியா இலங்கைக்கு அனுப்பிவைக்கும் என்று கடந்த 19 ஆம் திகதி இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் அறிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இந்த விசேட தூதுவருக்கு புதுடில்லி கணிசமான அளவு அதிகாரங்களையும் வழங்கும் சாத்தியம் காணப்படுகிறது. அதாவது யுத்தத்துக்குப் பின்னரான தமிழர்களின் விவகாரங்களைக் கையாளத்தக்க அதிகாரங்களை விசேட தூதுவருக்கு புதுடில்லி வழங்கும் சாத்தியப்பாடும் தென்படுகிறது. மீள்கட்டுமானம், சமூக அபிவிருத்தி, புனர்வாழ்வு உட்பட போருக்குப் பின்னரான விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரத்தை இந்த விசேட தூதுவருக்கு இந்திய அரசாங்கம் வழங்கக்கூடும்.</p>
<p style="text-align: justify;">இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்தவராகவே பெரும்பாலும் இந்தத் தூதுவர் இருப்பார். இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் அல்லது முன்னாள் மத்திய அமைச்சரான ரி.ஆர்.பாலு ஆகியோரில் ஒருவரை விசேட தூதுவராக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு அனுப்பும் சாத்தியம் காணப்படுகிறது. இவர்களின் பெயர்கள் மன்மோகன் சிங்கின் தீர்மானத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் பரிந்துரையின் பேரிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விசேட தூதுவராக எவரை அனுப்புவது என்பது குறித்து தீர்மானிப்பாரெனவும் கூறப்படுகிறது.இதேவேளை இலங்கையில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகங்களை பரந்தளவில் கொண்ட கட்டமைப்பை இந்தியா விரிவுபடுத்தி வருகிறது.இந்து சமுத்திரத்தின் மேற்குகிழக்கு பகுதியில் கேந்திரோபாயமான இடமான அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகத்தைத் துரிதமாக நிர்மாணித்துவரும் நிலையில் அப்பகுதியில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை விரைவில் இந்தியா திறக்கவுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த ஜூனில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிக்கும் இடையே எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன.இதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இரு இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை இந்தியா திறக்கவுள்ளது.</p>
<p style="text-align: justify;">கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் மத்திய மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் தேவைகளுக்காக கண்டியில் துணைத்தூதரகம் இயங்கி வருகிறது.அதேசமயம் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தென்னிந்தியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டிருப்பதாலும் பலர் தொடர்ந்து இந்தியாவுக்குப் பயணங்களை மேற்கொள்வதாலும் குடாநாட்டில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை இந்தியா திறக்கவுள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் விசா அலுவலகம் இயங்கிவருகிறது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகமானது யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையாற்றுமென இணக்கம் காணப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகமானது தென்பிராந்தியங்களில் இடம்பெறும் மாற்றங்களை அவதானிப்பதற்கு உட்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஓரங்கமாக நோக்கப்படுகிறது.இதேவேளை, பாக்கு நீரிணையூடாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையின் கடைசி வரைபை இரு நாடுகளும் தயாரித்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்கே காந்தா கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">உடன்படிக்கையின் நகல் வரைபை நாம் தயாரித்துள்ளோம். கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் கொள்கையளவில் இணங்கியுள்ளன என்று அவர் தெருவித்திருக்கிறார். தலைமன்னார்இராமேஸ்வரம், கொழும்புதூத்துக்குடி கப்பல் சேவையே விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d" title="சிதம்பரம்" >சிதம்பரம்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11265" title="மகிந்தவின் இந்திய விஜயத்தை ஒட்டி கருணாநிதி &#8211; சிதம்பரம் சந்திப்பு! (June 8, 2010)">மகிந்தவின் இந்திய விஜயத்தை ஒட்டி கருணாநிதி &#8211; சிதம்பரம் சந்திப்பு!</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12703" title="&#8220;பிரபாகரனை நான் நன்கு அறிவேன், அவர் நமக்கு எதிரானவர் அல்ல&#8221;: ப.சிதம்பரம்! (July 19, 2010)">&#8220;பிரபாகரனை நான் நன்கு அறிவேன், அவர் நமக்கு எதிரானவர் அல்ல&#8221;: ப.சிதம்பரம்!</a> (9)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14412</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அடிக்கல்நாட்டு விழாவில் டக்ளஸும் ஸ்ரீ வாத்தி எம்.பியும் கூட்டு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14407</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14407#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 14:46:16 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14407</guid>
		<description><![CDATA[அடிக்கல்நாட்டு விழாவில் டக்ளஸும் ஸ்ரீ வாத்தி எம்.பியும் கூட்டு ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14408" title="srda" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/srda.jpg" alt="" width="100" height="80" />நொர்தேன் சென்ரல் வைத்தியசாலை (பிறைவேற்) லிமிட்டட் எனும் பெயரில் சகல வசதிகளும் அடங்கிய சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.</p>
<p style="text-align: justify;">திருநெல்வேலி, யா<span id="more-14407"></span>ழ் &#8211; பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள காணியிலேயே மேற்படி விழா நேற்று காலை இடம்பெற்றது. பிரபல தொழிலதிபரான திரு. சாமி அவர்களினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் மேற்படி தனியார் வைத்தியசாலை அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.</p>
<p style="text-align: justify;">இது ஒரு புனர்நிர்மாண, அல்லது புனரமைப்பு வேலைத் திட்டமோ அல்ல. தொழில் அதிபர் ஒருவரால் வியாபார நோக்கத்திற்காக இந்த வைத்தியசாலை கட்டப்படுகிறது. இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீ வாத்தி அவர்களும் கலந்துகொண்டு, டக்ளசுடன் உறவாடியுள்ளார். ஆயுத முனையில் பல கொள்ளை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, தமிழ் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் டக்ளசுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீ வாத்தி என்ன தொடர்புகளைப் பேணிவருகிறார் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.</p>
<p style="text-align: justify;">வெறுமனவே தான் அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்றுவந்தாக ஸ்ரீ வாத்தி தெரிவித்திருந்தாலும், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனை அவர் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவது நல்லது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான ஸ்ரீ வாத்தி, அவ்வமைப்பில் இருந்துகொண்டு, டக்ளசுடன் நெருக்கமான உறவை இரகசியமாகப் பேணிவருகிறார் என பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் இப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-14409" title="ds" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/ds.jpg" alt="" width="599" height="475" /><br />
<strong>அதிர்வு</strong></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80" title="ஸ்ரீ" >ஸ்ரீ</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14407</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கே.பி யின் கூற்றுக்கு இந்திய எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவிப்பு: கடைசி போரில் தனது பங்களிப்பு குறித்தும் விவரிப்பு</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14404</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14404#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 14:31:34 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கே.பி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14404</guid>
		<description><![CDATA[கே.பி யின் கூற்றுக்கு இந்திய எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவிப்பு: கடைசி போரில் தனது பங்களிப்பு குறித்தும் விவரிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-1050" title="Indian Flag" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/Indian-Flag.jpg" alt="" width="100" height="80" />இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தனக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் மறுத்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இலங்கை அரசாங்<span id="more-14404"></span>கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்த திட்டம் தொடர்பான விபரங்களை ம.தி.மு.க.</p>
<p style="text-align: justify;">பொதுச் செயலாளர் வைகோவுக்கு தான் கசியவிட்டிருக்கவில்லை எனவும் அவர் மறுத்திருப்பதாக டி.என்.ஏ. செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஊடகங்கள் சிலவற்றில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையற்றவை எனவும் விடுதலைப் புலிகளுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லையென்றும் மகேந்திரன் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை எமது கட்சி எப்போதும் எதிர்த்துவந்தது. இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருந்தோம். மறுபுறத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்பதை நாம் ஆதரவாக இருந்து வருகிறோம் என்று பிரம்பூர் எம்.எல்.ஏ.யான கே.மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">தானோ தனது கட்சியோ புலிகளுடனோ அல்லது அந்த அமைப்பின் பேச்சாளரான நடேசனுடனோ தொடர்புகள் எதனையும் பேணியதில்லையென அவர் கூறியுள்ளார். செய்திகளில் அவர் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">குமரன் பத்மநாதனை (விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி முகாமையாளரும் இப்போது இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவருமான) மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. நடேசன் யுத்த நிறுத்த யோசனை குறித்து என்னுடன் பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையல்ல என்று மகேந்திரன் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">புதுடில்லியால் தயாரிக்கப்பட்ட யுத்த நிறுத்த திட்டம் குறித்து மகேந்திரனுடன் நடேசன் கலந்தாலோசனை செய்திருந்ததாக இலங்கைத் தினசரியொன்று பத்மநாதனின் பேட்டியை மேற்கோள்காட்டி குறிப்பிட்டிருந்தது. அந்த உத்தேசத் திட்டத்தில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டுமென்ற ஏற்பாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் திட்டத்தையே மகேந்திரன் வைகோவுக்குக் கசியவிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இவ்வாறு இருக்க இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த ம.தி.மு.க. பேச்சாளர் மறுத்துவிட்டதாக டி.என்.ஏ.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf" title="கே.பி" >கே.பி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14615" title="இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி (August 28, 2010)">இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி</a> (5)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6449" title="வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி இணைவு? (February 19, 2010)">வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி இணைவு?</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14192" title="இராணுவத்தில் இணைகிறார் கே.பி: அவருக்கு பிரிகேடியர் பதவியாம் (August 18, 2010)">இராணுவத்தில் இணைகிறார் கே.பி: அவருக்கு பிரிகேடியர் பதவியாம்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13643" title="கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்! (August 5, 2010)">கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்!</a> (6)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=13182" title="கருணாவை &#8221;கைகழுவ&#8221; ஆரம்பித்துள்ள மகிந்த கே.பி. யை அடுத்த பகடைக்காயாக்குவதற்கு தீவிர முயற்சி! (July 28, 2010)">கருணாவை &#8221;கைகழுவ&#8221; ஆரம்பித்துள்ள மகிந்த கே.பி. யை அடுத்த பகடைக்காயாக்குவதற்கு தீவிர முயற்சி!</a> (5)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14404</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>25.08.10 அன்று காலை 12 மணி அளவில் செந்தமிழன் சீமான் தேசிய பாதுக்காப்பு சட்டம் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்னிறுத்தப்படுகிறார்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14401</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14401#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 14:27:11 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14401</guid>
		<description><![CDATA[25.08.10 அன்று காலை 12 மணி அளவில் செந்தமிழன் சீமான் தேசிய பாதுக்காப்பு சட்டம் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்னிறுத்தப்படுகிறார்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-13551" title="seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/seeman.jpg" alt="" width="100" height="80" />தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் உள்ளார்.</p>
<p style="text-align: justify;">சீமான் தன்னை தே<span id="more-14401"></span>சிய பாதுக்காப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.</p>
<p style="text-align: justify;">அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க வரும் 25 ஆம் தேதி புதன் கிழமை செந்தமிழன் சீமான் சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள்ள தேசியப்பாதுகாப்பு அறிவுரைத்தீர்ப்பாயம் வர இருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">அவர் காலை 12 மணி அளவில் சென்னைக்கு வர உள்ளார். அவரது தரப்பு வாதங்களை தோழர் தியாகு எடுத்துரைக்க இருக்கின்றார்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d" title="சீமான்." >சீமான்.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9069" title="இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி &#8211; ஐஸ்வர்யாராய் படத்தை புறக்கணிப்போம்: சீமான் (April 24, 2010)">இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி &#8211; ஐஸ்வர்யாராய் படத்தை புறக்கணிப்போம்: சீமான்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=2579" title="&#8220;உண்மையிலேயே நீ பிரபாகரனின் தம்பியா?&#8221; &#8211; கனடா காவல்துறை விசாரித்த விதம் குறித்து சீமான் (December 3, 2009)">&#8220;உண்மையிலேயே நீ பிரபாகரனின் தம்பியா?&#8221; &#8211; கனடா காவல்துறை விசாரித்த விதம் குறித்து சீமான்</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11629" title="ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி: சீமான் (June 16, 2010)">ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி: சீமான்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=402" title="தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்: சீமான் (November 8, 2009)">தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்: சீமான்</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8407" title="தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்களில் புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் உதயம் (April 11, 2010)">தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்களில் புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் உதயம்</a> (6)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14401</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சன் சீ கப்பலில் வந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக கனடாவில் ஆர்ப்பாட்டம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14397</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14397#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 14:24:31 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சன் சீ]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14397</guid>
		<description><![CDATA[சன் சீ கப்பலில் வந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக கனடாவில் ஆர்ப்பாட்டம் ]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-9032" title="canada" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/04/canada_tyo.jpg" alt="" width="100" height="80" />அடைக்கல தஞ்சம்கோரி கனடாவுக்கு வந்துள்ள மக்களை கனேடிய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்து கனடாவில் நேற்று முன்தினம் (21) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கனடா தகவல்கள் தெரிவித்துள்ளன.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் அ<span id="more-14397"></span>வை மேலும் தெரிவித்துள்ளதாவது:</p>
<p style="text-align: justify;">கடந்த சனிக்கிழமை (21) மாலை கனடாவின் யாற்ஸ் மற்றும் கவர்மன்ற் வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் இந்த வீதிகளில் போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன.</p>
<p style="text-align: justify;">“அடைக்கலத் தஞ்சம்கோரும் மக்களை நாம் ஏற்கவேண்டும்” “அகதிகளை நாம் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்” “அகதிகளின் உரிமைகளை மதிக்க வேண்டும்” என்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பியிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்த ஆர்ப்பாட்டத்தை விக்கோரரியா இனவாத்திற்கு எதிரான வலையமைப்பு என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.</p>
<p style="text-align: justify;">கனடாவுக்குள் வரும் யாரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல என இந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80" title="சன் சீ" >சன் சீ</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=14135" title="நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள்: சன் சீ கப்பலில் வந்த தமிழர்கள் கடிதம் (August 17, 2010)">நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள்: சன் சீ கப்பலில் வந்த தமிழர்கள் கடிதம்</a> (1)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14397</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய மாவீரன் மேஜர் நாயகன் நினைவு நாள் இன்று (23-08-2010)</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14393</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14393#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:40:41 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[மேஜர் நாயகன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14393</guid>
		<description><![CDATA[விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய மாவீரன் மேஜர் நாயகன் நினைவு நாள் இன்று (23-08-2010)]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-14394" title="maaveerarkal" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/maaveerarkal.jpg" alt="" width="100" height="80" />இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப்<span id="more-14393"></span> பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது.</p>
<p style="text-align: justify;">இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான்.</p>
<p style="text-align: justify;">சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.</p>
<p style="text-align: justify;">நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவவளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினிமுகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான்.</p>
<p style="text-align: justify;">நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான்.</p>
<p style="text-align: justify;">எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%ae%e0%af%87%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d" title="மேஜர் நாயகன்" >மேஜர் நாயகன்</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14393</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வன்னி மக்களை தொடர்ந்தும் விரட்டுகிறது இயற்கை: கடும் மழையினால் மீள் குடியேறிய மக்கள் பெரும் அவலத்தில்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14389</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14389#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:31:38 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[வன்னி]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14389</guid>
		<description><![CDATA[வன்னி மக்களை தொடர்ந்தும் விரட்டுகிறது இயற்கை: கடும் மழையினால் மீள் குடியேறிய மக்கள் பெரும் அவலத்தில்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14390" title="mazhai" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/mazhai-100x80.jpg" alt="" width="100" height="80" />கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட வன்னிப்பெரு நிலப்பரப்பில் மீள்குடியேறிய மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர். கூரை விரிப்புக்களின் கீழும் தகர கொட்டகைகளிலும் வாழும் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மழை வெள்ளம் காரணமாகப் பெரு<span id="more-14389"></span>ம் அவல நிலைக்காளாகியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">யுத்தம் இடம்பெற்ற காலத்தில் போடப்பட்ட மண் அணைகள் பொதுமக்களது காணிகளில் இருந்தும் வீதிகளிலிருந்தும் அகற்றப்படாததால் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெள்ளம் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை வன்னி வீதிகள் சரிவரத் திருத்தம் செய்யப்படாமையால் பல இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால் ஆனையிறவுக்கும் உமையாள்புரத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் கன்டர் ரக லொறி ஒன்றும் குடை சாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியது.மழை காரணமாக ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் எழுதிய மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்தனர்.</p>
<p style="text-align: justify;">மாங்குளம், முல்லைத்தீவு வீதி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் வீதி, முறிகண்டி பூநகரி, ஜெயபுரம் வீதி ஆகியன கிரவல் மண் வீதியாக காணப்படுவதால் போக்குவரத்து இடையூறு அதிகரித்துள்ளதுடன் இவ்வீதிகள் யாவும் தார் வீதிகளாக மாற்றப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வன்னியில் மழை காரணமாக நலன்புரி முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் நிலையங்களில் உள்ளவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf" title="வன்னி" >வன்னி</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=10281" title="வன்னிப்போரில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்கள்: தகவல் அறிந்த காரணத்தினால் கடத்தப்பட்ட பிரகீத்!! (May 15, 2010)">வன்னிப்போரில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்கள்: தகவல் அறிந்த காரணத்தினால் கடத்தப்பட்ட பிரகீத்!!</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=6671" title="செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டி (February 24, 2010)">செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டி</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=11190" title="வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் தமிழகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது இரண்டாம் மாடியில்!! (June 7, 2010)">வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் தமிழகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது இரண்டாம் மாடியில்!!</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=7815" title="வன்னியில் இறுதிக்கட்ட போரில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது? (March 24, 2010)">வன்னியில் இறுதிக்கட்ட போரில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது?</a> (1)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=8524" title="வெளிநாட்டு நிறுவனம் எம் மீது அக்கறை! ஆனால் எமக்கான அமைப்புக்கள்?!! (April 13, 2010)">வெளிநாட்டு நிறுவனம் எம் மீது அக்கறை! ஆனால் எமக்கான அமைப்புக்கள்?!!</a> (0)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14389</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழர்களின் விடிவிற்காய் சிறைபட்ட செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்</title>
		<link>http://www.puthinamnews.com/?p=14382</link>
		<comments>http://www.puthinamnews.com/?p=14382#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:24:27 +0000</pubDate>
		<dc:creator>வன்னியன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்.]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthinamnews.com/?p=14382</guid>
		<description><![CDATA[தமிழர்களின் விடிவிற்காய் சிறைபட்ட செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-thumbnail wp-image-14384" title="rste" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/rste-100x80.jpg" alt="" width="100" height="80" />தமிழர்களின் விடிவிற்காய் சிறைபட்ட செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்.</p>
<p style="text-align: justify;">தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். த<span id="more-14382"></span>ற்பொழுது தனிமைச் சிறையில் வாடும் அவருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><a href="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/letter-to-seeman.jpg"><img class="aligncenter size-large wp-image-14383" title="letter to seeman" src="http://www.puthinamnews.com/wp-content/uploads/2010/08/letter-to-seeman-723x1024.jpg" alt="" width="723" height="1024" /></a></p>

	Tags: <a href="http://www.puthinamnews.com/?tag=%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d" title="சீமான்." >சீமான்.</a><br />

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9799" title="முத்துக்குமாருக்கு ஜாமீன்: சீமான் மாலை அணிவித்து வரவேற்பு (May 7, 2010)">முத்துக்குமாருக்கு ஜாமீன்: சீமான் மாலை அணிவித்து வரவேற்பு</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=9585" title="உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள் (May 3, 2010)">உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1907" title="வீரத் தமிழன் சீமான் கனடாவில் கைது (November 26, 2009)">வீரத் தமிழன் சீமான் கனடாவில் கைது</a> (2)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=12736" title="சீமான் பழிவாங்கப்படுகின்றார்: பழ. நெடுமாறன் (July 19, 2010)">சீமான் பழிவாங்கப்படுகின்றார்: பழ. நெடுமாறன்</a> (0)</li>
	<li><a href="http://www.puthinamnews.com/?p=1545" title="மாவீரர் தினத்தில் பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை (November 22, 2009)">மாவீரர் தினத்தில் பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை</a> (4)</li>
</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthinamnews.com/?feed=rss2&amp;p=14382</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
